Sunday, October 20, 2019

மது குடித்தால் நூதன தண்டனை: கிராமத்துக்கே பிரியாணி விருந்து

அகமதாபாத்

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் அமிர்கத் தாலுகாவில் உள்ளது கட்டிசித்தாரா என்ற கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் ஆண்கள் மது குடித்துவிட்டு அடிதடிகளில் ஈடுபடுவதும், கொலைகள் நடப்பதும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மது குடிப்பவர்களை கட்டுப்படுத்த கிராம மக்கள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கிராமத்தில் யாராவது மது குடித்தது தெரியவந்தால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. குடித்து விட்டு தகராறு செய்தால் அபராதம் ரூ.5,000 விதிக்கப்படுகிறது. மேலும், மது குடித்தவர் அந்த கிராமத்துக்கே மட்டன் பிரியாணி விருந்து அளிக்க வேண்டும்.

கட்டிசித்தாரா கிராமத்தில் 800 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து போட 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவாகும். இதற்கு பயந்து கொண்டே கிராமத்து ஆண்கள் மது குடிப்பதை நிறுத்திவிட்டனர். இந்த நூதன தண்டனை 2013-14-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுமுதல் கிராமத்தில் மது குடிப்போர் குறைந்துவிட்டதாக கிராம பஞ்சாயத்து தலைவர் கிம்ஜி டங்கய்சா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...