Sunday, October 1, 2017


Student petitions against PM Narendra Modi’s bullet train

Student petition against bullet trian, Mumbai-Ahemdabad bullet train, India news, National news, latest news, India news, National newsIn 24 hours, 4,327 people had signed her petition agaisnt the Mumbai -Ahmedabad Bullet train project inaugurated by PM Modi and his Japanese counterpart, Shinzo Abe.
The teenager started a petition against the bullet train on Friday evening. In 24 hours, 4,327 people had signed her petition.As the stampede fuelled anger against the Centre’s bullet train project between Mumbai and Ahmedabad, Shreya Chavan, a twelfth standard student from the city, filed a petition to the Prime Minister Narendra Modistating “We don’t want Bullet trains, we need better Railways”.
Anguished by the death of a 17-year-old junior college student after falling off the local train on September 20, Chavan said, “We decided to take up the issue then (after the student’s death). If students are not able to travel to college by trains then what is the point of a bullet train,” asks Chavan, an arts student of Ruia college.
“Statistically speaking, nine people die every day on the tracks of Mumbai. Under this scenario the funding used for the not needed Mumbai-Ahmedabad bullet train should be invested in improving the conditions of Mumbai local trains,” reads the petition, also addressed to Railway Minister Piyush Goyal and Maharashtra CM Devendra Fadnavis, on Change.org.
Chavan, along with her friend Tanvi Mhapankar, decided to take up the issue after one of their friends lost her life in a rail accident 10 days back.
Maitri Shah, a 17-year-old student from Mithibai College, died on her way back home to Vasai 10 days back after falling off the train between Borivali and Dahisar. After the tragedy at Elphinstone Road station on Friday, the girls decided it was time to take up the matter and filed their petition on the online platform.

Aadhaar-phone linkage a nightmare

Missing links:Several seni citizens complained that the fingerprints taken to register for services did not match with those taken during Aadhaar number registration.File Photo  

Consumers question why private service providers insist on registering biometric details

Linking of Aadhaar numbers with various services continues to be a troubling task to the public. The latest being linking it with mobile phone numbers. In some cases, the fingerprints don’t seem to match, especially those of senior citizens.
Also, consumers are feeling uncomfortable with sharing their biometric data with private service providers. Ecologist and senior citizen Sultan Ahmed Ismail, who narrated a bitter experience at the showroom of a private service provider in Adyar, said even a complaint with their customer care did not help.
“I have linked my bank account, PAN card, family card and LPG ID with Aadhaar but I was not asked to share my fingerprints with any of these agencies, only my Aadhaar number. What right does a private agency have over my data and how safe is it with them,” he wondered, adding that the entire procedure had to be scrapped.
Fingerprint mismatch
Several senior citizens complained that the fingerprints taken to register for services did not match with those taken during Aadhaar number registration. Eighty-three old G. Ramamoorthy said some senior citizens were provided Aadhaar cards without biometric data as their fingerprints had vanished due to ageing. It was difficult to link mobile numbers without fingerprints for senior citizens.
Senior citizens like S.M. Chellaswamy, resident of Gopalapuram, expressed concern over misuse of such personal details. “It is enough that the telecom service providers seek Aadhaar number to link mobile numbers,” he said. Several people complained that they had to visit the customer care centres at least twice before their mobile numbers were linked with Aadhaar numbers due to various reasons.
V. Rajagopal of Anna Nagar West, said, “My neighbour had to visit twice the customer care office as the device failed to recognise his fingerprints. I was told the server was down twice and had to return for fear of disconnection of service.”
Misuse of data
Despite providing Aadhaar details to replace ration cards with smart cards, Mr. Rajagopal has got many details such as his name wrong in the smart card. “I am also concerned about misuse of data as I get calls seeking my personal details for mobile phone connections,” he added.
Consumer activist T. Sadagopan raised the issue of Aadhaar numbers getting linked with mobile wallets and LPG subsidy being credited to them.
“When we complained to the LPG agency, they asked us to cancel link with the bank account and connect it with such mobile wallets. I am not sure whether banks will agree to do such things,” he said.
M.R. Krishnan, deputy director of Consumers Association of India, said the demand by private mobile phone providers for fingerprints was tantamount to intrusion into the privacy of an individual. “Unfortunately, the Telecom Regulatory Authority of India has permitted them to do so without any proper mechanism. We will write to them asking for a review,” he said.
Official sources in the Census Department said that biometric data of close to 7.3 crore residents of Tamil Nadu had been completed so far. Aadhaar coverage was now crossing seven crore since children in the age group of 0 -5 years were also being included.
Asked about issues with finger impressions when linking Aadhaar with mobile numbers, he said that usually the best of three impressions was taken and even when that does not match, iris matching was done. If everything failed then there was always the allowance under exceptional circumstances, he said adding that in some cases the biometry had to be repeated at the Aadhaar centres.
What right does a private agency have over my data and how safe is it?
Sultan Ahmed Ismail
Ecologist
Southern Railway to run special trains

V Ayyappan| TNN | Sep 30, 2017, 18:51 IST




CHENNAI: Southern Railwayhas announced six special trains to clear extra rush. Advance reservations will commence at 8am on Monday.

The trains are: Train No 06001 Chennai Egmore-Tirunelveli special fare special train will leave Chennai Egmore at 9.05pm on October 6. In the return direction, Train No.06002 Tirunelveli-Chennai Egmore special fare special train will leave Tirunelveli at 2.45pm on October 8 and reach Chennai Egmore at 3.45am the next day.

Train No 06005 Chennai Central-Ernakulam Junction special fare special train will leave Chennai Central at 10.30pm on October 6. Train No 06006 Ernakulam Junction-Chennai Central special fare special train will leave Ernakulam Junction at 7pm on October 8 and October 15 and reach Chennai Central at 7.20am the next day.

Train No.82601 Chennai Egmore-Tirunelveli Suvidha special train will leave Chennai Egmore at 9.05pm on October 13. Train No.82631 Chennai Central-Ernakulam Junction Suvidha special train will leave Chennai Central at 10.30pm on October 13, said a press release.
குற்றச்செயல் குறையனும் சாமி...! கிடா வெட்டி விருந்து...!




கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக கொள்ளை, திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல் அதிகரித்து விட்டது. இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போவதால் உயரதிகாரிகளின் கிடுக்கிப்பிடி வேறு உள்ளூர் ேபாலீசாரின் கழுத்தை இறுக்குகிறது.

நிலைமை கைமீறி ெசல்வதை உணர்ந்த பொள்ளாச்சி சரக டிஎஸ்பி மற்றும் இங்குள்ள 3 ஆய்வாளர், கிடா வெட்டி விருந்து போட்டால்தான் இனி எடுபடும் என முடிவு செய்தனர்.அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், ஊர் விழிக்கும் முன்ேப அதிகாலையில் பரிகார பூஜை செய்யப்பட்டு, கிடா வெட்டப்பட்டது. கிடா ரத்தம் காவல்நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தெளிக்கப்பட்டது. சாமி... எங்கள காப்பாத்து சாமி... என சில போலீசார் வேண்டிக்கொண்டனர்.

காவல்நிலையம் அருகேயுள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு, கிடாவை எடுத்துச்சென்று தடல், புடலாக சமையல் ரெடியானது. அன்று மதியம் ருசியாக கிடா விருந்து பரிமாறப்பட்டது. இந்த விருந்தில், டி.எஸ்.பி., ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள், மற்றும் போலீசார் மட்டுமின்றி ஊர்க்காவல் படையினர், போலீஸ் உளவாளிகள் மற்றும் நலன் விரும்பிகள் பங்கேற்றனர். கிடா வெட்டி பூஜை செய்த பிறகும் 3 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. சார்... என்ன சார் செய்வது... என கீழ்நிலை காவலர்கள், ஆய்வாளரிடம் கேட்க, அவர், அட வுடுய்யா... அதான் கிடா விருந்து சாப்டாச்ல்ல... எல்லாம் குறைஞ்சிடும்... நம்ப பொழப்பையும் பார்க்கனும்ல.... என பதில் அளித்துள்ளார்.

Dailyhunt
80 வயதை தாண்டிய ஓய்வூதியர்கள் வயது ஆவணமாக ஆதார் சமர்ப்பிக்கலாம்




நெல்லை: தமிழகத்தில் 80 வயதை தாண்டிய ஓய்வூதியர்கள் வயது ஆவணமாக ஆதார் சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியத்திற்கும் வயதை கணக்கிட ஆதார் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. காஸ் இணைப்பு, வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு எண், ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவர் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவி பெறுவதை தடுக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஒருவரது கண் கருவிழி, விரல் ரேகைகள் பதிவு செய்யப்படும் ஆதாரில் போலிகள் நுழைய முடியாது என்பதால் பல்வேறு அரசு அலுவல்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 80 வயதை தாண்டிய ஓய்வூதியர்களுக்கு வயதை கணக்கிட ஆதார் அட்டை சமர்ப்பிக்கலாம் என தமிழக கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கருவூலத் துறை அனைத்து மண்டல இணை இயக்குநர்கள், அனைத்து கருவூல அலுவலர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 80 வயது முடிவடைந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் வயதை உறுதி செய்யும் ஏதேனும் ஒரு ஆவணத்தை சம்பந்தப்பட்ட கருவூலங்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்ய முடியாத நிலையில் கருவூல அலுவலகத்தில் இருந்து ஒரு உயர் அலுவலர், பதிவு செய்யப்பட்ட ஓய்வூதிய சங்கத்திலிருந்து ஒருவர், மருத்துவப் பணிகள் அலுவலர் ஆகிய மூன்று நபர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும்.

இந்தக் குழுவின் மூலம் ஓய்வூதியர்கள் வழங்கும் ஆவணங்கள் மற்றும் ஓய்வூதியரின் உடற்கூறு அடிப்படையில் வயதை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வயது சான்று ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே இந்தக் குழு அமைத்து வயதை உறுதிப்படுத்த வேண்டிய நிலை இனி எழாது.

இனி வரும் காலங்களில் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கு வயதை உறுதி செய்ய அரசாணைகளில் கூறியுள்ள படி, அதாவது மத்திய வருமான வரி அலுவலகத்தால் வாங்கப்படும் பான் கார்டு, பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய எதுவும் இல்லாத நிலையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம், கூடுதல் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வயது சான்று ஆவணமாக கருதி கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் படி அனைத்து கருவூல அலுவலர்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 சதவீதம் அதிகரிக்கும் 

தமிழக அரசில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் 80 வயதை தாண்டினால் அவர்களது வயது மற்றும் மருத்துவச் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 20 சதவீதம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தான் வயது சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த புதிய ஓய்வூதிய தொகை விபரங்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்




திண்டுக்கல்: புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய தொகை 18,016 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இணையத்தில் இதுகுறித்து தெரிந்து கொள்ளலாம் என்று நிதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2003 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் (சிபிஎஸ்) சேர்க்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு பணியாளர்களிடம் இருந்து அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு சமமான தொகையை அரசு தன்பங்காக செலுத்துகிறது.

இருப்பினும் ஓய்வு பெற்றோர், பணி நீக்கம் செய்யப்பட்டோர், கட்டாய ஓய்வு பெற்றோர், இறந்த ஊழியர்கள் பலருக்கும் இத்தொகை வழங்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டும் உரிய பதில் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. இதனால் இத்திட்டத்தின்மீது ஊழியர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. இத்தொகை இலவச பேன், மிக்சி, கிரைண்டர் வழங்குவதற்காக செலவிடப்பட்டு விட்டது. ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்திடம் இத்தொகை செலுத்தப்படவே இல்லை. மாதம் 10 சதவீத சம்பளத்தை இழந்து வந்ததுடன், தங்களிடம் பிடித்தம் செய்த பணம் என்ன ஆயிற்று என்று தெரியாமல் ஊழியர்களிடையே பெரும் குழப்பமும் நிலவி வந்தது.

இந்நிலையில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கருவூல கணக்குத்துறை, அரசு தகவல் தொகுப்பு விபர மையத்தின் உதவியுடன் இக்கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாத நிலவரப்படி சுமார் 4 லட்சத்து 62 ஆயிரத்து 327 அரசு, உள்ளாட்சி, கல்வி நிறுவன பணியாளர்களின் பங்களிப்புத்தொகை, அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் 18,016 கோடி பொதுக்கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. கணக்குத்தாள் அரசு இணையத்தில் ஒவ்வொரு பணியாளரும் இதுகுறித்து தெரிந்து கொள்ளலாம். ஓய்வு பெற்ற, இறந்த ஊழியர்கள் 3,288 பேருக்கு வழங்க வேண்டிய தொகை 125.24 கோடி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
பைக்கில் சென்ற ராவணனுக்கு அபராதம்



புதுடில்லி: தலைநகர் டில்லியில், ஹெல்மட் அணியாமல் கிரீடம் அணிந்து பைக்கில் சென்ற ராவணன் வேட நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில், ஆண்டுதோறும் நவராத்திரியை ஒட்டி ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ராவணன் வேடத்தில் நடித்த முகேஷ் ரிஷி, ராவணன் தோற்றத்தில் கிரீடம் அணிந்தபடி டில்லி சாலைகளில் பைக்கில் பயணம் செய்தார். இந்த படம் சமூக வலை தளங்களில் வெளியானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். போக்குவரத்து போலீஸ் அலுவலகத்திற்கு நேரில் சென்ற முகேஷ் ரிஷி, அபராதத்தை செலுத்தினார் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Dailyhunt

கருப்பு, சிவப்பு, காவி: அரசியல் குழப்பத்தின் மகா உருவமா கமல்ஹாசன்?




'நடிகர் கமல்ஹாசன் குழப்பத்தில் இருக்கிறார்!' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். அதன் ஆற்றலோ, தற்போதைய அரசியலுக்கான அவசியமோ என்னவோ, 'அரசியல் குழப்பத்தின் மகா உருவமே கமல்தான்!' என்கிற ரீதியிலான கருத்துகள் சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
அதை வழிமொழிவது போல் மக்களிடமும் 'ஆரம்பத்தில் நல்லாதான் பேசினாரு. உரிமைக்கும் குரல் கொடுத்தாரு. அட இவரல்லவா நம் தேவதூதர். தமிழ்நாட்டை காக்க வந்த ரட்சகர் என்று கூடநம்பினோம். ஆனா இப்ப தமிழ்நாட்டில் நடக்கிற மற்ற அரசியல் குழப்பங்கள் போதாதுன்னு புதுக் குழப்பங்களையல்லவா விதைக்கிறாரு!' என்பன போன்ற வசனங்கள் புறப்படத் தொடங்கியுள்ளது.
முதலில் 'கருப்பு; பகுத்தறிவு, பெரியாரிஸ்ட்' என்றார். பிறகு சிகப்புக்கு அடையாளமாக கேரள முதல்வரை சந்தித்தார். அதே வேகத்தில் டில்லியில் கேஜ்ரிவாலிடம் பேசினார். அதே வேகத்தில் சென்னைக்கு வந்து, 'அரசியலில் தீண்டாமை என்பதே இல்லை. பாஜகவின் வலதுசாரி கொள்கைகள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனால் அதேசமயம், குறைந்தபட்சம் செயல்திட்டம் உருவானால் பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ள தயங்க மாட்டேன்!' என்றும் பிரகடனம் செய்கிறார். அப்புறம் பார்த்தால்,
'காவி சட்டையோட ஓட்டுகளை ரஜினியை வைத்தும், கருப்பு சட்டையோட ஓட்டுகளை என்னை வைத்தும் வாங்குவதற்காக நாங்கள் களமிறக்கப்படுகிறோம் என்று கூறுவதற்கு ஆதாரம் வேண்டும். தமிழகம் சீர்குலைந்திருக்கிறது. அதை சீர் செய்வதுதான் முதல் கடமை. நாங்கள் இரண்டு பேருமே ஊழலுக்கு எதிரானவர்கள். இப்போது இருக்கும் கடும் நோயிலிருந்து தமிழக மக்களை சரி செய்து விட்டு இந்திய அரசியல் குறித்து பேசலாம். மோடி ஆட்சியின் அலை எங்கள் மீது பட்டால் உடனடியாக விமர்சனங்களை வைப்போம்!' என்று நீட்டி முழக்குகிறார். 'இந்த பேச்சுக்கள் எல்லாமே அறிவு ஜீவித்தனமானதா? ஏழை எளிய மக்களுக்கானதா? இரண்டுமே அல்லாமல் அந்நியப்பட்டதாக அல்லவா இருக்கிறது?' என்று குறிப்பிடுகிறார்கள் 'கமல் ஒரு மகா குழப்பம்!' என்ற கருத்தோட்டத்தில் நீந்திக் கடப்பவர்கள்.
என்ன ஆச்சு கமலுக்கு? எத்தனையோ பேர், எத்தனையோ அரசியல் கருத்துகளை தற்சமயம் உதிர்த்தாலும், இவர் கருத்துகள் மட்டும் முன்னிலைப்பட்டு பேசப்படுவது ஏன்? அவரின் நோக்கம்தான் என்ன? நிச்சயம் கட்சி ஆரம்பிக்கத்தான் போகிறாரா? அது வெற்றிகரமானதாக இருக்குமா? ஊழலற்ற ஆட்சியை அவர் கொடுக்கக் கூடியவரா? தற்போதைய தமிழக அரசியல் சூழலில் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசமும், அவரின் முன்னுக்கு பின்னான அறிவு ஜீவித்தனமான பேச்சுகளும் என்ன எதிர்காலத்தில் என்ன மாதிரியான சூழலை ஏற்படுத்தும்? என்றெல்லாம் அதில் நிறைய கேள்விகள். இதை புரிந்து கொள்வதற்கு கமல்ஹாசனுக்கு முந்தையதான தமிழக அரசியலை முன்நிறுத்தி பார்த்து நகர்வது நல்லது.
தமிழகத்தை பொறுத்தவரை மக்களிடம் பிரபல்யம் பெறாத ஒருவர் அரசை எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் அது பெரிதாக எடுபடுவதில்லை. ஆட்சியில் இல்லாத காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி தினம் ஓர் அறிக்கை, நாளிரண்டு தொலைக்காட்சி பேட்டி என்று அளித்து வந்ததால் அவரின் விமர்சனங்கள் எதிர்நிலை சக்தியான அதிமுக ஆட்சியின் அச்சாணியையே உலுக்கியது. அதைப் பற்றி பகிரங்க வெளிப்பாடுகள் காட்டாவிட்டாலும், அதையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்காவாவது செய்தார் ஜெயலலிதா.
அவருக்கு முந்தைய எம்.ஜி.ஆர். காலமும் அப்படியே. தன் ராமாவரம் தோட்டத்திற்கு வருபவர்களை விட, கோபாலபுரம் வீட்டிற்கு யார் செல்கிறார்கள்; அங்கே நடக்கும் அரசியல் நகர்வு என்ன என்பதை கண்காணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தது கட்சி மாச்சர்யங்கள் கடந்து அத்தனை பேருக்கும் தெரியும். இந்த நிலை வெற்றிடமானது ஜெயலலிதா ஆஸ்பத்திரி வாசம், தொடர்ந்து அவரது மரணம்.; அதைத் தாண்டி கருணாநிதி மவுனமான காலத்திற்கு பின்புதான். இதன் பின்பு அரசு கட்டிலில் தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல் நிலை ஆனது.
ஸ்டாலின், ராமதாஸ் போன்ற அரசியல் தலைகளின் கடும் விமர்சனங்கள் கூட வீரியமின்மையாய் போன நிலையில், விஜயகாந்த், வைகோ போன்றவர்கள் ஆட்சிக்கு எதிர்நிலையில் பெரிய அளவில் விமர்சனங்கள் கூட வைக்கவில்லை.
ஜெயலலிதா ஆஸ்பத்திரி வாசம், அவர் சிகிச்சையில் இருந்த காலத்தில் வந்த சில தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தேர்தல் கமிஷனுக்கு பதிக்கப்பட்ட அவரின் கட்டை விரல் ரேகை, அவர் உடல் நிலை குறித்து அவ்வப்போது பரவிய வதந்திகள், அந்த வதந்தி பரப்பியவர்கள் மீது பாய்ந்த வழக்குகள், ஜெயலலிதா இட்லி, பிரட் சாப்பிட்ட கதையை ஒப்பித்த அமைச்சர்கள். ஜெயலலிதாவின் திடீர் மரணம், அவர் உடலின் இறுதி அஞ்சலிக்கு பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் வருகை, பன்னீர்செல்வம் பதவி விலகல், சசிகலா பொதுச்செயலாளர் தேர்வு, பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை தீர்மானம், ஸ்டாலின் சட்டை கிழிந்து வெளியே வந்த காட்சி, பிறகு சட்டப்பேரவைத் தலைவர் மீது எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் என வரும் பல்வேறு தமிழக சரித்திர சம்பவங்களும், அதையொட்டி நடந்த அரசியல் விமர்சனங்களும், தாக்கீதுகளும் அப்போது விழலுக்கு இறைத்த நீராகவே காட்சியளித்தது.
இந்தக் காட்சிகள் எல்லாம் நீர்த்துப் போன விஷயங்களாக மாறியதற்கு ஒற்றைக் காரணம் 'மோடியின் அரசு' என்பதை அந்த மைய அரசின் பிரதிநிதிகள் ஒப்புக் கொள்ளா விட்டாலும், அவர்களின் மனசாட்சி கண்டிப்பாக அதை ஒப்புக் கொண்டே தீர வேண்டும்.
ஒருவேளை கருணாநிதி பேசும் சக்தியுடன் இருந்திருந்தால் தமிழக அரசியலில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? நடக்க விட்டிருப்பாரா? என்பதை அரசியல் விமர்சகர்கள் பலரும் பேசி உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தார்கள் என்பதே நிஜம். அதே சமயம் பொதுமக்களின் மனோநிலையும் அவ்வாறே இருந்தது என்பதை மறுக்க முடியாது.
சரியோ, தவறோ தங்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு என்னதான் ஆயிற்று என்கிற கோபதாபங்கள் அவர்களுக்குள் உருண்டோடியது. அதை பொய் சொல்லியோ, எதுவும் சொல்லாமலோ ஓட்டிக் கொண்டு பதவி சுகம் அனுபவிக்கும் ஆளும் பதவியில் உள்ளவர்கள் மீது படு கோபமும் வந்தது. சுருக்கமாக சொன்னால் நாட்டிலேயே, உலகிலேயே இந்த அளவு சகிப்புத்தன்மை உள்ள மக்கள் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள் என்பதை தமிழக மக்கள் இந்த காலகட்டத்தில் உலகுக்கே உணர்த்தியிருக்கிறார்கள்; இன்னமும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதே உண்மை.
இந்த கோப உணர்ச்சி வெளிப்பாடுகள் அதிமுக அமைச்சர்கள் மீது மட்டுமல்ல; அதை காப்பாற்றி வரும் மோடி அரசின் மீதும் தமிழக மக்களுக்கு அதிருப்தி மிகுந்தது; மிகுந்து கொண்டுமிருக்கிறது. அதை சமூக வலைதளங்கள் மூலம் நீக்கமற காண முடிகிறது. இந்த சூழ்நிலையில்தான் ஆபத்பாந்தவன் போல் ரஜினி வந்தார். 'சிஸ்டம் கெட்டு விட்டது!' என்றார். பிறகு, 'போர் வரட்டும் பார்க்கலாம்!' என்றார். அதைத் தொடர்ந்து ரஜினியின் பக்கம் தன் பார்வையை திருப்பியது மீடியாக்கள். அதனால் தமிழக அமைச்சர்கள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. என்றாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ள தயங்கினர்.
அந்த சமயம்தான் கமலின் 'பிக்பாஸ்' வருகை. சின்னத்திரை வரலாற்றில் இந்த அளவு ஒரு நிகழ்ச்சியை மக்கள் பார்த்திருப்பார்களா என்ற சந்தேகத்தை ஒரு மாயையாகவே கிளப்பியது அந்நிகழ்ச்சி. அதில் இடம் பெற்ற கமல்ஹாசனுக்கு இளைய தலைமுறை முதல் பெண்கள் வரை கொடுத்த வரவேற்பு புதிய உற்சாகத்தை மூட்டியது. ஓவியா, காயத்திரி, ஜூலி, ஆரவ், சிநேகன் என வரும் சகலகலா நடிக பட்டாளங்களின் வழி ஜொலித்த ஜொலிப்பிலிருந்து அம்பு போல் புறப்பட்ட கமல் அரசியல் பேசினார்.
ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று சொன்னதற்கு பெரிதாக பிரதிபலிப்பு காட்டாத அமைச்சர்கள் ஆளாளுக்கு கமல் மீது கடுமை காட்டினார்கள். 'ஜெயலலிதா இருந்த வரை வாய்திறக்காத கமல் இப்போது எப்படி பேசுகிறார். அவர் இருந்திருந்தால் பேசுவாரா? பேச முடியுமா?' என்றெல்லாம் கேள்விகள். மக்களோ அதை ரசித்தார்கள். கமல்ஹாசனாவது ரஜினி போல் மறைமுகமாக இல்லாது நேரடியாக போட்டுத் தாக்குகிறாரே என மகிழ்ச்சி அடைந்தார்கள்.
'விஸ்வரூபம்' படம் வெளியிடுவதில் பிரச்சனை வந்தபோது அதை வெளியிட அனைத்து வகையிலும் உதவி செய்தவர் ஜெயலலிதா. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தும்போது என்னென்ன தொந்தரவுகள் இதே அமைச்சர்கள் கொடுத்தார்களோ? திரைமறைவில் நடந்தது யாருக்கு தெரியும். ஜெயலலிதா இருந்திருந்தால் கமலை இப்படி அமைச்சர்கள் பேச முடியுமா? பேசி விட்டு இருக்க முடியுமா?’ என்கிற மாதிரியான கருத்துகள் மக்களிடமே புறப்பட்டது.
இது போன்று மக்களிடம் கிடைத்த ஊக்கமும், உற்சாகமும், பிக்பாஸ் வெற்றியும் கமலை முன்னை விடவும் கூடுதலாக அரசியல் பேச வைத்தது. புதுக்கட்சி தொடங்குவேன் என அறிவிக்கும் அளவுக்கு கொண்டு போனது.
பிறகென்ன? கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார். அப்புறம் டில்லியில் கேஜ்ரிவாலை பார்க்கிறார். அதே சமயம்போகிற இடமெல்லாம் பேட்டிகள்தான். கருத்துகள்தான்.
'பயணத்துக்கான பாதையை வகுத்துக் கொண்டுதான் மக்களிடம் பேச வேண்டும். நான் முதல்வர் ஆகத் தயார் என்று நான் சொல்லவில்லை. முட்கிரீடம் என்பது நிர்வாக ரீதியில் உள்ள அனைவருக்குமே வரும். ஒரு அரசு இத்தனை சீரழிந்த பிறகு யார் கைக்கு வந்தாலும் அவர்களுக்கு சூட்டப்பட போவது முட்கிரீடம்தான்!' என்றார்.
'அரசியலில் ஞானம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில் கமல்ஹாசன் என்றில்லை, மாற்றம் தேவை என்பது மக்களின் மனதில் உள்ளது. திராவிட கட்சிகள், மற்ற கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் சேருவதுதானா மக்களுக்கு முக்கியம். யார் யார் கூட சேர்ந்தா எனக்கென்ன. ஆனால் நல்லாட்சி நடைபெறவில்லையே. மக்கள் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே நல்லாட்சி நடைபெற்றதாக அர்த்தம்!' என்றும் ஆவேசப்பட்டார்.
'இனி ஆட்சிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் இத்தனை நாட்கள் நடந்த அநியாயங்களுக்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். தகர்க்கப்பட்ட சுவர்களை எல்லாம் மீண்டும் கட்ட வேண்டும். அரசு கஜானாவை நிரப்ப வேண்டும். கேள்வி கேட்கும் மக்கள் பிரதிநிதிகள் குறைந்து கொண்டே வருகிறார்கள்!' என்றார்.
'என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை. என்னுடைய கபாலத்தில் இருந்து இயக்கப்படுகிறேன். பெரியார் என்பவர் ராமானுஜரின் வழித்தோன்றல். அதற்காக இருவரும் கூறியது ஒன்று என்று நான் சொல்லவில்லை. உயிருக்கு ஆபத்துடன் ராமானுஜர் செய்தது சமூக சேவை. அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் காந்தி. அதற்கடுத்த கட்டத்துக்கு தமிழகத்துக்கு தேவை என்று எண்ணியதால் பெரியார் அதை வேறு ஒரு கட்டத்துக்கு கொண்டு சென்றார். இவர்கள் அனைவரும் சமூகத்துக்கு தேவையானவர்கள்தான்!' என்று சொல்லடுக்குகளால் அடுக்கினார்.
அதே வேகத்தில், 'நான் திராவிடர் கழகத்தின் உறுப்பினரும் அல்ல. திமுகவின் உறுப்பினரும் அல்ல. எனக்குப் பிடித்த நபர்கள் இந்த கட்சிகளில் இருந்திருக்கிறார்கள். எனக்கு பிடித்த சிந்தனைகள் இந்த கட்சிகளில் இருந்திருக்கிறது. பெரியாரிஸ்ட் என்று சொல்லும் கமல் எப்படி 'தேவர் மகன்', 'சபாஷ் நாயுடு' ஆகிய படங்களை எடுத்தார் என்று கேட்கிறீர்கள். மதுவிலக்கை பற்றியோ அல்லது மதாச்சாரியார்களை பற்றியோ படம் எடுத்தால் மது இருக்க வேண்டும், மதாச்சாரியும் இருக்க வேண்டும். 'சபாஷ் நாயுடு'வில் எதைப் போற்றுகிறேன் என்பதை பார்க்க வேண்டும். எதை கிண்டல் செய்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும். சிவன் பார்வதி பேசுவதை பெரியார் புராணமாக எழுதியுள்ளார். அதற்காக அவர் அவரது கொள்கையில் இருந்து மாறிவிட்டார் என்று அர்த்தமா?' என்று கேள்வி கேட்டார்.
'அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என்று இந்த முறையாவது உண்மையை பேசியதில் சந்தோஷம். இந்த பொய்யில் சில ரகசியங்கள் புதைந்து கிடப்பதாக மக்களும் நினைக்கிறார்கள், நானும் நினைக்கிறேன். என்னால் இயக்க முடிந்தால் அந்த ரகசியங்கள் வெளிவர வைக்க முடியும். ஆனால் அதற்கு ஆவன செய்ய வேண்டிய அமைப்புகள் இருக்கின்றன. உண்மைகள் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும்!' என்றார். அதன் உச்சகட்டமாகத்தான் பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல; தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோப்பேன் என்றும் பொங்கினார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணத்தைத் தடுக்காத அரசு அகல வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கிடையே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மரணங்கள், நீட் தேர்வு குறித்தெல்லாம் போட்டுத் தாக்கினார்.
இதில் வேடிக்கையான விஷயம். இத்தனையும் கமல் அள்ளி வீசிக் கொண்டிருக்க, போர் வரட்டும், சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்த ரஜினிகாந்த் அமைதி காத்தார். 'சத்குரு நதி மீட்புப் பயணத்துக்கு மட்டும் வாய்ஸ் கொடுத்து விட்டு, தொடர்ந்து அமைதி காக்கிறார். குறிப்பாக செப்டம்பரில் அவர் சந்திக்க வேண்டிய ரசிகர்கள் சந்திப்பு கூட நடக்கவில்லை. அது இனி நடக்குமா என்றும் தெரியவில்லை.
இங்கேதான் அனைத்து வகை குழப்பங்களும் சங்கமிக்கின்றன. எப்படி?
''முதல்வர் கிரீடம் மட்டுமல்ல; மிகப் பிரபலப்பட்டவர்களே ஆனாலும், அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பதும் அவ்வளவு சுலபமான காரியமல்ல. அப்படியே அவர்கள் ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடித்தாலும் ஊழலற்ற ஆட்சியை கமல் உதிர்க்கிற வீர வசனம் போல் நடத்துவதும் சாத்தியமில்லை என்பதை, அவர் நம்பும் இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களே ஒப்புக் கொள்கிறார்கள். ஒரு தொழிலதிபரிடம் நிதி வாங்காமல் கட்சியை நடத்த முடியுமா? தேர்தலை சந்திக்க முடியுமா? அந்தக் காலம் போல் தன் பாக்கெட்டில் உள்ள காசை செலவு செய்து கொடி நட்ட, கம்பம் தூக்கவெல்லாம் அடிமட்டத் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணினால் அது நம் முட்டாள்தனம். இன்றைக்கு ஒரு வார்டில் உள்ள தெருக்கள் தொடங்கி, உபவட்டம், வட்டம், மாவட்டம், மண்டலம் வாரியாக எந்த அசைவு அசைக்க வேண்டுமானாலும் காசுதான் வேணும்.
அதற்கு தொழிலதிபரிடம் போய் நிற்கத்தான் வேணும். நாளைக்கு ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுக்கு மறைமுக, நேரடி சலுகைகள் செய்துதான் ஆகவேண்டும். அதில் ஊழல், முறைகேடு புறப்பட்டே தீரும். முதலில் கருப்பு என்றவர், பிறகு காவிக்கும் ஆதரவு என்று பல்டியடித்த கமல் ஊழலற்ற ஆட்சி என்ற கருத்திலேயே இங்கே அடிபட்டுத்தான் போகிறார். இது ரஜினிக்கும் பொருந்தும். அதை அவர்கள் புரியாமல் எல்லாம் இல்லை.
அப்படியானால் மற்ற அரசியல்வாதிகளை போலவே இதுவும் ஒரு வெற்றுக்கோஷம்தான் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா? இதை மக்கள் மட்டும் நம்பத் தயாராக உள்ளார்களா? கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள பிரபல்யம் அவர்கள் இணைந்து நின்று தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பை அள்ளித்தர வாய்ப்புண்டு. அதுவே தனித்தனியாக நின்றால் ரஜினி வாங்குகிற ஓட்டு கூட அவருக்கு கிடைக்காது. ரொம்ப சுலபமாக திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு வந்து சேரும்!'' என்கிறார் அதிமுகவில் 45 ஆண்டுகாலமாக பணியாற்றும் நிர்வாகி ஒருவர்.
''நாங்கள் ஆரம்பத்தில் ரஜினியின் குரலாகத்தான் கமல் பேசுகிறார் என்று நினைத்தோம். ஆனால் இப்போது அப்படியில்லை. ரஜினி அரசியலுக்கு வருவதன் மூலம் முதலில் பாதிப்படையும் கட்சி எது என்று பார்த்தால் அது நிச்சயம் திமுகதான். ஏனென்றால் பெரும்பான்மை அதிமுக தொண்டர்கள், பெண்கள் ரஜினியையே மாற்றாக எண்ணி ஓட்டு போடுவார்கள். அவர் ஒரு வேளை அரசியலுக்கு வராமல் இருந்தால் அந்த ஓட்டுகளில் பெரும்பான்மை திமுகவிற்குத்தான் சேரும். விஜயகாந்த் கட்சி இன்றைக்கு இருக்கிற நிலைமை தெரியும். எனவே தேமுதிக வெற்றி பெறும் இடத்தில் இல்லை என்ற சூழல் ஏற்படும்போது அதற்கான ஓட்டுகளும் கூட இங்கேயே விழ வாய்ப்புண்டு. இந்த நிலையில், 'ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது; வந்தாலும் வெல்லக் கூடாது!' என்ற தேவை திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது. அதற்காக ஏவப்பட்ட தொனியே கமலின் திடீர் அரசியல் பிரவேசம் காட்டுகிறது. திமுகவின் தந்திரத்திற்கு கமல் பலியாகி விட்டது போலவே தோன்றுகிறது. அதை உணர்ந்துதான் ரஜினி தற்போதைக்கு அரசியல் வெளிப்பாட்டை ஒத்தி வைத்திருக்கிறார் என கருதுகிறோம்!'' என்கின்றனர் கோவையை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் சிலர்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது நீண்டகால திட்டமிடலின் வெளிப்பாடு; ஆனால் கமலின் அரசியல் வெளிப்பாடு திடீர் என உதயமானது என்பதற்கும் சில விஷயங்களை முன்வைத்தே பேசினர் அவர்கள். அப்படி அவர்கள் கூறியதன் சாரம்சம்:
''விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தான் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு போகும் பகுதிகளில் எல்லாம் ஓய்வு நேரங்களில் தேடித்தேடி தனக்கென ரசிகர் மன்றங்களை உருவாக்கினார். அதற்கு அவரின் ரசிக முன்னோடிகளே எப்பவும் தயாராக இருந்தனர் என்பது வரலாறு. உதாரணமாக உடுமலைப்பேட்டையில் அவர் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு 55 நாட்கள் தங்கியிருந்த காலத்தில் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர் படப்பிடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது மாநில, மாவட்டத் தலைவர்கள் சிலர் கிராமம் கிராமமாக செல்வார்கள். அங்குள்ள 13 வயது முதல் 20 வயதுள்ள இளைஞர்கள் வரை பேசுவார்கள். அந்த ஊரின் பிரச்சினைகளைப் பற்றி கேட்பார்கள்.
உங்க ஊருக்கு விஜயகாந்த் வருவார். நீங்கள் தயாராக இருங்கள். மன்றம் ஆரம்பிக்க, கொடியேற்ற ஒரு இடம் ஏற்பாடு செய்யுங்கள் என்பார்கள். ஒரு பிரபல நடிகர் தன் ஊருக்கே வரும்போது, தன்னை பெரிய மனுஷன் ஆக்கிக் கொள்ள யார்தான் விருப்பப்படமாட்டார்கள்? இந்த செலவுகளுக்கு மன்ற நிர்வாகிகளே பணம் கொடுப்பார்கள். பிறகென்ன மன்றம் தயாராகும். கொடிக்கம்பம் நிறுத்தப்படும். ஒரு நாளில் விஜயகாந்த் வருவார். கொடியேற்றுவார். அந்த ஊரே வரும். வேடிக்கை பார்க்கும். விஜயகாந்துடன் படம் பிடித்துக் கொள்வார்கள். அப்புறம் அந்த மன்றத்தை சேர்ந்தவர்கள் விஜயகாந்தை விட்டு விலகுவார்களா? மாட்டார்கள்.
அப்படித்தான் தமிழகம் முழுக்க 20 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்ட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மன்றங்களுக்கு அரசியல் பயிற்சி கொடுத்து உருவானது தேமுதிக. இதன் நிலை இப்படி என்றால் ரஜினிக்கு மன்றங்கள் என்று எடுத்துக் கொண்டால் இப்பவும் பதிவு செய்யப்பட்டவை ஒரு மாவட்டத்திற்கு 4 ஆயிரம் வீதமும், பதிவு செய்யப்படாதவை அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் உள்ளது. இப்படி 32 மாவட்டங்களுக்கு கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மன்றங்களுக்கு மேல் உள்ளது. அதில் சென்னை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் சராசரி எண்ணிக்கையை விட கூடுதலாகவே இருக்கிறது. இவற்றின் செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது.
இதே எண்ணிக்கையில் உள்ள அஜித் ரசிகர்களை எடுத்துக் கொண்டால் அதில் பாதி ரஜினி ரசிகர்களாகவும் உள்ளார்கள். இவர்களும் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். இவ்வளவு ஏன்? விஜய் ரசிகர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அகில இந்திய தலைமை, மாநிலத் தலைமை, மாவட்டத் தலைமை, இளைஞர் அணி தலைமை, மாநகரத் தலைமை என மன்றங்களைப் பிரித்து பதிவு எண்கள் கொடுத்திருப்பதோடு, தமிழகம் முழுக்க உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தலைமை மன்றம் என உருவாக்கி அதற்கும் பதிவு எண் வழங்கியிருக்கிறார்.
இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 800 முதல் 1000 மன்றங்கள் வரை முழுமையான செயல்பாட்டில் வைத்துள்ளவர் அவரே. இதனால் ரஜினி, அஜித், விஜய் கட்சி ஆரம்பித்தால் உடனடியாக இந்த மன்றங்களை எல்லாம் உடனே கட்சியாக மாற்ற முடியும். அவர்கள் உடனே களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்றக் கூடிய அளவில் தயார்படுத்தவும் முடியும். ஏற்கெனவே ரஜினி, அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு பகுதியிலும் திமுக அல்லது அதிமுகவிடம் தேர்தல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் கமல்ஹாசனை பொறுத்தவரை ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாகத்தான் செயல்பட வேண்டும் என்றும், அரசியல் கூடவே கூடாது என்று அறிவித்து நீண்ட காலமாகி விட்டன. அவர்களும் அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு பொதுச் சேவையில் மட்டுமே இறங்கி வருகின்றனர். தப்பித்தவறி கூட அரசியல் பக்கம் தலை வைப்பதில்லை. அதனால் மன்றங்களின் வளர்ச்சியும், செயல்பாடும் பாதித்திருக்கிறது. அந்த வகையில் மாவட்டத் தலைமை நற்பணி மன்றம் மற்றும் நகரத் தலைமை மன்றம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அவர்களின் கீழ் மாவட்டத்திற்கு 300 மன்றங்கள் இருந்தாலே மிக அதிகம். அப்படியிருக்க, எந்த ஒரு முன்னேற்பாடும், திட்டமிடலும் இல்லாமல் திடீரென அரசியல் பேச்சு, அரசியல் கட்சி என்று அவர் இறங்குவது எத்தகையதொரு ஆபத்தில் முடியும்.
இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த காலத்தில் அவரை விடவும் அதிக ரசிகர் மன்றங்களை கொண்டிருந்தவர் சிவாஜி கணேசன். ஆனால் அவரால் தேர்தல் அரசியலில் வெல்ல முடியவில்லையே. அரசியலில் எம்.ஜி.ஆரை அங்கீகரித்தவர்கள், சிவாஜி கணேசனை நடிப்பின் சிகரமாக வைத்து உச்சிமோந்தார்கள் என்பதே வரலாறு. இதையெல்லாம் சிந்திக்காதவர் இல்லை கமல்ஹாசன். அப்படியானால் எந்த திட்டமிடலும் இல்லாமல் அரசியல் பேச்சுகளை உதிர்ப்பதும், சமூகத்தின் மீதும், மக்களின் மீது அக்கறை உள்ளவராக பொங்குவதும், கேரள முதல்வர், டில்லி முதல்வர் சந்திப்பு நடத்தி பரபரப்பு உருவாக்குவதும் யாருக்கான அரசியல், யாரை வரவிடாமல் வைப்பதற்கான அரசியல், யாரை குழப்புவதற்கான அரசியல் என்றுதான் யோசிக்க வேண்டும்.
ஒளிரும் நட்சத்திரம்: விஜய் சேதுபதி

Published : 28 Jul 2017 10:08 IST




ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்

1. கடந்த சில ஆண்டுகளாக அதிகப் படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைச் சூட்டியவர் இயக்குநர் சீனு.ராமசாமி. காளிமுத்து- சரஸ்வதி தம்பதியின் மகனாக 16.01.1978-ல் ராஜபாளையத்தில் பிறந்தவர் விஜய் சேதுபதி.

2. விஜய் சேதுபதியின் தந்தை சிவில் இன்ஜினீயர். பணி நிமித்தம் சென்னைக்குக் குடும்பம் குடிபெயர்ந்ததால், தனது உயர்நிலைக் கல்வியைச் சென்னையில் பயின்றார். பள்ளிக்காலத்தில் விளையாட்டிலோ பிற தனித்திறமைகளிலோ ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி, அதிகம் கேள்வி கேட்பவராக வளர்ந்தார். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் வணிகவியல் பயின்று பி.காம். பட்டம் பெற்றார்.


3. குடும்பத்துக்கு உதவும் விதமாக துபாய் சென்று ‘கணக்காளராக’ஒரு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்த வேலை பிடிக்காமல் போனதால் சென்னை திரும்பினார். விஜய் சேதுபதியின் இந்த முடிவை அவருடைய அப்பா பாராட்டியதோடு “ உனக்கு எது பிடிக்கிறதோ அதைச் செய். உன் மனம் சொல்வதைக் கேள்” என்றார்.

4. காதல் திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளின் தந்தையாக மாறிய விஜய் சேதுபதியிடம் அவருடைய நண்பரான ஒளிப்படக் கலைஞர் ஒருவர்,“ உனது கண்களும் முகமும் ஒரு நடிகனுக்குரியவை” என்று கூறிச் சென்றார். நண்பர் கூறியது முகஸ்துதி அல்ல என்பதைப் புரிந்துகொண்ட விஜய் சேதுபதி, சினிமாவில் நடிப்பது என்று முடிவெடுத்தார். இதைக் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறியபோது ‘ஆர்வக்கோளாறு’என்று விமர்சிக்கப்பட்டார்.

பட கம்பெனிகளைத் தேடிச் சென்று நடிக்க வாய்ப்பு தேடியபோது, அவரது ஒளிப்படங்களை வாங்கிக்கொள்ளவே பலர் மறுத்தனர். இதனால் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பைப் பயில விரும்பினார். ஆனால், அங்கே நடிப்புப் பிரிவில் சேர இடம் இல்லை. அதனால் ‘கணக்காளராக’ கூத்துப்பட்டறையில் பணியில் சேர்ந்தார். 2005-ல் சுனாமி விழிப்புணர்வு வீதி நாடகங்களைத் தமிழகத்தின் கடற்கரைக் கிராமங்களில் கூத்துப்பட்டறை அமைப்பு நடத்தியது.

அதன் நடிகர்கள் குழுவில் இணைந்துகொண்ட விஜய் சேதுபதி, முதல்முறையாக வெகு மக்கள் கூட்டத்தின் நடுவே திறந்தவெளியில் நடித்தார்.

5. அதன் பின்னர் கூட்டத்தில் ஒருவராக நிற்கும் துணை நடிகராகப் பல படங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதில் ஒன்று ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. பின்னர் ‘புதுப்பேட்டை’, ‘லீ’ ஆகிய படங்களில் சில காட்சிகளில் நடித்தார். ‘நான் மகான் அல்ல’ படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்தவரை ‘பெண்’ தொலைக்காட்சித் தொடரின் மூலம் முகம் தெரியவைத்தார் இயக்குநர் சி.ஜே.பாஸ்கர். தொடரில் நடித்துக்கொண்டே கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கிய குறும்படங்களின் வழியாக இணையத்தில் அறியப்படும் இளம் நடிகராக ஆனார்.

6. 2010-ல் வெளியான ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி, அதன் பின்னர் சாகச நாயகன் பிம்பம் இல்லாத கதாபாத்திரங்களுக்கான நடிகராகக் கொண்டாடப்பட்டு வருகிறார். ‘சூது கவ்வும்’ தாஸ், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பிரேம் குமார், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சுமார் மூஞ்சி குமாரு, ‘பண்ணையாரும் பத்மினியும்’ முருகேசன், ‘ஆரஞ்சு மிட்டாய்’ கைலாசம், ‘இறைவி’ மைக்கேல், தற்போது ‘விக்ரம் வேதா’வில் வேதா என சாமானிய மக்களின் மத்தியிலிருந்து எழுந்துவரும் எளிய, விளிம்புநிலைக் கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டிவருகிறார்.

7. தனது இயல்பான நடிப்புக்காக விஜய் சேதுபதி எந்த நடிப்பு உத்தியையும் பின்பற்றுவதில்லை. 39 வயது நிரம்பிய விஜய் சேதுபதி ‘சூது கவ்வும்’ படத்தில் 40 வயதுக்காரராகவும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் 55 வயது முதியவர் தோற்றத்திலும், ‘றெக்க’ படத்தில் 25 வயது இளைஞராகவும் தனது கதாபாத்திரங்களுக்காக வெளிப்படுத்தும் நம்பகமான நடிப்பின் மூலம் எதிர்காலம், கடந்த காலத்துக்குப் பயணித்துக்காட்டி பார்வையாளர்களை வசீகரித்துவருகிறார்.

8. ‘ஆரஞ்சு மிட்டாய்’, இப்போது ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனத் தமிழ் வாழ்க்கையைப் பேசும் படங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் விஜய் சேதுபதி, திரையுலகில் கவனிக்கத்தக்க பங்களிப்பைத் தந்திருக்கும் 100 சமகாலக் கலைஞர்களுக்குப் பாராட்டுவிழா எடுத்து அவர்களுக்கு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மூலம் தலா ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கிக் கவுரவப்படுத்தினார்.

9. தன் திரையுலக வாழ்க்கையில் திட்டமிடலோ எதிர்பார்ப்புகளோ இல்லாமல் பயணம் செய்துவரும் இவர் குடும்பத்தையும் நண்பர்களையும்பெரிதும் நேசிப்பவர். பள்ளியில் அவருடன் படித்த உயிர்த் தோழன் சூர்யா பதினோராம் வகுப்பு படிக்கும்போது இறந்துபோனார். அவரது நினைவாக தன் மகனுக்கு சூர்யா என்று பெயர் சூட்டியிருக்கிறார். பள்ளி விடுமுறை நாட்களில் தன் மனைவி, பிள்ளைகளை வெளியூர் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவழைத்துவிடுவார்.

10. ‘விக்ரம் வேதா’ படத்தில் ‘ஒரு கதை சொல்லட்டா சார்?’ என்று கதை சொல்லித் தப்பிக்கும் ‘வேதாளம்’ விஜய் சேதுபதி, நிஜ வாழ்க்கையில் தனது சொந்தப் பிரச்சினைகளைத் துணிவுடன் எதிர்கொள்பவர். தனது ரசிகர்களிடம் “ நான் உட்பட எந்த நடிகரையும் பின்பற்றாதீர்கள்” என்று கூறிவருவதோடு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தயக்கம் ஏதுமின்றி கருத்துக்கூறுபவராகத் தன்னைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.


நண்பரின் பார்வையில்...

சின்னத்திரையில் வெற்றிகரமான இயக்குநர்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெற்றிருப்பவர் ‘சித்தி’ மெகா தொடர் புகழ் சி.ஜே.பாஸ்கர். சினிமாவில் அடிவைக்கும் முன்பு விஜய் சேதுபதி இவரது இயக்கத்தில் ‘பெண்’ என்ற தொடரில் நடித்திருந்தார். இன்றுவரை நட்பு பாராட்டி வரும் விஜய் சேதுபதி பற்றி சி.ஜே.பாஸ்கர் என்ன சொல்கிறார்...


“ நடிப்பின் மீது ஆர்வம் அடங்காத இளைஞனாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதியை நான் எப்படிப் பார்த்தேனோ அதே விஜய் சேதுபதியைத்தான் இன்றும் பார்க்கிறேன். ஒரு விஷயத்தின் மீதான ஆர்வத்தை அணையாமல் பார்த்துக்கொள்ளப் பொறுமையும் அர்ப்பணிப்பும் வேண்டும்.

உள்ளே எரிந்துகொண்டிருக்கும் அந்த ஜோதியை அணையாமல் பார்த்துக்கொள்கிற துடிப்புள்ள இளைஞனாக இன்றுவரை இருக்கிறார்.

அவரைத் தம்பி என்றுதான் அழைப்பேன். அவ்வளவு எளிய, எளிதில் அணுக முடிகிற, பழகிவிடுகிற சகஜமான ஒருவராக இருப்பார். அவரின் இந்த சகஜத் தன்மைதான் அவரது எல்லாக் கதாபாத்திரங்களிலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

அதனால் அவர் ஏற்கும் எல்லாக் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களுக்கு எளிதில் பிடித்துவிடுகின்றன.

விக்ரம் வேதா வரை அவரிடம் இந்த சகஜத் தன்மையைக் காணலாம். கதாபாத்திரங்களைத் தனது நடிப்பால் பயமுறுத்தாதவர் விஜய் சேதுபதி. அதுதான் அவரின் வெற்றி ரகசியம்”.

தொகுப்பு: ஆர்.சி.ஜெயந்தன்
வரலாறு தந்த வார்த்தை - 2: ‘வாழைப்பழ’ காமெடி!

Published : 26 Sep 2017 11:20 IST

ந.வினோத் குமார்





பழம் என்றாலே பிரச்சினைதான் போல. ஞானப்பழம் என்றாலும் சரி. வாழைப்பழம் என்றாலும் சரி. சுட்டபழம் என்றாலும் சரி!


சரி, சரி…விஷயத்துக்கு வருவோம். நீங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் புதிதாக வந்து சேர்ந்த மேலாளர், யாரையுமே கேட்காமல் தான்தோன்றித்தனமாகச் சில விஷயங்களைச் செய்துவிடுவார். சில நாட்களுக்குப் பிறகு, அவருக்கும் மேலே இருக்கும் ‘ஊப்பர்வாலா’, ‘யாரைக் கேட்டு இதெல்லாம் செய்தாய். இந்த கம்பெனியை ‘Banana republic’ ஆக நினைக்காதே!’ என்று செம ‘ரெய்டு’ விடுவார். ஊடக நிறுவனங்கள் பலவற்றில் மேற்சொன்ன சொற்றொடரை அடிக்கடி கேட்கலாம்.

அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளில், அவ்வப்போது ஏதேனும் விபரீதம் நடந்துகொண்டே இருக்கும். அதைக் குறிப்பிடவே இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாக, இது கார்ப்பரேட் நிறுவனங்களிலும் கையாளப்படுகிறது.

சரி… இந்தச் சொற்றொடர் பிறந்ததற்குக் காரணமே வாழைப்பழம்தான் என்றால் நம்புவீர்களா? ஆம். 19-ம் நூற்றாண்டில், அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, ஈக்குவேடார் போன்ற தென் அமெரிக்க நாடுகள் பலவும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தன. அங்கு வாழைப்பழம் அதிகமாக விளையும். எனவே, வாழைப்பழம்தான் அந்த நாடுகளின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக இருந்தது.

தவிர, இந்த நாடுகளில் அவ்வப்போது ஆட்சிக் கலைப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற அரசியல் குளறுபடிகள் நடந்துகொண்டிருந்தன. அதற்குக் காரணம், தங்களின் இலக்குகளைச் சாதிப்பதற்கு, வெளிநாட்டிலிருந்து வந்த பழ நிறுவனங்கள் அந்த நாடுகளில் பல கைங்கரியங்களை நிகழ்த்தியதுதான்.

‘அவன் கிடக்கான். பித்தளை தட்டுல சாப்பிடுறவன்’ என்று ஒருவரை அவமானப்படுத்த எப்படிப் பித்தளையைப் பயன்படுத்துகிறோமோ, அதுபோல வளர்ந்த நாடுகள், சுய புத்தி இல்லாமல், யார் எது சொன்னாலும், அதற்கேற்றபடி ஆடி வந்த மேற்சொன்ன நாடுகளைச் சிறுமைப்படுத்த ‘வாழைப்பழக் குடியரசு’ என்று அழைத்தன.

இப்படித்தான் இந்தச் சொற்றொடர் மக்களின் புழக்கத்துக்கு வந்தது. சரி… இந்தச் சொற்றொடரை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா? பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஓ.ஹென்றி!

ஆக, அந்த ‘இன்னொரு பழம்’, இதுதானா?
பொறியியல் என்னும் பொறி: மீட்சிக்கான முயற்சிகள் பலன் தருமா?

Published : 26 Sep 2017 11:33 IST

எஸ்.எஸ். லெனின்






இந்தியாவில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை 2018-ம் ஆண்டில் மூட முடிவுசெய்துள்ளது, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில். பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளில் 7 சதவீதத்தினர் மட்டுமே முழுமையான பணித்திறன் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. ஆனால், உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நாட்டின் பொருளாதார, தொழில்துறை, சமூக வளர்ச்சிக்கு அடித்தளமிடும் பொறியியல் கல்வித்துறை சரிவு கண்டது எப்படி? இழந்த பொலிவை மீண்டும் பொறியியல் கல்லூரிகள் பெறுமா?

170 ஆண்டு பாரம்பரியம்

நடைமுறையில் இந்தியாவில் உள்ள பொறியியல் கல்வி முறை பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் தொடங்கப்பட்டது. 1847-ல் உத்தரப்பிரதேசம் ரூர்க்கியில் தாம்சன் கட்டுமானப் பொறியாளர் பயிற்சிக் கூடம் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐ.ஐ.டி.-ரூர்க்கியான இதுவே நாட்டின் முதல் பொறியியல் கல்லூரியாக அறியப்படுகிறது. அதை அடுத்து, கல்கத்தா சிவில் பொறியியல் கல்லூரி (1856), பூனா பொறியியல் கல்லூரி (1858) ஆகியவை திறக்கப்பட்டன.

இந்த வரிசையில் சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியும் முக்கிய இடம்பிடிக்கிறது. ஐரோப்பாவுக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் இதுவே. 1794-ல் நில அளவைப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இது 1858-ல் கட்டிடப் பொறியியல் பள்ளியாக மாற்றப்பட்டது.

ஆக, இந்தியாவின் நவீன பொறியியல் கல்வி. 170 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது தேச வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க அதிக அளவிலான பொறியாளர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் தனியாருக்குத் திறந்துவிட்ட சில ஆண்டுகளில் பொறியியல் கல்வியின் போக்கு மாறியது. புற்றீசலாய்த் தனியார் பொறியியல் கல்லூரிகள் பெருகியதும், பொறியியல் உயர் கல்வி அதன் தனித்துவத்தை இழந்தது.

பொறியில் சிக்கும் மாணவர்கள்

பள்ளிபடிப்பின்போதே பெரும்பான்மையானவர்களின் உயர் கல்வி இலக்காகப் பொறியியல் கல்வி திணிக்கப்படுகிறது. மாணவரின் விருப்பத்தை அறியாது பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமென சுயநிதிக் கல்லூரிகளில் பெற்றோர் சேர்த்துவிடுகின்றனர். அத்தகைய சுயநிதிக் கல்லூரிகளில் தரமான ஆசிரியர்கள், ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா எனச் சரிபார்ப்பதும் இல்லை. கல்லூரி முகப்பின் பிரம்மாண்டம், வசிப்பிடத்துக்கு அருகிலிருப்பது, இடைத்தரகர்கள், கல்லூரி நிர்வாகத்தின் கவர்ச்சியான வாக்குறுதிகள் போன்றவற்றில் ஏமாந்து தங்கள் பிள்ளைகளைத் தள்ளிவிடுகின்றனர். இதன் விளைவு, முதலாமாண்டில் தேர்வெழுதும் இந்தியப் பொறியியல் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தோல்வியடைவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வுத் தெரிவிக்கிறது. போதிய கல்வித் தகுதியோ பயிற்றுவிக்கும் திறனோ அற்ற ஆசிரியர்கள், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், வளாகத் தேர்வு நாடகங்கள், வரம்பு மீறும் கட்டணங்கள் ஆகியவையும் பொறியில் சிக்கிய எலியாகப் பொறியியல் மாணவர்களைத் தவிக்கவிடுகின்றன.

பணித்திறன் இல்லாத பட்டதாரிகள்

டெல்லியைச் சேர்ந்த ‘அஸ்பயரிங் மைண்ட்ஸ்’ என்கிற வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு நிறுவனம் கடந்தாண்டு நாடு முழுவதும் வேலைதேடும் பொறியியல் பட்டதாரிகளை மையப்படுத்தி ஒரு ஆய்வை மேற்கொண்டது. 2013-ம் ஆண்டு பட்டம் பெற்ற பொறியியல் பட்டதாரிகளில் 1.5 லட்சம் பேரிடம் ஆய்வுக்கான தரவுகளைச் சேகரித்தது. இதில் 97 சதவீதப் பொறியியல் பட்டதாரிகளின் பணித்தேர்வு ஐ.டி. அல்லது பாரம்பரியப் பொறியியல் துறைகள் சார்ந்தே இருந்தன. ஆனால், அவர்களின் பணித்திறனைச் சோதித்தபோது 3 சதவீதத்தினர் மட்டுமே ஐ.டி. துறைக்கான தகுதியையும், 7 சதவீதத்தினர் மட்டுமே பாரம்பரியப் பொறியியல் துறைக்கான தகுதியையும் பெற்றிருந்தனர். பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி அலைவதும், படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத வேலைகளில் அமர்வதும் இந்தப் பணித்திறன் பற்றாக்குறையாலேயே. ஆனால், இந்தியாவிலிருக்கும் 10,363 பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 29 லட்சம் பேர் ஆண்டுதோறும் சேர்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் படிப்பை வெற்றிகரமாக முடித்து வேலைவாய்ப்பு சந்தைக்குள் நுழைகிறார்கள்.

காற்று வாங்கும் கல்லூரிகள்

2016-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் 527 கல்லூரிகள் பங்கேற்றன. அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான 2.23 லட்சம் இடங்களில் 1.57 லட்சம் இடங்கள் மட்டுமே பூர்த்தியடைந்தன. 148 கல்லூரிகள் 20 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கையைப் பெற்றன. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வி வர்த்தகத்தில் இறங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் போதிய சேர்க்கை இல்லாதபோது அதிலிருந்து விலக விரும்புகின்றன. தேசத்துக்குக் கிட்டத்தட்ட 25 சதவீதம் பொறியாளர்களை ஆண்டுதோறும் வழங்கிவந்த தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் பல மூடுவிழா காண்கின்றன. ‘தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரி விற்பனைக்கு’ என்ற விளம்பரத்தை இணையதளங்களில் பார்க்கலாம். நடப்பாண்டில் 11 தமிழகப் பொறியியல் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பிலான ஆய்வில் அடிப்படைத் தகுதிகள்கூட இல்லாத 44 கல்லூரிகளின் செயல்பாடு கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

என்ன ஆச்சு பொறியியல் படிப்புக்கு?

பொறியியல் உயர் கல்வியின் சரிவுகளை உற்றுக் கவனிக்கும் கல்வியாளர்கள் பல ஆண்டுகளாகவே மாற்றம் கோரி மத்திய அரசை வலியுறுத்திவந்தனர். ஒரு வழியாக அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. இதன்படி பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக மீளாய்வு செய்து மேம்படுத்தும் பணியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மும்முரமாக உள்ளது. பொறியியல் சேர்க்கைக்கு நாடு முழுமைக்குமான பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் தரமான பட்டதாரிகளை உருவாக்கவும், அதன்மூலம் 40 முதல் 60 சதவீதம் வரை பொறியாளர்களின் வேலைவாய்ப்பு திறன் உயரும் என்றொரு கணக்கை முன்வைக்கிறார்கள். இவற்றுடன் அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு இரண்டையும் இணைத்து ஒற்றை அதிகார அமைப்பாக மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உயர் கல்விக்குப் புத்துயிரூட்ட உத்தேசித்துள்ளனர்.

இத்தகைய திட்டங்கள் பொறியியல் கல்வியின் சரியும் செல்வாக்கை மீட்டுத் தருமா, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் பொறியியல் கல்வித் துறைக்கு வேறென்ன மாற்றங்கள் ஏற்றம் தரும், மருத்துவப் படிப்பைப் போன்றே பொறியியலுக்கான ஒற்றை நுழைவுத் தேர்வும் தமிழக மாணவர்களைத் தத்தளிக்கச் செய்யுமா, பொறியியல் கல்வியில் நாட்டம் கொண்ட பெற்றோரும் மாணவரும் தெளிவு பெறுவது எப்படி? போன்ற அச்சுறுத்தும் பல கேள்விகள் இன்று நம் முன்னே.

7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உயரவிருக்கும் சம்பள விபரம் அறியலாம்.

7வது ஊதியகுழு கணிப்பான்
உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்.

7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் 


7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உயரவிருக்கும் சம்பள விபரம் அறியலாம்







Note: **போக்குவரத்து படி குறித்து 7வது ஊதிய குழு 19 உயர்வகை நகரங்களாக சுட்டிக்காட்டி உள்ளது. அவைகள் டெல்லி, சென்னை, கொல்கத்தா, கிரேட்டர் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, ஹைதராபாத், சூரத், நாக்பூர், புனே, ஜெய்பூர், லக்னௌ, கான்பூர், பாட்னா, கொச்சின், கோளிகூடு, இந்தூர், கோயம்புத்தூர் மற்றும் காஜிதாபாத்

உங்களது மாற்று அடிப்படை சம்பளம் மற்றும் இதர படிகள் - 1.1.2016 முதல்







No daily allowance on LTC to central govt staff

DH News Service, New Delhi, Sep 22 2017, 1:39 IST


The Central government employees will not get a daily allowance on leave travel concession (LTC) from now onwards.

Any incidental expenses and the expenditure incurred on local journeys will not be admissible under the LTC, a Department of Personnel and Training (DoPT) order said.

Earlier, the employees were entitled to an allowance according to their ranks.

At the same time, travel by premium or Suvidha trains and services such as Tatkal will now be allowed on the LTC, the order said.

The LTC allows the grant of leave and ticket reimbursement to employees to travel to their hometowns and other places under specified circumstances.

“Flexi fare (dynamic fare) applicable in Rajdhani/ Shatabdi/Duronto trains shall be admissible for the journey(s) performed by these trains on the LTC, the order said.

“However, this dynamic fare component shall not be admissible in cases where a non-entitled government servant travels by air and claims reimbursement for the entitled class of Rajdhani/Shatabdi/Duronto trains,” it said.

“Reimbursement for the purpose of LTC shall be admissible for journeys performed in vehicles operated by the government or any corporation in the public sector run by the central or state government or a local body,” it said.
Read more at Medical Dialogues: 

How to get your Unique Permanent Registration Number with Medical Council Of India 

http://medicaldialogues.in/how-to-get-your-unique-permanent-registration-number-with-medical-council-of-india/
மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: தினகரன் வழங்கினார்
By DIN | Published on : 30th September 2017 03:03 PM |



அரியலூர்: மருத்துவர் கனவு நனவாகாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், ரூ.15 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் உடன் சென்றார். இரு தலைவர்களும் அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆசி கூறினர். பிறகு, அனிதாவின் குடும்பத்தாரிடம் ரூ.15 லட்சத்தை அளித்தார் டிடிவி தினகரன்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அனிதா விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக எதையும் செய்யவில்லை. அனிதா வீட்டிற்கு திருமாவளவன் என்னுடன் ஆறுதல் கூற வந்ததில் அரசியல் எதுவும் இல்லை. நாங்கள் அழைத்ததால் அவர் வந்துள்ளார் என்று கூறினார்.
Banwarilal Purohit appointed Tamil Nadu Governor

PTI | Updated: Sep 30, 2017, 12:10 IST



NEW DELHI: Banwarilal Purohit was on Saturday appointed as the governor of Tamil Nadu while Satyapal Malik would be the new governor of Bihar.

Banwarilal Purohit is a former BJP parliamentarian and owns Nagpur city's largest circulated English daily 'The Hitwad'.

Jagdish Mukhi will take the place of Purohit as the Assam governor. The appointments of five governors, including for Arunachal Pradesh and Meghalaya, and Lt Governor of Andaman and Nicobar Islands by President Ram Nath Kovind were announced today.

Maharashtra Governor Ch Vidyasagar Rao was holding the additional charge of governor of Tamil Nadu and there had been demands of appointment of a full-time governor in view of the political situation in the southern state.

Satya Pal Malik, former MP and BJP's national vice president, has been appointed the governor of Bihar. The post had fallen vacant after Kovind was nominated as the BJP's presidential candidate.

Admiral (Retd) Devendra Kumar Joshi will be the Lieutenant Governor of Andaman and Nicobar Islands in place of Mukhi, a press release issued by the president's office said.

TOP COMMENTPoliticians should be banned as governor... For administrative position judges and armed officers are right choice... BJP is proving they are nothing par congress.Murugadas Kannan

Former member of Bihar Legislative Council Ganga Prasad has been appointed as the Governor of Meghalaya.

Brig (Retd) B D Mishra will be the governor of Arunachal Pradesh, the release said.
சிவகாசியில் பட்டாசு விற்பனை ஜோர் ஆயுத பூஜை விடு முறையையொட்டி குவிந்தனர்
பதிவு செய்த நாள்30செப்
2017
23:03

சிவகாசி, ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சிவகாசிக்கு தீபாவளிக்கு பட்டாசு வாங்க வெளி மாவட்ட மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தீபாவளிக்கு தேவையான பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் ஆண்டு முழுவதும் நடக்கிறது. இங்கு உள்ள 800 ஆலைகளில் உற்பத்தியாகும் பட்டாசுகளை விற்பனை செய்ய சாத்துார், சிவகாசி,
விருதுநகர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

ஆண்டுதோறும் டிரேடிங் ஏஜென்டுகள் ஏப்ரலில் வெளி மாநிலங்களுக்கு சென்று ஆர்டர்கள் பெறுகின்றனர். ஆகஸ்ட், செப்டம்பர் வரை வெளி மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்புகின்றனர். பின்னர் தென் மாநிலங்களுக்கு பட்டாசு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இந்தாண்டு அனைத்தும் நேர் எதிர்மாறாக நடந்தது. ஜனவரி முதல் ஜூலை வரை நடக்கும் வெளி மாநில ஆப்-சீசன் விற்பனை சுத்தமாக இல்லை. வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பதை தவிர்த்து வந்தனர்.

தற்போது தீபாவளி நெருங்குவதால் வெளி மாநில வியாபாரிகள் நகருக்குள் பட்டாசு வாங்க வந்த வண்ணம் உள்ளனர். பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று ஆர்டர் கொடுத்து வருகின்றனர். 

ஆனால் உற்பத்தி இறுதிக் காலம் என்பதால், ஆர்டர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பட்டாசு தேவையும் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க ஆலைகளில் உற்பத்தி தீவிரமாக நடக்கிறது.
பட்டாசு விற்பனை பல்வேறு கோணங்களில் நடப்பதால் கடந்த வாரம் வரை பட்டாசு கடைகளில் கூட்டமே இல்லை. இந்நிலை ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் மாறியுள்ளது. சிறு வியாபாரிகள், சொந்த பயன்பாட்டிற்காக பட்டாசு வாங்க வருவோர் சிவகாசியில் குவிந்து
வருகின்றனர்.

மேலும், பட்டாசு கடைகளில் சில்லரை விற்பனை சூடுபிடித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் தினமும் வருகின்றனர். 

காலை 9:00 மணிக்கு துவங்கும் வியாபாரம் நள்ளிரவு 12 :00 மணி வரையிலும் நடக்கிறது. இதனால் சில்லரை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

சரக்குகளை சேர்ப்பதில் தாமதம்

பட்டாசு கடைகளுக்கு தடை, புதிய விதிமுறை போன்ற காரணங்களால் வெளி மாநில வியாபாரம் மந்தமாக இருந்தது. 

இதனால் கடைகளில் சரக்கு தேங்கியது. ஆயுத பூஜை விடுமுறை நாட்களில்தான் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. வெளி மாவட்டங்களில் லைசென்ஸ் வழங்குவதில் தாமதமாகிறது. இதனால் வியாபாரிகள் கொள்முதல் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. சரக்குகள் உரிய நேரத்திற்குள் கொண்டு சேர்க்கமுடியாத நிலை உள்ளது.
பட்டாசு உயர் ரக வெடி பொருள் அல்ல. குறைந்தளவு
அபாயம் உள்ள வெடி பொருள். முறையாக கையாண்டால் விபத்து ஏற்படாது. இதை அறிந்து அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
கணேசன்,

லட்சுமி ஏஜென்சீஸ் உரிமையாளர், சிவகாசி.

50 சதவீதம் வரை சலுகை

பட்டாசு வாங்க ஆண்டுதோறும் சிவகாசி வருகிறேன். இந்தாண்டு குடும்பத்துடன் வந்திருக்கிறேன். நேரடியாக வருவதால் புது,புது ரகங்களை தேர்வு செய்கிறேன். வெளி மாவட்டங்களை விட இங்கு
50 சதவீதம் வரை சலுகை கிடைக்கிறது. 

புது துணி, சுவீட் என விரும்பியதை வாங்குவதுபோல் குடும்பத்தையே மகிழ்விக்கும் புதிய ரக பட்டாசு வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரூ.15 ஆயிரத்திற்கு பட்டாசுகள் வாங்கி உள்ளேன்.

பரமசிவன்,
மதுரை.
திருச்சி - பாங்காங் விமானம் துவக்கம்

பதிவு செய்த நாள்30செப்
2017
20:00

திருச்சி, திருச்சியில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு, நேரடி முதல் விமானம், 181 பயணியருடன் நேற்று புறப்பட்டுச் சென்றது.
மலேஷியாவின் ஏர் ஏசியா விமான நிறுவனம், தாய்லாந்து நாட்டு விமான நிறுவனத்துடன் இணைந்து, தாய் - ஏர் ஏசியா என்ற புதிய சர்வதேச விமான போக்குவரத்தை துவங்கியுள்ளது.

நேற்று அதிகாலை, 12.05 மணிக்கு, தாய் - ஏர் ஏசியா விமானம், 58 பயணியருடன், திருச்சி வந்தது.திருச்சி விமான நிலையத்தில், தண்ணீர் பீய்ச்சியடித்து, 'வாட்டர் சல்யூட்' அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், 181 பயணியர் பாங்காக் புறப்பட்டுச் சென்றனர். இந்த விமானம் தினமும் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
முடி வெட்ட கட்டணம் ரூ.35: பாளை சிறையில் அசத்தல்
பதிவு செய்த நாள்30செப்
2017
19:27



திருநெல்வேலி, பாளை மத்திய சிறையில் திறக்கப்பட்ட முடி திருத்தும் நிலையத்தில், பெரியவர்களுக்கு முடி வெட்ட, 35 ரூபாயும், சிறுவர்களுக்கு, 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில், பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணை கைதிகள் என, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 

மத்திய சிறைகளிலும், 'சிறை அங்காடி' என்ற பெயரில், கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.இதன்படி, சிறை வளாகத்தில், காய்கறி தோட்டங்கள், ஹாலோ பிளாக் செங்கல் தயாரிப்பு, தையல் கூடம், முடி திருத்தும் நிலையம், சலவை நிலையம், உணவு விடுதிகள் அமைக்கப்பட்டன. இவற்றை, நன்னடத்தை கைதிகள் பராமரித்து வந்தனர்.

பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிறை அங்காடிகள், சில மாதங்களுக்கு முன், நிர்வாக குளறு படிகளால் மூடப்பட்டன. சிறை துறை, ஏ.டி.ஜி.பி.,யாக சைலேந்திர பாபு பொறுப்பேற்றதும், கடந்த மாதம், மத்திய சிறைகளில், மீண்டும், சிறை அங்காடிகள் திறக்கப்பட்டன.

இதன்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள முடி திருத்தும் நிலையத்தில், முடி வெட்ட, பெரியவர்களுக்கு, 35, ஷேவிங், 20, டை அடிக்க 50, கட்டிங், ஷேவிங், டை அடிக்க சேர்த்து, 100 ரூபாய் மட்டுமே
வசூலிக்கப்படுகிறது. வெளியில் உள்ள முடி திருத்தும் நிலையங்களில், 200 முதல், 250 ரூபாய் வரை கட்டணம் வாங்குகின்றனர். இங்கு, சிறுவர்களுக்கு கட்டிங் செய்ய, 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.இது குறித்து, பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:பாளை மத்திய சிறையில், 30க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகள் உள்ளனர். இவர்கள் இங்குள்ள காய்கறி தோட்ட பராமரிப்பு, கறவை மாடுகள் பராமரிப்பு, முடி திருத்தும் நிலையம், சலவை நிலையம், தையல் தொழில் பயிற்சி நிலையம், ஹாலோ பிளாக் செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலை தயிராக்கி, 'லஸ்ஸி' விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறை வளாகத்தில் உள்ள உணவகத்தில் காலையில், இட்லி, பூரி, பொங்கல் கிடைக்கும். மதியம் சிக்கன் பிரியாணி, 80 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுகின்றனர். 

இங்கு கைதிகளால் தைக்கப்படும் காட்டன் ரெடிமேட் சட்டைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.



தேசிய செய்திகள்

குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு சுஷ்மா சுவராஜ் நன்றி



குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்து உள்ளார்.

செப்டம்பர் 30, 2017, 06:11 PM
குவைத்,

குவைத் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக 15 இந்தியர்களுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குவைத் நாட்டின் அமீர் ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா, 15 இந்தியர்களின் மரண தண்டனையை ரத்து செய்து, அதனை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அங்குள்ள 119 இந்திய கைதிகளின் தண்டனை காலத்தையும் அவர் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குவைத் அமீருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குவைத் சிறையில் இருந்து விடுதலையாகும் இந்திய கைதிகளுக்கு தாய் நாடு திரும்ப தேவையான வசதிகளை செய்து தருமாறு சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

HH the Emir of Kuwait has been pleased to commute the sentence of 15 Indian nationals from death to life imprisonment. /1— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017


HH the Emir has further directed the reduction in sentence of 119 Indian nationals. /2— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017


We are grateful to the Emir of Kuwait for this kind gesture./3— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017

Saturday, September 30, 2017

மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை
dinamalar
பதிவு செய்த நாள்29செப்
2017
08:52




கோலாலம்பூர்: வடகொரியா அணு ஆயுத திட்டத்தையும், ஏவுகணை திட்டத்தையும் கை விட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் அழுத்தம் தந்து வருகின்றன. ஆனால் வடகொரியா இதில் விட்டுக் கொடுக்காமல், தனது அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டபோதும், வடகொரியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

அந்த நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், மலேசிய நாட்டு மக்கள், வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு காரணமாக ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவதற்காக மலேசியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே அக்டோபர் 5-ம் தேதி நடக்க உள்ள போட்டி, பாதிப்புக்குள்ளாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

NewsToday 18.10.2024