கரையை கடந்தது, 'டாம்ரே' புயல் இயல்புக்கு திரும்பியது வங்க கடல்
வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருந்த, 'டாம்ரே' புயல், வியட்நாம் அருகே, பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது. அதனால், வங்கக் கடலின் சூழல் இயல்பு நிலைக்கு மாறியுள்ளதால், விடாது கொட்டிய அடைமழை விலகியுள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, அக்., ௨௭ல் துவங்கி, ௨௯ல் தீவிரம் அடைந்தது. சென்னை முதல் நாகை வரை, கனமழை கொட்டியது. மழைக்கு காரணமான, காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர், ௧ல், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு நகரும் என, கணக்கிடப்பட்டது. ஆனால், நகராமல், நவ., 2ல் மிககன மழை கொட்டியது.
ஒரே நாள் இரவில், ஐந்து மணி நேரம் பெய்த தால், சென்னை மெரினாவில், அதிகபட்சமாக 30செ.மீ., மழை பதிவானது. பின், நேற்று முன் தினம் இரவு வரை மிதமாகவும், சில நேரங் களில் கனமழையும் தொடர்ந்தது. இந்த தொடர் மழைக்கும், அடைமழைக்கும், வங்கக் கடலின்
சூழல் மாறியதே காரணம் என, வானிலை மற்றும் கடலியல் நிபுணர்கள் கூறினர். அதாவது, வங்கக் கடலை ஒட்டிய, தென் சீன கடலில் சுழன்று வந்த, டாம்ரே புயலால், வங்கக் கடலில் இருந்து மேக கூட்டங்கள் நகர முடியவில்லை;
அவை, தமிழககடற்பகுதியை சுற்றி வந்ததே, அதிக மழை பெய்யகாரணம் என்றனர்.'டாம்ரே புயல், நவ., 4ல் கரையை கடக்கும் வரை, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் கன மழை தொடரும்.'புயல் கரையை கடந்தால், ஞாயிறு முதல் நிலைமை சீராகும்' என்றும் கூறினர்.அதன்படி,நேற்று முன்தினம் இரவு, டாம்ரே புயல், வியட்நாமில் பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது.
இதையடுத்து,தென் சீன கடலிலும், அதையொட்டிய வங்கக் கடலிலும், கொஞ்சம் கொஞ்சமாக கடல் சூழல் மாறியுள்ளது. இதனால், மீண்டும் காற்றின் சுழற்சி இயல்பு நிலைக்கு மாறி, மேக கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன.
சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதியும், தாழ்வு நிலையாக வலு குறைந்து, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு நகர்ந்துள்ளது. எனவே, சென்னை உள்ளிட்ட வட கிழக்கு கடலோர மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த, அடைமழை விலகி உள்ளது. இனி, வழக்கமான பருவமழை, டிசம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிதமான மழைக்கு வாய்ப்பு:
'தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அடைமழை இருக்காது; மிதமான மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின், மண்டல துணை பொது இயக்குனர், பாகுலேயன் தம்பி நேற்று கூறியதாவது:வங்கக் கடலின், வட கிழக்கு பகுதி யில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடா மற்றும் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் அருகே, தென் கிழக்கு கடலோர பகுதிக்கு இடையே, தற்போது மையம் கொண்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment