Saturday, September 29, 2018


இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Added : செப் 28, 2018 21:37 | 





சென்னை: பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மார்க்குக்கு கீழ் பெற்றுள்ள மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்கான தகுதிசான்று தர கூடாது என என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிறப்பித்துள்ள உத்தரவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி கூறி இருப்பதாவது: இந்தியாவில் பிளஸ் 2 வில் 90 சதவீதம் மதிப்பெண்ண பெற்ற மாணவரால் மருத்துவபடிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கான தகுதி தேர்வு மதிப்பெண்களை 80 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். பணம் மூலம் வெளிநாட்டு கல்லூரிகளில் படிப்பதற்கான தகுதி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி கூறி இருந்தார்.

இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள மருத்துவ கவுன்சில் வெளிநாட்டுகல்லூரிகளில் சேர நீட் தேர்வு தேர்ச்சிபெற்று இருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
மாநில செய்திகள்

தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பு நியாயமானது’ கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி




தகாத உறவு குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானது என கமல்ஹாசன் கூறினார்.

பதிவு: செப்டம்பர் 29, 2018 05:15 AM

சென்னை,

நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் ஊரெங்கும் தண்டோரா போட்டு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் அரசு அதை சரிவர செய்யவில்லை. மக்கள் நீதி மய்யம் அதை செய்ய இருக்கிறது. கிராமத்தை பலப்படுத்த வேண்டும். கிராமமே தேசியம் என்பதை மக்கள் நீதி மய்யம் நம்புகிறது. கிராமசபை கூட்டம் எங்கும் சரிவர நடப்பதில்லை. மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.

அதன்படி அக்டோபர் 2-ந் தேதி நடக்கும் கிராமசபை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். இதை கடமையாக ஏற்றுக்கொண்டு அவர்கள் பங்கேற்க வேண்டும்.

நாங்கள் கண்டிப்பாக அங்கு இருப்போம். மக்கள் மனதை புரிந்து கொள்வதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் அங்கு எடுக்கப்படும் தீர்மானத்தின் நகல் எங்கள் கையெழுத்துடன் தர மறுக்கிறார்கள். அதை அவர்கள் தர வேண்டும். இல்லையென்றால் போராடி பெறுவோம். மாநில சுயாட்சி கேட்டது நம் தமிழகம், அதன் மீட்சியாக நான் கிராம சுயாட்சி கேட்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-மக்கள் நீதி மய்யம் 3 அமாவாசைக்குள் காணாமல் போய் விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே?

பதில்:-அமாவாசை பற்றி பேசுபவர்கள், அந்த கட்சியில் இருப்பவர்கள் நிஜமான சந்திரனை பார்த்ததில்லை. அவர்கள் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள்.

கேள்வி:-தகாத உறவு குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியிருகிறதே?

பதில்:-நான் முன்னோக்கி செல்ல ஆசைப்படுகிறேன். தீர்ப்பு நியாயம் தான். புராணங்களில் கூட இந்த அளவு திறந்த மனது நமக்கு இருந்திருக்கிறது. இன்றைய நவீன யுகத்தில், ஆண், பெண் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாக தான் இருக்கிறது.

கேள்வி:-இது கலாசார சீரழிவு இல்லையா?, பண்பாட்டுக்கு பாதிப்பு இல்லையா?


பதில்:-கலாசாரம் என்பது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே தான் இருக்கும். இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். இதை பற்றி விவாதிக்க, இதுவல்ல மேடை.

கேள்வி:-மக்கள் நீதி மய்யத்தில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறதே?

பதில்:-மக்கள் நீதி மய்யம் வளர்ந்திருக்கிறதா? என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? என்பது எனக்கு தெரியாது. எவ்வளவு எண்ணிக்கை என்பது பிறகு உங்களுக்கு சொல்கிறேன்.

கேள்வி:-எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா?

பதில்:- இல்லை.

கேள்வி:-சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று தீர்ப்பு வந்துள்ளதே?

பதில்:-விருப்பம் இருப்பவர்கள் கோவிலுக்கு செல்லலாம். ஆண், பெண் அனைவரும் சமம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக, மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கிராமசபை கூட்டம் தொடர்பாக தண்டோரா அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராமிய கலைஞர் தண்டோரா அடித்து, கிராம சபை கூட்ட அறிவிப்பை உரக்க கூறினார்.
தலையங்கம்

சர்ச்சைக்குரிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்




பொதுவாகவே ஜனநாயகத்தின் நான்கு தூண்களான பாராளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகியவற்றில், நீதிமன்றங்கள் அடுத்தவர் அதிகார எல்லையில் தலையிடுகிறது என்று பரவலான பேச்சு இருக்கிறது.

செப்டம்பர் 29 2018, 04:00

பொதுவாகவே ஜனநாயகத்தின் நான்கு தூண்களான பாராளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், பத்திரிகை ஆகியவற்றில், நீதிமன்றங்கள் அடுத்தவர் அதிகார எல்லையில் தலையிடுகிறது என்று பரவலான பேச்சு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக் கின்றன. 2 நாட்களுக்கு முன்பு அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்று தீர்ப்பு அளித்துவிட்டு, பான்கார்டுடன் இணைக்கவும், வருமானவரி கணக்கை தாக்கல்செய்யவும், அரசின் மானிய–நலத்திட்டங்களை பெறவும் மட்டுமே ஆதார் கட்டாயம். வங்கிக்கணக்கை தொடங்குவதற்கும், செல்போன்களில் சிம் கார்டுகளை வாங்குவதற்கும், கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கைக்கும் தேவையில்லை என்று தீர்ப்பு கூறியிருக்கிறது. 5 நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட் ஆதார் சட்டத்தை நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக நிறைவேற்றியதே அரசியல் சட்டத்துக்கு எதிரான மோசடி. இது ஒன்றே இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். ஆனால், மற்ற

4 நீதிபதிகள் தீர்ப்பே மெஜாரிட்டி என்ற வகையில் அதுவே தீர்ப்பாக இருந்தது. இதில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்று சொல்லமுடியாது. ஆதார் வேண்டும் என்பவர்கள் தங்களுக்கு வெற்றி என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்கிறவர்களும் தங்களுக்கு வெற்றி என்கிறார்கள்.

இதுதான் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், அடுத்தநாளே ஆண்–பெண்ணுக்கு இடையேயான தகாத உறவு குற்றமல்ல, அதை குற்றம் என்று சொல்லும் இந்திய தண்டனை சட்டத்தின் 497–வதுபிரிவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் 497–வது பிரிவுப்படி, யார் ஒருவர் திருமணமான மற்றொருவரின் மனைவியுடன், அவரது கணவரின் சம்மதமோ, ஒத்துழைப்போ இல்லாமல் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அது கற்பழிப்பாக கருதப்பட்டு தகாத உறவு என்ற அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ அந்த ஆணுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பெண்ணுக்கு வழங்கப்படுவதில்லை. இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அவ்வாறு தண்டனை எதுவும் வழங்கப்பட முடியாது. ஆனால் இதை காரணமாக வைத்து விவாகரத்து கோரலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையும் வரவேற்பவர்களும் இருக்கிறார்கள். நமது கலாசாரத்தையே சீரழித்துவிட்டது என்று எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், நேற்று சபரிமலைக்கு பெண்களை வழிபாடு செய்ய அனுமதிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. வழிபாடு என்பது அனைவருக்கும் சமமான உரிமை என்று மற்றொரு அதிர்ச்சியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருசாரார் இதை வரவேற்றாலும், பெரும்பாலான பக்தர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராகவே இருக்கிறார்கள். மதரீதியான வழிபாட்டு உரிமையில் சுப்ரீம் கோர்ட்டு தேவை யில்லாமல் தலையிடுகிறது. அய்யப்பன் ஒரு கடும் பிரமச்சாரி. அதனால்தான் பெண்கள் அங்குசெல்ல ஆண்டாண்டுகாலமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இப்போது எல்லா பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பு நிச்சயமாக பெரும்பாலான இந்துக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும். ஏற்கனவே ஓரினசேர்க்கைக்கு தண்டனை கிடையாது என்று தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டின் அடுத்தடுத்த இந்த 3 தீர்ப்புகளும் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Friday, September 28, 2018

Chennai-Sengottai Silambu Express to run thrice a week

After an inordinate delay, the Southern Railway, in a move to increase the frequency, will convert the Chennai-Sengottai Silambu Express into triweekly express from the third week of October.

  Published: 27th September 2018 03:28 AM  


Image used for representational purpose only (File | EPS)

By Express News Service

CHENNAI: After an inordinate delay, the Southern Railway, in a move to increase the frequency, will convert the Chennai-Sengottai Silambu Express into triweekly express from the third week of October.

“The Railway Board has approved the proposal to operate it as triweekly. The third service will likely commence from the third week of October,” said a senior railway official. Though the proposal to convert it into a daily train or increase the frequency was mooted a few years ago, the Railway has been unable to increase the frequency due to lack of infrastructure at the Sengottai station.

The biweekly train was introduced in broad gauge line in June 2013 between Chennai Egmore and Manamadurai, to cater for the people of Sivaganga district. Then, in March 2017, the train got extended to Sengottai via Virudhunagar.

Presently, Silambu Express runs as a biweekly express from Chennai on Wednesdays and Saturdays. The train, which runs in chord line upto Tiruchy, is then operated via Karaikudi, Manamdurai and Virudhunagar.

“Silambu Express, after converted into a triweekly, will likely run on Mondays, apart from Wednesdays and Saturdays. A notification will be released shortly,” said sources.

Life sentence in doctor murder case upheld 


Staff Reporter 

 
MADURAI, September 26, 2018 00:00 IST



The Madurai Bench of the Madras High Court 


Accused hacked her after his wife died in her clinic

The Madurai Bench of the Madras High Court on Tuesday upheld the life sentence awarded by Thoothukudi Mahila Court to the key accused in the murder of a government doctor.

A Division Bench of Justices M.M. Sundresh and N. Sathish Kumar upheld the life sentence awarded to R. Mahesh, an auto driver, in 2015 for the murder of T. Sethulakshmi, chief doctor at ESI Hospital, Thoothukudi. However, the court acquitted the other accused in the case.

Death of wife of accused

It was alleged that Mahesh plotted the murder of Dr. Sethulakshmi after he held her responsible for the death of his 24-year-old wife.

His wife, who was 24 weeks pregnant, was admitted to the clinic of Dr. Sethulakshmi in 2012. But she died after developing complications while under treatment.

Mahesh, irked by the death of his wife, attacked the doctor at her clinic in Kamaraj Nagar, along with four of his friends and hacked her to death. The police had booked the accused under Sections 452 (trespass), 302 (murder) and 324 (voluntarily causing hurt) of the Indian Penal Code. It was alleged that Mahesh, a history-sheeter, had several cases pending against him prior to the murder of the doctor.

The murder of the doctor had shocked the medical fraternity and widespread protests were held all over the State by various medical and doctor associations. They called for a stricter implementation of the Tamil Nadu Hospital Protection Act, 2008, after several such incidents were reported.

சைக்கிளில் சுற்றும் நெல்லை துணைவேந்தர்

Updated : செப் 28, 2018 00:17 | Added : செப் 27, 2018 22:58 |




திருநெல்வேலி : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் சைக்கிளில் வலம் வருகிறார்.

பல்கலையை 'பசுமை வளாகமாக்கும்' முயற்சியில் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்கலை வளாகத்தில் சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் பல்கலை வளாகத்தில் தங்க 25 ஆண்டுகளாக வசதி இல்லை. பல்கலையில் இருந்து 25 கி.மீ., கடந்து வாடகை பங்களாக்களில் வசித்தனர். தற்போது துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள் வசிக்க பல்கலை வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

வீட்டில் இருந்து கிளம்பி மீண்டும் திரும்புவது வரை துணைவேந்தர் சைக்கிளில் மட்டுமே செல்கிறார். பல்கலையில் நடக்கும் விழாக்கள், பணிகளை பார்வையிடவும் சைக்கிள்தான். அவர் கூறுகையில், ''ஜப்பான், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அங்கு அதிகாரிகள் தனி கார் வைத்துக்கொள்வது குறைந்துவிட்டது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் செய்கிறார். வளாகத்தில் உள்ள 550 ஏக்கர் பரப்பிலும் உள்ள அனைத்து துறைகளுக்கும் சைக்கிளில் வலம் வருகிறார்.

ரயில், பஸ், சைக்கிளை பயன்படுத்துகின்றனர். பல்கலையில் ஜி.பி.எஸ்., கருவிகளுடன் 100 சைக்கிள்களை பயன்படுத்த உள்ளோம். ஆசிரியர், மாணவர், அலுவலர்கள் இதை பயன்படுத்தலாம்,'' என்றார்.

பி.டி.எஸ்., கவுன்சிலிங் வரும் 30 வரை அனுமதி

Added : செப் 27, 2018 22:48

சென்னை, நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஏதுவாக, வரும், 30ம் தேதி வரை கவுன்சிலிங் நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் பல் மருத்துவ கல்லுாரிகள், மனுக்கள் தாக்கல் செய்தன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் கோரியபடி கவுன்சிலிங் நடத்த, அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், 330 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. சென்னை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்படி, மருத்துவ கவுன்சிலிங்கில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தகுந்த சான்றிதழ்களுடன், இன்று காலை, 11:00 மணியளவில், கீழ்பாக்கம், மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும்.மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து, இடங்கள் கிடைக்காதவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை கைவிட்டோர் என, அனைவரும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இதற்கான மாணவர் சேர்க்கை, நாளை காலை, 11:00 மணியளவில், கீழ்பாக்கம் மருத்துவ கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இன்று நேரில் வர முடியாதவர்களும், சான்றிதழ்களுடன், நாளை நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். நீட் தேர்வில், பொது பிரிவினர், 119 மதிப்பெண்ணிற்கு குறையாமலும், இதர வகுப்பினரில், 96 மதிப்பெண்ணிற்கு குறையாமலும் உள்ளோர், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...