Sunday, September 29, 2019

NEET impersonation scam: State’s duty is only to coach students for NEET, Tamil Nadu school education minister says

TNN | Sep 28, 2019, 06.02 PM IST

COIMBATORE: The duty of the state school education department is only to coach students to clear NEET exam, said school education minister K A Sengottaiyan on Saturday.
Answering a question on the NEET impersonation scam, the minister said the explanation given by state health minister C Vijaya Baskar on the issue was sufficient. Vijaya Baskar had said that the state was not responsible for the impersonation scam and the National Testing Agency, which conducted the exam should answer.

Five students from medical colleges in the state have been arrested in connection with the NEET impersonation scam.

Sengottaiyan said for the third consecutive year, the school education department was conducting NEET coaching classes for students. He said the classes would be held on weekends.

He was speaking to reporters after participating in a Teacher’s Day event held at a private engineering college here.

“This year, 49.46% of the students who wrote the NEET exam got minimum qualification marks in the exam and two government school students got medical seats. We are training students with a target of making minimum 500 government school students get medical seats,” he said.

The minister said it would be sufficient if students studied their Class XI and XII textbooks to clear NEET, as 90% of the NEET syllabus was in the new textbooks, he said.
One week after NEET scam broke, MCI, NTA yet to act

TNN | Sep 29, 2019, 08.16 AM IST

CHENNAI: More than a week after the news about impersonation in medical admissions at government and deemed universities in the state broke and nearly four arrests were made, there has been no reaction from either the National Testing Agency, which conducted the examination or the Medical Council of India, the apex body regulating medical education.

Medical college managements say the scam could have been avoided had the NTA verified if the student writing the exam was the one who applied for the course. The MCI, by now, should have asked for a detailed verification along with fingerprints of every first-year student, they said.

“It is clear that the scam is not confined just to Tamil Nadu. It looks like a well-oiled multistate network. The centre struck down our state’s independent admission process and made merit in Neet exam the sole eligibility. Now, we find that the scale we used to measure merit is faulty,” said former director of medical education Dr A Edwin Joe.

Police reports are now showing that students and parents engaged other people through coaching centres and agents to write Neet examination in different cities. Officials at the NTA said they were taking fingerprints of students in the examination hall. “Initially we wanted to connect all hall tickets and scorecards to Aadhaar cards, but we were told that some students did not have the identity card. Which is why we decided to collect fingerprints in exam halls,” a senior official said. “Next year, we do plan to have a biometric system,” he added.

The state health department has sought fingerprints given by the students at the Neet examination halls so it can be matched with the students admitted to the first year. As of now, colleges have been asked to merely match photographs on Neet score cards issued by the NTA with that of pictures in admit cards issued by the selection committee and photos of students on campus.

“When there is a difference all we can do is raise a suspicion. It is a very crude way of verifying identity and we put bonafide students into a lot of pressure. Verification should be done by an appropriate agency,” said PSG College Dean Dr S Ramalingam.

“When we found a mismatch in photos of two students, we referred it to the selection committee,” he said.

The committee has cleared the students, but state health secretary Beela Rajesh said a detailed verification process will follow for all colleges in Tamil Nadu. Meanwhile, MCI chairman V K Paul said the investigating agency and enforcing agencies should ensure criminal action is taken against those who were involved in the malpractice.

“As a regulating authority, we will do whatever is required to help them and also ensure this doesn’t happen again,” he said.

Friday, September 27, 2019

மாவட்ட செய்திகள்

ஆசைக்கு இணங்குமாறு கூறி: பெண் பேராசிரியரை மிரட்டிய ஆந்திர மாணவர் கைது

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், ஆசைக்கு இணங்குமாறு கூறி பெண் பேராசிரியரை மிரட்டிய ஆந்திர மாணவர் கைது செய்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 04:30 AM 

சோழிங்கநல்லூர்,

ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த பெண் ஒருவர் தனியார் விடுதியில் தங்கியிருந்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவிபேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே கல்லூரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவேஷ் (வயது 23) என்ற மாணவர் அம்பத்தூரில் தங்கி படித்து வந்துள்ளார். இருவரும் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நன்றாக பழகி வந்து உள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர் தனக்கு பிறந்தநாள் என கூறி அந்த பெண் பேராசிரியரை மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மறைவான இடத்தில் வைத்து அவரிடம் தவறாக நடக்க முற்பட்டு, அதை தனது செல்போனில் காட்சிகளாக பதிவுசெய்துள்ளார்.

பின்னர் அவரை மீண்டும் சோழிங்கநல்லூர் விடுதிக்குகொண்டுவந்து விட்டு சென்றுள்ளார். பின்னர் அந்தப்பேராசிரியரிடம் போன் செய்து தனது செல்போனில் படமாக எடுத்துள்ளதை கூறி அவரை தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பெண் பேராசிரியர் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உதித்சூர்யா, டாக்டர் தந்தை கைது சிக்குகிறார் பயிற்சி மைய தரகர்

Updated : செப் 27, 2019 00:17 

தேனி,: 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவாகி திருப்பதியில் சிக்கிய மாணவர் உதித்சூர்யா, தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகியோர் தேனிக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஒப்புதல் வாக்குமூலத்தின்படி உதித்சூர்யா, டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர்.

ஆள்மாறாட்டம் செய்ய பயிற்சி மையம் ஒன்று சென்னை தரகர் மூலமாக ரூ.20 லட்சம் வாங்கியது குறித்து விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா 21. தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் கடந்த மாதம் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார்.

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து 'சீட்' பெற்றதாக எழுந்த புகாரில் விசாரணை நடந்தது. புகார் உறுதி செய்யப்பட்டதால், மன உளைச்சலால் படிப்பை தொடர இயலாது' என முதல்வரிடம் கடிதம் தந்து விட்டு உதித்சூர்யா தலைமறைவானார். தேனி போலீசார் வழக்குப்பதிந்த நிலையில், சில நாட்களுக்கு முன் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிக்கிய நண்பர்

இந்நிலையில் டாக்டர் வெங்கடேசன், குடும்பத்தினருடன் தலைமறைவானார். அவரது அலைபேசி அழைப்புகளை தேனி தனிப்படை போலீசார் கண்காணித்தனர்.அவரது நண்பர் புகழேந்தி அடிக்கடி தொடர்பு கொண்டார். எஸ்.ஐ.,க்கள் சுல்தான் பாட்ஷா, துரைராஜ் தலைமையிலான போலீசார் அவரை பிடித்தனர். வெங்கடேசன் குடும்பத்தினர் ஆந்திராவின் திருப்பதியில் இருப்பது புகழேந்தி மூலம் தெரிந்தது.

அங்கு சென்ற போலீசார் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த வெங்கடேசன், மனைவி கயல்விழி, உதித்சூர்யாவை பிடித்தனர்.நேற்று முன்தினம் இரவு 1:32 மணிக்கு தேனி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர். 1:45 மணிக்கு சமதர்மபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., காட்வின் ஜெகதீஷ், இன்ஸ்பெக்டர் சித்ராதேவியிடம் உதித்சூர்யா, பெற்றோரை ஒப்படைத்தனர். துவக்கத்தில் விசாரித்த இன்ஸ்பெக்டர் உஷாராணி, வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தார்.
முதல்வரிடம் விசாரணை

நேற்று காலை தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன் சி.பி.சி.ஐ.டி., அலுவலகம் வந்தனர். அவர்களிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., விஜயகுமார், டி.எஸ்.பி., காட்வின் ஜெகதீஷ், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் மருத்துவக் கல்லுாரியில் கண்காணிப்பு கேமரா பதிவுகள், முதல்வர் அறை, மாணவர் சேர்க்கை நடந்த அறைகளை ஆய்வுசெய்தனர். பின் உதித்சூர்யா, பெற்றோரிடமும் விசாரணை நடந்தது.பின் உதித்சூர்யா, வெங்கடேசனை கைது செய்து தேனி மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வத்தின் முன் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் ஆஜர்படுத்தினர்.

'தந்தையே காரணம்'

சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது:'எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் என் தந்தையால் வந்த வினை' என உதித்சூர்யா கூறினார்.வி.ஏ.ஓ., குமரேசன் முன்னிலையில் டாக்டர் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தில், மகனை எம்.பி.பி.எஸ்., படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த தவறை செய்துவிட்டோம்' என கூறினார்.கயல்விழி, 'மகனை குறுக்கு வழியில் மருத்துவக் கல்லுாரியில் சேர்த்திருப்பது தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் தான் எனக்கு தெரிந்தது' என்றார்.

வாக்குமூலத்தின் படி உதித்சூர்யா, வெங்கடேசனை கைது செய்துள்ளோம். ஒரு பயிற்சி மையத்தினர் சென்னையைச் சேர்ந்த தரகர் வாயிலாக 20 லட்சம் ரூபாய் வாங்கி இந்த முறைகேட்டுக்கு வழிவகுத்தது தெரிந்தது. இது குறித்தும் விசாரிக்கிறோம்., என்றார்.

டி.எஸ்.பி., காட்வின் ஜெகதீஷ் கூறியதாவது:

ஒப்புதல் வாக்குமூலத்தின்படி கூட்டுச்சதி, மோசடி, ஆவணங்களை திருத்தி மோசடி ஆகிய பிரிவுகளில் இருவரையும் கைது செய்துள்ளோம். தாயார் கயல்விழியை வழக்கில் சேர்க்க வேண்டிய முகாந்திரம் இல்லை. விசாரணை முடியவில்லை. தொடர்ந்து விசாரித்து முடிவு எடுக்கப்படும். உதித்சூர்யாவுக்கு பதில் 'நீட்' தேர்வு எழுதியவரை விரைவில் கைது செய்வோம், என்றார்.

2017 - 18 முதல் ஆய்வு

இந்தாண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் விபரம் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் இதுவரை பதிவு செய்யப் படவில்லை. மாணவர்களின் பதிவு நவம்பரில் தான் நடைபெறும். இதற்கு முன்பும், முறைகேடாக மாணவர்கள் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவ கல்வி இயக்ககத்துடன் ஆலோசித்து 2017 - 18 முதல், மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுதா சேஷய்யன், துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை.

கோவை மாணவர்களிடம் விசாரணை

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.இதில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லுாரியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தர்மபுரியைச் சேர்ந்த ஒரு மாணவியின் புகைப்படம் வேறுபட்டு இருப்பது தெரிந்தது. இவர்கள் நீட் தேர்வில் முறையே 351 437 மதிப்பெண்கள்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக மாணவர் மாணவி மற்றும் அவர்களின் பெற்றோரிடமும் கல்லுாரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கையை சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்துள்ளது. 'மருத்துவ கல்வி இயக்குனர் முன் ஆஜராகி விளக்கம் அளித்து தடையில்லா சான்று பெற வேண்டும்' என இருவருக்கும் கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து இருவரும் நேற்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர். மருத்துவ கல்வி இயக்குனர் மாணவர் சேர்க்கை செயலர் ஆகியோர் அரசு பணி காரணமாக டில்லிக்கு சென்றிருந்ததால் விசாரணை நடத்தப்படவில்லை. இன்று விசாரணைக்கு வருமாறு அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்'பள்ளியில் படித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீட் தேர்வு 'ஹால் டிக்கெட்'டிற்கு கொடுத்து இருந்தோம். இதனால் புகைப்படம் வேறுபாடு உள்ளது. இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரிடம் தெரிவிப்போம்' என்றனர்.
இன்று உலக சுற்றுலா தினம் சேலத்தில் கொண்டாட்டம்

Added : செப் 27, 2019 01:10

சென்னை தமிழக சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தினம், சேலத்தில் இன்று, பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஐ.நா., சபை அறிவிப்பின்படி, 1970 முதல், செப்டம்பர், 27ல், உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் தமிழகம், ஆண்டுதோறும், சுற்றுலா தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகிறது.கடந்த ஆண்டு, மதுரையில் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு சுற்றுலா தினம், சேலத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவற்றில், உணவு திருவிழா, சுற்றுலா -கலை விழா பேரணி, சிறப்பு கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. சேலம் மாவட்ட சுற்றுலா கையேட்டை வெளியிட்டு, முதல்வர், இ.பி.எஸ்., சிறப்புரையாற்ற உள்ளார்.
துப்புரவு பணிக்கு ஆள் எடுப்பு இன்ஜி., பட்டதாரிகள் பங்கேற்பு

Added : செப் 26, 2019 23:46

சென்னை : சட்டசபை வளாகத்தில் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பொறியியல் பட்டதாரிகளும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் வந்திருந்தனர்.சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் பணிக்கு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன; 4607 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள்.மேலும் எம்.டெக். - எம்.சி.ஏ. - எம்.காம். என பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பித்தனர். வந்த விண்ணப்பங்களில் 677 நிராகரிக்கப்பட்டன; 3930 ஏற்கப்பட்டன.தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி சட்டசபை வளாகத்தில் இரு நாட்களாக நடந்து வருகிறது. தினமும் 100 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இளம்பெண்களும் உண்டு.சபாநாயகர் தனபால் சட்டசபை செயலர் சீனிவாசன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதால் துணை செயலர்கள் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.பட்டதாரி இளைஞர் ஒருவர் கூறியதாவது:இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகின்றனர். அதுவும் நிரந்தரம் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய வேண்டி உள்ளது.துப்புரவு பணி என்றாலும் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வரும்; பணியும் நிரந்தரம். இப்பணி கிடைத்தால் இதிலிருந்தபடியே வேறு பணிக்கு செல்லலாம் என்பதால் விண்ணப்பித்தேன். சான்றிதழ்களை சரிபார்த்த அதிகாரிகள் 'தேர்வு செய்யப்பட்டால் கடிதம் வரும்' என தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
சித்தா படிப்பு கவுன்சிலிங் 400 இடங்கள் ஒதுக்கீடு

Added : செப் 26, 2019 23:43

சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. முதல் நாளில் 400க்கும் மேற்பட்டோர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர்.
இந்திய முறை மருத்துவ படிப்புகளான சித்தா ஆயுர்வேதம் யுனானி ஓமியோபதி படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1038 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலில் 1455 மாணவர்கள் இடம் பெற்றனர்.கவுன்சிலிங் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நேற்று துவங்கியது. தரவரிசையில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.முதல் நாளில் சிறப்பு பிரிவினர் மற்றும் பொது பிரிவினர் என 400க்கும் மேற்பட்டோர் இடங்கள் பெற்றனர்.அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் 28ம் தேதி வரையும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் செப். 28,29ம் தேதிகளிலும் நடைபெற உள்ளன.





NEWS TODAY 09.07.2026