Wednesday, May 9, 2018

அரசு ஊழியர் பேரணி: போக்குவரத்து நெரிசல்

Added : மே 08, 2018 23:42 

சென்னை: சென்னையில், கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், கைது செய்யப்பட்டனர். போராட்டத்தால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வுக்கான, 21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ --ஜியோ சார்பில், சென்னையில், நேற்று கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அவர்களை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.போராட்டத்தில் பங்கேற்க வந்த பலர், முன்னெச்சரிக்கையாக, இரண்டு நாட்களுக்கு முன்னரே, சென்னைக்கு வரும் வழியிலும் கைது செய்யப்பட்டனர். சென்னையில், நேற்று போராட்டத்துக்கு வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சில போலீசாருக்கு அடி, உதை விழுந்தது.இதனால், அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அலுவலகங்கள், வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். போராட்டத்தை இன்றும் தொடர, ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக்குழு முடிவு செய்தது.இந்நிலையில் போராட்டம் தற்காலிக மாக வாபஸ் பெறப் படுவதாக, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பு 20ல் வெளியாகும் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...