Sunday, February 24, 2019


Railway minister to inaugurate subways already opened by MP

Siddharth.Prabhakar@timesgroup.com

Chennai:24.02.2019

Railway minister Piyush Goyal is slated to inaugurate on Sunday a slew of railway projects in the city including two subways built to replace level crossings 30 and 32 on the Tambaram-Chengalpet section. Only that the subways had already been inaugurated on Thursday by the AIADMK’s K N Ramachandran, Member of Parliament from Sriperumbudur constituency who will also be present at Sunday’s grand function.

The official invite sent out to media organizations by Southern Railway said the railway minister will “dedicate both the subways to the nation.”

Sources said Ramachandran had contacted Southern Railway a few days ago evincing interest in having a grand function where the subways would be inaugurated. However, railway officials did not want a separate function and the ‘dedication event’ found its way on to the list of projects scheduled for Sunday’s function.

On Thursday, sources said, Ramachandran and a few of his supporters as well as some residents of the area, conducted a function of his own, complete with lighting of the traditional lamp (‘kuthuvilakku’). Southern Railway had thrown open the subways a day earlier, the sources added.

In clarification, a senior official at the Southern railway headquarters when contacted said Goyal would only ‘dedicate to the nation’ the subways and it was different from the event organized by the MP which was “anyway not an official one.” When TOI contacted Ramachandran’s official mobile number, his son answered and said the MP was busy and would get back later.

The subway replacing LC 32 is near Perungalathur Railway Station, while the one replacing LC 30 connects the east and west side of Tambaram Railway Station.



QUICK ACTION: A file photo shows the two subways being inaugurated on Thursday
High demand pushes up international airfare
Dubai, US, Singapore Popular Routes

TIMES NEWS NETWORK

Chennai:24.02.2019

Airfares from Chennai to international destinations have increased for travel in April and May, the peak holiday season, due to the high demand. Various airlines are offering discounts only for February and March and not for the summer months, impacting those who have not planned in advance.

Travel agents say that people are spending more on tickets as the earlier trend of six months advance booking is not being followed anymore. Dubai, Singapore, Europe and the US are popular routes where the fares are high. Airfare is in the range of ₹10,000 to ₹18,000 to Singapore and ₹12,000 to ₹18,000 to Dubai, while tickets to Europe and the US have touched ₹1 lakh.

Basheer Ahmed of Metro Travels says that international fare is high for travel in the months of April and May when the maximum number of Indians travel to foreign destinations because of school holidays. “There are offers and discounts only for this month and March to encourage more people to travel but not for the peak travel season in the summer. Though there are some discounts, the fare shows high because of the demand. People who have not booked in advance of six months or more are forced to pay more to travel,” he says.

The booking trend is also changing. Earlier, people used to book for international travel six months in advance. Now, the booking window has been reduced to three months or less. “This has led to people spending more on travelling abroad. The high traffic pushes up the fare. Still people are booking. Airlines will offer discounts only closer to the departure dates so that they will be able to fill the rest of the unsold seats. This is impacting passengers, especially the young travellers, who book their tickets only two months or less in advance,” adds Ahmed.

Most of the families who travel do so with aged relatives. People who travel in groups for leisure book tickets in advance. The rest of the seats are booked by those who travel individually or with their friends. It is these travellers who have to spend more for booking flights in April and May, say travel agents.

Ritu Sharma of Switzerland Toursism says that Indians and Chinese are the tourists who mainly travel in the April and May summer months. European countries receive a lot of tourists from India during this time, she said.

The tourism authorities of these countries offer the best options for these tourists. However, the cost of travel goes up because of the high demand.

PaaniMalar Medical College Hospital and Research Institute Advertisement for faculty position

‘Job fraud victims must be made liable for abetment’

TIMES NEWS NETWORK

Chennai:24.02.2019

The Madras high court has directed the Tamil Nadu Director General of Police (DGP) to give public announcements on a regular basis informing the public that paying money to secure jobs in government and public sector companies or to secure seats in medical colleges, bypassing official recruitment through middlemen or brokers, would amount to criminal offence, and that such people would be held liable for committing the offence of abetment.

“This court, on a daily basis, is encountering cases of similar nature where it is alleged that money is being collected from innocent people on the false promise of getting a government job or a job in a public sector undertaking or on a false promise of getting a medical seat. It is unfortunate that the persons who are paying money do not understand that jobs or medical seats cannot be purchased, and it has to be secured on merit and based on eligibility and that no one can get such jobs by paying money,” Justice N Anand Venkatesh said.

There is a selection process for every post, and every aspirant has to go through the process to get a job. Similarly, medical seats cannot be procured by paying money. Candidates must write entrance exams like the NEET, and only based on the marks secured in such examination, the seat can be secured by a candidate, the judge added.

Asserting that persons who make such payments are also to be equally blamed, Justice Venkatesh said. “The intention of such persons becomes questionable. It is not as if, in every case, the person who makes the payment is innocent and they know that they are trying to knock off a job or a seat by indirect means. This attitude needs to be curtailed.”

This can be curbed only by bringing awareness to the public that no one can secure jobs or seats in colleges by mere payment of money. This message has to reach the nook and corner of every place in this state. Till this happens, complaints of this nature are going to continue, the court said.

Justice Venkatesh made the observations while granting bail to Atrinbosco, a resident of Namakkal who was arrested for allegedly duping many persons to the tune of ₹20 lakh promising to provide jobs.




The court said it is unfortunate that the persons who are paying money do not understand that jobs or medical seats cannot be purchased, and it has to be secured on merit and based on eligibility

Saturday, February 23, 2019

தூங்காத விழிகள்

Published : 16 Feb 2019 12:04 IST

நிவேதிதா





வேலை நாட்களில் சீக்கிரம் விழித்து, விடுமுறை நாட்களில் தாமதமாக விழிப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு, ‘சோசியல் ஜெட்லாக்’ இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சோசியல் ஜெட்லாக் என்றால் என்ன?

இரு வேறு நேர மண்டலங்களில் பயணம் செல்லும்போது ஏற்படும் ஜெட்லாக்கைப் போன்றதுதான் இதுவும். ஆனால், சோசியல் ஜெட்லாக்கில் இருக்கும் இரண்டு நேர மண்டலங்களும் சற்று மாறுபட்டவை. முதலாவது பணியும் சமூகமும் சார்ந்த கடமைகளால் உருவாக்கப்பட்ட நேர மண்டலம். இரண்டாவது உடம்பின் உள் கடிகாரத்தால் ஏற்படுத்தப்பட்ட நேர மண்டலம்.

நமது உடம்பு இந்த இரண்டு நேர மண்டலங்களின் முரண்களில் சிக்கிக்கொள்ளும்போது, இந்த சோசியல் ஜெட்லாக் ஏற்படுகிறது. உலகில் மூன்றில் இருவருக்குக் குறைந்தது வாரத்துக்கு ஒரு மணி நேரம் சோசியல் ஜெட்லாக் ஏற்படுகிறது. ஏனையோருக்கு வாரத்துக்கு இரண்டு மணிநேரமோ அதற்குக் கூடுதலாகவோ இது ஏற்படுகிறது. ஆந்தையைப் போன்று நேரம் கழித்துப் படுத்து, நேரம் கழித்து விழிப்பவர்களுக்கு சோசியல் ஜெட்லாக் அதிகமாக இருக்கும். சோசியல் ஜெட்லாக்கும் தூக்கக் குறைபாடும் நடைமுறையில் பிரிக்க முடியாத இரட்டையர்கள்.

உடலின் கடிகாரம்

நேரம் பார்த்து நாம் மட்டும் வேலை செய்வதில்லை. உடலில் உள்ள உறுப்புகளும் நேரம் பார்த்துத்தான் வேலை செய்கின்றன. நமது உடலின் அனைத்து செல்களிலும் சிர்காடியன் கடிகாரம் உள்ளது. அந்தக் கடிகாரம் காட்டும் நேரத்தின்படியே நமது உடம்பினுள் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றன. நமது உடலில் எப்போது ஹார்மோன்களைச் சுரக்க வேண்டும், நோய் எதிர்ப்பு செல்கள் எப்போது வேலை செய்ய வேண்டும், உடலின் வெப்பநிலை எவ்வளவு இருக்க வேண்டும், பகலிலும் இரவிலும் நமது மனநிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பன போன்றவற்றையும் இந்த சிர்காடியன் கடிகாரமே தீர்மானிக்கிறது. இந்தக் கடிகாரங்களும் 24 மணிநேரத்தையே பின்பற்றுகின்றன. ஆனால், ஆந்தை போல்வ பகலில் தூங்கி இரவில் கண் விழித்திருப்போருக்கு இந்தக் கடிகாரம் கொஞ்சம் மெதுவாக ஓடும்.

பாதிப்புகள்

நாம் விழிக்கும் நேரத்தைப் பொறுத்தோ மாறுபட்ட நேர மண்டலத்தில் பயணம் செல்வதைப் பொறுத்தோ நாம் சூரிய ஒளியை எதிர்கொள்ளும் நேரம் மாறுபட்டால், அதற்கு ஏற்றவாறு நமது உடலின் உறுப்புகளும் திசுக்களும் தங்களது கடிகார நேரத்தை மாற்றிக்கொள்ளும். ஒளியை எதிர்கொள்ளும் நேரம் அடிக்கடி மாறினால், சூரியக் கடிகாரத்துடனான நமது உடல் கடிகாரத்தின் ஒத்திசைவு குலைந்துவிடும். இந்த ஒத்திசைவுக் குலைவு நமது உடலின் செயல்பாட்டைக் கட்டுப்பாடு அற்றதாக மாற்றிவிடுகிறது.

சோஷியல் ஜெட்லாக்கால், நமது பணித்திறன் பாதிப்படைகிறது, அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது, கை - கண் ஒருங்கிணைப்பு பாதிப்படைகிறது. தர்க்க அறிவு பாதிப்படைகிறது. உணர்வின் சமநிலை பாதிப்படைகிறது. தூக்கத்தின் ஆழமும் குறைகிறது. மேலும், நீரழிவு நோய் வகை- 2, உடல் பருமன், இதய நோய், மனச் சோர்வு போன்றவையும் சோசியல் ஜெட்லாக்கால் ஏற்படுகின்றன.

தவிர்க்கும் வழிமுறைகள்

சூரியனைப் பார்ப்பதே இன்று அபூர்வமாகிவிட்டது. இன்றைய வேலை பெரும்பாலும் அலுவலகத்துக்குள், அதீத ஒளி உமிழும் விளக்குகளின் கீழ் கழிந்துவிடுகிறது. இதனால், நமது உடலின் கடிகாரம், இந்தச் செயற்கை ஒளிக்குத் தன்னைப் பழக்கிக்கொள்கிறது. எனவே, இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே, வீட்டில் அதிக ஒளியில் ஒளிரும் விளக்குகளை அணைத்துவிட்டு, மேஜை விளக்குகளைப் பயன்படுத்துவது நல்லது. இரவு நேரத்தில் நமது கைபேசியின் ஒளிர்வையும் கணினித்திரையின் ஒளிர்வையும் குறைத்து வைப்பது நல்லது,

இரவு தூங்க நேரமாகிவிட்டால், காலையில் நேரம் கழித்து எழுவதன்மூலம், போதுமான தூக்கத்தைப் பெற முடியும். ஆனால், அந்தத் தூக்கம் முறையான தூக்கம் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். வார நாட்களில் தொலைத்த தூக்கத்தை விடுமுறை நாட்களில், அதிக நேரம் தூங்கிப் பெற முயன்றால், நமக்கு ஆழ்ந்த தூக்கமும் வராது. உடலுக்கும் மனத்துக்கும் ஓய்வும் கிடைக்காது. தினமும் குறித்த நேரத்தில் தூங்கி, குறித்த நேரத்தில் எழுவதை அன்றாடப் பழக்கமாக்கினால், உடலும் மனதும் மட்டுமல்ல; நம் வாழ்வும் நலமாக இருக்கும்.

ஆபத்தாகி வருகிறதா அசைவ உணவு? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

Published : 22 Feb 2019 13:21 IST

ஜெமினி தனா


நான் சுத்தமான அசைவப் பிரியன். ஓடுவது… நடப்பது... மிதப்பது... என ஏதாவது ஒன்று எனக்கு இருந்தே ஆக வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அசைவ உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வீட்டில் சமைத்தாலும் விதவிதமான அசைவ உணவுகளை அன்றாடம் வீட்டிற்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு அசைவப் பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வீதிக்கு நான்கு கடைகளில் பிரியாணிக்கு சிக்கன் 65 இலவசமாகவும், தள்ளு வண்டியில் பிளேட் பிரியாணி 50 ரூபாய் என்றும் படித்துவிட்டு கடக்கும் போதும் மனம் மயங்கித்தான் போகிறது.

5 வருடங்களுக்கு முன்பு சென்னை தள்ளுவண்டிக் கடைகளில் பிரியாணியில் காக்கா கறி என்று பரபரப்பானது. சமீபத்தில் உணவகங்களில் பிரியாணிக்கு ஆட்டுக்கறிக்கு பதிலாக நாய்க்கறி பயன்படுத்துவதாக சர்ச்சை கிளம்பி அசைவ பிரியர்களின் வயிற்றில் கறியைக் கலக்கியது.

தற்போது கடல் உணவிலும் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் பிராய்லர் மீன் சர்ச்சை கிளம்பியுள்ளது. வெளியில் செய்யப்படும் அசைவ உணவுகள் தரமானவையா என்று ஆராய்ச்சி செய்வது இருக்கட்டும். ஆனால் உடல் உழைப்பு குறைந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் வயிற்றின் செரிமானச் சுமையை அதிகரித்து பாதிப்பை உண்டாக்கும் அசைவ உணவுகளில் கட்டுப்பாடு தேவை என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

முந்தைய தலைமுறையில் அசைவ உணவுகள்:

முந்தைய தலைமுறையில் அசைவ உணவு என்பது ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி, வயல் நண்டு, ஏரி மீன், கடல் உணவுகளான மீன், இறா, நண்டு என பரவலாக இருந்தது. அசைவ நாட்டம் கொண்டவர்கள் அதிகபட்சம் வான்கோழி, காடை, கெளதாரி போன்றவற்றைச் சாப்பிட்டார்கள். அசைவம் என்றால் கிரேவியும், குழம்பும், வறுவலும், தலைக்கறியும், ரத்தப் பொறியலும், வறுவலும், சுறாப்புட்டும் தாண்டி அதிகபட்சமாக மெனக்கெட்டு செய்யப்படும் உணவாக சிக்கன் 65 மற்றும் பிரியாணி மட்டுமே இருந்தது. மசாலாக்களை மைய அரைத்து, அதிக அளவு மிளகு சேர்த்து, செக்கில் ஆட்டிய எண்ணெயில் சுவைக்கான கலப்பின்றி காரஞ்சாரமாய் சாப்பிட்டால் சளி, இருமல் காணாமல் போய்விடும் என்று பாட்டிக்களும் அம்மாக்களும் மணக்கமணக்கச் சமைத்துப் போட்டார்கள்.

அசைவ உணவுகளுக்காகவே நாட்டுக்கோழிகளை வீட்டில் வளர்த்தவர்களும் உண்டு. உடல் ஆரோக்கியம் குறைந்தால் கூட கோழி அடிச்சு மிளகு போட்டு குழம்பு வெச்சு சாப்பிட்டா சரியாகிடும் என்று அசைவத்தை ஆரோக்கியமாக சமைத்தார்கள். நாட்டுக்கோழி முட்டைகளை பச்சையாகவே குழந்தைகளை குடிக்கவைத்தார்கள். பிராய்லர் கோழிகள் என்பதெல்லாம் மருந்துக்கும் கிடையாது.

குளங்களிலும், ஏரிகளிலும் இருக்கும் மீனை உயிருடன் பிடித்து குழம்பு வைத்தார்கள். வயலில் தென்படும் நண்டுகள் உரலில் இடிக்கப்பட்டு ரசமாக்கப்பட்டன. வாரம் ஒருமுறை மட்டுமே அசைவ உணவுகளை அவசியமாக்கி வந்தார்கள். ஆண்கள் வெளியிலும் பெண்கள் வீட்டிலும் குழந் தைகள் திண்ணையிலும் என ஓடிக்கொண்டே இருந்தார்கள். அவர்களது கடின உழைப்பு, செரிமா னத்தை சிறப்பாக வேலை செய்ய வைத்தது. குறிப்பாக ஆடுகள் பசுமையான இலைதழைகளையும், கோழிகள் சத்துமிக்க நவதானியங்களையும் உண்டு வளர்ந்து சத்துக்களை நமக்குக் கொடுத்தது.

நவீன கால அசைவ உணவுகள்

ஓய்வு நேரத்தில், விடுமுறை நாளில் மட்டுமே அசைவம் சாப்பிட வேண்டிய நிலை இப்போது மாறிவிட்டது. சைவ உணவகங்களை விட அதிக எண்ணிக்கையில் அசைவ உணவகங்கள் இயங்குகின்றன. மேலும் வீட்டில் சமைக்கப்படும் அசைவ உணவுகளை விட தினுசு தினுசாய் கண்ணைக் கவரும் வகையில் வேகவைக்காமல் அடுப்பில் சுட்டு, எண்ணெயில் பொறித்து, கலரை நிரப்பும் அசைவங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நாக்கில் எச்சில் ஊற வைக்கின்றன.


மட்டன் கட்லெட், மட்டன் கோலா உருண்டை, மட்டன் சாப்ஸ், சப்பாத்தி மட்டன் ரோல், மட்டன் கபாப், மட்டன் உப்புக்கறி, மட்டன் பப்ஸ் (இவையெல்லாம் பட்ஜெட்டுக்கு மிஞ்சிய விலை என்பதால் மேல் மட்ட நடுத்தர மக்களுக்கானது) பெப்பர் சிக்கன், முந்திரி சிக்கன் குருமா, க்ரில்டு சிக்கன், ரோஸ்டட் சிக்கன், சிக்கன் க்ராவ் (இதன் விலை பட்ஜெட்டுக்குள் ஏறத்தாழ கட்டுப்படும் என்பதால் அனைத்து அசைவப் பிரியர்களுக்கும் ஏற்றது) சிக்கன் லெக் பீஸ், சிக்கன் பக்கோடா என 100க்கும் மேற்பட்ட அசைவ வகைகள் அஜினோமோட்டோ சுவைக்கூட்டும் கெமிக்கல் சேர்த்து சுவையூட்டப்பட்டு புதிய பெயருடன் வலம் வந்து அசைவப் பிரியர்களை கவர்கின்றன. எனவே வீட்டில் செய்யப்படும் அசைவ உணவுக்காக காத்திருக்கத் தேவையில்லாமல் சுகாதாரம் பற்றிய கவலையு மில்லாமல் வெளியில் வயிறு முட்ட உண்கின்றனர்.

அசைவ உணவுகளைத் தவிர்க்க நியாயமான காரணங்கள்:

மட்டன், நாட்டுக்கோழி மாதம் இருமுறை என்பதே பட்ஜெட்டுக்குள் பற்றாக் குறைதான் என்பதால் குறைந்த விலையான பிராய்லர் கோழி தவறாமல் வாரம் ஒருமுறையாவது வீட்டில் கொதிக்கிறது. பிராய்லர் கோழியின் உபயம் நாக்குக்கு உண்டாக்கும் சுவை மட்டுமே. பெண் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழியால் சமைத்த உணவை அதிகம் கொடுத்தால் ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு குழந்தைப்பருவத்திலேயே (8 முதல் 11) பூப்பெய்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள். இதைத்தொடர்ந்து சில குழந்தைகளுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சினைகள், அதிக உதிரப்போக்கு கூட ஏற்படுகின்றன.ஊசி மூலம் பெரிதாக்கப்படும் பிராய்லர் கோழியால் என்ன சத்து கிடைத்து விடப்போகிறது. சத்தான ஆகாரங்கள் மனித இனத்துக்கே கேள்விக்குறியாக இருக்கும் போது, ஆடுகள் இலைதழையின்றி பேப்பர் உண்பதை கண்கூடாக பார்க்கிறோம். கடல் உணவுகள் உடலுக்கு நன்மை தரும் என்றாலும் தற்போது மீனைப் பதப்படுத்துவதற்கான முறைகளும், நாட்டு மீன்கள் குறைந்து வருவதால் புதிதாகக் கிளம்பியிருக்கும் பிராய்லர் வகை மீன்களும், கடலில் கண்ணுக்குத் தெரியாமல் கலக்கும் ரசாயனங்களை சாப்பிடும் மீன்களை உண்ணுவதாலும் உடலுக்கு கேடு மட்டுமே தருகின்றன என்பதை மறுக்க முடியாது.


ஒளிந்திருக்கும் ஆபத்துகள்:

வெப்பம் மிக்க இறைச்சியை மேலும் மின்சார உபயத்தால் சூடாக்கும் போது அதன் வெப்பம் உடல் நிலையை மேலும் பாதிக்கிறது. தினம் ஒரு அசைவ உணவு அல்லது அசைவத்தை அதிகம் சாப்பிடுபவர் களுக்கு மலச்சிக்கல், உடல் பருமன், இதய நோய், அதிக ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, பித்தப்பையில் கல் (செரிமான பிரச்சினை), தாமதமான செரிமானம் என உடலில் உள்ள பெரும் பாலான பாதிப்புகள் விரைவாக ஏற்படுகிறது.

கடும் உடல் உழைப்பால் எளிதாக சாத்தியமாகும் செரிமானம், இன்றைக்கு எகிடுதகிடாகிப் போனது. வீட்டின் தலைவாசலை தாண்டியதும் டூ வீலர், ஃபோர் வீலரின் உபயோகமில்லாமல் கால்கள் ஒத்துழைக்காதவர்களுக்கு அதிலும் அசைவ பிரியர்களுக்கு எப்படி சாத்தியமாகும். கடின உழைப்பாளிகளுக்கு அசைவ உணவு ஒன்றும் செய்யாது என்றாலும் அதிலும் அளவு தேவை.

தற் போது வரும் சமையல் எண்ணெயில் உடலுக்கு ஒவ்வாத கலப்பும் சிறிதளவு இணைந்துள்ளது எனும் போது எண்ணெயில் பொறித்த அசைவ உணவுகள், அரை வேக்காடு இறைச்சி, உடல் ஆரோக்கியத்தை நிச்சயம் சீர் குலைக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதாக்குறைக்கு நிறமூட்டியும், சுவைக்குச் சேர்க்கும் செயற்கையூட்டிகளும் இணைந்து உடலுக்குள் கொசுறு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன.

அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்தால் நல்லது. (குறிப்பாக பிராய்லர் சிக்கன்) என்றாலும் அசைவப் பிரியர்கள் எச்சரிக்கையோடு தகுந்த இடைவெளியில் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது என்பதே மருத்துவர்களின் ஆலோசனை.

ஜியோ பாய்ச்சல்: ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய வாடிக்கையாளர்களால் ஏர்டெல், வோடபோனுக்கு இழப்பு

Published : 22 Feb 2019 16:43 IST



கோப்புப்படம்

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ 85.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

இத்தகவல் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ட்ராய் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி, ''2018-ம் ஆண்டு நவம்பர் கடைசியில் இருந்து டிசம்பர் கடைசி வரை மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117.17 கோடியில் இருந்து 117.6 கோடியாக உயர்ந்துள்ளது. 0.36% என்ற அளவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது.

பிராந்திய வாரியான வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில் வடகிழக்கு தவிர மற்ற பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ 85.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.01 கோடியாக உயர்ந்துள்ளது.

மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி (MNP) மூலம் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மாற்ற, முந்தைய மாதத்தைக் காட்டிலும் அதிக வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதாவது சுமார் 47.6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் எம்என்பி மூலம் தங்களின் சேவை நிறுவனத்தை மாற்ற முன்வந்துள்ளனர்.

அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட முதல் நிறுவனமான வோடபோன் ஐடியா, சுமார் 23.32 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து 41.87 கோடி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துள்ளது.

அதேபோல 34.03 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த பார்தி ஏர்டெல், 15.01 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரே மாதத்தில் இழந்துள்ளது'' என ட்ராய் தெரிவித்துள்ளது.

NEWS TODAY 15,16.06.2026