Showing posts with label News clippings. Show all posts
Showing posts with label News clippings. Show all posts

Sunday, May 10, 2015

பொதுப்பணித்துறையில் ஊழல் செய்ததாக 10 அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு

சென்னை,

தமிழக பொதுப்பணி துறையில் ரூ.30 கோடி ஊழல் புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு-கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தில் அதிகாரிகள் பட்டியலை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் நேற்று வழங்கினர்.

45 சதவீதம் கமிஷன்

தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அரசு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதற்கு தங்களிடம் 45 சதவீதம் வரை அதிகாரிகள் கமிஷன் தொகை கேட்டு வற்புறுத்துவதாக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கடந்த சில தினங்களாக குற்றம் சாட்டி வந்தனர்.

டெண்டர் முறையில் ஒப்பந்தம் வழங்க வேண்டும். சென்னையில் நடைபெறும் பணிகளுக்கு சென்னையில் உள்ள ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கையையும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், ‘ஊழல் செய்த அதிகாரிகள் பட்டியல் விவரம் விரைவில் வெளியிடப்படும்’ என்று அதிரடி பேனர்களை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் வைத்தனர்.

இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகளை நேற்றுமுன்தினம் அழைத்து, 2 நாட்கள் காலஅவகாசம் தாருங்கள். உங்களுடைய கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பட்டியல் வெளியீடு

அதிகாரிகளின் வாக்குறுதியை முதலில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்ததாரர்கள் திடீரென்று ஊழல் செய்த அதிகாரிகள் பட்டியல் 9-ந்தேதி(நேற்று) லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தனர்.

ஆனால், இது ஊழல் புகார் என்பதால் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் குணமணி மற்றும் நிர்வாகிகள் புகார் அளிப்பதற்காக நேற்று காலை வந்தனர்.

அங்கு ஊழல் தடுப்பு-கண்காணிப்பு டி.எஸ்.பி. சுதர்சனை சந்தித்து, பொதுப்பணித்துறையில் ஊழல் செய்ததாக 10 அதிகாரிகளின் பட்டியலை வழங்கினர். அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்களையும், செல்போன் உரையாடலையும் வழங்கினர்.

உயிருக்கு ஆபத்து

புகார் அளித்துவிட்டு வெளியே வந்த குணமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று கூறி 4 முறை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்து அலைக்கழித்தனர். எனவே இனியும் தாமதப்படுத்த கூடாது என்ற முடிவின் அடிப்படையில் முதற்கட்டமாக தற்போது 10 அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

பட்டியலை வெளியிடக் கூடாது என்று எங்களுக்கு பலதரப்பில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எனவே என்னுடைய உயிருக்கோ, சங்க நிர்வாகிகள் உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு புகாரில் கூறப்பட்ட 10 அதிகாரிகள் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

புகாரில் கூறப்பட்ட அதிகாரிகள் கடந்த 2 ஆண்டில் ரூ.30 கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளனர். பணியை செய்யாமலே செய்ததாக கணக்கு காட்டி உள்ளனர். இதற்கான அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் ஒப்படைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் பதவி விலக...

ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறையின் நீராய்வு நிறுவன செயற் பொறியாளர் தேவராஜன் என்பவரும் வந்திருந்தார். அவர் நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்தார்.

அவர் கூறும்போது, ‘ஒப்பந்ததாரர்கள் கூறும் புகார் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. பொதுப்பணித்துறையில் லஞ்சம்-லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. நேர்மையான அதிகாரிகளால் பணியாற்ற முடிவதில்லை. எனவே புகாரில் கூறப்பட்ட அதிகாரிகளை ‘சஸ்பெண்ட்’ செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் புகாருக்கு பொறுப்பேற்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடனடியாக பதவி விலக வேண்டும்.’ என்றார்.

Russian varsities offer economical options for students

With a large number of students aspiring to pursue courses in medicine, most colleges in the country have tough entrance examinations along with high eligibility criteria. Adding to that is the financial aspect of this programme, which is a burden to most parents.

Presenting a possible alternative are universities participating in the Russian Education Fair being held at the Russian Centre of Science and Culture. Most of them expect a minimum of 50% marks in relevant subjects.

The two-day education fair showcases a range of Russian government institutions, specialising in medicine and engineering. Some of the participating universities include People’s Friendship University, Kazan Federal University and Volgograd State Medical University. The fair provides direct counselling, spot admissions, visa and safety information along with a 30-day preparation course on language and culture.

“Students get international exposure to practical learning methods with individual attention,” says Krishna Raj, alumnus of People’s Friendship University.

Students from the Tamil medium are also eligible to apply. “The cost of higher education in Russia is relatively less because it is subsidised by the Russian government. Also, there are a wide range of courses in English, which makes it easy for the students from India,” said Sviatoslav A. Timashev from The Ural Federal University.

The education fair will be on from 10 a.m. to 5 p.m. on Sunday.



Higher education in Russia is subsidised and students need to have only 50% in core subjects to be eligible to apply

When even high scorers opt for revaluation

V. Nikhil was sure that he would get a centum in mathematics in the Class XII examinations. So he was disappointed to see that he had received only 197. While he was content with his overall total, he decided to apply for revaluation for the mathematics paper.

Along with Nikhil, many students across the State who have scored more than 195 in papers have started to apply for revaluation to try and push up their totals so they can get in to better colleges.

“I have applied for the scanned copy of my exam paper, but I am sure that I should have gotten a centum in mathematics. If I can manage to get three extra marks, my physics, chemistry and mathematics total will be 480,” Nikhil explained, adding that the three additional marks could mean a better course, or a better college through counselling.

This is not a trend only for science, though. K. Anusuya, who was one of the Tiruvallur district toppers scored 190 in English. According to the principal of Sri Venkateshwara Matriculation Higher Secondary School, where she studied, she was expecting at least three marks more. “The entire school is glad she got a State rank, and we have been training her for a year. We are sure she will get an additional three marks when we give the paper for revaluation,” he said.

Over the past couple of years, the trend of toppers and students who have scored over 190 marks giving their papers for revaluation has increased, a senior official said.

“Around 10 per cent of the students give their answer scripts for revaluation. Last year, over 89,000 students applied,” he said.

While many of them continue to be students who have scored just below the pass mark in certain subjects, since the pass percentage in the State is so high, an increasing number of students have been applying for revaluation to get centums, or push their score up by a few marks to increase their total. Around 5 per cent of the papers we get for revaluation have scores of over 90 per cent, he added.

The Directorate of Government Examinations has set up an information booth on the DPI campus for students who would like to obtain a scanned copy of their exam papers, or apply for revaluation.









With the competition for entry into Tier I colleges being extremely high, more students like Nikhil and Anusuya will be forced to apply for revaluation.

Saturday, May 9, 2015

நீதி மன்றத் தீர்ப்பும்... நிம்மதி இழந்திருக்கும் தமிழனும்!

cinema.vikatan.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வருகின்ற 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பலரும் வீட்டுச் சிறையில் முடங்க வேண்டுமா எனப் புலம்பும் நிலையில் இருக்கிறர்கள்.
நீதிமன்றத் தீர்ப்பு என்றால் பிரச்னைக்கு முடிவு என்ற அர்த்தம் மாறி, தீர்ப்பு எதிர்மறையாக இருந்தால் தமிழனை முடங்க வைக்க வேண்டும், தீராத சோகமாக வன்முறை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்ட அரசியலுக்கு எடுத்துக் காட்டாக   உள்ளது.

வன்முறையால் அரசுப் பேருந்தை எரிப்பதும், பொதுமக்களை கஷ்டப்படுதுவதும் யாருக்கு கொடுக்கும் தண்டனை இது? அதிக அளவு வாக்கு சதவீதம் கொண்ட பெரும்பான்மை உள்ள  கட்சி, தனக்காக ஓட்டு போட்ட மக்களையே கஷ்டப்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? நடுநிலையாக உள்ள பொதுமக்கள், தீர்ப்பு பாதகமாக வர வேண்டும் எனச் சொல்லாத நிலையில், அவர்களை கஷ்டப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? பல்வேறு கட்சிகள் பல ஊழல் வழக்குகளில் சிக்கி இருக்கும் நிலையில், தீர்ப்புகள் வரும் போதெல்லாம் வன்முறை என்றால் ஆண்டு முழுவதும் வன்முறை மிகுந்த ஆண்டாகத்தான் இருக்கும். ஊழல் வழக்குகள் இல்லாத கட்சிகளை விரல் விட்டு என்னும் நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கினாலும், விடுதலை தீர்ப்பு வந்தாலும் பொதுமக்களுக்கு ஒன்றுதான். யாரையும் கஷ்டப்படுத்தி சிறையில் அடைத்துப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு பொதுமக்களுக்கு கிடையாது. எந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் தெய்வம் சும்மா விடாது என்ற எண்ணம் மட்டுமே கொண்டவர்கள் பொதுமக்கள். அன்றாடம் கஷ்டப்படும் மக்களுக்கு யார் ஆட்சி செய்தாலும் ஒன்றுதான். ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிப்பதாலோ, விடுதலை அளிப்பதாலோ ஏழைகளின் வாழ்வில் மாற்றம் வரப்போகிறதா? எந்த அரசியல்வாதிகளையும் சிறையில் தள்ளி பழி வாங்கும் எண்ணம் தமிழனுக்கு கிடையாது.

அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் அறிக்கை போரால் வெட்டிச் சாய்த்துக் கொள்வதால், அப்பாவி தமிழனுக்கே நஷ்டம். எந்த முன்னேற்றமும் இல்லாமல், மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழகம் பின்னோக்கிச் செல்லும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள ஒரே திறமை ஊழல் செய்வதுதான் என்பது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் நன்றாக தெரியும். இந்தியாவில் கொசுக்களைவிட வேகமாக வளர்ந்து நம்மை கொல்வது லஞ்சமும், ஊழலும்தான். மக்கள் தொகையைவிட ஊழல் வழக்குகள் எண்ணிக்கை அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மக்களுக்காக தெருவில் இறங்கி போராட வேண்டிய அமைச்சர் பெருமக்கள், கோவில் கோவிலாகச் சென்று நீதிபதியின் தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்று வேண்டி பல்வேறு வகையில், கடவுளே கோவிலைவிட்டு வெளியேறி ஓடும் அளவிற்கு “கடவுளை கஷ்டப்படுத்தும்” பெருமை நம் அமைச்சர்களையே சேரும். அமைச்சர் பெருமக்கள் இனி நீதிமன்றம் நோக்கி படை எடுப்பார்கள். ஏதோ இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்ற பயத்தில் நீதிபதி தீர்ப்பை மாற்றிச் சொல்லுவார் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களா? இல்லை, ஏற்கனவே முடங்கியுள்ள தமிழக அரசு திட்டங்கள் மேலும் முடங்கட்டும் என்ற  நல்எண்ணத்தில் செல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வழக்கம் போல காவல் துறை எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் வன்முறையை பாதுகாக்கும் துறையாக மாறி மக்களின் சாபத்திற்கு ஆளாகுமா என்பது தெரியவில்லை. சென்ற முறை நடந்த வன்முறை போல இம்முறையும் வன்முறை நிகழ்ந்தால் அது அ.தி.மு.க.வுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் உருட்டு கட்டை தூக்கும் கும்பலை காவல் துறை வேடிக்கை பார்க்காமல், தங்களுக்காக போராடிய கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை எப்படி ஊருக்கு ஒதுக்குபுறமாக, சுடுகாட்டில் கொண்டு இறக்கி விட்டார்களோ அதே வீரத்தை இம்முறை அரசியல் கட்சிகளிடம் காவல் துறை காண்பிக்க வேண்டும்.
வன்முறையில் இறங்கி கட்சியில் பெரிய ஆளாக மாறிவிடலாம் என தவறான எண்ணத்தில் மக்களை கஷ்டப்படுத்தினால், இன்று உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறை நாளை ஆட்சி மாறியதும் வீடு தேடி வந்து உங்களை அழைத்துச் சென்று சிறையில் அடைக்கும். கட்சிப் பதவியைவிட குடும்பமே முக்கியம். வன்முறையால் நிம்மதியும், குடும்ப உறவு முறைகளும் அழியும். வன்முறையால் ஒருவரை அழித்து ஒருவர் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.

ஊழல் குற்றசாட்டில் சிக்கிய முன்னாள் முதல்வருக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அறிக்கைப் போர் நடத்துவது, ஏதோ தங்கள் கட்சி நேர்மையான, ஒழுக்கமான, லஞ்சம், சொத்து குவிக்காத கட்சி என்பது போலவும், நாங்கள்தான் உத்தமர்கள் என சொல்வது போல் நடப்பதும், மக்களிடம் வெறுப்பையே உண்டாக்கி வருகிறது. நேற்று ஆரம்பித்த கட்சிக்கு கூட கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்த உண்மை. நீதி வென்றது எனச் சொல்லும் அரசியல் கட்சிகள், நேர்மையாக சொத்துக் கணக்கை கொடுக்க முடியுமா? நீதியும், நேர்மையும் கட்சிகளில் இருந்தால் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றத்தில் என்ன வேலை?

நாளை மே 10 ''அன்னையர் தினம்" அம்மா என்று அன்போடு அழைத்த தமிழர்களுக்கு அம்மா அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டியது ஒன்றுதான்... மீண்டும் ஒருமுறை கட்சியினரிடமும், பொது மக்களிடமும் கட்சியினரின் மனநிலையை சமன் படுத்தவும், தீர்ப்பு சாதகமாகவோ, பாதகமாகவோ வந்தால் கட்சியினர் அனைவரும் அமைதி காக்க வலியுறுத்த வேண்டும். பாதகமான தீர்ப்பு என்றால் பேருந்தை எரிக்கவும், கடையை அடைக்கவும், மறியல் செய்து வீட்டில் அனைவரையும் முடக்கவும் கட்சியினர் முயற்சித்தால் அது கட்சியை மட்டுமல்ல உங்களது மீதான அன்பையும், மதிப்பையும் அழித்துவிடும். அம்மா என்றால் அன்புதான் நினைவுக்கு வர வேண்டுமே தவிர கட்சியினரின் தற்கொலைகள், அராஜக வன்முறை நினைவுக்கு வரக்கூடாது.

நீதிமன்றத்தின் தீர்ப்பைவிட மக்களின் தீர்ப்புதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற உண்மையை புரிந்து கொண்டு, "அம்மா" என்று அன்போடு அழைக்க வைப்பார்களா? அல்லது “ஐயோ! அம்மா வன்முறையில் இருந்து காப்பாற்றுங்க” என கதறி அழ விடுவார்களா?

எதுவாக இருந்தாலும் எந்த ஒரு  செயலுக்கும் எதிர்வினை உண்டு. இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள் என்பது காலம் காலமாய் அரசியல்வாதிகள் படித்து வரும் பாடம்!

எஸ்.அசோக்

பைக்கை மறித்த காவலர்...கீழே விழுந்த வாலிபர் குடல் சரிந்து பலி...சென்னையில் பயங்கரம்!

சென்னை: சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிலைதடுமாறி சாலையோர தரப்பு சுவரில் விழுந்ததில் வாலிபர் ஒருவர் குடல் சரிந்து பலியானார். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சாலிகிராமத்தில் இன்று நண்பகலில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அவர்கள் நிற்காமல் செல்லவே,  லத்தியால் அவர்களை அடித்துள்ளார் காவலர்.

இதில் நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், ஒருவர் தூக்கி வீசப்பட்டு சாலையோர கம்பியில் விழுந்துள்ளார். வயிற்றில் கம்பி குத்தியதில் அவரது குடல் சரிந்தது. அதிலும், அந்த வாலிபர் வயிற்றில் இருந்து வெளியே சரிந்த குடலை பிடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.
ஒரு மணி நேரம் வராத 108 ஆம்புலன்ஸ்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், அந்த வாலிபர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் செல்வம் (18). விருகம்பாக்கத்தை சேர்ந்தவர். பிளம்பர் ஆக இருந்தார். காயம் அடைந்து தப்பி ஓடிய மற்ற 2 பேரின் பெயர் விவரங்கள் தெரிய வில்லை.
 
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையோரத்தில் இருந்த காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தென் சென்னை கூடுதல் காவல்துறை ஆணையர் அருண் தலைமையில் காவலர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலிகிராமத்தில் பதற்றம் நிலவி வருவதால் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், "50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு காவலர் அந்த இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். அவர்கள் நிலைமாறி கீழே விழுந்தனர். அவர்கள் தவறு செய்திருந்து ஓடியிருந்தாலும் வாகனத்தின் நம்பரை வைத்து காவலர் வழக்குப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் காவலர் அவர்களை லத்தியால் அடித்தது தவறு. தவறு செய்த காவலர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர், காவலர் இடமாற்றம்!

இதனிடையே, வாலிபர் பலியான விவகாரம் தொடர்பாக கே.கே.நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சற்குணம் மற்றும் காவலர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதோடு, இரண்டு பேரையும் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் நாகராஜன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 
 

சென்னை மாநகரின் மக்கள்தொகை 67 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு

சென்னையின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 97 ஆயிரத்து 153 என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள வரைவு கணக்கெடுப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல்முறையாக நடத்தப்படும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்து பல மாநிலங்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கான சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்து, அதன் வரைவு பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்கள்:

சென்னையின் மொத்த மக்கள் தொகை 66,97,153.

மண்டலவாரியாக..

திருவொற்றியூர் 3,22,600. மணலி 92,795. மாதவரம் 1,94,939. தண்டையார்பேட்டை 4,24,277. ராயபுரம் 4,17,835. திருவிக நகர் 11,09,287. அம்பத்தூர் 4,83,357. அண்ணா நகர் 5,75,016. தேனாம்பேட்டை 5,85,899. கோடம்பாக்கம் 6,04,888. வளசரவாக்கம் 3,67,465. ஆலந்தூர் 2,32,974. அடையாறு 8,60,084. பெருங்குடி 2,32,482. சோழிங்கநல்லூர் 1,93,255.

வீடுகள் எண்ணிக்கை

சென்னையில் மொத்தம் 16 லட்சத்து 82 ஆயிரத்து 91 வீடுகள் உள்ளன. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 569 வீடுகளும், மணலி மண்டலத்தில் குறைந்தபட்சமாக 23 ஆயிரத்து 178 வீடுகளும் உள்ளன.

இது தவிர தொழில், கல்வி, சாதி, வருமானம், மின் இணைப்பு, குடிநீர் வசதிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்ட சமூக பொருளாதார தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. வார்டு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் இந்த வரைவு பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 26-ம் தேதி இறுதிசெய்யப்படும். அதை பொதுமக்கள் பார்வையிட்டு திருத்தங்கள் இருந்தால், உரிய படிவங்களை பூர்த்தி செய்து வார்டு, மண்டல அலுவலகங்களில் மேற்கண்ட தேதிக்கு முன்பு வழங்கவேண்டும்.

தள்ளிப்போகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்: காலேஜ் சீட்' கலக்கத்தில் மாணவர்கள்

மதுரை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கல்லூரி களில் விரும்பிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தாண்டு 65 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் மே 20 முதல் 25க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அரசு, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சேர்க்கை துவங்கி விட்டது. இதனால் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த நெருக்கடி ஏற்படுகிறது. சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் இல்லை. தமிழகத்தில் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால் இப்பிரிவு மாணவர்களுக்கு முக்கிய கலை, அறிவியில் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கடிதம் எழுதியுள்ளோம். இப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை தேதி மே 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை உட்பட சில நகரங்களில் சி.பி.எஸ்.இ., முடிவு வெளியாவதற்குள் கல்லூரிகளில் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். இது குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

Friday, May 8, 2015

திருப்பதி பெருமாளுக்கு வடிகிறது வியர்வை - திருப்பதி சில அரிய தகவல்கள்


cinema.vikatan.com

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

இங்குள்ள மடப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.



ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

0 மாணவிகள் தற்கொலை - இது பகிரங்க போர் அல்லவா?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகி முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவர்களின் படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, தேர்வு முடிவுகளைப் போல தற்கொலை முடிவுகள் வரிசையாக வெளிவரத் துவங்கின.



ஈரோட்டை சேர்ந்த காளிதாஸ் என்ற நெசவுத் தொழிலாளியின் மகள் மஞ்சுளா, தேர்வில் வெற்றி பெற்றிருந்தும் மதிப்பெண் குறைந்து விட்டதே என தீக்குளித்து இறந்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ரகு, தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடியாத்தம் நாகராஜ் மகன் குணசேகரன், சென்னை செம்மஞ்சேரியில் வசிக்கும் கரிகாலன் மகள் இலக்கியா, மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை. தேனி, கண்டமனூர் அன்னக்கொடி மகன் அஜய்யோ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோபிசெட்டிப்பாளையம் மாரிமுத்து என்பவரின் மகள் ஆனந்தி, தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதி மாணவி கலா தூக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

விழுப்புரம், தோகைப்பாடி காலனி முருகன் மகள் தேவதர்ஷினி, கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை. இப்படி விரிந்து வேதனையாக நினைவுகளாகச் செல்கிறது இளம் பள்ளிச் சிறுவர்களின் தற்கொலைகள்.

'தேர்வில் வென்றால் மட்டும் போதாது உயர் கல்விக்கு தகுதி பெறும் உயர்ந்த மதிப்பெண் பெற்றாக வேண்டும்...!' என்ற அழுத்தம் மாணவர்கள் மீது சுமத்தப்படுகிறது. சென்ற தலைமுறை வரை தேர்வில் வெற்றி என்பதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வந்தது. அப்போது கூட இந்த அளவு தற்கொலை நிகழ்ந்ததில்லை. பள்ளி வாழ்க்கை, மதிப்பெண்களுக்கு அப்பால் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட தலைமுறை அது. ஆனால், இந்த தலைமுறை சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுத்து விட்டது நமது சமூக அமைப்பு.

'வெற்றி பெறுவதல்ல. அதிகம் மதிப்பெண் பெற வேண்டும்., போட்டியில் நீ இருக்க வேண்டும் என்றால் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்!' என போதிக்கிறது நமது புதிய கல்வி மரபு. உண்மையில் பள்ளிக்கூடங்களின் நோக்கம்தான் என்ன?

மதிப்பெண் பெறுவது. 100% சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டி, மேலும் மேலும் கல்விப் போட்டியில் தங்கள் பள்ளியை முதன்மைப் பள்ளியாக மாற்றுவது என்ற பிராய்லர் பள்ளி தேர்வு முறைகளே இந்தக் தற்கொலைகளுக்கு காரணம். நமது கல்வி முறை கடுமையாக பிளவுபட்டு நிற்கிறது. ஏழைகளுக்கு சேரிப் பள்ளிகளும், செல்வந்தவர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட பள்ளிகளுமாக கல்வித் திட்டங்களே வாழ்க்கை வசதிகளுக்கு ஏற்ப மாணவர் பருவத்தை பிளவுபடுத்தி விட்டது.

நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற பகுதிகளிலும், தமிழகம் முழுக்க கடை விரித்திருக்கும் தனியார் பள்ளிகளும் குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்களுக்காக மாணவர்களை துன்புறுத்துகின்றன. பிளஸ் டூ பாடத்தை 11-ம் வகுப்பிலே தொடங்கி நடத்துகின்றன. டியூஷன் செல்லவோ, பணம் செல்வழித்து படிக்கவோ வசதியற்ற மாணவர்கள் ஓராண்டு மட்டுமே படிக்கும் பாடத்தை, வசதியுள்ள மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். டியூஷன் செல்கிறார்கள். இது போக உள்ளூர் ஆசிரியர்களின் உதவியோடு நடக்கும் தேர்வுகளில் கேள்வித்தாள்களும் லீக் ஆகி, மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு கல்விமுறையை நடத்தி முதல்மதிப்பெண் கொண்டாட்டங்களை பெருமையாக கொண்டாட பள்ளிகள் தேவையில்லை. டியூட்டோரியல்களே போதுமானவை.

இதற்கிடையில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட்டு, 8-ம் வகுப்பிலேயே மாணவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு. இன்னொரு பக்கம், அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட மத்திய அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.) வழங்கியுள்ள உரிமையை இது இல்லாதொழிக்கிறது.

பள்ளிக்கூடங்களின் நோக்கம்

ஒரு குழந்தை பிறப்பதன் அடிப்படை, அது குழந்தை பிராயத்தில் இருந்து வளரும் போது சமூக விலங்காக மாற வேண்டும். ஆமாம், சமூக மயமாதல் என்பது வெறுமனே பெற்றோரிடம் மட்டும் நடப்பதல்ல. பள்ளிக்கூடம் அதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இன்றைய கல்வி முறை நமது இளம் தலைமுறையை சமூக மயமாக்குவதற்கு பதிலாக, சமூகத்தில் இருந்து மிக மோசமாக விலக்கி வைக்கிறது. பாரபட்சமாக அடித்துத் துரத்துகிறது. அதன் விளைவுகள்தான் இந்த தற்கொலைகள். ஒரு வகையில் இது தனியார் கல்விமுறை நடத்தும் கொலைகளே.

இந்த கல்வியாண்டில் 100 சதவிகிதத் தேர்ச்சி விகிதத்தை அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இலக்காக நிர்ணயித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை. ஆனால் தனியார் பள்ளிகளை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது அரசுப் பள்ளிகள். இது அரசும், பல விதமான பாரபட்சமான கல்விமுறையும் நமது ஏழைக் குழந்தைகள் மீது நடத்தும் பகிரங்கமான போர் அல்லவா?

-டி.அருள் எழிலன்

PHYSICS MARKS WILL DECIDE MEDICAL SEAT...DECCAN CHRONICLE


Will Salman Khan get bail, stay out of jail?..TOI

MUMBAI: A day after Bollywood superstar Salman Khan was convicted and sentenced to 5 years RI in a 2002 hit-and-run case, the question on everyone's lips was: Will the Bombay high court admit his appeal and grant him bail today? Even as Bollywood personalities threw their weight behind Khan saying the sentence was too harsh, there was some relief for the actor: the Supreme Court refused to stay the interim bail granted by the HC. Also, Khan does not have to be physically present in the HC today. Usually, in law, a first appeal against a conviction is admitted by a higher court. But if bail is denied, Khan can go to the Supreme Court the same day.

Sessions judge D W Deshpande's 240-page judgment, a copy of which came into exclusive possession of TOI first, makes it clear that he did not believe any statement made by the actor in his defence, nor did he believe Khan's driver Ashok Singh who said it was he, and not Salman, who was driving. "Singh is a got up witness," the judgment said.

About Khan, the judge noted: "The accused is a well-known cine actor and had knowledge that one should not drive the vehicle without licence or after consuming liquor and that too late at night. These are basic rules."

READ ALSO: Salman Khan's appeal, bail plea will be heard today

Stars twinkle in Galaxy, fans keep a count

Salman Khan told TOI in 2002 driver was at wheel

The entire judgment appears to rest primarily on the testimony of police constable Ravindra Patil, who was the actor's bodyguard and was with him in the Land Cruiser when it rammed into a Bandra bakery at 2.45am on September 28, 2002, killing one and injuring four. Patil said he had asked Khan, who was drunk, to slow down. Salman's lawyer Shrikant Shivade could not cross-examine Patil, who died in 2007, but the court held his evidence to be admissible and said "there is no reason for any prudent man to believe that Patil is falsely implicating Salman due to mob or media pressure".



Bollywood actor Salman Khan and his father Salim Khan seeing off Maharashtra Navnirman Sena chief Raj Thackeray who met the actor in Mumbai on Thursday.

The judge said that since the beginning, it was never Khan's defence that his driver Singh was driving. Besides, no one suggested that Patil or singer Kamaal Khan was driving, and Khan never questioned any witness to suggest his other driver Altaf was driving initially, till he went to J W Marriott. "The only irresistible inference is that only Salman was at the wheel," the judge concluded. The judgment said special public prosecutor Pradip Gharat "proved all eight charges" against Khan.

READ ALSO: Salman Khan sentenced to 5 years in jail

Salman Khan 2002 hit-and-run case: 11 key witnesses

"There was 0.062 percent alcohol noticed in his blood. When a person has consumed alcohol and was driving late at night... he has knowledge there an accident can kill those sleep (sic) on the footpath," said the judge, relying on the judgment in the Alastair Pereira case.

Across the judgment, the judge held that "there was no reason" for various witnesses to lie against Khan, each time the actor questioned the evidentiary value or merit of that witness.

Here's what the judge has said in his order on various aspects of the case:

On Khan's conduct

"The accused is (a) renowned film actor and he could do anything to provide help to the injured. If a ghastly accident takes place, wherein one person was crushed and four were injured and in spite of that the person whose vehicle was involved in the accident hided himself (sic) till he is arrested, this itself shows the conduct of the accused," the judgment has stated.

"If according to the accused he did not commit the accident, then he could have convinced people that action will be taken against the driver. Salman Khan did not wait for the police on the spot but he went home and till 10.30am hid himself," the judge said.

"If really the accused Salman Khan committed no wrong, he could have visited the police immediately and lodged information about the incident. It is pertinent to note that the accused did not take any positive steps by visiting the hospital to see the injured and provide medical aid to them and to come to the spot again with the police," the judgment noted.

BLOG: What if Salman Khan had run over a fellow Bollywood superstar?

On his being drunk

According to Justice Deshpande, "Finding the alcohol in the blood is conclusive proof to demonstrate that the person had consumed alcohol. Even if Rizwan Rakhangi, the manager of Rain Bar, and Kalpesh Verma, the parking assistant, did not notice any smell that would not establish that the accused had not consumed alcohol."

On the chemical analyst

The court discarded Salman's claim that the analyst, Dattatray Bhalshankar, was no expert. "If under gruelling cross-examination, the witness is unable to tell the formulas and explain the test, it does not mean that he is not an expert. No doubt can be raised against him. There is no reason for him to lie against the accused. Merely because advanced techniques are not used, opinion cannot be faulted, unless technique used is faulty." The judge on the other hand said, "If the accused would have been arrested immediately after the incident then the percentage of the alcohol in his blood would be more."

Complete coverage: Salman Khan hit-and-run case

On Khan's driving licence

Did Khan have a driving licence? As per the judgment, "The alleged incident occurred in the intervening night of September 27, 2002 to September 28, 2002. The burden shifts on the accused to demonstrate that he was having licence. However, nothing is produced by the accused to show that he was possessing licence. If the accused was having licence on that day, then he could have produced it. Non-production itself shows that the accused was not possessing licence."

On the death of Nurullah Sharif

The judge labelled the defence submission that the death of the victim was caused by the falling crane that was called into lift the car and rescue the injured as imaginary and without any valid and legal evidence. Referring to an injured victim's statement in court, the judge said, " "How is it possible that Nurullah was alive in the hospital and he was crying in pain?... Nurullah expired because of the dash and running over his body by car when he was sleeping."

On Ravindra Patil, the complainant and Khan's bodyguard

Prosecution witness Ravindra Patil is a "natural and impartial witness", the judgment has stated, and there was no reason for him to falsely implicate Khan even though he did not mention about Khan being drunk in the FIR initially.

On culpable homicide not amounting to murder

According to the judge, "When a person has consumed alcohol and was driving the car late in the night, it was difficult for the person to concentrate in the night and that he had a knowledge that there is every likelihood of his meeting with an accident resulting in death or injuries to other particularly those sleeping on the footpath. The knowledge of such fact can neither be far away from the reality, in any case would squarely fall within the term knowledge appearing in Section 304 (II) of the IPC."

On Ashok Singh, Salman's driver

"Ashok Singh is a got up witness who has come to help the accused on the instruction of Salim Khan, father of the accused. After 13 years for the first time under Section 313 CrPC accused has stated that initially Altaf and thereafter Ashok Singh was driving the vehicle."

On five years' RI

The judgment has said, "One cannot compare the punishment awarded in different cases. In some cases punishment awarded not more than 2 years does not mean that in the present case also the court has to pass similar punishment."

துபாயில் +2 தேர்வு : மாணவர்கள் சாதனை

துபாய்: துபாயில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்வெழுதிய 20 மாணவர்களில் 19 பேர் பாஸாகியுள்ளனர். துபாயில் வசித்து வரும் தமிழர்களுக்காக தமிழர்களால் மேல்நிலைப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது மேல்நிலைப்பள்ளியி்ல் கலைப்பரிவு வகுப்பு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதில் 20 மாணவ, மாணவிகள் பயின்று வரு்கின்றனர். தற்போது இப்பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில், மாணவர் முகம்மது குப்தீன் ஜாபர் அலி 1,116 மார்க்குகளும், மாணவிகள் ரஷிதா 1,059 ஆயிஷா 1,045 பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்வுகள் துவங்கிய நேரத்தில் துபாயில் இந்திய தூதரக கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் தமிழக தேர்வு துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தோல்வி பயத்தில் தற்கொலை: தேர்வில் மாணவர் 'பாஸ்'

ஆண்டிபட்டி:பிளஸ் 2 தேர்வில், தோல்வி பயத்தில், முடிவு வெளிவருவதற்கு முதல்நாள் இரவே விஷம் குடித்து மாணவர் இறந்தார். முடிவில் அவர் தேர்ச்சி அடைந்திருந்தார். தேனி மாவட்டம், கண்டமனுார் அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அன்னக்கொடி. இவரது மகன் அஜய், 17. இவர் ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். 'தேர்ச்சி பெறமாட்டோம்' என்ற பயத்தில், நேற்று முன்தினம் இரவே விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர், 663 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிஅடைந்திருந்தார்.

இன்ஜி.,க்கு 'கட்-ஆப்' அதிகரிக்க வாய்ப்பு : மருத்துவத்திற்கு குறைகிறது

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்'
அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும்
உயிரியலில், 'சென்டம்' எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு கணிதத்தில் 3,882 பேர் 'சென்டம்' எடுத்தனர்; இது இந்த ஆண்டு இரண்டரை மடங்கு அதிகரித்து 9,710 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர். ஆனால் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாக குறைந்து உள்ளது.
எனவே இந்த ஆண்டு பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான 'கட் - ஆப்' மதிப்பெண்; மருத்துவப் படிப்புக்கு 'கட் - ஆப்' குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து கல்வியாளர் ஜெய பிரகாஷ் காந்தி கூறியதாவது:கடந்த பலஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 9,710 பேர் 'சென்டம்'
எடுத்துள்ளனர். இதே போல் 198 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.இதனால் இந்த ஆண்டு இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.அதனால் கடந்த ஆண்டு 'கட் - ஆப்' மதிப்பெண்ணை விட அதிகம் இருந்தால் மட்டுமே கடந்த ஆண்டு பட்டியலில் உள்ள இன்ஜி., கல்லூரிகளில் சேர முடியும்.இதேபோல் உயிரியல், இயற்பியல், விலங்கியல் போன்றவற்றில் 'சென்டம்' எண்ணிக்கை பெரிய அளவில்
குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' மதிப்பெண் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.உதாரணமாக கடந்த ஆண்டு 198.25 என்றால் இந்த ஆண்டு 197.75 என்று மாறலாம். ஆனால் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று 'கட் - ஆப்' வைத்திருப்போர் 800 பேர் வரை உள்ளனர்.இவர்கள் எந்த அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டி போடுகின்றனர் என்பதை வைத்தே இந்த ஆண்டு மாணவர்களுக்கு 'சீட்' கிடைக்கும்.இந்த ஆண்டு இன்னொரு முக்கிய பாடமாக இயற்பியல் வந்துள்ளது. இதில் கடந்த ஆண்டை விட பெரிய அளவில் 'சென்டம்' எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு இயற்பியல் - கணிதம், இயற்பியல் - உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். எனவே இந்த ஆண்டு இயற்பியல் மதிப்பெண் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும், என்றார்.- நமது நிருபர் -

சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: ஜூலை வரை குடிநீர் பஞ்சம் இல்லை



கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பிவிட்டதால், சென்னை நகர மக்களுக்கு ஜூலை மாதம் வரை தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்தது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் புதிய வீராணம் திட்டம் அரசு நிதியுதவியுடன் கடந்த 2004-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் சென்னை நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

வீராணம் ஏரியின் கொள்ளளவு கடந்த மாதம் 24-ஆம் தேதி 556 மில்லியன் கன அடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து 6,000 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அந்தத் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக மேலணை, கல்லணை அணைக் கரைக்கு 27-ஆம் தேதி வந்தடைந்தது. அன்றைய தினம் அணைக் கரையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் 1,465 மில்லியன் கன அடி முழு கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி வியாழக்கிழமை அன்று முழுவதும் நிரம்பியது.

இதைத் தொடர்ந்து சென்னை நகருக்கு வரும் ஜூலை மாதம் வரை தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

+2 தேர்வு: முன்னாள் ஸ்டேட் டாப்பர்கள், இப்போது என்ன செய்கிறார்கள்?

+2வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் பலருக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடித்தளமாக உள்ளது. +2வில் ஸ்டேட் டாப்பர்களாக வந்த மாணவர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார்கள்?

சென்ற வருடம், ஒரு வார இதழுக்காக ஸ்டேட் டாப்பர்கள் சிலரைப் பேட்டி கண்டேன். அதன் முழு வடிவம் இது.

ஐஸ்வர்யா மீனாட்சி:

(2002-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

பத்தாவதில், மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் போனதால் என்னால் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கமுடியவில்லை. +2வில், டிஏவி பள்ளிக்கு மாறினேன். இந்த மாற்றம் நல்ல பலனை அளித்தது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்கிற இலக்கை அடைந்தேன்.

பிட்ஸ் பிலானியில் சீட் கிடைத்தது. ஆனால், மேற்படிப்புக்கு யு.எஸ் போவதாகத் திட்டம் இருந்ததால் பெற்றோருடன் இருக்கவேண்டும் என்பதற்காக வெங்கடேஸ்வராவில் பி.இ. பண்ணினேன். பல்கலைக்கழக அளவில், ஐந்தாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு, அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் எம்.எஸ். முடித்தேன். அங்கேயே பகுதிநேரமாக வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

நான் படிக்கும் காலத்தில் எனக்காக அமெரிக்க அரசு 20,000 டாலர் செலவழித்திருக்கும். கூடவே வேலை செய்ததற்காக சம்பளமும் கிடைத்தது (ஒரு வாரத்துக்கு குறைந்தது 20 மணி நேரம் வேலை.) நடுவில் மூன்று மாதம், ஐபிஎம்-மில் இண்டர்ன்ஷிப்பும் கிடைத்தது. ஐபிஎம்-மில் என்னை ஒரு மாணவர்போல நடத்தவில்லை. ஐபிஎம்-மில் வேலை செய்கிறவருக்குண்டான பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இந்த நல்ல அனுபவத்துடன் படிப்பை முடித்தபிறகு, தாம்சன் ராய்ட்டரில் வேலை கிடைத்தது. 2009ல், பாரிஸில் நடந்த சர்வதேச கணினி மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளிருந்து தேர்வான இருபது கட்டுரைகளில் என்னுடையதும் ஒன்று. பிறகு, தொழில்நுட்ப ரீதியாக வேலை செய்யவேண்டும் என்பதற்காக மைக்ரோசாஃப்டில் விண்ணப்பித்தேன். +2வில் மாநில அளவில் முதலில் வந்தால் எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் அது தனிக்கவனத்தை ஏற்படுத்தும். மைக்ரோசாஃப்டில் தேர்வாகி, 2010லிருந்து அங்கு பணிபுரிகிறேன். இப்போது, சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் என்ஜினியர் - லெவல் 3 என்கிற நிலையில் இருக்கிறேன்.

+2வில் முதலிடம் வந்ததால் கிடைத்த ஸ்காலர்ஷிப் தொகையே எப்படியும் ரூ. 75,000 வரை இருக்கும். கூடவே 9 விருதுகளும் கிடைத்தன. ஒரு ஐஐடி மாணவர் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. ஆனால், கடுமையான உழைப்பினால் எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும். +2வில் பல லட்சம் மாணவர்களுடன் மோதி, முதலிடத்தைப் பிடித்ததால் அது தந்த தன்னம்பிக்கைக்கு ஈடே கிடையாது.

வித்யா சாகர்:

(2000-ம் வருடம் 1181 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

டிஏவியில் படித்தேன். ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நிறைய மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்கிற குறிக்கோள்தான் இருந்தது. +2வில் மாநில அளவில் முதலிடம் வந்தது, என் அப்பாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தேர்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு பள்ளிக்குச் சென்றபோது, வாசலிலேயே 100 பேருக்கு மேல் வாழ்த்தி வரவேற்றதை மறக்கவேமுடியாது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததால் நிறைய ஸ்காலர்ஷிப்களும் பல தொடர்புகளும் கிடைத்தன.

பிட்ஸ் பிலானியில் பி.இ. முடித்து, சென்னையிலுள்ள அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். 2005ல், சிங்கப்பூரில், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் எம்.எஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தேன். அதே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பகுதி நேரமாக வேலை செய்தேன். 2007 முதல் அங்கேயே காண்டினெண்டல் என்கிற ஜெர்மன் நிறுவனத்தில் 2013 வரை பணிபுரிந்தேன். சீனியர் சாஃப்ட்வேர் என்ஜினியர் பதவி வரை வேலை பார்த்தாலும் அடுத்ததாக மேனேஜ்மெண்ட் பிரிவில் நுழைய ஆர்வம் ஏற்பட்டது.

வேலை செய்துகொண்டிருக்கும்போது எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்தேன். படிப்பு, வேலை என இரண்டையும் சமாளிப்பது ஒருகட்டத்தில் சவாலாக இருந்தது. படிப்புக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக என் வேலையை ராஜினாமா செய்தேன். எம்.பி.ஏ முடித்தபிறகு, 2014ல் சிங்கப்பூரில் உள்ள எமர்சன் பிராசஸ் மேனேஜ்மெண்ட் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் என் விருப்பத்துக்கேற்ற மார்க்கெட்டிங் மேனேஜர் வேலை கிடைத்திருக்கிறது. என்ஜினியரிங் பேக்ரவுண்ட் உள்ள நிறுவனம் என்பதால் எனக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

கல்லூரி பாரதி:

(2003-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். 10வதில் ஆரம்பித்து அடுத்த மூன்று வருடங்களுக்கு சென்னையைத் தாண்டி எங்குமே போகவில்லை. ஒரே படிப்பு மயமாகத்தான் இருந்தேன். டிவி, பாட்டு வகுப்புகள் என என் விருப்பங்களை சிலகாலம் ஒதுக்கிவைத்தேன். +2வில் நினைத்ததைச் சாதித்தவுடன், பிட்ஸ் பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். பிறகு, ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன்.

திருமணத்துக்குப் பிறகு புனேவில் ஒருவருடம் வேலை பார்த்துவிட்டு, 2011ல், எம்.எஸ் படிக்க அமெரிக்கா சென்றேன். பி.இ. முடித்தபிறகு எம்.எஸ் படிக்காததற்குக் காரணம், வேலை அனுபவம் வேண்டும் என்று நினைத்தேன். சம்பாதித்தால்தான் மேற்படிப்புக்காகப் பணம் சேமித்து, அப்பாவைத் தொந்தரவு பண்ணாமல் இருக்கமுடியும் என்று எண்ணினேன். நான், என் கணவர் இருவருமே எம்.எஸ் படிப்பை அமெரிக்காவில் முடித்தோம். பிறகு, இருவருக்கும் அங்கேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

+2வில் முதலிடம் வந்ததால் நிறைய பலன்கள். பிலானியில் 30,000 ரூபாய்க்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பிலானியில் முதல் நாளன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், எல்லா மாநில ஸ்டேட் டாப்பர்களுக்கும் துணை வேந்தர் தனியாக மரியாதை அளித்தார். தமிழ்நாட்டிலிருந்து பிலானியில் சேர்ந்தவர்களுக்கு என்னை நன்றாகத் தெரிந்திருந்தது.

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ஸ்டேட் டாப்பர் என்பதற்கு ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்தது. +2வில் முதலிடம் பெற்று சாதனை செய்ததால் மற்ற வேலைகளிலும் நீ பொறுப்பாக இருப்பாய் என்று நம்பினோம், உன்மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது என்று என்னை நேர்காணல் செய்தவர்கள் பிறகு கூறினார்கள். அதேசமயம் ஸ்டேட் டாப்பர் என்பதன் மதிப்பு, பெருமையெல்லாம் நாள் போகப்போக குறையத்தான் செய்யும். அதன்பிறகு வேலையில் நீங்கள் காட்டும் ஈடுபாடு, பங்களிப்புதான் உரிய பலனைக் கொடுக்கும்.

ஸ்டேட் டாப்பர் ஆனதால் +2 தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு என்னால் அறிவுரை சொல்லமுடிந்தது. முதலிடம் வந்ததால் கடவுள் மீதும் அதிக நம்பிக்கை வந்தது. என்னைப் போலவே பல லட்சம் பேர் +2வில் உழைத்துப் படித்தார்கள். ஆனால், நான் மட்டும் முதலிடம் வந்ததற்கு கடவுளின் கருணையும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்.

சுஜனா :

(2005-ம் வருடம் மாநிலத்தில் முதலிடம். +2 தேர்வில், முதல்முறையாக 1190 மதிப்பெண்கள் எடுத்தவர்)

+2 வில் ஸ்டேட் டாப்பர் ஆனபிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் கிடைத்தது. எனக்கு இயற்பியல், கணிதத்தில் ஆர்வம் அதிகம். அதற்கு மெக்கானிக்கல்தான் சரிவரும் என்று நினைத்தேன். பிறகு, அமெரிக்காவில் எம்.எஸ் படித்தேன். இப்போது இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றுகிறேன்.

ஸ்டேட் டாப்பராக வந்ததால் என்னுடைய அணுகுமுறை மாறிப்போனது. எதையும் கேள்வி கேட்டுப் பழகவேண்டும், புரிதலுடன் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்கிற மனப்பான்மை உருவானது. +2 முடிவுகள் வந்த தினத்தை மறக்கமுடியாது. பாராட்டுகள், மீடியா பேட்டிகள் என பரபரப்பாக இருந்தேன். மீடியாவில் வந்ததால் வெளியே சிலர் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள். அந்தப் புகழெல்லாம் சில நாள்கள்தான். அதன்பிறகும் அதே பெருமையை வைத்து எல்லா இடங்களிலும் சலுகை கிடைக்காது.

இப்போது எல்லோரும் என்ஜினியரிங்தான் படிக்கிறார்கள். நமக்கு என்ன விருப்பம் என்று கண்டுபிடித்து அதில் ஈடுபாடு காட்டவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே நேரத்தில் முயற்சி செய்வதற்குப் பதிலாக, எது உங்கள் விருப்பம், எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்து உங்கள் முயற்சிகளை ஓர் இலக்கு நோக்கி நகர்த்தவேண்டும். உதாரணமாக, +2 சமயத்தில், ஐஐடி அல்லது அரசுத் தேர்வு போன்றவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் சரியாக முடிவெடுக்கவேண்டும்.

எம்.பி.பி.எஸ்., பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வில் உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 200-க்கு எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, ஒரு மாணவர் உயிரியலில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198,
வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:

உயிரியல் 198/2 100-க்கு 99
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 198.50

மேலும் ஒரு உதாரணம்:
உயிரியல் 196/2 100-க்கு 98
இயற்பியல் 199/4 50-க்கு 49.75
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 197.75
பிளஸ் 2 பாடத் திட்டத்தில் அறிவியல் பிரிவை (சயின்ஸ் குரூப்) தேர்வு செய்து படித்த ஒரு மாணவர் தாவரவியலில் 200-க்கு 200, விலங்கியலில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:

தாவரவியல் 200/4 50-க்கு 50
விலங்கியல் 198/4 50-க்கு 49.5
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 199

பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:
பிளஸ் 2 தேர்வில் கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 200-க்கு எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:-

கணிதம் 198/2 100-க்கு 99
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
பி.இ. படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 198.50

Thursday, May 7, 2015

சல்மானுடன் காரில் பாதுகாப்புக்குச் சென்றதால் சாகும் வரை கொடூரத்தை சந்தித்த கான்ஸ்டபிள்: நண்பர் கண்ணீர் பேட்டி

கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் (உள்படம்) , காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.

சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.

சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.

சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.

அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார். இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் பல பிரச்சினைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.

கார் விபத்து குறித்த வழக்கை முதலில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாத பாட்டீல், துணிச்சலாக நடந்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று சாட்சியம் அளித்தார். இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன.

நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார். சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடி யைத் தாங்க முடியாமல் தலைமறை வானதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன் போலீஸ் துறையில் இருந்தவர்களே, சல்மான் மீது கூறப்பட்ட புகாரை மாற்றி சொல் லும்படி நிர்பந்தம் கொடுத்தனர் என்று புகார் எழுந்தது. அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு போலீஸார் பாட்டீலை கைது செய்தனர். அத்துடன் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.

அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டி ருந்தார் பாட்டீல். அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்து விட்டார்.

பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான். அவர் கூறும்போது, ‘‘பாட்டீல் எனக்கு சிறந்த நண்பர்.

இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய போலீஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை. எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்’’ என்றார்.

இப்போது சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இறந்தவர், படுகாயம் அடைந்த 4 பேருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பரிதாபமாக உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும்தான் என்கிறார் அவரது நண்பர்.

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

சென்னை: கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இரண்டாவது இடத்தையும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவே இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என பாராட்டுகிறார்கள் அம்மாவட்ட மக்கள்.
 


12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், முதல் 14 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் பெரம்பலூரைத் தவிர வேறு ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை.

கடந்த முறை 2014 –ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 93 சதவிகிதத்தை எட்டியிருந்தது.தற்போது 2015-ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.25% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை எட்டி பிடிக்கவும், கல்வி அறிவில் பெரம்பலூர் மாவட்டத்தை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமதுதான் காரணம் என்கிறார்கள்,பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்.

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

அதேப்போன்று அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தேர்வு செய்து, அவற்றை மூன்று வகைகளாகப் பிரித்து, தேர்ச்சியில் 50 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சிவப்பு ஸ்டிக்கர், 70 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு மஞ்சள் ஸ்டிக்கர், 80 முதல் 100 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு பச்சை ஸ்டிக்கர் என அடையாளம் கொடுத்திருந்தார்கள். அதன்படி, தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இவை மட்டும் இல்லாமல் சூப்பர் 30 என்று ஒரு அமைப்பு அமைத்து அதில் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் அமைத்து கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்.அவற்றில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்:


1.வேளாங்கண்ணி - பெரம்பலூர் 1161


2. அசோக்குமார் 1147 - பெரம்பலூர்


3. சௌந்தர்யா 1141 - சு.ஆடுதுறை

இந்த மூன்று மாணவ,மாணவிகளும் சூப்பர் 30 அமைப்பில் பயின்றவர்கள்.பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்படட மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாவட்ட நிரவாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் அம்மாணவிகள் கல்வி படிப்பை தொடர்ந்தார்கள். இவற்றில் 19 மாணவியர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றார்கள்.


பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 8296. வெற்றி பெற்றவர்கள் 8068.


பெரம்பலூர் மாவட்டத்தில் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகள்:

முதல் இடம்:
ராஜதுரை-1180-ராஜவிக்னேஸ் மேல்நிலை பள்ளி.மேலமாத்தூர்.


2-ம் இடம்:
ரேணுகா-1177-ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, பெரம்பலூர்.


3-வது இடம்:
மீனா-1176 ராஜவிக்னேஸ் மேல்நிலைப்பள்ளி.மேலமாத்தூர் பெரம்பலூர் மாவட்டம்



இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தை தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்ததற்காக அம்மாவட்டத்தின் ஆட்சியர் தரேஸ் அகமதுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


ஆனால், கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களில் அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி , திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டுதான் இந்த நிலை என்று இல்லை. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 36 ஆண்டுகளாகவே இதேநிலைதான் நீடிக்கிறது.

-ர.ரஞ்சிதா ( மாணவ பத்திரிகையாளர்)

பிளஸ் 2 தேர்வில் துபாய் வந்தது எப்படி? ருசிகர தகவல்கள்!

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய தகவல்கள் வெளியாகின.

அதில் ‘ துபாய் ’ என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

கேலியும் கிண்டலுமாக நம்ம 'நெட்டிசன்கள்' வடிவேல் பாணியில் துபாய் எங்கே இருக்கிறது...? அது தூத்துக்குடி பக்கம் ... உசிலம்பட்டி பக்கம் இருக்கு... என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.


அத்தோடு வாட்ஸ் அப் மூலம் அரசுத் தேர்வுத்துறையைக் கிண்டல் அடித்து கலாய்க்கிறார்கள்.

ஆனால் இதில் பலருக்கு தெரியாத உண்மை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை துபாயில் வாழும் தமிழர்களின் வாரிசுகள் நமது அரசு தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள் என்பதே அது.

இந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி, டாக்டர் ராஜராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

"இந்தியா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலை நிமித்தமாக துபாய்க்கு போய் செட்டில் ஆகிறார்கள். ஆனால் துபாய் நாட்டில் பாடத்திட்டங்கள் அனைத்தும் அரேபிய மொழி மற்றும் உருது மொழியில் இருப்பதால் தமிழர்கள் பலரும் நம் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். துபாயில் ‘ கிரசண்ட் ’ என்ற தனியார் பள்ளி ஒன்று அங்குள்ள தமிழர்களால் நடத்தப்படுகிறது. அங்கு ஆங்கில மீடியம் மூலம் தமிழ் பாடங்களை நடத்துகிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு வரை கிரசண்ட் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்து வந்தது.

இப்போது மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அங்கு படிக்கும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வை ஆண்டு தோறும் அரசுத்தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள். இங்கே எப்படி தமிழகம் தவிர பாண்டிச்சேரிக்கும் நாம் தேர்வு நடத்துகிறோமோ, அதே மாதிரிதான் துபாய் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துகிறோம். துபாயில் பள்ளி தொடங்கியதுமே நமது ஆங்கிலம் மீடியம் பாட நூல்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்து விடுவோம்.

அதே நேரம் அந்தப் பள்ளியில் ஆர்ட்ஸ் குரூப் படிப்புக்கு மட்டுமே அனுமதி. அறிவியல் பாடத்திட்டத்திற்கு அனுமதி கிடையாது. ஏனென்றால் அறிவியல் பாடத்திட்டம் என்றால் பிளஸ் 2 தேர்வின் போது சயின்ஸ் பிராக்டிக்கல் செய்முறைத்தேர்வு நடத்த வேண்டும்.

அதைக் கண்காணிக்க இங்கிருந்து அதிகாரிகளை அனுப்பி வைக்க வேண்டும். இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் கணக்கு, வரலாறு, வணிகவியல் பாடத்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. எனவே பொதுத்தேர்வு எழுத துபாயில் இருந்து பள்ளி மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இங்கிருந்து ஹால் டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும். பிறகு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்களை இந்திய தூதரகத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி வைப்போம்.

தமிழகத்தில் தேர்வு தொடங்கும் அதே நாளில் இந்திய தூதரகக் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் தேர்வுகள் நடக்கும். விடைத்தாள்களை இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் மட்டுமே பாஸ் ஆனார்கள். ஒருவர் தோல்வி அடைந்து விட்டார். எனவே இந்த ஆண்டு துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95 சதவீதம். இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கான மார்க் சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும்" என்றார் அவர்.
எம்.கார்த்தி.

NEWS TODAY 2.5.2024