Wednesday, February 17, 2016

கேஜ்ரிவாலுக்கு எத்தனை மதிப்பெண்?



பாஜகவின் நெருக்கடிகளையும் கடந்து சரியான திசையில் செல்கிறது ஆம் ஆத்மி அரசு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு முன்னால் டெல்லி அரசின் அமைப்பு குறித்து அலசுவது அவசியமாகிறது. டெல்லி முழு அதிகாரம் பெற்ற மாநிலம் அல்ல, மைய அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் வரும் ஒன்றிய ஆட்சிப் பகுதி (யூனியன் டெரிடரி). டெல்லியில் ஐந்து நகராட்சி அமைப்புகள் உண்டு. புதுடெல்லி மாநகராட்சி வாரியம் பகுதி மத்திய அரசின்கீழ் வருவது. இதன் நிர்வாகத்தில் டெல்லி அரசுக்கு மிகச் சிறிய பங்குதான் உண்டு. இவை தவிர, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய இதர மூன்று மாநகராட்சிகளும் மத்திய அரசின்கீழ் வருபவைதான். கன்டோன்மென்ட் நகராட்சி மற்றொரு தனி அமைப்பு.

டெல்லியில் காவல்துறை மைய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வருகிறது. டெல்லி அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை. அரசுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளை நிர்வகிக்கும் டெல்லி மேம்பாட்டு வாரியம் (டிடிஏ) மைய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் வருகிறது. இதிலும் டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை. மைய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர்தான் இதன் தலைவர்.

காற்றில் விடப்படும் வாக்குறுதி

ஒவ்வொரு தேர்தலின்போதும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தரப்படும் என்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் கூறும், தேர்தலுக்குப் பிறகு மறந்து விடும். கடந்த தேர்தலின்போதும் பாஜக அளித்த வாக்குறுதி அப்படியே ஆனது. ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களால் நிர்வகிக்கப்படும் இதர மாநில அரசுகளையும் டெல்லி அரசையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் டெல்லி அரசின் அதிகார எல்லை வரம்புக்கு உட்பட்டதே. மைய அரசின் அதிகாரம் எங்கே முடிகிறது, மாநில அரசின் அதிகாரம் எங்கே துவங்குகிறது என்று பிரித்தறிய முடியாத சிக்கலான அமைப்பைக் கொண்டது டெல்லி.

2012 நவம்பரில் உருவாகி, 2013 நவம்பரில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குறுகிய கால ஆட்சி நடத்தியது ஆம் ஆத்மி கட்சி. 2015 பிப்ரவரி தேர்தலில் அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பெற்று - 70 தொகுதிகளில் 67-ல் வெற்றி கண்டு ஆட்சி அமைத்தது. ஊழலற்ற நிர்வாகம், இலவச வைஃபை, 500 பள்ளிகள், 20 கல்லூரிகள், டிடிஏ சீரமைப்பு, லோக் பால் சட்டம் எனப் பல வாக்குறுதிகளை வழங்கிய ஆம் ஆத்மி கட்சியின் அரசு, இந்த வரம்புகளுக்குள் என்ன செய்திருக்கிறது அல்லது செய்யவில்லை?

மின் கட்டணம், குடிநீர்

ஆட்சிக்கு வந்ததும், ஆம் ஆத்மி அரசு செய்த முதல் நடவடிக்கை - முந்தைய 42 நாள் அரசின்போது செய்ததுபோலவே குறிப்பிட்ட யூனிட்டுகள் வரை மின் கட்டணத்தைக் குறைத்தது, குறிப்பிட்ட அளவுக்குக் குடிநீரை இலவசமாக்கியது. நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்குப் பெரும் பயனைத் தரும் இந்த நடவடிக்கை வரவேற்பு பெற்றது. மேல்தட்டு மக்களுக்கும்கூட இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. அதுமட்டுமின்றி, கடந்த ஓராண்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத வகையில் நிர்வகித்துள்ளது. குறிப்பாக, லட்சக்கணக்கான அடுக்கக வீடுகளுடன் உருவாக்கப்பட்ட துவாரகா பகுதியில் பெரும்பாலான பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் இருக்கவில்லை, அல்லது போதுமான அளவுக்கு இல்லை. எல்லாரும் நிலத்தடி நீரையும் தண்ணீர் லாரிகளையும் மட்டுமே நம்பியிருந்தனர். அங்கே இப்போது குடிநீர் விநியோகத்தில் பெருமளவுக்கு முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர்க் கட்டணத்தைக் குறைத்தபோதிலும், விநியோகத்தை முறைப்படுத்தியதன் மூலம் டெல்லி குடிநீர் வாரியம் லாபத்தில் இயங்குவதாகவும் தெரியவருகிறது.

ஆம் ஆத்மி கட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், மின் துறையில் தனியார்மயத்தை அறிமுகம் செய்து மின் தடையைப் பெருமளவு போக்கியிருந்தது. அதே நிலை இப்போதும் தொடர்கிறது. டெல்லியில் மின் தடை அறவே இல்லாத அல்லது அரிதாகவே தடை ஏற்படும் நிலைதான் உள்ளது.

போக்குவரத்துத் துறையை எடுத்துக்கொண்டால், போக்குவரத்துக் கழகப் பேருந்துகள்தான். 40 ரூபாய் பாஸ் வாங்கி, ஒரு நாள் முழுவதும் ஏசி இல்லாத எந்தப் பேருந்திலும் பயணம் செய்யலாம். 50 ரூபாய் பாஸில் ஏசி பேருந்து உட்பட எந்தப் பேருந்திலும் பயணம் செய்யலாம் என்பது டெல்லிக்கே உரிய சிறப்பு. ஓராண்டில் கட்டண உயர்வு ஏதும் இல்லை. முந்தைய அரசுகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கட்டுவதில் முனைந்திருந்தன என்றால், இந்த அரசு வாக்களித்தபடி கடைக்கோடிப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேட்டரி ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மெட்ரோவை இணைக்கும் வேன்கள் ஆகியவற்றைப் பரவலாக்கியுள்ளது. சில பேருந்துகளில் இலவச வைஃபை பெயரளவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி

சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கை ஒற்றை, இரட்டை இலக்கத்தில் முடியும் வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களில் ஓடக் கூடாது என்ற சோதனை முயற்சி. ஜனவரி 1 முதல் 15 வரை மேற்கொண்ட இந்த முயற்சி கார் வைத்திருப்பவர்களுக்கு அதிருப்தி தருவதாக இருக்கலாம். ஆனால், சாலையில் அதிக கார்கள் இல்லாததால் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்து வோருக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது. காற்று மாசும் ஓரளவுக்குக் குறைந்தது. இதே திட்டத்தை, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் மோட்டார் பைக்குகளையும் இதில் சேர்க்க இருப்பதாகவும் தெரிகிறது.

ஊழலை ஒழிப்பதற்காக இணையத்தைப் பயன்படுத்தும் முயற்சிகள் கணிசமாக நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு ஒவ்வொரு துறையிடமும் ஓடுவதற்குப் பதிலாக ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்து, இணைய வழி அனுமதி பெறுவதற்கு வழி செய்தது. சாதிச் சான்றிதழை இணையவழி பெற வழி செய்தது. குடும்ப அட்டை முதல் வாகனப் பதிவு வரை சாமானிய மக்களின் பல்வேறு விண்ணப்பங்கள்மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. பிறப்பு இறப்புச் சான்றிதழ்களையும் இணைய வழியில் பெற முடியும். அரசு அலுவலகங்களில் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கவும், லஞ்சத்துக்கு வழிசெய்த பல வேலைகளை இணையத்தின் மூலமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத் தகுந்த மாற்றமாகும்.

அதேபோல, அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் அதிகாரமும் அதே அதிகாரிகளிடம் இருந்தது. அந்த நிலை மாற்றப்பட்டு, ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தலுக்கான நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டது. ஓராண்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. டெல்லி அரசின்கீழ் வரும் 38 மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் ஒரு மருத்துவரைக் கொண்ட சிறிய மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறும் திட்டங்கள்.

சோதனையே சாதனை

அமைச்சராக இருந்த தோமர், போலிச் சான்றிதழ் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதும், ஆசீம் அகமத் கான் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டதும் ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு ஏற்பட்ட சோதனைகள். ஊழல் குற்றச்சாட்டு வீடியோ வெளியானதும் அமைச்சர் நீக்கப்பட்டார், சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, இது வேறெந்தக் கட்சியும் அரசும் செய்யாதது என சோதனையை சாதனையாக மாற்றிக்கொண்டார் கேஜ்ரிவால்.

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்விக்குப் பிறகு, கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியின் மேம்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று சொன்னது சம்பிரதாயத்துக்காகவே என்பது அடுத்த ஓராண்டில் நிரூபணம் ஆனது.

ஆம் ஆத்மி கட்சி உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த லோக் பால் மசோதா கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா முந்தைய மசோதாவிலிருந்து மாற்றப்பட்ட வடிவம்தான். ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அதேபோல, மாநகராட்சிகள், டெல்லி மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளைச் சீரமைக்கும் வாக்குறுதியையும் டெல்லி அரசு எளிதாகச் செய்துவிட முடியாது. புதிய பள்ளிகள், கல்லூரிகள் கட்டுவதற்கும் நிலத்துக்காக மத்திய அரசின் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டும். டெல்லி அரசு - துணை நிலை ஆளுநர் (மத்திய அரசு) மோதல்கள் தொடரும் நிலையில், இவையெல்லாம் எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைக் கணிப்பது சிரமம்.

அரசியல் ரீதியாகப் பார்த்தால் கேஜ்ரிவால் மத்திய அரசுக்கு நெருக்கடியும் கொடுக்கிறார், நெருக்கடிக்கும் ஆளாகிறார். உள்கட்சி விவகாரத்தில் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின்போதே அரசியல் விவகாரக் குழுவை ஓரங்கட்டிய கேஜ்ரிவால், அடுத்த சில நாட்களில் தந்திரமாகக் காய் நகர்த்தினார். பெங்களூருவில் ஆயுர் வேத சிகிச்சைக்காகச் சென்றுவிட்ட நேரத்தில், அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் மீது தனது ஆட்களை விட்டு தாக்குதல் நடத்தச் செய்தார். அடுத்த சில நாட்களில் இருவரும் நீக்கப்பட்டார்கள். ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது ஒருகோடி ரூபாய் நன்கொடை கொடுத்த பிரசாந்த் பூஷண், கட்சிக்கு வழிகாட்டக்கூடிய சிந்தனையாளராக இருந்த யோகேந்திர யாதவ் இருவரையும் நீக்கிய பிறகு, கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டார். அரசியல் விவகாரக் குழுவின் வழிகாட்டல்படி நடந்திருந்தால் போலிச் சான்றிதழ் கொடுத்தவரோ, சாராய விநியோகம் செய்தவரோ ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஆகியிருக்க முடியாது.

சரியான திசை

அதே நேரத்தில், யோகேந்திர யாதவ் போன்றவர்களின் ஆலோசனைப்படி தேர்தலுக்கு முன்பு இளைஞர்கள், பகுதிவாழ் மக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து, டெல்லிக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ‘டெல்லி டயலாக் கமிஷன்’ என்ற முறையை ஆம் ஆத்மி கட்சி அறிமுகம் செய்தது. அது இப்போது ‘மொகல்லா சபா’ என்ற வடிவிலும் ‘டெல்லி டயலாக் கமிஷன்’ வடிவிலும் முன்வைக்கப்படுகிறது. மக்களுடன் நேரடித் தொடர்பு, அவர்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படுவதாகக் காட்டுதல் என்னும் திசையில் சரியாகவே போய்க்கொண்டிருக்கிறார்.

ஓராண்டில் உடனடிப் பிரச்சினைகளில் ஆம் ஆத்மி அரசு ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டிருக்கிறது. தொலைநோக்குத் திட்டங்களை மதிப்பிட காலம் ஆகும்! அது மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இருக்க முடியும்.

- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: shahjahanr@gmail.com

அரசு ஊழியர் போராட்டம் தீவிரம் ஆகிறது

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தங்கள் கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் எந்த அறிவிப்பும் வெளியாகாததால், சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தை இன்று (பிப்.17) முதல் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சேப்பாக்கம் அருகே எழிலகம் வளாகத்தில் நேற்று காலை யில் திரண்ட அரசு ஊழியர்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வளாகத்துக்கு உள்ளேயே பேரணியும் சென்றனர். நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஏதாவது அறிவிப்புகள் வெளி வரும் என்று அவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் எந்த அறிவிப்பும் வராததை தொடர்ந்து அவர்கள் எழிலகம் வளா கத்தை விட்டு வெளியேறி பேரணியாக தலைமைச் செயலகத்தை முற்றுகை யிட புறப்பட்டனர். ஆனால் பாதுகாப் புக்கு நின்றிருந்த போலீஸார் எழிலகத் தின் அனைத்து வாயில்களையும் அடைத்து, தடுப்பு ஏற்படுத்தி, அரசு ஊழியர்கள் வெளியேறாமல் சூழ்ந்து நின்று கொண்டனர்.

இதனால் போலீஸாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடுப்புகளை அகற்றிக் கொண்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர். அவர்களை போலீஸார் தடுக்க முயல, இரு தரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் சிலர் மயங்கினர். சிலர் காயம் அடைந்தனர்.

வெளியேறிய அரசு ஊழியர்கள் மெரினா கடற்கரை காமராஜர் சாலை யில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் காமராஜர் சாலை முழுவதும் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீ ஸார் வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். நூற்றுக் கணக்கானவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், போராட்டத்தை இன்று (பிப்.17) முதல் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி கூறிய தாவது:

போராட்டத்தை இன்றுமுதல் இன்னும் தீவிரப்படுத்த இருக்கிறோம். பட்டதாரி மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் உட்பட பல சங்கத்தினருடன் இணைந்து புதிய போராட்டக் குழுவை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். நீதித்துறை ஊழியர் சங்கத்தினர், டாக்டர்கள் சங்கத்தினர், செவிலியர் சங்கத்தினர் உட்பட அரசு சார்ந்த பல முக்கிய சங்கத்தினர் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

17-ம் தேதி (இன்று) முதல் அவர் களும் எங்களுடன் இணைந்து போராட இருக்கின்றனர். தாலுகா வாரியாக தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்செல்வி தெரிவித்தார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க மோடிக்கு ஜெ. வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி | கோப்புப் படம்

2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இணங்க தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "2014-15 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து 2014 ஜூலை 17-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தேன்.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன், ஈரோடு பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கலாம் என்ற பரிந்துரையையும் தெரிவித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 22 முதல் 25 தேதி தமிழக அரசு பரிந்துரைத்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், மத்திய அரசு எந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறது என்பது குறித்து தமிழக அரசுக்கு பதில் அளிக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் தமிழக மக்கள் பெரும் பயனடைவர்.

எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் எது என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மவுனத்தின் மர்மம் என்ன?

Return to frontpage

வெ.சந்திரமோகன்


மக்கள் நலக் கூட்டணியினர் உற்சாகமான பிரச்சாரங்களில் இருக்கின்றனர். திமுக கூட்டணிக் கணக்கை ஆரம் பித்துவிட்டது. வெகு விரைவில் தேர்தல் அறிக்கையும் வந்துவிடும் என்கிறார்கள். பாஜக, பாமக இரண்டும் ஒருபுறம் தனித்தனிக் கூட்டணிகளை அமைக்கும் கோதாவில் இருந் தாலும், மறுபுறம் தேர்தல் பணிகளையே தொடங்கிவிட்டன. தேமுதிக எந்தப் பக்கம் என்பதை இன்னமும் இறுதியாக அறிவிக்காவிட்டாலும், திமுக அல்லது பாஜகவோடு அது கை கோக்கும் என்பது ஊருக்கே தெரிந்திருக்கிறது. ஆனால், பிரதான கட்சியும் தேர்தல்களில் முந்திக்கொள்ளும் கட்சியுமான அதிமுக தரப்பிலிருந்து, கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த தேர்தல் முன்னோட்டக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “கூட்டணியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஜெயலலிதா பார்த்துக்கொள்வார்” என்று குறிப்பிட்டி ருக்கிறார். ஆனால், ஜெயலலிதாவோ அமைதி காக்கிறார். காங்கிரஸை அவர் பரம வைரியாக்கிவிட்டார். தேமுதிகவும் அந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட்டுகளும் தனிப் படகில் பயணம் கிளம்பிவிட்டனர். எதற்காகக் காத்திருக்கிறார் ஜெயலலிதா?

இது ஜெ. கணக்கு

எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவுக்கு இருந்துவரும் வாக்கு வங்கி, அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், திமுகவோடு ஒப்பிடும்போது என்றைக்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதிலும் கடந்த கால் நூற்றாண்டுத் தேர்தல்கள் அதிமுகவை மேலேயே கொண்டு வைத்திருக்கின்றன.

1991-ல் அதிமுக 44.4% வாக்குகளைப் பெற்றிருந்தது. 1996 தேர்தலில் கடுமையான எதிர்ப்பலை உருவாகியிருந்த சூழலில், திமுக - தமாகா கூட்டணி வென்றது. இத்தேர் தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 27.08% ஆகக் குறைந்தது. 2001-ல் மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்த போது, அதிமுக 31.4% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2006 தேர்தலில் திமுகவிடம் தோற்றபோதும், முந்தைய தேர்தலைவிட அக்கட்சிக்கு 1.2% வாக்குகள் அதிகம் கிடைத்திருந்தன - 32.6% வாக்குகளை வாங்கியிருந்தது. 2011 தேர்தலில் அதிமுக 38.4% வாக்குகள் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இப்படிச் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரங்களைத் தாண்டி, சமீபத்திய 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வென்றபோது அதன் வாக்கு வங்கி, 44.3% ஆக உயர்ந்திருந்தது. மறுபுறம், 23.6% வாக்குகளையே திமுக வாங்கியிருந்தது. ஜெயலலிதா மவுன மர்மத்தின் மைய ஆதாரம் இந்த வாக்குக் கணக்கு தரும் துணிச்சல்தான்.

சிதறும் கட்சிகளும் ரகசிய சிரிப்பும்

தமிழகத்தில் 1991-க்குப் பிறகு திமுக, அதிமுக என்று இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால், இந்த முறை கடந்த சட்டப்பேரவைத் தேர்த லுக்குப் பின் பெரிய அளவில் அரசியல் சூழலில் மாற்றங்கள் இல்லை.

இதனாலேயே 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு தொடர் வெற்றிகளைக் குவித்ததுபோல், இந்த முறையும் நடக்கும் என்று அதிமுகவினர் பேசிவந்தார்கள்.

ஆனால், வெள்ளத்துக்குப் பின் சூழல் மாறியது. தலைநகரிலும், கடலூர் - சிதம்பரத்திலும் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், மெத்தனமான ஆட்சி நிர்வாகம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள், நிவாரணப் பணிகளிலும் அதிமுக நிர்வாகிகள் நடத்திய கேலிக்கூத்துகள் பெரிய அளவில் அதிருப்தியை உருவாக்கின. எனினும், இந்த அதிருப்தியின் பலன்கள் எதிர்க் கட்சிகளைச் சென்றடையும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று நம்புகிறார் ஜெயலலிதா.

பிஹார் தேர்தலுக்குப் பின் நாடு முழுவதும் மகா கூட்டணி தொடர்பான சிந்தனைகள் வலுப்பெற்றபோதும் தமிழகம் நேர் எதிரான முடிவை நோக்கி நகர்ந்தது. இங்கே ஆளுங்கட்சிக்கு எதிரான கட்சிகள் திரளவில்லை. மாறாக, முன்பைக் காட்டிலும் மேலும் சிதறின. திமுக ஒருபுறம், கம்யூனிஸ்ட்டுகள் ஒருபுறம், பாமக ஒருபுறம், பாஜக ஒருபுறம் என ஆளுக்கு ஒருபுறம் திரும்பி நிற்கும் நிலையில், ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் தானாகச் சிதறும் என்று நினைக்கிறார். அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.

திமுக போனால் அதிமுக, அதிமுக போனால் திமுக எனும் சூழல் மாறி இரண்டுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்ற குரல்களை இந்த முறை அதிகம் கேட்க முடிகிறது. இந்தக் குரல்கள் சொற்பமானவை என்றாலும், அவை பொதுத் தளத்திலிருந்து ஒலிப்பவை என்பது முக்கியமானது. அதாவது, கட்சி வாக்கு வங்கியைத் தாண்டி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் வாக்குகள். அவைதான் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை எப்போதும் எதிர்க் கட்சிக்கு ஆதரவாகத் திருப்பிவிடக் கூடியவை. ஆனால், இந்தக் குரல்களில் பெரிய சேதாரம் இம்முறை ஏற்படும் வாய்ப்புகள் தெரிகின்றன. முக்கியமாக, மக்கள் நலக் கூட்டணி கணிசமான சேதத்தைத் திமுகவுக்குக் கொடுக்கக் கூடும்.

இப்படிப்பட்ட சூழலில், ஜெயலலிதாவின் முக்கிய மான கவனம் ஒரேயொரு விஷயத்தில்தான் இப்போது இருக்கிறது என்கிறார்கள். திமுக பக்கம் போய்விடாமல் தேமுதிகவைப் பார்த்துக்கொள்வது. திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வேறு விமர்சித்திருக்கிறார். திமுக கூட்டணியில் தேமுதிக சேராவிட்டால், காங்கிரஸ் ஓட்டுகளை இழுக்க தமாகா, தலித்துகள் ஓட்டுகளை இழுக்க இந்தியக் குடியரசுக் கட்சி, முஸ்லிம்கள் ஓட்டுகளை இழுக்க மனிதநேய மக்கள் கட்சி, வன்னியர் ஓட்டுகளை இழுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இப்படி சமூகங்கள் சார்ந்த சின்னச் சின்னக் கட்சிகளின் துணை போதும்; ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார் ஜெயலலிதா.

எண்களின் சாதகம்

எப்போதுமே கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைக் கறாராகப் பேச ஒரு வசனத்தைப் பயன்படுத்துவார் ஜெயலலிதா. “தோற்கும் ஐம்பதில் நிற்க வேண்டுமா, ஜெயிக்கும் ஐந்தில் நிற்க வேண்டுமா?” என்பதே அந்த வியூகம். சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்போது குறைந்தது 175 தொகுதிகளிலேனும் நிற்க முடியும். மூன்றில் இரு பங்கு இடங்களை இழந்தாலும் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று அவர் கணக்குப் போடுகிறார்.

சரி, ஒருவேளை தேமுதிகவை திமுக இழுத்துவிட்டால்? அப்போது கணக்கு மாறும். மேலும் சில கட்சிகளை அதிமுக குறிவைக்கும். அப்போது அணிகளையும்கூட அது தகர்க்கும் என்கிறார்கள். மவுனத்தின் மர்மம் விலகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

Tuesday, February 16, 2016

நியாயங்கள் பொதுவானவை... புரியாமல் போனவை!

vikatan.com

நியாயங்கள் பொதுவானவை... புரியாமல் போனவை!

தலையாரிக்கு ஒரு சட்டம்... தலைமைச் செயலருக்கு ஒரு சட்டமா?
ரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினார்கள்... ஊழல் செய்தார்கள் என்று யாராவது புகார் கொடுத்தால், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவுசெய்து உடனே களத்தில் இறங்கிவிடும். இன்ஸ்பெக்டர், மின்வாரிய ஊழியர், வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ என்றால் கேட்கவே தேவையில்லை. ஆக்‌ஷன் அதிரடியாக இருக்கும். ஆனால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அரசுத் துறை இணைச் செயலாளர், அதற்கு மேல் தகுதியில் இருக்கும் அதிகாரிகள் ஊழல் செய்தார் என்று புகார் கொடுத்தால், அதில் ஆக்‌ஷன் ஆமை வேகத்தில் இருக்கும். காரணம், விதிமுறைகள் அப்படி.
ஆளுக்கொரு நியாயம்...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற முதல் ரக அதிகாரிகள் மீது, லஞ்சப் புகார் கொடுத்தால், அதை லஞ்ச ஒழிப்புத் துறையில் தனியாக எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையரின் மேஜைக்குக் கொண்டு போவார்கள். அவர் அதை, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தபாலில் அனுப்பி வைப்பார். அத்தோடு அங்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் வேலை முடிந்துவிடும். 

அதன்பிறகு, தலைமைச் செயலாளர் அந்தப் புகாரை படித்துப் பார்த்துவிட்டு, அதைக் கவனிக்கலாம் என்று அவர் நினைத்தால், ஒரு குழுவை அமைப்பார். அந்தக் குழு, அந்தப் புகாரை பரிசீலனைசெய்து, அலசி ஆராய்ந்து, இதில் வழக்குப் பதிவுசெய்யலாம் என்று அறிக்கை கொடுத்தால், அதன்பிறகுதான் லஞ்ச ஒழிப்புத் துறை அதில் வழக்கையே பதிவுசெய்யும். இல்லை யென்றால், அதுவும் இல்லை. தமிழக அரசாங்கத்தில் மட்டுமல்ல... மத்திய அரசிலும் இதுதான் நிலை.
மத்திய அரசு vs உச்ச நீதிமன்றம்

அரசின் நடைமுறைகளால் வெறுத்துப்போன வினித் நாராயணன் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டார். அதன்படி தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், அவர் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு சட்டம், கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக் கூடாது என்று கோரினார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இது சரியான கோரிக்கை. இனி அப்படியே செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

ஆனால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை. மாறாக, 1998-ம் ஆண்டு ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமானால், அதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என வசதியாக சட்டம் இயற்றிக்கொண்டது. மத்திய அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அந்த வழக்கை விசாரித்தது. 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “உச்ச நீதிமன்றம் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுவாக எடுக்க நினைக்கிறது. ‘லஞ்ச ஒழிப்புச் சட்டம்’ என்ற ஒன்று இருப்பதே லஞ்சம் வாங்குபவர்களையும் ஊழல் செய்பவர்களையும் கட்டுப்படுத்து வதற்குத்தான். ஆனால், அரசாங்கம் வைத்துள்ள விதிமுறைகள், அதற்கு நேர்மாறாக தவறு செய்பவர்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப் பட்டதாக உள்ளது. எனவே, இனிமேல் இதுபோன்ற நடைமுறைகளைக் கைவிட்டு, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்குமேல், அதில் பிடிவாதம் பிடிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த மத்திய அரசு, ஆட்டத்தில் இருந்து விலகிக்கொண்டது. மத்திய அரசு ஊழியர்கள் யார் தவறு செய்தாலும் அதில் புகார் வந்தால், சி.பி.ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டது.

தமிழக அரசு திருத்தவில்லை!

மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டாலும், தமிழக அரசுக்கு அதை ஏற்க மனமில்லை. வழக்கம்போல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு நடைமுறை, மற்ற அரசு ஊழியர்களுக்கு ஒரு நடைமுறை என்றே வைத்திருந்தது. இதை மாற்றச் சொல்லி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர், 2010-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். வினித் நாராயணன் வழக்கு தீர்ப்பு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை எல்லாம் மேற்கொள் காட்டி அவருடைய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடினார். இதையடுத்து, இதில் தமிழக அரசின் நிலை என்ன என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதில் சொன்ன அரசாங்கம், விரைவில் புதிய அரசாணையைக் கொண்டுவருவோம். அதில், தவறு செய்யும் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சமமாக பாவித்து ஒரேவிதமான நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
‘சரி, தமிழக அரசும் திருந்தப்போகிறது. இனி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தவறு செய்தால், அவர்கள் மீதும் வழக்குப் பதியப்படும்’ என்று வழக்கறிஞர்கள் புகழேந்தியும், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும், பொதுமக்களும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், கடந்த 2-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து ஓர் அரசாணை வந்தது. சரியாக அது அரசாங்க ஊழியர்கள் அனைவரையும் சமமாக பாவித்தே வெளியாகி இருந்தது. 

அதில், ‘‘தவறு செய்தவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி... சாதாரண தலையாரி, வி.ஏ.ஓ என யாராக இருந்தாலும் சரி... அத்துடன் பொது ஊழியர்கள் என்று சொல்லப்படும், பஞ்சாயத்து போர்டு தலைவர் தொடங்கி அமைச்சர் வரை யாராக இருந்தாலும் ஒரே நடைமுறைதான். இனி ஐ.ஏ.எஸ் அதிகாரி மட்டுமல்ல, தலையாரி லஞ்சம் வாங்கினால் கூட அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யக் கூடாது. மாறாக அந்தப் புகாரை அரசாங்கத்துக்கு அனுப்பி, அரசாங்கத்தின் கருத்தை அறிய வேண்டும். அரசாங்கம் அவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்று சொன்னபிறகுதான் லஞ்ச ஒழிப்புத் துறை தனது வேலையைத் தொடங்க வேண்டும்’’ என்று அந்த அரசாணை சொல்கிறது. தற்போது இதை எதிர்த்து புகழேந்தி, நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார். மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடிக்கொண்டிருக்கிறார்.

 - ஜோ.ஸ்டாலின்

அரசாணைக்கான அவசரம் ஏன்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகர் என்பவர் ஒரு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர், சென்னை மருத்துவக் கல்லூரியில் விதிமுறைகளை மீறி, எண்டோகிரையானலஜி துறையில் இணைப் பேராசிரியர் பதவியிடத்தை உருவாக்கி உள்ளனர். இது குறிப்பிட்ட ஒருவருக்கு தவறான வழியில், பதவி உயர்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பணியிடம். எனவே, தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தங்களுக்குச் சிக்கலாகும் என்ற நிலையில், இப்படி ஓர் அரசாணையை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

போஸ்ட் ஆபீஸ் வேலையை மட்டுமே செய்யும்!


தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் விதிமுறையைத் திருத்தச் சொல்லி நாம் வழக்குத் தொடுத்துள்ளோம். ஆனால், தமிழக அரசு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக் கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் விதிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிடுகிறது. தற்போது வெளியாகி உள்ள அரசாணையின்படி, யார் லஞ்சம் வாங்கினாலும் ஊழல் செய்தாலும் அவர் பஞ்சாயத்து போர்டு தலைவர், தலையாரி, வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ., தலைமைச் செயலாளர், கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர்... என யார் மீதும் வழக்குப் பதிவுசெய்ய முடியாது. வரும் புகார்களை அரசாங்கத்துக்கு அனுப்பும் போஸ்ட் ஆபீஸ் வேலையை மட்டும்தான் இனி லஞ்ச ஒழிப்புத் துறை செய்ய முடியும். நாடு முழுவதும் லோக்பால், ஜன் லோக்பால் என்று புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து வலுபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழிகாட்டி உள்ளது. இவை அத்தனையும் மீறி, இவற்றுக்கு நேரெதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை தமிழகத்தை ஊழல் மாநிலமாக்கவே வழி செய்யும்’’ என்றார்.

Sunday, February 14, 2016

the times of india

Telangana starts disaffiliation of colleges under NTR health university

Prabeerkumar Sikdar, TNN | Feb 11, 2016, 08.35AM IST

HYDERABAD: MBBS, postgraduate medicos and others joining medical and other allied colleges in over 120 government and private colleges in Telangana can finally hope to get their degrees from Warangal-based Kaloji Narayana Rao University of Health Sciences (KNRUHS), 18 months after its formation.

This has become possible after the Telangana state health department kickstarted the process of disaffiliation for the colleges including dental sciences, nursing, Ayurveda, homoeopathy , Unani, naturopathy , physiotherapy , medical lab technician and nutrition and public health courses from Vijaywada-based Dr NTR University of Health Sciences (NTRUHS) by passing a latest order.

While the order fixed the cut-off date to disaffiliate these Telangana-based colleges from NTRUHS followed by their reaffiliation to KNRUHS by June 1, 2016, the transition process seems to have already created some ambiguities as both the varsities would have dual control over some academic years, said experts.


"For instance, medicos who have already joined courses in colleges under NTRUHS jurisdiction at the time of their admission, would continue to remain their students till the completion of the entire course period. Their degrees and their examination papers would continue to be set by NTRUHS as per existing University Grants Commission (UGC) guidelines," said Dr K Ramesh Reddy , member, Medical Council of India (MCI).

"Though reaffliation of colleges with KNRUHS will come into effect from June 1, 2016, existing students who joined various courses in medical and allied colleges like dental and AYUSH would not only have their exams conducted by Andhra-based NTR health varsity but also would get their degrees from there," said Dr T Venkateshwar Rao, registrar, KNRUHS.

He added that they are yet to obtain a for mal nod from the MCI and Union health ministry to take up the disaffiliation process but they would soon be writing to them separately to speed up the exercise.

However, the dual jurisdiction seems to have created confusion with T Junior Doctors' Association stating that they want complete control of Kaloji health varsity in matters of Eamcet and PG medical entrance tests and counselling.

Karnataka: Three medical interns washed away in a Mandya canal


DNA
They were given a send-off by the hospital and after the celebration five of them decided to go for a quick swim in the canal. This canal is close to the Bengaluru-Mysuru highway adds the report.

Three MBBS interns decided to go for a swim on Friday in a canal near Hulivana village, near Mandya. Unfortunately, the strong currents washed them away and they could not be saved.

The New Indian Express reports that the three students are Shruti and Jeevan from Bengaluru and Girish from Tumakuru. Reportedly, five students who had just finished their MBBS exams at Mandya Medical College had started their internship at Primary Health Centre (PHC) in Keragodu.

At around 4.30 pm, all of them went into the water near the highway but around 5.30 pm villagers heard them screaming and rushed to find out what was happening. The daily adds that four of the students were pulled out by the villagers but Shruti had already died and Jeevan died on the way to the hospital. They are yet to trace the body of Girish.
Recommendations


The police have stated that the doctors were either unaware of the how strong the currents were or did not know how to swim. They are still searching for Girish's body.

HC raps UGC for ambiguous stand on V-C appointment

HC raps UGC for ambiguous stand on V-C appointment


Censuring the University Grants Commission (UGC) for taking an ambiguous stand on the issue of whether State Universities should follow UGC guidelines while appointing Vice-Chancellors, the Madras High Court on Monday directed the Joint Secretary of the Commission to appear and clarify its stand.

“We find that the UGC has taken rather an ambiguous stand. On one hand, they seek to suggest in the course of arguments that they agree with the case of the petitioner. Yet seem to be doing nothing about it. This is likely to cause lack of clarity even for the future,” the First Bench of Chief Justice S.K. Kaul and Justice Pushpa Sathyanarayana observed while hearing a PIL moved by moved by Change India organisation and former Vice-Chancellor of Anna University M. Anandakrishnan challenging a notification issued by the Madurai Kamaraj University to fill up the post of Vice-Chancellor.

The petition alleged that large-scale corruption occurred in various universities and to prevent such scams, the universities must follow the guidelines prescribed by the UGC.

Bench questions counsel

When the public interest litigation petition came up for final hearing, the Bench questioned counsel representing the UGC whether the Commission proposes to do anything about the issue.

Responding to the query, counsel said that they could only invoke the penal clause available under the UGC Act.

Noting that the UGC in essence sought to abandon its role and put the issue before the court for necessary direction, the Bench said, “We are of the view that to obtain necessary clarity, the Secretary of UGC [must] remain present in the court with records.”

But considering the request made by counsel, the Bench directed the Joint secretary concerned to appear and posted the matter to February 22.



Summons Joint Secretary with records for clarification

UGC scholarships via DBT from April


Tribune News Service

New Delhi, February 11

The University Grants Commission will begin disbursement of scholarships and fellowships through Direct Benefit Transfer mode from April 1, 2016. In a letter to all universities, the UGC has asked them to complete digitisation of records of beneficiaries of scholarships and fellowships.

The UGC had written to all universities in December informing them that fellowships and scholarships were being brought under the Direct Benefit Transfer and Public Finance Management System (PFMS).

Interface meetings for verification of data, reconciliation of accounts and utilisation certificates are being conducted.

Universities have been asked to provide information of scholarships to UGC to ensure that payments from April onwards can be made through DBT mode.

Payments of scholarship amounts up to March 2016 are to be made from grants already released to the universities or from their own sources which will then be reimbursed by UGC, said a letter from the UGC addressed to all universities.

UGC allows varsities to use jammers in exam halls

Return to frontpage

It will prevent students from using mobile phones, other gadgets for copying

The University Grants Commission has decided to allow universities to deploy low-powered jammers in examination halls to prevent students using mobile phones, bluetooth and other gadgets for copying.

In a notice to all universities, UGC secretary Jaspal S. Sandhu said the government has a policy to provide the jammers on lease in order to prevent unfair means used through radio frequency based devices by the examinees.

However, the universities can’t procure jammers on their own due to security reasons.

The Cabinet Secretariat has informed the UGC that prior permission from it is necessary to prevent security threat.

Only from ECIL and BEL

And that the jammers could be procured only from two companies – ECIL and BEL.

“The examination conducting bodies must provide all the details such as the centres (and colleges) and the number of jammers required to the officials. Universities cannot individually invite tenders from other unauthorised manufacturers,” said Arti Bhatnagar, Joint Secretary (Security), Cabinet Secretariat, in the letter to UGC Chairman Ved Prakash.

Complaint

UGC Vice Chairman H. Devaraj told The Hindu that the decision to permit universities to use jammers followed complaint from a medical university that students had carried mobile phones into the exam hall and had used it for copying.

In 2012, a case had come up in the Madras High Court stating that two students of Government Stanley Medical College had copied using a mobile phone.

The college had sought the help of cyber crime officials to prove that the students had indeed used bluetooth to copy in the exams. One student was barred from taking the exam for three subsequent sessions.

‘Mobile phones

not allowed’

According to S. Thirumagan, controller of examination, University of Madras, the directive on the use of jammers should come from the Syndicate, the statutory body.

“We don’t allow mobile phones inside the examination hall. Invigilators and the chief superintendent have the authority to physically verify the students. It is one of the 10 instructions for the invigilators that mobile phones cannot be carried into the examination halls,” he said.



The universities can’t procure jammers on their own due to










security reasons

UGC lets deemed private universities have 6 off-centre campuses..toi

NEW  DELHI: Barely three months after the University Grants Commission (UGC) issued notice to 10 deemed universities, including prestigious ones like the Tata Institute of Fundamental Research, for having off-centre campuses without clearance, it has amended its regulation allowing private deemed universities to have six off-campuses.

In case of government-established and managed deemed universities, the UGC's ceiling of six off-campuses will not apply.
However, HRD ministry sources said allowing six offcampuses does not change the nature of the UGC notice to the 10 deemed universities. "Having off-campuses does not mean UGC and HRD ministry clearance is not needed. Fact remains that these 10 violated the existing UGC regulations," said an official. BITS, Pilani that received notice for having off-campus in Goa and Hyderabad has moved Delhi HC against UGC.


UGC's case against these universities has further diluted after it approved the existence of Bhubaneshwar-based National Institute of Science Education & Research, off-campus centre of Homi Bhabha National Institute, Mumbai.

u


"This has weakened UGC's case against 10 deemed universities. Eventually all will get clearance," said a senior UGC official, who admitted that the HRD ministry was taken by surprise when the notices were sent.


In November, notices were sent to Narsee Monjee Institute of Management Studies University; Birla Institute of Technology & Science (BITS) Pilani; Birla Institute of Technology, Mesra; Indian School of Mines, Dhanbad; Banasthali University, Rajasthan; Ponnaiyah Ramajayam Institute of Science and Technology, Thanjavur, Tamil Nadu; Indian Veterinary Research Institute (IVRI) Uttar Pradesh; Lakshmibai National University of Physical Education (LNIPE), Gwalior; Tata Institute of Fundamental Research and Homi Bhabha National Institute.

UoM flouts UGC rules, sanctions hefty salary for guest lecturers

DECCAN HERALD

UoM flouts UGC rules, sanctions hefty salary for guest lecturers
Ashwini Y S, Feb 11, 2016, Bengaluru: DHNS:

Syndicate Council gave its approval for hike, says registrar

Violating University Grants Commission (UGC) regulations, the University of Mysore has announced a huge hike in salaries of temporary/guest lecturers.

The university has fixed a monthly salary of Rs 50,000 per guest lecturer, according to a notification issued on January 19 (dated January 18). Applications were invited for two posts of ‘assistant professors’ for five new departments proposed on a ‘temporary basis’.

The revised UGC guidelines of 2010 state that guest lecturers must be paid Rs 1,000 per lecture to a maximum of Rs 25,000 per month. This means that the 10 new guest lecturers will be taking home huge pay packets, while the existing temporary lecturers will draw only up to Rs 25,000 a month.

UoM has also flouted the Karnataka State Universities Act, 2000. According to Section 15 of the Act, the vice-chancellor or the university has no powers to fix salaries of temporary lecturers. Further, the High Court on July 14, 2015 had ruled against Kuvempu University for issuing a similar notification. The Court has ordered that varsities should “strictly follow existing guidelines and rules of Government of Karnataka and UGC, while recruiting guest lecturers”.

The departments proposed are, ‘Genetics and Genomics’, ‘Molecular Biology’, ‘Organic Chemistry’, ‘Public Administration’, and ‘School of Law’ (in place of existing School of Justice).

Setting up of a new law department, even by an autonomous body like UoM without obtaining permission from the Karnataka State Law Universities, is in violation of the KSLU Act, 2009.

The university has also violated the election code of conduct by issuing the notification after the Assembly and ZP/TP elections were announced. The Mysuru district commissioner has ordered for the process to be withheld.

No violation: Registrar

UoM Registrar C Basavaraj maintained that the salary enhancement was not in violation of UGC guidelines. “It is a consolidated amount and the university has obtained the syndicate’s approval. The salary component will be met by our own resources.” He also said the proposed School of Law would not be a “new department”. “We just wanted to change the nomenclature from School of Justice to School of Law. There is no need to take KSLU’s permission,” he added.

‘KSLU Act flouted’

B S Reddy, Registrar of KSLU said that UoM had not sought any permission for the setting up of a new law department. “It is not clear how the UoM syndicate approved the proposal. The KSLU Act, 2009 clearly stipulates that all new law departments (excepting in private and deemed varsities) have to be affiliated to KSLU. It is not clear how the Law department is allowing this. This will set a wrong precedent,” he said.

கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., படிப்பு ரத்து செய்ய கல்லூரிகள் முடிவு


DINAMALAR

தமிழகம் முழுவதும், 60 இன்ஜினியரிங் கல்லுாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்துள்ளன.
இன்ஜி., கல்லுாரிகளில், மே முதல் வாரத்தில், மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. ஜூலை, 30க்குள், அரசு ஒதுக்கீடுக்கான இடங்களும்; ஆக., 14க்குள், நிர்வாக ஒதுக்கீடுக்கான இடங்களும் நிரப்பப்படும்.
அதற்கு முன், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அங்கீகாரம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. வரும், 28ம் தேதிக்குள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., கெடு விதித்துள்ளது.
அதனால், 500க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள், அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து வருகின்றன. சில கல்லுாரிகள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை படிப்புக்கான மையத்தை மூடவும், சில பாடப்பிரிவுகளை ரத்து செய்யவும் கோரியுள்ளன.
தற்போதைய நிலையில், 60 இன்ஜி., கல்லுாரிகள், பல்வேறு பாடப்பிரிவுகளை ரத்து செய்ய கோரிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., - எம்.பி.ஏ., பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் முன்வராததால், அப்படிப்புகளை தொடர்ந்து நடத்த முடியாது என கல்லுாரிகள் தெரிவித்துள்ளன.
அதேபோல், இன்ஜி., கல்லுாரி வளாகங்களில் தனியாக செயல்படும் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை கல்லுாரிகளை மூடவும், சில கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. அதற்கு, மாணவர் சேர்க்கை குறைவு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமை போன்ற காரணங்களை தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பி.இ., - பி.டெக்.,கில் புதிதாக தொழில் சார்ந்த பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கேட்டுள்ளன. தொழிற்சாலைகளுடன் இணைந்து நடத்தப்படும் புதிய பாடப்பிரிவுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

பரிசோதனை ரகசியங்கள் - 18: ‘எண்டாஸ்கோப்பி’ என்றால் என்ன?

டாக்டர். கு. கணேசன்

அலோபதி மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளில் ‘எண்டாஸ்கோப்பி'யின் (Endoscopy) வரவு மிக முக்கியமானது. அறுவை சிகிச்சை செய்யப்படாமல் உடலின் உள் நோய்களை மிக எளிதாகக் கண்டறிய உதவும் 'உள்நோக்கும் கருவி' இது. அதாவது, நம் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள துவாரங்கள் வழியாக (வாய், காது, மூக்கு, தொண்டை, ஆசனவாய், சிறுநீர்க்குழாய்) வயிறு மற்றும் உடலின் உள்உறுப்புகளைக் காண உதவும் கருவிக்குப் பொதுவான பெயர் எண்டாஸ்கோப்பி. 'எண்டோ' என்றால் ‘உள்ளே' என்று அர்த்தம். ‘ஸ்கோப்பி' என்றால் ‘நோக்குதல்' என்று அர்த்தம்.

இதில் பல வகை உண்டு:

# கேஸ்ட்ரோஸ்கோப்பி (Gastroscopy): தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, சிறு குடல் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# லெரிங்கோஸ்கோப்பி (Laryngoscopy): தொண்டை மற்றும் குரல்வளைப் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# பிராங்கோஸ்கோப்பி (Bronchoscopy): சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல்களைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# கொலனோஸ்கோப்பி (Colonoscopy): ஆசனவாய் மற்றும் பெருங்குடல் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# சிஸ்டாஸ்கோப்பி (Cystoscopy) : சிறுநீர்த் துளை வழியாகச் சிறுநீர்ப்பை, சிறுநீர் இறக்குக்குழாய், புராஸ்டேட் போன்ற பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# பிராக்டோஸ்கோப்பி (Proctoscopy): மலக்குடலைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# தொரக்கோஸ்கோப்பி (Thoracoscopy) : புளூரா எனும் நுரையீரல் உரை, பெரிகார்டியம் எனும் இதய உரை மற்றும் நெஞ்சுப் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# கால்போஸ்கோப்பி (Colposcopy): பெண் பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# லேப்ராஸ்கோப்பி (Laparoscopy): கல்லீரல், கணையம், பித்தப்பை, கரு வெளியேறும் குழாய், வயிற்றின் உள்ளுறுப்புகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி .

# ஆர்த்தோஸ்கோப்பி (Arthoscopy) : எலும்பு மூட்டுகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

இரைப்பை எண்டாஸ்கோப்பி

‘இரைப்பை எண்டாஸ்கோப்பி’(Gastro endoscopy) என்பது தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றைப் பரிசோதிக்க உதவும் கருவி. இதில் ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு ஃபைபர் குழாய் உள்ளது. இது வளைந்து நெளிந்து குறுகிச் செல்லக்கூடியது. இதைப் பயனாளியின் வாய் வழியாக இரைப்பைக்குள் செலுத்துகிறார்கள். உள்ளே சென்ற குழாயின் முனையில் வெளிச்சம் தரக்கூடிய பல்ப் இருக்கும். இதை வெளியிலிருந்தே இயக்கலாம். இக்குழாயின் வெளிமுனையில் லென்ஸ் இருக்கும். பல்பை எரியவிட்டு, வெளிமுனையில் உள்ள லென்ஸ் வழியாக மருத்துவர் பார்ப்பார்.

லென்ஸ் இரைப்பையின் பாகங்களைப் பன்மடங்காகப் பெரிதாக்கிக் காண்பிக்கும். அத்துடன் சுருங்கி இருக்கும் இரைப்பையை விரிவடையச் செய்யக் காற்றைச் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. உணவுக்குழாய் வால்வுப் பிரச்சினை, இரைப்பைப் புண், கட்டி, ரத்தக்கசிவு, புற்றுநோய் போன்றவற்றை இதன் மூலம் நேரில் காணமுடியும். பரிசோதனைக்கு உள்ளாகும் பகுதியில் புற்றுநோய் உள்ளது எனச் சந்தேகம் வந்தால், அந்தத் திசுவை ‘பயாப்சி’பரிசோதனைக்கு அனுப்ப, சிறிதளவு திசுவைக் கிள்ளி எடுக்கவும் இதில் வசதி உள்ளது. இரைப்பைச் சுரப்புகளை உறிஞ்சி எடுத்துப் பரிசோதிக்கவும் இது உதவுகிறது.

இந்தப் பரிசோதனையைச் செய்ய மயக்க மருந்து தேவையில்லை. குழாயை உள்ளே செலுத்தும்போது ஏற்படுகிற சிரமத்தைக் குறைக்க மதமதப்பை உண்டாக்கக்கூடிய ஜெல்லி மருந்தை வாயில் தடவுவார்கள்.

சிகிச்சையும் தரலாம்

இது பரிசோதனை கருவி மட்டுமல்ல. இதைப் பயன்படுத்திச் சில நோய்களுக்குச் சிகிச்சையும் தர முடியும். முக்கியமாக, கல்லீரல் சுருக்கநோய் மற்றும் குடல்புண் வந்தவர்களுக்கு ரத்தவாந்தியும் ரத்தக்கசிவும் ஏற்படுவதுண்டு. இவர்களுக்கு எண்டாஸ்கோப்பி மூலம் பேண்டிங், ஸ்கிலிரோதெரபி போன்ற சிகிச்சைகளை அளித்துக் குணப்படுத்த முடியும். உணவுக்குழாய் புற்றுநோய் வந்தவர்களுக்கு ERCP எண்டாஸ்கோப்பி மூலம் செயற்கை உணவுக்குழாயைப் பொருத்த முடியும். குழந்தைகள் தவறுதலாக நாணயம், ஊக்கு, குண்டூசி, கோலிக்குண்டு, கம்மல், ஹேர்பின் போன்றவற்றை விழுங்கிவிடுவார்கள். இவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டாஸ்கோப்பி மூலம் எளிதாக எடுத்துவிட முடியும்.



(அடுத்த வாரம்: எலும்பு வலுவிழப்பு நோய்க்கு என்ன பரிசோதனை?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? 19: ஹிஸ்டீரியா - தேவை கையாள்வதில் கவனம்

டாக்டர் ஆ. காட்சன்

ஹிஸ்டீரியாவில் பிரச்சினையே இந்த மனநோயானது, நரம்பியல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுவதுதான். இதனால் பாதிக்கப்படும் வளர்இளம் பருவத்தினரை நரம்பியல் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால், தேவையான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்கிற பட்சத்தில் கண்டிப்பாக மனநல ஆலோசனை அவசியம்.

இல்லையென்றால் ‘பழி ஓர் இடம், பாவம் ஓர் இடம்’ என்பதுபோல வீணான பரிசோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவதுடன், தேவையற்ற மாத்திரை மருந்துகளையும் உட்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் காலம் வீணாவதுடன் நோய் தீவிரமாகவும் மாறலாம்.

வலிப்பில்லாத வலிப்பு

சமீபத்தில் 17 வயது பெண் ஒருவரை அவருடைய அம்மா திடீர் மயக்கம் மற்றும் வலிப்புநோய் இருப்பதாகவும், பல வருடங்கள் மாத்திரைகள் உட்கொண்டபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறி அழைத்து வந்திருந்தார். அந்தப் பெண்ணின் வலிப்பு நோய் அறிகுறி மற்றும் வரலாற்றைக் கேட்டபோது, நான்கு வருடங்களுக்கு முன்பு அவருடைய அப்பா இறந்த பிறகு அந்தப் பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டதாகவும், அதற்குப் பின்தான் இந்த நோயே ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். அந்தப் பெண்ணின் வலிப்பு அறிகுறிகளின் தன்மை, நரம்பு பாதிப்பால் ஏற்படும் வலிப்பின் தன்மையோடு ஒத்துப்போகவில்லை.

மாறாக அப்பாவை இழந்ததால் மனதில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாத்திரை கொடுத்தும் சரியாகாததால், அவள் வேண்டுமென்றே செய்வதாகவும், பேய் பிடித்திருப்பதாகவும் கூறிச் சூடு போட்டுச் சிகிச்சை (?) கொடுத்திருக்கிறார்கள். இது ஒரேயொரு உதாரணம்தான்.

உண்மையில் இதுபோலப் பலர், தகுந்த சிகிச்சை இருப்பது தெரியாமல் பல வருடங்கள் கழித்தே சரியான காரணத்தைக் கண்டறியும் நிலையில் இருக்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி சுமார் 30% வரையிலான வலிப்புநோய்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 25 சதவீதத்துக்கும் மேலானோர் வலிப்பு மாத்திரைகளையே உட்கொள்ளும் நிலை உள்ளது.

எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்த நோயின் எல்லா அறிகுறிகளும் உடல் ரீதியாக இருப்பதால், பெற்றோர்களுக்கு இது மனநலப் பாதிப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாக வாய்ப்பில்லைதான். ஆனால், சில வித்தியாசங்களை வைத்து இதன் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

#

இந்த அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகச் சில நாட்களுக்குள் மனதைக் காயப்படுத்திய சம்பவங்கள் ஏதேனும் பெரும்பாலும் நடந்திருக்கும்.

#

உடல் நோய் அறிகுறிகளுக்குள்ள எல்லாப் பரிசோதனைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இருக்காது.

#

சில வேளைகளில் அதிகக் கவனம் செலுத்தும்போது நோய் அறிகுறிகள் கூடும். ஆனால், அதற்காக அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக அர்த்தமல்ல.

#

இந்த நோய் அறிகுறிகள் மூலம், அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் இருந்திருக்கலாம். உதாரணமாக ஒருமுறை இதுபோன்ற வலிப்பு வந்தவுடன் சில நாட்கள் பள்ளி செல்வதிலிருந்து விதிவிலக்கு கிடைத்திருக்கும். பின்பு பள்ளி செல்ல விருப்பம் இல்லாத நாட்களில் இந்தத் தொந்தரவு திரும்ப ஏற்படலாம்.

# அறிவியல் ரீதியான அறிகுறிகளாக இல்லாமல் அவர்களுக்குத் தெரிந்த விதத்திலேயே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக உண்மையான வலிப்பு ஏற்படும்போது இருபுறமும் உள்ள கை, கால்கள் ஒரே நேரத்தில் வெட்டி வெட்டி இழுக்கும். ஆனால், இந்த ஹிஸ்டீரியாவில் ஏற்படும் வலிப்பில் கை கால்கள் வெவ்வேறு நேரத்தில் இழுத்து, சைக்கிள் ஓட்டுவதுபோலக்கூட இருக்கலாம்.

# இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாததுபோலச் சாதாரணமாகவும் இருப்பார்கள்.

# முக்கியமாக அந்தந்த நோய் அறிகுறிகளுக்குரிய மாத்திரைகளுக்கு நோய் கட்டுப்படாது. வலிப்பு அல்லது மூர்ச்சைக்குரிய மாத்திரைகளை உட்கொண்டு வரும்போதே, மீண்டும் தீவிரப் பாதிப்புகள் ஏற்படலாம்.

என்ன சிகிச்சை?

ஹிஸ்டீரியாவில் ஏற்படும் உடல்நோய் அறிகுறிகள் மனநல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலமாகக் குணப்படுத்தக்கூடியவையே. மனதைப் பாதித்த சம்பவங்களை வெளிக்கொண்டுவந்து நோயைக் குணப்படுத்த ஹிப்னாசிஸ், நார்கோ பரிசோதனைகள் உட்படப் பல உளவியல் சிகிச்சைகள் உள்ளன. ஒருவேளை மன அழுத்த நோயின் அறிகுறியாக இருக்குமானால், மாத்திரைகளுடன் மின் அதிர்வு சிகிச்சையும் தேவைப்படலாம். இவர்களைத் திட்டுவதாலோ வேண்டு மென்றே செய்கிறார்கள் என்று குறை கூறுவதாலோ, பிரச்சினை கூடுமே தவிரக் குறையாது. அதேநேரம் இந்த அறிகுறிகளின் காரணமாக அதிகப்படியான சலுகைகளும் கொடுக்கக்கூடாது. அப்பா, அம்மா இருவரின் கவனிப்பு மற்றும் அன்பு சமநிலையாகப் பகிர்ந்தளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.

(அடுத்த முறை: தலைகீழாகும் வாழ்க்கை)கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

ஏ.மருதகாசி 10


Return to frontpage


திரைப்பட பாடலாசிரியர்

தமிழ் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியரும், திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவருமான ஏ.மருதகாசி (A. Marudakasi) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

l திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் (1920) பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றார். அருணாச்சல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.

l கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் தேவி நாடக சபா நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிவந்தார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அங்கு இசையமைத்து வந்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்குப் பாட்டு எழுதி வந்தார். பாடலாசிரியர் ராஜகோபால ஐயரிடம் உதவியாளராகவும் பணியாற்றினார்.

l திருச்சி லோகநாதன் மூலமாக 1949-ல் இவரது திரையுலகப் பயணம் தொடங்கியது. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாயாவதி’ படத்துக்காக ‘பெண் எனும் மாயப் பேயாம்’ என்ற பாடலுடன் தன் திரையிசைப் பயணத்தை தொடங்கினார்.

l 1950-ல் வந்த ‘பொன்முடி’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதினார். அனைத்தும் சூப்பர் ஹிட். பிறகு ‘மந்திரிகுமாரி’ படத்துக்கு பாடல்கள் எழுதினார். இவையும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடல்கள் மறக்க முடியாதவை.

l ‘அமரகவி’, ‘தூக்குத் தூக்கி’ திரைப்படப் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. பல்வேறு திரைப்பட நிறுவனங்களிடம் இருந்து இவருக்கு அழைப்புகள் குவிந்தன. மெட்டுக்கு விரைவாகப் பாட்டு எழுதுவதில் வல்லவர். எனவே அனைத்து இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடலாசிரியராகத் திகழ்ந்தார்.

l ‘எந்நாளும் வானிலே’, ‘மணப்பாறை மாடு கட்டி’, ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சத்தியமே லட்சியமாய்’, ‘சமரசம் உலாவும்’, ‘ஏர்முனைக்கு நேர் இங்கே’, ‘கடவுள் எனும் முதலாளி’, ‘வருவேன் நான் உனது’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘இன்று போய் நாளை வாராய்’, ‘மனுஷனை மனுஷன்’ என்பது உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாகாவரம் பெற்ற திரைப்பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

l தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்கள் எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழ்பெற்றவர். 250 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

l சக கலைஞர்களை மதித்துப் போற்றியவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போல கருதி பாசம் கொண்டிருந்தார். உடுமலை நாராயண கவியை தன் அண்ணன் போலவும், குருவுக்கு சமமாகவும் மதித்தவர். ‘என் 2 ஆயிரம் பாடல்கள் கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது’ என்று தன்னடக்கத்தோடு கூறுவார்.

l எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் அவரவருக்குப் பொருத்தமாகப் பாடல்களை எழுதினார். டி.எம்.சவுந்தரராஜனை சினிமாவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னை தாய்போல ஆதரித்தவர் மருதகாசி என்று குறிப்பிட்டுள்ளார் வாலி.

l தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடலாசிரியராகத் திகழ்ந்த ‘திரைக்கவித் திலகம்’ மருதகாசி, 69-வது வயதில் (1989) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

Thursday, February 11, 2016

மாணவி மோனிஷாவுக்கு என்ன நடந்தது? பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

vikatan.com
விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மோனிஷா தந்தையின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மூன்று மாணவிகளின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்குப்பிறகு இந்த வழக்கு சூடுபிடித்துள்ளதோடு பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவிகள் பிரியங்கா, சரண்யா ஆகியோரின் உடல்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மோனிஷாவின் உடலை வாங்க மறுத்து விட்டார் அவரது தந்தை தமிழரசன்.

தொடர்ந்து மோனிஷாவின் உடலை மீண்டும் மறுபரிசோதனை சென்னையில் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தமிழரசன். இதற்கு நீதிமன்றமும் சம்மதித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 சதவிகிதம் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மோனிஷாவின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில், "மோனிஷாவின் உடல் பரிசோதனையில் விழுப்புரத்துக்கும், சென்னைக்கும் உள்ள முடிவில் வித்தியாசங்கள் உள்ளன. அவர், தண்ணீரில் மூழ்கி சாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது கொலை என்றே கருதுகிறோம். அடுத்து, விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை அவரது பெற்றோரிடம் பெறவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விழுப்புரம் பிரேத பரிசோதனையில் 4 இடங்களில் ரத்தக்காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 15 இடங்களில் ரத்தக்காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக நீரில் மூழ்கி இறப்பவர்களின் வாயில் நுரை தள்ளும். ஆனால் கிணற்றிலிருந்து மோனிஷாவின் உடல் வெளியே எடுத்தவுடன் எடுத்த புகைப்படத்தில் அவரது வாயில் நுரையில்லை. எனவே அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பே அவர் மரணம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மரணத்துக்கு முன்பு மோனிஷா தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடி இருக்கிறார். அவரது மூக்கு மற்றும் வாயை பொத்தியதற்கான அறிகுறிகள் முகத்தில் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது எதற்காக போராடினார் என்பது தெரியவில்லை. இன்னும் வரவுள்ள முடிவில் அதற்கான விடை தெரிந்து விடும். மேலும் இரண்டு மாணவிகளின் செல்போன் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை" என்றார்.

மோனிஷாவின் தந்தை தமிழரசன், "போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காகவே என்னுடைய மகள் உள்பட மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பள்ளி தாளாளர் வாசுகி பேசிய உரையாடலில் மூன்று மாணவிகளையும் கடுமையாக மிரட்டுவது தெரிகிறது. என்னிடம் 5 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி மோனிஷாவின் தமிழ், ஆங்கில கையெழுத்து, கல்வி சான்றிதழ்கள், சிடி உரையாடல் உள்ளிட்ட 25 ஆவணங்களை பெற்று சென்று இருக்கின்றனர். அரசு அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகையை இந்த வழக்கு முடிந்து தீர்ப்புக்கு பிறகே வாங்குவேன். அதுவரை வாங்குவதில்லை" என்றார்.

சரண்யாவின் தந்தை ஏழுமலை, "என்னுடைய மகளின் உடலையும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே தெரியவரும். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மோனிஷாவின் உடலில் சில பாகங்கள் இல்லாததால் அவருடைய சாவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஆனால் சரண்யாவின் உடலில் எந்த பாகத்தையும் எடுக்கவில்லை. அதன் மூலம் இந்த வழக்கில் மறைந்துள்ள மர்மமுடிச்சுக்கள் அவிழ வாய்ப்புள்ளது. இதற்காகவே அவரது உடலை செய்யாறில் புதைத்தோம். மூன்று மாணவிகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன். அநியாயமாக என்னுடைய மகளை கொன்று விட்டார்களே" என்றார்.

-எஸ்.மகேஷ்

படங்கள்: 
சொ. பாலசுப்ரமணியன்

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!

வெடிக்கும் செல்போன்கள்... இரவு முழுவதும் சார்ஜில் போடுவது ஆபத்து!


vikatan.com
செல்போன் வெடித்ததால் படுகாயம், உயிர் பலி என்கிற கவலைக்குரிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. இரு வாரங் களுக்கு முன்பு, சென்னை வியாசர்​பாடியைச் சேர்ந்த ஒருவர் இரவு நேரத்தில் செ​ல்போனை சார்ஜ் போட்டு​விட்டுத் தூங்கிவிட்டார். அதிகாலையில் அந்த செல்போன் வெடித்ததில், வீடே தீப்பிடித்தது. அதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து, மதுராந்தகம் அருகே செய்யூர் பகுதியில் செல்போன் வெடித்ததால் பள்ளி மாணவன் ஒருவனின் கண் பாதிக்கப்பட்டது.

செய்யூரைச் சேர்ந்த கூலித்தொ ழிலாளி எட்டியப்பன் - மனைவி வெண்ணிலா. இவர்களின் மூன்றாவது மகன் தனுஷ். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போனை தனுஷ் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, போன் வெடித்துச் சிதறியது. கண் பாதிக்கப்பட்டு, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான் தனுஷ். வெண்ணிலாவிடம் பேசினோம்.
“போன வாரம் என் பையன் ஸ்கூல் போய்ட்டு வந்தான். நான் சமையல் செஞ்சிட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள விளையாடிட்டு இருந்தான். அப்போ, டமார்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. ஓடிப்போய் பார்த்தா கண், முகம், கை எல்லாம் ரத்தம். உடனே அவனை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போனோம். அப்புறம் தான் தெரிஞ்சுது செல்போன் வெடிச்சதுல, கண் பார்வை பறிபோய் இருக்குனு. எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க. இங்கே ஆபரேஷன் பண்ணினாங்க. இப்போ, கொஞ்சம் பார்வை கிடைச்சிருக்கு. பழைய மாதிரியே கண்பார்வை வருமான்னு தெரியல” என்று சொல்லி அழ ஆரம்பித்தார்.

எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் வஹிதாவிடம் பேசினோம். “பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் இந்தப் பையனை இங்க கொண்டு வந்தாங்க. செல்போனை முகத்துக்கு நேர வைத்துப் பார்த்துட்டு இருக்கறப்போ போன் வெடிச்சதுல, அதன் துகள்கள் கண்ணுக்குள்ளே போயுள்ளன. அதனால பார்வை பறிபோய் இருக்கிறது. வலது கண்ணின் கருவிழி முற்றிலும் சேதம் அடைந்தும், இடது கண்ணில் விழித்திரையும் கிழிந்தும் உள்ளன. முதற்கட்ட சிகிச்சையில், கருவிழி பாதிக்கப்பட்டிருந்த கண்ணில் அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றுக் கருவிழி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகுதான் அதில் லென்ஸ் பொருத்த முடியும். இடது கண்ணில் விழித்திரையும் தைக்கப்பட்டது. அந்த அறுவைச்​சிகிச்சைக்குப் பிறகு, தனுஷுக்கு 4 முதல் 5 மீட்டர் வரை பார்வை கிடைத்துள்ளது. சார்ஜ் போட்டிருக்கும் போனைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.பாலசுப்பிர மணியன், “செல்போன் வெடித்து விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சந்தைகளில் தரமில்லாத எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதுபோன்ற விபத்துகளுக்கு அதுதான் முக்கியக் காரணம். சார்ஜரில் வோல்டேஜ் அதிகமாகும்போது, அதை முறைப்படுத்தும் தொழில்நுட்பங்கள் விலை குறைவான சார்ஜர்களிலும், செல்போன்களிலும் இருப்பதில்லை. எனவே, அவை வெடித்துச் சிதறுகின்றன. எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் என்கிற அளவீடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று சர்வதேச வரையறை உள்ளது. அப்படி எந்த முறையும் இந்தியாவில் இல்லை. அரசும் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற விஷயங்களில் இனிமேலாவது அரசு கவனம் செலுத்தவேண்டும். தரமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணமும், அதுபற்றிய விழிப்பு உணர்வும் மக்களுக்கு வரவேண்டும்’’ என்றார்.
இன்றைக்கு, பெரும்பாலானோர் கடைகளுக்குச் சென்று தரத்தை ஆராய்ந்து பொருட்கள் வாங்குவதில்லை. பேனா, மொபைல் என என்ன வாங்குவதாக இருந்தாலும், ஆன்லைன் ஷாப்பிங்தான். ‘குறைந்த விலையில் பவர் பேங்க்’ என்று முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்த ஒருவர், அந்த இணைப்பை கிளிக் செய்துள்ளார். சிறப்பான பேக்கிங்கில் பவர் பேங்க் வந்து சேர்ந்தது. பல மணிநேரம் சார்ஜ் போட்டுள்ளார். ஆனால், சார்ஜ் ஏறவே இல்லை. சந்தேகப்பட்டு பவர் பேங்க்கை உடைத்துப் பார்த்தபோது, அதில் 7 பேட்டரிகள் இருந்தன. அதில் ஒன்று மட்டுமே நிஜமான பேட்டரி. மற்றதெல்லாம் மண் நிரப்பட்ட கூடு. இணையத்தில் பொருள் வாங்குவது தவறல்ல. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெருள்தானா என்பதை உறுதிசெய்து அதை வாங்க வேண்டும். 

மொத்தத்தில், செல்போனில் எச்சரிக்கையாக இருங்கள்.

- மா.அ.மோகன் பிரபாகரன்
படங்கள்: ப.சரவணகுமார்

பொருளாதாரம்: இது பட்ஜெட்களின் காலம்

Return to frontpage

அம்மாவோ அப்பாவோ ‘‘செலவுக்கு வைச்சுக்க’’ என்று தருகிற பாக்கெட் மணிக்கு நீங்கள் பட்ஜெட் போட மாட்டீர்களா? ‘‘முதல்ல இதை வாங்கிக்கலாம். இன்னும் கொஞ்சம் காசு சேரட்டும். அப்புறமா அதை வாங்கலாம்” னு மனசுக்குள்ளே பட்ஜெட்டுக்கான ஒரு திட்டம் போட மாட்டீங்களா? அப்படித்தான் பல அம்மா, அப்பாக்களும் பட்ஜெட் போட்டு வாழ்கிறார்கள்!

அவர்களின் பட்ஜெட்களில் உங்களின் படிப்புகளுக்கான செலவுகள் முதல் இடத்தில் இருப்பது நீங்கள் அறிந்ததுதானே?

அதுபோலத்தான் இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் மாநகராட்சிகள் உள்ளிட்ட பஞ்சாயத்து அரசாங்கங்களும் தங்களுக்கான பட்ஜெட்களைப் போட்டுச் செயல்படுகின்றன.

ஆமாம் ஆனா இல்லை

ஒரு குடும்பம் தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு கம்பெனி தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் ஒரு நாடு தனக்கான பட்ஜெட்டைப் போடுவதிலும் சிறு சிறு ஒற்றுமைகள் இருக்கலாம். அதே நேரத்தில் பலவிதமான வேற்றுமை களும் இருக்கவே செய்கின்றன.

ஒரு நிறுவனம் தனது ஒரு ஆண்டின் வரவையும் செலவுகளையும் ஒப்பிட்டுச் சமன் செய்து கணக்கை முடிப்பதுபோல ஒரு நாட்டின் பட்ஜெட் இருக்காது.

மத்தியப் பட்ஜெட்

மத்திய அரசை எடுத்துக்கொள்வோம். அது நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டுக்குள்ளே சட்டம் ஒழுங்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவது என்னும் பல முனைகளில் செயல்படுகிறது. இவற்றை எல்லாம் செய்வதற்கு அரசாங்கத்துக்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. வெளிநாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் உள்நாட்டு பணமான ரூபாய் நோட்டுகள் பயன்படாது. வெளிநாட்டுப் பணம் எனப்படுகிற அந்நியச் செலாவணியும் தேவையாக இருக்கிறது.

மத்திய அரசு தனக்குத் தேவையான பணத்தை மக்களின் மீது விதிக்கப்படும் பல விதமான வரிகள், கட்டணங்கள், அரசு நிறுவனங்களின் வருமானம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிடமும் கடன்கள் வாங்குதல் என்ற முறைகளில் சேகரிக்கிறது.

ஏன் பட்ஜெட்?

இதையெல்லாம் தன்னிடம் வாங்கிக்கொள்கிற மத்திய அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ற மாதிரிச் செலவழித்துக்கொள்ள வேண்டியதுதானே? ஏன் பட்ஜெட் என்று ஒவ்வொரு வருடமும் மக்கள் முன்னிலையில் வெளிப்படையாகச் சமர்ப்பிக்க வேண்டும்? நிறைய பணம் வருகிற சில பணக்கார வீடுகளில் வீட்டுச் செலவுகளுக்கு எல்லாம் தனியாகப் பட்ஜெட் போட்டு நேரத்தை வீணாகச் செலவு செய்ய மாட்டார்கள். அது மாதிரி வருகிற வருமானத்தை வைத்துக்கொண்டும் நினைக்கிற செலவைச் செய்துகொண்டும் அரசாங்கம் பாட்டுக்கு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கவேண்டியதுதானே என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.

அப்படி எல்லாம் ஒரு நாட்டால் செய்ய முடியாது.

ஒரு நாட்டில் வளங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு வரம்புக்குட்பட்டவைதான் என்பது முதல் காரணம். நாட்டின் வளங்களைச் செலவழித்துக்கொண்டே இருந்தால் அவை என்றோ ஒருநாளில் தீர்ந்துபோக வேண்டியவைதான். அப்படி நடந்துகொள்கிற நாடுகள் பொறுப்பில்லாத அரசுகளாகத்தான் இருக்க முடியும்.

இரண்டாவதாக, ஒரு அரசாங்கம் எப்படித் தனக்கான நிதியாதாரங்களை பயன்படுத்துகிறது என்பதும் எப்படிச் செலவழிக்கிறது என்பதும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் இறுதியில் அந்த நாட்டையும் பாதிக்கும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, ஒவ்வொரு வருடமும் மக்களிடம் வெளிப்படையாகத் தனது வரவு செலவுகளைக் காண்பிக்க வேண்டும்.

இந்த இரண்டும் தார்மிகரீதியான காரணங்கள். இந்தியாவுக்கு மூன்றாகவதாக ஒரு காரணமும் இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் இப்படிப் பட்ஜெட் போடுவதை ஒரு கட்டாயக் கடமையாக நிர்ணயித்துள்ளது.

அரசியல் கடமை

இந்தியா ஒரு நாடாளுமன்ற ஜனநாயக நாடு. நமது நாடாளு மன்றத்தை ஒரு அரசியல் சாசனம் வழிநடத்துகிறது. அந்த அரசியல் சாசனம் மத்திய அரசாங்கத்துக்குப் பல கடமைகளை நிர்ணயித்துள்ளது.

மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரும் அரசாங்கம் தனது வரவு செலவுகளையும் நாட்டின் வளங்களை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதையும் நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற்றே செயல்பட வேண்டும் என்பதைக் கட்டாயக் கடமையாக அது நிர்ணயித்துள்ளது. அதனால்தான் மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தனது பட்ஜெட்டை நாடாளுமன்றம் முன்பாகச் சமர்ப்பிக்கிறது.

அரசியல் சாசனத்தில் 112, 265, 266 எனும் எண்களைக்கொண்ட சட்டக்கூறுகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் அனுமதி பெறாமல் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவுகள் நடக்கக்கூடாது என்பதற்கான கடமைகளை நிர்ணயித்துள்ளன.

பட்ஜெட்டின் பகுதிகள்

ஏப்ரல் 1 முதலாக மார்ச் 31 வரையான காலம் நிதியாண்டு எனப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் செய்யக்கூடிய வரவு செலவுக்கான அனுமதியை நாடாளுமன்றத்தில் வாங்குவதற்காகத்தான் பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது.

பட்ஜெட்டில் பொதுவாக இரண்டு பகுதிகள் இருக்கின்றன: செலவுகளுக்கான பட்ஜெட், வருமானங்களுக்காகப் பட்ஜெட். செலவுகளுக்கான பட்ஜெட்டில் அந்தச் செலவுகளின் மூலமாக வரும் வருமானங்கள் விவாதிக்கப்படலாம். வருமானங்களுக்கான பட்ஜெட்டில் வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய செலவினங்கள் பற்றிய விவாதங்களும் விவரங்களும் இருக்கலாம்.

அடுத்த நிதியாண்டில் எவ்வளவு பணத்தை எந்த எந்த விஷயங்களில் என்ன என்ன வகைகளில் செலவு செய்ய அரசு நினைக்கிறது என்பது பொதுவாக, செலவுகளுக்கான பட்ஜெட்டில் விளக்கமாகத் தரப்படும்.

அரசு தான் செலவு செய்ய நினைத்துள்ள பணம் எங்கிருந்தெல்லாம் வரும் என்பதையும் அந்தப் பணம் வரக்கூடிய நிதி ஆதாரங்களையும் என்னென்ன முறைகளில் சேகரிக்கப்போகிறது என்பது வருமானங்களுக்கான பட்ஜெட்டில் விளக்கப்படும்.

மாப்பிள்ளைத் தோழன்

மத்திய அரசின் பட்ஜெட் கல்யாண மாப்பிள்ளை என்றால் அதன் பக்கத்திலேயே மாப்பிள்ளைத் தோழன் போல ரயில்வே பட்ஜெட் வெளியாகிறது. இது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மரபு. சில நாட்கள் இடைவெளியில் இரண்டு பட்ஜெட்களும் வெளியாகின்றன.

இந்தியாவின் இருப்புப் பாதைகளைச் சீரமைப்பதற்காக வில்லியம் அக்வொர்த் என்பவர் தலைமையில் 1920-ல் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைப்படி 1924-ல் இந்தியாவின் இருப்புப் பாதை வரவு-செலவு அரசின் பொதுநிலையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது.

இந்தப் பழக்கம் இன்றும் சுதந்திர இந்தியாவில் கடைப்பிடிக்கப் படுகிறது. இப்போதும் ரயில்வே பட்ஜெட் தனியாகச் சமர்ப்பிக்கப் பட்டாலும் பொதுப் பட்ஜெட்டின் விவரங்களுக்குள் ரயில்வே பட்ஜெட்டின் விவரங்களைக் கொண்டுவந்துவிட்டார்கள்.

ஒரு சம்பிரதாயமாகத்தான் ரயில்வே பட்ஜெட் தனியாக வெளியாகிறது.

பட்ஜெட் போடுவது என்ன பெரிய இமயமலை ஏறும் சாதனையா? அதையே செய்ய முடிகிறபோது, இதையும் செய்ய உங்களாலும் முடியும்.

விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


பொதுமக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

THE HINDU TAMIL

ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மற்ற பொருட்களைப் போலவே மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 13,14 ஆகிய தேதி களில் நாடு முழுவதும் உள்ள 8 லட் சம் மருந்து கடைகளை அடைத்து 40 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

ஆன்லைனில் வேண்டாம்

ஆன்லைன் மருந்து விற்ப னைக்கு தடை விதிக்கக்கோரி மத் திய அரசை மருந்து வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் யாராவது மருந்து விற்றால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

தமிழக மருந்து கட்டுப்பாடு துறையும் தீவிரமாக செயல்பட்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கை

இது தொடர்பாக தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:

ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை கண்டுபிடிப் பது கடினம். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப் புள்ளது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நட வடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம். டாக்டர் பரிந்துரைச் சீட்டை காண்பித்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்லைனில் 19 நிறுவனங்கள்

இதுபற்றி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:

நாடு முழுவதும் 19 நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்று வருகின்றன. ஆன்லைனில் மருந்து கள் விற்பனைக்கு இதுவரை யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. ஆனால் சட்டத்தை மீறி மருந்து களை விற்பனை செய்து வருகின் றனர். இதனால் போலி மற்றும் தரமில்லாத மருந்துகள் புழக்கத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.

மருந்து என்பது மற்ற பொருட்களைப் போல் இல்லை, உயிர் காக்கும் பொருளான மருந்துகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மக்கள் டாக்டரின் பரிந்துரைச் சீட்டுடன் வந்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday, February 10, 2016

நகை வாங்க ‘பான் கார்டு’ எதற்கு?

logo


கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.2 லட்சத்துக்குமேல் நகை வாங்கும்போது, வருமானவரித்துறையிடம் விண்ணப்பம் செய்து பெற்ற நிரந்தர கணக்கு எனப்படும் ‘பான் கார்டு’ விவரத்தை கொடுக்கவேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து, இந்தியா முழுவதிலும் உள்ள நகைக்கடைக்காரர்கள் இன்று ஒருநாள் அடையாள கடை அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நாடு முழுவதிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள், 300 சங்கங்களின் கீழ் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் இருக் கின்றன.

கருப்பு பணத்தை ஒழிக்கவும், வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ‘பான் கார்டு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சார்பில் கூறப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஒரு மாதத்திலேயே நகைக்கடைகளில் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக நகைக்கடை அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த விற்பனை வீழ்ச்சியால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய மற்ற வரிகளின் வருமானமும் நிச்சயமாக குறைந்து இருக்கும். நகைக்கடைகளில் தற்போது உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் உள்ள தங்க விற்பனையில் 50 சதவீதம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 2018–ம் ஆண்டில் இந்த விற்பனை ரூ.5 லட்சம் கோடிக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருமாதத்தில் 30 சதவீத விற்பனை குறைந்துவிட்டதால், தங்கத்தை யாரும் வாங்காமல் இருந்துவிட்டார்கள் என்று பொருளல்ல. ‘பான் கார்டு’ கேட்காத வியாபாரிகளிடம் வாங்கியிருப்பார்கள், அல்லது கிராமப்புறங்களில் உள்ள நகை தொழிலாளர்களிடம் வாங்கியிருப்பார்கள்.

இந்த திட்டத்தை நாட்டில் அனைவரும் ‘பான் கார்டு’ வாங்கியபிறகு, அல்லது வாங்க வைத்தபிறகு கொண்டுவந்து இருக்கலாம். ஏனெனில், இந்தியா முழுவதுமே இப்போது 22 கோடியே 30 லட்சம் பேர்களுக்குத்தான் ‘பான் கார்டு’ கொடுக்கப்பட்டுள்ளது. நகை வாங்க வருபவர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள்தான். பொதுவாக நகை வாங்க வருபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். அதுபோல, கிராமப்புறங்களில் இருந்தும், வீடுகளில் சுபகாரியங்களுக்கும், பெண்களுக்கு அணிகலன்களுக்காகவும் நகை வாங்க வருவார்கள். இதுமட்டுமல்லாமல், விவசாய வருமானத்துக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இவ்வளவு நாளும் ‘பான் கார்டு’க்கு அவசியமே இருந்திருக்காது. மேலும், தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துகொண்டே போகிறது. நேற்று காலையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, ரூ.21 ஆயிரத்து 344–க்கு விற்பனை ஆனது. ரூ.2 லட்சம் என்றால், செய்கூலி, சேதாரம், கல் விலை எல்லாம் கணக்கிட்டால் 7 சவரன்தான் தேறும். இப்போது திருமண நேரம். இந்த நேரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 7 பவுன் என்பது சாதாரணம். மேலும், ரூ.2 லட்சம் என்பதை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி கொஞ்சம் கொஞ்சமாக ரொக்கமாகவே சேர்த்து வைத்திருப்பார்கள். அவர்களிடம் ‘பான் கார்டு’ கேட்டால், இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்று கேட்பார்கள், நோட்டீசு அனுப்புவார்கள், வருமானவரி வளையத்துக்குள் தேவை இல்லாமல் விழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற பயம் மக்களுக்கு இருக்கிறது.

பொதுமக்கள் வாங்கும் தங்கத்துக்கு நகைக்கடைகள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரியை கட்டுகிறார்கள். ஆகவே, வருமான இழப்பு என்பது இருக்காது. மேலும், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து, தங்கம் வாங்கவரும்போது பணப்புழக்கம் அதிகரிக்கும். அது பொருளாதாரத்துக்கும் நல்லது. எனவே, தங்கம் வாங்குவதற்கு ‘பான் கார்டு’ தகவல் தரவேண்டும் என்பது உள்பட எந்தவித கட்டுப்பாடும் தங்கம் வாங்க வருபவர்களுக்கு, மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்படக்கூடாது.

Tuesday, February 9, 2016

குடும்ப வன்முறையும், குழந்தைகளும்

Dinamani



By அ. கோவிந்தராஜூ

First Published : 09 February 2016 01:18 AM IST


நான் பணியாற்றும் பள்ளியில், வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள் தொடங்கின. குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைக்க, யெஸ்! மிஸ். யெஸ்! மிஸ்.. என்று குழந்தைகள் சொல்ல, ஆசிரியை வருகைப் பதிவு எடுத்து முடித்தார். அப்போது ஒரு குழந்தை எழுந்து "மிஸ் எங்கம்மா செத்துப் போயிட்டாங்க' என்று சொல்ல ஆசிரியைக்குத் தூக்கி வாரிப் போட்டது.
உடனே, அந்தக் குழந்தையை அழைத்துக்கொண்டு எனது அறைக்கு வந்தார். மெதுவாக அச் சிறுமியிடம் பேசிப் பார்த்தேன். என்னிடமும் அப்படியேதான் சொன்னாள். ஆசிரியையிடம் சிறுமியின் அப்பாவைத் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு பேசச் சொன்னேன்.
இதற்கிடையில், அக்குழந்தையிடம் பேசியபோது அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னாள். பேச்சின் இடையே அவளுடைய அப்பா கொத்தனார் வேலை செய்வதாகச் சொன்னாள்.
மீண்டும் உள்ளே வந்த ஆசிரியை கண்ணீர் மல்க ஏதோ சொல்ல விரும்பினார். ஒரு பலூனைக் கையில் கொடுத்து ஊதி விளையாடுமாறு அக்குழந்தையை வெளியே அனுப்பினேன். "ஹாய்! ப்ளூ பலூன்' என்றபடி வெளியில் சென்றாள். அக் குழந்தை சொல்வது உண்மைதான் என்றும் நேற்றுதான் காரியம் எல்லாம் முடிந்தது என்றும் அச் சிறுமியின் அப்பா சொன்னதாக என்னிடம் தெரிவித்தார்.
அச் சிறுமியைக் கவனமாகக் கண்காணிக்குமாறு ஆசிரியையிடம் சொல்லி அனுப்பினேன். என்றாலும் என் மனம் என்னவோ இதையே நாள் முழுவதும் அசைப் போட்டுக் கொண்டிருந்தது. அச் சிறுமியின் தளிர் விரலைப் பிடித்தபடி அடிக்கடி பள்ளிக்கு வரும் அந்த இளம்தாய் என் மனத் திரையில் தோன்றி மறைந்தார்.
கணவன் - மனைவி வாய்ச் சண்டை முற்றி வன்முறையில் முடிந்தது. அவர் சமையல் கட்டுக்குள் ஓடி மண்ணெண்ணையை மேலே ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக் கொண்டார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நான்கு நாள்களுக்குப்பின் உயிரை விட்டார். கடைசி நேரத்தில் கணவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால், "ஸ்டவ் வெடித்து ஆடையில் தீப்பற்றிக் கொண்டதாக' மரண வாக்குமூலம் கொடுத்தார். பிரச்னை அதோடு முடிந்தது.
இந்தப் பிரச்னையில் அதிகப் பாதிப்பு அந்தக் குழந்தைக்குதான். அந்தக் கோரக்காட்சி, நேரில் பார்த்த குழந்தையின் ஆழ் மனதில் பதிவாகி இருக்கும். வளர்ந்து பெரியவளாகும்போது தன் அப்பாவை ஒரு கொலைகாரனாகப் பார்ப்பாள்.
அது மட்டுமா? தான் செய்யாத தவறுக்கு அக் குழந்தை வாழ்நாள் முழுதும் தாய்ப் பாசத்துக்கு ஏங்கித் தவிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? ஒவ்வோர் அம்மாவுக்கும் ஒரு வாசனை உண்டு. அதை அவளுடைய குழந்தை மட்டுமே முகர்ந்து உணர முடியும். அந்த வாசனையையும், தாயின் மடி சுகத்தையும் குழந்தைக்கு வேறு எவராலும் தர முடியாது.
உலகிலேயே அதிகமான குடும்ப வன்முறை நம் நாட்டில் நிகழ்வதாகவும், நம் நாட்டில் மட்டும் பார்த்தால் தமிழ் நாட்டில்தான் அதிகம் எனவும் ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் கடுங்கோபம், வெறுப்பு, பொறாமை, அவமதிப்பு, பேராசை, கடுங்காமம், தான் என்ற தன்முனைப்புப் போன்ற எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால்தான் குடும்ப வன்முறைகள் உருவாகின்றன.
இந்த எதிர்மறை எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்போது சிக்கல் பெரிதாகிறது. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி அல்லது இடித்துச் சொல்லி சமாதானப்படுத்துவார்கள். கூட்டுக்குடும்ப அமைப்பு இப்போது சிதைந்து விட்டதால் குடும்பச் சண்டையைத் தடுத்து நிறுத்துவாரில்லை.
ஒரு கணவன் மனைவியைத் தாக்குவது (physical abuse), கெட்ட வார்த்தைகளால் திட்டுவது (verbal abuse), அவளுடைய சுய கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படுத்துதல் (emotional abuse), அவளுடைய விருப்பத்திற்கு மாறான அல்லது இயற்கைக்கு மாறான பாலியல் நுகர்வு (sexual abuse), அவளுடைய பெற்றோரிடம் பணம் வாங்கி வரச்சொல்லுதல் அல்லது சம்பளப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு பூ பொட்டு வாங்குவதற்குக்கூட காசு தராமல் இருப்பது (Economical abuse) மற்றும் குடி போன்ற பல காரணங்களால் குடும்ப வன்முறைகள் தோன்றுகின்றன.
வன்முறையின் தாக்கம் எல்லை மீறும்போது கண நேரத்தில் கொலையிலோ, தற்கொலையிலோ முடிந்து விடுகின்றன. அதன் பிறகு அக்குடும்பம் புயலில் சிக்கிய கப்பல் போல தடுமாறுகிறது, சில சமயம் தடம் மாறுகிறது. இத்தகைய குடும்பங்களில் வாழும் சின்னஞ் சிறிய அரும்புகள் அன்புக்காக ஏங்கி அலை மோதுகின்றன.
கணவனும் மனைவியும் பொழுதுக்கும் சண்டையிடும் குடும்பங்களில் தற்கொலை, கொலை, மணமுறிவு முதலியவை ஏற்பட்டு, வளரும் குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும், படிப்பில் பின்தங்கும்.
குடும்ப வன்முறைகளைத் தவிர்ப்பது எப்படி? குடும்பத்தில் உள்ள அனைவரும் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அற வழியில் பொருளீட்டி, செலவைக் குறைத்துச் சேமிக்க வேண்டும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினாலே பாதிச் சிக்கல் தீர்ந்து விடும். ஆணாதிக்கப் போக்கை அறவே விட்டொழிக்க வேண்டும். மனைவிதான் வீட்டைப் பெருக்க வேண்டும் என்பதில்லை; கணவரும் பெருக்கலாம். செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி வாதம் செய்வதை நிறுத்தி, மன்னிக்கும் மனப் பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தீயினால் சுட்ட புண்ணின் வடு மறைந்துவிடும். ஆனால், நாவினால் சுடும்போது ஏற்படும் வடு மறையவே மறையாது என்று வள்ளுவர் சொல்லுவதை கணவன் - மனைவி இருவரும் உணர வேண்டும்.
கணவன் - மனைவி சண்டை முற்றி அதன் வீச்சு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், உடனே கணவன் வீட்டை விட்டு வெளியே சென்று கோபம் தணிந்ததும் திரும்ப வேண்டும். இல்லையேல், ஒரு நாவலை எடுத்துச் சென்று அறையினுள் உட்கார்ந்து படிக்க வேண்டும்.
திருக்குறள் இன்பத்துப் பாலில் கணவன் - மனைவி உறவை நட்பு எனக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். எனவே, பெற்றோர் நண்பர்களாக வாழத் தொடங்கினால் மட்டுமே குடும்பச் சண்டைகள் ஒழிந்து இல்லந்தோறும் மகிழ்ச்சிப் பொங்கும். அங்கே குழந்தைகள் மன வளத்துடன் வளரும்.
இது சாத்தியமா? சாத்தியம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...