Monday, November 6, 2017

மழைக்கு தேசிய நெடுஞ்சாலைகள், 'அவுட்'  சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறல்
மழையால், தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறி வருகின்றன.




சென்னையை, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுடன் இணைக்கும் வகையில், 4,994 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டு உள்ளன. இதில், சென்னை - திருச்சி, சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, தேசிய நெடுஞ் சாலைகள் முக்கியமானவை.

இச்சாலைகள் வழியாக, நாள் தோறும்ஏராளமான சரக்கு வாகனங்கள் சென்னை வந்து செல்கின்றன. பயணியர் போக்குவரத்திற்கான அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் வருகின்றன.இச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, பல்வேறுஇடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை பராமரிப்பு பணிகளை செய்து, சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, தனியார் நிறுவனங் களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஏற்கனவே, முறையான பராமரிப்பின்றி கிடந்த சாலைகள், மழையால் மேலும் சேதம் அடைந்துள்ளன.

பல இடங்களில், அபாய பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர்தேங்கி உள்ளது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சென்னை - கோல் கட்டா தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றில், வாகனங்கள் தள்ளாடியபடியே
பயணிக்கின்றன; ஆங்காங்கே, வாகனங்கள் பழுதாகியும் நிற்கின்றன.

எனவே, இச்சாலைகளில் பயணிக்கும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின் றனர். போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், சாலைகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...