Tuesday, December 27, 2016

ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது: வருமான வரித்துறை அறிவிப்பு


சென்னை:

ராமமோகன ராவ் வீட்டில் சோதனை நடத்தியது பற்றி வருமான வரித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராம மோகனராவின் மகன் விவேக்குக்கும், தொழில் அதிபர் சேகர்ரெட் டிக்கும் தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் போதுமான அளவுக்கு உள்ளன. அந்த அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சோதனை நடத்துவதற்காக விவேக் பெயரில் வாரண்ட் பெறப்பட்டது. அந்த வாரண்டை வைத்துதான் 10-க் கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒருவரது உறவினர்கள் அனைவரது வீட்டிலும் நாங்கள் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் விவேக்கின் தந்தை என்ற அடிப்படையில் ராம மோகனராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது.

சோதனை நடத்தும்போது துணை நிலை ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. பிற மாநிலங்களில் வருமான வரி சோதனை நடந்தபோது பல தடவை பாதுகாப்புக்காக துணைநிலை ராணுவம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ராமமோகன ராவ் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் நான்கே நான்கு துணைநிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டது. இதில் எந்த தவறும் இல்லை.

ராமமோகன ராவ் வீட்டிலும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்துவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அந்த அனுமதி டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்டதாகும்.

அந்த அனுமதியின் பேரில்தான் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

வருமான வரித்துறை சோதனை நடத்த யாருக்கு தகவல் தெரிவிக்கவோ, அனுமதி பெற வேண்டிய அவசியமோ இல்லை. சட்டப்படிதான் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதுபோன்ற சோதனை நடத்த வருமான வரித்துறைக்கு முழு சுதந்திரம் உண்டு. அந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது.

ராமமோகன ராவ் வீட்டிலும் அவரது மகன் விவேக் வீட்டிலும் விதிமுறை மீறி சோதனை நடத்தப்பட வில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் சோதனை நடத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

How PM Modi's demonetisation made Arun Jaitley's budget task a trial by fire


How PM Modi's demonetisation made Arun Jaitley's budget task a trial by fire
By TS Sudhir

When J Jayalalithaa had to step down as the Tamil Nadu Chief Minister following her conviction in September 2014 in the disproportionate assets case by a Bengaluru court and O Panneerselvam was sworn-in as her successor, the AIADMK would refer to Jayalalithaa as 'people's chief minister'. Everyone knew OPS was CM only in name and that Jaya wielded the real power.

P Rama Mohana Rao, the former chief secretary appointed by Jayalalithaa in June 2016, is trying a similar gimmick. He claims he is still the chief secretary even though the Tamil Nadu government appointed Girija Vaidyanathan in his place after the raids by Income Tax officials at Rao's home last week. The government portal describes his status as "on wait". But the Panneerselvam government in Rao's rather frank opinion, "does not have the guts to remove him". By invoking Jayalalithaa and saying he is going to the people's court, Rao is trying to position himself as Puratchi Thalaivar's chief secretary. What is left unsaid is, if Panneerselvam can claim immunity by saying he was appointed by Amma, so can Rao.

The battle in Rao's worldview is between Chennai and New Delhi. Taking on the Modi sarkaar, no less, Rao claims that the CRPF barged into his residence at 5.30am. The warrant, he says, was not for him but for his son. And that only Rs 1.12 lakh and "little jewellery" was found at his home.

If what Rao says is true, the I-T department and its political bosses, prima facie, seem to have bungled. It is difficult to believe though that a chief secretary would have been raided without a nod from the very top. The I-T sleuths not only raided Rao's home but also the chief secretary's office at Fort St. George, that houses the Tamil Nadu Secretariat. They With the exception of Delhi Chief Minister's Arvind Kejriwal's principal secretary, a chief secretary's office has not been searched or raided by a central agency in recent memory. This when Panneerselvam was working in his chambers 200 metres away. Did Panneerselvam know of this raid, that is now being painted as an affront to the government of Tamil Nadu? It gives meat to West Bengal Chief Minister Mamata Baneejee's accusation that this raid is an attack on the federal structure under the Constitution of India. Significantly, Rao also thanked Mamata and Rahul Gandhi for "their support." An indication that his fight is political.

Ever since the I-T raids last week, the Tamil Nadu government has maintained silence. The only AIADMK voices to have expressed displeasure are spokespersons Dheeran and MP SR Balasubramanian. The MP who is a leader of TMC vintage and joined the AIADMK recently condemned the involvement of the CRPF in the raids. In his opinion, it gave the impression that the state police force was not to be trusted.

The fact that the chief secretary has come out all guns blazing against the current Tamil Nadu government shows what he thinks of his boss, Panneerselvam. By also saying he was appointed by Amma and trained by her, Rao is pitting the Amma team against operations. Rao speaks like a politician, not a bureaucrat.

Rao also clearly hints at a political conspiracy when he says the raid would not have happened if Jayalalithaa was alive. Claiming his life is in danger, Rao says he is being targetted. The sense one gets is Rao is not saying a lie as far as this point is concerned. Having worked in the Chief Minister's office as Jayalalithaa's secretary through a large part of her 2011-2016 term, till his appointment as the chief secretary, Rao is the keeper of many secrets and knows a lot. The I-T raids, per se, may not have thrown up dirt on him but he would be a trove of information on possible wrongdoings by the power structure in Tamil Nadu since 2011.

Make no mistake about it. The I-T raids were deeply political. The profile of people raided had connections with powerful politicians, including a senior AIADMK minister, considered close to Sasikala and, who too, was in running to become a chief minister. Several of those raided are involved in sand mining contracts and possible links to PWD contractor J Sekhar Reddy who has been arrested by the CBI. Though Rao has denied any connection with Reddy, the two raids coming close on the heels of each other led to suspicion. That Congress spokesperson Abhishek Manu Singhvi was hired to fight in court to secure bail for Reddy's associate shows their influence and what is at stake.

What is also significant is that Rao was raided a day after meeting Panneerselvam with the prime minister in Delhi. That led many to believe that Panneerselvam cut deal with the BJP to keep Sasikala at bay. By asking if the raid on the chief secretary's office was with Panneerselvam's permission, he is forcing the chief minister to react. He has in effect accused Panneerselvam of failing to protect the sanctity of the office of the chief secretary of Tamil Nadu, who he says was under house arrest for 26 hours. Can such a man be trusted to protect Tamil Nadu's interests? Let's leave that unsaid.

From what it seems, Rao-speak is a carefully calibrated strategy. Chennai (read Sasikala-led AIADMK) has decided to take on the BJP. If Balasubramanian's opening salvo was to test the waters, Rao has served it hot. With sources indicating that the BJP won't be too happy to let Sasikala and family control the AIADMK, the run-up to 29 December when the AIADMK party council will meet is expected to be stormy.

What is in Delhi's favour is public perception that there has been a lot of corruption in the system and needs a clean-up. But just that wont be enough.

As far as Rao is concerned, he has made it clear that he is not going down without a fight. Given that the rulebook states that advisor to the government Sheela Balakrishnan "advises, aids and directs the chief secretary", he could use that as a ploy to say the attack on him is an attack on everyone Amma trusted in.

The battlelines are drawn.

http://www.firstpost.com/politics/i-t-raids-political-tn-chief-secy-raos-attack-on-modi-a-well-calibrated-strategy-3175824.html

Reliance Jio's 'Happy New Year' offer in trouble, here's how

ET Bureau | 

NEW DELHI: Telecom Regulatory Authority of India (Trai) has asked Reliance Jio Infocomm to explain why extension of its free data and voice offer should not be seen as violation of norms that limit promotional offers to 90 days.

"We've asked them how the plans are different. A letter to this effect was sent a week ago and a reply is expected any time," said a senior official at Trai. "We're examining the issue closely."

Jio has five days to respond to the letter sent on December 20. The Mukesh Ambani-owned telco has also been asked to clarify why its promotional scheme should not be treated as "predatory." An email to Jio seeking response to the development did not elicit a response as of press time on Monday.

The Reliance company had announced free data and voice calls for existing and new customers, under its 'Happy New Year offer,' on December 1. It initially announced a 'welcome' offer giving free data and voice for three months from September, which was supposed to end on December 3.

The official said that upon initial examination, the new offer 'prima facie' appeared to be an extension of the old promotional offer — unlimited video calling, free voice calls, data and Jio apps, among others — with a small change in quantum of data offered.

In a December 7 communication to Trai, Jio had informed that another promotional offer would be available to new consumers from December 4, for three months, and consumers availing earlier promotional offers would would be migrated to the new offer as well.

Trai's move to question Jio comes close on the heels of incumbent Bharti Airtel moving Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT). In its petition, Bharti asked the court to direct Trai to ensure that Jio does not provide its free voice and data plan beyond December 3.

Bharti alleged that Trai was being a "mute spectator" to alleged violations. According to Trai sources, Jio said the new offer was different from Welcome offer in terms of data usage and speed.

The old offer provided 4GB of free data a day, while the new one free data is only at 1GB a day, as per fair usage policy. Further, the new offer allows users to recharge data and speed, while the earlier offer did not allow renewal.

An estimated month-wise projection subscriber additions that may happen till March 2017 have also been sought, sources added, saying Jio's base had risen to 63 million as on December 18.

'தை பிறந்ததும் தேர்தலில் போட்டியிடாமலேயே தமிழக முதல்வராகிறார் வி.கே.சசிகலா'

Return to frontpage
குள.சண்முகசுந்தரம்

மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் முதல் கையெழுத்து எனவும் தகவல்
தேர்தலில் போட்டியிடாமலேயே ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிமுக-வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருத்த எதிர்பார்ப்புக்கு இடை யில் அதிமுக பொதுக்குழு டிசம்பர் 29-ல் சென்னையில் கூடுகிறது. இந்தப் பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இதனால், பொதுக் குழுவை சிறு சலசலப்புகூட இல் லாமல் வெற்றிகரமாக நடத்திமுடிப் பதற்கான அனைத்து வேலைகளும் சசிகலா தரப்பிலிருந்து கவனமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவ ருக்கு ஜோதிடம் கணித்துக் கொடுத்த ஜோதிடர் குழுவின் ஆலோசனைப்படி அரசியலின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் சசிகலா தயாராகி வருகிறார். இதுகுறித்து அதிமுகவின் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள் ‘‘29-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் சசிகலா, புத்தாண்டில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் எளிய முறை யில் அவர் கட்சியின் பொதுச்செய லாளராக பதவி ஏற்றுக்கொள்வார்.

இதையடுத்து, தை பிறந்ததும் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கான வேலைகள் முடுக்கிவிடப்படும். இதற்கேற்ற வகையில் அமைச்சர் கள், கட்சியின் நிர்வாகிகள் சசிகலா முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை வைப்பார்கள். அதை ஏற்று, தை மாதத்தில் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அநேகமாக ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதால் அந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்று பரவலான தகவல் உள்ளது. ஆனால், சென்னையில் போட்டியிடுவதை விட தென் தமிழகத்தில் போட்டி யிடுவதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று உளவுத் துறை தகவல் தந்துள்ளது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதியை இரண்டாவது தேர்வாக வைத்திருக்கிறார் சசிகலா. அதற்கு பதிலாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை மேற்கு இந்த மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் சசிகலாவை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதில் பெரும் பாலானவர்கள் சசிகலாவின் சிபாரிசு. இதில் இரண்டு பேர் தற்போது அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் சசிகலாவுக்கு ஆதரவாக இருக் கிறார்கள். அவருக்காக பரிசீலனை யில் உள்ள இந்த மூன்று தொகுதி களிலும் கணிசமாக இருப்பது இந்த சமூகம்தான். எனவே, இதில் ஏதாவதொரு தொகுதியில் சசிகலா போட்டியிடுவதற்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது’’ என்றனர்.

“சசிகலா தலைமைப் பொறுப் புக்கு வருவது பெண்கள் மத்தி யில் கடும் விமர்சனத்துக்கு உள் ளாகி இருக்கிறது. இந்த எதிர்ப்பை வீழ்த்தி, பெண்களின் நன்மதிப்பை பெறுவதற்காக, முதல்வர் பொறுப்பு ஏற்றுக் கொண்டதுமே மதுவிலக்கை அமல்படுத்தும் முக்கியக் கோப்பில் சசிகலா கையெழுத்திடுவார்’’ என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்தனர்.

கொடிகள் ஏன் அரைக்கம்பத்தில் பறக்கின்றன?

ஜெய்குமார்
தமிழக முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா இறந்தபோது துக்கம் அனுசரிக்கும் விதமாக தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது என்ற ஒரு செய்தியை வாசித்திருப்பீர்கள். முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற பொறுப்பில் உள்ளவர்கள் மரிக்கும்போது அவர்களுக்கு மரியாதை செய்வதற்காக தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கச் செய்வது வழக்கம்.

இன்று உலகத்தில் பெரும்பாலான நாடுகள் இந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்கின்றன. இது முதன் முதலில் எந்த நாட்டில் தொடங்கியது, யாருக்கு முதன் முதலில் இந்த முறையில் மரியாதை செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடையாக ஒரு வரலாற்றுச் சம்பவம் இருக்கிறது.

எப்போது தொடங்கியது?

கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றும் வழக்கம் 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. கிரீன்லாந்துப் படையெடுப்பின் போதுதான் முதன் முதலில் ஒரு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. டென்மார்க் அரசரான நான்காம் கிறிஸ்டியன் கீரின்லாந்து மீது 1605-ம் ஆண்டில் முதன் படையெடுப்பை நடத்தினார். இந்தப் படையெடுப்பில் கிரீன்லாந்தைச் சேர்ந்தவர்கள் எஸ்கிமோக்கள் சிலரைச் சிறைபிடித்தனர். இதற்கு அடுத்தபடியாக 7 வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹால் என்பவர் தனிப்பட்ட முறையில் கிரீன்லாந்து மீது படையெடுத்துச் சென்றார். முந்தைய தோல்வியாலும் உயிரிழப்பாலும் எஸ்கிமோக்கள் சுதாரிப்பாக இருந்தார்கள்.

ஜேம்ஸ் ஹால் ஏற்கனவே டென்மார்க் அரசப் படைகள் நுழைந்த பகுதிக்கு தி ஹார்ட்ஸ் ஈஸ் (The Heart’s Ease) என்னும் கப்பலில் வந்துசேர்ந்தார். அந்தக் கப்பலில் இருந்து சிறு படகுகள், கரைக்குச் செல்வற்காக இறக்கப்பட்டன. அவற்றில் ஒன்றில் ஹாலும் இருந்தார். கரையை நெருங்கும் நேரத்தில் மறைந்திருந்த இனூயிட் மக்கள் அவரை அம்பெய்து கொன்றுவிட்டனர். இந்தக் கொலைச் சம்பவம் 1612-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி நடந்தது. ஹாலுடன் பயணம் செய்த ஜான் காட்டன்பே என்னும் அதிகாரி இதைப் பதிவுசெய்துள்ளார்.

ஹால் கொல்லப்பட்ட பிறகு வில்லியம் ஹண்ட்ரஸ் எனும் கப்பல் தளபதி தங்களது தலைவரின் இறப்பைத் தொடர்ந்து, பின்வாங்க முடிவெடுத்துக் கப்பலை இங்கிலாந்தை நோக்கித் திருப்புகிறார். அதே ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி த ஹார்ட் ஈஸ் கப்பல் இங்கிலாந்தை வந்தடைகிறது. பொதுவாகக் கப்பலில் ஏற்றப்பட்டிருக்கும் கொடிகள் அந்தக் கப்பலில் இல்லை. பெருமை மிக்க அந்தக் கப்பல் இறந்த தன் தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு பறக்கும் தன் கொடிகளைத் தாழ்த்திக் கொண்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கொடிகள், நிலப் பகுதியில் முக்கியமான தலைவர்களின் அஞ்சலிக்காக அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டன.

யார் யாருக்கெல்லாம் இந்த மரியாதை?

இது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியாவைப் பொருத்தமட்டில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இறந்துவிட்டால் இந்தியா முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்படும். மக்களவை சபாநாயகர், உச்ச நீதி மன்ற நீதிபதி இறந்துவிட்டால் தலைநகர் டெல்லியில் மட்டும் அரைக்கம்பத்தில் கொடி ஏற்றப்படும். மத்திய அமைச்சர் இறந்தால் தலைநகர் டெல்லியிலும் அவரது சொந்த மாநிலத்திலும் அரைக்கம்பத்தில் கொடிகள் ஏற்றப்படும். ஆளுநர், துணை ஆளுநர், முதல்வர் ஆகியோர் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டும் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்படும்.

இவை அல்லாமல் வெளிநாட்டுத் தலைவர்கள் இறப்புக்கும் மரியாதை தெரிவிக்கும் வகையில் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்படும் வழக்கமும் இருக்கிறது. உதாரணமாக தென்னாப்பிரிக்காத் தலைவர் நெல்சன் மண்டேலா இறப்புக்கும் சிங்கப்பூரின் தந்தையாகப் போற்றப்படும் லீ குவான் யூ இறப்புக்கும் மரியாதை செலுத்தும் விதமாக இந்திய தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டன.



எப்போதும் பறக்குது!

தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடும் வழக்கம் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது அல்ல. ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சோமாலியா ஆகிய நான்கு நாடுகளின் கொடிகள் எந்தச் சமயத்திலும் அரைக்கம்பத்தில் பறப்பதில்லை.

Official caught ‘paying bribe’ to RTI activist

THE HINDU 

This case was something new even for the Anti-Corruption Bureau sleuths who routinely trap government officials taking bribe. On Friday, a government official was caught paying a bribe to an Right to Information (RTI) activist to not dig into a particular case.

Honnappa, a shirastedar in Devanahalli Taluk Office was caught by ACB sleuths when he was allegedly paying a bribe of Rs. 50,000 to the RTI activist who had tipped off the sleuths.

The activist, while going through certain land documents, had turned suspicious about an entry for a 19-acre land parcel that it was DC converted, for non-agricultural purposes. He soon applied under the RTI Act for relevant documents. While the DC office replied that the said survey number was not converted, the local tahsildar office replied that the documents were missing. Intrigued, the activist started digging further, when Mr. Honnappa contacted him. “The shirastedar contacted the RTI activist and offered him a bribe of Rs. 50,000 for not to dig into the matter further. The activist pretended to accept the offer, but contacted us and organised for a trap,” said M.A. Saleem, IGP, ACB. Officials said that while Mr. Honnappa has been arrested and investigations will be done into the particular land transactions which he tried to hush up.

“A shirastedar alone is unlikely to carry out a forgery of land conversion document. Other officials are likely to be involved in the case. We will probe into the case and register a separate case if any fraud is revealed,” said a senior ACB official.

மிஸ்டர் ராம மோகன ராவ்!- விளாசும் தமிழிசை 


தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர் என ராம மோகன ராவ் கூறியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

"என்னை சிலர் குறிவைத்துள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தால் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் நுழைய முடியுமா. தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர்" என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ராம மோகன ராவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 'தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்ல ராம மோகன ராவ் யார்? அதற்கு அவருக்கு உரிமையில்லை. பாதுகாப்பு இல்லாத இடத்தில் அமர்ந்திருந்தால், உயிருக்கு ஆபத்து வரதான் செய்யும். துப்பாக்கியை வைத்திருந்தாலே, துணை ராணுவம் சுட்டுவிடுவார்களா? பதவியில் இல்லாத போதே, ராம மோகன ராவ் இப்படி பேசுகிறார்' எனக் கூறியுள்ளார்.

ஆனால், ராம மோகன ராவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளார். "ஜெயலலிதா இருந்திருந்தால் நுழைந்திருக்க முடியாது என ராவ் சொல்வது சரியே. யாரை மிரட்ட பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. ராம மோகன ராவ் மற்றும் அ.தி.மு.க.வின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.

சசிகலாவை ஏன் சந்தித்தார் ஓ.பி.எஸ்?! -7 நாள் மௌனத்தின் பின்னணி 

vikatan.com

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு வந்த பிறகு, கார்டன் பக்கமே தலைகாட்டாத முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசினார். ' பொதுக்குழுவில் ஏதேனும் எதிர்ப்புகள் கிளம்புமா என்பது குறித்துத்தான் தீவிர ஆலோசனைகள் நடந்தன' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

டெல்லியில் கடந்த 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கச்சத்தீவு விவகாரம் உள்பட 29 முக்கியக் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் மனு அளித்தார். 'விரைவில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக' பிரதமர் உறுதியளித்தார். ஆனால், பிரதமருடனான சந்திப்பை வேறுவிதமாக கவனித்தது கார்டன் வட்டாரம். 'தம்பிதுரையைப் புறக்கணித்தது; பிரதமருடன் தனிப்பட்ட முறையில் விவாதித்தது' என ஓ.பி.எஸ்ஸின் நடவடிக்கைகளை, மன்னார்குடி உறவுகள் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லவில்லை. அதற்கேற்ப, அடுத்தடுத்து நடந்த வருமான வரிச் சோதனைகள், கார்டன் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

சேகர் ரெட்டி மீது கை வைத்தபோது, 'ஓ.பி.எஸ் வசமாக சிக்குவார்' என்றுதான் மன்னார்குடி தரப்பில் நினைத்தார்கள். ஆனால், ராம மோகன ராவை வளைத்த பிறகு, ஆட்டத்தின் சீரியஸை உணர்ந்து கொண்டார்கள். தலைமைச் செயலகத்திற்குள் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உடனடியாக அறிக்கை வெளியிட்டார். ஆனால், தற்போது வரையில் ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. 'எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்' எனத் தெரிவித்தவர்களுக்கும், முதல்வர் எந்த சிக்னலையும் காட்டவில்லை. 'அப்படியானால், ஓ.பி.எஸ் சொல்லித்தான் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறதா' என மன்னார்குடி உறவுகள் கொந்தளித்தார்கள். 'இனியும் ஓ.பி.எஸ் பதவியில் நீடித்தால், நம்மை முழுவதுமாக துடைத்துவிடுவார்கள்' என அஞ்சித்தான், முதல்வர் பதவிக்கு சசிகலாவைக் கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளன என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

"பொதுக்குழுவில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படும் வரையில், சசிகலா மனதிற்குள் சிறு கலக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பிரதமரை சந்தித்துவிட்டு வந்த பின்னர், மரியாதை நிமித்தமாகக்கூட சசிகலாவை சந்திக்க ஓ.பி.எஸ் செல்லவில்லை. 'இப்படியே நீங்கள் தனித்திருந்தால், தொண்டர்கள் மத்தியில் வேறு மாதிரியான தோற்றம் தென்படும். பொதுக்குழு பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையிலாவது வாருங்கள்' என தலைமைச் செயலகத்தில் இருந்த ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட, கார்டன் விரைந்தார்" என விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், " மன்னார்குடி உறவுகளிடம் சரண்டர் ஆகும் முடிவில் பன்னீர்செல்வம் இல்லை. பிரச்னை இல்லாமல் பொதுச் செயலாளரை தேர்வு செய்வது குறித்துத்தான் ஓ.பி.எஸ்ஸிடம் விவாதித்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசியவர், 'தேனி மாவட்டத்து நிர்வாகிகளிடம் இதுபற்றிச் சொல்லிவிட்டேன். நல்லபடியாகவே பொதுக்குழு நடக்கும்' எனத் தெரிவித்தார். முதலமைச்சர் பதவி பற்றியோ, ரெய்டு பற்றியோ விவாதம் நடக்கவில்லை. பொதுக்குழுவில் எதிர்ப்பு கிளம்புமா என முதலமைச்சர் என்ற முறையில் அவரிடம் பேசியிருக்கிறார்கள்.

கட்சியைப் பொறுத்தவரையில், சசிகலா முன்னிறுத்தப்படுவதில், அவருக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவதை, அவருடைய ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. 'பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு ஓ.பி.எஸ்ஸுக்கு உள்ளதாக என்பதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும்' என ஸ்டாலின் கருத்து தெரிவித்ததில், சசிகலாவுக்கு உடன்பாடில்லை. அப்படி ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாகத்தான் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் தோற்றுவிட்டால், ஆட்சி கலையும் என்பதையும் அமைச்சர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். எனவே,' முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் தானாக விலகி, சசிகலாவுக்கு இடம் கொடுக்க வேண்டும்' என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தார்கள். வருமான வரித்துறை சோதனை தொடங்கியதும், சசிகலாவை முன்னிறுத்திய அமைச்சர்களும் அடங்கிப் போனார்கள். கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள்தான் இது குறித்துப் பேசி வருகின்றனர். சட்டரீதியாக ஓ.பி.எஸ் பக்கம் அனைத்தும் தெளிவாக இருப்பதால், அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் முடிவில் அவர் இல்லை" என்றார் விரிவாகவே.

" டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கு முதல்நாள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார் ஓ.பி.எஸ். அவரிடம் பேசிய ஆளுநர், ' உங்களைத் தவிர, முதலமைச்சர் பதவிக்கு வேறு யார் முன்னிறுத்தப்பட்டாலும் அதை ஏற்க மாட்டேன். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு எதிரான சூழல் வந்தாலும், அ.தி.மு.கவுக்கு அடுத்து மெஜாரிட்டியாக இருக்கும் தி.மு.கவுக்கு வாய்ப்பை வழங்குவோம்' என உறுதியாகத் தெரிவித்தார். இதைக் கேட்டு உற்சாகத்தோடு டெல்லி கிளம்பினார். முதல்வர் மனதைக் கரைய வைக்கும் வகையில் சீனியர்கள் சிலர் கோட்டையிலேயே அவரை சந்தித்துப் பேசியுள்ளனர். அவர்களிடம் பேசும் ஓ.பி.எஸ், 'நான் இப்போது அமர்ந்திருக்கும் பதவி என்பது அவர்கள் கொடுத்த வாய்ப்புதான். அவர்களுக்கு எதிராக ஒருநாளும் செயல்பட மாட்டேன்' எனத் தெரிவித்திருக்கிறார். சீனியர்களும் குழப்பத்தோடுதான் நடப்பவற்றைக் கவனித்து வருகிறனர்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அளவிடுவதற்காக மத்திய அரசின் நிபுணர்கள் இன்று சென்னை வந்துள்ளனர். அதேநேரம், தமிழக அரசியலில் புயல் சின்னத்தை உருவாக்கும் வகையில் வருமான வரித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். புயல் கரையைக் கடக்கும் வரையில் கார்டன் வட்டாரத்தின் பதற்றம் நீடித்துக் கொண்டே இருக்கும்.


அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்! ராம மோகன ராவ் ஆவேசம்


வருமான வரித்துறை சோதனை குறித்து தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் விளக்கம் அளித்து வருகிறார்.

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகன் விவேக், உறவினர்கள் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் மதிப்பிலான ரூபாய், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராம மோகன ராவை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் ராம மோகன ராவ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, நான் மனம் திறந்து பேச விரும்புகிறேன். சில முக்கிய தகவல்களை சொல்ல விரும்புகிறேன். எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருமான வரித்துறை சோதனை மூலம் தலைமைச் செயலகத்தை காப்பாற்ற அரசு தவறிவிட்டது. இந்த சோதனை அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல். வருமான வரித்துறையினர் சோதனையின் போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன். தலைமைச் செயலாளரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது அரசியல் சட்ட விரோதம்.

எனது மகன் விவேக் தனியாகத்தான் வசித்து வருகிறார். எனது மகனுக்கும், தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. வருமான வரித்துறையினர் சர்ச் வாரன்ட்டில் எனது பெயர் இல்லை. என் மகனுக்கான வாரன்ட்டை வைத்து என் வீட்டுக்கு வந்தது ஏன்? என் மகனுக்கான வாரன்ட்டை வைத்து தலைமைச் செயலகம் சென்றது ஏன்? எந்த ஆவணத்தையும் வருமான வரித்துறையினர் எடுத்துச் செல்லவில்லை. மகள், மனைவிக்கு சொந்தமான 45 சவரன் நகைகளே இருந்தன. ரூ.1,12,320 லட்சம் மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். தேடுதலுக்கான வாரன்ட்டில் எனது மகன் பெயர் மட்டுமே இருந்தது. வெள்ளியாலான சாமி சிலைகளை மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். எனது மகனுக்கான வாரன்ட்டை வைத்து தலைமைச் செயலகம் சென்றது ஏன், ஜெயலலிதா இருந்தால் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் நுழைய முடியுமா.

ஜெயலலிதாவிடம் பலமுறை பயிற்சி பெற்றிருக்கிறேன். துணை ராணுப்படையினருக்கு எனது அறையில் என்ன வேலை. தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர். மாநில அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எந்த மரியாதையும் இல்லை.

எனது உயிருக்கு ஆபத்து

துப்பாக்கி முனையில் நுழைந்து என் வீட்டில் சோதனை செய்தனர். என்னை சிலர் குறிவைத்துள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்தில் தலைமைச் செயலாளருக்கே பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் நிர்வாக ரீதியாக எந்த தவறும் நடக்கவில்லை. ஜெயலலிதா வழிநடத்துதலின் பேரில் 7 மாதமும் செயல்பட்டேன். நான்தான் இன்னும் தலைமைச் செயலாளராக உள்ளேன். தமிழக அரசு பணியிடை மாற்றம் உத்தரவை தர தயங்குகிறது. 32 ஆண்டு அனுபவம் உள்ள அரசு அதிகாரியை இப்படித்தான் நடத்துவதா. மக்களுக்கு எல்லாம் தெரியும். நான் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

படம்: ஆ.முத்துக்குமார்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்கும் ஏ.பன்னீர்செல்வம்'?

vikatan.com

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்கவும் அரசு டெண்டர்கள் உள்ளிட்ட நிர்வாக விஷயங்களை இறுதி செய்யவும் சசிகலாவின் ஏற்பாட்டின்படி முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஏ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்க இன்னொரு பன்னீர்செல்வமா என்று பரபரப்பாகப் பேசத் தொடங்கியுள்ளனர் கோட்டை வட்டாரத்தில்.

இவர், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பி.ஆர்.ஓ.வாக பணியைத் தொடங்கி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பதவி பெற்று ஓய்வுப் பெற்றார்.நடராஜனுக்கு மிக நெருக்கமானவர்.அதனால் சசிகலாவின் பரிந்துரையின்பேரில் கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில் சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டார்.

அப்போது,தலைமைச் செயலக வட்டாரத்தில் அதிகார மையமாக விளங்கினார்.அரசில்,அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்வது என்று எல்லா விதத்திலும் அதிகமாகத் தலையிடுகிறார் என்று பன்னீர்செல்வத்தின் மீது கடுமையான குற்றச் சாட்டு எழுந்தது.அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கும் சென்றது.கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜெயலலிதா நேரில் அழைத்துக் கடுமையாக எச்சரித்து, சிறப்பு அலுவலர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார்.அதனால் ஏ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்துவந்தார்.இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போனதால் மீண்டும் ஏ.பன்னீர்செல்வத்தின் நடமாட்டம் போயஸ் கார்டனிலும்,அவ்வப்போது கோட்டை வட்டாரத்திலும் வலுவாக இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"எங்க சி.எம். இருக்கும்வரையில் அவரின் கண்ணில் படாமல் இருந்துவந்த ஏ.பன்னீர்செல்வம் இப்போது மீண்டும் ஆட ஆரம்பித்துள்ளார்.அரசின் நிர்வாக விஷயங்களில் ஓவராக நுழைகிறார் என்பதால்தான் அம்மா அவரை விரட்டியடித்தார்.அதை இப்போது யார் செய்ய முடியும்.எல்லாமே எம்.என்.,டி.டி.வி. முடிவுபடிதான் நடக்கிறது.அதைச் உத்தரவாக்கிச் செயல்படுத்தும் இடத்தில் சசிகலா இருக்கிறார்.இப்போது ராம மோகன ராவும் ரெய்டில் சிக்கி இருக்கிறார்.அதனால் டெண்டர் உள்ளிட்ட அரசு விஷயங்களில் சிறப்பு ஆலோசகருக்கு உதவியாக ஏ.பன்னீர்செல்வம் அமர்த்தப்பட்டுள்ளார்.ஓ.எஸ்.டி. என்ற பதவி அவருக்கு அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் முதல்வருக்கு நெருக்கமாக இருக்கமுடியும்.அவருக்கு சசிகலாவின் கருத்துக்களை மிக எளிதாகக் கொண்டு செல்லமுடியும்.தான் அருகில் இல்லாவிட்டாலும் தனது நம்பிக்கைக்குரிய நபர் முதல்வரின் நிழலாக அவரைப் பின் தொடரவேண்டும் என்பதால் சசிகலா இந்த 'மூவ்' வைத்துள்ளார்.இவர் கார்டனில் இருந்துகொண்டே எல்லா விஷயங்களையும் கமுக்கமாக மேற்கொள்வதில் நிபுணர்.இவரின் வீட்டிலிலும் அமைச்சர்கள்,தொழிலதிபர்கள் முகாமிடத் தொடங்குவார்கள்.ஒரு புதிய அதிகார மையமாக வலம் வருவார்." என்றார்.

'அதுவும் நாங்கதான்... இதுவும் நாங்கதான்!' - ராம மோகன ராவ் மகனுக்கான மாஸ்டர் ப்ளான்

vikatan.com

வருமானவரித் துறை அண்மையில் நடத்திய ரெய்டில் பிடிபட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் இருவரும் மேலும் பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தற்போது அம்பலமாகி வருகிறது. இந்த மோசடியில் ராம மோகன ராவின் உதவியாளர் என்று கருதப்படும் பாஸ்கர் கனுமூரி என்பவரது பங்கும் இருப்பதாகத் தெரிகிறது.

பாஸ்கர் கனுமூரி, ஆந்திராவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி’ நிறுவனத்தின் இயக்குநர். இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு மருத்துவமனைகளில் சுகாதார மேம்பாட்டு வசதிகளைப் பராமரித்து வருகிறது. இது, தமிழக அரசின் ‘தமிழ்நாடு டூரிஸம்’ சுற்றுலா நிறுவனத்துடனும் கான்ட்ராக்ட் அடிப்படையில் இயங்கி வருகிறது. பாஸ்கர் ஸ்வான் என்டர்பிரைஸஸ் என்னும் தனியார் நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறார். ஸ்வான் நிறுவனத்தின் இயக்குநர், ராம மோகன ராவின் மகன் விவேக் ஆவார். விவேக்கும், பாஸ்கர் கனுமூரியும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தெரிகிறது. இதனடிப்படையில் அரசின் கான்ட்ராக்ட்டில் கிடைக்கும் வருமானத்தைத் தங்களுக்குள்ளேயே சுழற்சி முறையில் லாபம் ஈட்டி மகனும் தந்தையும் மோசடி செய்திருக்கிறார்கள். இதன்மூலம், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு கான்ட்ராக்ட்டை தன் வசப்படுத்த விவேக் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.அதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதாக வருமானவரித் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், பாஸ்கர் யார்... ராம மோகன ராவின் உதவியாளரா அல்லது அவரது பினாமியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் தென்னக ரயில்வே, பெல் நிறுவனம், வெங்கடேஸ்வரா கால்நடைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுடன் இவர்கள் கான்ட்ராக்ட் ஒப்பந்தம் செய்துள்ளனர். குறிப்பாக ராம மோகன ராவின் மகன் விவேக்குக்கு பெங்களூருவில் உள்ள பிரபல சொகுசு ரியல் எஸ்டேட் ஒன்றிலும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விவேக் வருமானவரித் துறையின் விசாரணையில் இருக்கிறார்.விசாரணை தொடக்கத்திலேயே, தாங்கள் 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டார் விவேக். மேலும் சேகர் ரெட்டிக்கான வங்கி சிபாரிசுகளுக்காக கடிதம் கொடுத்து மோசடி செய்தது,ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அவசர அவசரமாக பல எண்ணிக்கையிலான கோப்புகள் கையெழுத்தானது என்று பல குற்றச்சாட்டுகள் ராம மோகன ராவ் மீது தற்போது எழுந்துள்ளது.

இதில் மற்றொரு முக்கிய திருப்பமாக தமிழக மருத்துவ கல்வித் துறையுடனான 400 கோடி ரூபாய் மதிப்பிலான காண்ட்ராக்டையும் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 2006 தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் அதன் இயக்குநர் பாஸ்கர்.

ஆனால் காண்ட்ராக்ட் கையெழுத்தாவதற்கு அத்தாட்சியாக இருந்த சீனுவாச ராவ் என்பவர் பத்மாவதி நிறுவனத்தின் அருகிலேயே ஒரு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார் என்று பல தகவல்களை வெளியிட்டு வருகிறது வருமான வரித்துறை.

ராம மோகன ராவ் வீட்டில் கடந்த டிச 21-ம் தேதி நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் 30 லட்சம் அளவிலான புது ரூபாய் நோட்டுகளும். 5 கிலோ அளவிலான கணக்கில் வராத தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 25, 2016

ராவ் மகனின் ரூ. 1700 கோடி துபாய் ஹோட்டலில் முக்கிய தமிழக அரசியல் தலைவருக்குத் தொடர்பு?

Oneindia Tamil

சென்னை: வருமான வரி சோதனைக்குள்ளாகி பதவியை இழந்துள்ள ராமமோகன ராவின் மகன் விவேக்குக்கு துபாயில் ரூ. 1700 கோடி மதிப்பிலான ஹோட்டல் உள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிக்கு முக்கியத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதாம்.

இதுதவிர சேகர் ரெட்டி, கரூர் அன்புநாதன், பரஸ்மால் லோதா ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபடுகின்றன. இதுதொடர்பான விசாரணையை தற்போது அமலாக்கப் பிரிவு முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்திற்கு மிகப் பெரிய அசிங்கமாக, கேவலமாக வந்து சேர்ந்துள்ளார் ராமமோகன ராவ். அவரும் அவரது கூட்டாளிகள் சேகர் ரெட்டி உள்ளிட்டோரும் அடித்த பணக் கொள்ளை அனைவரையும் அதிர வைத்துள்ளது. சேகர் ரெட்டியை தூக்கிய கையோடு ராமமோகன ராவின் வீடுகள், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, அவரது மகன் விவேக்கின் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள், வழக்கறிஞர் அமலநாதன் என யாரையும் விடாமல் சோதனையிட்டது வருமான வரித்துறை.



தற்போது சேகர் ரெட்டி கைதாகி சிறைக்குப் போய் விட்டார். இந்த நிலையில் தற்போது ராமமோகன ராவ் மீதான பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளது வருமான வரித்துறை. ராவ் மற்றும் அவரது மகன் விவேக், வழக்கறிஞர் அமலநாதன் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.

சோதனைகளில் மொத்தம் 900 கிலோ எடை கொண்ட ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களை 80 பேர் கொண்ட குழு தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது. இன்று வரை ஆய்வு தொடர்ந்தது. இன்றுடன் ஆய்வு முடிவடைந்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.





குறிப்பாக விவேக்குக்கு ரூ. 1700 கோடி மதிப்பில் துபாயில் மிகப் பெரிய ஹோட்டல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஹோட்டல் தொழிலில் ராவ் மகனுக்கு மட்டும் தொடர்பு உள்ளதா அல்லது அரசியல் தலைவர்கள், பிற அதிகாரிகள், வேறு பலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த விசாரணையை அமலாக்கப் பிரிவு தொடங்கியுள்ளதாம்.

மேலும் இந்த ஹோட்டலில் தமிழக அரசியல் புள்ளி ஒருவருக்கு இதில் முக்கியத் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளதாம். மேலும் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சிக்கிய கரூர் அன்புநாதனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல சேகர் ரெட்டி, அவருக்கு பணத்தை மாற்றித் தர உதவிய கொல்கத்தாவைச் சேர்ந்த பரஸ்மால் லோதா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.





அரசியல் புள்ளி, ராமமோகன ராவ், அவரது மகன், சேகர் ரெட்டி, அன்புநாதன் உள்ளிட்டோர் இந்த ஹோட்டலில் பங்குதாரர்களாக உள்ளனரா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம். இவர்களின் நெட்வொர்க்கை கண்டுபிடிக்கவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

விரைவில் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து வழக்குப் பதிவு செய்து ராமமோகன ராவ், விவேக் உள்ளிட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
பெண்களின் உணர்வுகளும்.. பெண் துணையின் அவசியங்களும்..
பெண் மகிழ்ச்சியாக வாழ தக்க துணை அவசியம். யாரையாவது சார்ந்திருக்கும் சமூக கட்டமைப்புடனேயே பெண்களின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலை இப்போது மாறி கொண்டிருந்தாலும் சில சமயங்களில் வாழ்க்கையில் தான் எதிர்கொள்ளும் இன்னல்களை கடப்பதற்கு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு, ஆலோசனை–ஆறுதல் பெறுவதற்கு, அரவணைப்பதற்கு, வழிகாட்டுவதற்கு, ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணின் துணை அவசியமானதாகிறது. ஒரு பெண்ணால் மட்டுமே இன்னொரு பெண்ணின் உணர்வுகளையும், உள்ளக்குமுறல்களையும் புரிந்து கொள்ள முடியும்.

பெண்களின் உணர்வுகளையும், பெண் துணையின் அவசியங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பெண்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எல்லா பிரச்சினைகளையும் எல்லோரிடமும் பெண்களால் பகிர்ந்துகொள்ள முடியாது. குடும்ப பிரச்சினைகள் நிம்மதியை குலைத்து கொண்டிருக்கும். கணவனின் செயல்பாடுகள் அதிருப்தியை அதிகப்படுத்தும். குழந்தைகளின் போக்கு, அவர்களிடம் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கடுமையான மன உளைச்சலை உருவாக்கும். அதையெல்லாம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நிறைய பெண்கள் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்வார்கள். தனிமையில் இருந்து அவ்வப்போது அதை நினைத்துப் பார்த்து மனதை வருத்திக்கொண்டிருப்பார்கள். யாரிடமும் கலந்து பேசாமல், தீர்வு காணவும் வழி தெரியாமல் மனதை குழப்பிக்கொண்டிருப்பது, மன அழுத்தத்தை அதிகப்படுத்தி விடும்.

யாரிடமும் மனம் விட்டு பேசாமல் ரகசியம் காக்க நினைப்பது சில சமயங்களில் தீர்வு காண முடியாத அளவுக்கு அடுக்கடுக்காக பிரச்சினைகள் பின் தொடர காரணமாக அமைந்து விடும். நம்பிக்கைக்கு பாத்திரமான தோழியிடமோ, தனது நலனில் அக்கறை காட்டும் உறவுக்கார பெண்களிடமோ மனம் விட்டு பேசி விட வேண்டும். அதுவே மன பாரங்களை இறக்கி வைக்க வடிகாலாக அமையும். நெருக்கடியான நேரங்களில் மனதுக்கு நெருக்கமான பெண்கள் கூறும் ஆலோசனை ஆறுதல் தரும்.

வீட்டில் திருமணம், பண்டிகை போன்ற சுப தின நாட்களில் விருந்து ஏற்பாடுகளை தடபுடலாக செய்யும் போது பெண்களுக்கு வேலை அதிகமாகும். அப்போது ஒருவித பதற்றமும் கூடவே தொற்றிக் கொள்ளும். ‘இதை எப்படி நான் செய்து முடிக்கப் போகிறேனோ?’ என்ற எண்ணம் அவர்களை பதற்றத்தில் இருந்து மீளவிடாமல் தவிக்க வைத்து விடும். அப்போது அனுபவமிக்க பெண்கள் உடனிருந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எல்லா வேலைகளையும் ஒரு பெண்ணே தனியாளாக நின்று செய்யும் போது வேலைச் சுமையால் மன உளைச்சல் ஏற்படும். பலருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் எரிச்சல் உருவாகும். அப்போது ஒத்தக்கருத்துள்ள மற்ற பெண்கள் துணை நின்றால் பக்கபலமாக இருக்கும். அதன் மூலம் கடமைகளை நிம்மதியாக, மனநிறைவாக செய்து முடிக்கலாம்.

முழுதிறமையும், முழுமையான தன்னம்பிக்கையும் கொண்டவள் என்று எந்த பெண்ணும் இல்லை. எல்லா மனிதர்களிடமும் இருக்கும் பலவீனங்கள், பெண்களாகிய உங்களிடமும் இருக்கவே செய்யும். அது கசப்பான உண்மையாக இருந்தாலும், உங்களிடம் இருக்கும் பலவீனத்தை நீங்களே மனதளவில் முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களில், அணுகுமுறைகளில் அந்த பல வீனம் வெளிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு தகுந்த தோழியை எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அவரது ஆலோசனையும், வழிநடத்தலும் உங்களை மேலும் வளரச் செய்யும்.

கர்ப்ப காலங்களில் உடன் இருந்து வழி நடத்தி செல்வதற்கு மற்றொரு பெண்ணின் அனுபவமும், ஆலோசனையும் இன்றியமையாததாகிறது. தாய், சகோதரி என சக உறவுகளில் யாராவது ஒருவரின் அரவணைப்பு, வழிகாட்டுதல் அவசிய தேவையாக இருக்கிறது. அது நூறு மருத்துவர்கள் உடனிருப்பதற்கு சமம். அந்த சமயங்களில் ஏற்படும் மன உளைச்சலுக்கு உறவுப் பெண்களின் துணை மருந்தாகிறது. மனரீதியாக தேவைப்படும் ஆறுதலையும், அமைதியையும் உடனிருக்கும் பெண்களால் வழங்க முடியும்.

உடல்ரீதியான– மனோரீதியான– அந்தரங்கமான பிரச்சினைகளை திருமணமாகாத பெண்கள் தங்கள் தாயிடம் சொல்லக்கூட தயங்குகிறார்கள். அத்தகைய பிரச்சினைகளை திருமணமான பெண்கள் தங்கள் கணவரிடம் வெளிப்படுத்தக்கூட முன்வருவதில்லை. அப்படி மறைத்து வைக்கும்போது, பிரச்சினைகள் எல்லை மீறிப் போய் விடுமோ என்ற கவலையும் அவர் களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் நல்ல தோழிகளின் ஆறுதலும், ஆலோசனைகளும் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ‘என்ன வந்தாலும் நாம் சமாளிக்கலாம். எதற்கும் நீ கவலைப்படாதே!’ என்று சொல்ல ஒரு தோழி, எல்லா பெண்களுக்குமே அவசியம்.

ஒருசில தோல்விகளும், அவமானங்களும் மனதை பாரமாய் அழுத்தும். அவைகளை நெருக்கமான ஒரு தோழியிடம் பேசினால் மட்டுமே, அந்த பாரம் குறையும். மனம்விட்டு பேசுவது என்பதுகூட ஒருவகை மருந்துதான். பெண்ணுக்கு பெண் துணை என்பது மனதிற்கு மருந்து போடும் விஷயம். எல்லோரிடமும் மனம் திறந்து பேசிவிட முடியாது. அப்படி பேச நினைத்தால் அதுவே புதிய பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடும். ஆகையால் நம்பிக்கையாக தோழியை அடையாளம்கண்டு, அவளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும்.

‘பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டியது அவசியம்’ என்ற கருத்தை பல்வேறு ஆய்வுகள் வெளிப் படுத்தி வருகின்றன. மன அழுத்தம் நீங்க மனதை கலக்கமில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் சூழலில் அது சாத்தியமில்லாதது. ஏதேனும் ஒரு விதத்தில் மன அழுத்தம் நம்மை அழுத்திக்கொண்டே இருக்கும். அந்த அழுத்தத்துடன் வாழ வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விடும். இந்த நிலை நீங்கி சகஜமான, மகிழ்ச்சியான சூழல் உருவானால் மட்டுமே பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். கடமைகளை செய்து கொண்டே இருப்பது மட்டும் வாழ்க்கையல்ல. வாழ்க்கை என்பது ஒரு கலை. அது அழகாக அமைய மனம் மிகவும் அவசியமாகிறது. மனதின் மகிழ்ச்சியை காப்பாற்ற உண்மையான ஒரு பெண் துணை, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம்.

ஷாப்பிங் செல்ல பெண்ணுக்கு, இன்னொரு பெண் துணைதான் சவுகரியமானதாக இருக்கும். ஒரு பெண்ணுக்கு எது அவசியம், எது அழகு சேர்க்கும் என்பதை மற்றொரு பெண்ணால்தான் நிர்ணயிக்கமுடியும். தமது பொருளாதார நிலையையும், தேவைகளையும் அறிந்த பெண்ணையே ஷாப்பிங் நேரங்களில் உடன் அழைத்துச்செல்லவேண்டும்.

ஒரு பெண் தனது லட்சியத்தை அடைய முற்படும்போது, பல தடைகள் ஏற்படும். அப்போது பெரும்பாலான பெண்கள் சோர்ந்து போகிறார்கள். அப்போது அவர்களுக்கு உற்சாக டானிக் வழங்க அனுபவமான பெண்துணை அவசியமாகிறது. நல்ல தோழியின் வழிகாட்டல் மனஉறுதியை அதிகரிக்கும்.

# இன்று எம்.ஜி.ஆரின் நினைவு தினம்..! மறக்க முடியுமா அந்த மாமனிதனை...?



# இன்று எம்.ஜி.ஆரின் நினைவு தினம்..!
மறக்க முடியுமா அந்த மாமனிதனை...?

# ஒரு ஃபிளாஷ்பேக்..
எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்த சம்பவங்கள் பற்றி , அப்போதைய ஜூனியர்விகடனில் வெளியான நேர்முக வர்ணனை இது :

“தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ”இன்னிக்கா, நேத்திக்கா… நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே… ‘எதுன்னாலும் நீ என்னை வந்து பார்… ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே… இனி நான் யார்கிட்ட போவேன்?” என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார்.

..... போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ”காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்…” என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

......திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல் துறை அதிகாரியிடம், ”அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்… என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க… என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!” என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். ...இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர்.

......வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ”நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே… எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே… ஐயா, ஐயா…” என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ”இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு…” என்று விசும்பினார்!

.......”அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு… நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க… பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க… இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க… இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க…” என்று குமுறிக் குமுறி அழுதார் ஒரு அ.தி.மு.க. தொண்டர்!

முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்… ஆயிரக்கணக்கில் போலீஸ்…

டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது.

”அடப் பாவிங்களா… தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா…” என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ”வாத்யாரே… தெய்வமே… அப்பா…” என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்… ”தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்… சுடுங்க…!” என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.

சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ”சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்…” என்று முணுமுணுத்தார்.

அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ”எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க…” என்றார். ”கழட்ட வேண்டாம்” என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது...

....பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை… குண்டுகள் முழங்க, பேழை , குழியினுள் இறக்கப்பட்டது.

..... டி.ஜி.பி. ரவீந்திரன், ”உப்பு…” என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது...!”

# ம்....! எத்தனை வருடங்கள் ஆனாலும் ..
இதையேதான் சொல்ல வேண்டியதிருக்கிறது...!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"

#ஜோன்துரை

காசோலைக்கு காசில்லை எனில் யாருக்கு சிறை?- ப.சிதம்பரம் பேச்சின் 10 தெறிப்புகள்

சிறப்புச் செய்தியாளர்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழம நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய கருத்துகளின் 10 முக்கிய அம்சங்கள்.

* 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்று, புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட நோக்கங்கள் தோற்றுவிட்டது. இவற்றை அறிமுகப்படுத்தி தவறு செய்துவிட்டதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்.

* இந்திரா காந்தி நல்ல நோக்கங்களோடுதான் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். ஆனால் அதனால் சாமானியர்கள் பட்ட துன்பங்களைக் கண்டு, இனிமேல் இப்படியொரு காரியத்தைச் செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார். ஆனால் மோடியோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே சாதிக்கிறார்.

* கறுப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் தடுப்போம்; ஊழலை ஒழிப்போம் என்ற அவர்களின் உரைகள் பொய்யாகிவிட்டன. புது 2000 ரூபாயில் ஊழல் தொடர்ந்து நடக்கிறது. பணம் கறுப்புப் பணமாக மாறிவருகிறது.

* பணப்புழக்கம் இருந்தால்தான் பொருளாதாரம் இயங்கும். பணப்புழக்கம்தான் பொருளாதாரத்தின் நிலையை தீர்மானிக்கும்.

* தற்போது புதிதாக வெளியிட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை 5 லட்சம் கோடி அளவுக்கு அச்சிட்டுள்ளனர். 15.44 லட்சம் கோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில், 10 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளுக்குள் வந்துவிடும். மீதம் 5.44 லட்சம் கோடி வராது. அதை கறுப்பு பணமாக அறிவித்துவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தனர். ஆனால், தற்போதுள்ள நிலைமையை பார்த்தால் 15.44 லட்சம் கோடியும் வங்கிக்குள் வந்துவிடும்போல் இருக்கிறது.

* கடந்த 45 நாட்களில் 62 முறை வங்கியில் பணம் எடுப்பது, செலுத்துவது குறித்த விதிகளை மாற்றியுள்ளனர். மக்கள் தொகையில் மொத்தம் 45 கோடி பேர் அன்றாடம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர்.

* கறுப்பு பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இதில் எந்த நோக்கமும் நிறைவேறாது.

* ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மட்டும் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. கறுப்பு பணத்துக்கான தேவை இருக்கும்வரை அதன் விநியோகம் இருக்கும். அதற்கு முதலில் ஊற்றுக்கண்ணை தடுக்க வேண்டும்.

* உங்களுடைய அக்கவுண்டில் பணம் இல்லாமலே யாருக்காவது காசோலை அளித்தீர்கள் என்றால் உங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் கொடுக்கும் காசோலைக்கு வங்கிகளிலேயே பணம் இருப்பதில்லை. இதற்காக யார் சிறைக்குச் செல்வார்கள்?

* எந்த அரசுக்கும், பிரதமருக்கும் இத்தகைய மோசனமான பேரிடரை மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட உரிமை இல்லை. பிரதமர் மோடி, ஏழைகளின் நிலையைப் புறக்கணித்து மோசமான வழிகாட்டுதலால் ரூபாய் நோட்டு நடவடிக்கையில் தவறிழைத்து விட்டார். இதை அவர் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

உயர் படிப்புக்காகச் சென்று வேலை கிடைத்த நிலையில் கும்பகோணம் இளைஞர் பிரான்ஸில் கொலை: உடலை இந்தியா கொண்டுவர பெற்றோர் கோரிக்கை

வி.சுந்தர்ராஜ்
மணிமாறன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநறையூரைச் சேர்ந்த இளைஞர், பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தங்கள் மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அவரது பெற்றோர் பிரான்ஸ் நாட்டின் தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநறையூர் சிவன் கோயில் சன்னதி தெருவைத் சேர்ந்தவர் தங்கவேல், விவசாயி. இவரது மனைவி மணிமேகலை, மகன் மணிமாறன்(27), மகள் பொன் மணி(25). மகள் பொறியியல் பட்ட தாரி, அவரது திருமணத்துக்காக வரன் பார்த்துக் கொண்டிருக் கின்றனர். தங்கவேல் 15 ஆண்டு களுக்கு முன் வேலைக்காக அரபு நாட்டுக்குச் சென்று திரும்பியவர். தற்போது, ஏனாநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

இவரது மகன் மணிமாறன் தஞ்சாவூர் வல்லம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டுக்கு எம்.எஸ். (மாஸ்டர் ஆப் சயின்ஸ்) படிக்கச் சென்றார். படிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்துவிட்ட நிலையில் அந்நாட்டிலேயே வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். அண்மையில், பிரான்ஸில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மணி மாறனுக்கு வேலை கிடைத்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட் டில் மர்ம நபர்களால் மணிமாறன் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டதாக நேற்று முன்தினம், அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையறிந்து அவர்கள் கதறித் துடித்தனர்.

இதுகுறித்து மணிமாறனின் தந்தை தங்கவேல் கூறியது: என் மகன் பிரான்ஸ் நாட்டில் 4 ஆண்டு களாக உயர் படிப்பு படித்து வந்தார். அந்நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் மாத ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், வரும் ஜனவரி 2-ம் தேதி பணியில் சேர உள்ளதாகவும் கடந்த 22-ம் தேதி எங்களிடம் தெரிவித்தார். என் மனைவி, மகளிடமும் மகிழ்ச்சி யுடன் பேசினார்.

இந்த நிலையில், கடைவீதியில் சென்றுகொண்டிருந்த மணிமாறனி டமிருந்த செல்போனை ஒருவர் பறித் ததாகவும், அதைத் தடுத்தபோது கத்தியால் குத்தியதில் அவர் இறந்துவிட்டதாகவும் மணிமாற னின் நண்பர்கள் நேற்று முன்தினம் (டிச.23) என்னிடம் போனில் தெரி வித்தனர்.

என் மகன் தங்கியிருந்த அறையில், நாச்சியார்கோவிலைச் சேர்ந்த குமரேசன், நவீன் மற்றும் இருவர் என தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கியிருந்துள்ளனர். நேற்று கத்திக்குத்து காயங்களுடன் என் மகன், அறைக்கு வந்ததாகவும், லேப்டாப், செல்போன், பணம் ஆகியவற்றைச் சிலர் பறித்துக் கொண்டு கத்தியால் குத்திவிட்ட தாகவும் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அங்கிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக என்னிடம் கூறினர்.

பல இடங்களில் கடன் வாங்கிச் செலவு செய்து, 4 ஆண்டுகள் படித்து முடித்து வேலை கிடைத்துள்ள நிலையில், அவர் கொல்லப்பட்டது எங்கள் குடும்பத்தை நிலைகுலை யச் செய்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள பிரான்ல் நாட்டின் தூதரகத் தில் புகார் மனு அளித்துள்ளேன். மேலும், மயிலாடுதுறை எம்பி பாரதிமோகனிடம் கடிதம் பெற்று, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளேன்.

மணிமாறனின் உடலை விரைந்து இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புத்தகங்கள் வாங்கக் கூட பணம் இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை: ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து

Return to frontpage

கறுப்பு பணத்தை கட்டுப்படுத்து வதாகக் கூறி புத்தகம் வாங்கக் கூட காசு இல்லாமல் செய்ததுதான் பிரதமர் மோடியின் சாதனை என செங்கல் பட்டில் நடந்த புத்தகத் திருவிழாவில் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறினார்.

செங்கல்பட்டில் நேற்று முன்தினம் புத்தகத் திருவிழா தொடங்கியது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நெருக்கடி காலகட்டத்தில் வழக் கறிஞராக பதிவு செய்தேன். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு புத்தகம், செய்தித் தாள்களை படிக்க தரவில்லை. இதை யடுத்து என்னுடைய முதல் வழக்காக சிறையில் இருப்பவர்களுக்கு புத்தகம், செய்தித்தாள்களை படிக்கத் தர வேண்டும் என வாதாடினேன்.

நெருக்கடி நிலை காலத்தில் அனைத்து நீதிபதிகளும் அச்சத்துடன் இருந்த நிலையில், அந்த வழக்கை போட்ட பின் கைதிகளுக்கு என்ன உரிமை இருக்கின்றது என நீதிபதி கேட்டார். கைதியையும் மனிதனாக நடத்த வேண்டும். சிறையில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் புத்தகமே சிறந்த நண்பன் என நீதிபதி கிருஷ்ணஐயர் கொடுத்திருந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி வாதிட்டேன். இதனையடுத்து சிறையில் இருந்த கைதிகளுக்கு செய்தித்தாளும் புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி தற்போது மோடி செய்துள்ள சாதனை புத்தகம் வாங்கக் கூட காசு இல்லாமல் செய்ததுதான். தற்போது பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து பல சிறு தொழில்களை நசுக்கியது போல் புத்தக விற்பனையையும் மோடி நசுக்கிவிட்டார். கடந்த வாரம் மும்பையில் விமான நிலையத்தில் ஒரு புத்தகம் வாங்க என்னிடம் பணம் இல்லை. கிரெடிட் கார்டு இருந்தும் அங்கு பயன்படவில்லை.

நம்மிடம் பணம் இல்லாமல் ஆக்கிவிட்டு, அங்கு சிலர் வீட்டில் தங்கம், வெள்ளி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுக்கின்றனர். பணம் இல்லாத பொருளாதாரம் என யாரைப் பார்த்து சொல்கின்றனர் என தெரியவில்லை.

கோட்டூர்புரம் அண்ணா நூலக கட்டிடம் ஆசியாவிலேயே பெரிய கட்டிடம். இதை கட்டி எழுப்ப 120 கோடி ரூபாய்க்கும் மேல் செலவானது. ஆனால் அந்தக் கட்டிடத்தை இடிக்க சிலர் முயற்சித்தனர். நூலகத்தை இடிக்க வேண்டும் என்ற உணர்வு எங்கிருந்து வருகிறது? மக்கள் வாங்க முடியாத கருத்துப் பெட்டகத்தை நூலகத்தில் இருந்துதான் பெறமுடியும். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியும். இந்தக் கட்டிடத்தையும் இடிக்க வருகின்றனர் என்றால் நாம் எந்த நாகரீகத்தில் இருக்கின்றோம்?

நூலகங்களுக்கு புதிய புத்தகங் கள் வாங்கி பல ஆண்டுகள் ஆகின் றன. அவை தற்போது பகல் நேர ஓய்விடங்களாக மாறிவிட்டன. இப்படி திட்டமிட்டு புத்தகங்களை தடை செய்வதும், வாசிக்கவிடாமல் செய்வதும் நூலகங்களை இடிக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு குழு யோசிக்கும்போது அதற்கு பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு வருடங்களாக நூலக இயக்குநர் பதவி காலியாகவே உள்ளது. இதை நிரப்ப வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. இது நீதிமன்றத்துக்கும் அரசுக்குமான பிரச் னையில்லை மக்களுக்கும் அரசுக் குமான பிரச்சினை. இதை நாம் புரிந்து கொண்டால்தான் மக்களுக் கான அதிகாரத்தை நிலைநாட்ட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தைகளும் நான்கு பெட்டிகளும்

செங்கல்பட்டு புத்தகத் திருவிழாவில் பேசும்போது முன்னாள் நீதிபதி சந்துரு தனது பேச்சில் குறிப்பிட்டதாவது: குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை உருவாக்கிட வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதாது. நாமும் அவர்களோடு சேர்ந்து படிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகளையும் அருகில் உள்ள குழந்தைகளையும் அழைத்து கூட்டாக வாசிப்பு வட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

தற்போது குழந்தைகளின் வாழ்க்கையை நான்கு பெட்டிகளில் அடக்கிவிடுகின்றனர். ஒன்று கணினிப் பெட்டி, இரண்டு செல்பேசி பெட்டி, மூன்று தொலைக்காட்சி பெட்டி. நான்காவதாக சவப்பெட்டி. இப்படி குழந்தைகள் தனது வாழ்க்கையை நான்கு பெட்டிக்குள் அடைக்கா

சேகர் ரெட்டியின் வங்கி லாக்கர்களுக்கு ‘சீல்’: பணம் பதுக்கலுக்கு உதவிய அதிமுக பிரமுகர் சிக்குகிறார்?


சேகர் ரெட்டிக்குச் சொந்தமான லாக்கர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். ரூ.24 கோடி பணம் பதுக்கலுக்கு உதவிய அதிமுக பிரமுகரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பிறகு தொழிலபதிபர்கள் பலர் தங்களிடம் இருந்த கருப்புப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்த னர். மேலும், வங்கிகள் மூலம் முறை கேடாக கருப்புப் பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றினர்.

இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி அவரது நண்பர்கள் சீனிவாசலு, பிரேம் ஆகியோருக்குச் சொந்த மான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் நடந்த சோதனையில், 177 கிலோ தங்கம் மற்றும் ரூ.131 கோடி ரொக்கம், ரூ.500 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பறி முதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத் தில் ரூ.24 கோடிக்கு ரிசர்வ் வங்கி யால் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனை நடந்தபோது காட்பாடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் மாநகராட்சி ஒப்பந்த தாரர் ஒருவருக்குச் சொந்தமான லோடு ஆட்டோவில் கடத்திச் சென்ற ரூ.24 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேகர் ரெட்டி யின் செல்வாக்கில் மாநகராட்சி ஒப்பந்தப் பணிகள் பலவற்றை அவர் பெற்றுள்ளார். சேகர் ரெட்டிக்குச் சொந்தமான பணத்தை அவர் ஆட்டோவில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

இந்தப் பணம் பறிமுதல் செய்யப் பட்டது குறித்து சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், பணத்தை பதுக்க உதவிய அதிமுக பிரமுகரின் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, சிபிஐ அதிகாரிகள் அவரிடமும் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வங்கி லாக்கருக்கு ‘சீல்’

சேகர் ரெட்டி கைது செய்யப்பட் டுள்ள நிலையில் காட்பாடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லாக்கர்கள் பயன்படுத்துவதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அந்த லாக்கரில் இருந்த பணம், தங்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த லாக்கர்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்


இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் பாரத தர்ஷன் ஆன்மிக சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்விச் சுற்றுலா போன்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி கூடுதல் பொதுமேலாளர் எல்.ரவிக் குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆன்மிக, சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில் திட் டத்தை செயல்படுத்த உள்ளோம். அதன்படி, வரும் 29-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ஆன்மிக சுற்றுலா ரயில் ஈரோடு, சேலம், காட்பாடி, சென்னை சென்டரல் வழியாக ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயத்துக்கு செல்லும். மொத்தம் 7 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.5,855 கட்டணமாகும்.

இதேபோல, வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷலாக மதுரையில் இருந்து ஜனவரி 7-ம் தேதி புறப்படும் சுற்றுலா ரயில் மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், ஈரோடு வழியாக குருவாயூர், கொல்லூர் மூகாம்பிகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். மொத் தம் 6 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.6,900 கட்டணமாகும். மதுரையில் இருந்து ஜனவரி 7-ம் தேதி புறப்படும் குளிர்கால சுற்றுலா ரயில் மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு வழியாக கொச்சின், ஆலப்புழா, கோவா ஆகிய இடங் களுக்கு செல்கிறது. மொத்தம் 6 நாட்கள் கொண்ட இந்த சுற்று லாவுக்கு ரூ.5,225 கட்டணமாகும்.

ரயில் கட்டணம், சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். இது தொடர்பாக தகவல்களை பெற சென்னை சென்ட்ரல் 90031 40681, மதுரை: 0452 - 2345757, கோயம்புத்தூர்: 90031 40655 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல சிங்கப்பூர் - மலேசியா (7 நாட்கள்), துபாய் - அபுதாபி (4 நாட்கள்), லங்கா (7 நாட்கள்), பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர் லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் (15 நாட்கள்) விமான சுற்றுலா அறிவிக்கப் பட்டுள்ளது. கட்டண விவரங்கள், சலுகைகளை தெரிந்துகொள்ள 90031 40617, 90030 24169 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

என் பெயர் சைக்கிள் ரிக் ஷா’: கும்பகோணத்தில் ஓடிய 1,500-ல் எஞ்சியது 5 மட்டுமே! வி.சுந்தர்ராஜ்

கும்பகோணத்தில் சவாரிக்காக காத்திருக்கும் சைக்கிள் ரிக் ஷா தொழிலாளர்கள்.

கடந்த 1980-ம் ஆண்டு வாக்கில் கும்பகோணம் நகரில் எங்கு திரும்பினாலும் சைக்கிள் ரிக் ஷாக்கள்தான் தென்படும். அப் போது, 1,500 ரிக் ஷாக்கள் ஓடிக் கொண்டிருந்த கும்பகோணத்தில் தற்போது இயங்குபவை வெறும் ஐந்தே ஐந்துதான்.

இந்த தொழில் எப்படி நசிந்தது, இதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?

கும்பகோணம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கூண்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தன. பின்னர் சைக்கிள் ரிக் ஷாக்கள் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டன.

கும்பகோணத்தில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், பாலக்கரை காய்கறி சந்தை, அரசு மருத்துவமனை, காந்தி பூங்கா, பெரிய தெரு உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் ரிக் ஷா ஸ்டாண்டுகள் இருந்தன.

வெளியூரிலிருந்து வருபவர் களும், உள்ளூரில் உள்ளவர்களும் ரிக் ஷாக்காரர்களை பாசத்தோடு சவாரிக்கு அழைத்து செல்வார்கள். நியாய மான கூலியைத் தருவதுடன், உழைப்பைப் பார்த்து சற்று கூடுத லாகவும் கொடுக்கும் காலமும், மனதும் அப்போது இருந்தது.

பின்னர் மோட்டார் வாகனங் களின் வளர்ச்சியால் ஆட்டோக்கள் வரத் தொடங்கின. செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாகச் செல்வதற்கு எளிதான வாகனமாக ஆட்டோக்கள் இருந்ததால், பொதுமக்களும் சைக்கிள் ரிக் ஷாவைத் தவிர்த்து விட்டு ஆட்டோக்களை பயன் படுத்தத் தொடங்கினர்.

நாடு முழுவதும் ரிக் ஷாக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், பாரம்பரியமிக்க நகரமாகவும், கோயில் நகரமாகவும் உள்ள கும்பகோணத்தில் இன்றும் 5 பேர் சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்.

கும்பகோணம் ரயில் நிலை யத்தில் காலையில் ரயில் வரும் நேரங்களில் இவர்கள் ஆஜராகி, பயணிகளை சவாரிக்கு அழைக்கின் றனர். ஆனால், யாருமே அவர் களைக் கண்டுகொள்வதில்லை என்றாலும், நாள்தோறும் ரயில் வரும்போதெல்லாம் சளைக் காமல் வந்து காத்திருந்து எப்படியாவது ஒரு சவாரியாவது ஏற்றிச் செல்கின்றனர்.

ரிக் ஷா ஓட்டும் தொழிலாளர் கள் முருகையன்(69), ஆனந்தன் (57), ராமகிருஷ்ணன்(72), காந்தி(69) ஆகியோர் கூறியது: நாங்கள் 40 ஆண்டுகளாக ரிக் ஷா ஓட்டி வருகிறோம். அப்போது எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் வந்தபோது எங்களுக்கு பெரும் மரியாதையும் மதிப்பும் இருந்தது. இப்போது அதெல்லாம் போய்விட்டது. நாங்கள் ரயில் நிலையத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துகிறோம். சென்னை போன்ற நகரங்களிலிருந்து வரும் வயதானவர்கள் ரிக் ஷாவில் ஏறு கிறார்கள். ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் கிடைத்தாலே அதிகம். வறுமையில் வாடும் எங்களுக்கு மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் ரயில் நிலையத்தில் ரிக் ஷாவை நிறுத்த ஆண்டுதோறும் பணம் கட்ட வேண்டும். எங்களது நிலையைப் பார்த்து இங்குள்ள பார்சல் கையாளுபவர்களே பணம் கட்டி விடுவார்கள். ஆட்டோக்கள் வந்ததும் பலர் ஆட்டோ ஓட்டவும், மார்க்கெட்டில் கூலி வேலைக்கும் சென்றுவிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றோம். தாங்கள் ரிக் ஷாவில் செல்வதை மற்ற குழந்தைகள் கேலி செய்வதாகவும், எங்கள் வாகனங்கள் வேண்டாம் என்றும் பெற்றோரிடம் குழந்தைகள் கூறிய தால், யாரும் எங்களுக்கு சவாரி கொடுப்பதில்லை. எங்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது. இந்த பிழைப்பு எங்கள் தலை முறை யோடு முடிந்துவிடும். இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தனர்.

குறைந்த கட்டணம், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனம், சக மனிதனின் உழைப்பை நேரடியாக பார்த்து நெகிழும் மனிதம் என ரிக் ஷா வண்டிக்கென தனி அடையாளங்கள் உள்ளன. எனவே, குறைந்த தூரங்களுக்குச் செல்லும்போது இந்த ரிக் ஷாக்களை சவாரிக்காக பயன்படுத்துவோம். இதன்மூலம் ரிக் ஷாக்காரர்களின் வாழ்வாதா ரத்தை நாம் காப்பது மட்டுமல்ல, பரபரக்கும் இந்த அவரச காலத் திலும் ஒரு பாரம்பரியத்தை காத்து நின்ற பெருமை நம்மைச் சேரும்.

தமிழகத்தில் வருமான வரி சோதனைகளை தீவிரமாக்க அதிகாரிகள் முடிவு: ஹைதராபாத் சிறப்புக் குழு சென்னையில் ஆலோசனை

ராமமோகன ராவ் | கோப்பு படம்


ராமமோகன ராவை கைது செய்யும் முயற்சிகள் தீவிரம் | சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில் தனிக்குழு

தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து மேலும் 60 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். முக்கியப் பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். முதல் கட்டமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமோகன ராவை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை தி.நகரில் வசிக்கும் தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 144 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என 14 இடங்களில் சோதனை நடந்தது.

ராமமோகன ராவ் வீட்டில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.30 லட்சம் (புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உட்பட) ரொக்கம், அவரது மகன் விவேக் வீட்டில் இருந்து பல கோடி பணம், 10 கிலோ தங்கம், வைர நகைகள், பல கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக கூறப்பட்டது.

சேகர் ரெட்டி, அவரது நண்பர்கள், உறவினர்கள், ராமமோகன ராவ், அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகளில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் சிக்கியிருப்பது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான மணல் வியாபாரிகள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோரின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் கோடிக்கணக் கான மதிப்புள்ள தங்கக் கட்டிகள், பணம், ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. எனவே, தமிழகத்தில் சோதனை மற்றும் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, 60 வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமை யிலான தனிப்படையினர் தமிழகத் தில் சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக மேலும் பலரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் இருந்து 60 அதிகாரிகளை வரவழைத் துள்ளனர். அவர்கள் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவல கத்துக்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ராமமோகன ராவ் வீட்டில் சிக்கிய ரகசிய டைரி, அவரது அலுவல கத்தில் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட கம்ப்யூட்டர் டிஸ்க் ஆகிய வற்றில் பதிவாகி இருந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வியூகம் அமைத்துள்ளனர். இதன் முதல்கட்டமாக, நெஞ்சுவலி என்று கூறி போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமமோகன ராவை எந்த நேரத்திலும் கைது செய்து, தங்கள் கட்டுப்பாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சொத்துகளை கணக்கெடுக்கும் பணியில் தனிக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து மேலும் சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் வீடுகளில் அடுத்தடுத்து எந்த நேரமும் சோதனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனைக்கு தமிழக போலீஸார் ஒத்துழைக்க மறுத்தால், துணை ராணுவத்தை பாதுகாப்புப் பணிக்கு ஈடுபடுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே ராமமோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடந்த போதும் துணை ராணுவத்தினர் தான் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டி ருந்தனர்.

அதேபோல இனிவரும் காலங் களிலும் துணை ராணுவத்தினரின் துணையுடன் சோதனைகளை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள் ளதாகவும் இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி விட்டதா கவும், 20 கம்பெனி துணை ராணுவத் தினர் தயார் நிலையில் உள்ளதா கவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி முடிவால் முக்கிய அரசியல் வாதிகள், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, வருமான வரித் துறையினர் சோதனை குறித்து ஊர்ஜிதப்படுத்தப்படாத பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. ‘ராமமோகன ராவ் வீட்டில் சிக்கிய சொத்து ஆவணங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். அவர், ரூ.1,700 கோடி மதிப்பில் துபாயில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார்’ என்றெல் லாம் பல தகவல்கள் வருகின்றன. இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள், சொத்து மதிப்பு குறித்த உண்மையான தகவல்களை வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராமமோகன ராவுக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி

சோதனையில் சிக்கிய பணம், நகை, சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக ராமமோகன ராவ், அவரது மகன் விவேக், நண்பர் அமலநாதன் ஆகியோருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதில், அமலநாதன் மட்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 55 கேள்விகளை கேட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் பதில்களை பெற்றுள்ளனர். அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அழைக்கும்போது வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

ராமமோகன ராவும் அவரது மகனும் விசாரணைக்கு வருவார்கள் என எதிர்பார்த்து வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. மற்றொரு நாளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறோம் என வேறு நபர் மூலம் தகவல் அனுப்பியதாகவும், அதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகன் இருவரும் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணி அளவில் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ராமமோகன ராவ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அவருக்கு ஓய்வு தேவை எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.






விவேக், தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ராமமோகன ராவுக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உளவுப் பிரிவு போலீஸார் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் திரட்டி வருகின்றனர். எந்த நிலையிலும் விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது என வருமான வரித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

களம் புதிது: அரசு அதிகாரத்தின் பெண் முகம்!

Return to frontpage

படம்: வி.கணேசன்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரே, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளரின் பணிகள் என்ன?

ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர் (சட்டமன்ற கட்சித் தலைவர்) முதல்வராக இருப்பார். அந்த மாநிலத்தை நிர்வாக ரீதியாக ஆள்பவர் தலைமைச் செயலாளர்தான். இவரது நேரடிக் கட்டுப்பாட்டில்தான் மாநிலக் காவல் துறை, ஒட்டுமொத்த அரசு நிர்வாகம், அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிப்பு, நிதி மேலாண்மை போன்றவை இயங்கிவருகின்றன.

அரசின் கொள்கை முடிவுகளை நிர்வாக ரீதியாக நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதைத் தீர்மானிப்பது தலைமைச் செயலாளர்தான். மாநில சட்டப் பேரவையில் புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியப் பொறுப்பு தலைமைச் செயலாளருக்குத்தான் உண்டு. அரசுத் திட்டங்களை அந்தந்தத் துறைகளின் செயலாளர்கள் உரிய முறையில் நிறைவேற்று கிறார்களா, திட்டப் பலன்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அவ்வப்போது துறைச் செயலாளர்களின் ஆய்வுக் கூட்டம் நடத்தி தலைமைச் செயலாளர் உறுதி செய்வார்.

உள்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப் படுகிறன்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பும் தலைமைச் செயலாளருக்குத்தான் இருக்கிறது.

ஒரு திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக அம்சங்கள், அவற்றுக்கான நிதி ஆதாரம், நடைமுறைப் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் முதல்வருக்குத் தலைமைச் செயலாளர்தான் எடுத்துரைக்க வேண்டும். மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பது குறித்தும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமைச்சர்களால் பிரச்சினை ஏற்பட்டால் அது குறித்து முதல்வர் கவனத்துக்கு தலைமைச் செயலாளர்தான் கொண்டு செல்வார். ஐ.ஏ.எஸ். அதிகாரி தவறு செய்யும்போது முதல் கட்ட விசாரணை நடத்தப்படும். அதில் தவறு செய்ததற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானால் ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருக்கும் தலைமைச் செயலாளர்தான் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார். அது தொடர்பான அறிக்கை அவருக்கே (தலைமைச் செயலாளர்) வரும். பின்னர் மாநில அரசை நிர்வாகம் செய்யும் தலைவர் என்ற முறையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.

பணியில் இருக்கும்போதே பட்ட ஆய்வு

கிரிஜா வைத்தியநாதன் 1959-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.எஸ்சி. இயற்பியல் பட்டம் பெற்ற அவர், 1981-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். 1983-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், நிதித்துறை சிறப்புச் செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பணியில் இருந்தபோதே 2011-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் நல்வாழ்வுப் பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.எச்டி பட்டம் பெற்றார். 2013-ம் ஆண்டு நில நிர்வாக ஆணையராகப் பணியாற்றினார். 2014-ம்

உள்ளே ரெய்டு... வெளியே பர்த்டே பார்ட்டி - இது ‘பத்ரிநாராயண்’ ஸ்பெஷல்!

vikatan.com

சினிமாவில்தான் வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடத்தும் போது, வில்லன்கள் 'இப்போ பார்க்கிறியா முதலமைச்சர்ட்ட பேசுறீயானு' டயலாக் விடுவார்கள். அல்லது அசால்ட்டாக மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெறும். ரெய்டை பற்றி கொஞ்சம் கூட சினிமா வில்லன்கள் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரிகளைக் கண்டு அஞ்சவும் மாட்டார்கள். சினிமாவில் வரும் காட்சிகள் போலே இப்போது நிஜயத்திலும் நடைபெற்றுள்ளது.

கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்ததைத் தொடர்ந்து சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் கிடைத்த ஆவணங்கள் கொடுத்த தகவல்களின் அப்படையில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தின் அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ராமமோகன ராவ் வீட்டிலும் கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது, தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் இடையேயும் இந்தச் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ராமமோகன ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிலும் வருவாய்துறை அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் சம்பந்தி பத்ரிநாராயண் (வயது 55) ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருகிறார். சிபிஐ அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர். காலை 5.30 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் பத்ரிநாரயண் வீட்டுக்குள் புகுந்தனர். சிபிஐ அதிகாரிகள், வீட்டுக்குள் புகுந்ததும் பத்ரிநாராயண் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடந்தனர். ஆனாலும் ரெய்டுக்கு முழுமையாக ஒத்துழைத்தனர். அன்றைய தினம் பத்ரிநாராயணனின் 55-வது பிறந்த தினம் ஆகும். அவரது பிறந்த நாளை விமர்சையாக கெண்டாட குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். வீடும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பத்ரிநாராயண் வீட்டில் சுமார் 20 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனையில், 2 கிலோ தங்கம், ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 125 ஏக்கர் நிலம் வாங்கியதற்காக பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தாலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கைவிட பத்ரிநாராயணுக்கு மனம் வரவில்லை. சோதனை நடந்தால் என்ன? நாம் பிறந்த நாள் கொண்டாடுவோம் என்று முடிவு செய்தார்.

இதையடுத்து பிரமாண்ட கேக் கொண்டு வரப்பட்டது. உள்ளே அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் வைத்து பத்ரிநாராயண் தனது 55-வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அவரது உறவினர்கள் பத்ரிநாராயணுக்கு கேக் ஊட்டி விட்டனர். 'ஹேப்பி பர்த்டே' பாடினர் பத்ரிநாராயண் வீட்டில் ரெய்டு நடப்பது தெரியாமல் ஏராளமான தெலுங்குதேசக் கட்சியினர் , அவரது நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்து தெரிவிக்க வீட்டுக்கு வந்தனர். வீட்டில் ரெய்டு நடப்பதை கேள்விபட்டு பின்னர் தலைமறைவாகி விட்டனர்.

வீட்டில் ரெய்டு நடந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பிறந்த நாள் கொண்டாடிய பத்ரிநாராயண் வருவாய்துறை அதிகாரிகளுக்கு பிறந்த நாள் கேக் கொடுத்தாரா... எனத் தெரியவில்லை. ஆனால், ரெய்டு முடிந்ததும் அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணைக்கும் அவர் முழுமையாக ஒத்துழைத்தாக சொல்லப்படுகிறது.

மிஸ்டர் கழுகு: ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா?

vikatan.com


‘‘தமிழகத்தின் உச்ச அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இந்தியாவிலேயே ஒரு அரசாங்கத்தின் தலைமைச்செயலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அப்படிப்பட்ட அவமானகரமான பெருமையைத் தேடித் தந்துள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என்ற வரலாற்றுத் தகவலுடன் வந்தார் கழுகார்.

‘‘வருமானவரித் துறையின் இந்த திடீர் ஆர்ப்பரிப்புக்குப் பின்னணி என்ன?’’

‘‘2016 சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள் நினைவிருக்கின்றனவா? அப்போது ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதைத் தடுக்க முடியாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் கரன்ஸி விளையாடியது. எச்சரித்து... எச்சரித்து நொந்துபோன தேர்தல் ஆணையம் தஞ்சை, அரவக்குறிச்சித் தேர்தல்களையே ஒத்திவைத்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில், ஓட்டுக்குக் கொடுக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. அவர்கள் வருமானவரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அன்புநாதன் பங்களா, குடோன்களை வளைத்தனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கோடி கோடியாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரமையங்கள், தொழிலதிபர்கள் என்ற சிண்டிகேட் மாஃபியா பின்னணியில் இருப்பது புரிந்தது.’’



‘‘அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையானவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருந்த நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ், சைதை துரைசாமி போன்றவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் வருமானவரித் துறையினருக்குக் கிடைத்தது. அத்துடன் தமிழக அரசின் கஜானாவாக இருந்த, மேலும் பல தொழிலதிபர்களும் இருந்தனர். அதனால், ஒரு கட்டத்துக்குமேல் வருமானவரித் துறையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை.’’

‘‘ம்ம்ம்...’’

‘‘அ.தி.மு.க-வுக்கு 50 எம்.பி.-க்கள் உள்ளனர். அவர்களைவைத்து மோடி அரசாங்கத்துக்கு அவ்வப்போது ‘தண்ணி காட்டி’க்கொண்டிருந்தார் ஜெயலலிதா. எப்படியாவது ஜெயலலிதாவுக்கு `செக்’ வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொண்டிருந்த மத்திய அரசு, அவ்வப்போது சொத்துக் குவிப்பு வழக்கைவைத்து விளையாட்டுக் காட்டும். அவர்களுக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுத்த விவரங்கள் மேலும் ஒரு புதிய ரூட்டைப் போட்டுக் கொடுத்தது.’’

‘‘தோண்டத் தோண்ட பல மர்மங்கள் வரும்போல இருக்கிறதே.’’

‘‘மத்திய அரசு உடனடியாக, வருமானவரித் துறை நுண் உணர்வுப் பிரிவுக்குச் சிறப்பு அதிகாரிகளைப் போட்டு தனி டீம் உருவாக்கியது. அந்த டீம், கடந்த 6 மாதங்களாக தமிழகத்தை ரகசியமாக கண்காணித்தது. அவர்களின் கண்காணிப்பு தீவிரமடைந்தபோது அதில், சசிகலா, ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் வளையத்துக்குள் வந்தனர். ஆனால், அதற்குள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானது. அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் மத்திய அரசு அடக்கி வாசித்தது.’’

‘‘ம்...’’

‘‘டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். அதன்பிறகு, பி.ஜே.பி ஏதேதோ வழிகளில், அ.தி.மு.க-வுக்கு மறைமுகமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. அதன் தற்போதைய கட்டம்தான் இப்போது நடக்கும் காட்சிகள். இந்தக் காட்சிகளுக்கு பிள்ளையார்சுழி, சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில்தான் போடப்பட்டது. டிசம்பர் 11-ம் தேதி சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி, 105 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 70 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் தாள்கள். இதையடுத்து, சேகர் ரெட்டியை சிறப்பு டீம் ஒன்று கஸ்டடியில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்தது.’’

‘‘சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் சொல்லிவிட்டாரா?’’



‘‘விசாரணை தொடங்கிய முதல்நாளே, சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வைத்துவிட்டார். குறிப்பாக, தேர்தல் சமயத்தில், சசிகலாவிடம் எம்.எல்.ஏ.சீட்டு மற்றும் தேர்தல் செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணம், அந்த சமயத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சசிகலா பணப் பரிவர்த்தனைகள் செய்தது, ஓட்டுக்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகள், கடந்த ஆட்சியின்போது பொதுப்பணித் துறை கான்ட்ராக்டுகளை எடுக்க, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட பணம், துறைச் செயலாளர் என்ற முறையில் ராம மோகன ராவ் செய்த முறைகேடுகள், எந்தக் கான்ட்ராக்ட் எடுத்தாலும், அரசாங்க கமிஷன் 30 சதவிகிதம் என்று ஊழல் செய்தது என அனைத்தையும் ஒப்பித்துவிட்டார் சேகர் ரெட்டி. அதன்பிறகுதான், ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குள் புகுந்தது வருமானவரித் துறை. அரசியல் மேகங்கள் திசைமாறுவதைப் பொறுத்து அடுத்தடுத்த அதிரடிகள் இருக்கும்.’’

‘‘பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கும் இந்த ரெய்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?’’

‘‘பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமரைச் சந்தித்தற்கும் இந்த ரெய்டுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. டெல்லி போன பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் மோடியிடம் புலம்பித் தள்ளிவிட்டாராம்.’’

‘‘என்ன சொன்னாராம்?’’

“கதறிவிட்டாராம். ‘நீங்கள் ஒரு ரூட் போட்டு என்னை அதில் போகச் சொல்கிறீர்கள். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. அங்குள்ள அதிகாரிகள் அனைவரும், மன்னார்குடி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். நான் மீட்டிங் போட்டால், ஒரு மணி நேரம் கழித்துத்தான் அதிகாரிகளே வருகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு, சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து என்னால் அரசியல் செய்யவோ, கட்சியைக் கொண்டுபோகவோ முடியாது’ என்று பிரதமர் மோடியிடம் புலம்பியதாகச் சொல்கின்றனர். புலம்பிவிட்டு வந்த மறுநாள், ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு.’’

‘‘பன்னீர்செல்வத்துடன் ராம மோகன ராவும் டெல்லி போயிருந்தாரே?’’

‘‘ராம மோகன ராவ் டெல்லி போய் இருந்தார். ஆனால், அவருக்கு பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னீர்செல்வம் மட்டும்தான் பிரதமரைப் பார்த்தார். டெல்லியில் முதல்வரை ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துச் சென்றவர் தம்பிதுரை. ஆனால், அவருக்கு பிரதமர் மீட்டிங்கில் அனுமதி இல்லை. தம்பிதுரையின் மூலமாக சசிக்கு எந்தத் தகவலும் போகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மறுப்பு. அப்போதே இந்த ரெய்டு விவகாரம் பன்னீர்செல்வத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதனால்தான், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கோட்டைக்குள் வந்தபோதும், பன்னீர்செல்வம் அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அத்துடன், இப்போது நடந்த ரெய்டு என்பது பன்னீர்செல்வத்துக்கும் வைக்கப்பட்ட செக் தான்.’’

‘‘பன்னீர்செல்வத்துக்கும் ‘செக்’கா?’’



‘‘கைதாகி உள்ள சேகர் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட, சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக விசுவாசமாக இருந்தார். பொதுப்பணித் துறை பன்னீர்செல்வத்தின் கையில் இருந்ததுதான் காரணம். அவர் மூலம்தான் சேகர் ரெட்டி அத்தனை கான்ட்ராக்ட்களையும் எடுத்தார். அதனால், மத்திய அரசு சொல்கிறபடி நடந்துகொள்ளவில்லை என்றால், பன்னீருக்கும் சிக்கல்தான்.’’

‘‘இப்போது மோடி அரசு என்னதான் நினைக்கிறது?’’

‘‘சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியைவிட்டுவிட்டு போகச்சொல்கிறது. அதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்துச் சொல்கிறது. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுவிட்டார். அடுத்து ராம மோகன ராவும் கைது செய்யப்படலாம். இப்படியே பிடியை இறுக்கிக் கொண்டே போகும் மத்திய அரசு, அ.தி.மு.க மசியவில்லை எனில் அடுத்து சசிகலாவை குறிவைப்பார்கள் அதற்கான வேலைகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது அடுத்த டார்கெட் சசிகலாதான்!’’ என்றபடி பறந்தார் கழுகார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...