Showing posts with label News clippings 2. Show all posts
Showing posts with label News clippings 2. Show all posts

Saturday, November 14, 2015

தொடர் கனமழை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை

சென்னை பெரம்பூரில் பெய்த கனமழை | படம்: எல்.சீனிவாசன்

தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று (வியாழக்கிழமை) சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

Updated: November 12, 2015 08:22 IST கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்க கூடுதலாக 2 ஆயிரம் ஊழியர்கள்: மின் வாரியம் நடவடிக்கை



கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று கடந்த 9-ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் அதிகளவில் பாதிக்கப்பட் டது. சூறைக்காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், கடலூர் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மின் வாரியம் போர்க்கால அடிப்படையில் இதர பகுதிகளில் இருந்து மின் பணியா ளர்களை கடலூருக்கு அனுப்பி, நிவார ணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூரில் 2 ஆயிரம் மின் கம்பங்கள், 64 மின் மாற்றிகள், 226 கி.மீ. தொலை வுக்கு மின் வட கம்பிகள் சேதமடைந்துள் ளன. மின் விநியோகத்தை சீரமைக்க கரூர், திருச்சி, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, கோவை, தருமபுரி ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் 2,039 மின் பணியாளர்கள் மற்றும் 3 மேற்பார்வை பொறியாளர்கள் கடலூருக்கு சிறப்புப் பணிக்காக நியமிக் கப்பட்டுள்ளனர்.

தற்போது 5 நகராட்சிகள், 15 பேரூராட்சி கள், 700 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 275 கிராமங் களில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 143 கிராமங்களில் மழை நீர் வடிந்ததும் மின்சாரம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மு.சாய்குமார், பகிர்மானப் பிரிவு இயக்குநர் மு.பாண்டி ஆகியோர் கடலூரில் முகாமிட்டு மின் விநியோகத்தை சீரமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Updated: November 13, 2015 09:01 IST வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் கனமழை நீடிப்பு; அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை



அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மீண்டும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மழை அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி அருகே கடந்த 9-ம் தேதி இரவு கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்றைய நிலவரப்படி சராசரியாக 31 செ.மீ. மழை கிடைத்துள்ளது.

புதிய காற்றழுத்தம்

இந்நிலையில், லட்சத்தீவுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு, அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனுடன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் பாதிப்பால், தென்கிழக்கு வங்கக்கடலில் 14-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இதனால், நாளை முதல் வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட் டங்கள், புதுச்சேரியில் நாளை கனமழையும், நாளை மறுதினம் முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச மழை

வியாழக்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம்,  பெரும்புதூர் மற்றும் செய்யூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அரக்கோணம்-9, மதுராந்தகம்-8, சென்னை விமான நிலையம், திண்டுக்கல்-7, தாம்பரம், நுங்கம் பாக்கம்-6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Monday, November 9, 2015

பள்ளி மாணவர்களுக்கு புதிய மொபைல் அப்ளிகேஷன்: ஸ்மிருதி இரானி அறிமுகம்.....பிடிஐ

Return to frontpage

பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில், ஆன்- லைன் மூலம் மாணவ-மாணவியர் கள் கல்வி சார்ந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும், புதிதாக கற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக நேற்று மத்திய அரசு மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தள வசதிகளை அறிமுகம் செய்து வைத்தது.

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆன்-லைன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த விஷயங்களை தேடி எடுத்துக் கொள்ளும் வகையில், ‘இ-பாடசாலா’ என்ற இணையதளமும், மொபைல் அப்ளிகேஷனயும் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். பள்ளி கல்வி திட்டத்தில் வெளிப்படைதன்மையை கொண்டு வருவதற்காக மட்டுமின்றி, குழந்தைகள் புதிதாக கற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்கவுமே, இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறோம். மேலும், மாணவர்கள் மீதான தேர்வு சுமையை குறைப்பது குறித்து சில மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர பள்ளிகளில் மதிய உணவு மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து அளிப்பது தொடர்பான திட்டத்தை வகுக்க கமிட்டி அமைத்துள்ளோம். அந்த கமிட்டி வகுத்து கொடுக்கும் ஊட்டச்சத்து திட்டத்தின்படி, அந்தந்த மாநில அரசுகள் சொந்தமாக மதிய உணவுகளை தயாரிக்கும்படியும் வலியுறுத்தப் போகிறோம்’’ என்றார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ‘சரண்ஷ்’ என்ற மற்றொரு அப்ளி கேஷனும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்ளி கேஷன் மூலம் பிற மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில், பாடவாரியாக குழந்தைகளின் கல்வி திறனை பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். இதே போல் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சாலா சித்தி’ என்ற மற்றொரு டிஜிட்டல் தொழில்நுட்பமும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம்: பஸ், ரயில் நிலையங்களில் குவிந்த மக்கள் - தாம்பரம்- கோயம்பேடு இடையே கடும் போக்குவரத்து நெரிசல்

Return to frontpage

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந் தனர். பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களுக்கு 1,146 சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நேற்று 1,146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று 825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறும் போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேட்டில் இருந்து பயணம் செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் குறித்து பயணிகளுக்கு தகவல் அளிக்க உதவி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன” என்றார்.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் தாம்பரம்- கோயம்பேடு இடையே நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியை கடக்க 2 மணிநேரத்துக்கும் மேல் ஆனதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இது தொடர்பாக போக்கு வரத்து போலீஸார் கூறும்போது, “சென்னையின் முக்கிய சாலை களான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர் லால் நேரு சாலை ஆகியவை 10 ஆண்டுகளுக்கு முந்தைய போக்குவரத்தை தாங்கும் வகை யில் அமைக்கப்பட்டது. இப்போது அதைவிட 3 மடங்கு போக்குவரத்து அதிகரித்து விட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் சாலைகள் சுருங்கி விட்டன. இந்நிலையில் வழக்கமான போக்குவரத்தோடு தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் வாகனங்களும் சேர்ந்துகொண்டதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது” என்றனர்.

தனியார் ஆம்னி பஸ் ஓட்டு நர் ஆர்.ஸ்டீபன் அருள்ராஜ் கூறும் போது, “கிண்டி- கோயம்பேடு இடையே போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தாம்பரத்திலேயே எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் நான் கிண்டியிலிருந்து தி.நகர் வழியாக போக்குவரத்தில் சிக்காமல் கோயம்பேட்டை அடைந் தேன். மற்ற ஆம்னி பஸ்கள் போக்குவரத்தில் சிக்கி 2 மணிநேரம் அவதிப்பட்டன” என்றார்.

பெருங்களத்தூரில் நெரிசல்

பெருங்களத்தூரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ஆர்.சர வணன் கூறும்போது, “பெருங் களத்தூரில் கடந்த 3 நாட்களாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஒரு சில ஆம்னி பஸ்கள் மட்டுமே பெருங்களத்தூர் வழியாக வருவதை தவிர்க்கின்றன. மற் றவை வந்து கொண்டு தான் இருக் கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார்.

எஸ்.மாலிக் கூறும்போது, “வெளியூர் செல்லும் தனியார் வாகன ஓட்டிகள் பெருங்களத்தூர் பாதையை தேர்வு செய்ய வேண்டாம் என்று போக்கு வரத்து காவல்துறை அறிவுறுத்தி யிருந்தது. ஆனால், பெரும் பாலான தனியார் வாகன ஓட்டிகள் காவல் துறையின் வேண்டுகோளை ஏற்கவில்லை. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார்.

அதிகாரி விளக்கம்

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கவேண் டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதுபற்றி போக்கு வரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புறநகர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான திடல் இல்லாததால், தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்க முடியவில்லை” என்றார்.

Sunday, November 8, 2015

Trichy feasts on turkey biryani this Diwali Gokul Rajendran,TNN | Nov 8, 2015, 12.47 AM IST

TRICHY: Like every year, this time too the foodies in town are lapping up their favourite Diwali delicacy — turkey biryani.

This specialty dish is trending in Trichy now with several restaurants offering the tasty festive treat to customers for the next few days till Diwali.

Unlike other cities in Tamil Nadu, Trichy restaurants have been following the trend for nearly two decades now after a restaurant in Palakkarai introduced turkey biryani, people say. "It has been nearly 20 years since turkey biryani has become famous among the food lovers in Trichy city. A paratha stall in Palakkarai was the pioneer. Since then, there is a craze among people to have the mouthwatering dish," says B Kamal, a restaurant owner on Vayaloor road who sells a plate of turkey biryani for Rs150.

Turkey biryani is usually served at few high-end restaurants in normal days, that too in limited quantities, for a much price higher than for mutton and chicken biryanis. It is different during Diwali because several restaurants serve the dish. This time they are inviting customers with mouth-watering offers like — one tandori chicken free with one plate of turkey biryani for Rs 200.

The foodies say turkey biryani, brings to this city, in some form, the traditional Thanksgiving dinner hosted in the US and Canada in which roasted turkey is the centerpiece of the ceremony.

The restaurant owners in Trichy district buy turkeys from a few farms in areas like Kavalkaranpatti and some farms in Villupuram district.

"Turkeys are available in large numbers in Villupuram district where farm owners rear the bird for a year till Diwali. We order for the turkeys weighing 8 kgs to 10 kgs a few weeks before Diwali. The response in increasing year by year because people want to taste a new dish during the festival season," says A Dharmaraj, a restaurant owner in the city.

For the people in Trichy, tasting turkey biryani is part of the festival celebrations. "The shopping trip usually also include a visit to a restaurant which offers turkey biryani. We feel like we are missing something if we don't have it," says a shopkeeper S Reeta in the city.

Smartphones, double salary, home appliances for Noida maids this Diwali TNN | Nov 7, 2015, 04.54 PM IST

NOIDA: Noidawallahs have moved beyond the usual sari and sweets as Diwali gifts for their domestic help - some by choice and some out of fear of losing their maids. This Diwali, Noida residents have decided to be a bit more generous than usual. And no, we're not talking about their shopping plans, which are usually grand and equally chaotic, anyway. This time, it's the domestic help who are enjoying their generosity, with big bonuses and costly gifts. While some have demanded particular things, others have received more than what they had asked for. Noidawallahs tell us how they've planned to make Diwali special for their maids. While some have given in to their maids' demands for the fear of losing them, others have readily decided to be bade dilwaale this festive season.

Induction stove and mixer-grinder for Diwali:

If you were thinking of giving your maid an old pressure cooker you no longer use this Diwali, drop the idea. She might leave you for another home where the owners are gifting home appliances. Shruti Mittal, founder member of NoidaMoms, says, "Now, you can't give just a box of sweets and a few hundred bucks as Diwali gifts. The maids don't settle for that much. So, I'm thinking of giving my maid a juicer and a mixer-grinder as her Diwali bonus. Of course, the demand will be of a more expensive gift next year. But does one really have a choice? We can't do without our maids and can't afford to lose them."

Vineeta, a senior manager at an MNC in Sector 58, adds, "I usually gift my maid some new clothes, such as a sari or a shawl. But I felt that I needed to do more in order to thank her. She has been working for us for almost a decade now. So, I decided to gift her an induction stove because she keeps saying she doesn't get the time to cook for her own family after working all day at our home."

Ritu Singh, a resident of Sector 26, says, "Both my husband and I are working, so we are almost entirely dependent on our maid. Naturally, I can't afford to lose her. So, this Diwali, all her demands for a bonus have to be met. She has asked for a gift and not cash. So, I'm going to gift her a dinner set along with some utensils."

Smartphones for the tech-savvy domestic help:

But it's not always the fear of losing the maid that is driving Noidawallahs to shower gifts on their maids. Ananya Sharma, a resident of Sector 50, says, "A few people in my building are pooling money and gifting our maid a smartphone this Diwali. Basically, we want her to have a WhatsApp-enabled phone so that we can reach her easily. It's a gift for her and a convenience for us as well."

Divyangana, a resident of Greater Noida, says, "In Noida, maids are your lifeline, particularly for working couples. So, giving just a little cash for Diwali doesn't seem very suitable. I plan to give our maid a month's salary as a bonus. In addition, whatever firecrackers I buy for my children, I will buy exactly the same amount for her kids. After all, everybody should have fun on Diwali."

Ekta Singh, a resident of Sector 120, says, "I'm giving my maid a cycle as a Diwali gift in addition to the usual bonus of cash and sweets. Our biggest issue with her is that she comes to our house late very often because she lives some place far from our home. To solve that problem, I guess a cycle would come in handy. Moreover, it's convenient for her as well. She won't have to walk all the way."

Perungalathur: A traffic bottleneck, than a gateway TNN | Nov 8, 2015, 12.55 AM IST

CHENNAI: Perungalathur, considered the southern gateway to the city, offers everything apart from a smooth access to Chennai.

The GST Road from Tambaram and the Chennai Bypass Road converge here and traffic during peak hours moves only by inches. Such is the congestion that omni bus operators from the city to the southern parts are planning to take a detour and avoid the stretch. If the traffic snarls were not enough, residents at Perungalthur have to put up with noise and dust thrown up by vehicles.

"Omni bus drivers park vehicles here for hours together. The situation is chaotic in weekends as vehicles pile up from Irumbuliyur Bridge. It takes commuters nearly an hour to cross Perungalathur," said M Sakthivel of nearby Peerkankaranai.

S Renugambal, who owns a building next to the bus terminus, said: "Many have to bear the incessant noise as the drivers keep on honking. A bus bay should be constructed as there are only steel barricades and some drivers who are in a hurry remove the barricade and jump queue causing traffic jams."

Mohamed Samad a shop owner in Perungalathur said the trouble starts from early evening and at nights the omnibus drivers park their vehicles for long periods of time waiting for commuters and this leads to slow movement of vehicles on the main road and the situation is worst during the weekend''.

Some SETC drivers said after starting from the Koyambedu terminus they are held up at the Perungalathur bus stand for more than an hour as not only is the traffic a bottleneck, even passengers who book advance tickets fail to turn up on time.

has to wait for their turn. There is another problem with passengers who make online booking but do not turn up on time and repeated announcements over the public address system is another problem.

Commuters to southern districts who use the Perungalathur bus stand said the government should plan an alternate bus terminus beyond Vandalur and if necessary acquire land to build a new terminus to accommodate the rush and volume of buses.

Friday, November 6, 2015

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!...vikatan

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, November 5, 2015

மறுமணம் செய்யும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெறலாம்: ராஜஸ்தான் அரசு

மறுமணம் செய்யும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெறலாம்: ராஜஸ்தான் அரசு

First Published : 04 November 2015 04:33 PM IST
ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் 2 குழந்தைதான் பெற வேண்டும் என்று இருந்த சட்டத்தை ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று சற்று தளர்த்தியுள்ளது.
மறுமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிப்பது என்று அம்மாநில அமைச்சரவை நேற்று முடிவெடுத்துள்ளது.
2000மாவது ஆண்டு ஜூன் மாதம் வெளியான அறிவிக்கையின்படி, ராஜஸ்தானில் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்கள் அரசு ஊழியர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை, அரசு ஊழியர்களாக இருப்போருக்கு 3வது குழந்தை பிறந்தால், அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஏதேனும் ஒரு காரணத்துக்காக மறுமணம் செய்து கொண்டால், அவர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கொள்கையை சற்று தளர்த்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.

Monday, November 2, 2015

போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட 13 ஓட்டுநர்கள் உயர் அதிகாரிகளின் உறவினர்கள்: விசாரணையில் தகவல் ....சுப.ஜனநாயகச்செல்வம்

Return to frontpage

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத்தில் 1991 முதல் 2002-ம் ஆண்டு வரை, எட்டாம் வகுப்பு போலி கல்விச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ஓட்டுநர்கள் 13 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அப்போது பணிபுரிந்த உயர் அதிகாரிகளின் உறவினர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழகத்தின் காரைக்குடி மண் டலத்தில் சிவகங்கை, ராமநாத புரம் ஆகிய இரு மாவட்டங்கள் அடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவ கங்கை, தேவகோட்டை, திருப்பத் தூர், தேவகோட்டை பழுது பார்க் கும் மையம் ஆகிய 5 கிளைகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட் டத்தில் ராமநாதபுரம் நகர், புறநகர், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேசுவரம், மதுரை உத்தங்குடி என மொத்தம் 12 கிளைகள் உள்ளன.

இங்கு, 1991, 1992, 1994-ம் ஆண்டில் தலா ஒருவர், 1993-ல் 5 பேர், 1997-ல் 2 பேர், 1998-ல் 3 பேர், 2001, 2002-ல் தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் ஓட்டுநர் பணிக்கு நியமிக்கப்பட்டனர். உண்மைத் தன்மை அறியும் சோத னையில் இவர்களது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்விச் சான்றிதழ் போலி எனத் தெரியவந்தது.

இவர்களில் பலர் அப்போது பணியாற்றிய உயர் அதிகாரிகளின் உறவினர்கள் என்பதால், போலிச் சான்றிதழ் எனத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது, 15 பேரில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். இவர்கள் மீது கடந்த 2005-ம் ஆண்டு குற்றச்சாட்டு குறிப்பாணை உறுதியானதால் மீதம் உள்ள 13 பேரை அதிகாரிகள் கடந்த வாரம் டிஸ்மிஸ் செய்துள்ளனர்.

இதுகுறித்து காரைக்குடி மண்டல போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் `தி இந்து’விடம் கூறியதாவது:

தொழிலாளரின் பயிற்சிக் காலமான 240 நாட்களுக்குள் ளாகவே சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிந்து நீக்கியிருக்க வேண்டும். அப்போது நியமனம் பெற்றவர்களில் பலர் காரைக்குடி மண்டல உயர் அதிகாரிகளின் உறவினர்கள்.

எனவே, போலி கல்விச் சான்றிதழ் எனத் தெரிந்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.

சில நேர்மையான அதிகாரி கள் தற்போது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசின் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட அந்த உயர் அதிகாரிகள் தற்போது சென்னை போன்ற இடங்களில் உயர் பதவியில் உள்ளனர். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்த அரசு நடவடிக்கை வேண்டும் என்றனர்.

போலிக் கல்விச் சான்றிதழ் வழங்கிய 13 ஓட்டுநர்கள் டிஸ் மிஸ் ஆன விவகாரத்தில் தொடர் புடைய அதிகாரிகள் தற்போது கலக்கம் அடைந்துள்ளனர்.

Sunday, November 1, 2015

‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் உதவியால் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது சவுதியில் இறந்த தொழிலாளி உடல்

Return to frontpage

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(52). கடந்த 23 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள நஜாரம் மாகாணத்தில் முகமது அல் சுகூர் என்பவரின் பண்ணையில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி மாரடைப்பால் பாஸ்கரன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரனின் மனைவி அமுதா(45), மகன் கார்த்திகேயன்(26), மகள் பூங்கோதை(24) உள்ளிட்டோர், அவரது முதலாளியை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

அப்போது, “பாஸ்கரனின் உடலை அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதனால், சவுதியிலேயே அடக்கம் செய்துவிடுகிறோம். அதற்குப் பதிலாக ரூ.7 லட்சம் பணம் தருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொள்ளாத பாஸ்கரன் குடும்பத்தினர், “பணம் தேவையில்லை, உடலை அனுப்பி வையுங்கள். நாங்கள் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் உடலை அனுப்பாததால், அவரது உடலை மீட்க குடும்பத்தினர் கடந்த 5 மாதங்களாக போராடி வந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த, தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகப் பொதுச் செயலாளரான பட்டுக்கோட்டை ஏ.பிரபாகரன், சவுதியில் உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ‘வாட்ஸ் அப் நண்பர்கள் குழு’ உறுப்பினர்கள் அப்துல் காதர், முருகன் ஆகியோர் மூலம் தீவிர முயற்சி எடுத்து, பாஸ்கரனின் உடல் சென்னை கொண்டுவரப்படும் என்று கடந்த வாரம் தெரிவித்தார்.

அதன்படி, பாஸ்கரனின் உடல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, பாஸ்கரனின் மகன் கார்த்திகேயன், பட்டுக்கோட்டை பிரபாகரன், அமைப்பின் சென்னை மாவட்ட நிர்வாகி கிஷோர் ஆகியோர் உடலைப் பெற்று, ரயில் மூலம் நேற்று கும்பகோணத்துக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர், சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, பாஸ்கரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Thursday, October 29, 2015

மகாமக விழாவுக்காக புதிய இணையதளம் தொடக்கம்..dinamani


By தஞ்சாவூர்,

First Published : 29 October 2015 12:21 AM IST


கும்பகோணத்தில் மகாமகம் விழா தொடர்பான புதிய இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழா 2016 ஆம் ஆண்டு பிப். 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மகாமக விழா தொடர்பான புதிய இணையதளத் தொடக்க விழா கும்பகோணம் நகராட்சி படேல் மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், புதிய இணையதளத்தை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் பேசியது:
மகாமக விழாவின் முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புதிய இணைதளத்தைத் தொடங்குவது எனத் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கும்பகோணத்தில் உள்ள தங்குமிடம், கோயில்களின் தல வரலாறு போன்ற தகவல்களுடன் www.onlinethanjavur.com/mahamaham என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மகாமக விழாவின் சிறப்புகள், பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள், பணிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இணையதளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

Wednesday, October 28, 2015

Pull out your umbrellas, rainfall likely to intensify...TOI

CHENNAI: It's time to take those raincoats and umbrellas out of the closet, for the weatherman has predicted that rain, which started as a drizzle in the city on Tuesday, will intensify.

India Meteorological Department has forecast favourable conditions for the beginning of northeast monsoon over Tamil Nadu and the southern peninsular from Wednesday.

While it was generally cloudy across Chennai on Tuesday, some parts received patchy rain. The temperature (maximum at 33C and minimum at 25C on Tuesday), is expected to drop further over the next three days, the Met office said.

Regional Meteorological Centre (RMC), Chennai, has predicted "mainly or generally cloudy sky with the possibility of rain or thunderstorm for the next three days" in the city. Following that, an increase in the intensity of rainfall has been forecast till November 2. "Isolated heavy rains are expected generally across coastal Tamil Nadu from Wednesday," an RMC official said.

Chief meteorologist of Skymet weather forecasting agency Mahesh Palawat said a low pressure area that has developed over Sri Lanka and south Tamil Nadu makes for favourable conditions for the onset of the northeast monsoon.

"From Wednesday, many places will start getting rainfall," he said.

"For the commencement of the northeast monsoon, winds should be from the northeasterly direction over the Bay of Bengal and weather systems like low pressure areas or depression should form to increase rainfall. The conditions now are favourable," he added.

There has been a delay of more than a week for the onset of the northeast monsoon on which Chennai has pinned its hopes t avert a water crisis. The city faces a deficit of 46% in rainfall in October. Its reservoirs are at a deficit level of 90% and water levels are decreasing rapidly. Tamil Nadu recorded deficit rainfall for three successive years till 2014.

The weatherman says rain could be surplus this time in many parts of the state.

Meterologists said rain or thundershower, which would occur at most places over coastal Tamil Nadu in the next three days would increase in the days subsequent to that.

Chennai, Thanjavur and Nagapattinam are likely to get sufficient rain. Interior parts of the state will receive moderate to heavy rainfall, but the intensity would be lower than in coastal regions.

"During monsoon, there would be rainfall for three or four days followed by a lull during which there will be light or patchy rain. Again there would be heavy rain," a meteorologist said.

Tuesday, October 27, 2015

திருவாரூர் ஆழித் தேர் வெள்ளோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் By திருவாரூர், First Published : 27 October 2015 12:14 AM IST

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தியாகராஜர் கோயில் ஆழித் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் நகரில் நடைபெறும் விழாக்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்த விழா என்றால் அது ஆழித் தேரோட்ட விழாவே. ஐந்தடுக்கு கட்டுமானங்களை கொண்ட தோó பீடத்தில் 96 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 350 டன் எடையில் தோó கம்பீரமாக அசைந்து வருவதைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தாóகள் வருவார்கள்.
கடந்த 16.7.2010 அன்று நடைபெற்ற ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு தேர் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டு, 2.8.2010 முதல் தேர் பிரிக்கும் பணி தொடங்கி சில மாதங்களில் நிறைவடைந்தது. பின்னர், புதுத்தேர் கட்டும் பணி சுமார் ஓராண்டுக்கு பிறகு தொடங்கி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை திங்கள்கிழமை ஆழித் தேர், சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட விழா நடத்த தீர்மானித்தது.
அதன்படி, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,பிரவேச பலி, ம்ருத்சஹ்கிரஹணம், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரஷ்பந்தனம், 6 மணிக்கு முதல்கால யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தேர் வெள்ளோட்டம்: திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகம், 9 மணிக்கு பூர்ணஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, காலை 9.20 மணியளவில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. பின்னர் 9.30 மணிக்கு ஆழித்தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது, பக்தர்கள் "ஆரூரா, தியாகேசா' என பக்தி கோஷம் எழுப்பினர். பிரமாண்ட தோற்றத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வந்தக் காட்சி பிரமிக்க வைத்தது. தேருக்கு முன்னால் சிவபக்தர்கள் தேவாரப் பாடல்கள் பாடிச் சென்றனர். இசை வாத்தியங்கள் முழங்க ஆழித் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
தேரடியிலிருந்து தியாகராஜர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. பாதுகாப்பு பணியில் காவல் துறை, தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். சுப்ரமணியர் தேர் நான்கு வீதிகளையும் 5 மணி 45 நிமிடங்கள் சுற்றி விட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் தேரடிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல், ஆழித்தேர் நான்கு வீதிகளிலும் ஏழரை மணி நேரம் சுற்றிவிட்டு, மாலை 5 மணிக்கு தேரடி நிலைக்கு வந்தடைந்தது. தேர்களை தள்ளும் பணியில் 3 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
தேரோட்ட தேதி அறிவிப்பு எப்போது?
தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அதற்கு பிறகு பழையத் தேர் பிரிக்கப்பட்டு, தற்போது ரூ. 2.18 கோடியில் புதியத் தேர் வடிவமைக்கப்பட்டு, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதனால், பல ஆண்டுகளாக ஆடி அசைந்தாடும் திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை காண முடியாத ஏக்கத்தில் இருந்த பக்தர்களுக்கு விரைவில் ஆழித்தேரோட்டத்தை காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளோட்டம் விடப்பட்டுள்ள நிலையில், தேரோட்டம் நடைபெறும் தேதி இதுவரை தொடர்புடைய துறை அறிவிக்காததால், அந்த அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பக்தர்கள்.
ரூ. 45 லட்சத்தில் உருவான சுப்பிரமணியர் தேர்
திருவாரூர் தியாகராஜர் கோயில் சுப்பிரமணியர் தேர் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் ரூ. 45 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 18 அடி. ஆழித்தேரை போல் ஐந்து அடுக்குகளை கொண்ட இத்தேரின் முதல் அடுக்கில் 99 சிற்பங்கள், இரண்டாம் அடுக்கில் 95 சிற்பங்கள், மூன்றாம் அடுக்கில் 105 சிற்பங்கள் என மொத்தம் 299 சிற்பங்கள் உள்ளன.
மூன்றடுக்குக்கு மேல் தேவாசனம், சிம்மாசனம் உள்ளது. தேரைச் சுற்றிலும் 126 பித்தளை மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
2000-க்கும் மேற்பட்ட கன அடி இலுப்பை மரங்கள், இரண்டு டன் அளவுக்கு இரும்பு பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



சென்னையில் பல இடங்களில் நில அதிர்வு உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கீழே இறங்கினர்

சென்னை,

பதிவு செய்த நாள்:
செவ்வாய், அக்டோபர் 27,2015, 12:16 AM IST


சென்னையில் நேற்று பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கீழே இறங்கினர்.

சென்னையில் நில அதிர்வு

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று பகல் 2.40 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. அது 7.5 ரிக்டர் அளவு என்று பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அருகே உள்ள வடஇந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சென்னையிலும் பல இடங்களில் உணரப்பட்டது.

நந்தனம், பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தகவல்தொழில்நுட்ப அலுவலகம்

கோடம்பாக்கத்தில் உள்ள 9 மாடி கட்டிடம் ஒன்றில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில் 600–க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். நேற்று மதியம் 2.40 மணிக்கு திடீர் என்று அந்த கட்டிடத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் நில அதிர்வை உணர்ந்தனர். உடனே அங்கு வேலையில் இருந்த ஏராளமானவர்கள் பதறியபடி வேகமாக கீழே இறங்கிவந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு நில அதிர்வு ஏற்பட்டதை கூறி, தாங்கள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். 30 நிமிடங்கள் கீழேயே நின்ற அவர்கள், பின்னர் அலுவலகத்துக்கு சென்று வழக்கமான பணிகளை தொடங்கினார்கள்.

பட்டினப்பாக்கம்

பட்டினப்பாக்கம், நந்தனம், கோயம்பேடு, அம்பத்தூர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள், ஊழியர்களும் இதனை உணர்ந்தனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் தான் இந்த அதிர்வை அதிகம் உணர முடிந்தது.

பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் இயக்கிக்கொண்டிருந்தேன். பகல் 2.45 மணி அளவில் நான் உட்கார்ந்து இருந்த நாற்காலியை யாரோ தள்ளிவிடுவது போல இருந்தது. பிறகுதான் அது நில அதிர்வு என்பதை உணர்ந்து கீழே இறங்கினேன். அதுபோல எங்கள் குடியிருப்பில் உள்ள ஏராளமானவர்கள் கீழே இறங்கி வந்தனர் என்றார்.

தீபாவளி விற்பனை களை கட்டத்தொடங்கியது தியாகராயநகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்..daily thanthi



சென்னை,

தீபாவளி விற்பனை களை கட்டத்தொடங்கியுள்ளது. தியாகராயநகரில் விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையன்று மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் வேலை செய்பவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக ‘போனஸ்’ வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இயல்பானது. தீபாவளி பண்டிகையின்போது உறவினர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.அங்காடித் தெரு

அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், சென்னையில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

சென்னை நகரின் முக்கிய வணிகதளமாக விளங்கும் தியாகராய நகர் பகுதியில் நேற்று தீபாவளி பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் உள்பட பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை தியாகராய நகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. குறிப்பாக அங்காடித்தெரு என்று அழைக்கப்படும் ரெங்கநாதன் தெரு முழுவதும் மனித தலைகளாகவே காட்சியளித்தது.மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், தியாகராயநகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் இயல்பான நாட்களை விடவும் அதிகமாக காணப்பட்டது.

பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மைக்ரோ ஓவன் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு தள்ளுபடியில் மக்கள் வாங்கிச்சென்றனர். மேலும், நேற்று விடுமுறை தினம் என்பதால், தீபாவளி பொருட்கள் வாங்க வருவோர்களின் எண்ணிக்கை வழக்கமாக வரும் கூட்டத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.அதிநவீன கேமரா

கூட்டநெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திருட்டு–வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபடும் ஆசாமிகளை கண்காணிப்பதற்காக தியாகராய நகர், பாண்டி பஜார், வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 70 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக பாண்டி பஜார் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன. மற்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பைனாக்குலர் மூலமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பாதுகாப்பு ஏற்பாடுகளை தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் மாம்பலம் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர். தீபாவளி பொருட்கள் வாங்க வரும் மக்கள் சுமுகமாக நடந்து செல்லும் வகையில் ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிய கடைகளின் வெளியே இருந்த சுமார் 500–க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளை பாதுகாப்பு கருதி போலீசார் நேற்று அகற்றினார்கள்.

இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த 100 போலீசார் மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்த 50 போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பண்டிகை நெருங்கும் சமயத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாபாரிகள் மகிழ்ச்சி

தியாகராயநகர் பகுதியை போன்று புரசைவாக்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

பொதுமக்களின் வருகை அதிகரித்து வருவதையடுத்து வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பொருட்கள் வாங்க வந்தவர்களை விடவும் அதிக மக்கள் கூட்டம் நவம்பர் 1–ந்தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Monday, October 26, 2015

விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு அபராதம்

dinamani

By DN, தைபே

First Published : 25 October 2015 04:05 PM IST


அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது.

கடந்த 8 ஆம் தேதி சீனவைச் சேர்ந்த விமானம் ஒன்று தைவான் நாட்டின் தலைநகர் தைபேவிலிருந்து அலாஸ்கா வழியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு இயக்கப்பட்டது.

அந்த விமானத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணித்தார். விமானத்தில் பயணம் செய்தபோது, திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அலாஸ்கா நகரின் மீது பறந்தபோது, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்பு அந்த விமானம் மீண்டும் தைபேவுக்கு திருப்பி விடப்பட்டது.

இதுகுறித்து விமானத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்தபோதும் அதை மறைத்து விமானத்தில் அந்த பெண் பயணம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அமெரிக்கா சென்ற விமானத்தை மீண்டும் தைபே நகருக்கு திருப்ப காரணமாக இருந்த பெண்ணிடம் இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானத்தின் செய்தித் தொடர்பாளர் வீனி லீ கூறினார்.

வெளிநாடுகளிலிலிருந்து அடிக்கடி பணம் வரும் வங்கி கணக்குகளை கண்காணிக்க முடிவு

Dinamani

By Venkatesan Sr, புதுதில்லி

First Published : 25 October 2015 09:53 PM IST


வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி பணம் வந்தால் அந்த வங்கி கணக்கை கண்காணித்து, தவறு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ரூ.6,100 கோடி பண பரிமாற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லியில் உள்ள பரோடா வங்கி கிளையில் இருந்து ஹாங்காங்கிற்கு பணம் பரிமாற்றம் நடந்ததில், 59 போலி நிறுவனங்கள் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதாவது, போலி நிறுவனம் உருவாக்கி அந்நிய செலாவணி பரிவர்த்தனை மூலம் சுங்க வரியை திரும்ப பெற்றுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஒரு லட்சம் டாலருக்கு குறைவான பரிவர்த்தனை விவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாஷின் கூறுகையில், ‘ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டாலும் அது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண் டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம். சிறிய அளவிலான அந்நிய செலாவணி பரிமாற்றம் நடைபெற்றாலும் அதை கவனித்து தகவல் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் பரிவர்த்தனை நடந்தால்தான் அதனை வங்கிகள் கண்காணித்து கேஒய்சி விதிப்படி அறிவிக்கின்றன.

ஆனால், சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் ஒரே வங்கி கணக்கில் சிறிது சிறிதாக சேரும்போது இது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதை பயன்படுத்தி மோசடிகள் நடந்தா லும் தெரியாமல் போய் விடுகிறது. குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளை தெரிவிக்கும் பட்சத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆயிரம், இரண்டாயிரம் டாலர் அனுப்பினால் கூட கண்காணிக்கப்படும்.

இதன்மூலம் அந்நிய செலாவணி பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க முடியும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் கருதுகிறது

Saturday, October 24, 2015

தினத்தந்தி

logo

புதுடெல்லி,


வெளிநாடுகளில் இருந்து ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வருபவர்களுக்கு அபராதமும், அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வருபவர்கள் மீது வழக்கு அல்லது கைது நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்புவோரை தொந்தரவு செய்வதை குறைக்கும் வகையில், தண்டனை விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. அதன்படி, இனிமேல், ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பொருட்களை கொண்டு வந்தால், வழக்கு அல்லது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது. அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு வந்தால்தான், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இதுபோல், மத்திய உற்பத்தி வரி, சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குற்றங்கள் இழைப்போரை கைது செய்வதற்கான பண உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்திய கள்ள நோட்டுகள், ஆயுதம், வெடிபொருட்கள், அரியவகை உயிரினங்கள் ஆகியவற்றை கடத்தி வருவோர் மீது, அந்த பொருட்களின் மதிப்பை கவனத்தில் கொள்ளாமல், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கைது செய்வதற்கும், வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளிப்பதற்குமான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...