Monday, November 6, 2017


ஆறு டிக்கெட் முன்பதிவு: ஆதார் அவசியமில்லை - ரயில்வே அறிவிப்பு


'மாதத்தில் ஆறு டிக்கெட் வரை, முன்பதிவு செய்யும் பயணியருக்கு, ஆதார் எண் அவசியமில்லை' என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வேயும், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து, பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மிகம், சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்களில், பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். இதர ரயில்களில் செல்வோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்திலும், அனுமதி பெற்ற முகவர்கள் மூலமும், 'இ - டிக்கெட்' பெற்று பயணித்து வருகின்றனர். டிஜிட்டல் மயமாக்கம், பயணியர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பயணியர், ஆதார் எண் பதிவு செய்ய, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமீபகாலமாக, பணம் சம்பாதிக்கும் நோக்கில், அனுமதியற்ற போலி முகவர்கள் அதிகரிப்பு, டிக்கெட் விற்பனையில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் அதிகரித்தன. இவற்றை கட்டுப்படுத்த, ஆறு டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவுசெய்யும் பயணியருக்கு, ஆதார் எண் அவசியம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சில முகவர்கள், கமிஷன் நோக்கில் அதிகமான டிக்கெட்டு கள் முன்பதிவு செய்து, விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுகின்றன. போலி முகவர்களால் பயணியர் ஏமாற்றத்துக்கும் ஆளாகின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இணையதளத்தில் ஆதார் பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. மாதத்தில் ஆறு டிக்கெட்கள் பெறுவோருக்கு, ஆதார் அவசியமில்லை; அதற்குமேல், ஆதார் பதிவு அவசியம்,'' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...