Saturday, May 12, 2018

இரு போக்குவரத்து கழகங்கள் இணைப்பு

Added : மே 12, 2018 02:09

சென்னை: நிதி நெருக்கடியை சமாளிக்க, அரசு போக்குவரத்து கழகங்களான, நெல்லை போக்குவரத்துக் கழகம், மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான, அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.திண்டுக்கல், விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு, மதுரை போக்குவரத்துக் கழகமும், கன்னியாகுமரி, துாத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு, நெல்லை போக்கு வரத்துக் கழகமும் அரசு பஸ்களை இயக்கி வந்தன.இந்நிலையில், நெல்லை போக்குவரத்துக் கழகம், கடனை திருப்பி செலுத்த முடியாமல், நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக, 2016, மார்ச்சில் நடந்த, இயக்குனர்கள் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காண, நெல்லை போக்குவரத்துக் கழகத்தை, மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கலாம் என, ஆலோசனை முன் வைக்கப்பட்டது.இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, போக்குவரத்து துறை தலைவர் உள்ளிட்ட, ஆறு பேர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, 'நெல்லை போக்குவரத்துக் கழகத்தை, மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்க வேண்டும்; இல்லாவிட்டால், நெல்லை போக்குரவரத்துக் கழகத்தை நடத்த முடியாது' என, அறிக்கை அளித்தது.இதைத்தொடர்ந்து, இரண்டு போக்குவரத்துக் கழகங்களையும் இணைக்க, அவற்றின் இயக்குனர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
ஜி.டி., எக்ஸ்பிரஸ் புதுடில்லி வரை இயக்கம்

Added : மே 12, 2018 01:12

சென்னை: சென்னை, சென்ட்ரலில் இருந்து, டில்லி, சராய் ரோகில்லா நிலையம் வரை, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து, தினமும் இரவு, 7:15 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை, 7:10 மணிக்கு, டில்லி சராய் ரோகில்லா நிலையம் அடையும். அங்கிருந்து, தினமும், மாலை, 5:50 மணிக்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் காலை, 6:20 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வரும். இந்த ரயில், வரும், 21ம் தேதியில் இருந்து, புதுடில்லி நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் ரயில், புதுடில்லி நிலையத்திற்கு, காலை, 6:30 மணிக்கு சென்று அடையும். புதுடில்லியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு மாலை, 6:40 மணிக்கு புறப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து, இந்த ரயில் புறப்படும் மற்றும் வரும் நேரத்தில் மாற்றமில்லை என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நர்ஸ்களுக்கு விரைவில் புதிய சீருடை: அமைச்சர்

Added : மே 12, 2018 00:28

சென்னை: ''நர்ஸ்களுக்கு பாரம்பரியம் மாறாமல், புதிய சீருடை வழங்கப்படும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உலக நர்ஸ்கள் தினத்தையொட்டி, அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக பணிபுரிந்த, 251 நர்ஸ்களுக்கு, விருதுகள் வழங்கும் விழா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர்., மருத்துவ பல்கலையில், நேற்று நடந்தது. நர்ஸ்களுக்கு விருதுகளை வழங்கிய பின், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: புதிய சீருடை வழங்க வேண்டும் என, நர்ஸ்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமா மகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.விரைவில், பாரம்பரியம்மாறாமல், புதியசீருடைகள் வழங்கப்படும். நர்ஸ்களுக்கு விரைவில், பதவி உயர்வு வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள, 10 ஆயிரம் நர்ஸ்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர். மகப்பேறு மருத்துவம் படித்த, 134 ஆண் நர்ஸ்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளை எழுதும் வகையில், விதிகள் தளர்த்தப்படும். தற்போது உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்பை, பட்ட படிப்பாக மாற்ற, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முயற்சி மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதார திட்ட இயக்குனர், உமா மகேஸ்வரி, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ உட்பட, பலர் பங்கேற்றனர்.

வதோராவில் ரயில்வே பல்கலை. யு.ஜி.சி. ஒப்புதல்


Added : மே 12, 2018 03:05



வதோதரா: ரயில்வே பல்லை. அமைக்க பல்கலை மானியக்குழு ஒப்புதல் வழங்கியது நாட்டின் வளர்ச்சிக்கு, ரயில்வே துறையை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, நாட்டின் முதல் ரயில்வே பல்கலை கழகத்தை, குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; விரைவில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து இன்ஸ்டியூட் அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அங்கீகாரம் அளித்துள்ளதை தொடர்ந்து ரயில்வே பல்கலை. க்கு யு.ஜி.சி. எனப்படும் பல்கலை. மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இந்த பல்லை. மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களை ஈர்க்கும் திறன் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 நிமிடத்திற்கு நம்புகிறேன்: கிரண்பேடி : நிரந்தரமாக நம்புகிறேன்: நாராயணசாமி

Added : மே 12, 2018 01:56



புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் விழாவில், தன் ஆங்கில உரையை, முதல்வர் நாராயணசாமியை அழைத்து, கவர்னர் மொழிபெயர்க்க வைத்தார். இருவரும், ஒருவரை ஒருவர் இன்முகத்துடன் கலாய்த்துக்கொண்டது, விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக, நேற்று முன்தினம், முதல்வர் நாராயணசாமி கூறுகையில், 'மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கோப்புகள் அனைத்தையும் திருப்பி அனுப்பி, புதுச்சேரி அமைச்சரவைக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளதாக கூறிவிட்டது. 'இதன் மூலம், மத்திய அரசின் நம்பிக்கையை இழந்த கவர்னர் கிரண் பேடி, பதவி விலக வேண்டும்' என்றார்.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கவர்னர் கிரண் பேடி, 'வேலையில் இருந்து தான் விலக முடியும். இலக்கில் இருந்து விலக முடியாது. புதுச்சேரியை வளமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன். 'புதுச்சேரியின் மீது விருப்பம் இருந்தால், என்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்று, முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.கவர்னர், முதல்வர் இடையிலான உச்சகட்ட மோதல், நேற்று முன்தினம், தவளக்குப்பத்தில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழாவில் வெட்டவெளிச்சமானது. இரண்டு மணி நேரம் நடந்த விழாவில், முதல்வரும், கவர்னரும் அருகருகே அமர்ந்திருந்தும், ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.இந்நிலையில், கம்பன் கலையரங்கில், நேற்று காலை நடந்த கம்பன் விழா வில், கவர்னர், முதல்வர் இருவரும் பங்கேற்றனர். கவர்னர் கிரண்பேடி தொடக்க உரையாற்ற வந்தார். அப்போது, 'இங்கு எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும் கையை உயர்த்துங்கள்' என்றார். மிகக்குறைவான எண்ணிக்கையில், கையை உயர்த்தினர். பின், 'இங்கு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், பிரெஞ்ச் என, பன்மொழி தெரிந்த முதல்வர் உள்ளார். அவர் மொழிமாற்றம் செய்ய வேண்டும்' என, அழைத்தார்.'கவர்னர் அழைக்கிறார் என்பதை விட, கம்பன் விழாவிற்காக மொழி மாற்றம் செய்கிறேன்' என, முதல்வர் நாராயணசாமியும், அதற்கு முன்வந்தார். அப்போது, கவர்னர், தான் கூறுவதை மட்டுமே மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்றும், 10 நிமிடத்திற்கு முதல்வரை நம்புவதாகவும் கூறினார்.உடனே, முதல்வர் நாராயணசாமி, தான் நிரந்தரமாகவே கவர்னர் கிரண்பேடியை நம்புவதாக தெரிவித்தார். இதையடுத்து, தானும் அவ்வாறு முதல்வரை நம்புவதாகவும், இந்த நட்பு காலம் முழுக்க நீடிக்க வேண் டும் என, விரும்புவதாகவும் கிரண் பேடி கூறினார்.

அதையடுத்து, கவர்னரின் ஆங்கில உரையை முதல்வர் மொழியாக்கம் செய்தார். விழா மேடையில் கவர்னருக்கும், முதல்வருக்கும் நடந்த இந்த உரையாடல், பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இன்று கர்நாடகா தேர்தல்: மும்முனை போட்டி நிலவுகிறது

Updated : மே 12, 2018 06:29 | Added : மே 12, 2018 04:41



 
பெங்களூரு : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கர்நாடக மாநில சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது.. மாநிலம் முழுவதும், ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம், முடிவடைந்தது. கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா, ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது பா.ஜ.,வின் எடியூரப்பாவிடம், முதல்வர் நாற்காலியை பறிகொடுப்பாரா என்பது, வரும், 15 ல் தெரிந்து விடும்.

கர்நாடகாவில் சித்தராமையா அரசின் பதவிக் காலம், இம்மாதம், 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை, மார்ச், 27ல், வெளியிடப்பட்டது.ஜெயநகர் தொகுதி, பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், மாரடைப்பால் இறந்தார். அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள, 223 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. பா.ஜ., சார்பில், 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்., சார்பில், 221 பேரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், 200 பேரும் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் உட்பட, மொத்தம், 2,636 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.பா.ஜ., சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத், ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் காங்கிரஸ் சார்பில், கட்சி தலைவர், ராகுல், மூத்த தலைவர், சோனியா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில், முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரத்தில் ஈடுபட்டார்

அனைத்து தொகுதிகளுக்கும், இன்று காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாநிலம் முழுவதும், 56 ஆயிரத்து 995 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ஐந்து கோடி வாக்காளர்கள், ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.

இத்தேர்தலில் காங்., பா.ஜ. மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று கட்சிகள் தனிததனியே போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதால் வெற்றி யாருக்கு என்பது குறித்து மே 15-ல் நடக்க உள்ள ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிவரும்.தேர்தல் பாதுகாப்புக்காக மாநில முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ரூ.25 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணிக்கான டெண்டர் வெளியீடு



காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பக்தர்கள் தங்குவதற்காக ரூ.25 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டப்படுகிறது.

மே 12, 2018, 03:27 AM

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான லாலாதோட்டம் என்ற இடத்தில் 5 ஏக்கரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் தங்குவதற்காக ரூ.25 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி (யாத்திரை நிவாஸ்) கட்டப்படுகிறது.

மத்திய-மாநில அரசுகளின் சுற்றுலாத்துறை மூலம் அமைக்கப்படும் இந்த விடுதிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி செய்கிறது. 150 அறைகளுடன் நவீன முறையில் கட்டப்படும் இந்த விடுதியின் கட்டுமான பணிக்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், முன்னாள் மேலாளர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல தணிக்கை அதிகாரி சரோஜா, உதவி கோட்ட பொறியாளர் கல்யாணசுந்தரம், ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...