Saturday, August 4, 2018


`தப்பைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்' - மறுகூட்டல் விவகாரத்தில் உமா அதிரடி 


எஸ்.மகேஷ்



``சென்னை அண்ணா பல்கலைக்கழக மறுகூட்டல் விவகாரத்தில் தப்பைக் கண்டுப்பிடித்ததே தேர்வு கட்டுப்பாட்டு பிரிவுதான்'' என்று உமா தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, மறுகூட்டல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மறுகூட்டல் விவகாரம் தொடர்பாக அவரிடம் பேசினோம்.

`` சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக நான், பணியாற்றியபோது, பல மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அதற்குதான் இப்போது பழிவாங்கப்படுவதாக கருதுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால் மறுகூட்டலில் நடந்த முறைகேட்டைக் கண்டுபிடித்ததே தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவுதான். ஆனால், உண்மைகள் மறைக்கப்பட்டு நானும் என் டீமும் பழிவாங்கப்பட்டுள்ளோம். என் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து துணைவேந்தரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். அதற்குள் சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். இதிலிருந்து நிச்சயம் விடுபடுவேன்.

நான் லஞ்சம் வாங்கியதாகக் கூறும் குற்றச்சாட்டில் உண்மையல்ல. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த முறைகேட்டில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. முறைகேடுகள் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மீது தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு சந்தேகம் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவர்கள், தேர்வு எழுதியபோது பெற்ற மதிப்பெண்களுக்கும் மறுகூட்டலில் பெறப்பட்ட மதிப்பெண்களுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. வெளிப்படையாகத்தான் மறுகூட்டல் விவரங்களை வெளியிட்டேன். பத்து ஆண்டுகள் புள்ளி விவரங்களையும் தெரிவித்துள்ளேன். இதனால் மறைப்பதற்கு எதுவும் இல்லை. மூத்த அதிகாரிகள் ஒப்புதலுடன்தான் தேர்வுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் நான் பணியாற்றினேன்.

பொதுவாக, விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களைப் பொறுத்து மதிப்பெண்கள் வேறுபடும். ஒரு தேர்வுத் தாளை இரண்டு ஆசிரியர்கள் திருத்தும்போது மதிப்பெண்கள் மாறுபடுவதுண்டு. 64 லட்சம் விடைத்தாள்களில் 6,000 விடைத்தாள்களில் மட்டுமே மதிப்பெண்கள் மாறுபட்டுள்ளன. 73,000 மாணவர்கள் மறுகூட்டலுக்குப்பின் தேர்ச்சி பெற்றதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக 1,040 தேர்வாளர்கள் மீது கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் இனி வரும் காலங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது, நடந்து பல மாதங்கள் கடந்தபிறகு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
காவிரித்தாய்க்குக் காதோலை கருகமணி, சப்பரம் படைத்து வழிபடும் மக்கள்!


கே.குணசீலன்

க.சதீஷ்குமார்

என்.ஜி.மணிகண்டன்

ம.அரவிந்த்




திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டபப் படித்துறை. இரு கரைகளையும் நனைத்தபடி தவழ்ந்தோடிக் கொண்டிருக்கிறாள் காவிரித்தாய். படித்துறையில் தலைவாழை இலை போட்டு காதோலை கருகமணி, சப்பரம், மஞ்சள் கயிறு, பூ, பழங்கள் வைத்து படையலிட்டு காவிரித் தாயை வணங்கி மகிழ்கிறார்கள் மக்கள்.



ஆடிப்பெருக்கு விழா தஞ்சையின் பண்பாட்டு விழாக்களில் ஒன்று. அன்றைய தினம், தங்கள் வாழ்க்கையை வளமாக்கும் காவிரியைத் தாயாக உருவகப்படுத்தி படையலிட்டு வணங்குவார்கள் காவிரிப்படுகை மக்கள். புதுமணத் தம்பதிகள் காவிரியில் நீராடி இத்திருநாளைக் கொண்டாடுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, ஆடிப்பெருக்கு தினம் தஞ்சைப்படுகை நிலப்பரப்பில் களைகட்டவில்லை. காரணம், காவிரியில் தண்ணீர் இல்லை. இந்தாண்டு, இயற்கையின் கருணையால் காவிரித்தாய் பூரிப்போடு நிறைந்தோடி வருகிறாள். புத்துணர்வோடு மக்கள் கூடி ஆடிப்பெருக்கைக் கொண்டாடினார்கள்.




மேட்டூரில் தொடங்கி பூம்புகார் வரையிலான காவிரிக் கரையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே புதுமணத் தம்பதிகளும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக காவிரிக்கரையில் கூடினார்கள். படித்துறையில் தலைவாழை இலை போட்டு அரிசி, வெல்லம், எள், பொட்டுக்கடலை சேர்த்து கிளறி செய்யப்பட்ட காப்பரிசி, கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தாலி, காதோலை, கருகமணி, மரப்பலகையால் செய்யப்பட்ட சப்பரம் மற்றும் பழங்களைப் படைத்து காவிரித் தாய்க்குச் சமர்ப்பித்தனர்.

சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றைக் கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். பெண் குழந்தைகளுக்குக் கழுத்திலும் ஆண்களுக்குக் கையிலும் மஞ்சள் கயிற்றைக் கட்டி மகிழ்ந்தார்கள். புதுமணத் தம்பதிகள், புதிய மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, தாலியைக் கழட்டிவைத்து வணங்கியதோடு புதியத் தாலிச்சரடை மாற்றித் தங்கள் கணவர் கையாலேயே மீண்டும் கழுத்தில் கட்டிக்கொண்டார்கள். புதுமணத் தம்பதிகளின் கேலி கிண்டல், விளையாட்டுகளால் காவிரிக் கரை நெடுக கொண்டாட்டம் களைகட்டியிருந்தது.



இந்தக் கொண்டாட்டத்தில் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் பங்கேற்று சப்பரம் இழுத்து மகிழ்ந்தனர். தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் படம் ஒட்டப்பட்டிருக்கும். இந்தச் சப்பரத்தைக் கயிறு கட்டி இழுத்தபடி ஊரையே சுற்றி வலம் வந்து குழந்தைகள் மகிழ்ந்தனர்.

கரைபுரண்டு ஓடிவரும் காவிரித்தாயால் விவசாயிகளின் வாழ்க்கை மட்டுமன்றி சப்பரம், காதோலை, கருகமணி போன்ற ஆடிப்பெருக்குக்கான பொருள்கள் செய்பவர்களின் வாழ்க்கையும் மாறியிருக்கிறது.

கும்பகோணம் மடத்துத்தெரு படித்துறையில் காதோலை, கருகமணி விற்பனை செய்த ராஜேந்திரனிடம் பேசினோம். ``காதோலை, கருகமணி செய்வது ஒரு கைவினைத் தொழில். பனை ஓலையை வெட்டி, வெயிலில் நன்கு காயவைத்து, வண்ணம் கலந்த நீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் கொள்வோம். பனை ஓலைகள் வண்ணமாகிவிடும். பிறகு, சுருளாகச் சுற்றி, அதன்மேல் கறுப்பு நிற வளையலைப் பொறுத்தினால் கருகமணி ரெடி. இதோடு ஒரு குங்கும பாக்கெட்டையும் சேர்த்து விற்பனை செய்வோம். இதுதான் எங்க குடும்பத் தொழில்..." என்றார் அவர்.



``காதோலை,கருகமணியைக் காவிரித்தாய்க்கு ஏன் படைக்கிறோம்?"

``சிலப்பதிகாரத்தில் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடுகளைத்தான் பெண்கள் அணிகலனாக அணிந்திருந்தார்கள். இறைவனை நகைகளால் அலங்கரிப்பது நம் தொன்ம மரபு. அதன் தொடர்ச்சிதான் பனை ஓலையில் செய்யப்பட்ட காதோலையை காவிரிக்குப் படைப்பது. காவிரித்தாய் தளும்பிவரும் நாளான ஆடிப்பெருக்கு அன்று, மக்கள் திரண்டு காதோலை, கருகமணியைக் காவிரித்தாய்க்குப் படைத்து மரியாதை செய்து, அதை அந்தத் தண்ணீரிலேயே விட்டு நன்றி கூறுவார்கள்" என்கிறார் ரமேஷ் சிவம் குருக்கள்.

திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை அருகே சப்பரம் செய்து விற்பனை செய்துகொண்டிருந்த மணிகண்டனிடம் பேசினோம்.

``ஆடிப்பெருக்குப் பெரியவர்களுக்கான விழா மட்டுமல்ல... குழந்தைகளும் கொண்டாடி மகிழும் விழா. கரை புரண்டோடும் காவிரித்தாயைப் பெரியவர்கள் வணங்குவதை குழந்தைகள் காணவேண்டும். தண்ணீரை தெய்வமாக மதித்துப் போற்றுவதன் அவசியத்தைக் குழந்தைகள் உணர வேண்டும். அதற்காகத்தான் குழந்தைகளையும் அழைத்து வந்து கொண்டாடுகிறார்கள் மக்கள். திருவிழாக் காலங்களில் தெய்வங்களை அலங்காரம் செய்து தேரில் வைத்து நகர்வலம் வருவது வழக்கம். இதனால் அந்தத் தெய்வத்தின் மனம் மட்டுமன்றி மக்களின் மனமும் குளிரும்.

அதை உணர்த்தும் வகையில்தான் இந்தச் சப்பரம் இழுக்கும் மரபு தொடங்கியது. பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சப்பரம் வாங்கித்தந்து, இழுத்து விளையாடவிட்டு, படித்துறையில் வைத்து அவற்றுக்கு பூஜைகளும் செய்வார்கள்..." என்கிறார் அவர்.

இயற்கையின் பெருங்கருணையால் காவிரி கரைபுரண்டு ஓடி வருவதால் மக்கள் இந்த ஆடிப்பெருக்கை கோலாகலமாகக் கொண்டாடிக் களித்து வருகிறார்கள்..!

`விலையை விசாரித்தால் வாங்கியே தீரணும்!'- பயணிகளைத் தெறிக்கவிடும் மாட்டுத்தாவணி பழ வியாபாரிகள்


அருண் சின்னதுரை


'பழங்களின் விலையை விசாரித்தால், கண்டிப்பாக வாங்க வேண்டும்' என பயணிகளை மிரட்டும் மாட்டுத்தாவணி பழ வியாபாரி மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி , சென்னை , தஞ்சாவூர் உள்ளிட்ட வெளியூர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு, மல்லிகைப் பூ, பாப்கான், ஜிகர்தண்டா, புத்தகங்கள் என்று பல்வேறு பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்துவருகின்றனர். பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கூடையில் நேரடியாக கொண்டுசென்று சிலர் பழங்களை விற்பனை செய்கின்றனர். அதில் ஒரு நபர், கைநிறைய பழங்களை அடிக்கிவைத்துக்கொண்டு பயணிகளிடம் பழத்தைக் காட்டுகிறார். பயணிகள் விலையை விசாரித்துவிட்டு பழத்தை வாங்கவில்லை என்றால், அவர்களை மரியாதை இல்லாமல் தரக் குறைவாகவும் , கோபமாகவும் திட்டித்தீர்க்கிறார். இதனால், பயணிகள் அவரின் மிரட்டலுக்குப் பயந்து பழங்களை அதிக விலைகொடுத்து வாங்கிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கூறுகையில், " நான் திருச்சி செல்வதற்காக 'பாயின்ட் டூ பாயின்ட்' வண்டியில் அமர்ந்திருந்தேன் . பெயர் தெரியாத பழ வியாபாரி ஒருவர், கையில் ஆறு மாதுளைகளுடன் வந்து பழம் இருபது இருபது என்று அந்த பழங்களைக் காண்பித்தார். நான் இருபது ரூபாயைக் கொடுத்து பழங்களைக் கேட்டேன். அதை பிளாஸ்டிக் கவரில் போட்ட அவர், 250 எடு என்றார் . ஏன் என்று கேட்டதற்கு, இவ்வளவு பழத்தை 20 ரூபாய்க்கா கொடுப்பாங்க ஒரு எலுமிச்சம் பழம் விலை என்னானு உனக்குத் தெரியுமா? திருச்சில இருந்து வந்துட்டு 20 ரூபாயை கொண்டுகிட்டு' என்று என்னை பஸ் பயணிகள் நிறையப் பேர் இருக்கும்போது மரியாதை இல்லாம பேசிட்டார். நான் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவன் . முதியவர் என்றுகூட பார்க்காமல், தரக் குறைவாகப் பேசியதால் தாங்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் அதிக விலைகொடுத்து அந்தப் பழங்களை வாங்கிச் சென்றேன்” என்று வேதனை தெரிவித்தார்.

'இது தற்போது நடைபெறுவதில்லை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பல நாள்களாக அரங்கேறிவருகிறது . இதில், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்று அடவாடிச் செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள்மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர் .

`திகார் ஜெயிலில்கூட போடுங்க... அவளை கட்டிக்கமாட்டேன்'- நர்சிங் மாணவியை ஏமாற்றிய காதலன் பகீர்!

எஸ்.மகேஷ்


`திகார் ஜெயலில் என்னைப் போட்டாலும் அவளை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று நர்சிங் மாணவியை ஏமாற்றிய காதலன் சிலம்பரசனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.



திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக உள்ளார். மணலி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இவரின் உறவினர் வீடு, கிழக்குக் கடற்கரைச்சாலை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ளது. அங்கு, அடிக்கடி சிலம்பரசன் வருவார். அப்போது, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியுடன் சிலம்பரசனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நர்சிங் மாணவி, சிலம்பரசனிடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால், திருமணத்துக்கு முன் சிலம்பரசன் மாயமாகிவிட்டார்.

இதையடுத்து நர்சிங் மாணவி, நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன், விசாரணை நடத்தினார். விசாரணையில் நர்சிங் மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிலம்பரசன் ஏமாற்றியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிலம்பரசனும் நர்சிங் மாணவியும் நெருங்கிப் பழகியுள்ளனர். அதில் நர்சிங் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்தத் தகவலை சிலம்பரசனிடம் தெரிவித்ததும், கருவை கலைக்கும்படி அவர் கூறியுள்ளார். அதன்படி நர்சிங் மாணவியும் செய்துள்ளார். மீண்டும் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போதும் கருக்கலைப்பு நடந்துள்ளது. மூன்றாவது முறையாகவும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், இந்தமுறை அவர் கருவைக் கலைக்காமல், திருமணம் செய்துகொள்ளுமாறு சிலம்பரசனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்ததோடு, திண்டிவனத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு, அவருக்கு இன்னொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இதையறிந்த அந்த மாணவி எங்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், சிலம்பரசனிடம் விசாரித்தோம். அப்போது அவர், 'திகார் ஜெயிலில்கூட போடுங்கள், அவளை மட்டும் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று பிடிவாதமாகக் கூறினார். இதையடுத்து, சிலம்பரசனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.
மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பொறியியல் பட்டதாரி − தேனியில் பரபரப்பு!

எம்.கணேஷ்

வீ.சக்தி அருணகிரி


தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருகிறார் கண்ணன். பொறியியல் பட்டதாரியான இவர், தன் மனைவி மகாலெட்சுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று இரவு 11.45 மணிக்கு தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவல், அப்பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், இணை இயக்குநர் மாவட்ட பொது சுகாதாரம் உட்பட மொத்த மருத்துவக் குழுவும் கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ``தன் மனைவிக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். ஆனால், தாய் மற்றும் சேயை பரிசோதிக்க எங்களை கண்ணன் அனுமதிக்கவில்லை. நேரம் ஆக, ஆக எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்ட ஆரம்பித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காமல் இருப்பதைக் கண்டறிந்து, தொப்புள் கொடியை மட்டுமாவது அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போதுகூட அலோபதி மருத்துவர்கள் வந்தால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே. சித்த மருத்துவர்கள் குழுவை வைத்து குழந்தைக்கு தொப்புள் கொடி அறுத்தோம். அதற்கு மேல் எங்களால் எந்தப் பரிசோதனைகளையும் அவர் செய்ய விடவில்லை. இது என் வீடு, என் மனைவி, என் குழந்தை, நீங்கள் புறப்படுங்கள் என்று கடுமையாகக் கூறி விரட்டுகிறார்.

அந்தக் காலத்தில் வீட்டில் பிரசவம் பார்ப்பது சாதாரண விஷயமாக இருந்தது. பாட்டிமார்களின் பெரும் வேலையாகவே பிரசவம் பார்ப்பது இருந்தது. கூடவே, ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டுவந்தோம். அதனால் சுகப்பிரசவம் எளிதான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் சுகப்பிரசவம் என்பதே சரியாக இருக்கும். இப்போதுகூட தாய், சேய் இருவருக்குமான அடிப்படை பரிசோதனைகள் கூட செய்ய முடியாத சூழல் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய், சேய்க்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றனர்.

மருத்துவர்கள் சொல்வதுபோல, அடிப்படையான பரிசோதனைகள் மட்டும் செய்யலாமே, அதுவும் வீட்டிலேயே பரிசோதிக்க அனுமதிக்கலாமே என்று கண்ணனிடம் கேட்டபோது, ``நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே, என் மனைவியும், குழந்தையும் ஆரோக்கியமாகதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க எதற்குப் பரிசோதனை?" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். தாய், சேய் இருவரையும் பரிசோதிக்க அனுமதி கேட்டு, கண்ணனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Former vice-chancellor of Anna University involved in the scam

DECCAN CHRONICLE.

PublishedAug 3, 2018, 3:10 am IST

To get the top rank in the university’s ranking, several colleges also allegedly bribed the authorities.




“Some of the faculty members who did not cooperate with the officials were also debarred by the university,” officials added.

Chennai: The revaluation scam unearthed by the Directorate of Vigilance and Anti-Corruption at Anna University was going on for several years and top officials even up to the rank of vice-chancellors were involved in the scam, according to professors from the university.

“Students with as many as 17 arrears have cleared them at one go. Despite several inquiry committees were constituted, the university did not take any fruitful action to check the corruption,” they alleged.

To get the top rank in the university’s ranking, several colleges also allegedly bribed the authorities. DVAC after conducting searches registered a case against former Controller of Examinations of the university G.V. Uma and nine others for allegedly taking the bribe to boost the students’ marks in revaluation.

The FIR revealed that 3,02,380 students have applied for revaluation in April/May 2017 out of which 73,733 students have passed and 16,636 students improved their marks in the process.

Professor G.V. Uma, who was controller of examinations (CoE) post from 2015 to 2018, had conspired with assistant professor P.Vijayakumar (former zone co-ordinator) and R.Sivakumar (former zonal officer) both from University College of Engineering, Tindivanam and demanded Rs.10,000 from each student to boost their marks by altering marks, the FIR alleged.

It further alleged they destroyed maximum answer scripts for whom they awarded the enhanced marks in the revaluation during August 2017 at Tindivanam.

The nexus between the controller of examinations office and affiliated colleges paved way for manipulations in the answer scripts.

“On the previous occasion in 2011-12, three deputy controllers of examinations were suspended in connection with the scam. But, the revaluation racket went unchecked with the knowledge of two previous vice-chancellors of the university,” professors alleged.

In the present case, the controller of examinations herself allegedly involved in the racket. “The entire process of examination from printing the question paper to disposing of the answer scripts was corrupted. Several crores of rupees were swindled by the university officials,” a principal alleged.

Anna University has debarred 1,070 faculty members from valuation following variation in marks in answer scripts of students who appeared for April/May 2017 exams.

“Some of the faculty members who did not cooperate with the officials were also debarred by the university,” officials added. “We have seized several crores of worth documents from the residence of G.V. Uma. It seems previous vice-chancellors of the university were also involved in the scam,” an investigating officer said.
Medicos identify a rare blood group ‘P null’ phenotype

DECCAN CHRONICLE.

PublishedAug 3, 2018, 4:17 am IST

There are more than 200 minor blood group antigens known besides A, B and Rh.



The doctors were unable to find a compatible blood unit even after cross matching with more than 80 units.

CHENNAI: A team of doctors led by Dr Shamee Shastry from the blood bank of Kasturba Medical College, Manipal, has identified a rare blood group called ‘pp’ or ‘P null’ phenotype recently.

The blood bank at the hospital received samples from a patient who required urgent blood transfusion. The doctors were unable to find a compatible blood unit even after cross matching with more than 80 units.

Extensive immunohematology workup was performed by the blood bank team and further for confirmation, samples were referred to the International Blood group Reference Laboratory (IBGRL), Bristol, UK for serological testing.

With the help of reference laboratory, it was confirmed that the patient’s cells had the rare ‘pp’ phenotype. There are more than 200 minor blood group antigens known besides A, B and Rh. A blood type is considered rare if fewer than 1 in 1,000 people have it. Dr Shamee Shastry, professor and head of the department of immunohematology and blood transfusion said, “The patient had a very rare ‘P’ null blood group and anti PP1Pk antibody in his blood that has a potential to cause acute intravascular hemolytic reaction to incompatible blood transfusion”.

“Rare donor registry will be of great help in managing such cases. Finding compatible unit for such case is a near impossible task without a well-established rare donor panel,” she said. Dr. Kiran Acharya, professor of orthopedics and his team performed blood less surgery once the patient’s hemoglobin was increased to the desired level using other medications.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...