Monday, September 24, 2018

பாலியல் தொந்தரவு சர்ச்சை துறை விசாரணை துவக்கம்

Added : செப் 24, 2018 00:22


திருப்பூர்: செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த புகாரில் துறை ரீதியான விசாரணை துவங்கியுள்ளது. திருப்பூர், தலைமை அரசு மருத்துவமனையில், 14 ஆண்டுகளாக செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்படுகிறது; இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவியர் நர்சிங் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவியருக்கு அங்கு பணியாற்றும் ஆண் செவிலியர்களில் சிலர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு பயிற்சி பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கூறியதாவது: நர்சிங் மாணவியர் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. தற்போது, நான் விடுப்பில் உள்ளேன்; விடுப்பு முடிந்து வந்ததும், தொடர் நடவடிக்கைஎடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
முடிச்சூர் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு...மரண பீதி! இரு நாள் மழைக்கே மலைப்பாதையாக மாறிய அவலம்:

Updated : செப் 23, 2018 22:46 | Added : செப் 23, 2018 22:45




தாம்பரம் - முடிச்சூர் சாலை, வரதராஜபுரம், கிஷ்கிந்தா சாலைகளில், அடையாற்றின் குறுக்கே நடைபெறும் பாலப் பணிகளுக்காக, அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதைகளும், இரண்டு நாள் மழைக்கே, மலைப்பாதையை விட மோசமாக சேதமடைந்துள்ளன.
இதனால், வாகன ஓட்டிகள், மரண பீதியில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.அடையாற்றில் ஏற்பட்ட, 2015 வெள்ளத்திற்கு பிறகு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில், ஆற்றின் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.நீரோட்டம் தடையின்றி செல்ல வசதியாக, ஆறு அகலப்படுத்தப்பட்டது.

பலத்த சேதம்

இதன் தொடர்ச்சியாக, அடையாறு ஆற்றை குறுக்கிட்டு செல்லும் நெடுஞ்சாலைகளில், தற்போதைய பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்டும் பணிகளை செய்ய, நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தப் பட்டது.இதற்காக, சில மாதங்களுக்கு முன், டெண்டர் விடப்பட்ட நிலையில், சமீபத்தில் பணிகள் துவங்கின.

திட்டப்படி, முடிச்சூர் - - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், வரதராஜபுரம் அருகே, 2.50 கோடி ரூபாய் செலவில், 192 அடி நீளம், 40 அடி அகலத்தில், புதிதாக பாலம் கட்டப்படுகிறது. அதேபோல், தாம்பரம் - - சோமங்கலம் சாலையில், சமத்துவ பெரியார் நகர் அருகே, 3.26 கோடி ரூபாய் செலவில், 215 அடி நீளம், 40 அடி அகலத்தில் பாலம் கட்டப்படுகிறது.இதற்காக, புதிய பாலம் கட்டும் பகுதிகளில், ஆற்றுக்குள் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. இப்பாதைகள், இரண்டு நாட்களாக பெய்த மழையால், பலத்த சேதமடைந்து உள்ளன.இதனால், வாகன ஓட்டிகள் மரண பீதியில் பயணிக்கின்றனர். முடிச்சூர் பகுதி மக்களும், மணிமங்கலம், மலைப்பட்டு பகுதிகளுக்கு சென்று வர கடும் அவதியடைகின்றனர்.

முடிச்சூர் பகுதி நலச்சங்கத்தினர் கூறியதாவது:தாம்பரம்-- - முடிச்சூர் சாலையில், காந்தி சாலை முதல் கிருஷ்ணா நகர் வரை, சாலையின் ஒரு புறம், பாதாள சாக்கடை பணிகளும், மறுபுறம் மழைநீர் வடிகால் பணிகளும் நடக்கின்றன.

படுமோசம்

அதேபோல், கிருஷ்ணா நகர் முதல், சுண்ணாம்பு கால்வாய் வரை, மழைநீர் வடிகால் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் நடக்கின்றன.இதில், மழைநீர் வடிகால் பணிகளை, நெடுஞ்சாலைத் துறையும், பாதாள சாக்கடை பணிகளை, நகராட்சி நிர்வாகமும் செய்து வருகின்றன.இப்பணிகள், படுமந்தமாக நடந்து வருவதால், தாம்பரம் - --முடிச்சூர் சாலையில், சுண்ணாம்பு கால்வாய் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு சாலை, மலைப்பாதையைவிட படுமோசமாக உள்ளது.இதை கடந்து, 3 கி.மீ., துாரம் சென்றால், மணிமங்கலம் சாலையில், வரத ராஜபுரம் அருகே, அடையாறின் குறுக்கே பாலப் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள், மழை துவங்கியதால் மந்தகதியில் நடக்கின்றன.

சமீபத்தில் பெய்த மழையால், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள, மாற்றுப் பாதைகள் மிகவும் சேதமடைந்து, மணல் மேடுகளாக காட்சியளிக்கின்றன. அவற்றில், வாகன ஓட்டிகள் மரண பீதியிலேயே பயணிக்க வேண்டி உள்ளது.ஒரு மாதத்திற்கு முன், பழைய பாலத்தை உடைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் துவக்கினர். அதுவும், 80 சதவீதம் மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க, ஆற்றில் இருந்து நீர் வெளியேற, ஒரேயொரு குழாய் மட்டுமே உள்ளது. அதனால், பெருமழை பெய்தால், நீரோட்டம் தடைபட்டு, மாற்றுப்பாதையை மறைத்து வெள்ளம் வெளியேறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாற்றுப்பாதை சேதம்!

பாலப் பணிகளுக்காக, ஆற்றினுள் மிக தாழ்வாகவும், குறுகிய அளவிலும் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பாதை என்பதால், நெடுஞ்சாலைத் துறையினர், முழுக்க முழுக்க மணலை வைத்து, ஏனோ தானேவென்று பாதை அமைத்துள்ளனர்.சமீபத்தில் பெய்த மழையில், மாற்றுப்பாதை முழுவதும் சேதம்அடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகிவிட்டது. இதனால், சாலையின் இரு புறங்களிலிருந்தும், ஆற்றினுள் இறங்கும் வாகனங்கள், நேரடியாக ஒன்றுடன் ஒன்று மோதி, விபத்தில் சிக்குகின்றன.

தீர்வு என்ன?

 ஆற்றின் தரைப்பகுதியிலிருந்து, 6 அடி உயரம், 35 முதல், 40 அடி அகலத்தில், மாற்றுப்பாதையை, தார் சாலையாக அமைக்க வேண்டும். பணி முடியும் வரை, காலை மற்றும் மாலை வேளைகளில், நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் பணியில் நியமிக்கப்பட வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்தால், நீர் வெளியேற வசதியாக, 3 முதல், 5 ராட்சத குழாய்களை அமைக்க வேண்டும். - நமது நிருபர்- -
அசைவ ஓட்டல்கள் 30 சதவீதம் மூடல்

Added : செப் 24, 2018 02:24


சேலம்: ''புரட்டாசி எதிரொலியால், 30 சதவீத அசைவ ஓட்டல்கள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன,'' என, சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலர், பழனிசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில், 1.65 லட்சம், சேலம் மாவட்டத்தில், 17 ஆயிரத்து, 500 ஓட்டல்கள் இயங்குகின்றன. இதில், 40 சதவீதம் சைவம், 30 சதவீதம் அசைவம், இரண்டும் கலந்தது, 30 சதவீதம் உள்ளன.புரட்டாசி மாதம் பிறந்த பின், அசைவ ஓட்டல்களில், விற்பனை சரிந்துள்ளது. இழப்பை தவிர்க்க, சேலம் உட்பட முக்கிய நகரங்களில், அசைவ ஓட்டல்களில், 30 சதவீதம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சபாஷ், உ,லகிலேயே, பெரிய, மருத்துவ காப்பீட்டு, திட்டம்,துவக்கினார், மோடி

ராஞ்சி: உலகிலேயே மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக கருதப்படும், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். ஏழை, எளிய மக்கள் கடனாளியாவதை தடுக்கும் வகையிலும், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் வகையிலும், இந்த திட்டம் அமைந்துள்ளது. ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்தால்,
10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேர் பயனடைவர்.

ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

வதந்தி

இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும், 10.71 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கும். ஏழை, எளிய மக்கள், சிகிச்சைக்காக பணம் செலவிட முடியாமல், கடனாளியாவதை தடுக்கும் வகையில், இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேருவதற்காக யாரும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. சமூக, பொருளாதார மற்றும் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பின் அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தஉறுப்பினர்கள் சிகிச்சை பெறலாம். இதனால், அரசுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்; இது, உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாகக் கருதப்படுகிறது. இதற்காக மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.








திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலகிலேயே மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக இது அமைந்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள், வெறும் ஓட்டு வங்கி அரசியலையே நடத்தி வந்தனர். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதை பற்றி, அவர்கள் கவலைப்பட்டதே இல்லை.

'மோடிகேர்'

அதே நேரத்தில், மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக, இந்த திட்டத்தை, பா.ஜ., அரசு பார்க்கிறது. மக்கள் யாரும் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்பதே என் ஆசை.
தவிர்க்க முடியாத காரணத்தால், நோய்வாய்ப்பட நேர்ந்தால், பணம் இல்லாததால், சிகிச்சை பெற முடியாத  நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

பணக்காரர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும், ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே, பா.ஜ., அரசின் நோக்கம்.இந்த திட்டம், எவ்வளவு பிரமாண்டமானது என்பதை, இதயம், சிறுநீரகம், குடல், இரைப்பை, சர்க்கரை நோய் என, 1,300 நோய்களுக்கு சிகிச்சை பெறலாம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை, 'மோடிகேர்' என, சிலர் கிண்டல் செய்கின்றனர். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும், சேவை செய்யக் கூடிய திட்டமாகவே இதை நான் பார்க்கிறேன்.

நாடு முழுவதும்

'அனைவருடன் இணைந்து, அனைவரது நலனுக்காக' என்ற அரசின் தாரக மந்திரத்துக்கு ஏற்ப, எந்தப் பாகுபாடும் இல்லாமல், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும், 13 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தால், 2,500 புதிய தனியார் மருத்துவமனைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனால்,வேலைவாய்ப்புகள் பெருகும்.இவ்வாறு அவர்பேசினார்.

தமிழகத்தில், 2.85 கோடி பேருக்கு பயன்

பிரதமர் மோடி, 'ஆயுஷ்மான் பாரத்' என்ற, தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, நேற்று துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, சென்னை, தேனாம்பேட்டையில், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை ஒருங்கிணைக்கும் விழா நடந்தது.இதில், ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்து, 10 பேருக்கு, காப்பீட்டு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

* தமிழகத்தில், ஏழை மக்களின் மருத்துவ சேவைக்காக, 2012 முதல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம், பிரதமரின் தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துடன் இணைத்து சேவையாற்ற, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. செப்., 11ல், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது

* தமிழகத்தில் உள்ள, சமூக, பொருளாதார, ஜாதி வாரியாக, 77 லட்சம் குடும்பங்களில் உள்ள, 2.85 கோடி பேர், ஓராண்டுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ செலவுகளை இலவசமாக பெறலாம். முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள, 1.57 கோடி பயனாளிகளுக்கும், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீட்டை பெற முடியும்

* காது நுண் எலும்பு, காது பொருத்தும் சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட   சிகிச்சைகளுக்காக, தகுதியுள்ள அனைவரும், தலா, 25 லட்சம் ரூபாய் வரை பெற முடியும்.
Woman alleges doctor molested her in the guise of physical exam

We do not wish to comment when they have taken the legal route,” said Sebastine, head of the hospital’s HR wing.

Published: 24th September 2018 05:35 AM 


Express News Service

CHENNAI: A young woman admitted with high fever at a private hospital in the city has alleged that she was molested by a male duty doctor under the guise of physical examination the night she was kept in the High Dependency Unit (HDU).

It has been over a month since the woman filed a complaint with the management of Vijaya Hospital, but the complainant said that there appeared to be no signs that the hospital was taking action in the matter or investigating the allegations against its doctor. It had not communicated to her what process it was following, she said.

As the hospital had maintained silence, the woman’s family told Express that they were planning to move the court. They have also filed a complaint with the Medical Council of India (MCI). Express contacted hospital officials multiple times, by phone and in person, but they refused to comment. However, they acknowledged that they had received the woman’s complaint.

The 23-year old, who hails from the city but works in New Delhi, said she had come home to Chennai on August 18 after developing a fever and was taken to the hospital for treatment. Her family said two doctors examined her and then she was admitted in the HDU to be kept under observation that night. She alleged that the night duty doctor needlessly conducted another physical examination during which he touched her inappropriately.

“I was not allowed to have my phone with me nor were any family members allowed inside the ward. I was feeling very disoriented and I running a high fever. I couldn’t stop what was happening to me,” she said.

“I could feel his hands groping me under the thin hospital gown I was wearing. He touched my genitals and abdomen region. When I had only a fever what was the necessity to touch my lower body?” she asked. She said there was no female nurse or staff present with the doctor during the ‘examination’, a violation of MCI guidelines.

The next morning after she told her parents about the incident, they approached the HR personnel at the hospital to raise a complaint against the doctor. “The HR informed us that the doctor was absconding and couldn’t be reached. They promised us that they would investigate the matter. Four days later, we approached the hospital again. But the medical officer informed us that such issues would take time to be investigated,” a family member said.

The woman’s family sent a written complaint and a legal notice to the hospital on August 27, but hadn’t received any response, said a family member. “It clearly looks like they are protecting him even after such an incident has happened,” said a family member. The family said they had not filed a police complaint as the process might further traumatise the woman.

According to the MCI’s code of ethics, under the Indian Medical Council (Professional conduct, Etiquette and Ethics) Regulations, 2002, abuse of professional position by committing improper conduct with a patient will render a physician liable for disciplinary action under the Indian Medical Council Act, 1956 or the concerned State Medical Council Act.

When Express contacted the duty doctor, three days after sending him a questionnaire, he claimed he could not comment without the hospital’s permission.

Representatives of the CMO’s office and HR wing at the hospital confirmed they had received a legal notice from the patient but refused to respond to any specific questions even a week after Express sent them a detailed questionnaire.

“We have forwarded the legal notice to our legal advisor. Our advisor will respond to their allegations in court. We do not wish to comment when they have taken the legal route,” said Sebastine, head of the hospital’s HR wing.
Selaiyur residents get that stinking feeling

Clogged drains, poor garbage collection, mosquito menace and encroachments are a few of the issues that Selaiyur residents have been facing for the last five years.

Published: 24th September 2018 05:54 AM


The choked drains in Selaiyur  Ashwin Prasath

Express News Service

CHENNAI: Clogged drains, poor garbage collection, mosquito menace and encroachments are a few of the issues that Selaiyur residents have been facing for the last five years. In spite of repeated appeals to the local civic authorities, there reaped no results.

“With the monsoon approaching, numerous drains in the area are still choked. Although workers clean the drains, they dump the silt and waste on sides, with the intention of picking them up after drying. The unattended dry waste eventually goes back into the drain,” said N Nazeemuddin, a resident of Eeshwari Nagar in Selaiyur, in an email to City Express. He said that the recent rains have spread silt on the road, making driving and walking a miserable experience.

There are multiple encroachments along the road leading to West Tambaram, making it difficult for water to recede. The residents allege that the conservancy men charge a ‘fee’ of Rs 100 to collect garbage from homes. “If the apartment secretary doesn’t pay the amount, the workman never comes for collection,” said another resident. Despite major delay in laying the water pipelines, water is supplied only once in 15 days, and fee is being charged on a monthly basis, rue residents.

Monkeying around...THE HINDU

Beating the heatA Bonnet macaque sitting on a compound wall of the Electricity Department office in Puducherry.T. Singaravelou

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...