Sunday, September 23, 2018

Plagiarising TN varsity students to lose degrees, profs guideship

Siddharth.Prabhakar@timesgroup.com

Chennai:23.09.2018

A student of the University of Madras or any of its affiliated colleges found guilty of plagiarism after completion of degree may, from the coming academic year, lose it for a certain period or have the registration cancelled if found resorting to the practice during a programme. Professors found guilty of the offence would lose their guideship for a period of three years and have two annual increments lopped off. Repeat offenders could face suspension or termination.

These are some of the guidelines adopted by the university syndicate at a meeting earlier this week, more than a month after the University Grants Commission (UGC) gazetted its academic integrity regulations in August.

Vice-chancellor P Duraisamy told TOI that the syndicate resolution would also be placed before the academic council later this month and before the senate next month for ratification.

The UGC had recommended graded penalties for similarities up to 10%, 10%-40%, 40%-60% and above 60%.



TRUE SPIRIT: Madras University syndicate adopts guideline

Univ guidelines mandate a panel to probe plagiarism

University of Madras, however, has decided that for all science disciplines, 20% similarity would be acceptable. For humanities and mathematics, up to 30% similarity would be acceptable.

The rest of the graded penalty levels would be applicable as per the guidelines as mandate by the UGC. For instance, a student found to have plagiarised a report or thesis up to 40% will be allowed to submit a revised script within six months. If it is between 40% and 60%, he/ she would be debarred from submitting a revised script for a year.

For professors, it’s more stringent. A plagiarism level of 40%-60% would mean losing an annual increment and guideship for two years. A manuscript that is found to have been copied by up to 40% would be withdrawn. The plagiarism percentage is checked by the Urkund software that has been in place at the university for more than a year now.

The guidelines mandate that the university form a departmental Academic Integrity Panel (DAIP) which will consist of heads of department, a senior academician and a subject expert. This would investigate allegations of plagiarism against a student, researcher, faculty or staff. The DAIP would have powers to assess the level of plagiarism and recommend penalties, within a period of 45 days from receipt of complaint.

The university will also form a Institutional Academic Integrity Panel (IAIP) headed by a dean or the vice-chancellor which shall consider the recommendations of DAIP, acting as an appellate authority.

Professors say this guideline would give the university teeth in acting against academically corrupt professors and students. In the case of Professor T Santhanam, a former principal of DG Vaishnav College who was found guilty of plagiarism last year, the university had to send his thesis to an external subject expert for verification. Now, it can be checked within the university.

For professors, it’s more stringent. A plagiarism level of 40%-60% would mean losing an annual increment and guideship for two years
IIT-M student ends life, but hasn’t left any suicide note

TIMES NEWS NETWORK

Chennai:23.09.2018

A 23-year-old student of IIT-Madras was found dead in his hostel room on Saturday morning. Police said he had hanged himself, but did not leave a suicide note. Shahal Kormath, who hailed from Manjeri in Kerala’s Malappuram district, was a final year student of the B Tech-M Tech (Dual Degree) naval architecture programme. A friend raised the alarm around 8am when Shahal did not answer the door. He alerted hostel warden Raguram Reddy who informed police.

Kotturpuram police broke open room 121 to find Shahal hanging from a noose tied to the ceiling fan. Police have sent the body to Government Royapettah Hospital for an autopsy.

Sources, requesting anonymity, told TOI that Shahal had been facing problems due to attendance shortage. IIT director Baskar Ramamurthi said “Kormath was not a topper but he did not have backlogs for the first seven semesters.”



‘Student’s performance dropped last semester’

The institute’s director Bhaskar Ramamurthi said, “His performance dropped in the last semester.We advised him to go for counselling but he decided to take help from his friends. That did not work.”

The IIT administration had informed his parents that he was short of attendance this semester. Subsequently, his brother in Bengaluru called and chided him. On Friday alone, Shahal apparently received several calls from his brother Fazil Kormath. Fazil told the Kotturpuram police that his brother had refused to answer when he called later to apologise for yelling at him.

“Most students who join IIT clear very tough entrances. Most of the time there is a strong reason for performances to drop. He and his friends did not realise that they will not be able to handle their problems without professional help,” added Ramamurthi.

› RELATED REPORT, P 4

சர்ச்சை பேச்சு: கருணாஸ் கைது

Updated : செப் 23, 2018 07:28 | Added : செப் 23, 2018 05:57 




  சென்னை : தமிழக முதல்வரையும், போலீசாரையும் தரக்குறைவாக பேசியது மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் நடிகர் கருணாசை இன்று (23 ம் தேதி) காலையில் கைது செய்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பேசுகையில்; முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுகிறார். இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்தேன் என கருணாஸ் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரியிடமும், யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்ற சவாலும் விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக, கலவரத்தை தூண்டுதல் மற்றும் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையே, சாலிகிராமம் வீட்டில் இருந்த கருணாசை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர்.

சட்டப்படி சந்திப்னே் : கருணாஸ்

முன்னதாக அவரது வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் வேனில் ஏற்றும் முன்பு நிருபர்களிடம் பேசிய கருணாஸ் :

என்னை கைது செய்ய சபாநாயகர் அனுமதி பெற்றார்களா என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் சிறை செல்லவே பிறந்தவர்கள். சீவலப்பேரி பாண்டி வழி வந்தவர்கள். பேச்சுரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி சந்திப்பேன். என்றார்.

நவ திருப்பதியில் சிறப்பு தரிசனம்

Added : செப் 23, 2018 02:46

திருநெல்வேலி: புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையான நேற்று, நவ திருப்பதி கோவில்களில், சிறப்பு தரிசனம் மற்றும் பூஜைகள் நடந்தன. துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயகான பெருமாள், திருப்புளியங்குடி காசினிவேந்தர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தர். மேலும், இரட்டை திருப்பதியான அரவிந்த லோசன், தேவர்பிரான், தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதர், திருக்கோவிலுார் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் ஆகியவை நவதிருப்பதி கோவில்கள். இக்கோவில்களில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு மற்றும் கருடசேவை நடக்கும். இந்தாண்டு, புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையான நேற்று, நவதிருப்பதி கோவில்களில் அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, சிறப்பு பூஜைகள் நடந்தன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வரும், 29ம் தேதி சனிக்கிழமை, அக்டோபர், 6, 13ம் தேதி சனிக்கிழமைகளிலும், சிறப்பு வழிபாடு மற்றும் இரவில் கருட சேவை நடக்கிறது. இதையொட்டி, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், நவதிருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் வகையில், நெல்லை, துாத்துக்குடியிலிருந்து, அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கிரிவலம் வர உகந்த நேரம்

Added : செப் 23, 2018 02:23

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் உண்ணாமுலை அம்மனை தரிசித்து செல்வர். இந்த புரட்டாசி மாத பவுர்ணமி, நாளை காலை, 7:41 மணிக்கு துவங்கி, மறுநாள் காலை, 8:42 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரவிருக்கும் விசேஷங்கள்
  • செப்டம்பர் 25 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்
  • அக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 2 (செ) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 110 வது பிறந்த நாள்
  • அக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்
  • அக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை
  • அக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்

Saturday, September 22, 2018


வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை சொல்லவா சார்?!


By வேலுச்சாமி ராஜேந்திரன், தேனி. | Published on : 21st September 2018 04:15 PM |



ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது.

கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம்.

கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார். வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும். ஆயினும் சுற்றியிருக்கும் பூத கணங்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில்,


வந்தாயா எருமையே! வா, வா எப்படி இருக்கிறாய்? என்றார்.

எருமைக்கு கோபம் தீர்ந்தபாடில்லை.

முக்காலமும் உணர்ந்த ஐயனே! நீர் அறியாததா? எனது நலம்?! ஆயினும் நீங்கள் கேட்டதன் பின் பதிலுரைக்காமல் இருத்தல் தகுமோ! அதனால் சொல்லித்தான் தீர வேண்டும்.

எம்பெருமானே! எங்களை ஏன் இப்படிப் படைத்தீர்கள். பூலோகத்தில் மானுடர்கள் எங்களைச் சுத்தமாக மதிப்பதே இல்லை. நாளும் அவர்களது பொல்லாச் சொற்களில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள். சேற்றில் புரளும் எருமைகளே! மந்த புத்தி எருமைகளே! எருமை மாட்டில் மழை பெய்தார் போல, எருமை போல அசையா ஜென்மமே, சூடு, சொரணை இல்லாத எருமைகளே! என்று எப்படியெல்லாம் மானுடர்கள் எங்களைத் திட்டித் தீர்க்கிறார்கள் தெரியுமா? நினைத்தால் கோபத்திலும், ஆத்திரத்திலும் மனம் புழுங்கிச் சாகிறது. நாங்கள் அப்படியென்ன பாவம் செய்தோம்? இப்படி ஒரு பெயர் வாங்க?!

எம்பெருமான் தமக்குள் புன்னகைத்துக் கொண்டவராக எருமையை நோக்கி இப்படிச் சொன்னார்...

என்னைக் கூட சுடுகாட்டில் ஆடுபவன், பிணம் எரித்த சாம்பல் பூசித் திரிபவன், கபால ஓட்டில் பிச்சையெடுப்பவன் என்று மானுடர்களில் பலர் சொல்வதுண்டு என்றார்.

எருமை அவரது பகடியைக் கவனித்தது போலத் தெரியவில்லை.

ஐயனே... உங்கள் அருமை அறியாதவர்கள் கிடக்கிறார்கள் அவர்களை விடுங்கள்... எங்களுக்கு ஆறாத மற்றொரு ரணம் உண்டு. பசுக்களுக்கும், எங்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்? அவை தரும் பாலும் வெண்மையாகத்தான் இருக்கிறது. நாங்கள் தரும் பாலும் வெண்மையாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த மட மானுடர்கள் அவைகளை மட்டும் புனிதம் என்ற பெயரில் போற்றிப் புகழ்கிறார்கள். கோமியத்தைப் பிடித்து வீட்டு மூலை, முடுக்கெல்லாம் தெளித்து பரிமள வாசம் என்று மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால், எங்களை என்னடாவென்றால் வீட்டுக்குள் நுழையவே விடுவதில்லை. எப்போது பார்த்தாலும் மந்த புத்தி எருமை என்று கரித்துக் கொட்டுகிறார்கள். இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். நாங்களும் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும். பரம்பொருளான உங்களால் முடியாதது உண்டா?! எங்களை தயவு செய்து பசுக்களுக்கு இணையாக மாற இக்கணமே வரமளியுங்கள்.
- என்று சிவனிடம் கோரிக்கை வைத்தது எருமை.

இதழ்களில் நெளியும் புன்னகையுடன், சாந்த ஸ்வரூபியாக எருமை சொன்னதைச் செவி மடுத்த ஈசன்... அதைக் காத்தருளும் அபய முத்திரையுடன் எருமையை ஆசிர்வதித்து.

எருமையே பிரம்மன் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவையே. ஒன்றில் உயர்வும் பிறிதொன்றில் தாழ்வும் எப்போதும் இல்லை. உன் கோரிக்கை நியாயமானது தான். ஆதலின் அதை நிறைவேற்ற நான் முயற்சிக்கிறேன். அதற்கு முன்பு நீ எனக்கொரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அளித்தால் நான் உன்னை பசுக்களுக்கு இணையாக மானுடர் மதிக்கும் படியாகச் செய்வேன் என்றார்.

எருமைக்கு ஒரே சந்தோசமாகி விட்டது.

உத்தரவிடுங்கள் எம்பெருமானே... என்றது.

ஈசன் சொன்னார்... பூலோகத்தில் பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட வேண்டும் என்ற உனது விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டுமெனில், நீ இன்று முதல் சேற்றில் புரளும் உன் இன்பத்தைக் கைவிட வேண்டும். சொந்த ஆசையிலோ அல்லது சூழ்நிலை காரணமாகவோ கூட நீ இனி எப்போதும் சேற்றில் அமிழ்ந்து புரளக்கூடாது. இந்த உத்தரவாதம் மட்டும் அளித்தாயானால் நாளை முதல் பூலோகத்தில் எருமைகளும், பசுக்களும் ஒரே விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்று நான் வரமளிக்கிறேன்’ என்றார்.

எம்பெருமானின் கருணையில் முகம் பூரித்தாலும் எருமைக்கு அவர் கேட்ட உத்தரவாதம் நடு மண்டையில் கல்லைத் தூக்கிப் போட்டாற் போலிருந்தது.

அது ஒரு நொடி திகைத்து நின்றது. பின் எம்பெருமானை நோக்கி;

சர்வேஸ்வரா, நீங்கள் கேட்கும் உறுதிமொழியை என்னால் தர இயலாது. மானுடர்களின் மதிப்பு, மரியாதைக்காக என்னால் எனது சிற்றின்பத்தைப் பலி கொடுக்க முடியாது. சேற்றில் புரள்வது எருமைகளான எங்கள் இனத்திற்கு கோடானு கோடி இன்பங்களில் ஒன்று. அதைத் தாரை வார்த்து விட்டு பசுக்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு நாங்கள் பெறப்போவது ஏதுமில்லை. என் கோபத்தின் மீதே எனக்கிப்போது கோபம் வருகிறது. உங்கள் ஆசி போதும். எனக்கு வரம் ஏதும் வேண்டாம்’ என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடிப் போனது.

நடந்தது அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த நந்தி தேவரும், பூத கணங்களும் எம்பெருமானின் அருகில் அணைந்து;

மகாதேவரே! எருமையின் கோரிக்கையில் தவறென்ன? என்றார்கள்.

ஜடைமுடியில் உச்சிப் பிறைநிலா பளீரென ஒளி விட... மந்தகாசப் புன்னகையுடன் அவர்களை நோக்கிய மகா நீலகண்டர்...

கோரிக்கையில் தவறில்லை நந்தி... அந்தக் கோரிக்கையை அடைவதற்கான முயற்சியில் தான் தடை. எருமை முடிவெடுத்து விட்டது சேற்றில் புரள்வது தான் தனக்கு இன்பம் என. அப்படி இருக்கையில் மானுடர்கள் அதை குளிப்பாட்டி பூஜித்து நடு வீட்டில் கொண்டு வைக்க நினைத்தாலும் அதன் நினைவெல்லாம் சேற்றைத் தேடிக் கண்டடைவதாகத் தான் இருக்கும். நினைவில் எப்போதும் சேற்றைத் தேடும் எருமையை மானுடர் எப்படி பூஜிப்பர்? எருமை சேற்றைக் கைவிட முடியாததோடு தமக்கு நிஜமான இன்பம் மானுடர்களின் மரியாதையில் இல்லை என்பதையும் கண்டு கொண்டது. இது தன்னையறிந்த நிலை. இந்த நிலையை மனிதர்கள் அடைவார்களாயின் அவர்களுக்குள் போட்டி பொறாமை என்பதே இல்லாமல் நீங்கி விடும்.

வாழ்வின் ரகசியம் இது தான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானறிந்து செயல்பட்டால் அதற்குண்டான வெற்றிக்கும், தோல்விக்கும் தானன்றி வேறெவரும் காரணமில்லை என்பதையும் உணர்வார்கள். அதோடு வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டுமெனில் எதையாவது தியாகம் செய்தே தீர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்த தியாகத்தைச் செய்து வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேற எருமைக்கு மனமில்லை. அதனால் அது தனது வழக்கமான நிலையிலேயே நீடிக்கிறது என்றும் ஈசன் பகர்ந்தார். இனிமேல் அதற்கு தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டில் மனக்குறை இருக்காது என்று மென்னகையுடன் நிஷ்டையில் ஆழ்ந்து போனார் மூவுலகையும் பரிபாலிக்கும் எம்பெருமான் ஈசன்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...