Tuesday, November 20, 2018

Life convicts in Dharmapuri bus burning case released

Shanmughasundaram.J@timesgroup.com

Chennai:20.11.2018

Three AIADMK workers, who were serving life term at Vellore Central Prison in the Dharmapuri bus burning case, were set free on Monday under the government’s premature release scheme.

A Neduchezhiyan, G Ravindran and C Muniyappan walked out of prison around 12.15pm, an hour after the prison authorities received a communication from the state home department. “Everything happened within an hour. It was done in a discreet manner,” said a prison source.

ADGP (prisons) Ashutosh Shukla said the department received a communication from the home department regarding the release of the convicts on Monday morning.

Premature release scheme helped Dharmapuri convicts

DMK president M K Stalin questioned the state government “haste” in getting the governor’s nod for release of the three convicts. The government, he said, had not shown the same urgency in releasing the seven Rajiv Gandhi assassination case convicts, who have now been in jail for 27 years. Law minister C Ve Shanmugam, however, said the state did not see caste, religion, party and politics for recommending premature release of convicts.

On February 2, 2000, the trio torched a bus of the Tamil Nadu Agriculture University (TNAU) to vent their ire over the Supreme Court judgment against late AIADMK leader J Jayalalithaa in the Pleasant Stay hotel case. College students Kokilavani, Gayatri and Hemalatha were burned alive in the incident. The district court awarded them capital punishment on February 16, 2007. The Supreme Court, which initially confirmed the death penalty, commuted the sentence to life imprisonment in March 2016, after they filed a review plea in the court.

The government orders 2330, 2331 and 2332 dated November 18 stated that based on the recommendation of the two committees constituted for the premature release of the life convicts, the ADGP (Prisons) has sent a proposal for the premature release of the trio. “They are eligible for the premature release as they completed 10 years of actual imprisonment on the occasion (as on February 25, 2017) of the birth centenary of M G Ramachandran,” said a senior prison official quoting the GO.

After the governor sent back the proposal of the trio for the premature release recently, the Edappadi K Palaniswami government reiterated its recommendation for the premature release three a week ago. “After the governor gave his nod, the additional chief secretary (Niranjan Mardi) passed the orders on Sunday,” said the source. Sources in the prison department said the eligibility criteria were defined and drafted, keeping in mind certain prisoners including Nedunchezhian, Madhu and Muniappan, for the premature release.

Monday, November 19, 2018

Internationala Mens Daay November 19

Image result for international men's day images

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Published : 18 Nov 2018 12:11 IST

போத்திராஜ்   சென்னை




வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட வடதமிழக மாவட்டங்களில் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

'' வங்கக்கடல் பகுதியில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை இருக்கும்.

'கஜா' புயலால் மழைகிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த வடதமிழக மாவட்டங்களுக்கு இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நல்ல மழைகிடைக்கும்.

டெல்டா மண்டலங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.


பிரதீப் ஜான் : கோப்புப்படம்

சென்னையில் மழை எப்படி?

சென்னையைப் பொறுத்தவரை 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அவ்வப்போது இடைவெளிவிட்டு மழை இருக்கும். குறைந்தபட்சம் இரு நாட்களுக்குச் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை இருக்கும். ஒரு சில இடங்களில் மிக கனமழையும் இருக்கும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கான கால சாத்தியம் இல்லை. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது. இதனால் வடதமிழகத்தில் உறுதியாக நல்ல மிகச்சிறந்த மழையைக் கொடுக்கும். ஆனால், புயலாக உருவாகும் வந்திகளை நம்ப வேண்டாம்''.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

காசோலை திரும்பி வந்தால் 2 ஆண்டு சிறை, இரு மடங்கு அபராதம்: வருகிறது புதிய சட்டத் திருத்தம்

Published : 26 Dec 2016 08:58 IST





காசோலை மோசடி வழக்குகளில் சிக்குபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் விதமாக புதிய சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் இரு ஆண்டுகள் சிறை அல்லது இரு மடங்கு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

‘அரசின் திட்டப்படி ரொக்க மில்லா பரிவர்த்தனையை கையாள வசதியாக காசோலை பயன்பாட் டினை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் காசோலை பரிவர்த்தனை களில் பெருமளவு மோசடி நடை பெறுகிறது. எனவே அதை உரிய முறையில் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது’ என வியாபாரிகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர். காசோலை மோசடியால் பாதிக்கப் பட்டோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து பணம் வாங்குவதும் கடினமாக இருப்பதாக தெரிவித் துள்ளனர்.

இதைத் தொடர்ந்து காசோலை மோசடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீ லித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘காசோலை மோசடி வழக்குகளில் சிக்குவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு பரிசீ லித்து வருகிறது. இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இத் தகைய கடுமையான விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள் ளது’’ என்றார்.

தற்போதுள்ள சட்டத்தின்படி காசோலை மோசடி வழக்குகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடும். ஆனால் புதிய சட்டத் திருத்தத்தில் ஜாமீனில் வெளி வர முடியாத அளவுக்கு விதி களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் ஒரு மாதம் அவகாசம் அளித்து இரு தரப்புக்கும் இடையே பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். இதிலும் பிரச்சினை தீராவிட்டால் அடுத்த கட்டமாக காசோலை வழங்கியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த புதிய சட்டத் திருத்தத்தை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 18 லட்சத்துக்கு மேற்பட்ட காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 38,000 வழக்குகள் உயர் நீதிமன்றங்களில் உள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் 5 வரு டங்களுக்கு மேலாக நிலுவையில் இருப்பவை. மஹாராஷ்டிரா, குஜ ராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங் களில் தான் அதிக அளவில் காசோலை மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஹோட்டல்களுக்கு கொண்டு வரப்பட்ட நாய் இறைச்சி? எழும்பூர் ரயில் நிலையத்தில் 2,000 கிலோ பறிமுதல்

Published : 17 Nov 2018 17:36 IST




கைப்பற்றப்பட்ட இறைச்சியை சோதிக்கும் அதிகாரிகள்

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சென்னை ஹோட்டல்களுக்கு கொண்டு வரப்பட்ட நான்கு நாட்கள் ஆன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை நாய் இறைச்சியைப் போல உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் லட்சக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட இளைஞர்கள் தங்கி வேலை பார்க்கின்றனர், படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹோட்டலில்தான் சாப்பிடுகின்றனர். மேலும், ஹோட்டல்களில் சாப்பிடும் மோகம் சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வருகிறது.

அதிலும் அசைவப் பிரியர்கள் அதிக எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். விரைவு உணவு, ரெஸ்டாரன்டுகள், மல்டி குசின்கள், பஃபே உணவகங்கள், பிரியாணி சென்டர்கள் என பல பேர்களில் பல வடிவங்களில் அசைவ உணவுகள், பிரியாணிகள் சென்னையில் விற்கப்படுகிறது.

சாதாரண மக்கள் சாலையோர உணவகங்களுக்கும், ஓரளவு பொருளாதாரம் உள்ளவர்கள் அதற்கென உள்ள ஹோட்டல்களுக்கும் செல்கின்றனர். இவர்களுக்கு தரமான உணவு கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே?

சாதாரண வருமானம் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை நம்பி இயங்கும் உணவகங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவுவது வடமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் பதப்படுத்தப்படாத, கெட்டுப்போன, கன்றுக்குட்டி, நாய் உள்ளிட்ட செத்துப்போன விலங்குகளின் இறைச்சியே.

சென்னைக்கு ரயில் மூலம், கண்டெய்னர் மூலம் வரும் இறைச்சி எப்போதாவது கைப்பற்றப்பட்டு அழிக்கப்படுகிறது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. இதனால் இந்தச் செயல் மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் இதேபோன்றதொரு சோதனையில் 2000 கிலோ நாள்பட்ட இறைச்சியை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சென்னைக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து எழும்பூர் வந்து இங்கிருந்து மன்னார்குடி செல்லும் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் இன்று காலை 10.45 மணிக்கு 5-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது அங்கு சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்ய அனுப்பப்பட்டிருந்த 20 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.

உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி எந்த ஒரு பொருளையும் நேரடியாக குளிர்வித்து பயன்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ கூடாது. ஆனால் 20 பெட்டிகளிலும் நாட்பட்ட இறைச்சிகளில் ஐஸ் கட்டிகளைப் போட்டு தெர்மோகோல் பெட்டிகளில் அடைத்து அனுப்பப்பட்டிருந்தது.

ஜோத்பூரிலிருந்து கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட இறைச்சி 3 நாட்களாக பயணித்து 4-ம் நாள் சென்னைக்கு வந்துள்ளது. இவை பயன்படுத்த உகந்ததல்ல என்பதும், மோசமாகப் பராமரிக்கப்பட்டதால் கெட்டுப்போயிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்தனர். அவை ஒவ்வொரு பெட்டியிலும் தோல் உரிக்கப்பட்ட, இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட நாய் இறைச்சி போன்று இருந்தது. உடனடியாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.


இறைச்சியைச் சோதிக்க கால்நடைத்துறை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டனர். முதற்கட்ட சோதனையில் அவை ஆட்டின் இறைச்சி போல் இல்லை எனத் தெரியவந்தது. ஆட்டின் தொடைகள் அகலம், நாய்களின் தொடைகளின் அகலமும் வேறுபடும். அதேபோன்று ஆட்டுக்கு வால் சிறியதாக இருக்கும். ஆனால் கைப்பற்றப்பட்ட அனைத்து இறைச்சியிலும் வால் ஒரு அடி நீளத்துக்கும் மேல் உள்ளது. ஆகவே இவை நாய்களின் இறைச்சியாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

அடுத்தகட்ட சோதனைக்காக இறைச்சியின் மாதிரியை கால்நடை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். பின்னர் 2 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கைப்பற்றிய மாந்கராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவற்றை கொடுங்கையூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்று பினாயில் ஊற்றி பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிப் புதைத்தனர்.

இறைச்சியை சென்னைக்கு யார் அனுப்பியது, யாருக்கு அனுப்பபட்டது என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. ஜோத்பூரில் யார் இறைச்சியை அனுப்பியது என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இதுபோன்று கொண்டுவரப்படும் கெட்டுப்போன இறைச்சியைக் கட்டுப்படுத்தி உரிய சட்டம் மூலம் இவை தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

'கஜா' புயல் பாதிப்பு; விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்த முழு விவரம்

Published : 18 Nov 2018 21:11 IST

சென்னை




‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையைக் கடந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருவதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

* புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* திருவாரூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* மயிலாடுதுறை கோட்டத்தில் பாதிப்பைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு

* அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

* பாலிடெக்னிக் கல்லூரிகளில் திங்கட்கிழமை நடைபெறவிருந்த தேர்வுகள் நவ.26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* புதுக்கோட்டையில் மன்னர் அரசு கல்லூரியில் இம்மாதம் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நவ.26- ம் தேதி மன்னர் அரசு கல்லூரி திறக்கப்பட்ட பின் மறுதேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சர்வதேச ஆண்கள் தினம்* *19-11-2018






🤵ஆண்டுதோறும் நவம்பர் 19-ந் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.*

*🤵உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.* *🤵மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுபடுத்தும் நாளாகவும் அமைகிறது.*

🤵 *“ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?” அவர்களுக்கு வாழ்நாளில் என்னதான் பிரச்னை உண்டு என சிலர் கேள்வி கேட்கின்றனர்.* *ஆனால் உண்மை அப்படியல்ல. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு. அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன. ஆணுக்கும் பாலியல் தொந்தரவு உள்ளது என்பதை நம் சமூகம் நிச்சயம் உணர வேண்டும்.* *அவனின் பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் நிச்சயம் ஒருநாள் கடைபிடிக்கப்பட வேண்டும்.* *அதுவே இன்றைய நாள். அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்.*

NEWS TODAY 14.07.2026