Monday, November 6, 2017


5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 102வது பிறந்த நாள் கோலாகலம்

 5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 102வது பிறந்த நாள் கோலாகலம்
கோபி:கோபி அருகே, ஐந்து தலைமுறை கண்ட மூதாட்டி, 102வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரமாயாள், 102; இவரது கணவர், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தம்பதிக்கு, மூன்று மகன்கள்; நான்கு மகள்கள். இவர்களில், ஒரு மகன், இரண்டு மகள்கள் இறந்து விட்டனர். மற்றவர்கள் உள்ளூரில், குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

கடந்த, 1915ல் பிறந்த பெரமாயாளுக்கு, நேற்று, 102வது பிறந்த நாள். இரண்டு மகன், இரண்டு மகள், ஏழு பேரன்கள், ஆறு பேத்திகள், ஏழு கொள்ளு பேரன்கள், ஒன்பது கொள்ளு பேத்திகள் ஆகியோர், பாட்டி வீட்டுக்கு நேற்று சென்றனர். 5 கிலோ கேக் வேட்டி, பெரமாயாளின் பிறந்த நாளை கொண்டாடினர். அனைவரும், பெரமாயாளிடம் ஆசி பெற்றனர்.

பெரமாயாளின் வாரிசுகள் கூறியதாவது:

எங்கள் பாட்டி பெரமாயாள் வழியில், இது ஐந்தாவது தலைமுறையாகும். 102 வயதை தொட்ட பாட்டிக்கு இதுவரை பிறந்தநாள் கொண்டாடியதில்லை. அவரின் வயது முதிர்வை கணக்கில் கொண்டு, பிறந்தநாள் விழா கொண்டாடினோம்.பாட்டி இதுவரை, உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனை சென்றதில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பார்வை, காது கேட்கும் திறன் என எந்த குறையுமின்றி உள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பெரமாயாள் கூறுகையில், ''எனக்கு, 102வது பிறந்த நாள் கொண்டாடிய, மகன், மகள், பேரன் மற்றும் பேத்திகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...