Sunday, April 17, 2016

மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்

மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர்

Return to frontpage


‘மகாதேவி’ படத்தில்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் கருப்புத் தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘ஒத்தப்பட்டி ஐயத் தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.

இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.

தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.

சக்தி நாடக சபாவின் மாணவர்

திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா'வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.

‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.

‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.

நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்

சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.

நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.

இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.

மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.

ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.

பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.

கைகொடுத்த கலைவாணர்

திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.

அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.

அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.

“வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார் ஓ.ஏ.கே.தேவர். அவரது அடையாளம் வில்லன் நடிப்பு மட்டும்தானா? அவரது திரையுலகப் பயணத்தின் சுவடுகள் நிறைவுப் பகுதியாக அடுத்த வாரம்.

ரயில், பேருந்துகளில் ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ பயன்படுத்தினால் வெகுமதி

TAMIL MURASU SINGAPORE

ரயில், பேருந்து பயணத்தின்போது ‘நெட்ஸ் ஃபிளாஷ்பே’ அட்டையைப் பயன்படுத்துவோருக்கு வெகுமதி வழங்கும் இயக்கத்தை ‘நெட்ஸ்’ நேற்று அறிமுகப்படுத்தியது. டிரான்சிட்லிங்க் டிக்கெட் அலுவலகங்களிலும் எம்ஆர்டி ரயில் நிலைய வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் ஏப்ரல், மே மாதங்களில் விற்கப்படும் குறிப்பிட்ட அளவே உள்ள ‘எங்கிரி பர்ட் மூவி ஃப்ளாஷ்பே’ அட்டைகளும் இந்த இயக்கத்தில் அடங்கும் என நெட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எம்ஆர்டி நிலையங்களில் உள்ள மதிப்புக் கூட்டு டிக்கெட் சாதனங்களில் ஒரு வெள்ளி கழிவை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.

ஜூன் 5 முதல் ஞாயிறுதோறும் ரயில் சேவை 13 நிலையங்களில் தாமதமாக தொடங்கும்

Home

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு- மேற்கு ரயில் பாதைகளில் உள்ள 13 நிலையங்களில் வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமாக தொடங் கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு=மேற்கு பாதையில் ஜூக்கூன் நிலையம் முதல் குவீன்ஸ்டவுன் நிலையம் வரை யிலும் வடக்கு=தெற்கு பாதையில் புக்கிட் கோம்பாக் நிலையம் முதல் ஜூரோங் ஈஸ்ட் நிலையம் வரை யிலும் ரயில் சேவை காலை 7 மணிக்குத் தொடங்கும் என எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரி வித்தது. ஜூன் 5ல் தொடங்கும் இந்த மாற்றம் பொது விடுமுறை தவிர்த்து மற்ற நாட்களில் டிசம்பர் 18ஆம் தேதி வரை நீடிக்கும்.

எம்ஜிஆர் 100 | 45 - எம்.ஜி.ஆரின் இசை ஞானம்

M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.
‘நவரத்தினம்’ படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!
பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், ‘‘மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். ‘‘புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.
‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.
வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமனுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார்.
நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை ‘தாளம்’ என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் ‘தபேலா தரங்’கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், ‘வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்…’ என்ற வரிகளை மிகச் சரியாக ‘டைமிங்’ தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.
‘இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே…’’ என்ற வரி களில் கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ‘லாங் ஷாட்’டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் ‘earworm’ என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ‘ஆடாத மனமும் உண்டோ?...’ என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!
இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:
‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்…’
‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ?...’
எம்.எஸ்.சுப்பு லட்சுமி கதாநாயகியாக நடித்த படம் ‘மீரா’. இந்தப் படத் தில் எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்துள்ளார். பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், மதுரை சோமு போன்ற கலைஞர்களின் கச்சேரிகளை ரசித்துக் கேட்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்.

Friday, April 15, 2016

எம்ஜிஆர் 100 | 39 -படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.

1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.

இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.

அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.

சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது.

மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கியது.

சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.

1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.

அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!

ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.

நிதானத்துக்கு வந்த ஜப்பானியர், தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் இரு கைகளையும் கோர்த்து இடுப்பு வரை முன்னோக்கி வளைந்து ‘‘மன்னியுங்கள்’’ என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு பின்னோக்கி நகர்ந்து போய்விட்டார்.

படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’ எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’, ‘அன்பே வா’, ‘ஒளிவிளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘ரிக் ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக்குரல்’ ஆகிய படங்கள் மதுரையில் 20 வாரங்களுக்கு மேலும், ‘குடியிருந்த கோயில்‘, ‘நம்நாடு’, ‘இதயக்கனி’ ஆகிய படங்கள் 19 வாரங்களும் ஓடி சாதனை படைத்தன.

- தொடரும்...

எம்ஜிஆர் 100 | 40 - சகலகலாவல்லவர்!


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. போலவே அவரது ரசிகர்களும் கூர்மையானவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம். நேற்றைய தொடரில் மதுரையில் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனைகளை பெட்டிச் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதில் ‘மதுரை வீரன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக்குரல்’ ஆகிய 6 வெள்ளிவிழாப் படங்களில் ஒன்றான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ விடுபட்டுவிட்டது என்றும் ‘இதயக்கனி’ படம் 20 வாரங்களுக்கு மேல் ஓடியதாகவும் ஏராளமான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மதுரையில் 20 வாரங்கள் ஓடிய படங்களை பட்டியலிட்டால் அதில் சதவீத அடிப்படையில் எம்.ஜி.ஆர். படங்களே அதிகம் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இதுபோன்ற கூர்மையான ரசிகர் களுள் ‘கவர்ச்சி வில்லன்’ என்று புகழப்பட்ட நடிகர் கே.கண்ண னும் ஒருவர். பின்னாளில் எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றியவர். சொந்த ஊரான சிவகங்கையில் ராம் தியேட்டரில் எம்.ஜி.ஆர். படங்கள் எல்லாவற்றையும் கண்ணன் விடாமல் பார்த்து விடுவார். அவரது நடிப்பையும் வசனங்களையும் கூர்ந்து கவனித்து, மாலை வேளைகளில் நண் பர்களிடம் எம்.ஜி.ஆரைப் போலவே நடித்து அவர்களை மகிழ வைப்பார்.

பின்னர், சினிமா ஆசையால் சென்னைக்கு வந்த கண்ணன் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தபோது, ‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளே எம்.ஜி.ஆருடன் வசனம் பேசி நடிக்கும் காட்சி. கதைப்படி வீரனின் நண்பர்களில் ஒருவராக கண்ணன் நடித்திருப்பார். வீரனின் நண்பர்களை தளபதியாக வரும் நடிகர் பாலையா கொடுமைப்படுத்துவார். அங்கு வரும் எம்.ஜி.ஆர். தனது நண்பர்களை காப்பாற்றுவார். ‘‘அது சென்டிமென்டாக அமைந்து நிஜவாழ்க் கையிலும் அப்படியே எம்.ஜி.ஆர். எங்களை எல்லாம் காப்பாற்றினார்’’ என்று பின்னர், கண்ணன் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார்.

‘மதுரை வீரன்’ படம் தொடங்கி எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருடன் பல படங்களில் கண் ணன் நடித்திருக்கிறார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தின் பல காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக் கப்பட்டன. 26 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தது.

எம்.ஜி.ஆரும் மற்றவர்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டனவே தவிர, கண்ணனுக்கு வேலை இல்லை. மாலையில் படப்பிடிப்பு முடிந்து கண்ணனை சந்திக்கும் எம்.ஜி.ஆர். அவரிடம் ‘‘என்ன கண்ணன்? நன்றாக சாப்பிட்டாயா? தூங்கினாயா?’’ என்று விசாரிப்பார். கண்ணன் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டு போய்விடுவார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் பிற்பகல் இரண்டு மணிக்கு எம்.ஜி.ஆர். திடீரென ஏழு பக்க வசனங்களை கொண்டுவந்து அதன் ஒரு பகுதியை கண்ணனிடம் கொடுத்தார். மற்றொரு பகுதியை நடிகை லதாவிடம் கொடுத்தார். ‘‘இருவரும் வசனங்களை பாடம் செய்து விட்டு நான்கு மணிக்கு தயாராக இருங்கள். படப்பிடிப்பு இருக்கிறது’’ என்றார்.

படம் சரித்திரக் கதை என்பதால் நீண்ட வசனங்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாடம் செய்து தயாராக வேண்டுமே என்று கண்ணனுக்கு குழப்பம். அதை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். ‘‘இன்றுடன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாளை சென்னை புறப்படு கிறோம். நாடகத்தில் பல பக்க வசனங்களை மனப்பாடம் செய்த உனக்கு இது பெரிய காரியமா? ஐந்து மணிக்கு மேல் சூரிய வெளிச்சம் சரியாக இருக்காது. சீக்கிரம் தயாராகு’’ என்று சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார்.

எம்.ஜி.ஆர். சொன்னபடி கண்ணன் வசனங்களை பாடம் செய்து நான்கு மணிக்குத் தயாராக இருந்தார். கதைப்படி ஒரு நாட்டின் மன்னராக இருக்கும் கண்ணன், போருக்கு புறப்படுவார். அவரை லதா தடுத்து நிறுத்த முயற்சிப்பார். அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகரமான வாதங்கள்தான் அன்று எடுக்கப்பட இருந்த காட்சி.

இந்தக் காட்சியை எடுக்க எப்படியும் ஒரு நாளாவது ஆகும். படம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறு கோணங்களில் படமாக்க வேண்டும். நான்கு மணிக்கு படப்பிடிப்பை ஆரம்பித்து ஐந்து மணிக்குள் எப்படி எம்.ஜி.ஆர். படமாக்கப் போகிறார் என்று கண்ணனுக்கு ஆர்வம்.

கண்ணனை விட சுறுசுறுப்பாக காட்சியை படமாக்குவதற்காக எம்.ஜி.ஆரும் தயாராக வந்தார். வசனங்களை கண்ணனும் லதாவும் பாடம் செய்து கொண்டிருந்த நேரத்துக் குள், காட்சியை விரைவாக படமாக்க எம்.ஜி.ஆர். செய்திருந்த ஏற்பாடுகளை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் கண்ணன்.

படத்தில் இடம்பெறும் பிரம் மாண்டமான போர்க் காட்சிகளை பட மாக்குவதற்காக ஒன்பது கேமராக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. கண்ண னும் லதாவும் பேசும் வசனக் காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து அதற்காக, ஒன்பது கேமராக்களையும் ஒன்றின் பார்வை ஒன்றின் மீது விழாத வகையில் திறமையாக கோணங்களை அமைத் திருந்தார். 4.15 மணிக்கு எம்.ஜி.ஆர். ‘ஸ்டார்ட்’ சொல்ல, 4.30 மணிக்கு காட்சி ஓ.கே. ஆகிவிட்டது. கண்ணனும் லதாவும் ஒரே ‘டேக்’கில் நடித்த காட்சி இது.

ஒரு நாள் முழுக்க படப்பிடிப்பு நடத்தி எடுக்க வேண்டிய காட்சியை பதினைந்து நிமிடத்தில் எம்.ஜி.ஆர். எடுத்து முடித்து விட்டார். அந்தக் காட்சியை ஒரே நேரத்தில் படமாக்கியது கூட பெரிதல்ல; அதை மிகச் சரியாக ஒன்பது ‘ஷாட்’களாக பிரித்து எடிட் செய்தார். இப்போதுகூட படத்தில் அந்தக் காட்சி பல கோணங்களில் பல முறை எடுக்கப்பட்ட காட்சி போலத் தெரியும்.

எம்.ஜி.ஆர். நடிகர் மட்டுமல்ல; திரைப்படத்துறையில் எல்லாம் அறிந்த சகலகலாவல்லவர்.


தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

- தொடரும்...

எம்ஜிஆர் 100 | 43 - மழையில் உதவிய கரங்கள்

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R.புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஆட்டோக்கள், சைக்கிள் ரிக்ஷாக்களை பெருமளவில் இன்றும் காணலாம். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது ரிக்ஷாக்காரர்கள் அன்பைக் காட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம், அவர்களின் நலனில் எம்.ஜி.ஆர். அக்கறை காட்டியதுதான்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருமழையையும் ஊரே வெள்ளக்காடானதையும் யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. 30 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எங்கே கடும் மழை என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முதலில் நீண்ட கரங்கள் எம்.ஜி.ஆருடையவை.

சென்னையில் மழை பாதிப்பு நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டில் பெரிய, பெரிய அண்டாக்களில் சோறு வடிக்கப்படும். பொட்டலங்களாக கட்டி கொடுக்கப்பட்டால் அவை சூடு ஆறி விடும் என்பதால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு வேன்களி லும் கார்களிலும் உணவு எடுத்துச் செல்லப்பட்டு சூடாக வழங்கப்படும். சில நேரங்களில் எம்.ஜி.ஆரே சென்று பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு பரிமாறியதும் உண்டு.

ஒருமுறை, வாஹினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஆற்காடு சாலையில் காரில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தார். இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட்டில் நட்சத்திரங்களின் கார்கள் காத்து நிற்கும். அவர்களை பார்ப்பதற்காகவே எப்போதும் அங்கு ஒரு கூட்டம் இருக்கும்.

கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் எம்.ஜி.ஆரின் கார் காத்திருந்தது. அப்போது, நல்ல மழை பெய்து கொண் டிருந்தது. ரிக் ஷாக்காரர் ஒருவர் மழை யில் நனைந்து கொண்டே முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்தபடி இருந்தார். இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்தது.

தனது அண்ணன் சக்ரபாணியிடம் ரிக் ஷாக்காரரின் நிலைமையைச் சொல்லி எம்.ஜி.ஆர். வருத்தப்பட்டார். சக்ரபாணியும் பரிதாபப்பட்டார். அவர் இயல்பாகவே கொஞ்சம் வேடிக்கையாக பேசக் கூடியவர். ‘‘பாவம்தான். ஆனால், அதற்காக ரிக் ஷாக்காரர்கள் ரெயின் கோட் போட்டுக் கொண்டா ரிக் ஷாவை ஓட்டுவார்கள்?’’ என்று கேட்டார்.

மழைக்கு பதில் சொல்வது போல, எம்.ஜி.ஆரின் மூளையில் மின்னல் அடித்தது. ‘‘ஏன் கூடாது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்ட தருணம்தான், ரிக் ஷாக்காரர்களுக்கு இலவசமாக அவர் ரெயின் கோட் வழங்குவதற்கான திட்டம் உதித்த நேரம். உடனடியாக, எம்.ஜி.ஆர். செயலில் இறங்கிவிட்டார். ஆர்.எம்.வீரப்பனை அழைத்தார். ‘‘சென்னையில் எவ்வளவு ரிக் ஷாக் காரர்கள் இருப்பார்கள்? அவ்வளவு பேருக்கும் ரெயின் கோட் தைக்க எவ்வளவு செலவாகும்? விசாரித்து சொல்லுங்கள்’’ என்று கூறினார்.

தொப்பியுடன் கூடிய பிளாஸ்டிக் மழைக் கோட்டுகள் வாங்கப்பட்டன. நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் பேரறிஞர் அண்ணா தலைமையில் விழா. 5,000-க்கும் மேற்பட்ட ரிக் ஷாக் காரர்களுக்கு எம்.ஜி.ஆர். செலவில் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன. அண்ணாவின் அருகே புன்னகையுடன் நின்ற எம்.ஜி.ஆரை ரிக் ஷா ஓட்டுநர் கள் நன்றியுடன் வணங்கினர். நன்றியை செயலிலும் காட்டினர். தங்கள் ரிக் ஷாக் களில் எம்.ஜி.ஆரின் படங்களையும் போஸ்டர்களையும் ஒட்டினர்.

1969-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த ‘அடிமைப் பெண்’ படத்துக்கு அடுத்த படியாக பெரிய வெற்றி பெற்ற படம் ‘நம்நாடு’. இப்படத்தில் தனது அண் ணனாக நடிக்கும் டி.கே.பகவதியின் முதலாளியாக வரும் எஸ்.வி.ரங்கா ராவின் தவறுகளை எம்.ஜி.ஆர். கண் டிப்பார். இதனால், கோபமடைந்து

எம்.ஜி.ஆரை வீட்டை விட்டு வெளி யேறுமாறு டி.கே.பகவதி கூறுவார். எம்.ஜி.ஆரும் வீட்டில் இருந்து வெளி யேறி சேரிப் பகுதியில் தங்கியிருப்பார்.

நடிகைகள் குட்டி பத்மினி யும் தேவியும் டி.கே.பகவதியின் குழந்தைகளாக நடித்திருப்பார்கள். சித்தப்பாவான எம்.ஜி.ஆரைத் தேடி அவர் இருக்கும் வீட்டுக்கு இரு குழந்தைகளும் வந்து விடும். அவர்களிடம், ‘‘எப்படி இங்கே வந்தீர் கள்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்பார்.

‘‘ரிக் ஷாக்காரரிடம் உங்கள் பெயரை சொன்னோம். அவர் இங்கே கொண்டு வந்து விட்டார்’’ என்று குட்டி பத்மினி சொல்வார். எம்.ஜி.ஆர். பெயரை சொன் னாலே ரிக் ஷாக்காரர்களுக்கு அவர் இருக்கும் இடம் தெரியும் என்பதைப் போல இந்த வசனம் அமைந்திருக்கும்.

இதைவிட முக்கியமாக, எம்.ஜி.ஆர். மீது ரிக் ஷாக்காரர்களுக்கு இருக் கும் அளவற்ற அன்பையும் மரியாதை யையும் வெளிப்படுத்துவது போல, குழந்தையாக நடிக்கும் தேவி, எம்.ஜி.ஆரிடம் சொல்வார்....

‘‘காசு கூட வாங்கலே சித்தப்பா’’




எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மழை காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க கூவம் நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப் படுத்தி தூர்வார ஏற்பாடுகள் செய்தார். மழை யால் வெள்ளம் ஏற்பட்டபோது முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைத்தார்.

எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார். நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.

படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.

‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.

பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.

‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.

ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் தரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் தருக்கு பயம் வந்து விட்டது.

‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது? அவரது உடல் நலம் பாதிக்கப்படுவ தோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே?’ என்று தர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் தர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு தரை நெகிழ வைத்தது.

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பெக்டர் ராமு, அப்துல் ரஹ்மான் என இரட்டை வேடங்கள். அப்துல் ரஹ்மானாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான், அவனே அப்துல் ரஹ்மானாம்…’ என்ற கருத்துள்ள பாடல் இடம்பெறும். அந்தப் பாடலில் வரும் வரிகள் இவை…

‘ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்

ஆனாலும் உழைத்தே வாழுங்கள்

வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்

இரண்டும் உலகில் தேவை

ஆடும்போதும் நேர்மை வேண்டும்

என்றோர் கொள்கை தேவை’

படங்கள் உதவி: ஞானம்

‘உரிமைக்குரல்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் வண்டலூர் அருகே நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் படமாக்கப்பட்டன. வில்லனின் ஆட்கள் பயிர்களுக்கு நெருப்பு வைப்பதுபோல காட்சி.

படத்துக்காக பயிர்களுக்கு நெருப்பு வைக்கப் போவதை அறிந்த எம்.ஜி.ஆர்., ‘‘மக்களுக்கு உணவாக பயன்படும் நெற்பயிரை கொளுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். பின்னர், வைக்கோல்களுக்கு தீ வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது.

- தொடரும்...

Thursday, April 14, 2016

கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்

கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்
DINAMALAR

பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 'புளூ பிரின்ட்' அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டாலும், புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றன. இதனால், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த, முதல் பிரிவு மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகினர்.

எனவே, இந்த ஆண்டு கணிதத்துடன் இணைந்த அறிவியல் பிரிவு மாணவர்களை விட, வெறும் அறிவியல் மற்றும் வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, மாநில, 'ரேங்க்' பட்டியலில் முன்னணி பெற வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு, முதல் மூன்று இடங்களை, வணிகவியல் பிரிவு மாணவர்களே பெற்றனர்.அதேபோல், அதிக மதிப்பெண் எடுப்பதிலும், வணிகவியல் பிரிவு மாணவர்கள் சாதிக்க வாய்ப்புஉள்ளது. அதனால், கலை கல்லுாரிகளில் பி.காம்., படிப்புக்கு இடம் கிடைப்பதில் கடும் போட்டி ஏற்படும்.

கூடுதல் இடங்களை தயார்படுத்த வேண்டும்:இதுகுறித்து, பேராசிரியர் சிலர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பி.காம்., 'சீட்'டுக்கு அதிக போட்டி ஏற்பட்டது. ஆனால், கல்லுாரிகளில் இடம் தான் கிடைக்கவில்லை. சென்னை பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை போன்ற பல்கலைகளின் அனுமதி பெற்று, கூடுதலாக, 20 சதவீதம் வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த அனுமதி வர தாமதமானதால், தகுதியான பல மாணவர்கள் அதிக பணம் கொடுத்து, சுயநிதி கல்லுாரிகளில் சேர்ந்தனர். எனவே, இந்த ஆண்டு கல்லுாரி நிர்வாகங்கள்,
முன்கூட்டியே பல்கலைகளின் அனுமதி பெற்று, கூடுதல் இடங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

காரை கழுவினால் அபராதம்: தண்ணீர் பஞ்சத்தால் முடிவு

DINAMALAR
சண்டிகர்:யூனியன் பிரதேசமான சண்டிகரில், கடுமையான கோடை காரணமாக தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுகிறது. தண்ணீரை சேமிக்க, மாநகராட்சி
நிர்வாகம், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வீடுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கும் நேரமான, காலை 5:30 மணியில் இருந்து, 8:30 மணி வரை, நீரை வீணாக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த சமயத்தில், கார்களை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது; மீறுபவர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏப்., 15 முதல், ஜூன் 30ம் தேதி வரை, இந்த தடை அமலில் இருக்கும். தொடர்ந்து தண்ணீரை வீணாக்குவது தெரிந்தால், அவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

DINAMALAR

சிவகங்கை;கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியர்களுக்கு மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணல் நடக்கிறது. பங்கேற்க செல்வோர் ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் இதுவரை ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு சமர்ப்பிக்காதோர், அவற்றின் நகல்களை ஓய்வூதிய கொடுவை ஆணை எண்ணை குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல் நேரில் வர இயலாதோர், ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் எண், வருமான வரி கணக்கு எண், ரேஷன்கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் வாழ்வுரிமைச் சான்றை இணைத்து கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும் என, கருவூல கணக்குத்துறை தெரிவித்துள்ளது.இதில் 70 வயதை கடந்த ஓய்வூதியர்கள் சிலரது கைகளில் ரேகை அழிந்துவிட்டன. மேலும் ஆதார் எண் எடுப்போர் பல ஆண்டுகளாக ஒரே இயந்திரத்தை பயன்படுத்துவதால், தெளிவான கைரேகை இருந்தால் மட்டுமே பதிவாகிறது. இதனால் ஓய்வூதியர்களில் சிலர் ஆதார் அட்டை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

தற்போது ஆதார் அட்டை இல்லாதோரை நேர்காணல் நடத்தாமல் கருவூல கணக்குத்துறை
அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் ஓய்வூதியர்கள் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆதார் எண் கொடுக்காத சிலருக்கு மார்ச் மாத பென்ஷனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தவிக்கின்றனர். கருவூல கணக்குத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஆதார் அட்டை எண் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்,'' என்றார்.

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்

நியூயார்க் : சமூக வலைதளமான பேஸ்புக் தனது மெசஞ்சர் ஆப் வழியாக இலவச பணிப்பரிமாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு பரிமாற்றம் செய்யும் இரு நபர்களிடமும் டெபிட் கார்டு வசதி இருந்தால் போதுமானது. தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஏற்க முடியவில்லை!

ஏற்க முடியவில்லை!
By ஆசிரியர்
First Published : 13 April 2016 01:54 AM IST

எம்பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு (என்.இ.இ.டி.) நடத்துவதற்கு, 2013-இல் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான மூன்று பேர் அமர்வு விதித்திருந்த தடையை இப்போது உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. இந்தப் பிரச்னையை தொடக்கத்திலிருந்து மறுவிசாரணை செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் தவே உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஆணை பிறப்பித்திருக்கிறது.
 அதாவது, மறுவிசாரணை நடந்து தீர்ப்பு வரும்வரை தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொது நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரம் இந்திய மருத்துவக் குழுமத்துக்கு (எம்.சி.ஐ.) கிடையாது என்று ஏற்கெனவே 2013-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை இதன்மூலம் இப்போது உச்சநீதிமன்றம் விலக்கிக்கொண்டுள்ளது.
 மருத்துவத்துக்கான பொது நுழைவுத் தேர்வைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல மாநில முதல்வர்கள் எதிர்த்தனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்நிலையில், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவத்துக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளது. இதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள முதன்மைக் காரணம்: தனியார் கல்லூரிகளில் பெரும் பணத்தை நன்கொடையாகச் செலுத்தி, தகுதியில்லாத மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதால், மருத்துவத் துறை பாதிக்கப்படுகிறது என்பதுதான்.
 நீதிமன்றத்தின் கருத்து உண்மையே. அதேவேளையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடுவதுபோல, ஏழைகளும், கிராமப்புற மாணவர்களும் வாய்ப்புகள் கிடைக்காமல் பின்தள்ளப்படுவார்கள் என்பதும் உண்மை என்பதால், இந்தப் பிரச்னையில் தெளிவான முடிவு எட்டப்படாமல் இருக்கிறது.
 இந்தியாவில் எம்.சி.ஐ. அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் 381 உள்ளன. இவற்றில் 188 தனியார் கல்லூரிகள். இக்கல்லூரிகள் பெரும்பாலும் 50% இடங்களைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்கின்றன. அந்த வகையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் சுமார் 20,000 மாணவர்களைத் தங்கள் விருப்பம்போல சேர்த்துக்கொள்கின்றன. குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
 மேலும் சில கல்லூரிகள், உதாரணமாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி போன்றவை மத்திய தொகுப்புக்கு இடம் தர மறுத்தல் அல்லது குறைவான இடங்களையே ஒதுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதோடு, மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் போக்கும் நடைமுறையில் காணப்பட்டது.
 தமிழகத்தில் உள்ள 39 மருத்துவக் கல்லூரிகளில் 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள். இந்தக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் பெற்று, "கட்-ஆஃப்' 197 வரை பெறும் மாணவர்கள், தனியார் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் சேர்க்கப்படுகிறார்கள் என்றாலும், இந்தக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் மாணவர்களைச் சேர்த்து வருகின்றன. இவை நன்கொடை இல்லாமல் நடப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. நன்கொடை தரும் வசதி படைத்தவர்கள் மருத்துவர்களாகி, மருத்துவமனை நடத்துபவர்களாகவும் மாறும்போது, மருத்துவம் முழுக்க முழுக்க வணிகமாகிவிடுகிறது.
 இருப்பினும், தேசிய மருத்துவக் கல்விக்கான தேசிய பொதுத் தேர்வு நடத்தப்படுமேயானால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது மிகமிக உறுதி. ஏனென்றால், மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேசிய பாடநூல் திட்டத்தின்படியே வினாக்களைத் தொகுப்பார்கள். தற்போது சமச்சீர் கல்வி முறையில், சற்று எளிமைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களால் சரியாக விடை எழுத முடியாது.
 சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும்கூட தமிழகத்திலிருந்து அதிகளவு வெற்றி பெறுவதில்லை. இந்நிலையில், தமிழகத்தில் அரசு மேனிலைப் பள்ளி மற்றும் தனியார் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களால் இந்தப் பொது நுழைவுத் தேர்வில் எந்த அளவுக்கு வெற்றிபெற முடியும் எனத் தெரியவில்லை.
 அதிக மதிப்பெண் பெற்று, "கட்-ஆஃப்' 198 பெற்ற மாணவர்கள் கலந்தாய்வின் மூலம் தமிழ்நாட்டின் அரசுக் கல்லூரிகளில் இடம் பெற்று எம்.பி.பி.எஸ். படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம்பெறுவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவது மிகமிக அரிதாகவே இருக்கும்.
 மருத்துவக் கல்வி பயில கடும் போட்டி நிலவுகிறது. 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் முன்பாக நடத்தப்பட்ட மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் 6.58 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அந்த அளவுக்குப் போட்டி உள்ளது. இந்தப் போட்டியில் தமிழக மாணவர்கள், குறிப்பாக சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் எத்தனைப் பேர் பொது நுழைவுத் தேர்வு எழுதுகிறார்கள், எத்தனை பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் கணக்கிட்டால், தமிழகத்தின் பாடத்திட்டம் செழுமையானதுதானா, மாற்றம் தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க உதவும்.
 மருத்துவம் மட்டுமன்றி பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதத் தகுதி மதிப்பெண் 75% (எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு 65%) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றவர்களை வரிசைப்படுத்துவதில் (ரேங்கிங்) பள்ளித்தேர்வு மதிப்பெண்களுக்காக கொடுக்கப்பட்டுவந்த 40% "வெயிட்டேஜ்' கிடையாது என்றும் அறிவித்துவிட்டார்கள்.
 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் பணம் வாங்கிச் சேர்க்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது மகிழ்ச்சியே என்றாலும், மருத்துவம், பொறியியல் இரண்டிலுமே அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்கள் அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பில்லை என்பதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அலட்சியத்தால் விளைந்த அசம்பாவிதம்!

அலட்சியத்தால் விளைந்த அசம்பாவிதம்!

THE HINDU
பாதுகாப்பு விஷயத்தில் அசட்டையாக இருப்பதிலும், அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குப் பொறுப்பேற்க மறுப்பதிலும் புகழ்பெற்று விளங்குபவர்கள் இந்தியர்கள். அப்படிப்பட்டவர்களையே உலுக்கி எடுத்துவிட்டது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புட்டிங்கல் தேவி கோயிலில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நடந்த வெடிவிபத்து. வாண வேடிக்கை நிகழ்ச்சியின்போது, வானை நோக்கிச் செல்ல வேண்டிய வெடி ஒன்று தரையிலேயே வெடித்துச் சிதறியிருக்கிறது. அதன் தீப்பொறிகள், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் விழுந்ததால் அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. இந்தக் கொடூர விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அலட்சியமும், அடுத்தவர்களின் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையின்மையும்தான் இந்த விபத்துக்கு முக்கியக் காரணங்களாக இருந்திருக்கின்றன. வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்திருந்தும், அதை மீறி வாண வேடிக்கை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாவட்ட நிர்வாகமே அனுமதி மறுத்திருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்த காவல் துறை என்ன செய்துகொண்டிருந்தது என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இரவு 10 மணிக்கு மேல் வெடி வெடிக்கக் கூடாது என்று விதிமுறை இருந்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகாலை 3.30 மணி வரை வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கேரளாவில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், இந்தச் சம்பவத்தை வைத்து ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயலக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக, புட்டிங்கல் கோயில் நிர்வாகத்தினர், வாண வேடிக்கை நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான நீதி விசாரணைக்கும் கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது ஏற்படும் விபத்துகள் தொடர்பாக ஆராய, கேரள மாநிலத்தின் வருவாய்த் துறையும், பேரிடர் மேலாண்மைத் துறையும் இணைந்து ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்திவருகின்றன. இதன் மூலம், விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளையும் உருவாக்கியிருக்கிறது கேரள அரசு. ஆனால், இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் சோகம்.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, தொலைதூரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வது போன்ற விஷயங்களில் ஒருபோதும் சமரசம் கூடாது. கொல்லத்தில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு எடுத்திருக்கும் உடனடி நிவாரண நடவடிக்கைகள், சம்பவ இடத்துக்கு உடனடியாகப் பாதுகாப்புப் படைகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் விரைந்தது போன்றவை இதுபோன்ற அசம்பாவிதங்களின்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கின்றன.

கேரளாவில் திருச்சூர் பூரம் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கும் நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாதவண்ணம் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அம்மாநில அரசுக்கு இருக்கிறது. அண்டை மாநிலத்தில் நடந்திருக்கும் இந்த விபத்து, நமக்கும் ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், அரசியல் நிகழ்ச்சிகள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பு விஷயங்களில் உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டிய பொறுப்பு எல்லா அரசுக்கும் இருக்கிறது. ஏனெனில், மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதவை!

HC criticises litigant for levelling corruption charges without any basis


HC criticises litigant for levelling corruption charges without any basis

SPECIAL CORRESPONDENT

THE HINDU

The Madras High Court Bench here has criticised a litigant for having filed a case accusing the president of A. Kokkulam Panchayat in Thirumangalam Panchayat Union near here of having extended the lease of shopkeepers at Chekkanoorani bus stand near here for extraneous considerations though, in fact, the shops had been leased out only after calling for public tenders.

Dismissing the writ petition filed by K.P.R. Anandhan, who wanted to take one of the shops on lease but did not participate in the tender process, a Division Bench of Justices V. Ramasubramanian and N. Kirubakaran agreed with Senior Counsel R. Venkataraman, appearing for the panchayat, that the petitioner had no legal right to question the allotment of shops without having participated in the tender.

Legal right

“Legal Right means an entitlement arising out of legal rules. Legal right is an advantage or benefit conferred upon a person by the rule of law. The expression ‘Person Aggrieved’ does not include a person, who suffers from psychological or an imaginary injury. A person aggrieved must, therefore, necessarily be one whose right or interest has been adversely affected or jeopardized,” the judgement read.

Stating that the petitioner had initially filed a public interest litigation petition in 2014 seeking a direction to the Panchayat to conduct public auction in accordance with Tamil Nadu Panchayat (Procedure for conducting Public Auction of Lease and Sales in Panchayat) Rules, 2001, the judges said that petition was withdrawn after the court felt that it projected only private interest.

Further, pointing out that the present writ petition was filed within two days after the dismissal of the PIL petition and the petitioner enjoyed interim orders in the present case for long, the Division Bench said: “Though we could have imposed on the petitioner exemplary costs for filing such a frivolous writ petition, yet, taking lenient view, there will be no order as to costs.”

ஆன்லைனில்' பணம் செலுத்த அண்ணா பல்கலை வசதி

ஆன்லைனில்' பணம் செலுத்த அண்ணா பல்கலை வசதி

DINAMALAR 14.4.2016

சென்னை, இன்ஜி., மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, நாளை முதல், 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்; இதற்கான அறிவிக்கையை, இன்று அண்ணா பல்கலை வெளியிடுகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் மூலம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அண்ணா பல்கலை, இன்று வெளியிடுகிறது.இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையின் இணையதளத்தில், https:/www.annauniv.edu/, TNEA 2016 என்ற தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் பணிக்கான, 'லிங்க்' இணைக்கப்படுகிறது. இதில், மாணவர்கள், தங்கள் பெயர், படிப்பு உள்ளிட்ட விவரங்களை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். தற்போது, பிளஸ் 2 தேர்வு முடிவு வராத நிலையிலும், மற்ற விவரங்களை நிரப்பி விடலாம்.
தேர்வு முடிவு வந்ததும், 'ஆன்லைனில் விண்ணப்பங்களை, 'எடிட்' செய்ய முடியும். மதிப்பெண் விவரங்களை, தேர்வுத் துறை மூலம் அண்ணா பல்கலை நேரடியாக பெற்று, மாணவர்களின் மதிப்பெண்களை இணைத்து விடும்.
இந்த விண்ணப்ப பதிவை, தனியார் இணைய மையங்கள், தங்கள் சொந்த கணினி மற்றும் அரசின், இ - சேவை மையங்கள் மூலமும் மேற்கொள்ளலாம். இதேபோல், விண்ணப்ப கட்டணத்தை, டி.டி.,யாகவும் எடுக்கலாம். அதற்கு பதில், 'ஆன்லைனில் நெட் பேங்கிங்' முறையிலும் பணம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
: காணாமல் போன காளை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு உரிமையாளரின் ஆச்சரிய அறிவிப்பு

DAILY THANTHI 14.4.2016

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் 3 வயதான காளை ஒன்றை வளர்த்து வந்தார். கம்பீரமாக காட்சியளித்த அந்த களைக்கு ‘பாட்ஷா’ என பெயரிட்டு அவர் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்.

மேலும் அதன் கழுத்தில் கயிறு எதுவும் கட்டாமல் தனது குடும்ப உறுப்பினர் போல சுதந்திரமாக நடமாட விட்டிருந்தார். இதனால் அதுவும் அந்த பகுதியில் சுதந்திரமாக சுற்றி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் ‘பாட்ஷா’ திடீரென காணாமல் போய்விட்டது. இது மனோஜ் குமாருக்கு கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. எனவே இது குறித்து சார்நாத் போலீசில் புகார் செய்தார்.

அத்தோடு நில்லாமல், தனது செல்ல ‘பாட்ஷா’வை பற்றிய துப்பு கொடுப்போருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என விளம்பரமும் செய்துள்ளார். அதன்படி காளையின் நிறம், அளவு, தோற்றம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வாரணாசி பகுதி முழுவதும் ஒட்டி வைத்துள்ளார்.

மனோஜ் குமாரின் இந்த அறிவிப்பு வாரணாசி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
[07:07, 4/14/2016] +91 98406 53153: ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம்

DINAMANI 14.4.2016

ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
 ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டிய நிர்பந்தத்திலிருந்து பயணிகளை விடுவிக்கும் நோக்கில், அவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை இணைய வழியில் கேட்டு பெறும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது.
 இந்த நிலையில், ரயில் பயணிகளுக்கு உள்ளூர்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கடந்த பிப்ரவரி மாதம், தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
 அதன்படி தற்போது, ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டம், மகாராஷ்டிர மாநிலம், கொங்கண் பகுதியில் உள்ள குதால் மற்றும் சாவந்த்வாடி ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டம் குறித்து ஐஆர்சிடிசியின் நிர்வாக இயக்குநர் கூறியபோது, "சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இந்தத் திட்டத்தில் திறம்படப் பணியாற்றத் தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் விவரங்களைப் பெற, நபார்டு வங்கியுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம்' என்றார்.

ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம்

ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகம்

DINAMANI 14.4.2016

ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
 ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டிய நிர்பந்தத்திலிருந்து பயணிகளை விடுவிக்கும் நோக்கில், அவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை இணைய வழியில் கேட்டு பெறும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது.
 இந்த நிலையில், ரயில் பயணிகளுக்கு உள்ளூர்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கடந்த பிப்ரவரி மாதம், தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
 அதன்படி தற்போது, ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டம், மகாராஷ்டிர மாநிலம், கொங்கண் பகுதியில் உள்ள குதால் மற்றும் சாவந்த்வாடி ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டம் குறித்து ஐஆர்சிடிசியின் நிர்வாக இயக்குநர் கூறியபோது, "சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இந்தத் திட்டத்தில் திறம்படப் பணியாற்றத் தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் விவரங்களைப் பெற, நபார்டு வங்கியுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம்' என்றார்.

அனுமதிக்கக் கூடாது!

அனுமதிக்கக் கூடாது!
By ஆசிரியர்

DINAMANI
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் 344 கூட்டு மருந்து, மாத்திரைகளுக்கு விதித்த தடைக்கு, மருந்து உற்பத்தியாளர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து தடையுத்தரவு பெற்று வருகின்றனர்.கடந்த மார்ச் 10-ஆம் தேதி மத்திய அரசு 344 கூட்டு மருந்துகளுக்கு விதித்தத் தடையை எதிர்த்து மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடுத்த வழக்கில், தில்லி உயர்நீதிமன்றம் அரசின் ஆணைக்கு மார்ச் 14-ஆம் தேதி தடை விதித்தது. அதன்பிறகு, மார்ச் 28-ஆம் தேதிவரை விதிக்கப்பட்ட தடை ஏப்ரல் 4-ஆம் தேதிக்கும், பிறகு 6-ஆம் தேதிக்கும், இப்போது ஏப்ரல் 18-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில் இதுபோன்ற கூட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டவை. அங்கே தடை செய்யப்பட்ட மருந்துகளை, அதே பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்கின்றன. "தேவைதான் இந்தத் தடை' என்கிற 19.03.2016 தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருந்ததுபோல, இந்தியாவில் தேவைப்படாத நோய்க்கும் சேர்த்து மருந்து தரப்படும் நிலை காணப்படுகிறது. நாம் நமது முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துத் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகம் பாதிக்கப்படுபவை, பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள்தான்.
 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும், மருந்து மொத்த விற்பனையாளர்களும் அரசு ஆணையின் மீதான தடையைத் தொடர்ந்து நீட்டித்து வருவதற்குக் காரணம், அவர்கள் தயாரித்து வைத்திருக்கும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் கூட்டு மருந்துகள் அனைத்தையும் விற்றுவிடுவதற்காகத்தான். இந்தத் திடீர் தடையின் மூலம் இந்திய மருந்து வர்த்தகத்திற்கு சுமார் ரூ.3,800 கோடி பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களே வெளியிட்டிருக்கும் அறிக்கை.
 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவிக்கும்படியும், அதனடிப்படையில் ஏப்ரல் 18-ஆம் தேதி விசாரணை நடத்தலாம் என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரணையின்போது உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வழக்குத் தொடுத்திருக்கும் அத்தனை பேருடைய பொதுவான கோரிக்கைகள் எவையெல்லாம் என்பதைப் பட்டியலிடும்படியும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் லாப-நஷ்டங்கள் இந்தப் பிரச்னையில் ஒரு காரணமாகாது என்றும் கூறியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
 தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளும் எந்தவித அறிவுபூர்வமான அடிப்படை இல்லாத கூட்டு மருந்துகள் என்பதால் அவை பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என்கிறது மத்திய சுகாதார ஒழுங்காற்று ஆணையம். மருந்து தயாரிப்பு நிறுவனங்களோ, தடை விதிக்கும்போது முறையான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றன. இதுதான் இந்தப் பிரச்னையின் பின்னணி.
 சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிந்தோ தெரியாமலோ முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், தடை செய்யப்பட்டுள்ள ஜலதோஷத்திற்கான மாத்திரைகள், இருமல் மருந்துகள் உள்ளிட்ட 1600 இலச்சினை மருந்துகளையும் தடை செய்யப்பட்டதன் காரணம் தவறு என்று எந்த மருந்துத் தயாரிப்பாளரும் தங்கள் நியாயத்தை முன்வைத்து விவாதிக்கத் தயாராக இல்லை.
 ஒழுங்காற்று ஆணையத்தின் தடைக்கு அடிப்படைக் காரணம், நிபுணர் குழு அறிக்கையின்படி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பல கூட்டு மருந்துகள் விதவிதமான வியாபாரப் பெயர்களில் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்பதுதான். குறிப்பிட்ட அளவுக் கலவை அல்லது "ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன்' என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறு மருந்துகளை இணைத்து புதிய வியாபாரப் பெயருடன் தயாரிக்கப்படுபவை. உதாரணத்துக்கு, தேவையே இல்லாமல் கக்குவான் இருமல் உள்ள நோயாளிக்கு, நுரையீரலிலிருந்து சளியை அகற்றும் அல்லது ஒவ்வாமைக்கான மருந்தையும் சேர்த்து கூட்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை என்பதுதான் சுகாதார ஒழுங்காற்று ஆணையத்தின் குற்றச்சாட்டு.
 இதுபோன்ற கூட்டு மருந்துகளை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பாக, பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆண்டு தோறும் இந்தியாவில் ரூ.3,800 கோடிக்கு விற்பனை செய்கின்றன. தேவையில்லாத இதுபோன்ற மருந்துகளை இத்தனை காலம் விற்பனை செய்ய முந்தைய அரசுகள் எப்படி அனுமதித்தன என்பது புரியவில்லை.
 அமெரிக்காவில் மருந்து ஒழுங்காற்று ஆணையம், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை போன்றவை உலகின் எந்த நாட்டு மருந்தானாலும் அந்த நாட்டுக்கே போய், தயாரிப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் குறித்து தீர விசாரித்த பிறகுதான் அந்த மருந்துகளை அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. பல இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், நாம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரித்து நம்மவர்களுக்கு விற்பதற்குக் கடையைத் திறந்து வைத்திருக்கிறோம்.
 சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் இந்தியாவின் ஆரோக்கியத்தைச் சந்தைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. நியாயமான வழிகளில், தரமான மருந்துகளைத் தயாரித்து 127 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவில் வியாபாரம் செய்து சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால், நம்மை ஏமாற்றித் தரமில்லாத மருந்துகளை விற்று அவர்கள் லாபமடைவதை அனுமதிக்கக் கூடாது!

Delhi HC admits transgender's plea for name change


Delhi HC admits transgender's plea for name change

New Delhi: The Delhi High Court has decided to examine the plea of a city based transsexual, seeking change of name and gender from male to female in official records.

Justice Manmohan last week issued notice to Union ministry of social justice and empowerment and the Controller of Publications asking for their response to the allegations of the petitioner A (name changed) that her fundamental rights have been violated due to refusal of the authorities to allow her to change name and gender and lead a dignified life.

In her plea filed through advocates Karan Sharma and Rohit Kaliyar, the transsexual informed the court she was diagnosed with gender identity disorder in 2005 and has since been on guided hormone replacement therapy, living as a woman from the time she turned 19.

"Due to duality between petitioner's appeareance, voice, mannerisms, dressing style and her male ID, she has faced discrimination from landlords, potential employers, clients, hotels, airport staff, banks and anywhere she has been required to show ID," the petition says, pointing out this as the primary reason she wants to change name and gender on official records.

But attempts to get name changed proved futile, as per A, because the officials at publications department demanded a certificate stating A had undergone Sexual Reassignment Surgery (SRS). Explaining that current financial condition prevent her from getting the surgery done, the petitioner has pointed out even the Supreme Court clarified that government agencies can't insist on SRS as a pre-condition before allowing change of documents.

Urging HC to order disciplinary enquiry against officials of publications department, A has alleged they discriminated on grounds of sexual identity and caused " immense stress, trauma, humiliation and embarrassment on her visits for the purpose of name change." She has also sought directions to the ministry to constitute a board or committee for certifying A asa transgender so that name and gender change can be published in gazette name change without requirement of any SRS.

A's lawyers further pointed out that even the apex court in National Legal Services Authority vs Union of India had held that each person's self-defined sexual orientation and gender identity is integral to their personality and a person cannot be forced to undergo medical procedures, including SRS or hormonal therapy as a requirement for legal recognition of their gender identity.

Following clearly enunciated principle, the Centre can't refuse her right to change of gender in official records, A added. HC has now posted the case for next hearing on August 16

Internal communications cannot be challenged: HC

Internal communications cannot be challenged: HC

The Hindu

n alleged encroacher of public property cannot challenge an internal communication between two government officials on the issue just because a copy of it had been marked to him too, the Madras High Court Bench here has held. Justices S. Manikumar and C.T. Selvam passed the order while dismissing a writ petition filed by a private school at Guntur village in Tiruverumbur Taluk of Tiruchi district challenging a letter written by a Tahsildar directing a Block Development Officer to act against encroachments.

Stating that the school could approach the court only when the revenue officials initiate action against it under the relevant enactments, the judges said that a communication sent by one official to another could not be challenged by way of a writ petition.

தவளைக்கு விஷம் உண்டா?

தவளைக்கு விஷம் உண்டா?

எஸ். சுஜாதா

THE HINDU

சில சமயங்களில் உருவத்துக்கும் செயலுக்கும் தொடர்பு இருக்காது. அதற்கு நல்ல உதாரணம் தங்க விஷத் தவளை. இரண்டு அங்குலமே உள்ள இந்தத் தவளைதான் உலகிலேயே மிக அதிக விஷம் கொண்ட தவளை. ஒரு முறை விஷத்தைப் பீய்ச்சி அடித்தால் மூன்றே நிமிடங்களில் 10 மனிதர்களைக் கொன்றுவிடக்கூடியது.

10 ஆயிரம் சுண்டெலிகளைக் கொன்றுவிடக் கூடியது. கொலம்பியாவின் மழைக்காடுகளில் காணப்படும் தங்கத் தவளையின் விஷத்தை, பழங்குடி மக்கள் வேட்டைக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தகதகவென்று அடர் மஞ்சள் நிறத்தில் மட்டுமின்றி, ஆரஞ்சு, வெளிர் பச்சை நிறங்களிலும் இவை காணப்படுகின்றன. நான் ஆபத்தானவன் என்று மற்ற விலங்குகளை எச்சரிப்பதற்காகவே இந்தக் கண்கவர் வண்ணங்கள்.

தங்கத் தவளைகள் ஆபத்தான உயிரினங்களே தவிர, கொடூரமான உயிரினங்கள் அல்ல. பொதுவாக விஷம் கொண்ட விலங்குகளும் பூச்சிகளும் பற்கள், கொடுக்குகள் மூலம் விஷத்தைச் செலுத்துகின்றன. ஆனால், தங்கத் தவளை ஆபத்து என்று உணர்ந்தால், தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தோலில் இருந்து விஷத்தைப் பீய்ச்சி விடுகிறது. இந்தத் தவளையை நம் கையில் உறையில்லாமல் வைத்திருந்தால், அடுத்த சில நொடிகளில் மரணம் உறுதி. ‘அல்கலாய்ட்’ என்ற விஷம் தவளையின் தோல் முழுவதும் பரவியிருக்கிறது. இந்த விஷம் நரம்புகளின் செயல்களைத் தடுத்துவிடும். தசைகளைச் சுருக்குகிறது. இறுதியில் இதயத்தைச் செயலிழக்க வைத்துவிடுகிறது.

தங்கத் தவளைகளின் விஷத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட, தென் அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த தவளைகளுக்கு விஷம் இல்லை. காலப் போக்கில் இவை சாப்பிடும் உணவுகளிலிருந்தே விஷத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். விஷத் தாவரங்கள், ஈக்கள், விஷ எறும்புகள், வெட்டுக்கிளிகள், வண்டுகள், கரையான்கள் போன்ற இரைகளின் மூலமே விஷம் தவளைகளுக்கு வந்திருக்க வேண்டும்.

2014-ம் ஆண்டு ஜான் கரோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரால்ப் சபோரிடோ செய்த ஆய்வு சுவாரசியமானது. தங்கத் தவளைகளின் தலைப்பிரட்டைகள், தங்கள் அம்மாக்கள் கொடுக்கும் உணவு மூலமே விஷத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பொரிக்காத முட்டைகளைத் தலைப்பிரட்டைகள் தொடர்ந்து சாப்பிடும்போது விஷம் உடலில் சேர்ந்துவிடுகிறது. எதிரிகளிடமிருந்து முட்டைகளைப் பாதுகாப்பதற்கே தாய்த் தவளைகள் முட்டைகளின் மீது விஷத்தைச் செலுத்தி வைக்கின்றன.

அழிந்துவரக்கூடிய அரிய உயிரினங்களின் பட்டியலில் இந்தத் தங்கத் தவளைகளும் உள்ளன. காடுகளை அழித்தல், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கச் சுரங்கம் அமைத்தல், கோகோ பயிரிடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற பல காரணங்களால் தங்கத் தவளைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தங்கத் தவளைகளின் தோலுக்கு அடியில் விஷச் சுரப்பிகள் இருக்கின்றன. விஷம் தேவைப்படும் மக்கள், தங்கத் தவளைகளை ஒரு மரக்குச்சியால் பிடித்து, நகர விடாமல் செய்வார்கள். தவளையின் உடல் வியர்த்து, விஷம் வெளியேறும்போது, அவற்றைச் சேகரித்துக்கொள்வார்கள். அம்புகளில் விஷத்தைத் தடவி வேட்டைக்குப் பயன்படுத்துவார்கள். ஓராண்டு வரை விஷத்தைச் சேமித்து வைத்திருப்பார்களாம்.

தவளைகளின் விஷத்தை மருந்துகளில் பயன்படுத்த முடியுமா என்ற ஆராய்ச்சியும் நடைபெற்றுவருகிறது. ஆனால், தவளையின் விஷத்துக்கு அந்தத் தன்மை இல்லை என்கிறார்கள். இந்த விஷத்தை நேரடியாக வலி நிவாரணிகளில் பயன்படுத்த முடியாவிட்டாலும் புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு வேறு மருந்துகளுடன் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்திருகிறார்கள்.

பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை !

பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை !
VIKATAN

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே!' -

திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற 'திருடாதே... பாப்பா திருடாதே 'என்ற பாடலில் இடம்பெறும் இந்த பாடலை கேட்கும் யாருக்கும் மனதில் ஒரு ஆழமான தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கும். இப்படி காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை எழுதிய பொதுவுடைமைக் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் இன்று.

குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்டதெல்லாம் சொந்தம் என்ற தீர்க்க தரிசன வரிகளுக்கு சொந்தக்காரர் அவர்.

மகாகவி பாரதியாருக்குப் பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.

பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி,  சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.

தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில் கலந்தார். பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அவரது வரிகள் ஒவ்வொன்றும் காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.        

உதாரணமாக சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீழே பட்டுக்கோட்டையின் வரிகள்:

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!  
(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)
எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு பாடல்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!- இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி,  தமது 29 வயதில் 08.10.1959 ல் பட்டுக்கோட்டையார் இயற்கை எய்தினார்.

ஒரு முறை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரை சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு பட்டுக்கோட்டை, " அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன் பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம்.

தன்னடக்கமாக அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மானுட சமூகத்தின் மீது அவர் கொண்ட நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.

- மாயன்

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய்

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய்

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

* மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.

* கல்லீரலைப் பலப்படுத்தும்.

*இளநரை வராமல் தடுக்கும்.

* புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

* சரும நோய்களைக் குணமாக்கும்.

*மாரடைப்பைத் தடுக்கும்.

*உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

* சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.

* கொழுப்பைப் படியவிடாது.

* தொற்றுநோய்களைப் போக்கும்.

* பீட்டாகரோட்டின் இருப்பதால், பார்வைத்திறன் அதிகரிக்கும்.

* உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும். கவுட் பிரச்னை சரியாகும்.

* மூலநோய் பிரச்னை இருப்போர், வாரம் இருமுறை சாப்பிடலாம்.

* ரத்தத்தைச் சுத்திகரித்து, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றுப்புழுக்களை நீக்கும்.

ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

தினமணி

ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புது தில்லி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போதைய நிலையில் வெளிநாட்டினரும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முகவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் மூலமே தங்களுக்கான ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

புதிய திட்டத்தின்படி வெளிநாட்டினர், தாங்கள் வசிக்கும் நாட்டிலிருந்தே ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கான மாற்றங்களை செய்வதற்கு ஐஆர்சிடிசி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

வெளிநாட்டினர் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் நேரடியாக பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்குரிய வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அது அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பிரபலமாக உள்ள 'மகாராஜா', 'பேலஸ் ஆன் வீல்' உள்ளிட்ட ரயில்களில் ஏராளமான வெளிநாட்டினர் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும், முகவர்கள் மூலமே தங்களது பயணச்சீட்டை முன்பதிவு செய்கின்றனர்.

இந்திய ரயில்வேவின் அங்கமான ஐஆர்சிடிசி நிறுவனம், ரயில் பயணங்களுக்கான பயணச்சீட்டுகளை பதிவு செய்யும் இணையதளத்தை இயக்கி வருகிறது. அந்த இணையதளம் நிமிஷத்துக்கு 15,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

தினமணி

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

விரைவில், ஆண்டு இறுதிக்குள் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4-ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா, தைவான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4-ஜி தொழில்நுட்பமும், 4-ஜி ஸ்மார்ட் போன்களும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதனால் அங்குள்ள செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களால் குறைந்த விலைக்கு கருவிகளை உற்பத்தி செய்ய முடிகிறது.

இதையடுத்து இந்தியாவில் 4-ஜி சேவையை விரிவுபடுத்துவதில் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்களிடம் 4-ஜி  ஸ்மார்ட்போன்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு சந்தையை பிடிக்கும் நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் போன்களின் விலையை குறைத்து வருகின்றன.

இந்த வாரத்தில் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிகாம் சலுகைகள் உள்பட ரூ.3,999க்கு 4-ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8 ஆயிரத்துக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்

பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணங்கள்

மாலைமலர்

பதிவு: ஏப்ரல் 13, 2016 13:03

ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.

பெண்கள் சில சமயங்களில் ஆண்களை பற்றி தவறாகவும் நினைப்பதுண்டு. ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.

* நண்பர்களுடன் வெளியே சென்றால் ஆண்கள் மதுவருந்த தான் செல்கிறார்கள் என்ற எண்ணம். ஆண்கள் எப்போதும் பெண்கள் முன்பு எளிதாக புலம்பவோ, கலங்கவோ மாட்டார்கள், நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.

* எதையாவது பற்றி ஆண்கள் ஆழ்ந்து சிந்தனை செய்தால், தட்டிக்கழிக்க முயற்சி செய்கிறார்கள் என்று கருதுவது. ஆண்கள் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய முற்படுவதில்லை என்பதை பெண்கள் பெருமளவில் புரிந்துக் கொள்ள மாட்டார்கள்.

* ஷாப்பிங் செல்ல அழைத்து ஆண்கள் வர மறுத்தால், தங்கள் மீது அன்பு குறைந்துவிட்டது, நாட்டம் இல்லை என்று எண்ணுவது. காலை முதல் மாலை வரை கணினி முன்பு உட்கார்ந்து அலுத்து போய் வருபவனை மாலை வெளியே அழைத்தால் அவன் வர மறுப்பது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதால் தான். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சில சமயங்களில் பெண்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்

* அலுவலகத்தில் இருந்து நேர தாமதமாக வந்தால், நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் பெண்களின் மனதில் சந்தேகம் எழுகிறது. டார்கெட், டேட்லைன் போன்றவை பற்றி பெண்களுக்கு பெரிதாய் தெரிவதில்லை என்பதால் தான் இந்த எண்ணங்கள் எழுகின்றன.

* வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம் ஆண்கள் தப்புத்தண்டா செய்வார்களோ என்ற எண்ணம் சில பெண்களுக்கு எழுவது இயல்பு. சில ஆண்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக மொத்தமாக எல்லா ஆண்களையும் குறை சொல்ல கூடாது.

- எப்போதும் சந்தேக கண்ணுடன் பெண்கள் ஆண்களை பார்ப்பதால் தான் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் சொல்லாமல் மறைக்கிறார்கள். மேலும் பொய் சொல்லவும் செய்கிறார்கள். இதனால் தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

படித்தேன் உங்களிடம் பகிர்கிறேன்

படித்தேன் உங்களிடம் பகிர்கிறேன்

நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்..
விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்.. நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..
எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு எல்லையில் பாதுகாப்பு பணி ...
ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.. அப்பொழுது ஒரு அறிவிப்பு.. மதிய உணவு தயார்..
சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க...பின்னால் ராணுவ வீரர்களின் பேச்சை கேட்டேன்..
நீ சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி..அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவு..
ஆமாம்..உண்மை..
இதை கேட்ட பொழுது.... மனம் வலித்தது..
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்..
அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்..
நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்.. இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்..
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..
சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து , என் கைகளை பிடித்து குலுக்கி, நான் முன்பு ஏர் போர்ஸ் பைலட்டாக இருந்தேன்..ஒரு நாள் எனக்கும் ஒருவர் உணவு வாங்கி கொடுத்தார். இது ஒரு கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது..என்று சொல்லி சென்றார்.
ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..
முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..
விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...
இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..
காரில் ஏறி அமர்ந்தேன்.. ஒரு ஆத்ம திருப்தி..
இவர்கள் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு.. உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...இதை புரியாத ஒரு பெரும் கூட்டம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடி, கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம், இந்த இராணுவ வீரர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை தாக்கியது...படித்ததில் மனம் வலித்தது- Velan

ஆங்கிலம் அறிவோமே - 105: அன்புள்ள ரூபாய்!

ஆங்கிலம் அறிவோமே - 105: அன்புள்ள ரூபாய்!

ஜி.எஸ்.எஸ்

கேக்கின் ஒரு சிறு பகுதி வேண்டுமென்றால் Piece of cake என்கிறோம். வெண்ணெய் அல்லது பாலாடைக் கட்டியில் ஒரு சிறு பகுதியைக் குறிக்க a piece of cheese எனலாமா?

கூடாது. ஆங்கிலத்தில் அததற்கென்று சில வார்த்தைகள் உண்டு. அவற்றை அறிந்துகொண்டு பயன்படுத்துவதே சாலச் சிறந்தது என்பது என் piece of advice.

# A sliver of cheese

# A serving of meat

# A bar of soap

# A tube of tooth paste

# A container of shampoo

# A bottle of perfume

# A glass of water

# A bowl of rice

# A can of soup

# A dash of salt

# A sheet of cardboard

# A lump of clay

Rhythm என்ற வார்த்தையின் சிறப்பு என்ன? இது ஒரு வாசகரின் கேள்வி. “இது கூடவா தெரியாது?’’ என்றபடி சீரின் சிறப்பையும் தாளத்தின் மாண்பையும் பக்கம் பக்கமாக எடுத்து ரைக்க கவிஞர்களும் இசை ஆர்வலர்களும் தயாராகக் கூடும். ஆனால், இந்தப் பகுதிக்கான கேள்வி என்று பார்க்கும்போது Vowels எதுவுமே இல்லாத வார்த்தை அது என்பதே பதிலாக இருக்க வாய்ப்பு உண்டு. குறைந்தது நான்கு எழுத்துகள் கொண்ட, vowels இல்லாத ஆங்கில வார்த்தை எதுவும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. உங்களுக்கு வருகிறதா?

Facetious, subcontinenta# இந்த இரண்டு வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் a,e,i,o,u ஆகிய ஐந்து vowels-ம் உள்ளன. என்றாலும் வேறொரு விதத்தில் இவை நேரெதிரானவை. எப்படி என்பதை யோசியுங்களேன்.

Asian, Asiatic ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருள் கொண்டவையா என்பது ஒரு வாசகரின் கேள்வி. ஆசியாவைச் சேர்ந்தவர் அல்லது ஆசிய ஆகிய இரண்டு அர்த்தங்களிலும் இரண்டு வார்த்தைகளுமே மாறி மாறிப் பயன்படுத்தப்படுகின்றன. என்றாலும் Asiatic என்பது கொஞ்சம் தரக்குறைவான பயன்பாடு என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

தவிர இந்தியா அல்லது இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வேறு நாட்டில் வசிக்கும்போது அவரை Asian என்று குறிப்பிடும் பழக்கமும் அதிகமாகிவருவதை பிரிட்டிஷ் நாளிதழ்களில் காண முடிகிறது. The Asian Community of London. The Asians of South Africa.

Indispensable என்ற வார்த்தைக் கும், dispensary என்ற வார்த்தைக்கும் என்ன தொடர்பு என்பதை அறிய விரும்புகிறார் ஒரு வாசகர்.

Dispense என்றால் பலருக்கும் ஒன்றைப் பகிர்ந்து அளிப்பது என்று அர்த்தம். The soldiers went round dispensing rifles.

மருந்துகள் அளிக்கப்படும் அறையை dispensary என்கிறார்கள். The doctor went to dispensary from the out-patient ward. This Medica# Centre is equipped with a dispensary having al# main medicines.

Dispense என்பதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. குறிப்பிட்ட ஒன்று இல்லாமலேயே செயல்படுவது அல்லது ஒன்றை விட்டுவிடுவது. Let us dispense with the formalities. இந்த அர்த்தத்தின் அடிப்படையில்தான் indispensable என்ற வார்த்தை உருவாகியிருக்கிறது. I am indispensable in this office என்றால் நான் இந்த அலுவலகத்தில் தவிர்க்க முடியாதவன் (அதாவது நான் இல்லாமல் இந்த அலுவலகம் இல்லை) என்று அர்த்தம். Water and air are indispensable for life.

இந்தப் பகுதியில் முன்பு குறிப்பிட்ட இரு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு இதுதான். Facetious என்ற வார்த்தையில் ஐந்து vowels-ம் (a,e,i,o,u என்று) ஏறு வரிசையில் உள்ளன. Subcontinenta# என்ற வார்த்தையில் (u,o,i,e,a என்று) இறங்கு வரிசையில் உள்ளன.

# Rupee is dearer என்றால் என்ன அர்த்தம்?

Dear என்பது அன்பைக் குறிக்க மட்டுமல்ல. அதிக விலை மதிப்பு கொண்டது என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.

# பசுத்தோல் போர்த்திய புலி என்ப தற்குச் சமமான ஆங்கிலப் பழமொழி உண்டா?

A wolf in lamb’s clothing.

# Megalopolis என்றால் என்ன?

மிகுந்த மக்கள்தொகை கொண்ட ஒரு நகரம் தொடர்ந்து வளர்ச்சி யடைந்து, விரிவடைவது. (இதன் காரண மாகப் புறநகர்க ளெல்லாம் நகரின் பகுதிகளாகிவிட வாய்ப்பு உண்டு).

நீங்க எப்படி மனம் ஒத்த தம்பதியாக இருக்கீங்க?

எங்களிடையே peace இருப்பதற்குக் காரணம் நாங்க ஒருத்தருக்கொருத்தர் piece of advice-னு எதையும் கொடுத்துக்காததுதான்

Straight என்றால் உங்களுக்குத் தெரியும். Draw a straight line என்றால் ஒரு நேர்கோட்டினை வரைவீர்கள். He is a straight forward person என்றால் நேர்மையான மனிதர்.

Strait என்றால்? தமிழ்நாட்டையும், இலங்கை வட மாகாணத்தில் இருக்கும் மன்னார் பகுதியையும் இணைக்கும் பாலம் என்று Palk ஜலசந்தியைக் குறிப்பிடுவார்கள். ஆக, strait என்றால் ஜலசந்தி என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டது. Strait என்பது இரு கடல்களையோ இரு பிரம்மாண்டமான நீர்ப்பரப்பையோ இணைக்கும் குறுகலான பகுதி.

Strait என்பதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. சங்கடமான அல்லது கடினமான ஒரு சூழலைக் குறிக்கவும் strait என்ற வார்த்தை பயன்படுகிறது. Recession left him in severe financia# straits. பிரெஞ்ச் மொழியில் estreit என்றால் குறுகலான, டைட்டான என்று அர்த்தம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

எம்ஜிஆர் 100 | 42 - ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R.மீது மக்கள் அன்பை பொழிந்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைத்ததற்கு வெறும் சினிமாக் கவர்ச்சி மட்டுமே காரணமல்ல; அதையும் தாண்டிய அவரது மனிதநேய செயல்பாடுகள்தான் காரணம். இதற்கு ஏராளமான ஆதாரங்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பரிசு’ படம் 1963-ம் ஆண்டு வெளியாகி 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாக நடிகை சாவித்திரி நடித்திருந்தார். படத்தின் கதையை எழுதிய கே.பி. கொட்டாரக்கரா, படத்தின் இயக்குநர் டி.யோகானந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ‘பரிசு’ படத்தின் சில காட் சிகள் தேக்கடியில் படமாக்கப்பட்டன.

தேக்கடியில் நடந்த படப்பிடிப்பின் போது ஒருநாள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வேகமாக வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார். அவரது இரு பெண் குழந்தைகளும் பரிதாபமாக அருகே நின்றன. அவரை எழுந்திருக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., ‘‘என்ன விஷயம்?” என்று விசாரித்தார்.

அந்தப் பெண்ணின் பெயர் தேவகி. ‘‘என் கணவருக்கு குடிப் பழக்கம் உண்டு. வனத்துறையில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சரியாக போவதில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு சென்ற என் கணவர் காட்டு யானை தாக்கி இறந்துவிட்டார். அரசு நிர்வாகம் நஷ்ட ஈடோ, கருணைத் தொகையோ தரவில்லை. எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆரிடம் அழுதவாறே முறையிட்டார் தேவகி.

அதோடு, ‘‘இரண்டு பெண் குழந்தை களை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் என் குடிசைக்கு இரவு நேரங் களில் சிலர் தவறான நோக்கத்தோடு வந்து வாசலில் நின்று கலாட்டா செய் கிறார்கள்’’ என்று சொல்லிக் கதறினார். எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கிவிட்டன.

தேவகியிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அழா தேம்மா. உன் கணவர் பணியாற்றிய வனத்துறையில் உனக்குத் தெரிந்த அதிகாரி யாராவது இருந்தால் நான் கூப்பிடுவதாக சொல்லி நாளை அழைத்து வா. உன் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து உனக்குத் தெரிந்த டீச்சரையும் கூட்டிக் கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.

அதேபோல, வனத்துறை அதிகாரி ஒருவரையும் தன் பிள்ளைகள் படிக் கும் பள்ளியில் இருந்து டீச்சர் ஒரு வரையும் மறுநாள் படப்பிடிப்பு நடக் கும் இடத்துக்கு தேவகி அழைத்து வந் தார். அவரது அதிர்ஷ்டமோ என் னவோ, அந்த வனத்துறை அதிகாரி எம்.ஜி.ஆரின் ரசிகர். எம்.ஜி.ஆரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் இருந்து மீளவே அவருக்கு வெகுநேரம் பிடித் தது. அவரிடம் எம்.ஜி.ஆர். விசாரித்தார்.

‘‘பலமுறை எச்சரித்தும் குடிப் பழக்கத்தால் தேவகியின் கணவர் சரியாக பணிக்கு வருவதில்லை. அவரது சாவுக்குக் கூட குடிதான் காரணம். தெளிவாக இருந்திருந்தால் யானையிடம் இருந்து தப்பித்து இருக்கலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் வனத்துறை அதிகாரி கூறினார்.

அவரிடம் எம்.ஜி.ஆர்., ‘‘அது இருக்கட்டும். இப்போது இவர்கள் நிலை ரொம்ப பரிதாபமாக உள்ளது. உங்கள் அலுவலக விதிமுறைகள்படி இவர்களுக்கு அதிகபட்சமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்ய நடவடிக்கை எடுங்கள். இது சம்பந்த மாக உயர் அதிகாரிகள் யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் நானே பேசுகிறேன்’’ என்றார்.

அந்த அதிகாரியும், ‘‘நீங்கள் இவ் வளவு தூரம் சொல்லும்போது நான் முடிந்தவரை உதவுகிறேன்’’ என்றார்.

மேலும், ‘‘இப்போது குடிசையில் இருக்கும் இவர்கள் கவுரவமாக தங்கும் வகையில் வாடகைக்கு சிறிய வீட்டை இவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?’’ என்றும் வனத்துறை அதிகாரியிடம் கேட்ட எம்.ஜி.ஆர்., அதோடு நிற்கவில்லை. ‘‘தேவகிக்கு ஏதாவது வேலை வாங்கித் தர முடியுமா?’ என்றும் கேட்டார்.

எம்.ஜி.ஆரே கேட்கும்போது அதுவும் அவரது ரசிகரான அதிகாரி மறுப்பாரா? இரண்டுக்கும் ஒப்புக் கொண்டார். வீடு ஏற்பாடு செய்து தருவதுடன் தனக் குத் தெரிந்த ஒரு வீட்டில் தேவகியை வீட்டு வேலை செய்ய சேர்த்து விடுவதாகவும் கூறினார்.

தேவகியைப் பார்த்து, ‘‘என்னம்மா? வீட்டு வேலை செய்ய உனக்கு சம் மதமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தேவகியும் சம்மதித்தார்.

பின்னர், அவரது பிள்ளைகள் படிக் கும் பள்ளியின் டீச்சரை அழைத்து, எஸ்.எஸ்.எல்.சி. வரை இரண்டு பிள்ளை களும் படிப்பதற்கான செலவுகளை எம்.ஜி.ஆர். விசாரித்தார். தயாரிப்பாளர் கொட்டாரக்கராவிடம் தனியாகப் பேசி கணிசமான ஒரு தொகையை வாங்கினார். அதை தனது சம்பளத்தில் கழித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, அந்தத் தொகையை அப்படியே தேவகியிடம் எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

ஒருவாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அந்த வனத்துறை அதிகாரி வந்தார். உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும் அரசு மூலம் தேவகிக்கு நஷ்ட ஈடாக ரூ.27 ஆயிரம் கிடைக்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணம் கிடைத்துவிடும் எனவும் கூறினார். இதைக் கேட்டு எம்.ஜி.ஆர். மிகவும் மகிழ்ச்சி அடைந் தார். 1963-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரம் என்பது பெரிய தொகை.

இப்போதும் எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து அழுதார் தேவகி. இந்த முறை அவரது கண்களில் இருந்து வந்தது, நன்றிப் பெருக்கால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர்!

- தொடரும்...

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.

Wednesday, April 13, 2016

Entrance test to fill PG medical seats in November


The Health Ministry will hold the National Eligibility-cum-Entrance Test (NEET) for postgraduate medical admissions in November this year.

The ministry is also considering postponing entrance exams for undergraduate courses — the All India Pre-Medical Test — scheduled for May 1, by two months. The move comes a day after the Supreme Court approved a pan-Indian, common medical entrance exam.

The modalities are being worked out for entrance exams for undergraduate courses.

Reacting to the decision, sources in the Health Department in Tamil Nadu, a State that has opposed NEET, said they would have to approach the court again.

Nursing college regains recognition from council

TOI
Jaipur: After 14 years, Sawai Man Singh (SMS) nursing college regained recognition of Indian Nursing Council (INC). Similarly, after a long gap of 53 years, the number of seats in the nursing college has increased from 60 to 100 for general nurse midwifery (GNM) course in the college.

It has come as a big relief for students studying the college as they will get a chance to work in hospitals across the world. Soon after the declaration, the nursing college erupted in joy and witnessed celebrations from students and faculty members.

"Since the nursing college was not recognised earlier, the students who passed out from the college, were not getting jobs in hospitals outside the state. But now, as the INC has granted recognition to the college, they will be able to work outside the state anywhere in the world," Jogendra Sharma, principal, SMS nursing college, said.

The college was established some 53 years ago. Earlier, it had the recognition by INC but 14 years ago, the INC withdrew it due to certain reasons related to college for reportedly not fulfilling norms of INC.

Over the past few years, the college had witnessed sporadic protests of the students demanding recognition from the INC as it was affecting their career.

Sharma said that as the INC granted recognition, not only it will help the students in getting jobs but also help generate more seats. "At present, there are only 60 seats for general nurse midwifery (GNM). Now, after recognition, it has increased to 100 seats. This will also help the Sawai Man Singh hospital which is facing shortage of nursing staff," Sharma said.

Recently, the health department spent over Rs 25 lakh in the nursing college to improve the facility and to ensure that the norms of INC are fulfilled for granting the recognition. Not only GNM course was recognised but the INC also recognised BSc nursing course in the college.

NEET practically not possible this year: Health Ministry

PTI

New Delhi, Apr 12 (PTI) A day after the Supreme Court recalled its order scrapping NEET for admission to MBBS, BDS and PG courses, the Union Health Ministry today said that it is "practically" not possible to conduct the examinations this year.

Supreme Court had yesterday recalled its controversial judgement scrapping single common entrance test (NEET) for admission to MBBS, BDS and PG courses in all medical colleges, saying it was delivered by a majority verdict without any discussion among members of the bench headed by the then Chief Justice of India Altamas Kabir on the day of his retirement.

"This year it is practically not possible to do it as the examinations have already been set in motion from way back in December. One or two exams have already been held.

"In other places last dates have gone by. Our own all India PMT which is held every year in May is probably in the first week of May. So practically it is not possible to do it this year," Union Health Ministry sources told PTI.

A five-judge Constitution Bench headed by Justice AR Dave was unanimous that the July 18, 2013, 2:1 verdict of the three -judge bench, which had paved the way for private colleges to conduct their own examination, "needs reconsideration" as "the majority view has not taken into consideration some binding precedents".

Sources said that as far conducting the examinations next year is concerned, it will be depend on what the Supreme Court says as it has not given a final verdict.

"However while this thing is going on in the SC, the government is also contemplating amendment of MCI Act to provide for a common exam in the act itself.

"That process is also on. If there is nothing in the next six months, either through SC mandate or amendment of the act, we should be able to put it (examinations) in place," sources said.

Asked about the way forward, sources said that as of now, nothing happens and examinations will continue the way they are. "Infact all exams will be completed by end of May as the admissions have to be closed by September," they said.

The Health Ministry sources had yesterday said that the NEET regulations are restored and MCI can conduct the examinations pending the fresh directions

Govt probing how cost of secretariat doubled in 4 years

Govt probing how cost of secretariat doubled in 4 years Koride.Mahesh@timesofindia.com 19.10.2024 Hyderabad : With allegations of abnormal i...