Thursday, February 14, 2019

Apply for 150 seats before eyeing 250, MCI tells MGM

TNN | Feb 8, 2019, 12.15 AM IST

Indore: Increasing under graduate seats to 250 seems like a distant dream for MGM Medical College. After college administration applied for increasing UG seats from 140 to 250 for academic session 2019-20, Medical Council of India (MCI) has directed college to first get permission for 150 seats.

The college had applied to MCI for increasing their UG seats to 150 from 140 for which MCI had conducted inspection in college four times. Every time the council got some loopholes in the standards and documentation and rejected the application.

According to college officials, in last five years, college have spent around Rs 15 lakh as application fee for inspection is Rs 3 lakh. The college applied for increase in UG seats in 2014.

Physiology department professor Dr Manohar Bhandari said, “The MCI had earlier rejected permission due to small library in college. We have footfall of 300 students a month and 100 students a day. MCI has directed us to construct a bigger library for which construction is going on behind college building.”

Three months ago, college had applied to increase UG seats to 250 from upcoming academic session. However, MCI have directed that first it will conduct inspection for 150 seats. Once college gets permission for 150 seats, the college will have to apply for 250.

MGM dean Dr Jyoti Bindal said, “We had applied for more seats. However, MCI will first give permission for 150 seats and later for 250. We are following MCI directions. It will conduct inspection for 150 seats for the sixth time next week.”
Government to start admission of Subharti college students within two weeks

TNN | Feb 13, 2019, 10.16 AM IST



DEHRADUN: The Uttarakhand government has decided to start the admission process of 1st and 2nd year MBBS students of Shridev Suman Subharti Medical College (SSSMC) to other private and government medical colleges across the state on the basis of their NEET score within two weeks, officials associated with the process told TOI.

The officials added that the both year students will be again made to sit for the first-year exams after the college is allotted to them.

However, sources from the government told TOI that the 2nd year students have approached the Supreme Court (SC) to contest against the clause which makes them to reappear for the first-year exam. The matter is pending in the court.

The committee, constituted by the state government on the orders of apex court to adjust the students of SSSMC in private and government medical colleges, on Tuesday finalised the criteria on how the students will be adjusted in the five institutions in the hill state.

Talking to TOI, Dr Hemchandra Pandey, vice chancellor of Hemwati Nandan Bahuguna Uttarakhand Medical Education University, who is heading the committee, said they have already submitted their report to the government on categories and criteria on which the students will be allotted medical college.

“There is one more meeting scheduled with members of the concerned medical colleges (3 government and 2 private ones) after which we will start the counselling. It may take another 10 to 15 days,” Pandey said.

The committee in its report has maintained that the shifting of students will be on basis of their marks obtained in the NEET. Those who scored higher marks will be transferred to government colleges, while private colleges will be allotted to those who scored less.

The committee has also retained the orders of apex court which has said that 2nd year MBBS students will also have to reappear in first year exam after admissions.

To recall, the Supreme Court in December last year had ordered the Uttarakhand government to admit 150 MBSS students of first and second year of SSSMC in other government and private medical colleges.

The court’s order came after it asked the Uttarakhand government on December 6 to take over the infrastructure and assets of the privately owned SSSMC and run it as a government medical college.

This was after a group of over 74 medical students (all NEET pass-outs) complained that that Subharti Trust had defaulted in its responsibilities, including obtaining necessary affiliation and permissions from the MCI. Legal experts said that this was the first time that the apex court had asked the government to take over a private college.

வேண்டாம் என்று சொன்ன மெட்டுகளும் சூப்பர் ஹிட்: இளையராஜா சுவாரஸ்யம்

Published : 12 Feb 2019 16:21 IST




தான் மெட்டமைத்து தேர்வாகாத இரண்டு பாடல்கள் எப்படி பின்னாட்களில் சூப்பர் ஹிட் ஆகின என்பது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்த நாளை ஒட்டி, தமிழ்த் திரையுலகமே திரண்டு அவரை கவுரவிக்க விழா ஒன்றை எடுத்தது. இதை முன்னிட்டு 'தி இந்து' ஆங்கிலம் இணையதளத்துக்கு இளையராஜா பேட்டியளித்தார். அதில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

வழக்கமாக மெட்டமைப்புக்காக உட்காரும்போது இளையராஜா உருவாக்கும் மெட்டுகளை முதலில் கேட்டுவிட்டு வேண்டாம் என்று சொல்லாமல் இன்னொரு மெட்டு முயற்சிக்கலாமா என்பார்களாம் இயக்குநர்கள்.

1980-ல் வெளியான ’முரட்டுக்காளை’ திரைப்படத்தில், பொதுவாக என் மனசு தங்கம் பாடல் சூப்பர் ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆரம்பத்தில் அந்த மெட்டுக்கு மாற்றாக இன்னொரு மெட்டை இயக்குநர் கேட்டபோது இளையராஜா கொடுத்த மெட்டுதான் பின்னாளில் ’ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா’ என்ற பாடல் மெட்டு.

இதே போல ’மூடுபனி’ படத்தில், ’என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு மாற்றாக இளையராஜா தந்த மெட்டு தான் ’இளைய நிலா பொழிகிறது’ பாடலின் மெட்டு. ஆனால் மூடுபனியில் ’என் இனிய....’ மெட்டே பயன்படுத்தப்பட்டது.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் பின்னாட்களில் இரண்டு மெட்டுகளுமே 1982-ல் ’பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் பயன்படுத்தப்பட்ட ஹிட் ஆனது தான். இது போல எண்ணற்ற பாடல்கள் முதலில் தேர்வாகாமல் பின்னாட்களில் பயன்படுத்தப்பட்டு ஹிட் ஆனது என இளையராஜா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சொக்க வைத்த சிலோன் ரேடியோ; உங்கள் நண்பன்… கே.எஸ்.ராஜா, 

மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி சண்முகம், 
பிஹெச்.அப்துல்ஹமீது…

Published : 13 Feb 2019 20:12 IST

வி.ராம்ஜி





இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான்.

இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள்.

இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான்.

‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ என்கிற சிவாஜி நடித்த ‘ராஜா’ படத்தில் இருந்து பாடல் ஒலிபரப்பாகும். அந்தப் பாட்டில் ‘ராஜா’ என்று பெண் குரல் ஒலிக்கும். ‘ஆம்… உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அறிவிப்பு வர, பித்துப்பிடித்துப் போனார்கள் வானொலி ரசிகர்கள். மதுரக்குரல் மன்னன் என்று அழைத்தார்கள் இவரை. அறிவிப்பாளர்களின் அரசன் என்று புகழ்ந்தார்கள்.

அறிவிப்பு ஒருபக்கம் அள்ளும். அத்துடன் மக்களின் மனசுக்கு நெருக்கமான பாடல்களை ஒலிபரப்பப்படும். அந்தப் பாடல்களை ஒலிக்கும் நேரம்தான், மக்களின் மிகப்பெரிய ரிலாக்ஸ் நேரம்.

கே.எஸ்.ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, , ராஜேஸ்வரி சண்முகம், பிஹெச்.அப்துல்ஹமீது என பல அறிவிப்பாளர்கள், நமக்கும் ரேடியோவுக்கும் இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனத்துக்கும் மிகப்பெரிய பந்தத்தை ஏற்படுத்தினார்கள்.

பொங்கும் பூம்புனல் என்றொரு நிகழ்ச்சி அந்தக் காலத்தில் மிகப்பிரபலம். அதேபோல், இரவு 10 முதல் 12 மணி வரை இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சியில், மனதைக் கட்டிப்போடுகிற பாடல்களாகப் போட்டு, ரேடியோவையும் நம் காதுகளையும் பிணைத்துவிடும் தந்திரக்காரர்களாகவே அறிவிப்பாளர்கள் இருந்தார்கள்.

அந்தக் காலத்தில், ‘இன்னிக்கி இரவின் மடியில் ‘உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட’ பாட்டு போட்டா, நம்ம காதல் ஜெயிச்சிரும்னு அர்த்தம்’ என்று ரேடியோ ஜோஸியம் பார்த்ததெல்லாம் தனிக்கதை.

‘இந்தப் படத்தில் இருந்து இந்தப் பாடல்’ என்று அறிவிப்பதும் அந்தப் பாடல் ஒலிபரப்புவதும் மட்டுமா சந்தோஷம் தரும்? இந்தப் பாடலை விரும்பிக் கேட்ட நேயர்கள், பொப்பளக்கப்பட்டி செரீனா, மட்டக்களப்பு சுபாஷிணி, யாழ்ப்பாணம் தணிகை வேந்தன், அம்மம்மா, அப்பப்பா…’ என்று சொல்லும்போதே உறவில் சொக்கிப்போவோம். அதிலும் சில விநாடிகளுக்குள் முப்பது ஐம்பது பெயர்களையும் ஊர்களையும் மூச்சுவிடாமல் சொல்லுவார்கள்.

என்றைக்காவது காற்று அதிகம் அடித்தாலோ அல்லது காற்றே அடிக்காமல் போனாலோ ரேடியோ கொர்ராகிவிடும். திருப்பிப்பார்ப்பார்கள். தட்டிப்பார்ப்பார்கள். ஏரியல் கம்பிகளை நீட்டி இறக்கி நீட்டி பார்ப்பார்கள். வயரை இழுத்து வாசலில் வைப்பார்கள். ரேடியோவை நைஸாக காற்று வரும் திசைக்குத் திருப்பிப் பார்ப்பார்கள். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு ரேடியோ ஸ்டேஷன் லைன் கிடைத்துவிட்டால், குலசாமிக்கு நன்றி சொன்னவர்கள்தான், இன்றைக்கு ஐம்பது ப்ளஸ் வயதைக் கொண்டவர்கள்.

ரேடியோ இருக்கிற வீடுகள் அப்போது வெகு குறைவு. பாடல் ஒலிபரப்பாகும் நேரத்தில், ரேடியோ இருக்கும் வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் பெருங்கூட்டம் கூடியிருக்கும். ‘இந்தா பவுனாம்பா… சித்த சத்தமாத்தான் வையேன் ரேடியோவை’ என்பார்கள். படத்தின் பெயரைச் சொல்லும் போதே, இங்கே ‘இந்தப் பாட்டுதான்’ ‘இல்ல இல்ல இந்தப் பாட்டுதான்’ என்று பட்டிமன்றமே நடக்கும்.

பாட்டை நேசித்த தமிழ் உலகில், பாடல்களை நமக்காக ஒலிபரப்பிய ரேடியோவை அப்படிக் காதலித்தார்கள், கடந்த தலைமுறைக்காரர்கள்!

இன்று 13.2.19 உலக வானொலி தினம்

நாளை சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு: 12.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

By DIN | Published on : 14th February 2019 02:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!



கோப்புப்படம்



சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வை 12.87 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
நிகழ் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடைகிறது. அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும்.
நாடு முழுவதும் 21,400 பள்ளிகளைச் சேர்ந்த 12 லட்சத்து 87ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் தேர்வெழுதவுள்ளனர். இதற்காக 4,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் திருத்துதல், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், மேற்பார்வையாளர்கள் உள்பட பொதுத் தேர்வுப் பணிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தபடவுள்ளனர். வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்க நிகழாண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே தேர்வு முடிவு: மேலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு வாரம் முன்னதாகவே வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை மெட்ரோ ரயில் பயணம்: இதை நினைவில் வச்சுக்கங்க

By DIN | Published on : 13th February 2019 08:09 PM |




சென்னை: வியாழக்கிழமை முதல் மெட்ரோ ரயில் பயணத்திற்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஏ.ஜி.டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் செவ்வாய் வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்பே அறிவித்திருந்தது.

இதணையடுத்து சென்னை மெட்ரோ ரயிலில் 4வது நாளாக புதனன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறித்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை முதல் மெட்ரோ ரயில் பயணத்திற்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து சென்னை வாழ் மக்களின் நான்கு நாள் இலவசப் பயணம் புதன்கிழமை இரவுடன் முடிவுக்கு வருகிறது.

காதல் கொண்டாட்டம் தேவையா?


By எஸ்ஏ. முத்துபாரதி | Published on : 14th February 2019 01:37 AM


இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. காதல் எது என உண்மையாக அறிந்தவர்கள், அதை தங்கள் வாழ்வில் பின்பற்றுபவர்களுக்குத்தான் அதன் பரிமாணம் விளங்கும். தான் விரும்பிய ஆண் அல்லது பெண் கிடைப்பதற்காக கடுமையான முயற்சிகளை, பல்வேறு சவால்களைச் சந்தித்து, அதில் வெற்றி அடைந்து தங்கள் வாழ்க்கைத் துணையை அடைந்த எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்திய கலாசாரத்தில் குறிப்பிட்ட வயது அடைந்து, சுயமாக பொருளீட்டும் நிலை வந்துவிட்ட அனைத்து ஆண்களும் தாங்கள் விரும்பிய வகையில் வாழ்க்கைத் துணை அமைய தேடல்களில் ஈடுபடுகின்றனர். பல்வேறு காரணங்களால் விரும்பிய வகையில் பெண் அமைவதில்லை; அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகே வாழ்க்கைத் துணை அமைகிறது; அல்லது அமைத்துக் கொள்கின்றனர். 

இதற்கிடையே குறிப்பிட்ட வயது வந்த ஆணோ, பெண்ணோ தங்களது உடலில் ஏற்படும் பாலுணர்வு எண்ணங்களினால் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதை நிறைவேற்றும் வழிகளில் ஈடுபட வாய்ப்பு உண்டாகிறது. அல்லது வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், பெற்றோரின் முறையான வளர்ப்பில், சரியான வழிகாட்டுதலில் உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் விளக்கம் காரணமாக உடற்கூறு பற்றி அறிந்த மாணவ, மாணவியர் குறிப்பிட்ட வயதில் ஏற்படும் பாலுணர்வு குறித்த உணர்வுகளைப் பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, அதை உதாசீனம் செய்து தங்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டு அதன் மீது கவனத்தைச் செலுத்துகின்றனர். 
 
புரிதலுடன் இணைந்து வாழும் எல்லா ஆண்-பெண் உறவுகளையும் நாம் ஏற்றுக் கொள்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. தான் படிக்கும் பள்ளி, கல்லூரியில் உடன் படிக்கும் மாணவன் அல்லது மாணவி மீது ஏற்படும் ஈர்ப்பு என்பதை நிச்சயமாக உண்மையான காதல் என்கிற ரீதியில் எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், அவர்களுக்கு அந்த வயதில் ஏற்படுவது உடலில் பாலுணர்வு காரணமாக எழுந்த மோகம்தான். அந்த வயதுக்கு உண்டான செயல் அப்படி. எனவே, சுற்றி இருப்பவர்கள்தான் அவர்களுக்கு விளக்கி வயதின் காரணமாக ஏற்படும் விருப்பமே இது; இதற்குப் பெயர் காதல் அல்ல எனப் புரிய வைக்க வேண்டும்.
இப்படிப் புரிய வைக்காமல் விடுவதால்தான் அவர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள செயலை உண்மையான காதல் எனத் தவறாகப் புரிந்து வீட்டை எதிர்த்து எதாவது ஒரு செயலுக்கு உள்ளாகின்றனர். பின்னர், காலம் உணர்த்தும் பாடத்தில் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்குள் ஓரளவு உணர்ந்து கொள்ளும் நிலைக்கு வருகின்றனர். அதற்குள் தாங்கள் செய்த தவறுகளால் இருதரப்பு வீட்டிலும், சமூகத்திலும் பல்வேறு சங்கடமான நிகழ்வுகள் அரங்கேறியிருக்கும். 
 
இப்படியான புரிதலை இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்படுத்தி நாகரிகமான சமுதாயத்தை உருவாக்கிவிட்டால், ரயில் நிலையத்தில் வெட்டுவது, ஆசிட் வீசுதல் போன்ற சம்பவங்கள் நிகழாது. ஒருவேளை சூழல் காரணமாக தாங்கள் விரும்பிய நபர் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைக்காத நிலை உருவானால், எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என நினைத்து வாழ்பவர்களும் உண்டு. இவர்களால் இந்த சமூகத்துக்கு எவ்விதக் கெடுதலும் இல்லை. 
 
பள்ளிக்கூட நட்பை எப்படி காதல் என்று ஏற்றுக் கொள்ள முடியாதோ, அப்படித்தான் கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட நட்பையும் காதலாக ஏற்க முடியாது. ஏனெனில், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் 18 வயது கடந்தவுடன் பக்குவமடைந்து சுயமாக முடிவெடுக்கும் திறன் பெற்று, தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அமைக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள் என எப்படி ஒரு சட்டம் சொல்ல முடியும்?

ஒவ்வொரு மனிதனின் பக்குவம் என்பது வயதைப் பொருத்ததல்ல. அவர்கள் வாழும் சூழலைப் பொருத்தது. பல ஆண்களும், பெண்களும் 21 வயதுக்கு மேல் ஆன பிறகும் தங்கள் வாழ்க்கை குறித்தும், வாழ்க்கைத் துணை குறித்தும் போதுமான பக்குவத்தைப் பெறாமல் இருக்கிறார்கள். இதற்காக இந்த குறிப்பிட்ட வயதில்தான் காதல் வரவேண்டுமா எனக் கேட்பவர்
களும் உண்டு. காதல் என்று நாம் பெயர் கொடுத்துள்ளோமே தவிர, அன்புதான் அடிப்படையானது. பள்ளிச் சிறுமியை மாணவர் காதலிப்பது உள்பட பல்வேறு வகையான பொருந்தாக் காதலை நாம் அனுமதிக்கக் கூடாது. இவற்றுக்கெல்லாம் உடலில் ஏற்பட்ட பாலுணர்வினால் உண்டான காமம்தான் காரணம்; இத்தகையோருக்கு அதை உணர முடியாத வயதும் காரணம்.

இந்த உலகில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிரினத்துக்கும் உரிமை உள்ளது. அதனதன் வாழ்வில் ஏற்படும் தொடர்புகளில் தனக்கான இணையை ( வாழ்க்கைத் துணையை) தேர்வு செய்து கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற பண்பாடு, கலாசார பின்னணி கொண்ட நாடுகளில், குறிப்பிட்ட வயதுக்கு வந்த ஒரு ஆண் அல்லது பெண் தங்கள் வாழ்க்கைத் துணைக்கான தேடுதலை தங்களை வளர்த்துவரும் பெற்றோர்களின் வழிகாட்டுதலில் மேற்கொள்கின்றனர். 
 
வயது வித்தியாசம் பாராமல் மனித சமூகத்தில் எழும் இந்தப் பாலுணர்வு காரணமாக, ஆங்காங்கே குற்றங்கள் பெருகி வருகின்றன. நாகரிக வார்த்தைகளில் சொல்வதென்றால் காதல் என்ற பேரில் காமத்துக்கு நாம் அடிமையாகிவிடக் கூடாது. உண்மையான காதல் வெளியே தெரியாது. அது தன் வாழ்க்கைத் துணையோடு எப்போதும் உண்மையாக இருக்க வைக்கும். காதல் என்றும் காதல்தான்; அது காமம் ஆகிவிடாது. அது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். எனவே, உலகம் முழுவதும் கொண்டாடி உறுதிப்படுத்த வேண்டிய செயல் அல்ல காதல். வாழ்க்கை துணைக்காக வழங்கும் உண்மையான அன்புதான் காதல்.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...