Tuesday, January 15, 2019


அனைவருக்கும் இனி அரிசி கார்டு: ரேஷனில் வருகிறது மாற்றம்

Added : ஜன 15, 2019 01:34 |

சென்னை, பொங்கல் பரிசு, 1,000 ரூபாய் வழங்குவதில் ஏற்பட்ட திடீர் குழப்பத்தால், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவு துறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம்.காகித கார்டு புழக்கத்தில் இருந்த போது, அரிசி, சர்க்கரை, காவலர், எந்த பொருளும் வாங்காதது என, நான்கு வகை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அதில், அரிசி, காவலர் கார்டுகளுக்கு, அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டன. சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த, மற்ற பொருட்கள் வழங்கப்பட்டன. 'என்' கார்டுக்கு, எந்த பொருட்களும் கிடையாது.

தமிழகத்தில், 2017 ஏப்ரல் முதல், 'ஆதார்' விபரத்தின் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதையடுத்து, முன்னுரிமை, முன்னுரிமை அல்லாதது, முன்னுரிமை அல்லாத சர்க்கரை, எந்த பொருளும் இல்லாதது என்ற வகைகளில், கார்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஏற்கனவே இருந்த அரிசி, சர்க்கரை கார்டுதாரர்களின் அடிப்படையில், ரேஷனில், பொருட்கள் வழங்கப்படுகின்றன.பொங்கலை முன்னிட்டு, 2.02 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு துண்டுடன், 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அவை, வசதியானோருக்கு வழங்க, எதிர்ப்பு எழுந்தது.நீதிமன்ற உத்தரவை அடுத்து, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் வழங்குவது நிறுத்தப்பட்டது. 

பின், நீதிமன்ற அனுமதியுடன், சர்க்கரை கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.இந்த பிரச்னை, இனி ஏற்படாமல் இருக்க, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகளையும், அரிசி கார்டுகளாக மாற்ற, உணவு துறை முடிவு செய்துள்ளது.இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் மட்டும், மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதனால், வசதி படைத்தோர், அரிசி கார்டு வைத்துள்ளனர். வசதியாக இருந்த போது, சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டு வாங்கியோர், தற்போது, ஏழ்மையில் உள்ளனர். இதனால், அவர்களுக்கு, ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை.பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசின் இலவச திட்டங்கள், அரிசி கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் கார்டு வழங்குவதால், ரேஷன் முறைகேடு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.ஏற்கனவே, உணவு மானியத்திற்கு, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டுகளை, வகை மாற்றம் செய்வதால் கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்பில்லை

.இதனால், சர்க்கரை, எந்த பொருளும் இல்லாத கார்டுகளையும், 2017ல், அரிசி கார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கு, சில அரசு உயரதிகாரிகள் ஒப்புதல் தரவில்லை. தற்போது, பொங்கல் பரிசு விவகாரத்தில் ஏற்பட்டது போல், மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க, 10.50 லட்சம் சர்க்கரை மற்றும், 42 ஆயிரம் எந்த பொருளும் இல்லா கார்டுகள், விரைவில், அரிசி கார்டுகளாக மாற்றப்பட உள்ளன. இதற்கு, அரசிடம் அனுமதி பெற்றதும், அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் செலவு ஏற்படுமாகாகித கார்டு இருந்தபோது, ஒருவரே பல முகவரிகளில், மூன்று - நான்கு ரேஷன் கார்டுகள் வைத்திருந்தார்.இதனால், 2017 துவக்கத்தில், 2.04 கோடி ரேஷன் கார்டுகளும், அவற்றில், ஏழு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களும் இருந்தனர். அதே ஆண்டு ஏப்ரல் முதல், ஆதார் விபரம் அடிப்படையில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படுகிறது.இதனால், ஒரே நபர், வேறு முகவரியில், கூடுதல் ரேஷன் கார்டு வாங்குவது தடுக்கப்பட்டது. ஒரு கார்டில் உறுப்பினராக இருப்பவர், வேறு கார்டில் உறுப்பினராக சேரவும் முடியாது. இதனால் தற்போது, 2.02 கோடி ரேஷன் கார்டுகளில், 6.55 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புவது முதல், விற்பனை விபரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவாகிறது. 

விரைவில், கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.இதனால், வசதி படைத்தோர், வேறு நபர்களிடம், கார்டை கொடுத்து, பொருட்களை வாங்கும்படி கூற முடியாது.மேலும், ரேஷன் பொருட்கள் வாங்க விரும்பாதோர், அதை, அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதியும் துவக்கப்பட்டு உள்ளது. இது போன்ற காரணங்களால், உணவு மானியத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மிச்சமாகும்.அந்த நிதியில், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி கார்டாக மாற்றி, பொருட்கள் வழங்குவதில், கூடுதல் செலவு ஏற்படாது. வகை மாற்றம் செய்யக்கூடிய கார்டுதாரர்களில், அனைவரும் பொருட்களை வாங்க வாய்ப்பில்லை.
ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது : பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்

புதுடில்லி,: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.




பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் பதவிக்காலம், மே மாதம் முடிவுக்கு வருகிறது. வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதத்தில், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், மோடி அரசின் கடைசிபட்ஜெட், வரும், பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. சமீபத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, பார்லியில் நிறைவேறியது.

இந்நிலையில், மத்திய வருவாய் பிரிவினரை கவரும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலானஆண்டு வருமானத்துக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும், என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான, ஆண்டு   வருமானத்துக்கு, வரி கிடையாது. முதல் மூன்று பட்ஜெட்களில், சில வரி சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், கடந்த பட்ஜெட்டில், எந்த வரிச் சலுகையும் அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுக்காக, 40 ஆயிரம் ரூபாயை, நிரந்தரக் கழிவாக அறிவிக்கப்பட்டது.
மாவட்ட செய்திகள்

உயர் மின்அழுத்தம் காரணமாக மணலியில் 100 வீடுகளில் டி.வி., பொருட்கள் சேதம்



மணலியில் உயர் மின் அழுத்தம் காரணமாக 100 வீடுகளில் இருந்த டி.வி., பிரிஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் வெடித்து சிதறின.

பதிவு: ஜனவரி 15, 2019 04:15 AM
திருவொற்றியூர்.

சென்னை மணலியில் உள்ள ராதாகிருஷ்ணன் தெரு, எட்டியப்பன் தெரு, பூங்காவனம் குறுக்குத்தெரு, பெரியார் தெரு உள்ளிட்ட தெருக்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த பகுதியில் நேற்று பகல் ஒரு மணி அளவில் திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக மின்கம்பங்களில் உள்ள மின்சார வயர் துண்டித்து கீழே விழுந்தது.

அப்போது 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி., பிரிஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் வெடித்து சிதறின. இதனால் பயந்து போன பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பின்னர் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று, சேதம் அடைந்த பொருட்களை எடுத்து வந்து மின்சார ஊழியர்களிடம் காண்பித்தனர். உயர் மின்அழுத்தம் காரணமாக அடிக்கடி இதுபோல் நடப்பதாகவும், மின்கம்பம் மூலம் மின்இணைப்பு வழங்குவதை கைவிட்டு, சென்னை மாநகராட்சி பகுதியில் இருப்பது போல புதைவழித்தடத்தில் மின்வினியோகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மின் ஊழியர்கள் உறுதி அளித்தனர்.
தலையங்கம்

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!




இன்று பொங்கல் திருநாள். தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் நன்னாள்.

ஜனவரி 15 2019, 04:00

‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞர் பறைசாற்றியதற்கிணங்க, தமிழர் வாழ்க்கை முறையிலும், பண்பாட்டிலும் ஒரு பிரதிபலிப்பாக விளங்குவது இந்த இனியநாள். உழைப்பின் பலனை கொண்டாடி மகிழும் நாள். ‘தைப்பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, விளைந்த பயிர்களை அறுவடைசெய்து, பொருளாதார ரீதியாகவும் கையில் பணம் புழங்கும் நல்ல நாட்கள் பொங்கல் காலம். மழைக்காலம் ஓய்ந்து, பனிக்காலம் குறைந்து, வெயில் காலம் தொடங்கி, இளவேனிலை நோக்கி எட்டுவைக்கும் திருநாள்.

தை பொங்கலை 4 நாட்கள் கொண்டாடுகிறோம். முதல்நாள் போகி பண்டிகை, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, வேண்டாத பழையவற்றை கழிக்கும்நாள். அடுத்தநாள் பொங்கல் நாள். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, ‘பொங்கலோ பொங்கல்’ என்று உவகை பெருக்கெடுத்தோட குதூகலிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இந்தநாள் உழைப்பின் மகிழ்ச்சியை கொண்டாடும் நாள். இயற்கைக்கு நன்றி கூறும்நாள். எப்போதுமே நன்றி உணர்வு படைத்த தமிழன், தனக்கு உதவிய மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து கொண்டாடும் நன்றி திருநாள்தான், 3-வது நாளான மாட்டு பொங்கல். 4-ம் நாள் காணும் பொங்கல். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று உறவை வலுப்படுத்தும், நட்பை ஆழமாக்கும் நன்னாள். இதுமட்டுமல்லாமல் உற்றார், உறவினர்களோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழும்நாள்.

இந்த ஆண்டு பொங்கல் வளமான பொங்கல். தமிழக மக்கள் அனைவரும் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாட தமிழகஅரசு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடிநீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.1,000 ரொக்கமும் வழங்கியது. தமிழகஅரசின் இந்த பொங்கல் பரிசு நிச்சயமாக பாராட்டுக்குரியது. ஒரு குடும்பம் பாக்கியில்லாமல், அனைத்து இல்லங்களிலும் இன்று பொங்கலிட்டு மகிழ்வார்கள். பொங்கலிட பொருட்களும், கையிலே பணமும் இருக்கும்போது நிச்சயமாக மகிழ்ச்சி பொங்கல்தான். தை பொங்கல் அடிப்படையில் உழவர்களின் திருநாள். இந்த மண் வேளாண்மையை சார்ந்து இருக்கிறது. வேளாண்மை நீர்வளத்தை சார்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு நீர்வளம் குறைந்த ஆண்டாக கழிந்துபோனது. இந்த ஆண்டும் மழை பொய்த்துவிட்டது. வேளாண்மை தொழில் இந்த ஆண்டு அரசை சார்ந்து நிற்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. அடுத்த ஆண்டும் பொங்கல் மகிழ்ச்சியோடு பொங்குவது என்பது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. தமிழக அரசு தொலைநோக்கு பார்வையோடு, உழவர்களை மனதில்வைத்து திட்டம் தீட்டவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இருக்கும் குறைந்த அளவுநீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் நீர் மேலாண்மை திட்டங்களை வகுக்கவேண்டும். ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களிலிருந்து கிடைக்கவேண்டிய தண்ணீரை கேட்டு பெறவேண்டும். குறைந்த அளவுநீரை பயன்படுத்தி பயிரிடுவதற்கேற்ற உணவு பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்கவேண்டும். ‘பொங்கும் மங்கலம், எங்கும் தங்குக’ என்று ‘தினத்தந்தி’ தன் பொங்கல் வாழ்த்துகளை உவகையோடு, உழவர்கள் வாழ்க! தமிழர்கள் வாழ்க! என்று வாழ்த்துகிறது.
‘Despite govt order, RTI replies not up on official websites’

TNN | Jan 5, 2019, 05.19 AM IST



MUMBAI: Activists in the state have asked chief minister Devendra Fadnavis to immediately direct all government offices under him to curb growing incidents of RTI violations.

In particular, they want the CM to direct officials to implement two government circulars. One which requires public authorities to upload RTI queries and responses on their websites. And secondly, allowing inspection of all public records on Mondays between 3pm and 5pm. This would help bring in transparency into the process and quash complaints of blackmail against activists, they said.

Activists have alleged that bureaucrats do not publish RTI queries and responses on official websites despite a state government order. Besides, officials do not follow directions to allow inspection of public records, said RTI activist and former central information commissioner Shailesh Gandhi on Friday. “If information is available on the website, no one can be blackmailed. This needs to be done in a searchable manner and we would be happy to discuss it with the IT department,” he said.

A signature campaign has been launched to draw the chief minister’s attention to non-compliance to government circulars. A memorandum of demand from the state’s RTI and social activists is being circulated among prominent citizens to garner a wide support in the form of a 1,000 signatures.

Gandhi said recently a BMC ward office put up a banner flashing photographs of four people barring them entry into the office premises. He said this apart, verbal abuse is very common in government offices.
‘Vasool Rani MBBS’, 26, lands in police net

TNN | Jan 10, 2019, 06.08 AM IST



CHENNAI: Holding the overcoat and stethoscope handed over by a medical student standing on a suburban train she convinced a man she was a doctor and married him.

For more than a month after the wedding, she continued the charade travelling from Tiruttani to Chennai daily and roaming about the Rajiv Gandhi Government General Hospital in doctor’s whites.

On Tuesday, the curtains came down on the act of J Sharmila, 26, after the elderly woman from whom she took 800 promising a ‘fast scan’ and vanished went to police.

Her husband Jayakanthan, a packaged water delivery man, then came to know of her deception and a court sent her to jail.

A police officer said Sharmila of Manavur in Tiruttani, who completed BSc at a college in the city, first met Jayakanthan while travelling on a suburban train to Chennai Central.

A doctor’s whites and medical equipment were piled up in her lap, but he was not to know that they had been given by a trainee doctor who had no place to sit in the crowded compartment. Jayakanthan soon began referring to her as a doctor and she played along.

The two fell in love and got married early in December 2018. Since then, Jayakanthan would drop her at Tiruttani railway station daily and she would travel to Chennai by train.

During ‘working hours’, she went around the huge hospital properly dressed and many patients offered the ‘doctor’ money for ‘quick service.’

She obliged and made sure she didn’t meet the victim after each ‘operation’. Each evening, she returned home, her pockets filled with cash.

On Tuesday, Lakshmi, 63, of Thirumullaivoyal, ran into Sharmila who promised to help her get a scan done without delay for fee. But, when the test took forever and the ‘doctor’ was nowhere to be found, Lakshmi began a frantic search.

She finally informed security guard Ramesh who asked her to to identify the suspect. Lakshmi did and Ramesh informed a team of patrolling police personnel.

They combed the hospital and nabbed Sharmila. She was taken to the police station on the premises for questioning.

Police seized a doctor’s coat, stethoscope, identity card, a GH-stamped letter along with a forged pay slip identifying her as being on the rolls of the hospital as trainee.
Rape victim commits suicide after accused gets clean chit in UP’s Gonda

In September last year, the victim and her husband had attempted self-immolation outside Vidhan Bhawan in Lucknow to highlight her plight.

LUCKNOW Updated: Jan 15, 2019 07:31 IST

Chandan Kumar 

Hindustan Times, Lucknow

The victim, a mother of two, had accused Shankar Dayal and his brother Ashok Kumar, also of Kernalganj area, of raping her several times in August last year.(Representative image)

A 35-year-old rape victim committed suicide by hanging herself from the roof of her residence in Kernalganj area of Gonda district on Monday, a fortnight after the two rape accused got a clean chit from district police.

In September last year, the victim and her husband had attempted self-immolation outside Vidhan Bhawan in Lucknow to highlight her plight. They then had accused the police of laxity in the investigation.

The victim, a mother of two, had accused Shankar Dayal and his brother Ashok Kumar, also of Kernalganj area, of raping her several times in August last year. The case was investigated first by the local police and then by the district crime branch. Both the investigation officers gave a clean chit to accused in December. The two accused are absconding.

Following the suicide, superintendent of police of Gonda RP Singh suspended both the investigating officers and sent the station house officer (SHO) of Kernalganj to the police lines.

The Gonda police had lodged an FIR on August 7 under section 376D (gang rape) and 506 (criminal intimidation) of IPC along with relevant sections of IT Act against the accused.

The victim’s husband said, “The accused had not just raped her but also made a video clip of the act. She was very upset when police gave the accused a clean chit, and so committed suicide.”

NEWS TODAY 25.08.2026