Friday, May 8, 2015

தோல்வி பயத்தில் தற்கொலை: தேர்வில் மாணவர் 'பாஸ்'

ஆண்டிபட்டி:பிளஸ் 2 தேர்வில், தோல்வி பயத்தில், முடிவு வெளிவருவதற்கு முதல்நாள் இரவே விஷம் குடித்து மாணவர் இறந்தார். முடிவில் அவர் தேர்ச்சி அடைந்திருந்தார். தேனி மாவட்டம், கண்டமனுார் அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அன்னக்கொடி. இவரது மகன் அஜய், 17. இவர் ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். 'தேர்ச்சி பெறமாட்டோம்' என்ற பயத்தில், நேற்று முன்தினம் இரவே விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர், 663 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிஅடைந்திருந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024