Monday, May 21, 2018

மனிதப் பிறவியின் மாண்பு

By வாதூலன்  |   Published on : 21st May 2018 02:36 AM  
அண்மைக் காலமாக இந்தியா முழுவதும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை விவசாயிகள் தொடர்புள்ளவை. மிக அண்மையில் தமிழ்நாட்டில் நேர்ந்த இரண்டு தற்கொலைகள் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஒன்று ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உறவினரின் தற்கொலை. மற்றொன்று நெல்லை மாவட்ட மாணவனின் தற்கொலை. இரண்டுமே அரசியல் சார்பு கொண்டவை.
தற்கொலைகள் ஏன் நிகழ்கின்றன? ஒரு வகையான மன அழுத்தத்தினாலும், பிரச்னைகளிலிருந்து எளிதாக விடுபடவுமே சிலர் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். பள்ளித் தேர்வில் தோல்வி, காதல் நிராகரிப்பு, உயர் அதிகாரிகளின் கெடுபிடி போன்ற பலவும் இதில் அடங்கும். ஆனால், ஒரு பொதுப் பிரச்னை சம்பந்தமாக தனி மனிதர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் சரிதானா? இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.
இதுவரை ஒரு சில தற்கொலைகள்தான் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பலன் கிட்டுவதற்கும் காரணிகளாய் அமைந்துள்ளன. குறிப்பாக இரண்டு தற்கொலைகள். இரண்டுமே உணர்வுபூர்வமான பிரச்னைகள். முதலாவது வாஞ்சிநாதன். ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நிகழ்வு 1911-இல் நடந்தது. ஆனால், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து 1947-இல். இருந்தால்கூட தேச விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களும் தீவிரமாகப் பங்கேற்றார்கள் என்பதற்கு ஒரு சான்றாக இது அமைந்தது.
மற்றொன்று, "தமிழ்நாடு' என்று பெயர்சூட்டக் கோரி சங்கரலிங்கனார் தொடர்ந்து இரண்டு மாதத்துக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து, பிறகு இறந்து போனார். ஆனாலும், 1967-இல் அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்தான் "தமிழ்நாடு' என்ற பெயர் அரசாங்கப் பதிவேடுகளில் இடம்பெற்றது.
கிட்டத்தட்ட சங்கரலிங்கனார் மாதிரியே உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி ஸ்ரீராமுலு. மெட்ராஸ் பிரசிடென்சியிலிருந்து ஆந்திர மகாணம் தனியே பிரிய வேண்டும் என்பது அவர் கோரிக்கை. அந்த ஒரு தற்கொலைக்கு உடனே பலன் ஏற்பட்டது. பிறகு, நேருவின் தலைமையிலான காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து, ஆந்திரா தனி மாநிலமாக மாறியது.
மேற்சொன்னவற்றோடு தற்போது நிகழ்ந்த தற்கொலைகளை ஒப்பிட முடியுமா என்பது கேள்விக் குறிதான். ஏனெனில், நெல்லை மாவட்ட மாணவன் தினேஷ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கும், பிற தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் சித்தப்பா உதவி புரிந்து வருகிறார். தினேஷ் கல்வியில் ஆர்வமுள்ளவன் என்றும், மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பியிருக்கிறான் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் கணநேர முடிவு சோகமானது மட்டுமல்ல, பேதமையானதும்கூட.
ஓர் அரசியல்வாதியின் சகோதரி மகன் தீக்குளித்த சம்பவத்தை எப்படி வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. அரசியல்வாதியின் உறவினருக்கு அரசியல் சார்பான முடிவுகள் எப்படி எடுக்கப்படும் என்று தெரியாதா என்ன? மேலும், காவிரி நீர்ப் பிரச்னை இன்று நேற்று முளைத்ததல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் தாங்கள் பதவியில் இல்லாதபோது இதை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஆதாயம் தேட முனைகின்றனவே தவிர, உருப்படியாக ஏதும் செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
நிலைமை இப்படி இருக்க, தற்கொலையால் தான் விரும்பத்தக்க மாறுதல் ஏற்படும் என்று நினைப்பது அறிவுடைமை அல்ல. அதுவும் சுயநலவாதிகள் மிகுந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், அதுபோல மாறுதல் நேர்ந்தால் அது எட்டாவது அதிசயமாகத்தான் இருக்கும்.
என் நண்பர் ஒருவர் பட்டப் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்து, தனது விதவைத் தாயாருடன் வசித்து வந்தார். மெத்தப் படித்த அவருடைய தமையன்மார்களும் தமக்கைகளும் அவரைக் கேலி செய்துகொண்டே இருப்பார்கள். வீட்டில் விசேஷம் ஒன்று நடந்தபோது, அண்ணன் மகள் அவரை ஏளனம் செய்தவுடன் அவர் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்குச் சென்றுவிட்டார். மனம் சமாதானப்பட்டுத் திரும்பியபோது, மனைவியும் தாயாரும் அவருக்கு அறிவுரை கூறினார்கள். தன்னுடைய தற்கொலையால் யாரும் திருந்தி, மாறப்போவதில்லை என்ற எண்ணம் மிக ஆழமாக அவருக்குள் பதிந்தது. ஓய்வு பெற்றபிறகு அவர் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு, இப்போது நலமாக இருக்கிறார்.
இதற்கு மாறாக, நாசிக் அருகே நான்காம் வகுப்பு படித்த சிறுவன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டு "சக்திமான் என்னைக் காப்பாற்று' என்று கூவி அழைத்த ஒரு பழைய சம்பவமும் இருந்திருக்கிறது. 1993-இல் "சக்திமான்' தொலைகாட்சித் தொடர் ஏற்படுத்திய பாதிப்பு இது. சிறுவர்கள் பலர் இதுபோன்ற வீரதீரச் செயல்களில் இறங்கியதாக நிறைய செய்திகள் அப்போது வெளிவந்தன.
ஆனால் ஒன்று உறுத்துகிறது. வீராவேசம் பேசும் அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் தொடர் உண்ணாவிரதம் கூட இருப்பதில்லையே ஏன்?
ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறுகிறார்: "இந்தச் சரீரம் என்னுடையது மட்டுமல்ல, இந்தச் சரீரத்தை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் உரிமை, தாய் - தந்தைக்கும் இருக்கிறது. அதனால் அதைக் கொலை செய்யும் உரிமை நமக்கு இல்லை'. 
அப்பர் தேவாரமும் "மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று கூறுகிறது. "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று ஒளவைப்பாட்டியும் மனிதப் பிறவியின் மாண்பைக் கூறியிருக்கிறார். இத்தகைய மாண்புமிக்க மானுடப் பிறவியை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக் கொள்வது போன்ற பேதமைச் செயல் வேறொன்றுமில்லை!
இந்தப் பழக்கத்தை என்னால விடவே முடியல!" - மலிவு விலை போதை அதிர்ச்சி
 
விகடன் 

  மதுவில் தொடங்கி மருந்துவரை பல்வேறு பரிமாணங்களில் உலகெங்கும் போதை தன்னை வியாபித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் வாழும் சூழலும், தேவையும்தான் அவர்களின் போதை என்னவென்பதை நிர்ணயிக்கின்றன. எவ்வித சம்பாத்தியமும் இல்லாமல், குடும்பத்தின் பிடிமானமும் இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் மலிவு விலை போதையைத்தான். பஞ்சர் போடும் பசை, ஒயிட்னர் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்தே போதையை ஏற்றிக் கொள்கிறார்கள்.

செங்கல்பட்டு பகுதிகளில் போதையில் சுற்றித் திரியும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் காணமுடிகிறது. இப்படிப் போதையை ஏற்றிக் கொள்ளும் நபர்கள் அப்படியே சில நிமிடங்கள் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறார்கள். இவ்வகை போதைக்கு அடிமையானவர்களின் மரணம் மிகவும் கொடியது. போதைக்காக இவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் நுரையீரல் வழியாக நேரடியாக மூளையைப் பாதிக்கும் தன்மை கொண்டவை. மேலும் மதுவை விடவும் பலமடங்கு வேகமாக செயல்பட்டு உடல்உறுப்புகளை இவை பாதிப்பதால், வெகு சீக்கிரத்திலேயே உடல் உறுப்புகளானது செயல் இழக்கத் தொடங்கிவிடும். இதன் தொடர்ச்சியாக உடலின் மொத்த இயக்கத்தையும் சிலவருடங்களிலேயே முடக்கிவிடும் அபாயமும் உள்ளது.

செங்கல்பட்டு பகுதியில், ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரோடு சுற்றித்திரிகிறார் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுவயது இளைஞர். சிறுவயதிலிருந்தே பிரபல நிறுவனத்தின் பசை ஸ்ட்ராங்காக அவரிடம் ஒட்டிக்கொண்டுள்ளது. இன்றுவரை அவரால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. அருகில் உள்ள பொன்விளைந்த களத்தூர் பகுதியிலிருந்து தினமும் காலையில் கிளம்பி செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு வந்துவிடுகிறார். பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பிச்சை எடுத்து, அந்தக் காசில், பஞ்சர் பசையை வாங்கி போதை ஏற்றிக்கொள்கிறார். போதை, தலைக்கு ஏறிய நிலையில், மீண்டும் ‘பசிக்குது… காசு வேணும்’ எனக் கையேந்தி திரிகிறார். அவரைப் பற்றித் தெரிந்தோர் முறைப்பார்கள். தெரியாதவர் பத்து, இருபது எனக் கொடுத்து கரிசனம் காட்டுவார்கள். பெரும்பாலான கடைகளில் இவருக்கு அந்தப் பசை விற்பது கிடையாது. இதைப் பயன்படுத்தி சில கடைகளில் அதிக விலையிலும் இந்தப் பசை இவருக்கு விற்கப்படுகிறது.

பேருந்து நிலையத்தில் போதையில் இருந்த குமாரிடம் பேசினோம்… “எங்க அம்மா பிச்சை எடுப்பாங்க. அவங்க கத்துகொடுத்த தொழில் இதுதான். பொய் சொல்லமாட்டேன். திருட மாட்டேன். பணம் கொடுக்கலையா… விட்டுட்டு வேற ஆளப் பார்ப்பேன். பிச்சை எடுக்கும்போது இவ்வளவுதான் கொடுக்கணும்னு கேட்க மாட்டேன். ஒரு ரூபாய் கொடுத்தாக்கூட வாங்கிக்குவேன். ஒரு நாளைக்கு சுமாரா 250 ரூபாய் கிடைக்கும். மாதம் 6,000 ரூபாய்க்கு மேல வருமானம் வரும். சாயங்காலம்வரை பிச்சை எடுத்து முடிச்சுட்டு மூணு மணிக்கு மேல பஸ்ஸுல வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். வீட்டுக்குப் போய் அண்ணி கைல காசு கொடுத்துட்டு, வெளியே கிளம்பிடுவேன். பின்னர் பசையைப் பயன்படுத்தி போதை ஏத்திக்கொள்வேன். அவ்வளவுதான்” என விரக்தியாகச் சொன்னவர் தொடர்ந்தார்.

“ரெண்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன். மெட்ராஸுல இருந்து எங்க அண்ணன் இங்க வரும்போது, என்னையும் கூட்டிக்கிட்டு வந்துட்டார். செங்கல்பட்டுல இருக்கும் பசங்க எனக்கு இதைக் கத்துக்கொடுத்துட்டாங்க. என்னால இதை விடவே முடியல. நான் இந்த ஊரு முழுக்க பிச்சை எடுத்தவன் என்பதால, என்னை எல்லோருக்கும் அடையாளம் தெரியும். எனக்கு யாரும் வேலை கொடுக்கமாட்டாங்க. அப்படியே கொடுத்தாலும் அந்தக் கடைக்கு வர்றவங்க இந்தப் பிச்சைக்காரனுக்கா வேலை கொடுத்தீங்கன்னு சொல்லி கெடுத்து விட்டுடுவாங்க. அப்புறம் வேலைக்கு சேர்த்தவங்களுக்குத்தான் கெட்ட பேர் வரும். பெட்டிக்கடை வச்சாக்கூட, அதில் வர்ற வருமானம் மொத்தமா எங்க அண்ணன், அண்ணிக்குத்தான் போகும். சம்பாதிக்குற காசுகூட நம்ம கையில இருக்காது. ஒரே கெட்டப்ல இருந்தா மாட்டிக்குவேன். அதனால அடையாளம் தெரியாம இருக்க அடிக்கடி மொட்டை அடிச்சுக்குவேன்.” என்றவர் “டைம் ஆகுது நான் வர்றேன்” என சொல்லிவிட்டு விர்ரென கிளம்பினார்.

குமாரைப் போல நிறைய இளைஞர்கள் செங்கல்பட்டில் சுற்றித் திரிகிறார்கள். இரும்பு பொறுக்கி எடைக்குப் போடுவது, அந்த வேளை உணவுக்கான பணமும், கொஞ்சம் பசையும் இருந்தால் அவர்களுக்குப் போதும். எல்லோரும் ஓய்வாக இருக்க ஓர் இடத்தைத் தேடுகிறார்கள். மக்கள் அதிகம் புழங்காத ரயில் தண்டவாளங்கள், பாழடைந்தக் கட்டிடங்கள் பக்கமாக ஒதுங்கி போதையை ஏற்றிக் கொள்கிறார்கள். தொடர்ந்து ஒரே இடத்தில் இல்லாமல் இடம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

இத்தகையப் போதையை பயன்படுத்துபவர்களுக்கு அதன் தீவிரம், விளைவுகள் எல்லாம் நன்றாகவேத் தெரியும். ஆனாலும் அவர்களால் அதைக் கைவிட முடிவதில்லை. இதுபோன்று போதையில் திரிபவர்களை மீட்க அரசின் எந்தத் துறையும் முன்வருவதில்லை. தனியார் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை மீட்க முடியும் என்றாலும், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள்தான் இவர்களை மீட்பு மையங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இவர்களை மீட்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், இத்தகைய போதை இளைஞர்களைப் பற்றி யாரும் கண்டுகொள்வதே இல்லை. இத்தகையப் போதைப் பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவரச் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். கண்ணுக்கெட்டிய தொலைவில் மரணம் அவர்களைத் துரத்துவது தெரியும். ஆனாலும் அந்தப் போதை, சிரித்துக்கொண்டே மரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது...
 
இரவு நேர விபத்துகளை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் தந்து களைப்பைப் போக்கும் காவல்துறை!
 
விகடன் 11 hrs ago

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரங்களில் நடக்கும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் அளித்து களைப்பு நீக்கும் சேவைப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாடானை தாலுகா தொண்டி வழியாக கிழக்குக் கடற்கரைச் சாலை செல்கிறது. இந்தச் சாலை தொண்டி, எஸ்.பி.பட்டிணம், திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதிகளில் குறிப்பாக வட்டாணம் அருகே மற்றும் உப்பூர், திருப்பாலைக்குடி அருகே அடிக்கடி விபத்துகள் நிகழந்து வருகின்றன. இந்த இடங்களில் கடந்த சில மாதங்களில் பல்வேறு விபத்துகள் நடந்து, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே நடக்கின்றன.

இதேபோல், ராமநாதபுரம்-மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியிலும் இரவு நேரங்களில் அதிக அளவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு, உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரங்களில் ஓய்வின்றி வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்கள், தூக்க கலக்கத்துடன் வாகனங்களை இயக்குவதால் இத்தகைய விபத்துகள் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, இரவு நேர வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி ஓய்வு அளித்து ஓட்டுநர்களின் களைப்பு, நீங்கிய பின்னர் வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்படி, திருவாடானை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இரவு 10 மணிக்கு மேல் செல்லும் வாகனங்களை தொண்டி, திருப்பாலைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நிறுத்தி, அந்த வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக சுடச் சுட தேநீர் வழங்கி ஓட்டுநர்களின் களைப்பினை போக்கி அனுப்பும் பணியில் திருவாடானை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, தொண்டி ஆய்வாளர் நலாயினி, திருப்பாலைக்குடி ஆய்வாளர் ராணிமுத்து, திருவாடானை அணைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரீஸ்வரி ஆகியோர் போலீஸாருடன் இணைந்து இந்த சேவை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சாலை ஓரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்திருந்தால் அதையும் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ரோடுகளில் பள்ளங்கள் இருந்தால் அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதோடு, ஆங்காங்கே விபத்து பற்றிய விழப்புணர்வு பதாதைகளும் வைத்து விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இதேபோல் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு பார்த்திபனூர் சோதனை சாவடி அருகே தேநீர் வழங்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் தொடர்ந்து வெகுதூரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் இந்த இரவு நேர தேநீர் உபசரிப்பு, ஓட்டுநர்கள் மத்தியில் மட்டும் இன்றி, பொதுமக்கள் மத்தியிலும் போலீஸாருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.

Merely Assigning Some Work To Junior Officer And Taking Actions Against Him Like Stopping Of Salary Doesn’t Amount To Abetment Of Suicide: SC [Read Judgment] | Live Law

Merely Assigning Some Work To Junior Officer And Taking Actions Against Him Like Stopping Of Salary Doesn’t Amount To Abetment Of Suicide: SC [Read Judgment] | Live Law: The SC has observed that merely because a superior officer assigned work to his junior officer and took actions against him like stopping of his salary, he cannot be held to have a guilty mind or criminal intent, to attract offence under Section 306 of the Indian Penal Code, for abetment of suicide.

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை!


பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகத்தில் ஒரு குழந்தையை அதைப் பெற்ற தாயின் மூலம் அடையாளம் காண்பதில்லை. தந்தையின் பெயரில்தான் எந்தக் குழந்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது. தாயின் மகத்தான பங்களிப்புக்கு எந்த அங்கீகாரமோ அல்லது மரியாதையோ அளிக்கப்படுவதில்லை. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தந்தையின் பெயரில் ஒரு நபரை அல்லது குடிமகனை அடையாளம் காணும் ஆணாதிக்க முறைக்குப் பலத்த அடியை அளித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த மதுமிதா ரமேஷ் என்பவருக்கும் சரண் ராஜ் என்பவருக்கும் திருமணமானது. அவர்கள் சில காலம் கழித்து கருத்து வேறுபாடுகளின் காரணமாக பரஸ்பர சம்மதத்தின்பேரில், விவகாரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர். இதைத் தொடர்ந்து மதுமிதா ‘இன்ட்ராயுட்டீரைன் பெஃர்ட்டில்லி’ என்ற செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து கொடையின் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்.

2017 ஏப்ரலில் பிறந்த குழந்தைக்கு தவிசி பெராரா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தக் குழந்தைக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் அளித்த பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயராக மனிஷ் மதன்பால் என்பவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மதன்பால் என்பவர் மதுமிதாவின் சிகிச்சைக்கு உதவினார் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மதன்பாலின் பெயரை நீக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சியி்ல் மதுமிதா மனு அளித்திருந்தார். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்தையின் பெயரில் திருத்தம்தான் செய்யலாம். ஆனால், நீக்க முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து மதுமிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முதல் வழக்கில் தோல்வியடைந்தார். பின்னர் இரண்டாவது வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கில் வருவாய்த் துறை அதிகாரிகள் பிறப்புச் சான்றிதழில் உள்ள தவற்றைச் சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், வருவாய்த் துறை பிறப்பு இறப்புகளைப் பதிவு செய்யும் பதிவாளர்தான் இது தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரம் உள்ளவர் என்று நீதிமன்றத்துக்குப் பதில் கூறி விட்டது. பின்னர் மனம் தளராமல் இரண்டாம் முறையாக வழக்கு தொடர்ந்தார் மதுமிதா.

இதற்கிடையில் மதுமிதாவின் முன்னாள் கணவர் சரண் ராஜும் மதன்பாலும் தாங்கள் குழந்தைக்கு எந்தவிதத்திலும் தொடர்புடையவர்கள் அல்ல என்று கூறி தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் விசாரணை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மதுமிதா இன்ட்ராயுட்டீரைன் பெஃர்ட்டில்லி என்ற செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து கொடை மூலம் குழந்தை பெற்றுள்ளார். எனவே, இந்தக் குழந்தைக்கும் சரண் ராஜுக்கும் மதன்பாலுக்கும் சம்பந்தமில்லை. எனவே, மதுமிதாவே இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாநகராட்சி பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற பெயரில் உள்ள மதன்பாலின் பெயரை நீக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் உள்ள இடமானது வெற்றிடமாக இருக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் அவசியம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தீர்ப்பளி்த்துள்ளார்.


Angered by flight delay at Chennai airport, 'tipsy' man harms self using pen

The man told the officials that he ran the risk of missing his connecting flight at Mumbai and in a seeming fit of rage, he took out a pen and punched his stomach causing mild bleeding.



Published: 20th May 2018 12:57 PM

Image used for representational purpose.

By PTI

CHENNAI: Irked by delay in the take off of a Mumbai-bound flight, a 37-year-old man, allegedly under the influence of alcohol, today inflicted self injury using a pen after a wordy duel with airline officials.

The passenger was taken to a hospital within the airport premises for treatment, and the flight later departed without him.

The passenger was scheduled to board Air India's 2.30 AM Mumbai flight and since it got delayed for about three hours, he questioned the airline officials and it led to a verbal duel, airport sources said.

The man told the officials that he ran the risk of missing his connecting flight at Mumbai and in a seeming fit of rage, he took out a pen and punched his stomach causing mild bleeding.
Government service doctors get 54 per cent PG medical seats in Chennai

On the second day of counselling for post graduate medical and dental admissions, government service doctors got 54 per cent medical seats while non-service doctors got 45 per cent seats on Sunday.



Published: 21st May 2018 03:39 AM |

 

Image for representational purpose only.

By Express News Service

CHENNAI: On the second day of counselling for postgraduate medical and dental admissions, government service doctors got 54 per cent medical seats while non-service doctors got 45 per cent seats on Sunday.

As per the Selection Committee seat matrix, of the total 443 seats allotted on the day, service doctors managed to get 242 seats, or 54 per cent, while non-service doctors got 201 seats, or 45 per cent.
Counselling got delayed because of the marathon legal battle by service doctors and the government after Medical Council of India abolished 50 per cent reservation for government service candidates in PG medial admissions. Also, incentive marks are allowed only for doctors working in remote, difficult and rural areas. MCI made NEET-based admissions mandatory across the country.

A source said this could be because the State did not allow candidates who got seats under all India quota counselling. “In other States, State counselling was held before second round of all India quota counselling. But, only in Tamil Nadu its delayed. This also in a way benefitted the service candidates, else, most of the seats would have gone to non-service doctors. But, over all, service doctors would be affected this year as MCI abolished 50 per cent reservation for government doctors in PG medical admissions”.
Of the 1,344 candidates called for counselling on Sunday, 775 got seats in all India quota.

NEWS TODAY 25.07.2026