Sunday, September 11, 2016

நன்றி குங்குமம் டாக்டர்

மது... மயக்கம் என்ன? டாக்டர் ஷாம்




எளிதாகக் கிடைப்பதே எல்லோரையும் குடிக்கத் தூண்டுகிறது!


தற்கொலை செய்து கொள்ள தைரியம் அற்றவர்கள் மரணமடைய தேர்ந்தெடுக்கும் எளிய வழி மது அடிமையாக மாறுவதே! எப்படித் தொடங்குகிறார்கள்? இன்றைய குடிமக்களில் பலர் வேடிக்கையாகக் குடிக்கத் தொடங்கியவர்களே. இந்தத் தொடக்கத்துக்கு முதல் முக்கியமான காரணம் என்ன? எளிதாகக் கிடைப்பதே பலரையும் குடிக்கத் தூண்டுகிறது. உலக அளவில் செய்யப்பட்ட பல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெளிவாகத் தெரிய வரும் உண்மை இது. ஆம்... தமிழ்நாட்டில் வசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளாமலே இந்த உண்மை பளிச்சென விளங்கும். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் இருப்பதாலேயே, குடிக்கிற பழக்கத்துக்கு ஆட்படுகிற ஏராளமானோரை நாள்தோறும் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம். 


குடிநோயாளி ஆவதற்கு முன்போ, குடிப்பழக்கம் இல்லாத வரையோ, யாரும் குடிப்பதற்காக ஏழு கடல் ஏழு மலை தாண்டுவது போன்ற பிரயத்தனங்கள் எதையும் செய்வதில்லை. அந்தப் பழக்கம் ‘விடாது கருப்பு’ போலத் தொற்றிய பின்புதான், அவர்கள் குடிக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்கத் துணிவார்கள். பூட்டிய கடையை திறக்க வைப்பார்கள்... அண்டை மாநிலத்துக்குப் படை எடுப்பார்கள்... ‘அந்தச் சரக்கு இல்லாவிட்டாலும், எந்தச் சரக்காவது ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று இறைஞ்சுவார்கள்... பணம் இல்லையெனில் அதற்காக எதையேனும் விற்கவும், அடமானம் வைக்கவும் அல்லது கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். குழந்தையின் உண்டியல் சேமிப்பை எடுத்து வருவது கூட குடியின் பொருட்டு அவர்களுக்குத் தவறாகாது. இதற்கு அடுத்த செயல்தான் மதுவுக்காக மானம் கருதாது கை ஏந்துவது.

இதற்கு வலு சேர்க்கும்  சமூக அரசியல் காரணங்களும் உண்டு. தேவைக்கேற்ப சப்ளை என்கிற வணிக இயல்பு மாற்றப்பட்டு, சப்ளைக்கேற்ப குடிப்பவர்களை அதிகப்படுத்தும் பணியாகி விட்டது இங்கு. இதுவும் ஒருவித தேவைதான். குடிக்கிறவர்களுக்கான  தேவை அல்ல... குடிக்க வைக்கிறவர்களுக்கான தேவை. வணிக, அரசியல் ரீதியான தேவை. ஆனால், இதற்குப் பலியாகிறவர்கள் யார்? எளிதாகக் கிடைப்பது என்கிற விஷயத்தைத் தாண்டி, ஒருவரை மதுவின் பால் ஈர்ப்பது எது? நண்பர்கள், உறவினர்களின் தூண்டு தல். சில நேரம் வீட்டில் மற்றவர்கள் குடிப்பதைப் பார்க்கும் சிறுவர்கள் கூட, மறைமுகமாக மதுவின் பக்கம் 
தூண்டப்படுவது உண்டு. இதுவும் சமீபகாலமாக அதிகமாகி இருக்கிறது. இப்போதெல்லாம் டீன் ஏஜ் காலகட்டத்தில் சோதனை முயற்சியாக மது அருந்தி பார்ப்போரில் பாதிக்கும் அதிகமானோர் தொடர்ந்து குடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதனால்தான் அபாயத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

அடுத்த காரணி?

டீன் ஏஜில் மதுவைத் தொடாமல் தாண்டி வந்தவர்கள் கூட, பின்னாளில் அதற்கு அடிமையாவதும் உண்டு. நடுத்தர வயதில் ஏற்படும் மன அழுத்தம் இதற்கு ஒரு காரணம். குடும்பக் குழப்பம், வேலையில் கஷ்டம், பொருளாதாரச் சிக்கல் போன்றவை காரணமாக, தங்கள் கவலையை மறக்கடிக்கலாம் என்று எண்ணி மதுவுக்குள் வருகிறார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் கூடுதல் கஷ்டமாக மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். ஒருகட்டத்தில் உடல் மற்றும் மனம் இரண்டுமே அவர்களை குடிக்க வைப்பதாகி விடுகிறது. குடித்தே தீர வேண்டும் என்கிற நிலைக்குள் வந்து விழுகிறார்கள். குடிக்க இயலாமல் போனாலோ, உடல்நலம் குன்றியதாக உணர்கிறார்கள். மது அருந்தினாலோ, தற்காலிகமாக அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் மீண்டதாக எண்ணுவார்கள். போதை ஓரளவு தெளிந்ததும் மீண்டும் பிரச்னைகள்... மீண்டும் குடி... எங்கே போகும் இந்தப் பாதை? மருத்துவரும் அறிய மாட்டார்!

உடல்நிலை மோசமாகும் வரையோ, பணம் இல்லாத நிலை வரும் வரையோ, மது அருந்துவோர் யாரிடமும் உதவி வேண்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை மதுவே சர்வரோக நிவாரணி! உடல்நலமற்ற பொழுதில் மருத்துவரைச் சந்திக்கையிலும், அவர்கள் மது அருந்தும் விஷயத்தையும், மதுவினால்தான் உடல்நலம் குன்றிய உண்மையையும் வெளிப்படுத்துவதில்லை. மருத்துவரே அறிந்தால்தான் உண்டு. இதனால், அவர்களுக்கு முறையான சிகிச்சையும் கிட்டாமல் போகிறது. பிரச்னையும் நீண்டு கொண்டே செல்கிறது. இனி எந்தப் பிரச்னைக்காக நோயாளி வந்தாலும், அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதா என மருத்துவர்களே ஆய்ந்து அறியும் நிலைமை இப்போது உருவாகிவிட்டது.

அறிவது எப்படி?

நம் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் அல்லது நண்பருக்கு தீவிரமான குடிப்பழக்கம் இருப்பதை நாம் அறியாமலே கூட இருக்கலாம். இருப்பினும் சிலபல அறிகுறிகளைக் கொண்டு, நாம் அதன் தீவிரத்தை அறிந்து உதவ முடியும். உதாரணமாக... 

குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் உறவுச் சிக்கல்கள்

அடிக்கடி அல்லது தொடர்ச்சியான உடல்நலப் பிரச்னைகள் 

கை கால் நடுக்கம், வாய் குழறுதல், காலையில் கூட ஆல்கஹால் வாசனை

சோர்வு, பதற்றம் உள்பட பலவித மனவியல் சிக்கல்கள்

அலுவலகம் அல்லது தொழிலில் ஈடுபாடின்மை... அளவுக்கு மீறிய விடுப்புகள்

வயிற்றுக்கோளாறுகள் (சில நேரங்களில் ரத்த வாந்தி)

தூக்கம் இன்மை

பாலியல் சார்ந்த பிரச்னைகள்

விபத்துகளில் சிக்குதல் அல்லது காரணம் அறியாமலே காயம் அடைதல். 

இதுபோன்ற அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ ஒருவரிடம் அடிக்கடி உணர முடிந்தால், அவர் மது அடிமை ஆகிக்கொண்டிருக்கிறார் என்றே பொருள். 
அப்படியானால், அவர் சமீபகாலமாகத்தான் மதுவின் பிடிக்குள் அகப்பட்டிருக்கிறாரா? அவர் குடிப்பது உங்களுக்கோ, குடும்பத்துக்கோ கவலைக்கு உரிய செயலாகத் தோன்றுகிறதா? இரவில் மட்டுமல்லாது காலையிலும் குடிக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அறியுங்கள். விடைகள் இல்லை என்று தெரிந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ‘ஆம்’ என்று நீங்கள் சொல்வீர்களானால், உங்கள் உதவியே அவருக்கு உடனே தேவை. அவரை மீட்க முடியுமா?
ஆம்... உங்களால் முடியும்! 
ரயில் பெட்டியை தாழிட்டு இளம்பெண்ணிடம் பலாத்காரம்: ரயில்வே ஊழியர் அதிரடி கைது


திருச்சி: திருச்சி ஜங்ஷன் எடமலைப்பட்டிபுதூர் யார்டில் ரயில்வே பெட்டிகளை பராமரிப்பு பணி நடப்பது வழக்கம். இங்கு புதுக்கோட்ைட ஆலங்குடியை சேர்ந்த மரியச்செல்வம் (40) என்பவர் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் ஊழியராக கடந்த 10 ஆண்டாக பணியில் உள்ளார். 3 மாதங்களுக்கு முன் துப்புரவு பணிக்காக 23 வயது இளம்பெண் புதிதாக பணியில் சேர்ந்தார். இவருக்கு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது. கடந்த 5ம் தேதி ரயில் பெட்டிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அந்த பெட்டியில் ஏறிய மரியசெல்வம், ரயில் பெட்டியின் கதவை தாழிட்டு, அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கத்தி கூச்சல் போட்ட இளம்பெண், மரியசெல்வத்திடமிருந்து தப்பி ரயில் பெட்டி கதவை திறந்து வெளியே ஓடிவந்தார். யார்டில் பணியில் இருந்த சூப்பர்வைசரிடம் புகார் அளித்தார். பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இளம்பெண்ணின் புகாரை பெற்றும் சூப்பர்வைசர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று திருச்சி ஜங்ஷன் வந்து ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

இதையடுத்து அத்துமீறி கதவை தாழிட்டல்(342), அடித்து காயப்படுத்துதல்(322) மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிந்தனர். தலைமறைவாக இருந்த மரியசெல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ரயில் பெட்டியில் சகபெண் ஊழியரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் ரயில்வே ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

20,000 கிமீ நீளத்துக்கு உலகின் மிக நீளமான புல்லட் ரயில் பாதை : சீனா நிறைவு செய்தது


பீஜிங்: 20 ஆயிரம் கிமீ நீளத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைத்து, உலகின் மிக நீளமான புல்லட் ரயில் நெட்வொர்க்கை சீனா நிறைவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் சீனா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனாவின் மத்திய ஹெனான் மாநிலத்தில் உள்ள ஜெங்சோ என்ற இடத்தில் இருந்து கிழக்கு ஜியாங்சூ மாநிலம் சூஜோ என்ற இடம் வரையில் 362 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் போக்குவரத்தை சீனா நேற்று தொடங்கியது. இதன் மூலம் சீனாவின் புல்லட் ரயில் பாதைகளின் மொத்த தூரம் 20,000 கிமீ தூரத்தை தாண்டிவிட்டது. இவ்வளவு தூரத்துக்கு உலகில் வேறு எங்கும் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படவில்லை.

இதன் மூலம் ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையோன பயண நேரம் 11 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இந்த இரு நகரங்களுக்கு இடையேயுள்ள உள்ள 9 ரயில் நிலையங்களை மணிக்கு 300 கிமீ வேகத்தில் புல்லட் ரயில் கடக்கிறது. இந்த புல்லட் ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

கடந்த ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் நடந்தது. சீனாவில் தற்போது 20 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பானுடன் சீனா போட்டி போட்டு வருகிறது. இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் பாதை ஒப்பந்தத்தை ஜப்பான் பெற்றுள்ள நிலையில், சென்னை-டெல்லி இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கும் ஆய்வு பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
தாம்பத்ய உறவுக்கு மறுத்த பெண்ணுக்கு மருத்துவ சோதனை

மும்பை: மும்பையை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2010 டிசம்பரில் திருமணம் நடந்தது. அப்போது கணவனுக்கு வயது 38. மனைவிக்கு 33. இருவருக்குமே இது 2வது திருமணம். திருமணத்திற்கு பின் தாம்பத்ய உறவுக்கு மனைவி தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால் 2011ல் விவாகரத்து கேட்டு கணவன் குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘மனைவி குடும்பம் நடத்த தகுதி இல்லாதவர். எனவே விவகாரத்து வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த பெண்ணை சோதிக்கும்படி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அவர் தாம்பத்திய உறவுக்கு தகுதியானவர் தானா அல்லது குறைபாடு உடையவரா என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மும்பை ஜெ ஜெ மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த பெண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘குடும்ப நல கோர்ட் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.தத் விசாரித்தார். அப்போது கணவர் சார்பில் ஆஜரான வக்கீல் ரமேஷ்லால்வானி வாதாடுகையில், ‘‘திருமணமானபின் 3 மாதங்களாக மனைவி தாம்பத்ய உறவுக்கு அனுமதிக்கவில்லை. எனவே அவர் திருமண உறவுக்கு தகுதியானவர் அல்ல. இதற்கு மருத்துவ பரிசோதனை தேவை’’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெண்ணை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த குடும்ப நல கோர்ட் வழங்கிய உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.
பத்தரை மாற்று தங்கம்


பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மாரியப்பன் தங்கவேலு. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை. ஆண்கள் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்திருக்கிறார் மாரியப்பன். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் வெண்கலம் வென்றிருக்கிறார். ஊனம், ஏழ்மை, ஏளனம் போன்ற தடைக்கற்களை தகர்த்தெறிந்து சிகரத்தை எட்டியிருக்கும் இந்த வீரர்களின் சாதனை, ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறது. பாராலிம்பிக் போட்டியில் கிடைத்த தங்கம் என்று இதை குறைத்து மதிப்பிடுவது கூடாது. உலக அளவில் மிகச் சிறந்த வீரர்களின் கடுமையான போட்டியை சமாளித்து மாற்றுத் திறனாளியான மாரியப்பன் வென்றுள்ளது பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவரது மகத்தான வெற்றி, அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும்.

காதல் என்ற பெயரில் பெண்களை வெட்டிச் சாய்த்து, அமிலம் ஊற்றி சிதைத்து, பின்னர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அவநம்பிக்கையையும் விரக்தியையும் அளித்த நிலையில், இளைஞர்கள் தங்களின் ஆற்றலை ஆக்கசக்தியாக, குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாரியப்பனின் வெற்றி உணர்த்துகிறது. சாதனை வீரருக்கு பாராட்டு, வாழ்த்துகளுடன் கோடிக் கணக்கில் ரொக்கப் பரிசுகளும் குவிகின்றன. வென்றவர்களை பாராட்டுவதும், கவுரவிப்பதும் நமது கடமை. அப்போது தான் மாரியப்பன், வருண் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்களை கடுமையாக முயற்சிக்கத் தூண்டும். நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், திறமையான சிறுவர் சிறுமியரை தேர்வு செய்து உணவு, உடை, கல்வி, பயிற்சி என அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும்.

அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து, எதிர்காலம் பற்றிய கவலையை போக்க வேண்டியதும் அவசியம். வெற்றியாளர்களை தோளில் தூக்கிக் கொண்டாடும் அதே சமயம், தோற்றவர்கள் துவண்டு விடாமல் முனைப்புடன் தங்கள் முயற்சியை தொடர ஆதரியுங்கள். ஒலிம்பிக்ஸ் முடிந்து பரபரப்பு ஓய்ந்ததும் விளையாட்டுத் துறை அமைச்சகம், அதிகாரிகள், நிர்வாகிகள் வழக்கம் போல தூக்கத்தில் ஆழ்ந்துவிடாமல், 2020ஐ மனதில் வைத்து ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

வெறி கொலைகளுக்குப் பின்னே மறைந்து கிடக்கும் மனசு!



நன்றி குங்குமம் டாக்டர்

ஏன் இந்த கொடூரம்?

திரும்பிய திசையெல்லாம் ரத்தம் தெறித்த இந்த ஜூன் மாதத்தை இனி எப்போதும் மறக்க முடியாது. மாடியிலிருந்து நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுவதிலிருந்து, ரயில்நிலையத்தில் ஒரு பெண்ணை வெட்டிக் கொல்வது வரை நாம் பார்த்தவை அனைத்தும் பதற வைக்கும் பயங்கரங்கள். சட்டம் ஒழுங்கு் குறைபாடு, மதுப்பழக்கம், ஆணாதிக்கம் என்று இந்த அசம்பாவிதங்களுக்கு எல்லாம் பல காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால், அவை எல்லாமே கிளைக் காரணங்கள்தான். இவற்றின் ஆதாரமான, ஆணிவேரான காரணம் ஒன்று உண்டு. அது… மனசு! அதிர்ஷ்டவசமாக மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது நமக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக அதை நாம் பின்பற்றுவதில்லை. மனிதர்களின் மனம் ஏன் இத்தனை வன்மமாக மாறுகிறது?

இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? உளவியல் மருத்துவரான கார்த்திக்கிடம் பேசினோம்…‘‘கோபம், காதல், சோகம் போன்ற நம் உணர்ச்சிகள் எல்லாம் மூளையில் Limbic system என்ற பகுதியில்தான் உருவாகிறது. இந்த உணர்ச்சிகளைக்கட்டுப்படுத்தும் வேலையைச் செய்வது Frontal lobe என்ற மூளையின் முன்பகுதி. இந்த ஃப்ராண்டல் லோப் செயல்படவில்லை என்றால்தான், அது வெறியாக மாறுகிறது. அதற்கு வடிகால் வேண்டும் என்று தவிக்கும்போது குற்றங்கள் நடக்கின்றன. காதலனுடன் சேர்ந்து தந்தையையே ஒரு பெண் கொன்ற செய்தியைப் பார்த்திருப்பீர்கள். அப்பாவைக் கொல்லலாமா, ஜெயிலுக்குப் போவோமே, மற்றவர்கள் தவறாகப் பேசுவார்களே என்பதையெல்லாம் யோசிக்கும் அளவு அந்தப் பெண்ணின் ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையவில்லை.

பல கள்ளக்காதல் கொலைகளின் அடிப்படைக் காரணம் இதுதான். கணவனையோ, மனைவியையோ கொலை செய்துவிட்டால் சந்தோஷமாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள். ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் என்கிற பின்விளைவை மறந்துவிடுகிறார்கள். எதிர்காலத்தை மறந்து செய்யப்படும் இந்த எல்லாக் குற்றங்களும் ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையாதவர்களால்தான் நடக்கிறது.’’ஃப்ராண்டல் லோப் வளர்ச்சி எதனால் பாதிக்கப்படுகிறது? ‘‘மரபியல் ரீதியாக சிலருக்குப் பாதிக்கப்பட்டாலும், Micro environment என்கிற குடும்ப, சுற்றுப்புறச்சூழல்தான் பெரிய காரணமாக இருக்கிறது. அதனால், குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தை திருடும்போது கண்டிக்க வேண்டும்.

அப்போது திருடுவது தவறு என்று அந்தக் குழந்தை புரிந்துகொள்ளும். முக்கியமாக, ஃப்ராண்டல் லோப் வளர்ச்சியடையும் காலம் 18 வயது முதல் 24 வயது வரை என்பதால் குழந்தைகளை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு நிறைய இருக்கிறது.’’சினிமாக்களால் குற்றங்கள் அதிகமாகிறதா? ‘‘இது தவறான கருத்து. சமூகத்தில் நடப்பதைப் பிரதிபலிக்கும் ஓர் ஊடகம்தான் சினிமா. அடிப்படையிலேயே வன்முறை எண்ணம் கொண்ட ஒருவன், சினிமா பார்க்காவிட்டாலும் கொலை செய்வான். பட்டப்பகலில் ஒரு கொலை நடக்கிறது. சுற்றியிருக்கிறவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியை மறைக்க யார் மீதாவது பழி போடுகிறோம். பொறுப்பேற்றுக் கொள்ளும் நேர்மை இல்லாதவர்கள்தான் இதுபோல மற்றவர்களைக் குறை சொல்கிறார்கள். அதிலும் சினிமா எப்போதும் எளிதான இலக்காக இருக்கிறது.

அரசியல்வாதிகளையோ, போலீசையோ நம்மால் பகிரங்கமாக குற்றம் சொல்ல முடியாது. அதற்குப் பின்விளைவுகள் உண்டு. சினிமா பிரபலங்களை விமர்சிக்கலாம். அதில் விளம்பரமும் கிடைக்கும். அவர்களிடமிருந்து நமக்கு பிரச்னையும் வராது. திரைப்படக் கலைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஆக்கப்பூர்வமான மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறவர்கள், சினிமாதான் காரணம் என்று சொல்லிவிட்டுத் தப்பிக்கக்கூடாது. தவறுக்கு நானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதுதான் மாற்றத்துக்கு வழி.’’கோபம் எப்போது ஆபத்தாக மாறுகிறது? ‘‘கோபம் ஓர் இயல்பான உணர்ச்சி. அதைக் கையாளும் விதத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண மனிதர்கள் கோபப்பட்டாலும் அதன்பிறகு அதை நினைத்து வருந்துவார்கள். அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள்.

ஃப்ராண்டல் லோப் வளர்ச்சி குறைந்தவர்களின் உணர்ச்சிகள் வேறு வகை. இவர்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர மாட்டார்கள். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவும் Mirror neurons இவர்களுக்கு செயல்படாது. ஒருவன் மாடியில் இருந்து நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுவதற்குப் பின்னால் இருப்பது இந்த மிரர் நியூரான்கள்தான். நாய்க்குட்டியின் உணர்வைப் புரிந்துகொள்ளாதவன் மனிதர்களையும் அதேபோலத்தான், மாடியிலிருந்து தூக்கிப்போடுவான்.’’மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாகிவிடுவார்களா? ‘‘தானாகப் பேசுவது, சிரிப்பது போன்ற கோளாறுகள் எல்லாம் உடல்ரீதியான குறைபாட்டால் வரும் பிரச்னை. அதில் ஆபத்து இல்லை. மருந்துகள் கொடுத்தால் குணமாகிவிடுவார்கள்.

இவர்கள் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க மாட்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் கிட்டத்தட்ட குழந்தைகளைப் போன்றவர்கள். ஆனால், Personality disorder கொண்டவர்கள்தான் குற்றவாளிகளாகிறார்கள்.’’கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்…‘‘Personality disorder என்ற குணக்கோளாறில் இரண்டு வகை இருக்கிறது. Anti social personality என்ற முதல் வகையைச் சேர்ந்தவர்கள் சமூகத்துக்கு எதிரான குற்றங்களை விருப்பத்துடன் செய்வார்கள். ‘நோ பார்க்கிங்’ என்றால் அங்கேதான் வண்டியை நிறுத்துவார்கள். பணம் என்பதைத் தாண்டி குற்றச்செயல்களைச் செய்வதில் அலாதியான விருப்பம் இருக்கும். கூலிப்படையினர், தீவிரவாதிகள் எல்லாம் இந்த வகையினர்தான். இந்தப் பிரச்னை ஆண்களுக்கு அதிகம் ஏற்படும்.

இதில் இரண்டாவது வகை Border line personality. காதலுக்காகக் கொலை செய்கிறவர்கள் இந்த பார்டர் லைன் பர்சனாலிட்டியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு சுயமதிப்பு இருக்காது. இவர்கள் மற்றவர்களைச் சார்ந்தே இருப்பார்கள். உணர்வுரீதியாக வாழ்க்கையைக் கையாள்கிற பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படும்.’’காதல் கொலைகள் பற்றி...‘‘ ‘நீயில்லாமல் நானில்லை’, ‘நீயில்லாவிட்டால் நான் செத்துருவேன்’ என்பதையெல்லாம் ஆரோக்கியமான மனநிலையில் இருப்பவர்கள் சொல்வது இல்லை. இது பார்டர் லைன் பர்சனாலிட்டியின் அறிகுறி. ஆனால், இதை காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குக் காதல் சம்மதம் கிடைத்தாலும் அமைதியாக இருக்க மாட்டார்கள்.

அதன் பிறகுதான் பிரச்னையே ஆரம்பிக்கும். வேறு யாராவது நம் காதலுக்குக் குறுக்கே வந்து விடுவார்களோ என்கிற பயம் வந்துவிடும். இதன் எதிரொலியாக ‘எங்கே இருக்கிறாய்’, ‘யாருடன் இருக்கிறாய்’ என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சண்டை, சச்சரவு வந்துகொண்டே இருக்கும். கடைசியில் வாழ்க்கையே நரகமாகி விடும்...’’காதல் தோல்வியை இளைஞர்கள் எப்படிக் கையாள வேண்டும்?‘‘ஓர் உறவு முறியும்போது இழப்பு இருவருக்கும்தான். அதனால் விலகலாம் என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால் அதற்கு மற்றவர் மரியாதை கொடுக்க வேண்டும். அந்த உறவை இறுக்கிப் பிடிக்க முயற்சித்தாலே, நம் மீது நமக்கு மதிப்பு குறைவாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் கொண்டவர்கள் காதல் தோல்வியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்தப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்குத்தான் இழப்பு என்று நினைப்பார்கள். சுயமதிப்பு இல்லாதவர்களால் இந்த நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதான் கொலையாகவோ, தற்கொலையாகவோ மாறுகிறது. ’’நாம் ஆபத்தான உறவில் இருக்கிறோம் என்பதை உணர முடியுமா?‘‘சுயநலத்துக்காக ஒருவர் உங்களை நிர்பந்தப்படுத்திக் கொண்டே இருந்தால் அவர் ஆபத்தானவர். ‘என் கூடவே இருக்க வேண்டும்’, ‘என்னுடன் இந்த இடத்துக்கு வர வேண்டும்’ என ஒருவரிடமிருந்து டிமாண்ட் வந்துகொண்டே இருந்தால், நீங்கள் ஆபத்தான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக் கொண்டு இருக்கிறவரும் பிரச்னைக்கு உரியவரே. இதேபோல, சிறிய பிரச்னைக்குக் கூட 4 நாட்கள் பேசாமல் இருக்கிறவர்கள், ஏதாவது பிரச்னையை உருவாக்கிக் கொண்டே இருக்கிறவர்களிடமும் கவனம் அவசியம்.

இன்னொரு வகையும் உண்டு. ரொம்பவும் அமைதியாக, யாரிடமும் பேசாமல் சிலர் ஒதுங்கியே இருப்பார்கள். இவர்களை நல்லவர் என்று சமூகம் நினைக்கும். ஆனால், நல்லவர்களின் அடையாளமே சமூகத்தோடு நன்றாகக் கலந்து பழகுவதில்தான் இருக்கிறது. அதனால், இவர்களிடமும் விலகி இருப்பதே நல்லது.
சுதந்திரம் கொடுத்து, தேவைப்படும்போது உதவி செய்கிற, நம்மைப் புரிந்துகொள்கிறவர்களுடனே நட்பு பாராட்ட வேண்டும்.’’காதல் தொந்தரவுகளை சமாளிக்க வழிகள் என்ன?‘‘ஆண்பெண் உறவு கண்ணாடிப் பொருட்களைக் கையாள்வது போலத்தான். ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவருக்கு மனதில் அந்த அபிப்பிராயம் வந்துவிடும் என்பதால் கவனமாகவே கையாள வேண்டும்.

ஒருவேளை, அந்த உறவு சரிவராது என்று நினைத்தால் எதிராளியின் ஈகோவை சீண்டுகிற மாதிரி அவமானப்படுத்துவதோ, மிரட்டுவதோ தவறு. அது மோசமான பின்விளைவுகளையே உண்டாக்கும். காதல் இம்சை செய்கிறவர்களைத் தனியாக சமாளிக்க முடியும் என்று நம்புவதும் தவறு. மற்றவர்களின் உதவியோடு பக்குவமாகவே அந்தப் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும்.நன்றாகப் பழகிய பின்னர், காதலைச் சொல்லும் நிலைக்கு வந்தபிறகு, ஒருவரை மறுக்கும்போதுதான் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதனால், ஆரம்பத்திலேயே போதுமான இடைவெளியுடன் பழகுவது நல்லது. ஒருவரின் குணம் முழுமையாகத் தெரியாமல் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

சமூக வலைத்தளங்களில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்றுக் கொள்வதி லிருந்து, அவருடைய மெசேஜுக்கு பதில் தருவதிலிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கையாள வேண்டும். நேரில் பேசி, பழகியவரை முகநூலில் நண்பர்களாக வைத்துக் கொள்வதே நல்லது.’’மனநலம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா?‘‘உடல்நலத்துக்காக உணவில் கவனம் செலுத்துகிறோம், உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஆனால், மனதை நாம் பொருட்படுத்துவதில்லை. மன ஆரோக்கியத்துக்காக எந்த முயற்சிகளும் செய்வதில்லை. நம் கல்வித் திட்டத்திலும் மனம் என்ற விஷயமே இல்லை. மருத்துவம் படிக்கிறவர்களுக்கே உளவியல் பற்றித் தெரியாது. அதனால்தான் உணர்வு ரீதியான பிரச்னைகளை சமாளிக்கத் தெரிவதில்லை. ஒருவர் தானாகப் பேசினாலோ, சிரித்தாலோதான் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், நமக்குள் இதுபோல நீறுபூத்த நெருப்பாக இருக்கும் குணக்கோளாறுகளை உணர்வதில்லை.’’ஆரோக்கியமான மனநிலை கொண்ட குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

‘‘ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழல் என்று சொன்னால், அதை குழந்தை புரிந்துகொள்ள வேண்டும். அழுது, அடம்பிடித்தால் அந்தக் குழந்தை ஆபத்தாக வளர்கிறது என்று அர்த்தம். தொடர்ந்து அதே பிடிவாதத்தை எல்லா விஷயத்திலும் கடைபிடித்தால் மனநல ஆலோசகரிடம் அழைத்துப் போவதுதான் சரி. ஆர்ப்பாட்டம் பண்ணினால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வளர்கிற ஒருவன், வளர்ந்த பிறகு ஒரு பெண்ணிடமும் அதே ரீதியில் காதலை எளிதாக எதிர்பார்ப்பான். அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவனால் தாங்கிக் கொள்ளாமல் விபரீதம் நடக்கும். ஐஸ்கிரீம் என்ற சின்ன விஷயத்தில் ஆரம்பிப்பதுதான் ஒரு பெண்ணைக் கொலை செய்வதில் முடியும். அதனால், உடனுக்குடனே கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி குழந்தைகளை வளர்க்கக் கூடாது. சைக்கிள் கேட்டால், ‘நல்ல மார்க் எடுத்தால் வாங்கித்தருகிறேன்’ என்று சொல்ல வேண்டும். அப்போது கஷ்டப்பட்டால்தான் பலன் கிடைக்கும் என்கிற பக்குவம் வரும்.’’மன ஆரோக்கியத்தை அளவிட எதுவும் வழிகள் இருக்கிறதா?

‘‘ஒரு பிரச்னை வருகிற போது தனக்கும் மற்றவர்களுக்கும் பாதகம் வராமல் எப்படி அந்த சூழலைக் கையாள்கிறார்கள் என்ற பக்குவத்தைப் பொறுத்தே ஒருவரின் மன ஆரோக்கியத்தைச் சொல்ல முடியும். Intelligence quotient என்ற அறிவுத்திறனை விட Emotional quotient என்ற உணர்வுகளைக் கையாளும் திறன்தான், இப்போது நாம் எல்லோருக்கும் தேவை.’’மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைச் சொல்லுங்கள்…‘‘யோகாவும் தியானமும் மனநலத்தை மேம்படுத்தும். தியானத்தின் மூலம் நம் உணர்வுகளைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்போது எண்ணங்கள் மட்டுப்படும். அதன்பிறகு, எந்தச் சூழலையும் எளிதாகக் கையாள முடியும். உணர்ச்சிகளைக் கையாளும் திறனை ஃப்ராண்டல் லோப் தானாகவே பெற்றுவிடும்.

சிறந்த புத்தகம் படிப்பது, நல்ல பாடல்கள் கேட்பது, நல்ல நண்பர்களுடன் பழகுவது, இயற்கையான இடங்களுக்குச் சென்று வரும்போது ஃப்ராண்டல் லோப் நல்லவிதமாகத் தயாராகும். முடிந்தவரை இயற்கையோடு தொடர்பில் இருக்க வேண்டும். சக மனிதர்களோடு பேசிப் பழகவேண்டும். தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதுவும் மனநலப் பாதிப்பை உண்டாக்கும். முக்கியமாக, நம் உணர்வுகளை நாமே கவனிக்கிற திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் திட்டினால் நம்மிடம் இருந்து நாமே கொஞ்சம் விலகி நின்று யோசிக்க வேண்டும். என்ன காரணம், இந்தப் பிரச்னை சரியாக என்ன வழி என்று ஆக்கப்பூர்வமாக யோசிக்க வேண்டும். ‘தேவாங்கு’ என்று திட்டினால் அதையே நினைத்துக் கொண்டிருந்தால்தான் மனது பாதிக்கப்படும். அதற்கு எதிர்வினை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்னை இல்லை!’’

ஞானதேசிகன்

Saturday, September 10, 2016

வேண்டாம் தற்கொலை

By எஸ். பாலசுந்தரராஜ்  |   Last Updated on : 10th September 2016 01:16 AM  |   அ+அ அ-   |  

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் வழக்குரைஞர் ஒருவர் அண்மையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் இவர் சட்டமேற்படிப்பை படித்தபோது, ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்துவேறுபாட்டால் கணவன் - மனைவி பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் அந்த பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படித்த பெண் தனது இல்லறவாழ்க்கையை தொடங்கி ஆறு ஆண்டில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 5,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் எனவும், இதில், பெண்கள் 60 சதவீதம் பேர் என்பது அதிர்ச்சி தகவல். 15 முதல் 25 வயது உள்ள பெண்கள் 20 சதவீதமும், 25 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 30சதவீதமும் என காவல் துறை புள்ளிவிவரம் கூறுகிறது.
தேர்வில் மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், காதலில் தோல்வி ஏற்பட்டாலும், கணவன் மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் மேலும் பல காரணங்களுக்காகவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மண்ணெண்ணையை உடல்மீது ஊற்றி தீவைத்து, விஷம் அருந்தி, கிணற்றில் குதித்து, மாடியிலிருந்து குதித்து, தூக்கிட்டு என பல வழிகளில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் 33,000 பேர் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
வாழ்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தற்கொலைக்கு காரணம் கூறுகிறார்கள். வாழ்க்கை என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்.
உலகத்தில் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளன. எந்த ஜீவராசியாவது தற்கொலை செய்துகொண்டது என கேள்விப்பட்டதுண்டா? ஆறு அறிவுள்ள மனிதர்கள் ஏன் தற்கொலை எண்ணத்தை மனதில் நுழைய விடவேண்டும்.
நம்மிடம் அற்புதமான, ஜீவனுள்ள, துடிப்புள்ள, வலிமைமிக்க மனம் உள்ளது என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். மனதில் உற்சாகத்தையும், தைரியத்தையும், மகிழ்ச்சியையும் பாய்ச்ச வேண்டும்.
பழைய இரும்பு வியாபாரம் செய்யும் ஒருவர், தனது சைக்கிளில் செயின் இல்லாததால் அந்த சைக்கிளை நடந்தே தள்ளிக்கொண்டு வியாபாரம் செய்கிறார்.
அவர் தன்னாலும் வாழமுடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார் எனக்கூறலாம். அவர் சவால்களை சந்திக்க தயாராக உள்ளார். பிரச்னைகளை கண்டு முடங்கிவிடவில்லை. என்னால் முடியாது என சும்மா இருந்துவிடவில்லை.
இதுபோன்ற எண்ணற்றவர்கள் நாட்டில் உள்ளார்கள். அவர்களை முன்மாதிரியாக கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் தற்கொலை எண்ணம் நம் மனதில் நுழையாது.
தற்கொலை செய்வதுகொள்பவர்களை வாழ்கையில் பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதாவர்கள் எனக்கூறலாம். தோல்விகளையும், சங்கடங்களையும் மனதில் நுழையவிடக்கூடாது.
ஒரு பிரச்னை ஏற்படுகிறது என்றால் அந்த பிரச்னையை தீர்க்க நான்கு அல்லது ஐந்து தீர்வுகளை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தீர்வாக செயல்படுத்திபார்க்க வேண்டும். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
கடவுள் ஒரு ஜன்னலை மூடினால் மற்றொரு ஜன்னலைத் திறப்பார் என முழுமையாக நம்ப வேண்டும். எனது பிரச்னைகளுக்கு தீர்வு கிடையாது. தற்கொலை செய்து கொள்வதுதான் தீர்வாகும் என நினைப்பது என்பது தைரியமில்லாதர்கள் கூறும் காரணம்.
நாம் நம்மைப்பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை ஆராய வேண்டும். அவற்றை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு முட்டாள்தனமாக நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற தெளிவு வரும்.
இந்த தெளிவு தற்கொலை எண்ணத்தை மாற்றிவிடும் என்பது உறுதி.
நம்பிக்கையையும், நல்ல எதிர்காலம் பற்றிய கற்பனையையும் நம் மனதில் நுழையவிட்டால், அது நம் ஆழ்மனதில் பதிந்து தற்கொலை எண்ணத்தை தகர்த்தெறிந்துவிடும். பின்னர் சூழ்நிலை மாறுவதை நாம் உணரலாம்.
பலர் பழைய தோல்விகளை விரிவாக, கதை கூறுவதுபோல கூறுவார்கள். அனுபவித்த கஷ்டங்களை, சங்கடங்களை பெரிதுபடுத்தி கூறுவார்கள். கஷ்டங்களை பெரிதுபடுத்தினால் கஷ்டம்தான் வரும்.
உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களை மனதில் அசைபோட்டுப் பாருங்கள். தற்கொலை எண்ணம் தடுக்கப்படும். அவன் விதி, தற்கொலை செய்து கொண்டான் எனக் கூறுவதுண்டு.
நல்ல விஷயங்களை எண்ணாமல், வாழ்கையின் எதிர்கால மகிழ்ச்சியை எண்ணாமல், உலகில் உள்ள அற்புதமானவற்றை ரசிக்காமல் தற்கொலை என தவறான முடிவை எடுப்பவர்களை அவர்களின் விதி எனக்கூறுவது தவறு.
ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். பிரச்னைகள் இருந்து கொண்டிருந்தால்தான், புலனும், புத்தியம் சுறு சுறுப்பாக இருக்கும்.
எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு. வாழ்க்கை என்னும் விருந்தில் தனது பங்கிற்கான உணவினை உண்ணாமல், தற்கொலை என்ற பெயரில் உயிரை மாய்த்துக் கொள்வதை மனிதகுலம் நிறுத்த வேண்டும்.

Friday, September 9, 2016

விருத்தாசலம் செவிலியர் புஷ்பா தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: விருத்தாசலம் செவிலியர் புஷ்பா தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

ஒருதலைக் காதல் என்ற பெயரில் சில தறுதலைகள் மேற்கொண்டு வரும் பாலியல் சீண்டலுக்கு மேலும் ஓர் இளம்பெண் பலியாகியிருக்கிறார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா என்ற பெண் பாலியல் சீண்டலால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.தொடர்கதையாகும் இத்தகைய சீண்டல்கள் கண்டிக்கத்தக்கவை.



விருத்தாசலம் பூதாமூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு அதேபகுதியிலுள்ள காதல் நாடகக் கும்பலைச் சேர்ந்த தனசேகரன் என்ற மிருகம் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதை ஏற்க புஷ்பலதா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

காதலிக்க மறுப்பு

கடந்த 31-ஆம் தேதி இரவு புஷ்பலதா பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்து வழிமறித்த தனசேகரன் தம்மை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்த புஷ்பலதாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் கடுமையாக தாக்கியதாகவும், கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த புஷ்பலதா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை

தூக்கில் தொங்கியவரை மீட்ட அவரது குடும்பத்தினர் முதலில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புஷ்பலதா கடந்த 8 நாட்களாக அளிக்கப்பட்ட மருத்துவம் பயனளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார். கொடிய மிருகத்தின் சீண்டலால் ஏற்பட்ட அவமானம் காரணமாக உயிரிழந்த புஷ்பலதாவின் மறைவுக்கு இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பாலியல் சீண்டல்களுக்கு பெண்கள் இரையாவது அதிகரித்து வருகிறது.சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் இராம்குமார் என்ற இளைஞனால் கொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தையடுத்த வ.பாளையம் கிராமத்தில் நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்து கொலை செய்தது. தொடர்ந்து கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலி என்ற மாணவி வகுப்பறையில் கட்டையால் அடித்தும், தூத்துக்குடியில் பிரான்சினா என்ற ஆசிரியை தேவாலயத்தில் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வினோதி, வித்யா

இவர்களுக்கு முன்பே காரைக்காலில் வினோதினியும், ஆதம்பாக்கத்தில் வித்யாவும் அமிலம் வீசிப் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் திருச்சியில் மோனிகா என்ற மாணவியும், புதுச்சேரியில் அன்னாள் தெரசா என்ற மாணவியும் மனித மிருகங்களால் கத்தி குத்துக்கு ஆளாகி சாவின் நுழைவாயில் வரை சென்று திரும்பியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இப்போது புஷ்பலதா ஒரு மிருகத்தின் பாலியல் சீண்டலால் உயிரிழந்துள்ளார்.

என்ன வகையான கலாசாரம்?

காதல் என்ற பெயரில் தொல்லைக் கொடுப்பதும், அதை தவிர்க்க நினைக்கும் பெண்களை வெட்டிக் கொலை செய்வதும், அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டுவதும் எந்த வகையான கலாச்சாரம் என்பது தெரியவில்லை. காதல் என்பது இருமனம் கனிந்தால் தான் ஏற்படும். இதை உணராமல், ஒப்புக் கொண்டால் காதல்.... இல்லையேல் கொலை என்ற போக்கு மிகவும் ஆபத்தானதாகும். பெண்களின் உணர்வுகளுக்கு மதிக்காமல் இத்தகைய செயலில் ஈடுபடும் மிருகங்களை பெண்ணுரிமை பேசும் அமைப்புகள் கண்டிக்காததும், பெண்களை பாதுகாக்க போராட மறுப்பதும் கவலையளிக்கிறது. இதுபோன்ற செயல்களுக்கு ஆணாதிக்கமும், முதலாளித்துவமும் தான் காரணம் என்று புதிய விளக்கம் அளித்த போலிப் புரட்சியாளர்கள், இத்தகைய கொடிய நிகழ்வுகளை கண்டிக்காததன் மூலம் தங்களின் முகமூடிகளை கிழித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலைமுறைக்கு கல்வியையும், கலாச்சாரத்தையும் போதிப்பதை தவிர்த்து, நாடக காதலையும், பணம் பறிக்கும் திருமணத்தையும் போதித்து வரும் சமூக விரோத கும்பல் தான் இத்தகைய பாலியல் கொடுமைகளுக்கு காரணம் என்பதில் எந்த ஐயமுமில்லை.

75 நாட்களில் 5 பெண்கள்

காதலிக்க மறுத்ததற்காக கடந்த 75 நாட்களில் 5 பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கொலை முயற்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தறுதலைகள்...

பெண் முதலமைச்சர் ஆட்சி செய்யும் மாநிலத்தில், ஒருதலைக் காதல் தறுதலைகளிடமிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது வெட்கக் கேடான செயல் ஆகும். பெண்களை பின்தொடர்ந்து தொல்லை தருவோரை கைது செய்து தண்டனை வழங்க வசதியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 345டி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டும், அதைப் பயன்படுத்த தமிழக அரசு தவறியதன் காரணமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து விட்டது.

கடும் நடவடிக்கை

இந்த விஷயத்தில் அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் சீண்டலுக்கு பலியான புஷ்பலதா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.''

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

கேலக்ஸி நோட் 7 பயன்படுத்த ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தடை


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட்ஃபோனை விமானப் பயணத்தின்போது பயன்படுத்தவோ, சார்ஜ் செய்யவோ தடை விதித்துள்ளன.

சாம்சங் நிறுவனம், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தனது கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட்ஃபோனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த ரக ஸ்மார்ட்ஃபோன்கள் எளிதில் தீப்பற்றுவதாக உள்ளதென்றும், பேட்டரி சார்ஜ் செய்யும்போது, வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக, சாம்சங் நடத்திய தரக்கட்டுப்பாட்டு சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் விநியோகிக்கப்பட்ட கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோன்களை திரும்பிப் பெறவும் சாம்சங் முடிவு செய்துள்ளது.

இந்த தகவல் சர்வதேச ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கன்டாஸ், ஜெட் ஸ்டார், விர்ஜின் போன்ற விமான சேவை நிறுவனங்கள், தங்களது விமானங்களில் பயணிக்கும் நபர்கள் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தவும், சார்ஜ் செய்யவும் தடை விதித்துள்ளன.

எளிதில் தீப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதோடு, தரம் குறைந்த பேட்டரியை பயன்படுத்தி கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், இம்முடிவை மேற்கொள்வதாக, அந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. சாம்சங் நிறுவனம், அவற்றை எப்போது திரும்பப் பெறும் என்று தெரியவில்லை என்றும், அதுவரை தடை விதிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மாற்றம் ஏற்படுத்தும் தீர்ப்பு!

By ஆசிரியர் | Last Updated on : 09th September 2016 01:30 AM | அ+அ அ- |


காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 24 மணி நேரத்தில், அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஏற்கெனவே 2013-இல், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கொலை, வன்புணர்வுக் குற்றங்கள் போன்றவற்றிற்கு எந்தவித விசாரணையும் இல்லாமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.
சாமானிய மக்கள் நலன் கருதும், வெளிப்படைத்தன்மை
யுடைய நீதி மற்றும் சட்ட நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதுதான், அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை எந்தவித விருப்பு வெறுப்பின்றியும், உள்நோக்கமோ லாபமோ கருதாமலும் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும். மக்களின் கோரிக்கையோ, குறையோஉடனடியாக சட்டப்படி தீர்வு காணப்படும்போது மட்டும்தான்,மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதும், அரசு நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.
எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும், பதிவான 24 மணி நேரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களும், உடனடியாக முதல் தகவல் அறிக்கையின் நகலைப் பெற முடியும். சாதாரணமாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வது எவ்வளவு சிரமமோ, அதே அளவு சிரமத்தை சாமானிய மக்கள் அதன் நகலைப் பெறுவதற்கும் அனுபவித்தாக வேண்டும். காவல் நிலையங்களில் பணம் கையூட்டுக் கொடுக்கப்படாமல் முதல் தகவல் அறிக்கையின் நகலைப் பெறுவது என்பது எளிதானதல்ல.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முதல் தகவல் அறிக்கை இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படுமானால், குற்றம் சாட்டப்பட்டவர் அதன் நகலைப் பெற்று வழக்குரைஞரின் உதவியுடன் பிணையில் வெளியில் வர முடியும். பாதிக்கப்பட்டவர்களும், தங்களது குற்றச்சாட்டு பதிவாகி இருக்கிறது என்று ஆறுதல் அடைய முடியும்.
உச்சநீதிமன்றம், இணையதளப் பதிவேற்றம் செய்வதற்கு சில விதிமுறைகளையும், விதிவிலக்குகளையும் அளித்திருக்கிறது. பயங்கரவாதம், ஊடுருவல், தீவிரவாதச் செயல்கள், பாலியல்
குற்றங்கள், தனிநபர் உரிமையையோ, சுதந்திரத்தையோ பாதிக்கும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும் அவை இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட வேண்டியதில்லை என்று விதிவிலக்கு அளித்திருக்கிறது. அதேநேரத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று தீர்மானிக்கும் முடிவை, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) நிலையிலுள்ள அதிகாரிகளுக்குக் கீழே உள்ளவர்கள் எடுக்கமுடியாது. அதாவது, காவல் நிலைய அதிகாரிகள், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் பதிவேற்றம் செய்யாமல் தவிர்த்துவிட முடியாது.
பெரும்பாலான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையைக் காவல் துறையினர் தாக்கல் செய்யாமல் காலத்தைக் கடத்துவதற்குப் பல தரப்புகளிலிருந்தும் அழுத்தம் தரப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆட்சியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், காவல் துறை மேலதிகாரிகள், செல்வாக்கான தலைவர்கள் என்று முக்கியமான வழக்குகளில், சாமானியர்கள் புகார் அளித்தாலும் அதை சட்டை செய்யாமலும், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாமலும் காவல் துறையினர் தவிர்ப்பது இன்றும்கூட தொடரத்தான் செய்கிறது.
2006-ஆம் ஆண்டு தில்லியை அடுத்த நொய்டாவிலுள்ள நிதாரி என்கிற இடத்தில் பல ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் காணாமல் போவது வழக்கமாக இருந்தது. அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த புகார்களைக் காவல் துறையினர் சட்டையே செய்யவில்லை. தனது மகள் பிங்கி மாயமாய் மறைந்ததைத் தொடர்ந்து ஜதின் சர்க்கார் என்பவர் நிதாரி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான மோனிந்தர் சிங் பாந்தர் மீது குற்றப்புகார் அளித்தார். அதையும் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டது.
குற்றவாளியான மோனிந்தர் சிங் பாந்தருக்கு சாதகமாக வாக்குமூலம் அளிக்கத் தன்னை மத்தியப் புலனாய்வுத் துறை வற்புறுத்துவதாகவும் தனக்குப் பாதுகாப்புத் தரும்படியும் காவல் துறையிடம் முறையிட்ட ஜதின் சர்க்கார், மேற்கு வங்காளத்திலுள்ள குர்ஷிதா
பாதில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது மனைவி வந்தனா சர்க்கார் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டபோதுதான் "ஏன் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை' என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதைத் தொடர்ந்துதான் 2013-இல் ஐந்து பேர் கொண்ட உச்ச
நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதைக் கட்டாயமாக்கியதுடன், அப்படிப் பதிவு செய்யாமல் தவிர்க்கும் காவல் துறை அதிகாரிகள்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டவும் வழிகோலியது. இப்போது நீதிபதிகள் தீபக் மிஸ்ராவும், சி. நாகப்பனும் இன்னும் ஒருபடி மேலே போய், முதல் தகவல் அறிக்கைகள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
வருகிற நவம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த உத்தரவு, காவல் நிலைய செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு, மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தியாக வேண்டும். கையூட்டு வாங்காத காவல் நிலையங்கள் உருவாகும்போது மட்டும்தான், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியும், அனைவருக்கும் நீதியும் உறுதிப்படுத்தப்படும்!
vikatan.com
மாண்புமிகு மனைவிகளின் 8 குணங்கள்!#8PointCheckList




உங்களது என்னவரை இன்னமும் இருக்கமா பிடிச்சு வைச்சுக்கத்தான் இந்த எட்டு பாயிண்ட்ஸ். லெட்ஸ் ஸ்டார்ட்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்‘ஹிஸ்டாரிக்கல் படம் வேண்டாம்!’ 

8. டிரீம்ல இருந்து வெளியே வாங்க :

எல்லாருக்குமே தனக்கு அமையப்போகும் கணவரை பற்றி ஒரு ட்ரீம் இருந்திருக்கும். 'அலைபாயுதே' மாதவன் மாதிரி லவ் இருக்கணும். ஆர்யா மாதிரி சேட்டை பண்ணனும்னு பல கனவுகள் திருமணத்திற்கு முன் இருந்திருக்கும். ஆனால், 'நான் நினைச்சு வைச்ச டிரீம் ஹஸ்பன்ட் இவர் இல்லை'னு உடனே அப்சட் ஆகாதீங்க. இவரை உங்க டிரீம் கணவராக மாற்ற முயற்சி செய்யுங்க. அவருடைய குறைகளைச் சொல்லி காமிச்சுட்டே இருக்காதீங்க. இனி இவர்தான் உங்க சூப்பர் மேன் அப்படின்னு நீங்க முதல்ல நம்பணும். அதுதான் திருமணத்திற்கான அஸ்திவாரம்.


7. வெல்கம் பண்ணுங்க :

அவர் வேலை முடித்து வீட்டுக்கு வந்தால், சிரிச்ச முகத்தோட வெல்கம் பண்ணுங்க. அவர் வந்தது கூட தெரியாம சீரியல் பார்த்துட்டே இருக்கறது, பக்கத்து விட்டு அம்மா கூட சாட்டிங் பண்ணுறது, மொபைல் வைச்சுகிட்டு சோசியல் மீடியாவுல சுத்திப் பார்த்துட்டே அவரை பார்க்காம விட்டுடாதீங்க. உங்க என்னவர் இதுக்கு எல்லாம் ரியாக்ட் செய்யாமல் இருந்தாலும், மனசுக்குள்ள 'நமக்கு இவ எவ்வளவுதான் முக்கியத்துவம் கொடுக்கறாபோல'னு நினைச்சு பார்க்க சாத்தியம் அதிகம். நீங்களும் வொர்க்கிங் வுமனா இருந்தா, அவர்கிட்ட உங்க அலுவலக விஷயங்களை ஷேர் பண்ணுங்க.


6. பிடிச்சு இருக்குன்னா செய்ங்க :

'நீ ஜிமிக்கி போட்டா பிடிக்கும்', 'தலையில பூ வைச்சா பிடிக்கும்', 'நீ சுடிதார் போட்டால் பிடிக்கும்'னு சொல்லி இருந்தால், அவருக்காக அதை செய்ங்க. எப்படியும் நாம கேட்கிறத அவர் செய்யணும்னு நாமளும் எதிர்பார்ப்போம் இல்ல.


5. வாவ்... வாட் ஏ சர்ப்ரைஸ் :

பெரும்பாலும் பெண்கள் ஏதாவது ஸ்பெஷல் டே அனைக்குதான் கிப்ட் கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருப்பாங்க. அப்படி இல்லாமல் எல்லா நாட்களுமே ஸ்பெஷல்தான் நினைச்சுகிட்டு அவர் எதிர்பார்க்காத நேரத்தில் சர்ப்ரைஸ் செய்யுங்கள். அவருக்கு பிடிச்ச உணவு, புதுசாக ஒரு டிரஸ், ஷூ என அவரது தேவைக்கு ஏற்ப அதனை கொடுங்கள். அவரை சர்ப்ரைஸாக அவுட்டிங் கூப்பிட்டு போங்க. லைக் 'ஐ' பட கிளைமேக்ஸ்ல எமி, விக்ரமை கூட்டிட்டுப்போன இடம் மாதிரி.

4. டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை :

எந்த ரிலேசனாக இருந்தாலும் டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை வருவது இயல்புதான். அதுவும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வரலைன்னா எப்படி? இந்த குட்டி சண்டைகள் தான் இன்னமும் உங்களது 'என்னவரை' புரிஞ்சுகொள்ள உதவும். 'ராஜா ராணி' படத்துல நயன்தாராவும், ஆர்யாவும் எப்படி சண்டை போடுவாங்க. ஆனா, கிளைமேக்ஸ்ல பிரிவு வரும்போதுதான்.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்க. முக்கியமா, சண்டை போடும்போது 'நம்ம ரெண்டு பேருக்கும் சரி வராது. பிரிஞ்சுடலாம். டைவர்ஸ் வாங்கலாம்'னு சொல்லவே சொல்லாதீங்க. வார்த்தைகளுக்கு உயிர் உண்டு.

3. பெஸ்ட் ப்ரெண்டாக இருக்கணும் :

பெஸ்ட் பாட்னராக இருக்கணும்ன்னா முதல்ல பெஸ்ட் ப்ரெண்ஸாக இருக்கணும். உங்க கடந்த கால வாழ்க்கை, எதிர்கால கனவுனு எல்லாத்தையும் ஒரு ப்ரெண்ட் மாதிரி அவர்கிட்ட ஷேர் பண்ணுங்க. அவர்கிட்டயும் கேளுங்க... அவர் கடந்த காலத்துல காதல் இருந்தால் அதையும் கேளுங்க. 'சில்லுனு ஒரு காதல் மாதிரி' அவரோட காலேஜ் டைரியை படிச்சுத்தான் தெரிஞ்சுக்கணும்னு கிடையாது. அப்ப, ஏதாவது லவ் பண்ணி இருக்கார்னு சொன்னால் தாம்தூம்னு குதிக்காமல், உங்களிடம் அவர் எதையும் மறைக்கவில்லை என்று பெருமைபட்டு கொள்ளுங்கள். கல்யாணம் ஆகி 10 வருஷத்துக்கும் மேல ஆச்சு? 'இனி அவரோட லவ் ஸ்டோரி கேட்டு தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறோம்?'னு எல்லாம் அலுத்துகாதீங்க. காதல் எப்போதுமே சுவாரசியம்தான்.

2. இன்னொரு பாதி நீங்கதான் :

அவரது தேவைகள் அனைத்துமே உங்களை சார்ந்துதான் இருக்கும். இதை முழுமையாக செய்யுங்கள். தூய்மையான சுற்றுச்சூழல், குழந்தைகளை பொறுப்பு உள்ளவர்களாக வளர்ப்பது, நல்ல உணவு, செக்ஸ், பிரச்னைகள் வந்தால் சேர்ந்து சமாளிக்க கை கோர்த்து நிற்பதுனு என உங்களைச் சுற்றிதான் அவர் இயங்கி ஆக வேண்டும். அதனால், இதனை மனதில் வைத்து நடந்துகொள்ளுங்கள். உண்மையாகவே அவரது இன்னோரு பாதி நீங்கள் தான்.

1. உதாரணமாக இருங்க :

உங்களது கணவருக்கு ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால், அவரிடம் தொடர்ந்து சண்டையிட்டு 'உடனே நீங்க விட்டு ஆகணும். திருந்தியே ஆகணும்னு வெறுப்பாக்காதீங்க. அவரை கொஞ்சம் கொஞ்சமாக பாசிட்டிவாக மாற்ற முயற்சி செய்யுங்கள். கெட்ட பழக்கங்களால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், நீங்கள் என்ன ஆவீர்கள் என்பதை உணர்த்துங்க. அவருக்கு ஓர் உதாரணமாக இருங்க. அவரது குடும்பத்தினரிடம் 'பேமிலிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறார். நல்லா பார்த்துக்கிறார்'னு சொல்லுங்க. உங்க கணவர் கெட்டிக்காரர் தான் கண்டிப்பா உங்களை புரிஞ்சுப்பார்.


- ஹேமா
எல்லிஸ்

மறக்கப்பட்ட நடிகர்கள் 10: டி.எஸ்.துரைராஜ் - நண்பனின் பாதையில் நகைச்சுவை விருந்து!

ஆர்.சி.ஜெயந்தன்

 எல்லிஸ்  ஆர். டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ 1940-ல் வெளியானது. சகுந்தலையாக நடித்த எம்.எஸ்.எஸ், துஷ்யந்தனாக நடித்த ஜி.என். பாலசுப்ரமணியம் ஆகிய நட்சத்திரங்களின் வசீகரத்தோடு, விறுவிறுப்பான திரைக்கதை, மேக்கிங், எடிட்டிங், டங்கனின் இயக்கம், கல்கி சதாசிவத்தின் தயாரிப்பு எனப் பல காரணங்கள் இந்தப் படத்தின் வெற்றியின் பின்னால் இருந்தன. இவை தவிர இன்னுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அது பாமர ரசிகர்களை திரையரங்களுக்கு வரவழைத்த கலைவாணர் என்.எஸ்.கே. டி.எஸ்.துரைராஜ் ஜோடியின் “அடிப்பியோ… ங்கொப்பன் மவனே… சிங்கம்டா…” என்ற எவர்க்ரீன் காமெடி.
கடலையொட்டிய நதியின் முகத்துவாரத்தில் இரண்டு தூண்டில்களைப் போட்டுவிட்டு மீனுக்காகக் காத்திருக்கிறார்கள் மீனவ நண்பர்களான என்.எஸ்.கே.யும் துரைராஜூம். இந்த இடைவெளியில் கடலோடி மக்களின் அன்றாடப் பாடுகளை இருவரும் லாவணியாகப் பாடி முடிக்க, மீன் சிக்கிவிடுகிறது. தூண்டில் மீன் யாருக்குச் சொந்தம் என்பதில் சண்டை. மீனைத் தூக்கிக்கொண்டு துரைராஜ் ஓட, அவரைத் துரத்திப்பிடிக்கும் என்.எஸ்.கே. அடிக்கக் கையை ஓங்குகிறார். அப்போது துரைராஜ் “ அடிப்பியோ… ங்கொப்பன் மவனே சிங்கம்டா” என்று வீரமாக மீசையை முறுக்குவார்.
இப்படிச் சொன்னதும் நிஜமாகவே என்.எஸ்.கே. அவரை அடிக்க, அடியை வாங்கிக்கொண்டு அதே வசனத்தைச் சுருதி குறைத்து முனகியபடியே மீண்டும் கூறி துரைராஜ் மீசையை முறுக்குவார். இப்போது மீண்டும் என்.எஸ்.கே. அடிக்க, ஒரு கட்டத்தில் அழுதுகொண்டே அந்த வசனத்தை மட்டும் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு துரைராஜ் கெத்து காட்டுவார். இப்படிப் பல படங்களில் தொடர்ந்த இந்த நகைச்சுவை ஜோடியின் அட்டகாசத்தை ரசிகர்கள் அன்று விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள்.
பல தலைமுறைகளுக்குப் பிறகு கவுண்டமணியிடம் செந்தில் வாங்கிய அடி, ‘வின்னர்’ படத்தில் தொடங்கி ‘போக்கிரி’ வரை ‘கைப்புள்ள’ வடிவேலு வாங்கிய அடி என எல்லாவற்றுக்குமே இந்த ஜோடி போட்டுக்கொடுத்த ‘அடி’தான் அஸ்திவாரம். அடிப்பதும் ஆபாச வசனமும்தான் நகைச்சுவை என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் அன்று என்.எஸ்.கே.- துரைராஜ் ஜோடியின் நகைச்சுவையில் யாரையும் பழித்துரைக்காத தூய்மை இருந்தது.
ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே. இல்லாத வெற்றிடத்தில் தனித்து நின்று தனது நகைச்சுவைப் பாதையை டி.எஸ்.துரைராஜ் அமைத்துக்கொண்டாலும் தனது நண்பர் என்.எஸ்.கே.யின் பாதையிலிருந்து விலகிவிடாமல் அவரது பாணியை இறுகப் பிடித்துக்கொண்டார். நடிப்பதிலும் பாடுவதிலும் அள்ளிக் கொடுப்பதிலும் கூட அவர் என்.எஸ்.கே.யின் இன்னொரு பிரதியாகவே சுமார் 20 ஆண்டுகள் தமிழ்த் திரையில் வலம்வந்தார்.
என்.எஸ்.கே.யின் நண்பர்
தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டைதான் டி.எஸ். துரைராஜின் சொந்த ஊர். ஒரு பொற்கொல்லர் குடும்பத்தில் ராஜா நாயுடு நாகலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். துரைராஜுக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார். திருமணமாகிச் சென்ற அக்காவுக்கு உதவியாக இருக்கட்டும் என்று மதுரைக்கு அனுப்பிவைத்தனர். தமிழ் நாடகக் கலையின் தாய்வீடாக இருந்த மதுரையில் அன்று சிறுவர்களை மட்டுமே நடிகர்களாகக் கொண்டு இயங்கிய தமிழ் நாடகக் குழுக்கள் புகழ்பெற்று விளங்கிய காலம்.
சிறுவயது முதலே நக்கலும் நையாண்டியுமாகப் பேசும் துரைராஜுக்கு இட்டுக்கட்டிப் பாட்டுப் பாடும் திறனும் இருந்தது. இதைக் கண்ட அவரது மைத்துனர், எம். கந்தசாமி முதலியார் நடத்திவந்த ’மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் சேர்த்துவிட்டார். 13 வயதில் நாடக கம்பெனியில் சேர்ந்த அவர், அங்கு வந்து சேர்ந்த எம்.ஜி. சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன், காளி. என். ரத்னம், என்.எஸ்.கே. ஆகியோருக்கு நண்பர் ஆனார்.
பிறகு, கலைவாணருடன் நெருங்கி நட்புகொண்டார். அவருடன் அதிக நாடகங்களில் நடித்தார். என்.எஸ்.கே.யுடன் துரைராஜும் சென்னைக்கு வர மாடர்ன் தியேட்டரில் கம்பெனி நடிகர்கள் ஆனார்கள். ஆனால் அடையாளம் பெறும் அளவுக்கு வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ’மேனகா’ படத்தில் கலைவாணருக்கே சினிமாவில் நடிக்கும் முதல் வாய்ப்பு கிடைத்தது; என்றாலும் நண்பன் துரைராஜுக்காகவும் தொடர்ந்து முயன்றுவந்தார் கலைவாணர். ராஜா சாண்டோ இயக்கத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்துத் தயாரித்த ‘திருநீலகண்டர்’(1939) படத்தில் முதல் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தார் கலைவாணர்.
மிகப் பெரிய வெற்றிபெற்ற அந்தப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணனும் துரைராஜும் எரிந்த கட்சி எரியாத கட்சியாகப் பங்கு கொண்ட ‘லாவணி’ கச்சேரி மிகப் பெரிய ஹிட்டடித்தது. டி.எஸ். துரைராஜ் லாவணிப் பாடல் மூலம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டுவரும் கலைவாணரிடம் ‘அந்தக் கணபதிக்கு தொந்தி பெருத்த விதத்தைச் சபையிலே எடுத்துக் கூறு, கூறு!’ என்று துரைராஜ் வில்லங்கமான கேள்வியைக் கேட்க, அதற்குப் பதில் தர முடியாமல் திணறுவார் கலைவாணர். கடைசியில் வேறு வழியில்லாமல் ‘கொழுக்கட்டை தின்றதினால் அண்ணே அண்ணே! தொந்தி பெருத்தது அண்ணே அண்ணே’ என்று கூறி சமாளிப்பார்.
இந்தப் படத்துக்கு முன்பே வாசன் வெளியிட்ட 1939-ல் ‘சிரிக்காதே' என்ற முழு நீள நகைச்சுவை படத்திலும் அதே ஆண்டில் வெளியான ‘ரம்பையின் காதல்’ படத்திலும் டி.எஸ். துரைராஜ் நடித்திருந்தாலும் ‘திருநீலகண்டர்’, ‘சகுந்தலை’ படங்களுக்குப் பிறகு என்.எஸ்.கே. துரைராஜ் ஜோடி மிகவும் பிரபலமானது. இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து தன்னைத் தேடி வந்த சுந்தரம் என்ற இளம் கவிஞனை ‘சக்தி நாடக சபா’வில் சேர்த்துவிட்டார் துரைராஜ். பிறகு ‘கலியுகம்’ என்ற தனது நாடகத்தில் அவரை நடிகராக்கி அழகுபார்த்தார். அவர்தான் பின்னாட்களில் பாட்டுக் கோட்டையாக உயர்ந்து நின்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
கைதும் தனிமையும்
கலைவாணர் இருந்தால் துரைராஜ் அந்தப் படத்தில் இருப்பார் என்ற நிலையை ‘லட்சுமி காந்தன்’ கொலைவழக்கு மாற்றியது. அந்த வழக்கில் கைதாகி 30 மாதங்கள் பாகவதருடன் கலைவாணர் சிறையில் இருக்க வேறு வழியில்லாமல் தனித்து நடிக்கத் தொடங்கினார் டி.எஸ். துரைராஜ். பாகவதர் சிறை சென்ற பிறகு எம்.ஜி.ஆரும் நாயகனாக எழுந்துவந்தார். எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி கணேசன் என அந்நாளின் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ்பெற்ற டி.எஸ். துரைராஜ், தனது நண்பரின் வழியில் பலருக்கும் உதவும் உள்ளம் கொண்டவராக விளங்கினார்.
ஒல்லியான உடல்வாகுடன் திரையில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் பருத்த தோற்றத்துக்கு மாறிய துரைராஜ், தனது தோற்றத்துக்கு ஏற்ற நகைச்சுவை நடிப்புடன் குணசித்திர நடிகர், குறும்பு செய்யும் வில்லன் எனப் பல வேடங்களில் நடித்துப் பல பரிமாணங்களில் கவர்ந்தார். நகைச்சுவை நடிகர்களில் அதிகம் பொருளீட்டியவர் என புகழப்படும் துரைராஜ், சென்னையில் ராயப்பேட்டையில் பெசன்ட் சாலையில் மிகப் பெரிய மாளிகையைக் கட்டி வசித்தார். விலை உயர்ந்த கார்களை வைத்திருந்தார். விரல்களில் வைர மோதிரம் அணிந்தும் வலம் வந்தார்.
குதிரையின் வேகம்
புகழின் உச்சியில் இருந்தவருக்குக் குதிரைப் பந்தயம் மீது தீவிர வேட்கை உருவானது. திரை நடிப்பு, நாடக வருவாய் ஆகிவற்றின் மூலம் சம்பாதித்ததில் பெரும் பகுதியைக் குதிரைப் பந்தயங்களில் பணயம் வைத்தார். உயர்தரப் பந்தயக் குதிரைகளை வாங்கிப் பந்தயங்களில் ஓட விட்டார். ஆனால், குதிரைப் பந்தயம் அவரது திரைவாழ்வின் வேகத்தையும் செல்வத்தையும் குறைத்தது. இழந்த பொருளை மீட்க, பட நிறுவனம் தொடங்கிச் சில படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் செய்தார். சாவித்திரி தங்கையாகவும் தான் அண்ணாகவும் நடித்து 1958-ல் வெளியான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தைத் தயாரித்து இயக்கினார் துரைராஜ்.
அந்தப் படத்தில் தங்கைக்கு அறிவுரை சொல்லும்விதமாக ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’ என்று திருச்சி லோகனாதன் குரலில் இவர் பாடுவதுபோல் அமைந்த பாடல் இன்றும் தமிழகத்தில் டி.எஸ். துரைராஜை நினைவுபடுத்தும் விதத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வங்கிப் பணியில் ரோபாடிக்ஸ் சாஃப்ட்வேர்: ஐசிஐசிஐ-யில் அறிமுகம்


இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தனது வங்கிச் செயல்பாட்டில் ரோபாடிக்ஸ் உபயோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் இத்தகைய சாஃப்ட்வேர் ரோபாடிக்ஸ் தொழில் நுட்பத்தைப் பின்பற்றியுள்ள மிகச் சில வங்கிகளுள் ஒன்றாக ஐசிஐசிஐ வங்கி திகழ்கிறது.

10 லட்சத்திற்கும் மேலான வங்கி பரிவர்த்தனைகளை 200 ரோபாடிக்ஸ் மேற்கொள்வதாக வங்கி தெரிவித்துள்ளது. வங்கி யின் மொத்த செயல்பாடுகளில் 20 சதவீதம் ரோபாடிக்ஸ் மூலம் நிறைவேற்றப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

இத்தகைய ரோபாடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதால் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் நேரம் 60% வரை சேமிக்கப்படுவதாக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சார் தெரிவித்துள்ளார்.

சில்லரை வணிகம், அந்நியச் செலாவணி, கருவூலம் மற்றும் மனிதவளம் உள்ளிட்ட துறைகளில் இந்த ரோபாடிக்ஸ் சேவை பயன் படுத்தப்படுகிறது. இந்த நிதி யாண்டு இறுதியில் ரோபாடிக்ஸ் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த வங்கி திட்டமிட்டுள்ளதாக சாந்தா கொச்சார் தெரிவித்துள்ளார்.

Thursday, September 8, 2016

குடும்ப அமைதியைக் குலைத்த ஸ்மார்ட் போன்.. கூலிப்படை வைத்து மனைவியைத் தீர்த்துக் கட்டிய கணவர்
ஜான்சி, உ.பி.: 5 காசுக்காக கொலை நடந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் உ.பி மாநிலம் ஜான்சியில் ஒரு ஸ்மார்ட் போன் லாக் "கோட்" எண்ணை மறைத்ததற்காக தனது மனைவியை ஆளை வைத்து போட்டுத் தள்ளிவிட்டார் ஒரு கணவர். பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் பெயர் பூனம் வர்மா. ஆகஸ்ட் 29ம் தேதி இந்தக் கொலை நடந்துள்ளது. இவரைக் கொலை செய்தது கணவர் வினீத் குமார் திவாகர் ஏவிய அவரது நண்பர்கள். நடந்தது இதுதான்...! திவாகருக்கு தனது மனைவியின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் வந்துள்ளது. அவர் அடிக்கடி செல்போனில் பேசி வருவதும், செல்போனை கையிலேயே வைத்திருப்பதும் அவரை குழப்பியது. இதையடுத்து சம்பவத்தன்று மனைவியின் ஸ்மார்ட் போனை எடுத்து அதில் உள்ளதைப் பார்க்க முயன்றார் திவாகர். ஆனால் போனை லாக் செய்திருந்தார் பூனம். இதையடுத்து அன்லாக் செய்வதற்காக லாக் கோட் எண்ணைக் கேட்டுள்ளார் திவாகர். ஆனால் அது என் போன், எனது பெர்சனல், லாக் கோடைச் சொல்ல முடியாது என்று கூறி மறுத்துள்ளார் பூனம். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்போதைக்கு அமைதியாகி விட்டார் திவாகர். அடுத்த நாள் அவர் கான்பூர் போய் விட்டார். அங்கிருந்து தனது மனைவிக்குப் போன் செய்து எனது நண்பர்கள் இருவர் வருவர். அவர்களிடம் எனது பெர்சனல் கம்ப்யூட்டரை கொடுத்து அனுப்பு என்று கூறியுள்ளார். அதன்படி அன்று இரவு திவாகரின் நண்பர்கள் லட்சுமண் மற்றும் கமல் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் புகுந்து பூனமை அவரது பெட்ரூமில் வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் நகை, பணத்தை எடுத்துக் கொண்டும், அந்த அறையை சூறையாடி விட்டும், திருட்டும், கொலையும் நடந்தது போல செட்டப் செய்து விட்டு போய் விட்டனர். இந்தக் கொலைக்காக அவர்கள் இருவருக்கும் பணம் கொடுத்துள்ளார் திவாகர். அடுத்த நாள் காலை கண் விழித்தெழுந்த பூனத்தின் 4 வயதுக் குழந்தை தனது தாயார் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தோர் வந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வினீத் குமார் திவாகரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சிக்கினார். விசாரணையின்போது அவர் கூறுகையில் ஸ்மார்ட் போன்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அது இல்லாதவரை எனது மனைவி நன்றாகத்தான் இருந்தார். அது வந்த பிறகு மாறி விட்டார். தனது போனில் ரகசியங்களை அவர் பாதுகாத்து வந்தார். அதை அறிய முயன்றபோதுதான் இந்த விபரீதமே நடந்தது என்றார் திவாகர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/husband-kills-wife-as-she-hides-the-smartphone-lock-code-262231.html

மாடிப்படியும் பாடம் சொல்லும்

குள.சண்முகசுந்தரம்

எப்படா மணியடிக்கும் புத்தகப் பையைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு ஓடலாம் என்றுதான் மாணவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஆசிரியர் பா.சத்தியவேலிடம் படிக்கும் மாணவர்களிடம், “நேரம் ஆகிருச்சு கிளம்புங்கப்பா” என்று சொல்லித்தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது.

மைதானத்தில் மாவு கணக்கு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சத்தியவேல். இவர் தனது மாணவர்களுக்கு மூன்று விதமாகப் பாடம் கற்பிக்கிறார்.

முதலாவது - விளையாட்டு முறை கணிதம். பெரும்பாலும் இந்த வகுப்பு மைதானத்தில்தான் நடைபெறும். உதாரணமாக கிராஃப் போட வேண்டுமென்றால் கோல மாவைக் கொண்டு மாணவர்களே ‘ஒய்’ அச்சு, ‘எக்ஸ்’ அச்சு போடுவார்கள். அதன் பிறகு ஒவ்வொரு புள்ளிகளும் குறிக்கப்பட்டு மாணவர்கள் புள்ளிக்கு ஒருவராக நிற்பார்கள். அவர்கள் கையில் கயிறு, நூலைக் கொடுத்து பிடிக்கச் சொல்லி அதன்மூலம் அட்டகாசமாக கிராஃப்பை வடிவமைத்துக் காட்டுவார் சத்தியவேல்.

ஆடைகளை வைத்து ஆஃபர் கணக்கு

இதேபோல், எண் கோடு வரைதல் உள்ளிட்ட பாடங்களையும் எளிமையாக படிக்க வைக்கிறார். அடுத்தது - செயல்வழிக் கல்வி. மாணவர்கள் வீட்டிலிருந்து ஏதாவது புத்தாடைகளை எடுத்துவந்து வரிசையாக வைப்பார்கள். அதன் ஒவ்வொன்றின் விலையும் தனித்தனியாக எழுதி வைக்கப்படும். அதற்குக் கீழே 10 சதவீதம் 5 சதவீதம் தள்ளுபடி என எழுதப்பட்டிருக்கும். 5 சதவீதம் தள்ளுபடி என்றால் அது எவ்வளவு ரூபாய்? அதுபோக அந்தத் துணியின் விலை எவ்வளவு? இதுபோன்ற விஷயங்களை மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

வங்கிகளை வைத்து வட்டிக் கணக்கு

சிலநேரம், மாணவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வரும் காய் - கனிகளுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து, ஒருவர் இன்னொருவருக்கு அதை விற்பனை செய்ய வைத்து கொள்முதல் விலை, விற்பனை விலை, லாபம், நட்டம் இவை அனைத்தையும் மிகச் சரியாக கணக்கிட வைக்கிறார். இதேபோல் மாணவர்களைப் பிரபல வங்கிகளின் மேலாளர்கள்போல் உட்கார வைத்து அவர்களிடம் வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றை மற்ற மாணவர்களைக் கேட்க வைக்கிறார். மேலாளர்கள் தங்கள் வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதம் கால நிர்ணயம் இதையெல்லாம் சொல்வார்கள். அதை வைத்து வட்டி கணக்கிட்டு எந்த வங்கியின் வட்டி விகிதம் சாதகமானது என்பதை மற்ற மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

மூன்றாவது - கணினி வழிக் கணிதம். கணினியில் கேம்ஸ் விளையாட்டை விரும்பாத பிள்ளைகள் அரிது. அந்த கேம்ஸ்களோடு எஜுகேஷன் சாஃப்ட்வேர்களைச் சேர்த்து கணக்கு, ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களை மாணவர்களை தன் விருப்பத்தில் படிக்க வைக்கிறார்.

மாடிப்படியும் பாடம் சொல்லும்

“எனது வகுப்பில் மாணவர்கள் படிப்பு பயமில்லாமல் சுதந்திரமாக இருக்கிறார்கள். அதனால்தான் வகுப்பு முடிந்தாலும் அவர்களுக்கு வீட்டுக்குப் போக மனம் வருவதில்லை. வாய்ப்பாடு, ஆங்கிலப் பாடல்கள், வெண்பாக்கள், உள்ளிட்டவைகளை மாணவர்களைக் கொண்டே பாடவைத்து வீடியோக்களாக்கி வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட பாடம் நடத்தும்போதும் உணவு இடைவேளையின்போதும் அந்த வீடியோ காட்சிகள் பவர் பாயிண்ட் மூலம் ஒளிபரப்பப்படும்.



6,7,8 வகுப்புகள் மாடியில் உள்ளன. இவர்களுக்காக மாடி படிகளில் தினமும் சில சொற்களோ எண்களோ எழுதி வைக்கப்படும் 6,7,8 வகுப்பு மாணவர்கள் தினமும் கட்டாயம் 8 முறை மாடிப்படியில் ஏறி இறங்க வேண்டும். அப்படி இறங்கும்போது படிகளில் இருக்கும் வாசகங்களை படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இறுதி வகுப்பில் அந்தச் சொற்களை சம்பந்தப்படுத்தி நடத்தப்படும் வினாடி வினாவுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் மாடிப்படி பாடத்தைக் கட்டாயம் உள்வாங்கி வைத்திருப்பார்கள். இப்படித்தான் விளையாட்டுப் போக்காய் போய்க்கொண்டிருக்கிறது எங்களது பயிற்று முறை” என்று தன்னுடைய சுவாரசியமான கற்பிக்கும் முறையை மிக எளிமையாகச் சொல்கிறார் சத்தியவேல்.

தொடர்புக்கு: 86086 75422

பார்வை: கொல்வதுதான் காதலா?

பிருந்தா சீனிவாசன்

சென்னை, கரூர், தூத்துக்குடி, திருச்சி, புதுச்சேரி… ஊர்தோறும் பெண்கள் தொடர்ந்து சிதைக்கப்படுகிறார்கள். கல்லூரி, தேவாலயம், பேருந்து நிலையம், மக்கள் நிறைந்த சாலை எதுவும் கணக்கில்லை. ஒரு பெண் - கட்டையால் அடிக்கப்பட்டோ, கத்தியால் கூறுபோடப்பட்டோ, கைகள் முறிக்கப்பட்டோ குற்றுயிரும் குலையுயிருமாகவோ சிதைக்கப்படலாம். ஒருவனுடைய தொலைபேசி அழைப்பைப் புறக்கணித்ததும் காதலை நிராகரித்ததும் அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படலாம். “இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். பாதியில கழட்டி விட்டுட்டுப் போயிடுவாங்க” என்று ஊர்கூடி இந்தக் கொடூரங்களை நியாயப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கவும் முயற்சிக்கலாம். ‘நடவடிக்கை எடுக்கிறோம்’என்று காவல்துறை சொல்ல, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொதிப்பு அடங்கி, பெண்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று காத்திருக்கலாம். விவாதங்கள் அனைத்தும் தணிந்துபோகும் நாளில் ஒரு பெண்ணோ, பல பெண்களோ காதலின் பெயரால் வெட்டிச் சாய்க்கப்பட்டு, மீண்டும் தலைப்புச் செய்தியாகலாம். இப்படிப்பட்ட அவலச் சூழலில்தான் ஒரு பெண் இங்கே பிழைத்திருக்க வேண்டியிருக்கிறது.

எதையுமே சாதிக்காத கல்வி

சமீப காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் பெண்கள் மீதான இதுபோன்ற வன்முறைகளில் பெரும்பாலானவை காதலை மையமாகக் கொண்டு நடப்பதாகச் சொல்லப்படுகின்றன. உண்மைக் காதலுக்கு உயிரைக் கொல்லும் வன்சக்தி இல்லை. பிரிந்த பிறகும் தொடரும் பிரியம்தானே காதல். ஆனால், காதலைப் பற்றிய எந்தப் புரிதலும் அற்று பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகளுக்கு என்ன காரணம்? ஒரு பெண் தன்னை நிராகரித்ததுமே கத்தியால் குத்த வேண்டும் என்ற வெறி ஏன் ஓர் ஆணுக்கு ஏற்படுகிறது? இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுகிறவர்களில் பெரும்பாலோர் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? மனதைப் பக்குவப்படுத்தி, சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தாத கல்வி முறை, புதிதாக வேறென்ன திறமைகளை மாணவர்களுக்குக் கற்றுத்தரப் போகிறது? மதிப்பெண்ணைப் பெற்றுத்தருவதைத் தாண்டி, வாழ்வுக்கான மாண்புகளையும் பயிற்றுவிப்பதுதானே சிறந்த கல்வி? புதிய கல்விக் கொள்கையில் அது இல்லை, இது இருக்கிறது என்று வாதிடுகிறவர்கள், மாணவர்களை மாண்புள்ளவர்களாக மாற்றும் வல்லமை அந்தக் கல்விக் கொள்கைக்கு இருக்கிறதா என்பதையும் தங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

சட்டம் சாதிக்குமா?

பெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த சட்டங்களை மேம்படுத்த வேண்டும், தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்று சொல்கிறவர்களும் உண்டு. அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்ற பயம் தவறுகளை முற்றிலும் தடுக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் எண்ணத்துடன் கத்தி எடுக்கிறவர்களைச் சட்டத்தால் என்ன செய்ய முடியும்?

பெற்றோர்கள், ஆசிரியர்களா?

இன்றைய இளைஞர்கள் சரியான புரிதலுடன் இல்லை, அதனால்தான் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகிறது என்ற பொதுவான கருத்தும் நிலவுகிறது. இளைஞர்களின் பெற்றோருக்குத் தங்கள் மகன்கள் குறித்தோ, அவர்களின் வளர்ப்பு குறித்தோ சரியான புரிதல் இருக்கிறதா? பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளைப் போலவே வளர்க்கிறார்கள். எதிலும் ஜெயித்துவிட வேண்டும், அவர்களுக்குக் கிடைக்காதது எதுவுமே இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். கடன் வாங்கியாவது பிள்ளைகளின் அதீத ஆவலைப் பூர்த்திசெய்துவிடுகிறார்கள். எந்தக் கட்டத்திலும் தோல்விகளை, ஏமாற்றங்களை, நிராகரிப்புகளை ஏற்றுக்கொள்ளத் தங்கள் பிள்ளைகளை அவர்கள் பழக்குவதே இல்லை. அவசியம் எது, அநாவசியம் எது என்ற வேறுபாடே தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர், பின்னாளில் தங்கள் பிள்ளை தறுதலையாக மாறுவதை நினைத்துப் புலம்பி என்ன பயன்?

பாலினப் பாகுபாடு

பெண்கள் மீதான வன்முறையின் அடிப்படைக் காரணி, சிறிதளவுகூட மாறாத ஆணாதிக்க மனோபாவம்தான். பெண் என்றால் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து, கிடைக்காததை நினைத்து உள்ளுக்குள் புழுங்கி தியாகியாக வாழ வேண்டும் என்றே காலங்காலமாக நிர்பந்திக்கப்படுகிறது. ஆனால், ஆணோ யாருக்கும் அடங்காத காளையாகத் திரியலாம். உடன்பிறந்த சகோதரிகளை அடக்கிவைக்கும் சிறுவனே, இளைஞனாகிறபோது காதலை மறுக்கும் பெண்ணை வக்கிரத்தோடு பழிவாங்குகிறான். பிறப்பு முதலே அவனுக்குக் குடும்பமும் சமூகமும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது, அவன் ஆண் என்பதை மட்டுமல்லாமல், ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதையும்தான். ஆண் எதற்கும் அடங்கக் கூடாது; அழுவதும் தோற்பதும் பெண்களின் குணம் என்றே அவனுக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் சாதாரணப் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் வெறியாட்டம் போடுகிறது ஆண் என்கிற அகந்தை.

இந்த வகையில் பெருகிவரும் தொழில்நுட்பமும், சமூக வலைத்தளங்களும் இளைஞர்கள் மனதில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கிற வக்கிரம்கூட உடனுக்குடன் கையடக்கக் கருவியில் காணக் கிடைத்துவிடுகிறது. அடுத்தவர் அந்தரங்கம், வன்மம், பழிவாங்கல் என்று பாகுபாடே இல்லாமல் அனைத்தும், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் வக்கிர எண்ணங்களுக்கு தூபம் போடுகின்றன.

நுணுக்கமாகச் செயல்படும் ஆணாதிக்கம்

இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஓர் உயிரோ, உணர்வுகள் நிறைந்த சக மனுஷியோ இல்லை. அவளுக்கென்று எந்தத் தேர்வும் இருக்கக் கூடாது என்பதை மிக நுட்பமாகக் கட்டமைத்து வைத்திருக்கிறது இந்த ஆண் மைய சமூகம். பெண்ணின் நடத்தையை ஒழுக்கத்தோடும், பண்பாடு கலாசாரத்துடனும் பிணைத்துவிட்டதன் மூலமாகத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க நினைக்கிறது ஆணாதிக்கச் சமூகம். ஒரு பெண், தனித்து முடிவெடுத்துத் தன் முடிவுகளைச் செயல்படுத்துகிறபோது நிராகரிக்கப்பட்ட ஆண் மனதால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ‘தன்னை ஏமாற்றிவிட்டாள், தன்னைச் சுரண்டிவிட்டாள்’ என்று ஓர் ஆண் சொல்வதன் மூலமாகப் பெண்ணின் தேர்வு செய்யும் உரிமை இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

எந்தத் தகுதியும் இல்லாமல் பொறுப்பற்றுத் திரியும் ஆண்களைக் கதாநாயகர்களாகச் சித்தரிக்கும் திரைப்படங்களும் ஓர் ஆணின் ஆளுமையை வடிவமைப்பதைத் தீர்மானிக்கின்றன. பாடல் வரிகள், வசனங்கள் என்று அனைத்திலும் பெண்களைக் கொச்சைப்படுத்துவதன் மூலமாகப் பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே அவை பிரகடனப்படுத்துகின்றன.

ஆண் பெண் இரு பாலினரும் சீரழிந்துபோவதற்கான அத்தனைச் சாத்தியங்களையும் உள்ளடக்கிக் காத்திருக்கிறது இந்தச் சமூகம். அவர்களை அதிலிருந்து மீட்டு, நல்வழிக்குச் செல்ல வழிகாட்டுவதுதான் இப்போது நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். முதலில் வீட்டிலிருந்து தொடங்குவோம் மாற்றத்தை. நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் சமத்துவத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுப்போம்; தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொள்ளச் சொல்லிக்கொடுப்போம். இதுபோன்ற அடிப்படையான விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டால் அதன் ஒளியில் சமூக மாற்றமும் மெல்ல சாத்தியப்படும்.

கண்ணீரும் புன்னகையும்: கருக்கலைப்புக்கு மறுத்ததால் கொலை முயற்சி


ஆந்திர மாநிலத்தின் முதுக்கூர் கிராமத்தில் கர்ப்பிணிப் பெண் கருக்கலைப்பு செய்ய மறுத்ததால், கணவர் வீட்டாரின் கொலைமுயற்சிக்கு ஆளானார். ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைக்குத் தாயான கிரிஜா, இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தபோது, ஜோதிடர் ஒருவர் மீண்டும் பெண்குழந்தைதான் பிறக்கும் என்று கூறியிருக்கிறார். அவருடைய மாமியாரும் மைத்துனியும் கிரிஜாவைக் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கிரிஜா அதற்கு மறுத்தார். இந்நிலையில் கிரிஜா உறங்கும் நேரத்தில் அவர் வயிற்றில் அமிலம் கலந்த மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்றனர். கிரிஜா கூச்சல் போட ஊரார் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிரிஜா தற்போது தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தண்ணீருக்காக 20 கோடி மணி நேரம்

உலகம் முழுவதும் பெண்களும் பெண்குழந்தைகளும் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டுமே தினமும் 20 கோடி மணி நேரத்தைச் செலவழிப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நீர் வாரம் கடந்த திங்களன்று தொடங்கியதை அடுத்து இந்தச் செய்தியை யுனிசெப் வெளியுட்டுள்ளது. சுத்தமான நீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் முப்பது நிமிடப் பயணத் தொலைவுக்குள் உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்க வைப்பதுதான் ஐ.நா. சபையின் வளம் குன்றா வளர்ச்சி இலக்காக உள்ளது என்று யுனிசெப் குளோபல் ஹெட் ஆஃப் வாட்டர் சானிட்டேஷன் அண்ட் ஹைஜீனின் உலகத் தலைவர் சஞ்சய் விஜிசேகரா கூறியுள்ளார். வீட்டுக்கு அருகே தண்ணீர் கிடைக்காதபோது, தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும் பொறுப்பு பெண்கள், பெண் குழந்தைகளின் தலையிலேயே விழுவதாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரமும் ஓய்வு நேரமும் குழந்தைகளைப் பராமரிக்கும் நேரமும் குறைகிறது. பெண்குழந்தைகளின் கல்வி குறிப்பாகப் பாதிக்கப்படுகிறது என்று யுனிசெப் எச்சரித்துள்ளது.

Wednesday, September 7, 2016

ரயில் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி : தாய் காலும் துண்டானது; சித்தப்பிரமையான நபர்

சென்னை: மாம்பலம் ரயில் நிலையத்தில், தஞ்சையில் இருந்து சென்னை வந்த மன்னை விரைவு ரயிலில், கணவன் கண் முன்னே, மனைவி தவறவிட்ட ஒன்றரை வயது குழந்தை

பலியானது; தாய்க்கும் கால் துண்டானது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல், 40; பேராசிரியர். சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி லட்சுமி, 32. கே.கே.நகர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஏகஸ்ரீ என்ற மகள் இருந்தாள். கடந்த வாரம், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு, குடும்பத்துடன் சுந்தரவடிவேலு, விழா முடிந்து, நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு, தஞ்சையிலிருந்து சென்னைக்கு வரும் மன்னை விரைவு ரயிலில், மனைவி மற்றும் குழந்தையுடன், முன்பதிவு செய்யப்பட்ட, இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணித்தார்.




கோர சம்பவம் : சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி, கே.கே.நகர் செல்வது எளிது என்பதால், அந்த ரயில் நிலையத்தில் இறங்குவது என, முடிவு செய்துள்ளனர். ரயில், நேற்று காலை, 5:10 மணிக்கு, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, துாக்கத்தில் இருந்த சுந்தரவடிவேலும் அவரது மனைவியும், ரயில் புறப்பட தயாராக இருந்த சமயத்தில், கண் விழித்து பார்த்துள்ளனர். தாங்கள் இறங்க வேண்டி ரயில் நிலையம் வந்துவிட்டதால், சொந்த

ஊரிலிருந்து எடுத்து வந்த அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை துாக்கிக் கொண்டு சுந்தரவடிவேல் முதலில் இறங்கி உள்ளார்.அவரை தொடர்ந்து, கையில் குழந்தையை துாக்கியபடி லட்சு மியும் இறங்கி உள்ளார். அப்போது, ரயில் வேகமெடுக்கத் துவங்கியதாக தெரிகிறது. இறங்கிவிடலாம் என நினைத்து, நடைமேடையில் கால் வைக்க முயன்ற லட்சுமி, நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில், லட்சுமி வைத்திருந்த குழந்தை, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே இருந்த துவாரத்தில் விழுந்தது.இதனால், ''என்னங்க... குழந்தைய காப்பாத்துங்க,'' என பதறியபடி, அந்த துவாரம் வழியாக லட்சுமி இறங்கினார். இதனால், அவரது காலும் மாட்டிக்

கொண்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர நிகழ்வில், குழந்தையும் மனைவியும்

உயிருக்கு போராடுவதை கண்ட சுந்தரவடிவேல் கதறி அழுத காட்சி, கல் நெஞ்சத்தையும் கரைப்பதாக இருந்தது.




மீட்கும் முயற்சி : இந்த கோர விபத்தை கண்டு, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் கூச்சல் போட்டனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, குழந்தை மற்றும் லட்சுமியை மீட்கும் முயற்சியில்

ஈடுபட்டனர்.ஆனால் அந்த பச்ச மண், ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து கிடந்தது. இடது கால் துண்டாகிக் கிடந்த லட்சுமி, மகளின் பேரை உச்சரித்தவாறு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். தகவலறிந்து வந்த, எழும்பூர் ரயில்வே போலீசார், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் உடல், பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. கண் எதிரே குழந்தை இறந்து விட, மனைவியும் உயிருக்கு போராடு வருவதை கண்ட சுந்தரவடிவேல், பித்துப்பிடித்தவர் போல் காணப்படுகிறார்; அவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுந்தரவடிவேலின் சொந்த ஊரிலிருந்து, அவரது உறவினர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். நேற்று காலை நடந்த இந்த கோர விபத்தால், மாம்பலம் ரயில் நிலையம் சோகமயமாக காட்சி அளித்தது.
'என்னால முடியலடா சாமி... ஆள விடு!' : 25 பரோட்டா சாப்பிட முடியாமல் திணறல்

அன்னுார் : கோவை, அன்னுார் அருகே, 25 பரோட்டா சாப்பிடும் போட்டியில், 5,001 ரூபாய் பரிசுத் தொகை யாருக்குமே கிடைக்கவில்லை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனையை கேள்விப்பட்டிருப்போம். சற்று வித்தியாசமாக, கோவை அன்னுார் அருகே, ஒரு ஓட்டல் நிர்வாகம், வெண்ணிலா கபடி குழு திரைப்பட பாணியில், 25 பரோட்டாக்கள் சாப்பிட்டால், 5,001 ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், 200 பேர் குவிந்தனர். 

பங்கேற்றவர்களிடம், 100 ரூபாயும் பெறப்பட்டது. இதில், காலை உணவை தவிர்த்து வந்தவர்கள் தான் ஏராளம். முதல் சுற்றில், ஐந்து பேர் பங்கேற்றனர். குருமாவை அதிகம் தொட்டுக் கொண்டால், பரோட்டா சாப்பிட முடியாது என்று உணர்ந்த பலர், பரோட்டாவை மட்டுமே, 'ருசி' பார்த்தனர்; நீரையும் அதிகம் பருகவில்லை. இதில், செல்வபுரத்தை சேர்ந்த பசும்பொன் அழகுக்கு மட்டுமே, 10 பரோட்டாக்களை விழுங்க முடிந்தது.இரண்டாவது சுற்றில், பங்கேற்ற ஆறு பேரில், ஒருவர் கூட, ஏழு பரோட்டாவை தாண்டவில்லை. மூன்றாவது சுற்றில், யாரும் பங்கேற்காததால், 20 பரோட்டா சாப்பிட்டாலே, பரிசுத் தொகை வழங்கப்படும் என, ஓட்டல் உரிமையாளர் தெரிவித்தும், ஒருவரும் அசைந்து கொடுக்கவில்லை.

 பரோட்டாவை சாப்பிட்டவர்கள், அதற்குரிய பணத்தை கொடுத்து, பரிசு வாங்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் திரும்பினர். சாப்பிட வந்தவர்களை விட, பார்க்க வந்த கூட்டமே அதிகம். பத்து பரோட்டா சாப்பிட்ட பசும்பொன் அழகு கூறுகையில், ''செல்வபுரத்தில் பரோட்டா மாஸ்டராக உள்ளேன். சாதாரணமாக, காலையில், 20 பரோட்டா சாப்பிடுவேன். இங்கு, 10க்கு மேல் சாப்பிட முடியவில்லை. பரோட்டாவின் எடை மற்றும் எண்ணெய் அதிகமாக இருந்தது, இதற்கு காரணம்,'' என்றார். பரிசுத் தொகை வாங்க முடியவில்லை என்ற ஏக்கமும், யாருக்கு கிடைக்கும் என்ற பொதுமக்களின் ஆர்வமும், கடைசி வரை நிறைவேறாமலே போனது.
எஸ்.ஆர்.எம்., பல்கலையிடம் பணம் பறிக்க முயற்சி : சமூக விரோதிகள் மீது பதிவாளர் போலீசில் புகார்

DINAMALAR
சென்னை: எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, சமூக விரோதிகள் பணம் பறிக்க முயற்சி செய்வதாக, பல்கலை பதிவாளர், போலீசில் புகார் செய்துள்ளார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் சேதுராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனு: ஒன்பது ஆண்டுகளாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளராக உள்ளேன். எங்கள் பல்கலை., பொறியியல், மருத்துவம், சட்டம் என, பல்வேறு பிரிவுகளில், உயர்தர கல்வியை அளித்து வருகிறது. துரதிஷ்டவசமாக, டாக்டர் ஜெயச்சந்திரன் உட்பட சிலர் அளித்த புகாரால், எங்கள் பல்கலை வேந்தரான, பச்சமுத்து, ஆக., 25ல், போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார்; அவரை ஜாமினில் எடுக்க முயன்று வருகிறோம்.

பச்சமுத்து நடத்தி வரும், இந்திய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலராக, மதன் என்பவர் இருந்தார். அவர், பச்சமுத்துவுடன் இருந்த பழக்கத்தை பயன்படுத்தி, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக, பல கோடி ரூபாய் சுருட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். அவர் மீது, பெற்றோர், மாணவர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், பச்சமுத்துவையும், மோசடி குற்றச்சாட்டில், மதன் சேர்த்து விட்டார். இதனால் ஏற்பட்டுள்ள களங்கத்தை, பச்சமுத்து, சட்டரீதியாக எதிர்கொண்டு, தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார்.

பெற்றோர் மற்றும் மாணவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை பச்சமுத்து மறுத்துள்ள போதிலும், ஜாமின் மனுவில், புகார் தாரர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், 69 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் கட்டி விடுவதாக கூறி உள்ளார்.இந்நிலையில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி, தொழில் முறை எதிரிகள், சமூக விரோதிகள், புகார்தாரர்களில் ஒரு சிலர், எங்களுக்கு பல வடிவங்களில் மிரட்டல் கொடுத்து, பணம் பறிக்க முயன்று வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே, சட்ட ரீதியாக எதிர்கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளிலும், சம்பந்தப்பட்டோர் பணம் பறிக்க முயன்று வருகின்றனர்; எங்கள் பல்கலையை முடக்க சதி நடக்கிறது. நீங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், சமூக விரோத கும்பல்கள், எங்களிடம் பணம் பறிப்பதுடன், உயிருக்கும் ஆபத்தும் ஏற்படுத்தி விடுவர். எங்கள் கல்வி நிறுவனங்களில் பயிலும், 52 ஆயிரம் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி, எங்களிடம் பணம் பறிக்க முயலும் கும்பல் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Punjab’s NRI quota criteria a ‘fraud’ on education system:SC

Punjab’s NRI quota criteria a ‘fraud’ on education system: SC Dhananjay.Mahapatra@timesofindia.com 25.09.2024  New Delhi : Supreme Court on ...