Sunday, September 23, 2018


நவ திருப்பதியில் சிறப்பு தரிசனம்

Added : செப் 23, 2018 02:46

திருநெல்வேலி: புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையான நேற்று, நவ திருப்பதி கோவில்களில், சிறப்பு தரிசனம் மற்றும் பூஜைகள் நடந்தன. துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், நத்தம் விஜயகான பெருமாள், திருப்புளியங்குடி காசினிவேந்தர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தர். மேலும், இரட்டை திருப்பதியான அரவிந்த லோசன், தேவர்பிரான், தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதர், திருக்கோவிலுார் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் ஆகியவை நவதிருப்பதி கோவில்கள். இக்கோவில்களில், ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு மற்றும் கருடசேவை நடக்கும். இந்தாண்டு, புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையான நேற்று, நவதிருப்பதி கோவில்களில் அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, சிறப்பு பூஜைகள் நடந்தன. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வரும், 29ம் தேதி சனிக்கிழமை, அக்டோபர், 6, 13ம் தேதி சனிக்கிழமைகளிலும், சிறப்பு வழிபாடு மற்றும் இரவில் கருட சேவை நடக்கிறது. இதையொட்டி, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், நவதிருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் வகையில், நெல்லை, துாத்துக்குடியிலிருந்து, அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...