Friday, March 20, 2020

சேலம், நாமக்கல்லில் சதம் அடித்த வெயில்

Added : மார் 20, 2020 01:24

சென்னை : திருத்தணி, சேலம், நாமக்கல் நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு, நேற்று வெயில் கொளுத்தியது. நாளை முதல், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, திருத்தணி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. சென்னை, நுங்கம்பாக்கம், 34; விமான நிலையம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. கோவை, தர்மபுரி, கரூர் பரமத்தி, மதுரை, திருச்சி, வேலுார், 37; தொண்டி, 36; பாளையங்கோட்டை, 35; பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, 34; கடலுார், காரைக்கால், பாம்பன், துாத்துக்குடி, 33; கன்னியாகுமரி, நாகை, 32; வால்பாறை, 30 குன்னுார், 25; ஊட்டி, 24; கொடைக்கானல், 20 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

இன்றைய வானிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயில் நீடிக்கும்; பெரும்பாலான இடங்களில், வறண்ட வானிலை நிலவும். நாளை முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில், காற்றின் திசை மாறுபடுவதால், திடீர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பில் இருப்போர்

Added : மார் 19, 2020 23:04

சென்னை 1,135காஞ்சிபுரம் 132செங்கல்பட்டு 177திருவள்ளூர் 92வேலுார் 96ராணிபேட்டை 5திருப்பத்துார் 4திருவண்ணாமலை 39கடலுார் 105விழுப்புரம் 49கள்ளக்குறிச்சி 5சேலம் 62நாமக்கல் 48தர்மபுரி 6கிருஷ்ணகிரி 10ஈரோடு 30கோவை 189திருப்பூர் 30நீலகிரி 5திருச்சி 149அரியலுார் 18பெரம்பலுார் 10கரூர் 11தஞ்சாவூர் 186நாகப்பட்டினம் 81திருவாரூர் 76புதுக்கோட்டை 113மதுரை 76திண்டுக்கல் 20தேனி 30ராமநாதபுரம் 87சிவகங்கை 104விருதுநகர் 54திருநெல்வேலி 71தென்காசி 7துாத்துக்குடி 77கன்னியாகுமரி 92மொத்தம் 3,481

சிண்டிகேட் கூட்டம் ரத்து

Added : மார் 19, 2020 22:54

மதுரை :சென்னையில் மார்ச் 24 ல் நடக்க இருந்த மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் கூட்டம் கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில் "சென்னையில் நடக்க இருந்த கூட்டத்திற்கு பதில், தீர்மானங்கள் தபால் மூலம் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பதில் பெறப்படும்" என்றார்.

22ம் தேதி ஊரடங்கு! காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

Updated : மார் 20, 2020 00:55 | Added : மார் 19, 2020 23:12 

புதுடில்லி:தொற்று நோயாகிய, 'கொரோனா' வைரஸ் என்ற, 'மஹா மாரி'யை விரட்ட, வரும், 22ம் தேதி, நாடு முழுவதும், 'மக்கள் ஊரடங்கு' நடத்த, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ''அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,'' என, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நேற்று, 'டிவி' மற்றும் வானொலி வழியாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடுகிறது. இது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. இந்தியா, மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது.

மார்ச் 22 மக்கள் ஊரடங்கு; வெளியே வராதீர் மோடி வேண்டுகோள்

கவலை

நாட்டின், 130 கோடி மக்களும், கொரோனா குறித்தே பேசுகின்றனர். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களை காட்டிலும் கொடிய பாதிப்புகளை, கொரோனா ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு இந்தியரும், இந்த ஆபத்தான சூழ்நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டும். அடுத்து வரும் சில வாரங்களுக்கு, பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கடந்த, இரண்டு மாதங்களாக, கொரோனா தொற்று நோயை தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், கடந்த சில நாட்களாக, அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது,

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது, பெரும் கவலையை அளித்துள்ளது. இந்த தொற்று நோய்க்கு, இதுவரை சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை; தீர்வும் காணப்படவில்லை. இதற்கு, தற்போதைய தீர்வு, நாம் கட்டுப்பாட்டுடன் இருப்பதுதான். முதலில், இரண்டு விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒன்று உறுதி; மற்றொன்று செயல்.அடுத்து வரும் வாரங்களில், தேவையில்லாமல், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கூட்டமாக சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.வீட்டுக்குள்ளே நாம் அனைவரும் பணியாற்ற பழகிக் கொள்ள வேண்டும்.

கோரிக்கை

டாக்டர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்களில் பணியாற்றுவோர், போலீஸ், சுகாதாரத்துறை ஊழியர்கள் போன்றோரைத் தவிர மற்றவர்கள், வீட்டிலேயே இருந்து பணி செய்ய வேண்டும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள், கொரோனா பரவலை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

'நான் நன்றாக இருக்கிறேன். என்னை கொரோனா தாக்காது; அதனால், நான், மார்க்கெட், வணிக வளாகம், தியேட்டர் என, எங்கும் செல்வேன்' என நினைப்பது தவறு. நம்மை தற்காத்துக் கொண்டால் மட்டும் போதாது; அடுத்தவர்களையும் பாதுகாக்க வேண்டும்.நம்மை தனிமைப் படுத்த, நாம் பழகிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த வகையில், நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

நான் ஏதாவது கோரிக்கை விடுத்தால், நீங்கள் ஏமாற்றாமல், அதை நிறைவேற்றுகிறீர்கள். கொரோனா நோய்க்கு சரியான தீர்வு இல்லாத நிலையில், தனிமைப்படுத்திக் கொள்வது தான் ஒரே வழி. இதற்காக, சில வாரங்களை, நான் உங்களிடம் கேட்கிறேன்.

சோதனை ஓட்டம்

வரும், 22ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்க வேண்டும். அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது. 130 கோடி மக்களும், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.இதன் மூலம், நாம், நம் ஒற்றுமையை, உறுதியை வெளிப்படுத்த வேண்டும். கொரோனாவை ஒழிப்பதற்கான, சோதனை ஓட்டமாக இது அமைய வேண்டும். கொரோனாவை தடுத்து நம் வலிமையை நிரூபிப்போம்.

மக்களுக்காக , மக்களே தாமாக முன்வந்து ஊரடங்கு நடைமுறையை பின்பற்றுவோம்.இந்த நேரத்தில் நாம் சிலருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். டாக்டர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள், பஸ், ஆட்டோ டிரைவர்கள், உட்பட பலர், தங்களை பற்றி கவலைப்படாமல், மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர்.

மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும், 22ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, வீட்டின் மொட்டை மாடியில், பால்கனியில் இருந்து, கைகளை தட்டி, மணி அடித்து, சங்கு ஊதி, அத்தியாவசிய சேவை செய்வோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.அடுத்து வரும் நாட்களை, மக்கள் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும்; அலட்சியம் கூடாது. கொரோனா வைரஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.

நெருக்கடி

அத்தியாவசிய சேவை செய்வோரைத் தவிர, மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுக் கிழமை வெளியே வர வேண்டாம். மருத்துவர்கள், ஊடகத்துறையினர், போக்குவரத்து துறையினருக்கு, மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். நோய்க்கு ஆளாகாதீர்கள். நோய்களை பரப்பாதீர்கள். இந்த முக்கியமான காலகட்டத்தில், நம் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு, தேவையில்லாத நெருக்கடி கொடுத்துவிடக் கூடாது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கவும். நீங்களாக சில அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருந்தாலும், அது அவசரம் இல்லாத நிலையில், ஒத்தி வைக்கவும்.

இந்த வைரஸ், நம் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரசால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்க, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நடவடிக்கை குழு, அனைத்து தரப்பினருடனும், மாநிலங்களுடனும் ஆலோசனை நடத்தி, பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும்.

பால், மருந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் பாதிக்காமல் இருக்க அனைத்து முன்னச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதனால், பீதியில் அவற்றை அதிகமாக வாங்கி குவிக்க வேண்டாம்.இந்த இக்கட்டான நேரத்தில், நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க, அனைவரும் தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு, ஊதியத்தை குறைக்க வேண்டாம் என, தனியார் துறையினரை கேட்டுக் கொள்கிறேன். மனிதநேயம் வெல்லட்டும். இந்தியா வெல்லட்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

14 மணி நேரம்:

இந்தியாவில் 'பந்த்' அறிவிக்கப்பட்டால் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கடை பிடிக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள பிரதமர் மோடி அறிவித்துள்ள 'மக்கள் ஊரடங்கு' காலை 7:00 மணி முதல் , இரவு 9:00 வரை 14 மணி நேரம் கடைபிடிக்கப்பட உள்ளது.

உலக தலைவர்கள் வரிசையில்

'கொரோனா' வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஏற்கனவே சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமெரி்க்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா, பிரதமர் ஐஸ்டின் ட்ருடோ, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஆகியோர் தங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். இவ்வரிசையில் இந்திய பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.

குழந்தைகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுரை

Updated : மார் 19, 2020 18:27 | Added : மார் 19, 2020 18:26 |

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக குழந்தைகள், முதியவர்களை வீட்டிலேயே இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 197 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் மார்ச் 22ம் தேதி முதல் மார்ச் 29 வரை வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், அவசர பணிகள் தவிர மற்ற தனியார் துறை பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ரயில், விமானங்களில் மாணவர்கள், நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கு பயணச் சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது.
நிர்பயா குற்றவாளிகளின் 'கதை' முடிந்தது; நால்வருக்கும் தூக்கு

Updated : மார் 20, 2020 07:17 | Added : மார் 20, 2020 05:42 

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கு குற்றவாளிகள், 4 பேரும் திஹார் சிறையில், இன்று(மார்ச் 20) அதிகாலை 5.30 மணிக்கு, தூக்கிலிடப்பட்டனர். குற்றம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பின், 'ஒரு வழியாக' அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆறு பேரும், குற்றவாளிகள் என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகளில் ஒருவர், 'மைனராக' இருந்ததால், அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில், மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மீதமுள்ள ஐந்து பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ராம் சிங் என்ற குற்றவாளி, டில்லி திஹார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், மீதமுள்ள முகேஷ் குமார் சிங்(32), வினய் சர்மா(26), பவன் குப்தா(25), அக்ஷய் குமார் சிங்(31) ஆகிய நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு நிறைவேற்றம்:

மூன்று முறை, துாக்கு தண்டனைக்கான தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், திஹார் சிறையின், 3ம் எண் சிறையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. 30 நிமிடங்கள் அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்தனர். 4 குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து, அவர்கள் இறந்ததை டாக்டர் பதிவு செய்தார். மக்கள் கூடியதையடுத்து திஹார் சிறை வாசலில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீதி கிடைத்தது:

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், “ஒட்டு மொத்த தேசத்துக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது. எனது மகளுக்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கும் நீதி கிடைத்து விட்டது. கொடிய செயல்களில் ஈடுபடுவோருக்கு இது பாடமாக அமையட்டும்” என்றார்.

நிர்பயா தினம்:

திஹார் சிறை முன்பு, தூக்கு தண்டனைக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 'மார்ச் 20' நிர்பயா தினம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தூக்கு நிறைவேறியதும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சிறைக்கு முன்பு தேசிய கொடி அசைத்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




பிரேத பரிசோதனை:

உயிரிழந்த நிர்பயா குற்றவாளிகளின் உடல்கள், இன்று காலை 8.30 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. 5 டாக்டர்கள் கொண்ட குழு, பிரேத பரிசோதனை செய்யும் எனவும், நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.80,000 ஊதியம்:

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும், மீரட் நகரை சேர்ந்த பவன் ஜல்லாட் என்பவர் தூக்கு தண்டனையை நிறைவேற்றினார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திஹார் சிறைக்கு நேற்று அழைத்து வரப்பட்ட அவர், தூக்கு ஒத்திகையிலும் ஈடுபட்டார். தூக்கை நிறைவேற்ற பவனுக்கு 8 மணிலா கயிறுகள் வழங்கப்பட்டன. அதில் 4 கயிறுகளை அவர் தேர்வு செய்தார். இதனையடுத்து சிறையில் தனி அறையில் தங்கிய பவன், அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து, குற்றவாளிகளை தூக்கு போட தயாரானார். ஒருவருக்கு தலா ரூ.20 ஆயிரம் என 4 குற்றவாளிளை தூக்கிலிட, பவனுக்கு ரூ.80 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. அவருக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கடைசி முயற்சியும் தோல்வி:

முன்னதாக, நிர்பயா குற்றவாளிகளின் வக்கீல், நேற்று நள்ளிரவில் தாக்கல் செய்த மனுவை, டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் குற்றவாளிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட, அது அவசர வழக்காக அதிகாலை 2.30 மணிக்கு விசாரிக்கப்பட்டது. அம்மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ய, நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை உறுதியானது.

நிராகரிப்பு:

விசாரணையில், குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி.சிங், 'அவர்கள் தூக்கிலிடப்படுவது உறுதி. ஆனால் அதை 2 அல்லது 3 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும்' என வாதாடினார். நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் அவர்களை 5 -10 நிமிடங்கள் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் சிறை நடைமுறையில் அதற்கு அனுமதி இல்லை என நீதிபதி நிராகரித்தார்.
Malaysians in Tiruchy in a fix as airlines unlikely to fly soon

Looks like Malaysians stranded without return flights will have to spend some more time in the city as airlines are unlikely to resume operations anytime soon.

Published: 20th March 2020 06:47 AM 


Passengers are seen wearing masks to keep them away from coronavirus at Chennai Airport. (Photo| R Satish Babu, EPS)


Express News Service

TIRUCHY: Looks like Malaysians stranded without return flights will have to spend some more time in the city as airlines are unlikely to resume operations anytime soon. Around 70 Malaysians currently are in Tiruchy and other central districts, having landed on some business or attend family events. While those with roots in Tamil Nadu are staying with relatives, others are put up in hotels. 

Officials from the Malaysian embassy met the group on Wednesday and assured help, but no plans have materialised yet.Most of them have been visiting the airport for the past three days to find out when airlines would resume operations. “I came to attend a marriage. Most of my family members returned to Malaysia, but I decided to spend some more time with my relatives. Now, I do not know what to do. Officials are not giving any assurances. I have submitted my details to the embassy and hope the Malaysian government would take steps to ensure our return,” said M Pragathambal.

“I came with my family on March 1 to visit temples. We were planning to return on March 25, but now we are worried as officials are unable to give any confirmation of the return trip,” said P Subramaniam, who visited TIA on Thursday. “Some of us are staying with our relatives and embassy officials arranged food and accommodation for those unable to find a place to stay. They have assured travel arrangements would be made after consulting the Indian government” said Sugandhi, a Malaysian citizen.

Flights cancelled

Air India Express on Thursday cancelled its Tiruchy-Sharjah flight (Flight No. IX-613) and Tiruchy-Dubai flight (Flight No. IX-611) due to travel restrictions in the United Arab Emirates. The Sharjah flight scheduled to take off from Tiruchy at 12.40 am and Dubai flight at 1 am would remain cancelled on Friday

NEWS TODAY 11.06.2026