Friday, February 21, 2020

மதுரையுடன் அறிவித்த பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளில் ‘எம்பிபிஎஸ்’ மாணவர் சேர்க்கை தொடக்கம்: தமிழகம் புறக்கணிக்கப்பா?

மதுரை 21.02.2020

மதுரையுடன் அறிவித்த பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகள் கட்டுமானப்பணிகள் இன்னும் முடியாதநிலையிலும் இந்த ஆண்டு முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மதுரைக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் அமைகிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த மருத்துவமனை கட்டுமானப்பணி தற்போது வரை தொடங்கப்படவில்லை.

இந்த மருத்துவமனையுடன் அறிவித்த இந்தியாவின் பிற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பணிகள் நடக்கின்றன. ஆனால், தமிழகத்திற்கான மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா(JICA- Japan International Cooperation Agency) நிறுவனத்தின் நிதியுதவியுடன் பணிகள் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

‘ஜெய்கா’ நிறுவனம், தற்போது வரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஒதுக்கிய இடத்தைச் சுற்றி வேலி அமைப்பது, நான்கு வழிச்சாலையில் இருந்து சாலை வசதி அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மட்டும் மத்திய அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி, அதற்கான பணிகள் நடக்கிறது. ஆனால், ‘எய்ம்ஸ்’ கட்டுமானப்பணிக்காக நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையுடன் அறிவிக்கப்பட்ட பிற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துமவனைகள் கட்டுமானப்பணிகள் நடந்தாலும் இன்னும் மருத்துவமனை தொடங்கப்படவில்லை. ஆனால், அந்த மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்க தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் தற்காலிக கட்டிடத்தில் வைத்து மாணவர் சேர்க்கை தொடங்க உத்தரவிடப்படவில்லை.

இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை 2023-ம் ஆண்டு தொடங்கப்பட வேண்டும். அதனால், அதற்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை இப்போதே தொடங்கியிருக்க வேண்டும்.

மதுரையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மங்களகிரி மற்றும் பீபீ நகரில் அமையவுள்ள எய்ம்ஸ்க்கான மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது.

‘எய்ம்ஸ்’ மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு தற்காலிக தனி கட்டிடம் மற்றும் 300 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை இணைப்பு தேவை. அதற்கான வாய்ப்புகள் மதுரையில் அதிகம் உள்ளது. எனவே உடனடியாக மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு மாநில அரசு முன்முயற்சி எடுக்கவேண்டும்.

தமிழக முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஒரு தனி அதிகாரியை நியமித்து அடுத்த ஆண்டாவது மருத்துவ மாணவ சேர்க்கையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகமும் (NIPER) மதுரை வளர்ச்சியின் இரு கண்கள். இவை இரண்டையும் திட்டமிட்டபடி கொண்டுவர தொடந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன், ’’ என்றார்.

ஏற்கெனவே மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் நிர்வாகப்பிரிவு அலுவலகம், டெல்லியில் தொடங்கப்படும் நிலையில் நோயாளிகள் வருகை, தற்காலிக கட்டிட வசதியிருந்தும் மாணவர் சேர்க்கை தொடங்க மதுரைக்கு அனுமதி வழங்காதது, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

Medical M.Sc Welcome MCI, Health Ministry Decision On Lab Reporting, Call It Valentines Day Gift 

By Medical Dialogues Bureau

Published On 20 Feb 2020 11:00 AM 

 Shri Arjun Maitra, Secretary NMMTA said it was like Valentine's Day gift given by the ministry to the Clinical Scientist with Medical MSc /PhD community.

 New Delhi: The recent decision of the Medical Council of India (MCI) to allow clinical scientists including Medical Msc / Phd to sign technical lab reports and corresponding amendments by the health ministry has indeed created stir in the medical community. 

While doctors and pathologists have openly opposed the move, clinical scientists have now come out welcoming the move and stating that this was long-awaited 

Also Read - Stripped of specialist tag, 1700 PGDCC Doctors write to Health Minister Dr Harsh Vardhan 

 Medical Dialogues team had earlier reported that the Ministry of Health & Family Welfare in its latest gazette notification regarding Clinical Establishment (Central Government) Amendment Rules 2020 on 14/02/2020 made it official that, professionals with MSc degree in Medical Microbiology or Medical Biochemistry with three years of laboratory experience can become authorized signatory in diagnostic laboratory for tests respective to their specialization without recording any opinion or interpretation of lab results. A PhD in Medical Microbiology or Medical Biochemistry shall be required for Medium & Advanced Laboratories.

 Also Read - Attendance relaxation for pregnant, nursing women: HC asks MCI, UGC, others to respond 

 Read Also:MBBS doctors, Medical Mscs can run Basic Laboratories: Health Ministry notifies new Clinical Establishment Rules 

This notification came after the Board of Governors in supersession of MCI gave its decision regarding the role of the authorized signatory to the ministry.

 Read also : Can Medical Msc sign Lab Reports? MCI BOG gives its decision The move has been welcomed by Medical Mscs under the banner of National MSc Medical Teachers' Association (NMMTA). 

 Dr Sridhar Rao, President NMMTA welcoming this move of the ministry said, "it was indeed a long battle to win back our rights. Signing authority was snatched from us and many of our members lost jobs or demoted at workplace and faced a lot of hardships". He thanked the Board of Governors and the central Health Ministry for restoring the signatory rights by giving due consideration to the NMMTA's detailed representations. "Clinical scientists signing laboratory reports is practiced all over the world, including the US, the UK, the European Union, Middle East countries, New Zealand, Sri Lanka, Nepal etc. In fact, the West Bengal government had included the clinical scientists in its Clinical Establishments Act guidelines. 

With the Union government clearing the way, rest of the states must adopt these guidelines", he added. Shri Arjun Maitra, Secretary NMMTA said it was like Valentine's Day gift given by the ministry to the Clinical Scientist with Medical Msc/PhD community. "We were waiting for this day for long. From 2014 we were fighting for our professional dignity and the opportunity to work in the field of our specialization.

 Appropriately trained clinical scientists will compensate the acute deficiency of doctors specializing in laboratory medicines ", he said. "Since the knowledge and skills regarding the techniques used in the laboratory tests are acquired in the postgraduate course (medical M.Sc) itself and the fact that PhD doesn't confer any additional knowledge or skill in routine diagnostics, the requirement of PhD for medium and advanced laboratories may be omitted. NMMTA has always asked for the restoration of signatory authority based on the PG qualifications, with or without PhD." he added Read Also: Pathologists up against MCI decision allowing Medical Msc to sign Technical Lab reports

https://medicaldialogues.in/news/health/mci/medical-msc-welcome-mci-health-ministry-decision-on-lab-reporting-call-it-valentines-day-gift-63290

Attendance relaxation for pregnant, nursing women: HC asks MCI, UGC, others to respond

Attendance relaxation for pregnant, nursing women: HC asks MCI, UGC, others to respond: The court issued notices to the Bar Council of India (BCI), Medical Council of India (MCI) and the All India Council of Technical Education (AICTE) seeking their stands before the next date of hearing...
மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி போராட்டம்: மாணவர் கூட்டியக்கம் அறிவிப்பு



புதுச்சேரி 21.02.2020

மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் வரும் 25 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக மாணவர் கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டியக்கம் சார்பில் இந்திய மாணவர் சங்க புதுச்சேரி மாநிலத் தலைவர் ஜெயபிரகாஷ், திமுக மாணவரணி அமைப்பாளர் மணிமாறன், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன், ஏஐஎஸ்எப் துணைத் தலைவர் முரளி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்தன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 225 சதவீதக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் குறைக்க வேண்டும். புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை அனைத்து பாடப்பிரிவுகளிலும் வழங்க வேண்டும். புதுவை மாணவர்களுக்கு 20 ஆண்டுகளாக இயக்கப்பட்ட இலவசப் பேருந்து சேவையை ரத்து செய்யக் கூடாது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவை இன்று 15-வது நாளாகப் போராடி வருகிறது.

இந்நிலையில் கட்டணத்தைக் குறைக்க நிர்வாகம் தரப்பில் போராடி வரும் மாணவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு நிதி நெருக்கடி காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் உயர்த்திய கல்விக் கட்டண உயர்வை நியாயப்படுத்தியுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

தற்போது நாடு முழுவதும் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகங்களில் மிக அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது புதுச்சேரி பல்கலைக்கழகம் மட்டுமே. குறிப்பாக, திருவாரூரில் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்கள் உயர் கல்வி வாய்ப்பை வழங்க இலவசப் பேருந்து வசதி ஏற்படுத்தியுள்ளது.

பிற பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது.

எனவே, புதுச்சேரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாத்திடக் கோரி அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டியக்கம் சார்பில் வரும் 25-ம் தேதி லாஸ்பேட்டை நேதாஜி சிலை அருகில் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்''.

இவ்வாறு மாணவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

விபத்துக்கு காரணம் டிரைவர் மட்டுமா?

Added : பிப் 20, 2020 21:53

நள்ளிரவு தாண்டி, அதிகாலை வரையிலான நேரம், டிரைவர்களை அசதிக்குள்ளாக்கும் தருணம். இதனால், தன்னையறியாமல் டிரைவர் துாங்கி விடுவதுண்டு. இதனால், சுங்கச்சாவடி அல்லது உகந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி, ஓய்வெடுத்து, டீ உள்ளிட்ட பானங்களை அருந்தி, சோர்வு நீங்கிய பின், வாகனங்களை மீண்டும் இயக்க வேண்டும் என, டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இதை, டிரைவர்களும் பின்பற்றுவதில்லை; வாகன உரிமையாளர்களும் அறிவுறுத்துவதில்லை.நேற்று கோர விபத்து நேர்ந்தபோது, நேரம், அதிகாலை, 3:30 மணி. உயிர்களைப் பலிவாங்கிய கன்டெய்னர் லாரி, கொச்சியில் இருந்து புறப்பட்டிருக்கிறது. பெங்களூருவுக்கு வேகமாகச் செல்லும் எண்ணத்தில், கன்டெய்னர் லாரி டிரைவர் ஹேமராஜ் ஓய்வின்றி இயக்கியுள்ளார்.விபத்துக்கு காரணமான டிரைவர் மீது, விபத்து என்று, சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

டிரைவர் மட்டுமல்லாது, கன்டெய்னர் லாரியின் உரிமையாளர் மீதும், வழக்கு பாய வேண்டும். அப்போது தான், எதிர்காலத்தில், இது போன்ற கோர விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
விடைத்தாளில் ரூ.100 'ஐடியா' தந்த தலைமை ஆசிரியர் கைது

Updated : பிப் 21, 2020 01:48 | Added : பிப் 20, 2020 20:35

லக்னோ : உத்தர பிரதேசத்தில், 'விடைத்தாளுடன், 100 ரூபாய் வைத்து தந்தால், தேர்வில் வெற்றி பெறலாம்' என, மாணவர்களிடம் கூறிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, நேற்று முன்தினம் முதல், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதற்கு முன், மாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர், பிரவீன் மால் என்பவர், மாணவர்கள், பெற்றோர் கூட்டத்தில் பேசியுள்ளார். மொபைல் போன்அதன் விபரம்:நம் பள்ளி மாணவர்கள் யாரும் தேர்வில் தோல்வி அடைய மாட்டார்கள் என்பதை சவாலாக கூறுகிறேன்.

தேர்வில் ஒருவருக்கொருவர், தொடாமல் பேசி, விடைகளை எழுதுங்கள். விடைத்தாளை திரும்பக் கொடுக்கும் போது, அதில், 100 ரூபாய் நோட்டை இணைத்து கொடுங்கள். உங்கள் விடைத்தாளை திருத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள், கண்ணை மூடிக் கொண்டு மதிப்பெண் போட்டு விடுவர். அவர்கள் அனைவரையும் எனக்கு தெரியும். நீங்கள் விடையை தவறாக எழுதினாலும், நான்கிற்கு, மூன்று மார்க் கொடுத்து விடுவர்;பயப்படாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 'அட இது நல்ல, 'ஐடியா' வாக உள்ளதே' என, மாணவர்கள் கிசுகிசுத்தாலும், சிலர், தலைமை ஆசிரியரின் பேச்சை, மொபைல் போனில் ரகசியமாக படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ஒரு மாணவன், யோகி ஆதித்யநாத் அலுவலக வலைதளத்தில், குறை தீர்ப்பு பிரிவில், இந்த 'வீடியோ'வை பதிவேற்றினான். கண்காணிப்பு கேமராஅதை கண்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் அலுவலக அதிகாரிகளின் உத்தரவின் படி, போலீசார், பிரவீன் மாலை கைது செய்தனர். உ.பி., அரசு, தேர்வு முறைகேடுகளை தடுக்க, 7,784 தேர்வு மையங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்திஉள்ளது. தேர்வின் போது, அதிரடி சோதனை நடத்த, இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Apollo docs conduct cartilage procedure on elderly woman

Doctors at Apollo Hospital performed one-step minced cartilage procedure on a 69-year-old American woman, recently.

Published: 21st February 2020 06:55 AM 

By Express News Service

CHENNAI: Doctors at Apollo Hospital performed one-step minced cartilage procedure on a 69-year-old American woman, recently. According to a release, “Sarah Hasseler, who works as a teacher in an international school in Chennai, was diagnosed with grade 3 osteoarthritis. In this procedure, a portion of healthy cartilage from the same knee is transplanted through a keyhole incision along with a bioactive material, to the damaged portion of the cartilage.”

NEWS TODAY 25.05.2026