Monday, November 6, 2017


மழை வதந்தியை பரப்பாதீர்!: பாலச்சந்திரன் வேண்டுகோள்

மழை,வதந்தி,பரப்பாதீர்,பாலச்சந்திரன்,வேண்டுகோள்
பொள்ளாச்சி: ''மழை குறித்து, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், அவர் அளித்த பேட்டி: வட கிழக்கு பருவமழை, தமிழகத்தின் முக்கிய காலமாகும். 27ம் தேதி முதல், கடலோர மாவட்டங்களில், வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வளி மண்டலத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில், இரு நாட்களுக்குள், மழை குறைய வாய்ப்புள்ளது. 

கடலில் நில நடுக்கம் ஏற்பட்டால், சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என கணிக்க முடியும். தற்போது, கணிக்க முடியாது. வானிலை மையம், தொடர்ந்து மழை குறித்து கணித்து, சரியான தகவல்களை தெரிவித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு சிலர், 100 செ.மீ., வரை மழை பொழியும் என்பது போன்ற ஆதாரபூர்வமற்ற தகவல்களை பரப்புகின்றனர். இது போன்ற தகவல்களால், மக்கள் பீதியடைகின்றனர். பேரிடர் காலங்களில், மக்களுக்கு உதவும் வகையில், தகவல்களை பரப்பலாம். இதுபோன்று பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...