Tuesday, March 17, 2020


ரோபோக்களை உருவாக்குவது கல்விக்கூடங்களின் வேலை அல்ல!



Published : 17 Mar 2020 07:35 am


சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதம் பார்த்தேன். ஒரு சேவை நிறுவனத்தின் பிரதிநிதி தங்கள் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதை எதிர்த்தார். “பன்னாட்டுச் சந்தைகளில் அவர்கள் நிறுவனம் போட்டியிட செயல்திறன் மிக்க ஊழியர்களே தேவை. சலுகை எனும் பெயரில் செயல்திறன் குறைவான ஊழியர்களை நியமிப்பதானது அவர்களுடைய நிறுவனத்தின் போட்டியிடும் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிடும். நீண்ட காலத்தில் அது நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்” என வாதிட்டார். சந்தைப் பொருளாதாரத் தூய்மைவாதம் இது.

தமிழகத்தின் மலைப்பகுதி ஒன்றில் ஒரு மருத்துவத் தம்பதியினர் வசித்துவருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் மருத்துவத் தொழிலில் பெருவெற்றி ஈட்டியவர்கள். அவர்களுக்குப் பிறந்த ஒரு பெண் குழந்தை மனவளர்ச்சி குன்றியவர். அந்தக் குழந்தையின் எதிர்காலம் கருதி அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். அந்த ஊர் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து, மலைவாழ் மக்களுக்கான மிக நவீன மருத்துவமனையை உருவாக்கியுள்ளார்கள்.


இன்று அந்த மழைவாழ் மக்கள் மருத்துவமனையானது இதர மக்களுக்கும் இலவச மருத்துவ சேவையை வாரம் ஒரு நாள் வழங்கிவருகிறது. தூய்மைவாதச் சந்தைப் பொருளியல் பார்வையில் மனவளர்ச்சி குன்றிய அந்தப் பெண் குழந்தை, போட்டியில் பங்குபெறத் தகுதி இல்லாதவர். ஆனால், மலைவாழ் மக்கள் நலன் எனும் பார்வையில் அவர்களுக்கான நவீன வாழ்க்கை உருவாகக் காரணமாக இருந்த கடவுள்!

எழுதப்படிக்கத் தெரியாத மருத்துவச்சிகள்

மராத்தியத்தின் தண்டகாரண்ய வனத்தில் உள்ளது கட்சிரோலி. அங்குள்ள காந்திய மருத்துவத் தம்பதியினர் அபய் பங், ராணி பங் இருவரும் ‘சர்ச் (SEARCH)’ எனும் நிறுவனத்தை மலைவாழ் மக்களுக்காக நடத்திவருகிறார்கள். அவர்கள் கிராமங்களில் இருக்கும் எழுதப்படிக்கத் தெரியாத மருத்துவச்சிகளுக்குப் பயிற்சியளிக்கிறார்கள்; அதன் மூலம், கர்ப்பிணிகளின் வீடுகளுக்குச் சென்று கர்ப்ப காலம், பிரசவம், குழந்தைகளுக்கான சிகிச்சைகளை அதிகத் தரம்வாய்ந்த வகையில் அளிக்கும்படி ஒரு சேவையை உருவாக்கியுள்ளார்கள். அந்தப் பகுதியின் குழந்தைகள் இறப்பு வீதம் இதனால் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் உயர்தர மருத்துவமனையான டெல்லி அகில இந்திய மருத்துவக் கல்லூரியின் தலைவர் அந்த மருத்துவச்சிகளின் திறனைப் பரிசோதித்தார். ‘கட்சிரோலியின் இந்தப் பெண் மருத்துவச்சிகள், எங்கள் கல்லூரியின் குழந்தைநல நிபுணர்களைவிட இந்த நோய்களை அறிவதில், சிகிச்சை அளிப்பதில், திறன் வாய்ந்தவர்கள்’ எனப் பாராட்டினார் அவர். அபய் பங், ராணி பங் உருவாக்கிய இந்த முறை, கடந்த 180 ஆண்டுகளில் உலகத்தில் பொதுச் சுகாதாரத் துறையின் முக்கியமான முன்னெடுப்புகளுள் ஒன்று என உலகப் புகழ்பெற்ற சுகாதார இதழான ‘லான்செட்’ பாராட்டியுள்ளது. இன்று இந்த முன்னெடுப்பை இந்தியாவும் பல உலக நாடுகளும் பின்பற்றுகின்றன.

இந்தியாவில் எய்ம்ஸ், ஜிப்மர், சிஎம்சி எனப் பல உயர்நிலை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகள் மிகக் கடினமானவை. இவற்றின் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத மாணவர்கள் பல ஆண்டுகள் பெரும் செலவுசெய்து பயிற்சி எடுத்துப் போட்டியிடுகிறார்கள். பெரும்பாலும் நகர்ப்புறம் சார்ந்த, மத்திய/மேல்வர்க்க மாணவர்களே இவற்றில் தேர்ச்சி பெறுகிறார்கள். அதேசமயத்தில், தமிழகம் போன்ற மாநிலங்களில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுமுறைகளானது ஓரளவு சீரான, நேர்மையான வகையில் அனைத்து மாணவர்களும் உள்ளே எளிதாக நுழையும்வண்ணம் சில ஆண்டுகள் முன்புவரை இருந்தன. இதுபோன்ற கொள்கைகளின் நேர்மறை விளைவாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் சமூக அடுக்குகளிலுமிருந்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் உருவானார்கள். அதன் மூலம் தமிழகச் சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவாக அமைந்ததைப் பல்வேறு ஆராய்ச்சிகள் சுட்டுகின்றன. தமிழகத்தில் பொறியியல் கல்வி பரவலானபோது கல்லூரி நுழைதல் இலகுவாகி, பல லட்சம் மாணவர்கள் பொறியியல் பயின்றார்கள். விளைவாக, மென்பொருள் துறை பெருவளர்ச்சி கண்டது. நம்முடைய பொறியியல் வல்லுநர்கள் இப்போது உலகெங்கும் பரவியிருக்கிறார்கள்.

நுழைய முடியாத் தேர்வுமுறை

இந்தியாவின் மத்திய, மேல்வர்க்க, சாதி அடுக்குகளில் மிகக் கடுமையான நுழைவுத் தேர்வுகளை எழுதித் தேர்வு பெறுதலே தகுதியின் ஒரே அடையாளம் எனும் கருத்தாக்கம் மிக வலுவாக வேரூன்றியுள்ளது. இந்தியாவில் 50-60% ஏழை, கீழ்த்தட்டு மக்கள் வசிக்கிறார்கள். இன்னும் கல்லூரி செல்லாத கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவற்றில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் சூழலின் காரணமாகவே இதுபோன்ற நுழைவுத் தேர்வுச் சுமைகளை எதிர்கொள்ளும் திறனின்றி இருக்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வுகள் மாணவரின் உள்ளார்ந்த புத்திசாலித்தனத்தையும் இயல்பான ஆர்வத்தையும் அளப்பவையாக இல்லாமல், சில ஆண்டு பயிற்சிகளின் விளைவை அளப்பவையாக உள்ளன. இதன் விளைவாக, கழிப்பறைகூட இல்லாத, ஒரு அறை கிராமத்து வீட்டில் வசிக்கும் அனிதாவும், அனைத்து வசதிகளும் பயிற்சி நிலையங்களும் கொண்ட நகரத்து மாணவியும் ஒரே தேர்வை எழுத நேர்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களாகிய ஐஐடிக்கள் ஐஐஎம்களில் பயின்ற பட்டதாரிகள், இந்தியாவின் மிகச் சிறந்த தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் பணிபுரிந்துவருகிறார்கள். தலைவர்களாகவும் உள்ளார்கள். அவற்றுக்குச் சற்றும் குறையாத வெற்றிகரமான சமூகநலன் நாடும் அமுல், கதர் வாரியம் போன்ற நிறுவனங்களில் சாதாரணக் கல்வி நிறுவனங்களில் பயின்ற மனிதர்கள் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்துவருகிறார்கள். இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற மருத்துவர்கள் பணியாற்றும் எந்தத் தனியார் மருத்துவமனையையும்விட சாதாரண மருத்துவர்களும், உள்ளூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் செவிலியரும் கொண்ட அர்விந்த் மருத்துவமனை, அதிக மக்களுக்குப் பயனுள்ளதாகவும் அதிக லாபகரமானதாகவும் விளங்கிவருகிறது.

செயல்திறனா, பயன்திறனா?

இந்தியா உலகின் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நாடு. சராசரி வளம் (ஒவ்வொரு மனிதருக்கும்) குறைவான நாடு. எனவே, இந்தியாவின் கல்விமுறைகளும் நிறுவனங்களும் தனிமனிதச் செயல்திறனை ஊக்குவிப்பதைவிட சமூகத்துக்கான பயன்திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைதலே முன்னேற்றத்தை ஜனநாயகப்படுத்தும். அந்த வகையான நிறுவனங்களே பெரும்பான்மை மக்களுக்கான சேவைகளை, பொருட்களைக் கட்டுப்படியாகும் வகையில் உற்பத்திசெய்து சந்தைப்படுத்தும். அதேசமயத்தில், தனிமனித முனைப்புகளானது மனித இனத்தின் மிகப் பெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளைப் படைத்துள்ளதும் நம் கண் முன்னே உள்ள வரலாறு. அதைப் புறந்தள்ளிவிட முடியாது. எனவே, இந்தியாவின் பெரும்பான்மை நிறுவனங்கள் மக்களுக்கானவையாக அமைக்கப்பட வேண்டிய சமயத்தில், தனிமனிதச் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அமைகிற உயர்நிலை நிறுவனங்களும் தேவை.

ஆனால், எல்லா நிறுவனங்களையும் ஒன்றுபோல ஆக்குதலும், எல்லாக் கல்வி நிலையங்களுக்கும் ஒரே வகையான நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவருதலும் முறையாகாது. அது ஏற்கெனவே உயர் அடுக்கில் இருக்கும் சமூகங்களின், மாநிலங்களின் நிலையை மேலும் வலுப்படுத்தி மிகப் பெரும் சமநிலையின்மையை உருவாக்கும். இது பெரும் அதிகாரம் கொண்ட மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களையே உருவாக்கும். அவை நிச்சயமாக ஊரக, ஏழைச் சமூகங்களின் நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கும்.

- பாலசுப்ரமணியம் முத்துசாமி,

‘இன்றைய காந்திகள்’ நூலாசிரியர்.

தொடர்புக்கு: arunbala9866@gmail.com


மறுக்காதீா்கள், மறைக்காதீா்கள், பரப்பாதீா்கள்! | கரோனா உண்மை குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 17th March 2020 03:41 AM 

சா்வதேச அளவிலான நோய்த்தொற்றாக கரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் தேசிய அவசர நிலையை அறிவித்திருக்கிறாா். இந்தியாவிலும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று இப்போது 143 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. உலக அளவில் இதனால் பாதிக்கப்பட்ட 1,74,777 பேரில், 77,773 போ் முழுமையாகக் குணப்படுத்தப்பட்டிருக்கிறாா்கள். நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,685. மிக அதிகமான உயிரிழப்பு சீனாவிலும் அடுத்தபடியாக இத்தாலியிலும் ஏற்பட்டிருக்கின்றன. ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அமெரிக்காவும் தென்கொரியாவும் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.

ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அந்த அளவிலான பாதிப்பு இல்லாவிட்டாலும்கூட, கரோனா வைரஸ் என்கிற நோய்த்தொற்று இங்கேயும் நுழைந்துவிட்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நேற்றைய நிலவரப்படி 114 போ் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறாா்கள். இரண்டு போ் உயிரிழந்திருக்கிறாா்கள். தமிழகத்திலும் கரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் 22 போ் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நோய்த் தாக்கம் பரவாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும் பொது இடங்களில் கூடுவதையும் தவிா்க்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

சா்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்த்தொற்று எனும்போது இதற்கு முன்னால் மனித இனம் எதிா்கொண்ட பிளேக், ஸ்பானிஷ் காய்ச்சல் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல் 10 கோடி உயிா்களைப் பலி கொண்டது. 2009-இல் அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சலில் உயிரிழந்தோா் 2 லட்சத்துக்கும் அதிகம்.

அவற்றில் இருந்தெல்லாம் உலகம் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறது என்பதுடன், மருத்துவ அறிவியல் வளா்ச்சியும், மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடும் நோய்த்தொற்றுகளை எதிா்கொள்ள முன்பைவிடத் தயாராகவே இருக்கின்றன. அதே நேரத்தில், எச்சரிக்கையாகவும் தயாா் நிலையிலும் இருந்தாக வேண்டிய கட்டாயமும் கடமையும் நமக்கு உண்டு.

கரோனா நோய்த்தொற்று என்பது நிஜம். அதை சட்டை செய்யாமல் இருப்பதோ, அது குறித்துக் கவலைப்படாமல் இருப்பதோ பேதைமை. போதிய தற்காப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், கூடியவரை நோய்த்தொற்றை வலிய வருவித்துக் கொள்ளாமலும், நம்மைச் சுற்றியுள்ளவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமலும் இருப்பது பொறுப்பின்மை என்பதை அனைவரும் உணர வேண்டும். சில மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வணிக உத்திக்காகக் கையாளும் தந்திரம்தான் கரோனா நோய்த்தொற்று பீதி என்றும், உலகின் மீது சீனா தொடுக்கும் ஒருவித மறைமுக யுத்தம் என்றும் விதண்டாவாதம் பேசுவதைத் தயவுசெய்து தவிா்ப்பது மட்டுமல்லாமல், தடுக்கவும் வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று சா்வதேச அளவில் பரவியதற்கு இதுகுறித்த ஆரம்பக்கட்ட தகவல்களை சீனாவின் அடக்குமுறை அரசு மறைத்ததுதான் மிக முக்கியமான காரணம். வூஹான் நகராட்சியின் வெளிப்படைத்தன்மை இல்லாத நிா்வாகம் இதுகுறித்த தகவல்களை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்ததால், தொடக்கத்திலேயே இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.

சீன அரசுக்கு எதிராகப் பரவலான ஆத்திரம் காணப்படுகிறது. இது குறித்த தகவலை பொது வெளியில் கொண்டுவந்த லீ வென்லியாங் என்பவா் வாயடைக்கப்பட்டாா். அவா் நோய்த்தொற்றால் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகக் கூறப்படுவதுகூட உண்மையான தகவலா அல்லது தனது பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகச் சீன அரசு மேற்கொள்ளும் தகவல் மறைப்பா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், பொதுமக்களிடமிருந்து உண்மை நிலையை மறைக்கக் கூடாது என்பது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை, அரசு மருத்துவ ஊழியா்களின், மருத்துவா்களின் வாயை அடைத்து வெளிப்படைத் தன்மையில்லாத நிலையை ஏற்படுத்தியிருப்பது தவறு. அது தேவையில்லாத ஊகங்களுக்கும் கற்பனைகளுக்கும் வதந்திகளுக்கும் இடமளிக்கக் கூடும் என்பதை உணர வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று விலங்குகளாலும், உணவுப் பழக்கத்தாலும், காற்றின் மூலமும் தண்ணீரின் மூலமும், கை குலுக்கல் போன்ற நேரடித் தொடா்பின் மூலமும், சா்வதேசப் பயணங்கள் மூலமும் பரவுவதைவிட மிக அதிகமாக வதந்திகள் மூலம் பரவுகிறது என்று தோன்றுகிறது. நமது காட்சி ஊடகங்களும், கட்செவி அஞ்சல் பரிமாற்றங்களும் பல தவறான, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. நிரூபிக்கப்படாத சிகிச்சை முறைகளையும் நோய்த்தொற்றுத் தடுப்புக்கான வழிமுறைகளையும் வெளியிட்டு வருகின்றன. ஆதாரமாற்ற தகவல்களை மீள்பதிவு செய்து பரப்புவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.



'மாதா, பிதா, கூகுள், தெய்வம்!'

Added : மார் 17, 2020 02:37

இன்றைய இளசுகள், தொழில்நுட்பத்தில் கெட்டி என்று நான் எழுதியதை படித்து விட்டு, சில பெரியவர்கள், என்னிடம் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவித்தனர். 'இவர்களுக்கு பெரிய அறிவியல் அறிவெல்லாம் கிடையாது; மொபைல் போன் வைத்து நோண்டிக் கொண்டிருந்தால், பெரிய அறிவாளி என்று அர்த்தமா...' என்று செல்லமாக சண்டை போட்டார், ஒரு தகப்பனார்.என் கருத்தை விளக்கினேன். 'பிறக்கையிலேயே, இவர்களுக்கு எல்லா மின்னணு கருவிகளும் அறிமுகமாகி விடுவதால், இவர்கள் எல்லோரும், Gadget freeks. இதை தனித்திறன் என்பதை விட, இந்த சந்ததியின் சர்வ சாதாரண இயல்பு என்று தான் சொன்னேன்' என்றேன்.

தொழில்நுட்பம் புகுந்த வாழ்க்கை, இன்று வயது வித்தியாசமின்றி, எல்லோரையும் பாதித்து வருகிறது என்பது தான் உண்மை. இன்று, 'டிவி' தனியாக ஓடிக்கொண்டிருக்க, வீட்டிலுள்ள அனைவரும் மூன்று மூலைகளில் உட்கார்ந்து கொண்டு, மொபைலைப் பார்த்துக் கொண்டிருப்பது தான், பலர் வீடுகளில் நடக்கிறது. ஆனால், எல்லா வயதினரையும் விட, அதிக பாதிப்பு, 20களுக்குத் தான்.திரையைப் பார்க்கும் நேரம், இன்று மனித முகங்களை பார்க்கும் நேரத்தை விட, பன் மடங்கு அதிகமாகி விட்டது. 'ஆன்லைன்' தான் இன்று சமூகக்கூடம், கல்விக்கூடம், பணியிடம், ஆடுகளம், கேளிக்கை தளம், காதல் அரங்கம் எல்லாம்.

இதனால், இன்று நம் வாழ்வின் தவிர்க்க இயலாத அங்கமாக மாறிவிட்டது கைப்பேசி. தட்டையான திரையைப் பார்த்து பார்த்து, நம் வாழ்வும் மழுங்கடிப்பட்டு, தட்டையாக மாறி வருவதை கவனிக்கத் தவறுகிறோம். 35 வயதை கடந்தவர்களுக்கு கைபேசி இல்லாத ஒரு காலம் தெரியும்; அதனால் பெற்றது என்ன, இழந்தது என்ன என்று ஒப்பிட முடியும். 20களுக்கு அந்த கற்றல் கிடைக்க வாய்ப்பேயில்லை.

எப்படி அறிவுரை சொல்வது?

மனிதர்கள், சக மனிதர்களோடும், விலங்குகளோடும் இயற்கையோடும் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கை ஒன்று இருந்தது. அதை, எப்படி இப்போது இந்த, 20களுக்கு புரிய வைப்பது? இதற்கு அவர்களை குறை சொல்வதில் எந்த நியாயமுமில்லை. இந்த இயந்திரம் சூழ் வாழ்க்கைக்கு பெரும் காரணம், இப்போது வாழும், 40களும், 60களும் தானே! ஆனால், தொழில்நுட்பம் வரமா, சாபமா என்று விவாதித்தால், யாராலும் ஒரு பட்சமாய் தீர்ப்பு சொல்ல இயலாது.நமக்கு பழக்கம் இல்லாத ஒரு உலகிற்கு நாம் தள்ளப்பட்டது போல உணர்கிறோம். எல்லாம் தெரிந்த ஆசிரியர் என்ற மதிப்பு போய் விட்டது. எல்லாம் தெரிந்த, 'கூகுள்' நம் கையில் உள்ளதாக நினைக்கிறோம். ஒரு மாணவன் வேடிக்கையாகச் சொன்னான்: 'மாதா, பிதா, கூகுள், தெய்வம்!'என்று. செயற்கை அறிவு, படு மலிவாய் நம் உள்ளங்கையில் கிடைக்கையில், நாம் அறிவு சேர்க்க அனுபவம் தேவையில்லை என்று, அவசரப்பட்டு முடிவு செய்து விடுகின்றனர்.எல்லாம் தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் சந்ததிக்கு எப்படி அறிவுரை சொல்வது? பெற்றோரின் அதிகாரமும், ஆசிரியர்களின் கட்டுப்பாடும் மிக விரைவில் தோற்றுப் போய் விடுகின்றன. படுக்கையில் விழுகையில் மட்டும், மருத்துவர்கள் சொல் கேட்கின்றனர்.

'சரி, எப்படியோ போகட்டும்!' என்றும் மூத்தவர்களால் போக முடியவில்லை. முதல் முக்கிய காரணம் உடல் மற்றும் மன நலக்கேடு. இரண்டாவது உறவுப் பிரச்னைகள். ஆரோக்கியம் இன்று இவர்களின் மிகப்பெரிய சவால். இதைப் பற்றி புதிதாக உங்களுக்கு சொல்ல ஏதுமில்லை. உணவு, உறக்கம், ஓய்வு, உடற்பயிற்சி என, ஒவ்வொரு விஷயத்திலும் இவர்களுக்கு பிரச்னை. மன நலப் பிரச்னைகளும் இன்று பெருகி விட்டன. பள்ளிக் குழந்தைகள், 'டிப்ரஷனுக்கு' மருந்து எடுப்பது என்பது, சென்ற தலைமுறை அறியாதது.போதை மனித முகங்கங்கள்கைப்பேசித் திரை, மடி கணினித் திரை, தொலைக்காட்சித் திரை என, குறைந்தபட்சம் மூன்று திரைகளில், ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரத்திற்கு மேல் பார்த்தால், அதுவும் போதை போல நம்மை ஆட்கொள்ளும். Electronic Screen Syndrome இன்று பரவி வருவதாக, மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

என்ன போதை இது?

எதைச் செய்தாலும் அதில் லயிக்காமல், உடனே ஏதோ ஒரு திரையை திறந்து அதை காணுவது. இன்று, வாகனம் ஓட்டுபவர்கள் ஒரு சின்ன இடைவெளி கிடைத்தாலும், உடனே செய்தி தட்டுகின்றனர் அல்லது கைப்பேசியில் படம் பார்க்கின்றனர். இந்த போதை மனித முகங்களை காட்டிலும், திரையை நோக்கச் செய்யும். உறவுகளில் குழப்பம் வர இது போதாதா?இருபதுகள் நம்மை விட அறிவாளிகள் தான்; சந்தேகமே இல்லை. ஆனால், வாழ்வு முறை இடர்பாடுகள் நிறைந்த அவர்கள் வாழ்க்கையில், உணர்வு சிக்கல்களும், உறவு சிக்கல்களும் ஏராளம் உள்ளன. அதை அவர்கள் அறிந்தாலும், பல நேரங்களில் தேவைப்படும் காலத்தில் அவர்களுக்கு உதவி கிடைப்பதில்லை.

முத்திரை குத்தாமல், குற்றம் சொல்லாமல், அறிவுரை சொல்லிக் கொள்ளாமல், நாம் அவர்களுக்கு உதவ வேண்டிய இடத்தில் நிற்கிறோம். அது நம் கடமையும் கூட!
அண்ணா பல்கலை தேர்வு அறிவிப்பு

Added : மார் 17, 2020 00:39

சென்னை;அண்ணா பல்கலையின், செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை மற்றும் அதன் சென்னை வளாகத்தில் உள்ள கல்லுாரிகளுக்கு, பல்கலையின் கூடுதல் தேர்வு துறை இயக்குனரகம் சார்பாக, செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மற்ற இணைப்பு கல்லுாரிகளுக்கும், உறுப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின், தேர்வு துறை இயக்குனரகம் சார்பில், செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளுக்கு, அந்தந்த கல்லுாரிகளே, தேர்வை நடத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும், முதலாம் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவ தேர்வு, ஏப்ரல், மே மாதங்களிலும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான, இரண்டாம் பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான, இரண்டாம் பருவ தேர்வு, ஏப்., 18ல் துவங்கி, மே, 21 வரை நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. பாடத்திட்டம் மற்றும் மண்டல கல்லுாரிகளுக்கான தேர்வு விபரங்கள், அண்ணா பல்கலையின், www.annauniv.edu என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
காத்திருப்பு இல்லாமல் நேரடி தரிசனம் இன்று முதல் திருமலையில் அறிமுகம்

Added : மார் 17, 2020 00:01

திருப்பதி:திருமலையில், இன்று முதல், காத்திருப்பு அறையில் காத்திருக்காமல், நேரடி தரிசனத்திற்கு பக்தர்களை தேவஸ்தானம் அனுமதிக்க உள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதால், திருமலையில் பக்தர்கள், ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, தேவஸ்தானம் எடுத்து வருகிறது. திருப்பதியில் உள்ள, அலிபிரி சோதனை சாவடி மற்றும் நடைபாதை மார்க்கங்களில், சுகாதார பணியாளர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்கள், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, கிருமிநாசினி மருந்துகளால், அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், காத்திருப்பு அறையில், பக்தர்கள் பல மணி நேரம் கூடுவதால், ஒருவருக்கு ஏற்படும் தொற்று, மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது.இதனால், இன்று முதல், 31ம் தேதி வரை, ஏழுமலையானின் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே, பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தர்மதரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தர்ம தரிசன நேரடி ஒதுக்கீடு, 300 ரூபாய் விரைவு தரிசனம், திவ்யதரிசனம் உள்ளிட்ட நேரடி ஒதுக்கீடு தரிசனத்தில் மட்டுமே, பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு நேரடி ஒதுக்கீடு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல வேண்டும். திருமலையில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகம், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு, இலவச பரிசோதனை செய்து கொள்ள விரும்பும் பக்தர்கள், 0877-2263447 என்ற, எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும், ஆர்ஜித சேவைகளான, விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகளை, வரும், 31ம் தேதி வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.இதனால், இந்த டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்த பக்தர்கள், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, அதற்கு பதிலாக, வி.ஐ.பி., 'பிரேக்' தரிசன அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.2000 நோட்டு அச்சடிப்பை கைவிடவில்லை: மத்திய அரசு

Updated : மார் 17, 2020 05:03 | Added : மார் 17, 2020 04:58

புதுடில்லி: ரூ.2000 நோட்டு அச்சடிப்பை கைவிடவில்லை என பார்லி.,யில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் லோக்சபாவில் பேசியதாவது: நடப்பு, 2019 - 20ம் நிதியாண்டில், 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்க, 'ஆர்டர்' வழங்கவில்லை. அதேசமயம், அச்சடிப்பதை கைவிடும் முடிவும் எடுக்கப்படவில்லை. பொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகியவை மட்டுமே, அவற்றின் 'ஏ.டி.எம்.,'களில், 2,000 ரூபாய்க்கு பதிலாக, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வைக்க உத்தரவிட்டுள்ளன. அதுகூட, மக்களின் நன்மைக்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 7.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், 5.49 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது. கரன்சி கருவூலத்தில், 0.93 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆலோசித்து, ரூபாய் நோட்டு அச்சடிப்பு குறித்து முடிவு செய்கின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.
KNRUHS Announces Holidays At Its Medical Colleges Due To Coronavirus Outbreak 

By MD BureauPublished On 16 March 2020 10:00 AM | 

Hyderabad: In the wake of ongoing coronavirus (COVID 19) outbreak, the Kaloji Narayana Rao University of Health Sciences, Warangal, (KNRUHS) has declared holidays at its affiliated medical colleges. The Telangana State Government had ordered all institutes to declare holidays in view of precautionary measures to prevent spreading of COVID-19-Virus. 

The notice informing about the effect clearly states: 

"Consequent on orders of Government of Telangana vide reference cited above, Kaloji Narayana Rao University of Health Sciences, Warangal, hereby declares holidays to affiliated colleges from today to 31.03.2020 as a precautionary measure to prevent spreading of COVID-19. Students are strictly advised to avoid public/social gatherings and avoid travel as a precautionary measure." The holidays are not applicable to 

• Faculty and Office Staff of all Colleges 

• Interns and Postgraduate students in all faculties such as Medical, Dental, AYUSH, etc. 

• Interns and Postgraduate students of Nursing and Allied Health Courses working in Hospitals. 

All the principals and superintendents of the institutions must ensure that necessary preventive measures/safety measures are provided for the faculty and interns and PG's on hospital duty. Advertisement It is also informed that university examinations, notified already, will be conducted as per the schedule.

NEWS TODAY 10.06.2026