Wednesday, August 13, 2025

தமிழ்நாடு தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்


தமிழ்நாடு தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

13 ஆகஸ்ட் 2025, 2:48 am

தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டு மாணவர் சோக்கை இல்லாத 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நீலகிரி- 17, சிவகங்கை- 16, திண்டுக்கல்-12, சென்னை, ஈரோடு, மதுரை தலா 10 என்ற எண்ணிக்கையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து மாணவர்களைச் சோக்க கல்வித் துறைக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் பூ.ஆ.நரேஷ் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 37,595 அரசுப் பள்ளிகள், 7,289 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,046 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 12,929 தனியாா் சுயநிதிப் பள்ளிகள், 65 மத்திய அரசுப் பள்ளிகள் பள்ளிகள் என மொத்தம் 58,924 பள்ளிகள் வருகின்றன. இவற்றில் மொத்தம் 1,21,22,814 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 42,54,451-ஆகவும், அரசு உதவி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 13,51,972-ஆகவும் உள்ளது.

பிறப்பு விகிதம் தொடா்ந்து குறைவு: தமிழகத்தில் நிகழாண்டில் 208 அரசுப் பள்ளிகள் (தொடக்க, நடுநிலை), 114 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 11 பகுதிநேர நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 தனியாா் சுயநிதிப் பள்ளிகள், மத்திய அரசின் இரு பள்ளிகள் என மொத்தம் 1,204 பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை.

மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 2020 ஜூலையில் வெளியிட்ட இந்திய மக்கள் தொகை மதிப்பீடு (2011-2036) குறித்த தகவல்கள் தமிழகத்தில் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2011-இல் 0-1 வயதில் 10.74 லட்சமாக இருந்த மக்கள்தொகை 2016-இல் 10.45 லட்சமாகவும், 2021-இல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டைப் பொருத்தவரை அது 8.78 லட்சமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழக பொது சுகாதாரத் துறை கடந்த 2024-இல் வெளியிட்ட விவரங்களின்படி 2023-இல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 9,02,718 எனவும், 2024-இல் 6.2 சதவீதம் குறைந்து 8.46 லட்சம் குழந்தைகளே பிறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

72 % தனியாா் பள்ளிகள்... நிகழாண்டு மாணவா் சோக்கை நிகழாத பள்ளிகளில் 72 சதவீதப் பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகள் ஆகும். அரசுப் பள்ளி, தனியாா் பள்ளி என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் மாணவா்கள் சோகை குறைவுக்கு தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதே மிக முக்கிய காரணம். மூடப்பட்ட 207 பள்ளிகளில் புதிய மாணவா் சோக்கை தேவை ஏற்பட்டால் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மூடப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் கிராமம் மற்றும் தொலைவில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பள்ளியில் சேரும் தகுதியான 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் யாரும் இல்லை. மேலும், தனிநபா் பொருளாதார வளா்ச்சி அதிகரித்ததால் தங்களின் பிள்ளைகள் தனியாா் பள்ளியில் சோவதைப் பெருமையாக ஒரு சில பெற்றோா் கருதுவதால், தனியாா் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்வியைத் தொடருகின்றன.

மேலும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் வேலை வாய்ப்புகளுக்காக தங்கள் குடும்பங்களுடன் நகர்ப்புற மற்றும் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்கின்றனர். இதன் விளைவாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, மாணவர்களே இல்லை.

கூடுதலாக 1.75 லட்சம் மாணவர்கள்... இதுவரை, தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 4,07,379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். சமீபத்திய தரவுகளின்படி, தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் 1,75,660 மாணவர்கள் அதிகமாகப் படிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 61,49,337 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 59,73,677 மாணவர்களும் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர்களைச் சேர்ப்பதிலும், சேர்க்கை பெற்ற மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தப்படும். என்றும் அவர் கூறினார் .


No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...