Friday, March 11, 2016

போலியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை

போலியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை

First Published : 11 March 2016 12:54 PM IST
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும், போலியான தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், போலியான தொலைபேசி அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்நிலையத்தில் தெரிவிக்கும்படி சுஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியரான ராகுல் பாண்டேவுக்கு, சிங்கப்பூரில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், மத்திய அமைச்சகத்திடம் இருந்து பேசுவதாகவும், சிங்கப்பூரில் இருந்து வெளியேறுமாறு மிரட்டப்பட்டதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து சுஷ்மா இந்த பதிவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024