Friday, May 8, 2015

துபாயில் +2 தேர்வு : மாணவர்கள் சாதனை

துபாய்: துபாயில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்வெழுதிய 20 மாணவர்களில் 19 பேர் பாஸாகியுள்ளனர். துபாயில் வசித்து வரும் தமிழர்களுக்காக தமிழர்களால் மேல்நிலைப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது மேல்நிலைப்பள்ளியி்ல் கலைப்பரிவு வகுப்பு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதில் 20 மாணவ, மாணவிகள் பயின்று வரு்கின்றனர். தற்போது இப்பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில், மாணவர் முகம்மது குப்தீன் ஜாபர் அலி 1,116 மார்க்குகளும், மாணவிகள் ரஷிதா 1,059 ஆயிஷா 1,045 பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்வுகள் துவங்கிய நேரத்தில் துபாயில் இந்திய தூதரக கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் தமிழக தேர்வு துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024