Saturday, March 12, 2016

எம்ஜிஆர் 100 | 20 - அசைவ உணவுப் பிரியர்!

Return to frontpage

M.G.R. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.

எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.

அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.

இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.

அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.

இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.

‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.

மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.

‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’... பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.

‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.

‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.

மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக் கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்.

எம்.ஜி.ஆருக்கு 1971-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைக்கக் காரணமாக இருந்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் ஒரு காட்சி. சக ரிக் ஷா தொழிலாளி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ரிக் ஷா ஓட்ட முடியாத நிலை. அதனால், அன்று அவரது குடும்பத்துக்கு வருமானம் இல்லை. அதனால் சாப்பாடும் இல்லை. மதியம் அங்கு வரும் சாப்பாட்டுக்கார அம்மாவான பத்மினியிடம் இருக்கும் மொத்த சாப்பாட்டையும் எம்.ஜி.ஆர். வாங்கி, தான் கூட சாப்பிடாமல் நோயுற்ற தொழிலாளியின் வீட்டில் எல்லாரும் சாப்பிடக் கொடுத்தனுப்புவார்.

எம்.ஜி.ஆர். சாப்பிடாதது பற்றி ஒரு தொழிலாளி வருத்தப்பட, இன்னொரு தொழிலாளி ‘‘மத்தவங்க வயிறு நிறைஞ்சாத்தான் இவருக்கு (எம்.ஜி.ஆருக்கு) மனசு நிறைஞ்சுடுமே’’ என்பார்.

அதற்கு பதிலளிக்கும் எம்.ஜி.ஆர்., ‘‘மனுஷங்க வாழ்த்தறதை நம்ப முடியறதில்ல. ஆனால், வயிறு வாழ்த்தினால் நம்பலாம்பா’’ என்று கூறுவார்.

எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள். இன்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வயிறு கள் எம்.ஜி.ஆரை தினமும் வாழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

அசைவ உணவுகளை எம்.ஜி.ஆர். விரும்பி சாப்பிடுவார். இறால் குழம்பு மிகவும் இஷ்டம். சாப்பாட்டில் தினமும் கட்டாயம் ஏதாவது கீரை இருக்க வேண்டும். இனிப்பு வகைகளில் பாஸந்தி அவருக்கு பிடிக்கும். முந்திரி பகோடா அவரது ‘ஃபேவரைட்’. இதை எல்லாம் சாப்பிட்டாலும் தினமும் தவறாமல் சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்திருந்து நீராகாரம் பருகுவார். கேட்டால், ‘‘உடல் உஷ்ணத்தை இது தணிக்கும் என்பதோடு, நான் பழசை மறக்காமல் இருக்க’’ என்று அடக்கமாக பதிலளிப்பார்.

- தொடரும்...

பதின் பருவம் புதிர் பருவமா? - பழக்கமும் அடிமைத்தனமும்

Return to frontpage

டாக்டர் ஆர்.காட்சன்
போதைப் பொருளான மது எளிதில் கிடைப்பதும், நமது சமூகமே மது அருந்துவதை காபி குடிப்பது போன்ற சாதாரண ஒரு பழக்கமாகப் பார்ப்பதுமே இளம் பருவத்திலேயே குடிபோதையின் அறிமுகம் கிடைப்பதற்கு முக்கியக் காரணம்.

யார் அடிமை?

போதைப் பொருட்களுக்கு அடிமையான பெரும்பாலோர், தாங்கள் அதற்கு அடிமையாகிவிட்டதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் ரொம்பலாம் குடிக்க மாட்டேன்’ என்பது எல்லோரும் சொல்வதுதான். ஒருவர் தினமும் குடிப்பது, குடிக்காமலோ - போதைப் பொருளைப் பயன்படுத்தாமலோ ஒருநாள்கூட இருக்க முடியாத நிலை, நிறுத்தினால் தூக்கமின்மை, கை நடுக்கம் ஏற்படுவது, காலை எழுந்தவுடன் போதைப் பொருளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை போன்ற அறிகுறிகள் எல்லாம், அவர் போதை அடிமையாகிவிட்டார் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

இன்றைக்குத் தினமும் ஒரு ஃபுல்லோ அல்லது அதற்கு மேலோ குடிப்பவர்கள் எல்லாம் ஒரே நாளில் அந்த நிலையை எட்டிவிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வளரிளம் பருவத்தில் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ சிறிதுசிறிதாகக் குடிக்க ஆரம்பித்தவர்கள்தான். எனவே ‘இன்னைக்கு மட்டும் தானே குடிக்கிறேன், எப்போதாவது தானே எடுத்துக்கொள்கிறேன், நல்லது கெட்டது வரும்போது மட்டும்தானே பயன்படுத்துகிறேன்’ என்று சொல்லித் தப்பிக்க நினைப்பார்கள். கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால், போதைப் பொருட்கள் மூளை நரம்புகளில் மெல்ல மெல்ல ஊடுருவி ஆக்கிரமித்துவிடும் நச்சு என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துக் கல்லூரி முடிக்கும் கட்டத்தில் நிரந்தரக் குடிகாரர்களாகவே பலர் மாறிவிடுவார்கள்.

குடிநோயின் பாதிப்புகள்

முன்பெல்லாம் ஒரு நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் மூத்த மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி ‘டி.பி. நோய்க்கு டெஸ்ட் எடுத்தாச்சா’ என்பதுதான். ஆனால், இப்போது அதை முந்திக்கொண்டு வரும் கேள்வி குடிநோய்தான். இளம் வயதிலேயே பல வகை நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு போன்றவை மது அருந்துவதால் ஏற்படுகின்றன.

மேலும் போதையில் நிதானம் இழப்பதால் மாணவப் பருவத்திலேயே ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்கள், விபத்துகளால் மரணம் போன்றவை அதிகரிக்கின்றன. வளரிளம் பருவத்தில் ஆரம்பிக்கும் வலிப்புநோய்க்கும் மதுப்பழக்கம் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

மனதை மாற்ற முடியுமா?

மதுப் பழக்கத்தைப் பொறுத்தவரையில் இளம் பருவத்தினர் மனதில் உள்ள சில தவறான நம்பிக்கைகள் அல்லது காரணங்கள் எளிதில் போதைக்கு அடிமையாக்கிவிடுகின்றன. குடிக்கிற ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை வைத்திருப்பார்கள். வளரிளம் பருவத்தினர் ‘மச்சான், இன்னைக்கு நான் சந்தோசமா இருக்கேன். கண்டிப்பா சரக்கு அடிச்சே ஆகணும்’ என்றோ, ‘மண்டை காயுது, கட்டிங் போட்டாதான் சரியாகும்’ என்றோ காரணம் சொல்லுவார்கள். இப்படிச் சில காரணங்களைச் சொல்லிக் குடிக்க ஆரம்பித்தால், அதுவே பின்னால் குடிப்ப தற்கு ஒரு சாக்குபோக்காக மாறிவிடும். அது மட்டுமல்லாமல் குடிப் பழக்கம், கவலைகளை மறப்பதற்கு நிச்சயமாக மருந்து அல்ல.

புகைப்பழக்கம்

எல்லாப் போதைப் பொருள் பழக்கங்களுக்கும் நுழைவாயில் எதுவாக இருக்கும்? புகைப் பழக்கம்தான். அதை போதைப் பொருள் என்றே பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதுவே போதை உலகத்தின் வாசல்.

வளரிளம் பருவத்தில் பலரும் முதன்முதலில் பரிசோதித்துப் பார்க்கும் போதைப் பொருள் சிகரெட் அல்லது பீடிதான். சிலருக்கு அவ்வளவு தைரியம் இல்லாவிட்டாலும் பேப்பரைச் சுருட்டிப் பற்ற வைத்து வாயில் வைத்துக்கொள்வது, நாக்கில் படாமல் ஊதுபத்தியை வாய்க்குள் வைத்துப் புகையை வெளியிடுவது போன்ற செயல்கள் மூலமாகத் தங்கள் ஆசையை வெளிப்படுத்துவார்கள்.

அடிமையாவது எப்படி?

இப்படி ஆரம்பிக்கும் பாதிப் பேர் சில நாட்களில் விட்டுவிடுவார்கள். ஆனால், இயற்கையாகவே பதற்றத் தன்மை உள்ள வளரிளம் பருவத்தினர் இதற்கு அடிமையாக அதிக வாய்ப்பு உண்டு. ஏனென்றால் புகையிலையில் உள்ள ‘நிக்கோடின்’ என்ற வேதிப் பொருள் ஆரம்பத்தில் மனப் பதற்றத்தைத் தணித்து, இப்படிப்பட்டவர்களை கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வைக்கும். மேலும் கல்லூரிக்குச் சென்ற உடன் இரவில் நீண்ட நேரம் விழித்துப் படிக்கும் வகையில், மூளையைத் தூண்டும் திறனை இது கொண்டிருப்பதால் புகைப்பதைத் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.

நிக்கோடின் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களில் மூளை ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால், ஒருவருடைய கவனம் மற்றும் சுறுசுறுப்பைக் கூட்ட உதவும். ஆனால், இது உதவி செய்பவர் போல வந்து பின்பு வில்லனாக மாறிவிடும். எப்படியென்றால், இந்த நிக்கோடின் செயல்படும் நேரம் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்தான். அதன் பின்பு மூளை நரம்புகள் அதே வேகத்தில் செயல்படக் கூடுதல் நிகோடினை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும். இதனால்தான் நாளடைவில் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வகுப்புகளின் பாதியிலோ, சினிமா பார்க்கும் போது இடையில் டாய்லெட்டிலோ சென்று தம் அடிக்காமல் பலரால் இருக்க முடிவதில்லை.

என்ன செய்யலாம்?

குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றாலே சிலருக்கு தம் அடிக்கத் தோன்றும். உதாரணமாக டீ, காபி குடிக்கச் சென்றால் புகைக்காமல் இருக்க முடியாது. எனவே, பழகிப்போன டீக்கடை, பெட்டிக்கடைகளைக் கொஞ்ச நாளுக்குத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கட்டுப்படுத்த முடியாமல் புகைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால், அதை நிறுத்த நிக்கோட்டின் சூயிங்கம் உதவும். மனநல மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.

இது எல்லாவற்றையும் தடுக்க, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு யார் கட்டாயப்படுத்தினாலும் சிறுவயதிலேயே ‘நோ’ சொல்லிப் பழகவேண்டும். இது புகை, குடிப் பழக்கத்துக்கு மிகவும் பொருந்தும். ‘இதில் என்னதான் இருக்கிறது?’ என்ற ஆவல்தான் முதன்முதலில் போதைப்பொருளை எடுக்கத் தூண்டும் எண்ணமாகும். ‘ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று நினைத்துக்கொண்டு அதை ஆரம்பித்தால், வாழ்க்கையையே அது தலைகீழாக்கும். போதை அடிமையாகும் பட்சத்தில் எந்தக் காரணத்துக்காகக் குடிக்க ஆரம்பித்தார்களோ, அதைவிட மிகப் பெரிய பிரச்சினையாகக் குடிநோய் - போதை மாறிவிடும். முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்துவிடும்.

Sairam College asked to submit report UDHAV NAIG

Sairam College asked to submit report


Anna University Registrar S. Ganesan said Sairam Engineering College in West Tambaram had been asked to submit a detailed report on the death of a student on Friday.

“We will also send a committee to the college to get to the bottom of the matter. We will take this up very seriously.”

A. Ilayaperumal, Director, Students Affairs Committee at the university who earlier mediated between the protesting students and the college management said, “As far as Anna University is concerned, we are responsible for the academic aspects of our affiliated colleges such as conducting examinations, ensuring that the affiliated college has adequate facilities and so on. We cannot really force a college to change its ‘social rules’. However, we believe that students must be relaxed and have an amiable atmosphere while pursuing their studies.”

The college authorities ruled out the possibility of the student falling accidentally into the well as it was located in a remote place where students hardly ventured. Enquiries revealed that there were seven wells on the campus that were covered with iron mesh.

The college authorities had decided to replace the mesh with a more secure cover and the process was already complete in a few wells. Since students are not allowed to use mobile phones in the college, it is not clear whether the victim made any calls or sent messages on Friday.

Case registered

Abinath’s parents arrived late on Friday and were taken to the Kundrathur police station, where a case was registered about the boy’s death.

On reports that Abinath had applied for transfer certificate and the management refused to issue the same insisting on payment of fees for four years, CEO, Sairam Group of Institutions.Saiprakash said last year alone TCs were issued to 48 students from the engineering college on request.

“We retain the first year tuition fee only. There is no question of demanding or retaining any other fee when a student seeks TC,” he said.

Meanwhile, a group of students studying in Sairam Engineering College have threatened to launch a strike against the college management.

The Sneha Suicide Prevention Centre helplines are 044-24640050, 24640060, and the government’s helpline is 104.

Degree holders’ details to be made available online..THE HINDU

Degree holders’ details to be made available online

  • R. RAVIKANTH REDDY

It would be hard to cheat the prospective employers with fake degree certificates and credentials in the near future with the Telangana State Council of Higher Education (TSCHE) deciding to consolidate the data base of all degree holders and place it on online for verification.

Data from 2011 will be open to public and prospective employers, including the Government sector, can check the credentials online anytime of any candidate. The data will contain all the details of the candidates including the academic details like marks secured and also personal details such as parents’ names and the college they attended. A meeting of the Registrars and Controller of Examinations of all the universities in Telangana will be held soon to review and take a final decision on the issue.

The TSCHE Chairman, T. Papi Reddy, said that the idea was to plug the increasing complaints on fake credentials being submitted to employers by candidates. Apparently, some candidates are changing their marks sheets totally to gain employment while some are submitting fake documents obtained through touts. The menace is more in IT companies which employs lakhs of people and it is a financial drain to check the credentials of the documents. “There is a need for transparency in the system and this will lead to fairplay in employment. Moreover, fake degrees can be effectively tackled if we make the data open to all,” Prof. Reddy said arguing in favour of it. “We are acquiring servers that can accommodate the huge data keeping in view future need as well.” Companies can check all the details online and reject the fake ones. In fact, it will be a check on candidates who impersonate in the entrance examinations as the data submitted can also be tallied with the available data online by the Convenors.

The fake degrees and credentials have been a big issue ever since the IT market boomed in the US as well as India. A number of students used fake engineering degrees to move to USA in the late 90s.

Convicts did not mean to kill anyone'

TIMES OF INDIA
Three AIADMK men found guilty of burning to death three college girls in Dharmapuri on February 2, 2000 have escaped the noose with the Supreme Court reviewing its own order, and commuting their death penalty into imprisonment for life.
Moments after AIADMK supremo J Jayalalithaa was found guilty in the Pleasant Stay Hotel case and sentenced to one year imprisonment on February 2, 2000, a mob torched at Ilakkiyampatti a Tamil Nadu Agricultural University bus carrying 70 students returning from a field trip. Kokilavani of Namakkal, Hemalatha of Chennai and K Gayathri of Viruddhachalam were burned to death.

On February 15, 2007, a sessions court in Salem sentenced three AIAADMK men -Nedunchezhian, Muniyappan and Ravindran --to death. It also ordered 25 others to undergo seven years of im prisonment. While two others were acquitted of all charges, one accused had died during the pendency of the case. Madras high court up held the death penalty on De cember 6, 2007, and it was con firmed by the Supreme Court on August 30, 2010.

A renewed bid to get their sentences commuted was made when review petitions were filed on their behalf in the Supreme Court. On Fri day , a three judge bench com prising Justice Ranjan Gogoi Justice Arun Mishra and Jus tice Prafulla C Pant commut ed the death sentence into life term by reviewing its order delivered about five and half years ago. Last week witnessed argu ments by top senior counsel, who sought to invoke the doctrine of `diminished responsibility' saying the convicts, who were `victims of mob psychology , had no personal animosity against the victims. Counsel argued that the convicts did not mean to kill anyone but were actually looking to destroy government property .

RGUHS to Revoke Degrees of Five Students

RGUHS to Revoke Degrees of Five Students
BENGALURU: The RGUHS  has decided to revoke the Bachelor of Ayurveda, Medicine and Surgery degrees awarded to five of its students.
The students had got admissions to the Government Ayurveda College in the city and completed the five-year course in three years and got certificates.
The decision was taken at the syndicate meeting on Thursday. The students are Hasib Ahmad, Siddimatam Yasmin, Shaziya Begum, Ramsheena E and Muthyala Venkateshwara Rao. The Department of Medical Education in 2014 had directed the university to inquire into the matter. 

Applications for BE, B.Tech from May 1


Applications for BE, B.Tech from May 1
DECCAN CHRONICLE

CHENNAI: The upcoming Tamil Nadu assembly elections will not affect the engineering admission process as the Tamil Nadu Engineering Admissions (TNEA) committee is set to distribute application forms for the B.E. and B.Tech. courses from May 1. “We are in the process of finalising the dates for engineering admission schedule. Since this is an election year we will mostly stick to last year’s schedule for engineering admission process,” an official from TNEA said.

Elections for the TN assembly will be held on May 16 and counting on May 19. Last year, the applications forms were distributed from May 6 and the last date of issuing the applications were May 27. “Of the 60 application distribution centres in the state, some three or four centres will be counting centres. During the 2011 and 2014 elections, the process of application distributions was largely unaffected. Elections will be over well before the counseling process which will start mid-June,” he said.

“We are planning to print over two lakh application forms this year. Students can also apply online for engineering admissions,” the official said. Each year around two lakh students join the engineering stream through single window counseling and the management quota. TNEA will conduct single window counseling for over two lakh seats available in government, government aided and private engineering colleges. Single window counseling will be held at Anna University’s Guindy campus.

Can audit private deemed universities: CAG to HRD Ministry

Can audit private deemed universities: CAG to HRD Ministry


NEW DELHI: The Comptroller & Auditor General of India has finally opened a window which could allow for a government audit of private deemed to be universities. The CAG is learnt to have communicated to the human resource development ministry that there are provisions in the CAG Act under which a proposal for auditing the deemed varsities can be considered. The CAG usually runs its scrutiny on the finances of those institutions that receive considerable government funding.

Of the 120-odd deemed universities, the Centre fully funds three government-run deemed varsities and partially funds about 20 private ones. Nearly 85 are completely privately run. An HRD ministry backed review of deemed universities in 2009 by the Tandon committee had run into a legal tangle that is still unresolved and stiffly opposed by private deemed varsities. It is learnt that the CAG has sought well outlined specific proposals for such an audit if it is to be conducted also allowing for providing opportunity to the deemed universities to make representations on the matter.

The HRD ministry had last year written to the UGC recommending an audit of all 120 deemed to be universities citing the apex higher education regulator's 2000 as well as 2010 regulations, which provide for auditing of all deemed varsities. The UGC, however, had shot back pointing out that this was not legally tenable in case of the private deemed varsities as they did not receive any government funding.

In a response on the matter to a question in the Rajya Sabha, the HRD ministry, however, has maintained that "the UGC is not opposing the auditing of deemed universities by CAG". The CAG has now responded to the HRD ministry saying that "specific proposals under Section 20 of the CAG's (Duties, Power and Conditions of Service) Act, 1971" can be moved by the ministry and these could be taken up by the CAG for "their consideration and appropriate action". The HRD ministry has also shared the same information with the Rajya Sabha in this parliament session.

The HRD ministry claims that the move towards auditing is in keeping with the Clause 20 of the 2010 Deemed University Regulations, which provide for a CAG audit of all deemed to be universities. The ministry has argued that the 2010 regulations do not make any distinction between private and government funded deemed to be universities and hence all of them uniformly attract its provisions.

The move is also aimed at ensuring greater quality control and checking unfair financial practices at the private deemed varsities.

400 MBBS students’ future at stake MCI withdraws recognition to Ballabgarh college

The Tribune

400 MBBS students’ future at stake

Bijendra Ahlawat

Tribune News Service

Faridabad, March 11

Future of over 400 students of the Goldfields Institute of Medical Sciences and Research, Ballabgarh, is at stake, as the Medical Council of India (MCI) has withdrawn recognition over its failure to meet the conditions. Seeking intervention of the state government, college students today staged a protest and submitted a memorandum to the district authorities.

The college has not been holding classes for eight months.
Blaming gross mismanagement on part of the authorities concerned, PK Gupta, a parent, said the future of hundreds of students who got admission in the MBBS course was in the dark.

Claiming that while the issue had been taken up with the office of the Vice Chancellor, Pt BD Sharma University of Health Sciences, Rohtak, he said nothing concrete had been done so far.

Jagdish Sharma, a parent, said while 90 per cent of the faculty had resigned or left, the rest of the teachers and staff were busy in protesting, causing inconvenience to both students and parents. He said the college management had not paid the staff for a year.

At a recent meeting convened by the Ballabgarh SDM, representative of the management reportedly admitted complete financial breakdown and inability to run the college. “Though the college came into being in 2010-11, the crisis struck in 2014 when the MCI withdrew its recognition over several lacunae (infrastructure and staff). It resulted in ban on fresh admissions in the past two years,” said Aujender Singh, another parent.

The college collected several crores as annual fee and other charges in advance last year, but failed to ensure classes, making the students suffer, it is claimed. While no college official was available for a comment, Deputy Commissioner Chander Shekhar said the issue was being brought to the notice of the state government.

Convicts did not mean to kill anyone'


TIMES OF INDIA
Three AIADMK men found guilty of burning to death three college girls in Dharmapuri on February 2, 2000 have escaped the noose with the Supreme Court reviewing its own order, and commuting their death penalty into imprisonment for life.

Moments after AIADMK supremo J Jayalalithaa was found guilty in the Pleasant Stay Hotel case and sentenced to one year imprisonment on February 2, 2000, a mob torched at Ilakkiyampatti a Tamil Nadu Agricultural University bus carrying 70 students returning from a field trip. Kokilavani of Namakkal, Hemalatha of Chennai and K Gayathri of Viruddhachalam were burned to death.


On February 15, 2007, a sessions court in Salem sentenced three AIAADMK men -Nedunchezhian, Muniyappan and Ravindran --to death. It also ordered 25 others to undergo seven years of im prisonment. While two others were acquitted of all charges, one accused had died during the pendency of the case. Madras high court up held the death penalty on De cember 6, 2007, and it was con firmed by the Supreme Court on August 30, 2010.


A renewed bid to get their sentences commuted was made when review petitions were filed on their behalf in the Supreme Court. On Fri day , a three judge bench com prising Justice Ranjan Gogoi Justice Arun Mishra and Jus tice Prafulla C Pant commut ed the death sentence into life term by reviewing its order delivered about five and half years ago. Last week witnessed argu ments by top senior counsel, who sought to invoke the doctrine of `diminished responsibility' saying the convicts, who were `victims of mob psychology , had no personal animosity against the victims. Counsel argued that the convicts did not mean to kill anyone but were actually looking to destroy government property .

MOB VIOLENCE - Bus burning case: Victims' kin upset with court verdict

TIMES OF INDIA

NAAKKAL/SALEM: The Supreme Court judgement commuting the death sentence of three convicts, who had torched a bus and burnt to death three college students 16 years ago, into life imprisonment on Friday, has left the kin of the deceased disappointed.

The apex court has said that the incident was triggered by mob frenzy and was not premeditated. "The same Supreme Court said in its previous judgement that the offence is extremely brutal, diabolical, grotesque and cruel. But now the [threejudge] bench has stated that the convicts did not know the victims and their crime did not deserve death penalty. This is purely ridiculous," said NP Veerasamy, father of Kokilavani, one of the deceased. "The judges will understand my pain only if they have lost a child in a riot," he added. After discussing the matter with his advocates, he plans to approach the Supreme Court at the earliest.

Poomozhi, president of Tamil Nadu Makkal Urimai Katchi, said the verdict would provide new opportunities to criminals.

"The Supreme Court said in its judgement that the convicts had no personal animosity towards their victims. Advocates may now try to commute the death penalty into a reduced sentence, based on this reasoning," he said.

On February 2, 2000, a TNAU bus carrying 44 students and 2 teachers was blocked and torched by a mob unhappy with the special court verdict in the Pleasant Stay case.Three students, Kokilavani, Gayathri and Hemalatha died in the incident.

Friday, March 11, 2016

எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
THE HINDU TAMIL
M.G.R. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.

ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.

‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.

ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.

ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.

வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.

அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

அதுதான் எம்.ஜி.ஆர்.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக சிறையில் இருக்கும் கைதிகள் ஓட்டு போட ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி

Logo

சென்னை, மார்ச். 11–
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெசப்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இன்று மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி பேசியதாவது:–
தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. தமிழக சட்டசபைக்கு மே 16–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அன்றைய தினம் முதல் பணியாக நீங்கள் ஓட்டுப்போட செல்ல வேண்டும். அதன்பிறகு மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் முழு முயற்சி செய்து வருகிறது.
இந்த தேர்தலில் முதல் முறையாக சிறையில் இருக்கும் கைதிகள் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தபால் மூலம் தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம். தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. சார்பில் தேர்தல் தொடர்பான புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

பழனியில் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு டாக்டரான போலி ஆசாமிகள் கைது

மக்களை நோய்களில் இருந்து காப்பாற்றும் மருத்துவ துறையில் நுழைந்த இரு போலி மருத்துவர்கள் பழனியில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டாக்டர் என ஏமாற்றி வந்தவர்கள்.


 
 
பழனி, காவலர்பட்டியில் 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு, கோவையில் ஒரு தனியார் மெடிக்கல் அசோசியேசனில் டிப்ளமோ மட்டும் முடித்த செந்தில் என்பவர் தான் டாக்டர் என மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
 
ஊசி போடுவது, வலி நிவாரண மாத்திரைகள் வழங்குவது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மாத்திரைகளையும் பரிந்துரை செய்து வந்துள்ளார்.
 
இதே போல் பழனி, நரிக்கல்பட்டியில் சுருளியாண்டி என்பவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர். ஆனால் இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
 
இவர்கள் மீது அதிருப்தியடைந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஊரக நலப்பணி துறை நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து இவர்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ரவிக்கலாவுக்கு ஊரக நலப்பணிகள் துறை உத்தரவு பிறப்பித்தது.
 
இணை இயக்குனர் ரவிக்கலா நடத்திய அதிரடி சோதனையில் 2 பேரும் போலி டாக்டர்கள் என தெரியவர அவர்கள் கைது செய்யப்பட்ட்டு, அவர்களிடம் இருந்த கல்விச் சான்றுகள், மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

தேமுதிகவின் தனித்து போட்டி முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து.

தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போடியிடும் என நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார். விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.


 
 
பல்வேறு கட்சிகள் விஜயகாந்த் தன் பக்கம் வர வேண்டும் என கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. நீண்டு நெடும் போராட்டத்துக்கு பின் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
வைகோ: தேமுதிக தனித்து போட்டியிடும் என்று மகளிர் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக அரசியலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சியும் ஆட்சிக்கு வர கூடாது என்ற தேமுதிகவின் நிலைப்பாடு தமிழக அரசியலில் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் என்றார் மதிமுக பொதுச்செயலாளார் வைகோ.
 
அன்புமணி: தேமுதிக இதற்குமுன் பலமுறை மக்களுடன் தான் கூட்டணி, வேறு யாருடனும் கிடையாது என்று கூறி பின்னர் கூட்டணி வைத்தனர். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாநாட்டில் தனியாக போட்டியிடுவதாக கூறினார்.
 
ஆனால் பின்னர் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். தனித்து போட்டியிடுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருப்பாரா என்பது தான் எனது கேள்வி என்று தெரிவித்துள்ளார் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்.
 
தமிழிசை: தனித்து போட்டியிடுவோம் என்று விஜயகாந்த் அறிவித்தது அவர்களின் விருப்பம். அதே சமயத்தில் ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது. ஏனென்றால் அவர்கள் ஊழல் கட்சிகளின் சாயல் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
எங்கள் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருந்தால் மகிழ்ந்து இருப்போம். அதே வேளையில் திமுக கூட்டணியில் இணைவார்கள் என்ற யூகங்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு ஊழல் கூட்டணிகளில் சேராமல் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.
 
தனித்தனியாக நின்று அவரவர் பலங்களை நிரூபிப்பது ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையே. கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தது வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, மேலும் இந்த தேர்தல் பல சவால்களை சந்திக்க இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
 
ஜி.கே. வாசன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலன் சார்ந்து, தன் இயக்கம் நலன் சார்ந்து தனித்து போட்டி என்ற இறுதி முடிவை சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்து இருக்கிறார் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

விஜயகாந்த் தனித்து களமிறங்க என்ன காரணம்: பரபரப்பு பின்னணி தகவல்கள்

வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் என நேற்று அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
 
திமுக, பாஜக, மக்கள் நல கூட்டணி என பல கட்சிகள் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என தவியாய் தவித்து வந்தன. விஜயகாந்த், திமுக அல்லது பாஜக கூட்டணிக்கு கட்டாயம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக திமுக பக்கம் தான் போவார் என அதிகம் பேசப்பட்டது.
 
ஆனால் அவர் யாருடனும் போகாமல் தனித்து களமிறங்குவோம் என விஜயகாந்த் அறிவித்தது திமுக தரப்பை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் ஏன் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் என அறிவித்தார் என பல தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் வலம் வருகின்றன.
 
தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நடத்தப்பட்ட நேர்கணலின் போது அவர்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்கப்பட்டதாம். அதில் ஒருசிலர் திமுக உடன் கூட்டணி வைக்கலாம் என்றனர். பலர் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கூறியுள்ளனர்.
 
திமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தேமுதிக சார்பில் முக்கிய கோரிக்கையாக வைக்கப்பட்டது, துணை முதலமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு, முக்கிய சில இலாக்காக்கள் போன்றவை. ஆனால் திமுக தரப்பு எதற்கும் இறங்கி வரவில்லை. தேமுதிக தரப்பில் முதலில் கேட்கப்பட்ட 104 தொகுதிகளில் 55 தொகுதிக்குதான் திமுக சம்மதித்தது. இது தேமுதிக தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தேமுதிகவின் முக்கியமான எந்த நிபந்தனைக்குமே திமுக தரப்பு இறங்கி வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலில் வடிவேலுவை களமிறக்கி விஜயகாந்தை கிண்டல் செய்ததையும், அதனை சன் தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளிபரப்பி விஜயகாந்தை அவமான படுத்தியதை பிரேமலதா இன்னமும் மறக்கவில்லையாம்.
 
கடந்த காலங்களில் விஜயகாந்துக்கு எதிராக திமுக செய்தவற்றை தேமுதிக தரப்பு இன்னமும் மறக்கவில்லை என கூறப்படுகிறது. திமுக உடன் கூட்டணி அமைக்க முதல் தடையாக இருந்தது பிரேமலதா தானாம். அவர் தான் திமுக கூட்டணியை தவிர்க்க பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
ஆனால் பாஜக தரப்பிடமும் பல கோரிக்கைகளை வைத்துள்ளது தேமுதிக தரப்பு. 150 சீட்டுகள், ராஜ்யசபா எம்.பி., பிரேமலதாவுக்கு பொறுப்பு, முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் போன்றவை அந்த கோரிக்கைகள். ஆனால் பாஜக தரப்பு இதனை ஏற்கவில்லையாம்.
 
மேலும் பாஜக உடன் கூட்டணி வைத்து அது தோல்வியில் முடிந்தால் கட்சி காணாமல் போய்விடும். திமுகவை எந்த காலத்திலும் நம்ப முடியாது என்பது பிரேமலதாவின் கருத்து. எனவே தான் தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற அதிரடி முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-reason-behind-of-the-dmdk-election-alliance-issue-116031100020_1.html

போலியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை

போலியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை

First Published : 11 March 2016 12:54 PM IST
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும், போலியான தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், போலியான தொலைபேசி அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்நிலையத்தில் தெரிவிக்கும்படி சுஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியரான ராகுல் பாண்டேவுக்கு, சிங்கப்பூரில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், மத்திய அமைச்சகத்திடம் இருந்து பேசுவதாகவும், சிங்கப்பூரில் இருந்து வெளியேறுமாறு மிரட்டப்பட்டதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து சுஷ்மா இந்த பதிவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Thursday, March 10, 2016

சில்லறை பிரச்சினைக்கு தீர்வு: மாணவர்களின் அசத்தல் 'ஆப்' முயற்சி

Return to frontpage
ஆர்.சுஜாதா

இரண்டு வெவ்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், தங்கள் கல்லூரி வளாகத்தில் நிலவிய சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான செயலியை உருவாக்கியுள்ளனர்.

நான்கு வெவ்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர், சில்லறைக் காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் பே- மிண்ட் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.

ராஜத் யாதவ் மற்றும் ஷுபம் ஜிந்தால் ஆகிய இரு மாணவர்களும் ஐஐடி சென்னையில், கட்டிடவியல் மற்றும் மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கடைசி ஆண்டில் படிக்கின்றனர். கவுசிக் மற்றும் ஆசிஷ் நோயல் இருவரும் பிஐடி ராஞ்சியில், கணிப்பொறி அறிவியல் மற்றும் மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கடைசி ஆண்டில் படிக்கின்றனர்.

யாதவ் மற்றும் ஜிந்தால் ஆகியோர், ஸ்டார்ட்-அப் தொகையாக 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய, கவுசிக் மற்றும் ஆசிஷ் தொழில்நுட்ப ரீதியாக பணிபுரிந்துள்ளனர். ஐஐடி சென்னை தொழில் முனைவோர் பிரிவு இதற்கு ஆதரவளித்துள்ளது.

இந்த எண்ணம் எப்படி வந்தது?

"எங்கள் கல்லூரி வளாகத்தில் ஒரு முக்கியப் பிரச்சனை இருந்தது. இங்கே இருக்கும் ஏழு கடைகளிலும் எப்போதும் சில்லறை தட்டுப்பாடு இருந்தது. கடை விற்பனையாளர்கள், சில்லறைக்கு பதிலாக சாக்லேட்டுகளையும், இன்ன பிற பொருட்களையும் கொடுத்து வந்தார்கள். அதை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசித்தோம். பே- மிண்டை உருவாக்கினோம்.

இந்த ஆப்பை சாரங் விழாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் சர்வர் உள்ளிட்டவைகளில் இருந்து அனுமதி கிடைக்க தாமதமானதால், இப்போதுதான் வெளியிட முடிந்தது.

இதைப் பயன்படுத்தி வரும் மாணவர்கள் ஏராளமான கருத்துக்களைச் சொல்கின்றனர். வாரம் ஒரு முறை, நான் 600 ரூபாயை அதில் போடுகிறேன். இதில் கேஷ் பேக் வசதியும் இருக்கிறது. சில சமயங்களில் சட்டை மற்றும் பேண்ட்களில் பணம் இருக்கிறதா என்று பார்க்காமலேயே அவற்றைத் துவைத்துவிடுவேன். இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. சில்லறைக்காக நீண்ட வரிசையிலும் நிற்க வேண்டியதில்லை" என்கிறார் யாதவ்.

பிப்ரவரி மத்தியில் வெளியான இந்த ஆப்பை, வளாகத்தில் இருக்கும் சுமார் 1,200 மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த வாரம் பிஐடி ராஞ்சியில் நடக்கவிருக்கும் கலாச்சார விழாவில் ஆப் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எளிய வழியில் பரிமாற்றம்

* சில்லறையைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட பே-மிண்ட் ஆப்பைத் திறங்கள்.

* கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தால் போதும்.

* எவ்வளவு தொகை என்பதை உள்ளிட்டு, பரிமாற்றத்தை நடத்த முடியும்.

இப்போதைக்கு கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படும் செயலியை, விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறதாகக் கூறுகின்றனர் இந்த தொழில்நுட்ப மாணவர்கள்.

பே- மிண்ட் செயலிக்கான இணைப்பு பே-மிண்ட்

எம்ஜிஆர் 100 | 18 - ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!...தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

Return to frontpage

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின், ‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’ என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.

முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.

அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து ‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’ என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.

அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி, ‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’ என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.

அந்த இளைஞர் சென்ற பிறகு, ‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’ என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து ‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’ என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.

முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம் ‘சக்கவர்த்தி திருமகள்.’ அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.

எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்

‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’

என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.

அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.

விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.

அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.

அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....

‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.

இன்று ஒரு கல்லறையின் அருகில்...


DINAMALAR


சென்னை சாந்தோமில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறை அது. உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு உன்னத ஆத்மாவின் நினைவு நாள் இன்று(08/03/2016) என்றும் நீங்காத ராகங்களை மனதினுள் இசைத்துக்கொண்டு இருக்கும் அவரது கல்லறையில் முன் கலங்கிய கண்களுடன் நிற்கிறேன்அவரது கல்லறை பறவைகளின் எச்சங்கள் பட்டும், நுாலாம்படை சூழ்ந்தும், துாசு படிந்தும் மாசு நிறைந்தும் காணப்பட்டது

இப்போது கண்களுடன் சேர்ந்து மனமும் கலங்கியது

அந்தக் கல்லறைக்கு சொந்தக்காரர் நடிகர் சந்திரபாபு 'நகைச்சுவை மன்னன்' என அழைக்கப்பட்ட சந்திரபாபு தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர்.





'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை' போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்பவர்.

“ஜோசப் பனிமயதாஸ் ” என்னும் இயற்பெயர்கொண்ட சந்திரபாபு அவர்கள், 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் நாள் தூத்துக்குடியில் பிறந்தவர்.பின்னாளில், சந்திரபாபு எனத் தமது பெயரை மாற்றிக்கொண்டார். இவருடைய தந்தை ரோட்டரிக்ஸ் ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகி ஆவார்.

விடுதலைப் போரில் ஈடுபட்டதன் காரணமாக ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் ரோட்டரிக்சின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. இலங்கையில் சிறிதுகாலம் மட்டுமே வாழ்ந்த அவருடைய குடும்பம், மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது.

அதன் பிறகு, சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். பல இன்னல்களுக்குப் 1947 ஆம் ஆண்டு 'தன அமாராவதி' என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாகக் கால்பதித்தார். அதன் பிறகு தனது திறமையால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்.

1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

'சபாஷ் மீனா' திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். மேலும் 'புதையல்', 'சகோதரி', 'நாடோடி மன்னன்', 'குலேபகாவலி', 'நீதி', 'ராஜா', 'பாதகாணிக்கை', 'நாடோடி மன்னன்', 'கவலை இல்லாத மனிதன்', 'அடிமைப்பெண்' போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழ் திரையுலக ரசிகர்களில், 'சந்திரபாபு என்னும் கலைஞனை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை' என்னும் அளவிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார். 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும் போது அழுகிறான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னை தெரியலையா இன்னும் புரியலையா' போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதுவரை, தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனியிடம் உண்டு எனலாம். அதுவும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

'கவலை இல்லாத மனிதன்' மற்றும் 'குமாரராஜா' போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், 1966 ஆம் ஆண்டு 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்னும் திரைப்படத்தினை இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர்.

சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

அவர்வெளி உலகுக்கு கலகலப்பாக இருக்க முயன்றார். ஆனால் தனிமை அவரை மெல்ல, மெல்லத் தின்றது -கொன்றது என்பதுதான் உண்மை.

சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

கல்லறையைவிட்டு வௌியேவரும் போது பக்கத்தில் இருந்த டீகடையின் ரேடியோவில் இருந்து சந்திரபாபுவின் குரல் காற்றில் கலந்து வருகிறது...

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

இந்தப்பாடல் அவர் அவருக்காக பாடியதா அல்லது நமக்காக பாடியதா தெரியாது? ஆனால் யாருமே எட்டிப்பார்க்காத அந்த உன்னத கலைஞனின் கல்லறையை தாலாட்டிக்கொண்டு இருந்தது மட்டும் நிஜம்...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

துபாயில் வரலாறு காணாத கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு

துபாயில் வரலாறு காணாத கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு

First Published : 10 March 2016 10:21 AM IST
துபாயில் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
மழையே காணாத வரண்ட பூமியான துபாயில் நேற்று ஒரே நாளில் மட்டும் 29 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால் அங்கு சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருகின்றது. நேற்று மட்டும் 250 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அபுதாபி விமான நிலையம் 3 மணி நேரம் வரை மூடப்பட்டது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளமும், தகவல்களும்..


DINAMANI


By ஜி. சசிகுமார்

First Published : 10 March 2016 01:46 AM IST


இணையம் இன்றி அணுவளவும் அசையாது என்பதுதான் இன்றைய நிலை. துவக்க காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இணையம், தற்போது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, குழந்தைகளுக்கான பொருள்கள் முதல் பெரியவர்களுக்கான மருந்து, மாத்திரைகள் வரை அனைவருக்கும் தேவையான, அனைத்து விதமான பொருள்களையும் இணையதளங்கள் மூலமாக வீட்டில் இருந்தபடியே தற்போது வாங்க முடிகிறது.
மேலும், வங்கிக் கணக்கைச் செயல்படுத்துதல், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளையும் இணையம் மூலமாகவே செய்து முடிக்க முடிகிறது.
இன்னும் இதுபோல எண்ணற்ற சேவைகளையும் எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளும் இடையறாது நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு இணையத்தின் பயன்பாடு ஒருபுறம் இருக்க, தற்போது மிகப் பெரிய தகவல் சேகரிப்பு மையமாகவும் திகழ்கிறது இணையம். இதில் கிடைக்காத தகவல்களே இல்லை எனும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தகவல்கள் சரியாவைதானா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, தமிழ்ச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ள ஒரு தளத்தில் அசோகமித்திரனின் "புலிக்கலைஞன்' எனும் சிறுகதையும் இடம் பெற்றுள்ளது. அதில், வாய்ப்புக் கேட்டு சினிமா அலுவலகத்துக்குச் செல்லும் அந்தக் கதையின் நாயகன் அங்கிருப்பவர்கள் முன்பாக புலி வேஷமிட்டு ஆடிக் காட்டும் பகுதி இடம் பெறவேயில்லை. அதுதான் அந்தக் கதையின் முக்கியப் பகுதியாகும்.
ஆனால், அது இல்லாததால் அந்தக் கதை அதன் தன்மையையே இழந்து, வாசகருக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அந்தக் கதையை புத்தகத்தில் வாசித்தவர்களுக்கு அதன் உண்மையான வடிவம் தெரியும். ஆனால், இணையதளத்தின் மூலமாக, முதன்முதலாக அந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு அதில் உள்ள கதையின் உண்மை வடிவமே அதுதான் என்ற எண்ணத்தையே உருவாக்கும்.
இதேபோல, தமிழில் உள்ள தகவல் களஞ்சியம் தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பெரியாரைப் பற்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுகுறித்து அந்த அமைப்பினர் கண்டனம் தெரிவித்த உடன், சரியான தகவலையும் தெரிவித்ததையடுத்து அது சரி செய்யப்பட்டது.
சமீபத்தில் கூட, அதே தகவல் தளத்தில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைப் பற்றியும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுகுறித்தும் சுட்டிக் காட்டிய பின்னர் அவை நீக்கப்பட்டன.
இதேபோல, மக்களவை பா.ஜ.க. பெண் உறுப்பினர் அஞ்சு பாலா இறந்துவிட்டதாகவும், மேலும் அவரைப் பற்றித் தவறான தகவல்களும் அந்தத் தகவல் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் மக்களவையிலும் புகார் எழுப்பியுள்ளார் என்பது தற்போதைய செய்தி.
இதெல்லாம் நமக்குத் தெரியவரும் மிகச் சில உதாரணங்களே. இவற்றில் சில தகவல்கள் தமிழில் வெளியானதாலும், அந்தத் தகவல்களைப் பற்றி நாம் ஏற்கெனவே தெரிந்திருந்ததாலும், அவை தவறாக வெளியிடப்பட்டபோது சுட்டிக்காட்டப்பட்டன.
ஆனால், இதேபோல ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை முதன்முதலாகப் படிக்கும்போது அதன் உண்மைத் தன்மையை நாம் எப்படிக் கண்டுகொள்வது?
இணையத்தில் உள்ள தேடுபொறியின் உதவியுடன் நாம் தேடும் தகவல்கள் சில இணையதளங்கள், வலைப்பூக்கள், மின் இதழ்(நூல்)கள், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றில் இருந்தே நமது பார்வைக்குக் கிடைக்கின்றன.
இதில், முகநூல் மூலமாக வெளியிடப்படும் தகவல் பகிர்வு குறித்து இங்கு குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில், முகநூலில் குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வெளியிடப்படுவது தவறான தகவல்களே.
இதற்கு சமீபத்திய உதாரணமாக சென்னை வெள்ள நிவாரணச் சம்பவத்தைக் கூறலாம். வெள்ளத்தின்போது முகநூல் நண்பர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய அளவிலான உதவிகளைச் செய்தனர். அவ்வாறு தொடர்பு கொள்ளுமாறு முகநூலில் வெளியிடப்பட்ட செல்லிடப்பேசி எண்கள் பெரும்பாலும் தவறானவையாகவே இருந்தன.
குறிப்பாக, வெளியூரைச் சேர்ந்தவர்களின் எண்களே அதில் அதிக அளவில் வெளியிடப்பட்டிருந்தன. இதை, முகநூலிலேயே பலர் சுட்டிக்காட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இணையத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் போலி இணையதளங்கள். இதற்கு உதாரணம்,
பிரபல தனியார் தொலைக்காட்சியின் இணையப் பக்கத்தை தேடினால் அதே முகவரியில், அதே பெயரில், வேறுவிதமான பக்க வடிவமைப்புடன் ஆனால், முற்றிலும் வேறு தகவல்களைக் கொண்ட இணையதளம் காட்சிக்குக் கிடைக்கும். இவையெல்லாம் நம் பார்வைக்கு கிடைக்கப் பெற்ற மிகச் சில உதாரணங்களே ஆகும்.
இந்நிலையில், தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் செய்முறைப் பயிற்சிக்காக மாணவ, மாணவிகளைப் பல்வேறு தகவல்களைச் சேகரித்து வரச் சொல்கின்றனர். இதற்காக அவர்கள் நாடுவதும் இணையதளங்களைத்தான்.
இதுமட்டுமன்றி, எம்.ஃபில்., பி.ஹெச்டி. உள்ளிட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்வோரும் முன்பெல்லாம் நூலகம் சென்று தகவல்கள் திரட்டி வந்தனர். ஆனால், அந்த நிலை மாறி, தற்போது அவர்களின் முதல் தகவல் சேகரிப்பு மையமாக இணையதளங்களே உள்ளன.
இதுபோல, பல்வேறு தகவல்கள் வேண்டுவோரும் அதற்காக இணையத்தையே நாடுகின்றனர்.
இணையம் ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்பதிலும், இன்றைய நிலையில் அனைத்துத் துறைகளிலும் அதன் பயன்பாடு அளப்பரியது என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.
ஆனால், அதில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் சரியானவையா என்பதே தற்போது நம்முன் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.

NEWS TODAY 20.09.2024