Showing posts with label Rain 2017. Show all posts
Showing posts with label Rain 2017. Show all posts

Monday, November 6, 2017


Weathermen forecast short spells till Tuesday

TNN | Updated: Nov 6, 2017, 06:13 IST



CHENNAI: Weathermen have forecast short spells of rainfall until Tuesday, following which the city is likely remain dry. North Chennai was battered with rain on Sunday, while southern parts remained relatively dry. Nungambakkam recorded only 3mm rainfall in the 12 hours until 8.30pm on Sunday.

According to Skymet weather meteorology vice-president Mahesh Palawat, the city is likely to experience a dry spell for more than a week after Tuesday. "There may be light showers now and then during the dry spell. The temperature may rise by a few degrees from Wednesday," Palawat said.

The met office has forecast a few spells of rain or thundershowers with heavy spells at times on Tuesday.

A trough of low over lies over southwest Bay of Bengal and adjoining southeast Tamil Nadu and Comorin area, as per a met bulletin. This weather system has brought rainfall on Sunday. Palawat said, "The trough of low near the TN coast will likely move away and head towards south Andhra Pradesh coast in the coming days. Hence Tamil Nadu will be left dry after that."

The met office said that a low pressure area is likely to emerge over Andaman sea and neighbourhood Tuesday. "The system over Andaman sea, as per weather models, will move towards West Bengal and Bangladesh. It may bring a few light showers in the city on Tuesday," Palawat said.

During the 24 hours from 8.30am on Saturday to 8.30am on Sunday, the city received only 1cm rainfall at Nungambakkam. Anna University, DGP Office (Mylapore) and Chennai Airport received 2cm rainfall each. Southern and delta districts received heavy rainfall, with Papanasam (Tirunelveli district) recording 14cm rainfall, Nagapattinam (Nagapattinam district) 12cm, Karaikal (Karaikal district) 11cm, Thiruthuraipoondi (Tiruvarur district) and Cuddalore (Cuddalore district) 9cm each.

The maximum and minimum temperature on Sunday was 29.4 °C and 23.7 ° C.

மழை நிலவரங்களை எளிதில் தெரிந்துகொள்ள வானிலை ஆய்வு மைய இணையதளம் தமிழில் வடிவமைப்பு: தவறான தகவல்கள் பரப்புவதைத் தடுக்க ஏற்பாடு

Published : 05 Nov 2017 09:44 IST

ச.கார்த்திகேயன்சென்னை

மக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையம் தனது பிரத்யேக இணையதளத்தை தமிழில் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் மழை எச்சரிக்கை உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த 2015-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள் ளம் காரணமாக, வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களைத் தெரிந்துகொள்வதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்கள் உலா வருகின்றன. அவற்றில் பல தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவையாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களாகவும் உள்ளன.

இதுபோன்ற செயல்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தடுக்கும் விதத்தில், நம்பகமான, சரியான வானிலை நிலவரங்களை பொதுமக்கள் எளி தில் தெரிந்துகொள்ளும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம், தனது http://imdchennai.gov.in இணையதளத்தில் வானிலை நிலவரம் குறித்த விவரங்களை தமிழில் படிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. முகப்பு பக்கத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக் கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியது:

வடகிழக்கு பருவமழைக் காலம் என்பது, தமிழகத்துக்கு முக்கிய மழைக்காலமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்களை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். அண்மைக் காலமாக அத்தகைய ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எங்கள் இணையதளத்தில், இதுநாள் வரை ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் கொடுக்கப்பட்டு வந்தன. அனைத்து தகவல்களையும் முகப்பு பகுதியில் வைக்க முடியாது. வானிலை முன்னெச்சரிக்கை நிலவரங்கள், ஏதாவது ஒன்றினுள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த இணையதளத்தை, தொடர்ந்து பார்வையிட்டு வருபவர்களுக்கு மட்டுமே, எந்தெந்த தகவல்கள், எதனுள் இருக்கிறது என்பது தெரியும். சாதாரண மக்கள் பார்வையிடுவது சிரமமாக இருக்கும்.

மேலும் சமூக வலைதளங்களில் தவறான வானிலை நிலவரங்கள் பரப்பப்படுகின்றன. அதனால் மக்கள் பீதி அடைகின்றனர். இதைத் தடுக்கும் விதமாகவும், மக்களுக்கு சரியான வானிலை நிலவரம் சென்று சேரவும், சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை, வானிலை ஆய்வு மைய இணையதளத்தை திறந்த உடனே, அதன் முகப்பு பக்கத்தில் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் இடம்பெற்றுள்ளன. அதை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

வடகிழக்கு பருவமழை காலத்துக்காக பிரத்யேகமாக இந்த இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற்று, இந்த வசதியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இணையதளம். இதில் வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே வெளியிடுவோம். சமூக வலைதளங்களில் வானிலை தொடர்பாக எந்த தகவல் வந்தாலும், வானிலை ஆய்வு மைய இணையதளத்தை திறந்து பார்த்து, உண்மை நிலையை மக்களே தெரிந்துகொள்ள, இந்த சேவை வசதியாக இருக்கும் என்றார்.

மயிலாடுதுறையில் மழை நீடிப்பு : இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு


மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், ஏழாவது நாளாக கனமழை பெய்து வருவதால், மீனவர்கள், விவசாயிகள் என, அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் பகுதியில், ஏழாவது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. 

பாய், போர்வை : வெள்ளம் சூழ்ந்த பகுதி களில் உள்ள மக்களை மீட்டு, 13 முகாம்களில் தங்க வைத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உணவு, வேட்டி, சேலை, பாய், போர்வை வழங்கப்பட்டது.
தலைச்சங்காடு, கருவேலி, எருமல் உள்ளிட்ட பல இடங்களில், வரத்து வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், 1 லட்சம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில், 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகும் நிலையில் உள்ளன. தண்ணீரை வெளியேற்ற உதவுமாறு, பொதுப்பணி துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
வருவாய் துறை அதிகாரிகள், சமாதானப்படுத்தினர். மறியலால், சீர்காழி-- திருமுல்லைவாசல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பவுன்ராஜ், பூம்புகாரில் நேற்று, மழை பாதிப்பை பார்வையிட வந்தார். அவரை மீனவர்கள் சூழ்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுமாறு பொதுப்பணி துறையினரை, எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
கனமழை மற்றும் கடல் சீற்றத்தால், சந்திரபாடி துவங்கி கொடியம்பாளையம் வரை, 26 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 1,000 விசைப்படகுகள், 5,000த்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், துறைமுகம் மற்றும் துாண்டில் வளைவுகளில், பாதுகாப்பாக நிறுத்தப் பட்டுள்ளன.
பழநியில் கொட்டியது
பழநியில் கொட்டிய மழையால், நேற்று இரவு, தங்க ரத புறப்பாடு நிறுத்தப்பட்டது; 'ரோப் கார்' சேவையும் பாதிக்கப்பட்டது.
பழநியில், நேற்று மாலை 4:45 மணி முதல், மழை பெய்தது. இதனால், ஒரு மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே, குளம்போல தேங்கிய தண்ணீரால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் மிதந்து சென்றன.
மழையால், 'ரோப் கார்' சேவை நிறுத்தப்பட்டு, 'வின்ச்' படிப்பாதையில் பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 
இரவு 7:00 மணிக்கும் மழை தொடர்ந்ததால், தங்கரதம் நிறுத்தப்பட்டு, தேர்நிலையில் பூஜைசெய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தங்கரதம் இழுக்க கட்டணம் செலுத்திய, 160 பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பழநியில், 66.5 அடி உயரம் உள்ள வரதமாநதி அணை, 65 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு, 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 
'இன்று காலையில் அணை இரண்டாவது முறையாக நிரம்பும்' என, பொதுபணித்துறையினர் தெரிவித்தனர்.

மழைக்கால விடுமுறை நிறைவு : பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு


மழைக்கால தொடர் விடுமுறை முடிந்து, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இன்று, இடை தேர்வுகள் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். 
சென்ற வாரம் திங்களன்று மட்டுமே, பள்ளிகள் செயல்பட்டன. வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், அக்., ௩௦, செவ்வாய் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, கனமழை குறைந்து விட்ட நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் வரமுடியாத அளவுக்கு, வெள்ளப்பெருக்கு உள்ள பகுதி பள்ளிகளும், வளாகத்தில் தண்ணீர் தேங்கிய பள்ளிகள் மட்டுமே இன்று இயங்காது.
இதை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ள, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இன்று பள்ளிகள் துவங்கும் போது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வும் துவங்குகிறது. அதேநேரத்தில், மழை பாதித்த பகுதிகளில், பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் அகற்றி, நிலைமையை சீர் செய்யவும், அதிகாரிகள் வலியுறுத்திஉள்ளனர்.

- நமது நிருபர் -

மழைக்கு தேசிய நெடுஞ்சாலைகள், 'அவுட்'  சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறல்
மழையால், தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறி வருகின்றன.




சென்னையை, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுடன் இணைக்கும் வகையில், 4,994 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டு உள்ளன. இதில், சென்னை - திருச்சி, சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, தேசிய நெடுஞ் சாலைகள் முக்கியமானவை.

இச்சாலைகள் வழியாக, நாள் தோறும்ஏராளமான சரக்கு வாகனங்கள் சென்னை வந்து செல்கின்றன. பயணியர் போக்குவரத்திற்கான அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் வருகின்றன.இச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, பல்வேறுஇடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை பராமரிப்பு பணிகளை செய்து, சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, தனியார் நிறுவனங் களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஏற்கனவே, முறையான பராமரிப்பின்றி கிடந்த சாலைகள், மழையால் மேலும் சேதம் அடைந்துள்ளன.

பல இடங்களில், அபாய பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர்தேங்கி உள்ளது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சென்னை - கோல் கட்டா தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றில், வாகனங்கள் தள்ளாடியபடியே
பயணிக்கின்றன; ஆங்காங்கே, வாகனங்கள் பழுதாகியும் நிற்கின்றன.

எனவே, இச்சாலைகளில் பயணிக்கும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின் றனர். போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், சாலைகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -


கரையை கடந்தது, 'டாம்ரே' புயல்  இயல்புக்கு திரும்பியது வங்க கடல்

வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருந்த, 'டாம்ரே' புயல், வியட்நாம் அருகே, பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது. அதனால், வங்கக் கடலின் சூழல் இயல்பு நிலைக்கு மாறியுள்ளதால், விடாது கொட்டிய அடைமழை விலகியுள்ளது.




தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, அக்., ௨௭ல் துவங்கி, ௨௯ல் தீவிரம் அடைந்தது. சென்னை முதல் நாகை வரை, கனமழை கொட்டியது. மழைக்கு காரணமான, காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர், ௧ல், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு நகரும் என, கணக்கிடப்பட்டது. ஆனால், நகராமல், நவ., 2ல் மிககன மழை கொட்டியது.

ஒரே நாள் இரவில், ஐந்து மணி நேரம் பெய்த தால், சென்னை மெரினாவில், அதிகபட்சமாக 30செ.மீ., மழை பதிவானது. பின், நேற்று முன் தினம் இரவு வரை மிதமாகவும், சில நேரங் களில் கனமழையும் தொடர்ந்தது. இந்த தொடர் மழைக்கும், அடைமழைக்கும், வங்கக் கடலின்

சூழல் மாறியதே காரணம் என, வானிலை மற்றும் கடலியல் நிபுணர்கள் கூறினர். அதாவது, வங்கக் கடலை ஒட்டிய, தென் சீன கடலில் சுழன்று வந்த, டாம்ரே புயலால், வங்கக் கடலில் இருந்து மேக கூட்டங்கள் நகர முடியவில்லை;

அவை, தமிழககடற்பகுதியை சுற்றி வந்ததே, அதிக மழை பெய்யகாரணம் என்றனர்.'டாம்ரே புயல், நவ., 4ல் கரையை கடக்கும் வரை, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் கன மழை தொடரும்.'புயல் கரையை கடந்தால், ஞாயிறு முதல் நிலைமை சீராகும்' என்றும் கூறினர்.அதன்படி,நேற்று முன்தினம் இரவு, டாம்ரே புயல், வியட்நாமில் பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது.

இதையடுத்து,தென் சீன கடலிலும், அதையொட்டிய வங்கக் கடலிலும், கொஞ்சம் கொஞ்சமாக கடல் சூழல் மாறியுள்ளது. இதனால், மீண்டும் காற்றின் சுழற்சி இயல்பு நிலைக்கு மாறி, மேக கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன.

சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதியும், தாழ்வு நிலையாக வலு குறைந்து, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு நகர்ந்துள்ளது. எனவே, சென்னை உள்ளிட்ட வட கிழக்கு கடலோர மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த, அடைமழை விலகி உள்ளது. இனி, வழக்கமான பருவமழை, டிசம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

'தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அடைமழை இருக்காது; மிதமான மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின், மண்டல துணை பொது இயக்குனர், பாகுலேயன் தம்பி நேற்று கூறியதாவது:வங்கக் கடலின், வட கிழக்கு பகுதி யில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடா மற்றும் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் அருகே, தென் கிழக்கு கடலோர பகுதிக்கு இடையே, தற்போது மையம் கொண்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மழை வதந்தியை பரப்பாதீர்!: பாலச்சந்திரன் வேண்டுகோள்

மழை,வதந்தி,பரப்பாதீர்,பாலச்சந்திரன்,வேண்டுகோள்
பொள்ளாச்சி: ''மழை குறித்து, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், அவர் அளித்த பேட்டி: வட கிழக்கு பருவமழை, தமிழகத்தின் முக்கிய காலமாகும். 27ம் தேதி முதல், கடலோர மாவட்டங்களில், வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வளி மண்டலத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில், இரு நாட்களுக்குள், மழை குறைய வாய்ப்புள்ளது. 

கடலில் நில நடுக்கம் ஏற்பட்டால், சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என கணிக்க முடியும். தற்போது, கணிக்க முடியாது. வானிலை மையம், தொடர்ந்து மழை குறித்து கணித்து, சரியான தகவல்களை தெரிவித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு சிலர், 100 செ.மீ., வரை மழை பொழியும் என்பது போன்ற ஆதாரபூர்வமற்ற தகவல்களை பரப்புகின்றனர். இது போன்ற தகவல்களால், மக்கள் பீதியடைகின்றனர். பேரிடர் காலங்களில், மக்களுக்கு உதவும் வகையில், தகவல்களை பரப்பலாம். இதுபோன்று பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

மழை நீர் வடிவதற்கு ஒரு வாரம் ஆகும் நோய் பரவுவதை தடுக்க ‘பிளச்சிங்’ பவுடர் தூவப்படுகிறது



கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிவதற்கு ஒரு வாரம் காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 06, 2017, 05:30 AM
சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 31-ந்தேதி முதல் 5 நாட்கள் மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தொடர் மழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னையில் தேங்கிய மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியுள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. புறநகர் பகுதிகளான கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, கூடுவாஞ்சேரி போன்ற இடங்களில் சில பகுதிகளில் இன்றளவும் இடுப்பளவு நீர் தேங்கி இருக்கிறது.

கோவிலம்பாக்கத்தில் திரு.வி. நகர், சிண்டிகேட் வங்கி காலனி, கண்ணா அவென்யூ, காதிதபுரம், உம்மைநகர், என்ஜினீயர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர், பாக்கியலட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜா நகர் போன்ற இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருக்கிறது.

இந்த பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்த பகுதிகள் முழுவதையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீர் வடிவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலை அங்கு ஏற்பட்டு இருக்கிறது. 80 அடி அகலத்தில் இருந்த மழைநீர் வடிகால் 20 அடி அகலத்துக்கு மாறியுள்ளதும், ஆக்கிரமிப்புகளால் அந்த நீர் செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லாததும் தான் காரணம் என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதும் பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. கோவிலம்பாக்கத்தில் தேங்கி இருக்கும் மழைநீரால் பலர் அந்த பகுதியை காலி செய்து உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.

இதேபோல், பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், வேளச்சேரி உள்பட சென்னையின் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதுபோன்று புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் சதுப்பு நிலங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் மட்டுமே இந்த பகுதிகளில் நீர் வடியும். அவ்வாறு நீர் வடிவதற்கு குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைநீர் தேங்கியுள்ள சில இடங்களில் லாரிகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு மழைநீர் வடிகாலுக்கு நேரடியாக கொண்டு சென்று அங்கு விடப்படுகிறது. சென்னை புறநகரில் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை பிளச்சிங் பவுடர் தூவும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதேபோல், தேங்கி நிற்கும் தண்ணீரினால் நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 106 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மழை மீட்பு நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மும்முரம் காட்டி உள்ளனர். சென்னையில் மண்டலவாரியாக களப்பணியில் குதித்தனர்.

நவம்பர் 06, 2017, 04:30 AM

மழை மீட்பு, நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மும்முரம் வேஷ்டியை மடித்துக்கட்டி களத்தில் குதித்தனர்


சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரம் காட்டி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் மழை மீட்பு நிவாரண பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தார்.

சென்னை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் மழை நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து, துரிதப்படுத்துவதற்காக மண்டல வாரியாக அமைச்சர்களை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பாஸ்கரன், மணலி மண்டலத்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், மாதவரம் மண்டலத்தில் அமைச்சர்கள் காமராஜ், பா.பென்ஜமின் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, ராயபுரம் மண்டலத்தில் எம்.சி.சம்பத், திரு.வி.க. நகர் மண்டலத்தில் அமைச்சர்கள் கருப்பண்ணன், கடம்பூர் ராஜூ, அம்பத்தூர் மண்டலத்தில் அமைச்சர் கே.பாண்டியராஜன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் மழை மீட்பு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்ணாநகர் மண்டலத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், தேனாம்பேட்டை மண்டலத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கோடம்பாக்கம் மண்டலத்தில் டாக்டர் சரோஜா, வளசரவாக்கம் மண்டலத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, ஆலந்தூர் மண்டலத்தில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, அடையாறு மண்டலத்தில் அமைச்சர்கள் டாக்டர் எம்.விஜயபாஸ்கர், நிலோபர் கபீல், பெருங்குடி மண்டலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, உடுமலைப்பேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராயபுரம் மற்றும் திரு.வி.க.மண்டலத்தில் அமைச்சர் ஜெயக்குமார், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைச்சர் பி.தங்கமணி, வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சோழிங்கநல்லூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கூடுதல் பொறுப்புகளோடு மழை நிவாரண பணிகளை தூரிதப்படுத்தி வருகின்றனர்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மழைப் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளோடு, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், களப்பணியுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.

தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பராவாமல் தடுப்பதற்கான ஆயத்த பணிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எம்.விஜயபாஸ்கர் முனைப்புக்காட்டி உள்ளார்.

அமைச்சர்கள் குளம்போல் தேங்கிய மழைநீரில் வேஷ்டியை மடித்துக்கட்டி இறங்கி சென்று மக்களை சந்திக்கின்றனர். மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர்.

அமைச்சர்கள் போன்று அதிகாரிகளும் ஓய்வு இல்லாமல் மழை மீட்பு நடவடிக்கைகளில் களம் இறங்கி உள்ளனர். வருவாய்த்துறை முதன்மை செயலாளர் கொ.சத்யகோபால், செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், பெருநகர சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திக்கேயன், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட அதிகாரிகள் பம்பரம் போல் சுழன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்துவதற்காக மாவட்டவாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர்.

Sunday, November 5, 2017

சென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..!

கே.பாலசுப்பிரமணி க.பாலாஜி



பூந்தூறலாகத் தொடங்கி, மிகமிகக் கனமழையாக மாறிய வட கிழக்குப் பருவமழைதற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளைக் குளிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஒதுக்கப்பட்ட நபர்கள்

கொட்டு மழையிலும், அது தந்த குளிர்ச்சியை வீட்டுக்குள் இருந்தபடி சூடான தேநீரோ, காபியோ குடித்தபடி ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் மழையை வேடிக்கை பார்க்கும் மனதும், அதற்கான நேரமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாறாக, தொலைக்காட்சியில் மழை பற்றிய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருப்போம். நமக்கு ஒரு பாதுகாப்பான வீடோ, அலுவலகமோ இருக்கிறது. ஸ்மார்ட்போன் வழியே ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மழை நிலவரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கத்தைச் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறோம். ஒரு பாதுகாப்புத் தளத்தில் இருந்து நம்மால் இயங்க முடிகிறது.
சொந்த வீடோ, வாடகை வீடோ, தங்கும் அறைகளோ இல்லாத பெருநகர வீதிகளில் ஓரம்கட்டப்பட்ட அல்லது இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது இந்தச் சமூகத்தைப் பார்த்து மனம் வெறுத்த நபர்கள், சாலை ஓர நடைபாதைகளில் முடங்கியிருக்கின்றனர். இந்தப் பருவமழை காலத்தில் அவர்களின் நிலை எப்படி இருக்கும்?

பேச மறுப்பு

சூடான தேநீரைப் பருகிக்கொண்டிருக்கும்போது எப்போதாவது இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா? இந்தக் கேள்வி மனதில் எழுந்த மாத்திரத்தில் கொட்டும் மழையையும், அதில் நனைந்து கொண்டிருக்கும் தெருக்களில் முடங்கியிருக்கும் நபர்களையும் நினைத்து மனம் பதறுகிறது அல்லவா? இந்த மழையை, நாம் குடிநீராகப் பார்க்கிறோம். விவசாயிகளோ, இதைப் பாசனத்துக்கான நீராகப் பார்க்கின்றனர். தெருவோரத்தில் இருப்பவர்கள் இந்த மழையை எப்படிப் பார்க்கிறார்கள்..?
தெரிந்துகொள்ள கனமழைக்குப் பின், லேசாக வெயில் எட்டிப் பார்த்த பகல்பொழுதில் சென்னை நகர வீதிகளில் முடங்கிக்கிடந்த அவர்களைச் சந்தித்தோம்.

ருக்மணி லட்சுமிபதி சாலையில் ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்துக்கு எதிரே கூவத்தை ஒட்டி ஒரு மாநகராட்சிப் பூங்கா இருக்கிறது. பூங்காவுக்கு வெளியே நடைபாதையில் தாடியுடன் ஒரு மனிதர் உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று, பேச முயற்சி செய்தோம். நம்மிடம் அவர், ''பேச முடியாது'' என்று மறுத்துவிட்டார். அவரது மறுப்பை மதித்து விலகினோம்.



மழை வரட்டும்

அதே சாலையில், கிறிஸ்தவ தேவாலயத்தின் எதிரே நடைபாதையில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருசிலரிடம் பேசினோம். முனியம்மா என்பவர், "நைட்ல விட்டுவிட்டு மழை. எதுக்க இருக்குற கண் ஆஸ்பத்திரில இருந்தோம். மழை பெய்றது நல்லதுப்பா. தண்ணி கஷ்டம் தீரும். தண்ணி கிடைக்காம, ரெண்டு ரூபா பாக்கெட் தண்ணி வாங்கிக் குடிச்சிட்டிருக்கோம். என்னதான் பாக்கெட் தண்ணி குடிச்சாலும், குழாயில வர்ற தண்ணியைக் குடிச்சாத்தான் தாகம் தீருதுப்பா" என்று மழையை 
வரவேற்கிறார்
.
அருவருக்கு அருகிலேயே இன்னொருவர் படுத்திருந்தார். நம்மைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து, ''முருகேசன்'' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினார்.

"நைட் புல்லா மழை. அதோ இருக்குதே, அந்தக் கடை தாழ்வாரத்துல தங்கியிருந்தேன். இருந்தாலும் தூக்கமே வரல. அதான் இப்ப கொஞ்ச நேரம் தூங்கிட்டிருந்தேன். மழை பெய்யட்டும். அதனால எனக்கு எந்தக் கவலையும் இல்ல. மழை பெய்யாட்டி தண்ணிக்குத்தான் பஞ்சம். இயற்கையை ஒண்ணும் செய்ய முடியாது. போனவருஷம் வர்தா புயல் வந்தப்போ இங்கதான் கிடந்தேன். எவ்வளவோ மழையைப் பார்த்தாச்சு. வரட்டும். மழை நல்லா வரட்டும். வயசானதால தொடர்ந்து வேலைக்குப் போக முடியல. வேலைக்குப் போயி 20 வருஷமாச்சு. சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. ஆனா, யாரும் என்னையைப் பாத்துக்கமாட்டாங்க. மழையிலேயும், வெயிலுலயேயும் இப்படியே பொழப்புப் போகுது" என்றார் அவர்.

மழையால் கவலை இல்லை


அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாலகிருஷ்ணா, "எங்க அப்பா, அம்மா ஊரு திண்டிவனம். ஆனா, நான் பொறந்தது எல்லாம் இங்கதான். எங்க அப்பா முனுசாமி கை ரிக்‌ஷா இழுத்துத்தான் எங்களை வளத்தாரு. சர்ச் வாசல்ல பிச்சை எடுப்பேன். அதை வெச்சி சாப்பிடுவேன். மழை பெஞ்சா, ஆயிரம் விளக்குல இருக்க பையன் வீட்டுக்குப் போவேன். வீட்டுக்குள்ள நம்மள சேர்க்க மாட்டாங்க. வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்துல படுத்துப்பேன்.நேத்தும் அங்கதான் படுத்திருந்தேன். வேற என்ன செய்யறது" என்றார்.

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பிளாட்ஃபாரத்தில் சிலர் தங்கி இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான குமாரிடம் பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் தேனி. கல்யாணம் ஆயிடிச்சி. ரெண்டு பையன்க, ஒரு பொண்ணு இருக்காங்க. ஊருப் பக்கம் போயி ரொம்ப நாளாச்சு. கோயில், சர்ச் இங்கெல்லாம் சாப்பாடு தருவாங்க. மழை பெய்யறப்ப பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப்புல தங்கிடுவேன். மழை பெய்யறதுக்கெல்லாம் கவலைப்படுறது இல்ல" என்றார்.

சட்டி சுட்டதடா...நெஞ்சை சுட்டதடா

அவருக்கு அருகில் ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "என்கிட்ட பேர் எல்லாம் கேட்கக் கூடாது" என்று நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார். "வீட்ல சண்டை போட்டுட்டு இங்க வந்துட்டேன். எம்.எம்.டி.ஏ-வுல பூ வியாபாரம் செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நாள், கேட்டரிங் கம்பெனில, சப்ளையரா வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். கண்ணுல பார்வை குறைஞ்சிடுச்சு. இப்ப எங்கேயும் வேலைக்குப் போறதில்ல. மழை பெய்றப்போ, ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள போயி தங்கிக்குவேன்" என்றார்.
அதே பிளாட்ஃபாரத்தில் கொஞ்சம் தள்ளி ஒருவர் உட்கார்ந்திருந்தார். யாரோ கொடுத்துச் சென்ற உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "என்கிட்ட எதுவும் கேட்காதீங்க" என்றவர், சிறிது நேரம் கழித்து தன்னைப் பற்றிய தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

"என்னோட பெயர் குமார். ஆந்திரா பார்டர்ல தடா பக்கத்துல ஆரம்பாக்கம்தான் என் சொந்த ஊர். இங்க செக்ரட்டுரேட்டுல எனர்ஜி டிபார்ட்மென்ட்ல ஆபீஸ் அசிஸ்டென்ட்டா வேல பார்த்தேன். 2004-ம் வருஷம் எஸ்மா, டெஸ்மா கொண்டு வந்தப்போ ஜெயில்ல இருந்தேன். பகல்லகூட எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கு. ஆபீஸுக்குப் போதையோட போவேன். ஆபீஸ்ல கிடைச்ச இடத்துல பகலிலேயே படுத்துக் கிடப்பேன். அதனால என்னை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. மனம் வெறுத்துப் போனதால, என்ன செய்யறதுன்னு தெரியாம இங்க வந்து தங்கிட்டேன். 'சட்டி சுட்டதடா, நெஞ்சை சுட்டதடா'னு என் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு.

மழை வந்தா, இதோ பின்னாடி இருக்குற டிராவல்ஸ் பஸ்ல ஒதுங்கிக்குவேன். டிராவல்ஸ் ஓனர்தான் என்னை அப்பப்ப கவனிச்சுக்கிறார். ரோட்டுல மழை தண்ணீர் ஓடுவதைப் பார்க்கும்போது எனக்கு உற்சாகமா இருக்கும். இப்பத்தான் மழை தொடங்கியிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல தண்ணீர் ஓடும். தர்மம் செய்பவர்கள் எத்தைனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களால் என்னைப் போன்றவர்களுக்குச் சோறு கிடைக்கிறது. நான் செத்துப் போனால்கூட, என்னை எடுத்துப் போட்டு விடுவதாக டிராவல்ஸ் ஓனர் சொல்லியிருக்கிறார். இதைவிட எனக்கு வேறு என்ன வேணும்" என்கிறார் சிரித்தபடி.


காதல் தந்த துணிச்சல்

எம்.எம்.டி.ஏ அலுவலகத்துக்குப் பின்புறம் இருந்த பிளாட்ஃபாரத்தில் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "எனக்கு சொந்த ஊரு சென்னைதான். எங்க வீட்டுக்காரருக்கும் இதே ஊருதான். நாங்க ரெண்டு பேரும் வேறவேற சாதி. நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

ரெண்டு பேரு வீட்லேயும் எதிர்ப்பு. எங்க வீட்ல, 'அவரை விட்டுட்டு வீட்டுக்கு வா' என்று சொல்றாங்க. என் புருஷனை விட்டுட்டு எப்படி என்னால அங்கே போக முடியும்? அவரு வீட்லேயும் அப்படித்தான் சொல்றாங்க. என்னை விட்டுட்டு வரச் சொல்றாங்க. அதனால, ரெண்டு வீட்டுக்கும் பிரச்னை வேணாம்னு, இப்படி நாங்க பிளாட்ஃபாரத்துல தங்கிட்டு இருக்கோம்.

நேத்து நைட்டு மழை. அதோ அங்க இருக்குற கடையோட தாழ்வாரத்துல படுத்திருந்தோம். வீட்டுக்காரர், கல்யாண மண்டபங்கள்ல எச்சி இலை எடுக்கிற வேலையில இருக்கார். அவரு வேலை முடிஞ்சு வர்றதுக்கு நைட் ஒரு மணிகூட ஆயிடும். அதுவரைக்கும் குழந்தைகளைப் பாத்துக்கிட்டு இங்கேயேதான் இருப்பேன். எங்க வீட்டுக்காரர் ஏதாவது கொண்டு வருவார்" என்றவரின், கையில் புண்கள் இருந்தன. அதைப் பார்த்து, ''என்ன'' என்று கேட்டோம். "நைட்ல கொசுக்கடி தாங்க முடியல'' என்று சொன்னபடி தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிறார். "உங்க பேரு என்ன" என்று கேட்டோம். "பாரதி" என்கிறார். அதனால்தான் அந்தத் துணிச்சல் என்று நினைத்தபடி கனத்த மனதுடன் திரும்பினோம்.

சென்னையின் தற்போதைய அத்தியாவசியப் பொருள் இதுவாகவும் இருக்கலாம்!

எம்.குமரேசன்

சென்னையில் மழை கொட்டி தீர்க்கிறது. தொடர்ந்து 6 நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் புதியதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்றுக் கூறப்படுகிறது. இதனால், மழைப் பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கதில் 65.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. மீனம்பாக்கத்தில் 62 மி.மீ மழை பொழிந்திருக்கிறது. வருங்காலத்தில் இதே போன்று சென்னையில் அதிகமாக மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அதனால், இனிமேல் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போல படகு ஒன்றும் வீட்டில் இருப்பது அவசியம் எனத் தோன்றலாம். இதற்காகவே ஆன்லைனில் தற்போது டியூப் படகுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆத்திர அவசரத்திற்கு இந்தப் படகை காற்றையடித்து இயக்கத் தொடங்கி விடலாம். குழைந்தைகளை அமர வைத்து இழுத்தாவது சென்றுவிடலாம்.
கடலூரில் கனமழை... பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி!

க.பூபாலன் எஸ்.தேவராஜன்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் கடும் அவதியுடன் வீட்டுக்கு திரும்பினர். குறித்த நேரத்தில் பிள்ளைகள் வீடு திரும்பாததால் பெற்றோர்களும் கவலையடைந்தனர்.



வடகிழக்கு பருவ மழையானது, கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக விட்டுவிட்டு பெய்துகொண்டிருக்கிறது. கடலூர், சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி என பல பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை கொட்டிதீர்த்தது. இருந்தபோதிலும், காலையில் மழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனால் மாவட்ட நிர்வாகமானது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள், காலையில் நிலவிய தட்வெப்ப சூழ்நிலையால் மழையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக குடை அல்லது ரெயின்கோட் போன்றவை கையில் எதுவும் எடுத்துச் செல்லவில்லை.




ஆனால், மதியம் 2 மணிக்குமேல் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டே வாகனத்தை ஓட்டிச் சென்றனர். பள்ளி விட்டதும் மாணவ-மாணவிகள் கடும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனர். இதனால் சைக்கிள், பேருந்து மற்றும் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. சென்னையில் மழையில் அறுந்துகிடந்த மின்கம்பியால் இரண்டு சிறுமிகள் இறந்துபோன சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிதுடித்தனர். பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டுக்கு வந்த பிறகே அவர்கள் நிம்மதி மூச்சுவிட்டனர்.

Mudichur still a mess

DECCAN CHRONICLE. | P A JEBARAJ

PublishedNov 4, 2017, 7:56 am IST

Rs 600 crore flood alleviation project to protect South Chennai.


Motorists wade through flooded Mudichur road in Tambaram on Friday.

Chennai: An integrated flood alleviation project at a cost of Rs 600 crore will be taken up to prevent flooding in the southern part of Chennai and this project upon completion will prevent flooding in Mudichur, Perungalathur, Kovilambakkam, Pallikaranai, Velachery and Narayanapuram, higher education minister K.P. Anbhazhagan said on Friday.

The minister who was addressing the agitated Mudichur residents explained that the project will be taken up immediately and assured temporary flood mitigation measures on a war footing. Earlier in the day residents of Velachery Ram Nagar and Mudhichur vacated the ground floor of the buildings they were residing and took shelter on the first floor.


Youngsters of Bharathi Nagar Main Road in West Tambaram come out of their flooded house on Friday. (Photo: DC )

A few of them also vacated the houses and the parking lots remained vacant. “On Thursday night local youngster in these areas held discussions and we decided to move to the first floor after shifting TV, fridge and washing machines, but there were no alert or assistance from state authorities” rued Vijaya Kumari, a resident of Tambaram Krishna Nagar.

Infographic

“We have lost hope in the municipality and the government so I shifted all my belongings to the first floor and we have to help ourselves”, rued K. Shakila, who resides in Lakshmipuram. “The entire Mudichur road is overflowing with water and we fear the rerun of 2015 floods”, she added.

“Goodwill Nagar, Royappa Nagar, Bharathi Nagar and CTO colony suffered waterlogging and we are making efforts to divert the rainwater”, said a local revenue official, adding that there are problems only in the low lying areas which were either catchment or cultivable lands till 2000.

Despite downpour, reservoirs still below
20 per cent storage level

The heavy downpour saw flooding of city roads and there were also cases of water bodies like Naryanapuram lake, Kovilambakkam lake and Rettai Eri filling up, but reservoirs that meet the drinking water needs of Chennai recorded below 20 per cent storage level on Friday. All four reservoirs despite an inflow of 2,000 cusecs of water recorded a meagre 2,114 mcft water against the total storage capacity of 11,057 mcft. During same date last year, the storage was 1,276 mcft. Chembarambakkam, Red Hills, Cholavaram and Poondi received an inflow of 2,400 cusecs.

Why Foreshore estate, Madipakkam
Suffer waterlogging

It is due to poor planning and concrete roads. Under the mega city project, the local administration department mooted the concretisation of roadworks in Chennai. According to city corporation sources more than `300 crore has been spent on concrete roads in the past three years and this has now evolved as the major villain choking new interior roads in Madipakkam and Foreshore estate. “The recently laid concrete beach road between Seenivasapuram Nagar via Foreshore estate connecting Santhome flooded the fishing hamlets and the Foreshore estate. The road level was raised by half a foot and there is no drain. The concrete structure also flooded the EB sub-station resulting in a power outage,” said K. Arokiaraj, fishermen of Dumingkuppam.

Now, North Chennai is facing
Health hazard

Labour dominated North Chennai and its slums were choked with sewer overflow on Friday. The fresh rains added to the existing woes of the public. Visit by DC to Decastor and Demollows road in Pulianthope exposed poor drainage facilities and the only respite was that corporation authorities were conducting medical camps and distributing bleaching powder and paracetamol. “Otteri and Pulianthope, witnessing waterlogging for the last three days, are in a total mess and need more water pumps and super suckers to clear the drainage slush,” said social activist V. Sathiabalan.

Closed schools and crèches: A reluctant holiday for parents

Rachel Chitra| TNN | Nov 4, 2017, 10:32 IST

In a double whammy for working parents, all schools and many daycare centres remained shut for the past three or four days as water logging and power shutdown prevented them from being operational.Most daycare centres also have a small play area or a garden patch with swings and seesaws, and during the monsoon these areas are dangerous."Kids run out and play in the mud and we have a 10:1 kids to caretaker ratio. With dengue, malaria and other vectorborne diseases it isn't safe to be near a playground till the water completely drains out," said S Nirmala, head, Chocolatekids playschool and daycare centre.

The past 24 hours, in particular, were difficult for professionals, as commuting became arduous. When Bindhya Narasimhan, 36, wanted to drop her two kids on Friday at the daycare in Foreshore Estate, she found the access road blocked. "I could see that the road ahead had water up to 2ft.And then I saw the message on my phone that the daycare was closed," says Bindhya, who had to take leave to manage the kids.

At Bamboola in Mandaveli, parents were alerted the previous night that the daycare would be shut on Friday ."We have large open spaces for play and the water has not drained out. Younger children also tend to fall sick if their clothes or socks get wet, so it's better for them to stay home," says Deepa, teacher, Bamboola. Parents like Sunita Narayanan had to take leave for the third day in a row. "The first two days I opted to work from home, but now there is no power at home and no daycare too," she says.

For the few daycare centres like Kanchana Patti and Happica that remained open, it was a tough, too. "The children felt cooped up due to the indoor activities, but we could not let them play outside," said Suri, co-founder, Kanchana Patti.

Schools prepare to reopen on Monday

TNN | Updated: Nov 5, 2017, 00:38 IST

Chennai: Waters have receded and most schools are readying themselves for the reopening, but public health experts say managements must ensure safety and hygiene on campuses before they reopen schools.

Health department and disaster management cells are providing advisories and support to schools and colleges that were inundated with water. "Many educational institutions are prone to risk because they have large playgrounds where water was stagnant. Even after the water is dried, there will be a lot of sludge and muck like garbage and sometimes carcasses," said Dr K Kolandaswamy, director of public health.

Many reptiles and insects may have got inside the classroom. "Pest control services should be engaged inside classrooms, besides washing them clean. In the playground and gardens bleaching powder, a disinfectant that kills harmful microbes, should be used," he said. Overhead tanks and drinking water stations should be cleaned and refilled. Fogging should also be undertaken if mosquitoes have increased.

On Friday many school managements told TOI that their canteen staff have been instructed to serve only boiled water and freshly cooked food to students. "We have been asked to advise students to wash their hands with soap and use hand sanitisers before and after eating food," said Sabitha S, an elementary schoolteacher in Anna Nagar. The school has also prepared posters to educate students about how contaminated drinking water, food and mosquito menace could pose health problems on campuses.

A disaster management cell official, who visited a school in Egmore, found damage to windows, walls and roofs. "We have asked the school to check power points and electrical equipment before children are allowed on campus. Although water had receded, the corridors and sidewalks were slippery," said the official.

Zonal officers from corporation and health department officials have offered support to school managements. School managements can dial 104 for technical advice and support.

3 நாள்களில் படிப்படியாக மழை குறையும்


By DIN  |   Published on : 05th November 2017 04:45 AM 
umarain

சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் 3 நாள்களில் மழை படிப் படியாகக் குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடலோர மாவட்டங்களில்... 
தமிழகத்தில் கடந்த அக். 27 -ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் மிதமாக மழை தொடங்கி, இரவு நேரத்தில் வலுக்கிறது.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில்... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் மேலும் கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரை வரை நிலைக்கொண்டிருந்தது . மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
அடுத்த 24 மணி நேரத்தில்... அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன மழையைப் பொருத்தவரையில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரையில் மாலை மற்றும் இரவு வேளைகளில் இடைவெளி விட்டு சில முறை இடியுடன் கூடிய மழை பெய்யும். சில நேரங்களில் பலத்த மழையாகவும் இருக்கும் என்றார் பாலச்சந்திரன்.
சென்னையில் மழை சாதனை!
சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 620 மி.மீ. மழை பெய்துள்ளது. பொதுவாக அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 4-ஆம் தேதி வரை சராசரி மழை அளவு 320 மி.மீ.-ஆக இருக்கும்; ஆனால், வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (அக்டோபர் 1-நவம்பர் 4) 93 சதவீதம் அதிகமாக 620 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.
தமிழக அளவில் சராசரியாக இயல்பான மழை அளவு 210 மி.மீ. ஆகும்; இதுவரை பெய்துள்ள மழை அளவு 190 மி.மீ. ஆகும். எனவே இயல்பான சராசரி மழை அளவைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவாக இதுவரை மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மழை அளவு: நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி- 240 மி.மீ, வேதாரண்யம்-160 மி.மீ., திருத்துறைப்பூண்டி -130 மி.மீ., மயிலாடுதுறை, சீர்காழி - 110 மி.மீ. பொன்னேரி- 100 மி.மீ., பரங்கிப்பேட்டை, ஆனைக்காரன்சத்திரம், நாகப்பட்டினம்-90 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகம், காரைக்கால், கடலூர், சென்னை நுங்கம்பாக்கம் -70மி.மீ., சென்னை விமான நிலையம், சென்னை டி.ஜி.பி. அலுவலகம்-60 மி.மீ.; திருவாரூர், சிதம்பரம், நன்னிலம், விருதாச்சலம், மரக்காணம், செம்பரம்பாக்கம், சேத்தியாதோப்பு - 50 மி.மீ. பதிவாகியுள்ளது.

சென்னையில் வெள்ள அபாயம் இல்லை: முதல்வர் பழனிசாமி


By DIN  |   Published on : 04th November 2017 10:13 PM 
palanisamy

சென்னை பள்ளிக்கரணையில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டப்பின், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மும்பை, பெங்களூருவில் பெருமழை பெய்தபோது, பெருமளவு நீர் தேங்கியதாகவம், ஆனால், சென்னையில், வெள்ளநீர் உடனுக்குடன் அகற்றப்பட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பாதைகள் தூர்வாரப்பட்டுள்ளது என்றும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதால், வெள்ள அபாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்மழை பாதிப்பு : தாம்பரத்தில் மேலும் ஒரு கட்டுப்பாட்டு அறை


By DIN  |   Published on : 05th November 2017 02:25 AM  
தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாட்டு அறை சேவை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பேரிடர் மேலாண்மை மையம்) கடந்த 4 நாள்களுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது. 
கட்டுப்பாட்டு அறைக்கு, நாள்தோறும் குடியிருப்பு, கல்விக் கூடங்கள், நிறுவனப் பகுதியிலிருந்து அவசர கால தொலைபேசி எண்கள் மூலம் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அதன்படி, மழைநீர் சூழ்ந்த பகுதிகளான, தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், ஆலந்தூர், பல்லாவரம், திருக்கழுகுன்றம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அழைப்புகள் வருகின்றன. அதன்படி, இதுவரை 370-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து, பொதுமக்களின் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இதற்காக, கட்டுப்பாட்டு அறையில், வானிலை ஆய்வு மைய அறிவிப்புகள், பாதிக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்காணிப்பதற்காக தொலைக்காட்சி செய்திகள், கணினி, வாக்கி-டாக்கி, தொலைபேசி (காஞ்சிபுரம்: 044-25619299) உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களுடன் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் 3 குழுவினர் சுழற்சி முறை அடிப்படையில், பணியாற்றி வருகின்றனர்.
தாம்பரத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை: தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளதால் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் புதிதாக கட்டுப்பாட்டு அறை சனிக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. இதில், 04422410050, 9445051077 என்ற எண்களில் மழை பாதிப்புள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 
நிவாரண முகாம்கள்: மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், பெருங்களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்போரூர் பஞ்சம்திருத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வரதராஜபுரம் அஷ்டலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் 3 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்துள்ள இடத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்லலாம் என மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Saturday, November 4, 2017

Posted Date : 20:48 (03/11/2017)
vikatan

‘சிங்காரச் சென்னை’யின் அவல மனசாட்சி இந்தக் 'கல்லுக்குட்டை'

சி.மீனாட்சி சுந்தரம்



'சென்னையைச் சுழற்றிப்போட ஒருநாள் மழைபோதும்!' என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 2015-ல் ஏற்பட்ட டிசம்பர் பெருவெள்ளத்துக்குப் பிறகு நீண்டு முழங்கும் ஒவ்வொரு கனமழையும் சென்னைவாசிகளுக்கு மரண பயத்தைக் காட்டி வருகிறது. சினிமா பாஷையில் சொல்வதென்றால், ‘ஏ’ சென்டர் முதல் ‘சி’ சென்டர்வரை அடித்து நொறுக்கியிருக்கிறது இந்த மழை. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பமுடியாமல், ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் கூடியிருந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். முக்கியச் சாலைகளில் எல்லாம் தண்ணீர் தேங்கியிருக்க, ஆட்களை அள்ளித் திணித்தபடி மினி படகாக மாறியிருந்த பல ஷேர் ஆட்டோக்கள் தத்தளித்தபடியே பயணித்தன. இந்தக் காட்சிகளைக்கூட நீங்கள் டி.வி சேனல்களில் பார்த்திருக்கக்கூடும். ஆனால், தலைநகரில் எப்போது மழைத்தூறல் விழுந்தாலும் தங்களின் உடுப்புகளையும், உடைமைகளையும் உடனடியாக பரண்களில் ஏற்றிவிடும் 'நீர்வாசி மக்களின் துயரங்கள்' பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.

இடைத்தேர்தல் களேபரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியின் உண்மை முகத்தை இப்போது சென்று பாருங்கள்... துருத்திக்கொண்டு வெளியே தெரியும். அதேபோல், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொரட்டூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், தேனாம்பேட்டை கால்வாய் பகுதி, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை கால்வாய் பகுதி, ஈக்காட்டுத்தாங்கல், கத்திப்பாரா, கே.கே.நகர் அடையாற்றின் ஓரங்கள், கோட்டூர்புரம், மந்தைவெளி, வாராவதி பகுதி, பெருங்குடி, கல்லுக்குட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், வெள்ளக்கல் ஏரிப் பகுதிகள், குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி சாலை என மொத்தச் சென்னையின் நாற்கரங்களும் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. இவற்றுள் என்றுமே விமோசனம் கிடைக்காமல் தத்தளிக்கும் ‘தீவுப்பகுதி’தான் பெருங்குடி அருகேயுள்ள 'கல்லுக்குட்டை!'



சென்னையின் ‘சிலிக்கான் வேலி’யான ராஜீவ்காந்தி சாலைக்குப் பக்கவாட்டில் செல்கிறது எம்.ஜி.ஆர் சாலை. ஒருகாலத்தில் தரமணி, பழைய மகாபலிபுரம் சாலையின் (இப்போது ராஜீவ் காந்தி சாலை) இணைப்பு வழியாக இருந்த இந்தக் களிமண் சாலைதான் இப்போது எம்.ஜி.ஆர் சாலை. தரமணி மக்களுக்கே இந்த வளர்ச்சி புதிது. ஏனெனில், இப்போது முக்கிய ஐ.டி நிறுவனங்களைத் தாங்கி நிற்கிறது எம்.ஜி.ஆர் சாலை. அதன் பிற்பகுதியில் தொடங்கி கிட்டத்தட்ட வேளச்சேரி வரை பரந்துவிரிந்த பகுதிதான் இந்தக் கல்லுக்குட்டை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தொடர்ச்சி என இதைக்கூறுவார்கள். ‘கழுவேலி’ என்றும் இதற்குப் பெயர் இருக்கிறது. முன்பு இப்பகுதியில் பெரும் பாறைகள் நிறைந்த குட்டைகள் பரவலாக இருந்ததால், இதற்குக் ‘கல்லுக்குட்டை’ எனப் பெயர் வந்திருக்கிறது.

இங்கு குடியேறிய மக்கள் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசித்துவந்தவர்கள். தென்தமிழகத்திலிருந்து கூலி வேலைகளுக்காக சென்னை வந்தவர்களைப் பெருவாரியாக இங்கு பார்க்க முடியும். நகர மயமாக்கலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், இந்தப் பகுதியில் வந்து தஞ்சமடைந்திருக்கிறார்கள் இவர்கள். சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இங்கு வசித்துவருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வேயின்படி இங்கு 7,000 ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இது அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு என்றாலும், கல்லுக்குட்டை பகுதியில், சுமார் 15,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள்தொகை 50,000-க்கும் மேல். ஜெ.ஜெ நகர், திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் புரட்சி நகர் என ஏழு நகர்கள் இருக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட பகுதி என்றாலும், சென்னை மாநகராட்சியின் கீழ்தான் இங்கு பணிகள் நடைபெறுகின்றன. சென்னை மாநகராட்சியின் 14-வது மண்டலத்துக்குள் வரும் வார்டு இது. சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர்.



மழை நாள்களில் இந்தப் பகுதிக்குள் சென்று வெளியே வருவது எளிதான காரியம் அல்ல. கனமழைக்குப் பின்னர் ஒவ்வொரு வீட்டுக்கும், ஒரு தெர்மாக்கோல் மிதவைகளை இங்கு பார்க்க முடியும். ''இதுதாங்க இங்க போக்குவரத்து. மரண சவாரிதான்... என்ன செய்யுறது?'' எனப் புலம்பித் தீர்க்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்தன். மேலும் அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, ''எங்களுக்குச் சாலை வசதியெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. மழை பெய்ஞ்சு தண்ணி நிக்கும். வத்திடுச்சுனா வெயில்ல காஞ்சு களிமண் இறுகிடும். அவ்ளோதான் அதுலதான் போய்ட்டு வர்றோம். யாராச்சு சாகக்கிடந்தாங்கனா உள்ளுக்குள்ள ஆம்புலன்ஸ்கூட வராது. எவ்வளவோ போராட்டம் செஞ்சு பாத்துட்டோம். பிரயோஜனமே இல்ல. இங்க இருக்க புள்ளைங்களுக்கு டெங்கு வந்துட்டுப் போச்சு. வெஷப்பூச்சி கடி, பாம்பு கடிச்சுதுன்னாலும் தூக்கிட்டு ஓடுவோம். பெருங்குடி ஏரி இல்லைனா தரமணி இ.பி. கிட்ட வந்து ஆம்புலன்ஸ் நிக்கும். ஒவ்வொரு மழைக்கும் குறைஞ்சது 10,000 குடும்பம் பாதிக்கப்படும். மேட்டுமேல இருக்கவங்க ஓரளவுக்குத் தப்பிச்சுடுவாங்க. வெயில்காலத்துல தேங்குற மொத்தக் குப்பையும் மழை நேரத்துல வீட்டுக்குள்ள மிதக்கும், மனுசக்கழிவுகளும் சேர்ந்துவந்து சாகடிக்கும். அப்பிடியே தம் புடிச்சுகிட்டு சோறு தின்னு பொழச்சுக்குவோம். இதவிட வேற என்னத்த சொல்றது..?'' என ஏக்கமாகக் கடந்துபோகிறார் அவர்.



இப்பகுதியில் இதுவரை அ.தி.மு.க-வே கோலோச்சி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க-வின் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். 2016 தேர்தலில், சோழிங்கநல்லூர் தொகுதியில் வெற்றிபெற்று தி.மு.க-வின் அரவிந்த் ரமேஷ், 'எம்.எல்.ஏ' ஆகியிருக்கிறார். ''அரசுத்துறையில் யாரும் கவனிப்பதே இல்லை. பட்டா கேட்டு போராடினோம். ‘அரசு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறீர்கள். எங்களால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது’ என அதிகாரிகள் கைவிரித்துவிட்டார்கள்'' என ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

‘சிங்காரச் சென்னை’யின் அவல மனசாட்சியே இந்தக் கல்லுக்குட்டை. அதன் நீர்சூழ் அலங்கோலங்கள்தான் தலைநகர ஆட்சிப்பீடங்களைக் குத்திக் குத்திக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது.

பதில்தான் இன்னும் கிடைத்தபாடில்லை!
அடுத்து என்ன..? மழை குறித்து `தமிழ்நாடு வெதர்மேன்' அப்டேட் இதுதான்! 

#ChennaiRains

ர.பரத் ராஜ்

கடந்த 27-ம் தேதி தொடங்கியது வடகிழக்குப் பருவமழை. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக மழை வெளுத்து வாங்கிவருகிறது. சென்னையில் வியாழன் மாலை 5 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதனால், போக்குவரத்து முடங்கியது. சென்னையில் 122 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையில் சிக்கித் தவித்த மக்களை மின்வெட்டும் வாட்டி வதைத்தது. மாநகரப் பேருந்து போக்குவரத்தில் தொய்வு ஏற்பட்டதால், ரயில்களும் நிரம்பி வழிந்தன. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் ரயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டன. மேலும், மெட்ரோ ரயில்களில் நேற்றும், இன்றும் வழக்கத்துக்கு அதிகமான கூட்டம் இருந்தது. இந்நிலையில், மழை குறித்தான அப்டேட்டை `தமிழ்நாடு வெதர்மேன்' அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், `தொடர்ச்சியாக சென்னை நகரில் பெய்துவந்த மழை தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. மழை தற்போது, நகரின் வெளியே நகரும். குறிப்பாக, அதிகாலையில் நல்ல மழை இருக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. டெல்டா பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. புதுச்சேரி மற்றும் கடலூரிலும் சீக்கிரமே நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

NEWS TODAY 2.5.2024