Sunday, November 5, 2017


சென்னையின் தற்போதைய அத்தியாவசியப் பொருள் இதுவாகவும் இருக்கலாம்!

எம்.குமரேசன்

சென்னையில் மழை கொட்டி தீர்க்கிறது. தொடர்ந்து 6 நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் புதியதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்றுக் கூறப்படுகிறது. இதனால், மழைப் பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கதில் 65.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. மீனம்பாக்கத்தில் 62 மி.மீ மழை பொழிந்திருக்கிறது. வருங்காலத்தில் இதே போன்று சென்னையில் அதிகமாக மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அதனால், இனிமேல் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போல படகு ஒன்றும் வீட்டில் இருப்பது அவசியம் எனத் தோன்றலாம். இதற்காகவே ஆன்லைனில் தற்போது டியூப் படகுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆத்திர அவசரத்திற்கு இந்தப் படகை காற்றையடித்து இயக்கத் தொடங்கி விடலாம். குழைந்தைகளை அமர வைத்து இழுத்தாவது சென்றுவிடலாம்.

No comments:

Post a Comment

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...