Monday, November 6, 2017

மழைக்கு தேசிய நெடுஞ்சாலைகள், 'அவுட்'  சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறல்
மழையால், தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறி வருகின்றன.




சென்னையை, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுடன் இணைக்கும் வகையில், 4,994 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டு உள்ளன. இதில், சென்னை - திருச்சி, சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, தேசிய நெடுஞ் சாலைகள் முக்கியமானவை.

இச்சாலைகள் வழியாக, நாள் தோறும்ஏராளமான சரக்கு வாகனங்கள் சென்னை வந்து செல்கின்றன. பயணியர் போக்குவரத்திற்கான அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் வருகின்றன.இச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, பல்வேறுஇடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை பராமரிப்பு பணிகளை செய்து, சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, தனியார் நிறுவனங் களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஏற்கனவே, முறையான பராமரிப்பின்றி கிடந்த சாலைகள், மழையால் மேலும் சேதம் அடைந்துள்ளன.

பல இடங்களில், அபாய பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர்தேங்கி உள்ளது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சென்னை - கோல் கட்டா தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றில், வாகனங்கள் தள்ளாடியபடியே
பயணிக்கின்றன; ஆங்காங்கே, வாகனங்கள் பழுதாகியும் நிற்கின்றன.

எனவே, இச்சாலைகளில் பயணிக்கும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின் றனர். போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், சாலைகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 102வது பிறந்த நாள் கோலாகலம்

 5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 102வது பிறந்த நாள் கோலாகலம்
கோபி:கோபி அருகே, ஐந்து தலைமுறை கண்ட மூதாட்டி, 102வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரமாயாள், 102; இவரது கணவர், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தம்பதிக்கு, மூன்று மகன்கள்; நான்கு மகள்கள். இவர்களில், ஒரு மகன், இரண்டு மகள்கள் இறந்து விட்டனர். மற்றவர்கள் உள்ளூரில், குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

கடந்த, 1915ல் பிறந்த பெரமாயாளுக்கு, நேற்று, 102வது பிறந்த நாள். இரண்டு மகன், இரண்டு மகள், ஏழு பேரன்கள், ஆறு பேத்திகள், ஏழு கொள்ளு பேரன்கள், ஒன்பது கொள்ளு பேத்திகள் ஆகியோர், பாட்டி வீட்டுக்கு நேற்று சென்றனர். 5 கிலோ கேக் வேட்டி, பெரமாயாளின் பிறந்த நாளை கொண்டாடினர். அனைவரும், பெரமாயாளிடம் ஆசி பெற்றனர்.

பெரமாயாளின் வாரிசுகள் கூறியதாவது:

எங்கள் பாட்டி பெரமாயாள் வழியில், இது ஐந்தாவது தலைமுறையாகும். 102 வயதை தொட்ட பாட்டிக்கு இதுவரை பிறந்தநாள் கொண்டாடியதில்லை. அவரின் வயது முதிர்வை கணக்கில் கொண்டு, பிறந்தநாள் விழா கொண்டாடினோம்.பாட்டி இதுவரை, உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனை சென்றதில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பார்வை, காது கேட்கும் திறன் என எந்த குறையுமின்றி உள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பெரமாயாள் கூறுகையில், ''எனக்கு, 102வது பிறந்த நாள் கொண்டாடிய, மகன், மகள், பேரன் மற்றும் பேத்திகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.



கரையை கடந்தது, 'டாம்ரே' புயல்  இயல்புக்கு திரும்பியது வங்க கடல்

வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருந்த, 'டாம்ரே' புயல், வியட்நாம் அருகே, பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது. அதனால், வங்கக் கடலின் சூழல் இயல்பு நிலைக்கு மாறியுள்ளதால், விடாது கொட்டிய அடைமழை விலகியுள்ளது.




தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, அக்., ௨௭ல் துவங்கி, ௨௯ல் தீவிரம் அடைந்தது. சென்னை முதல் நாகை வரை, கனமழை கொட்டியது. மழைக்கு காரணமான, காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர், ௧ல், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு நகரும் என, கணக்கிடப்பட்டது. ஆனால், நகராமல், நவ., 2ல் மிககன மழை கொட்டியது.

ஒரே நாள் இரவில், ஐந்து மணி நேரம் பெய்த தால், சென்னை மெரினாவில், அதிகபட்சமாக 30செ.மீ., மழை பதிவானது. பின், நேற்று முன் தினம் இரவு வரை மிதமாகவும், சில நேரங் களில் கனமழையும் தொடர்ந்தது. இந்த தொடர் மழைக்கும், அடைமழைக்கும், வங்கக் கடலின்

சூழல் மாறியதே காரணம் என, வானிலை மற்றும் கடலியல் நிபுணர்கள் கூறினர். அதாவது, வங்கக் கடலை ஒட்டிய, தென் சீன கடலில் சுழன்று வந்த, டாம்ரே புயலால், வங்கக் கடலில் இருந்து மேக கூட்டங்கள் நகர முடியவில்லை;

அவை, தமிழககடற்பகுதியை சுற்றி வந்ததே, அதிக மழை பெய்யகாரணம் என்றனர்.'டாம்ரே புயல், நவ., 4ல் கரையை கடக்கும் வரை, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் கன மழை தொடரும்.'புயல் கரையை கடந்தால், ஞாயிறு முதல் நிலைமை சீராகும்' என்றும் கூறினர்.அதன்படி,நேற்று முன்தினம் இரவு, டாம்ரே புயல், வியட்நாமில் பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது.

இதையடுத்து,தென் சீன கடலிலும், அதையொட்டிய வங்கக் கடலிலும், கொஞ்சம் கொஞ்சமாக கடல் சூழல் மாறியுள்ளது. இதனால், மீண்டும் காற்றின் சுழற்சி இயல்பு நிலைக்கு மாறி, மேக கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன.

சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதியும், தாழ்வு நிலையாக வலு குறைந்து, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு நகர்ந்துள்ளது. எனவே, சென்னை உள்ளிட்ட வட கிழக்கு கடலோர மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த, அடைமழை விலகி உள்ளது. இனி, வழக்கமான பருவமழை, டிசம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

'தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அடைமழை இருக்காது; மிதமான மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின், மண்டல துணை பொது இயக்குனர், பாகுலேயன் தம்பி நேற்று கூறியதாவது:வங்கக் கடலின், வட கிழக்கு பகுதி யில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடா மற்றும் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் அருகே, தென் கிழக்கு கடலோர பகுதிக்கு இடையே, தற்போது மையம் கொண்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மழை வதந்தியை பரப்பாதீர்!: பாலச்சந்திரன் வேண்டுகோள்

மழை,வதந்தி,பரப்பாதீர்,பாலச்சந்திரன்,வேண்டுகோள்
பொள்ளாச்சி: ''மழை குறித்து, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், அவர் அளித்த பேட்டி: வட கிழக்கு பருவமழை, தமிழகத்தின் முக்கிய காலமாகும். 27ம் தேதி முதல், கடலோர மாவட்டங்களில், வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வளி மண்டலத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில், இரு நாட்களுக்குள், மழை குறைய வாய்ப்புள்ளது. 

கடலில் நில நடுக்கம் ஏற்பட்டால், சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என கணிக்க முடியும். தற்போது, கணிக்க முடியாது. வானிலை மையம், தொடர்ந்து மழை குறித்து கணித்து, சரியான தகவல்களை தெரிவித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு சிலர், 100 செ.மீ., வரை மழை பொழியும் என்பது போன்ற ஆதாரபூர்வமற்ற தகவல்களை பரப்புகின்றனர். இது போன்ற தகவல்களால், மக்கள் பீதியடைகின்றனர். பேரிடர் காலங்களில், மக்களுக்கு உதவும் வகையில், தகவல்களை பரப்பலாம். இதுபோன்று பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற பெண் கைது
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தீவைத்து உயிரோடு கொல்ல முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 06, 2017, 05:00 AM

ராஜபாளையம்,காதல் ராஜபாளையம் வேட்டைபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(வயது45). இவரது கணவர் சுந்தரமகாலிங்கம் 15 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன்(21) வசித்து வருகிறார். டிப்ளமோ படித்து முடித்த கற்பகஜோதி அந்தப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நூற்பாலையில் வேலை செய்யும் ஒருவருடன் கற்பகஜோதிக்கு காதல் மலர்ந்துள்ளது. இது தாயார் பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ளார். ஆனால் காதலை கைவிட கற்பகஜோதி மறுத்து தாயுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் பாக்கியலட்சுமி காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் காதலில் உறுதியாக இருந்த கற்பகஜோதி அதற்கு இடையூறாக இருக்கும் தாயாரை கொலை செய்ய துணிந்தார்.

வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை எடுத்து தாயாரின் மீது ஊற்றி தீவைத்து விட்டார். உடல் கருகிய பாக்கியலட்சுமி கூச்சல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் சிவகாசியில் உள்ள தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட செய்திகள்

மழை நீர் வடிவதற்கு ஒரு வாரம் ஆகும் நோய் பரவுவதை தடுக்க ‘பிளச்சிங்’ பவுடர் தூவப்படுகிறது



கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிவதற்கு ஒரு வாரம் காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 06, 2017, 05:30 AM
சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 31-ந்தேதி முதல் 5 நாட்கள் மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தொடர் மழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னையில் தேங்கிய மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியுள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. புறநகர் பகுதிகளான கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, கூடுவாஞ்சேரி போன்ற இடங்களில் சில பகுதிகளில் இன்றளவும் இடுப்பளவு நீர் தேங்கி இருக்கிறது.

கோவிலம்பாக்கத்தில் திரு.வி. நகர், சிண்டிகேட் வங்கி காலனி, கண்ணா அவென்யூ, காதிதபுரம், உம்மைநகர், என்ஜினீயர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர், பாக்கியலட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜா நகர் போன்ற இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருக்கிறது.

இந்த பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்த பகுதிகள் முழுவதையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீர் வடிவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலை அங்கு ஏற்பட்டு இருக்கிறது. 80 அடி அகலத்தில் இருந்த மழைநீர் வடிகால் 20 அடி அகலத்துக்கு மாறியுள்ளதும், ஆக்கிரமிப்புகளால் அந்த நீர் செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லாததும் தான் காரணம் என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதும் பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. கோவிலம்பாக்கத்தில் தேங்கி இருக்கும் மழைநீரால் பலர் அந்த பகுதியை காலி செய்து உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.

இதேபோல், பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், வேளச்சேரி உள்பட சென்னையின் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதுபோன்று புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் சதுப்பு நிலங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் மட்டுமே இந்த பகுதிகளில் நீர் வடியும். அவ்வாறு நீர் வடிவதற்கு குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைநீர் தேங்கியுள்ள சில இடங்களில் லாரிகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு மழைநீர் வடிகாலுக்கு நேரடியாக கொண்டு சென்று அங்கு விடப்படுகிறது. சென்னை புறநகரில் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை பிளச்சிங் பவுடர் தூவும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதேபோல், தேங்கி நிற்கும் தண்ணீரினால் நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 106 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தலையங்கம்

இன்று தினத்தந்தியின் ‘‘பவள விழா’’



நவம்பர் 06 2017, 03:00 AM

17 பதிப்புகளையும், ஒரு கோடிக்கும் மேல் தினசரி வாசகர்களையும் உலகமெங்கும் கொண்ட ‘தினத்தந்தி’யின் பவள விழா இன்று சீரும், சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. 75 ஆண்டுகளாக தமிழக மக்களின் நாடித்துடிப்பாய், வாழ்க்கையின் ஓர் அங்கமாய், ஒன்றாக கலந்துவிட்ட பத்திரிகை ‘தினத்தந்தி’. ‘தினத்தந்தி’ தொடங்கப்பட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த படிப்பறிவு, எழுத்தறிவைவிட, இப்போது பலமடங்கு உயர்ந்து இருக்கிறது என்றால், அதில் ‘தினத்தந்தி’யின் பங்கும் முக்கிய காரணமாகும். இந்த பத்திரிகையை தொடங்கிய, ‘‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’’ ‘பேச்சுவழக்கில் உள்ள தமிழே உயிர் உள்ள தமிழ். அதை கொச்சை நீக்கி எழுதவேண்டும்’ என்ற பொன்மொழியை ஆழமாக பதித்துவிட்டுச் சென்றார்.

‘தினத்தந்தி’ உள்ளூர்செய்தி முதல் உலகசெய்தி வரை எளிய நடையில் கொடுப்பதால் ஒரேநேரத்தில் படிப்பறிவு இல்லாத சாதாரண பாமர மக்களில் இருந்து, அறிவுசால் பெருமக்கள் வரை அனைவருக்கும் அந்த செய்தி சென்றடைந்துவிடுகிறது. இன்றைக்கும் கிராமப்புறங்களிலுள்ள டீக்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், சலவையகங்கள், ஊர்ச்சாவடிகள் நூலகங்களாக மாறி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ‘தினத்தந்தி’ தான். அங்கு போடப்படும் ஒரு ‘தினத்தந்தி’ பிரதியை நூற்றுக்கணக்கானோர் படித்து செய்திகள் குறித்து விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் என்று மேற்கொண்டு திறனாய்வு செய்துவிடுவார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பணியாற்றுவதற்கு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற இந்திய குடிமைப்பணி அதிகாரிகளுக்கும், தொழில் நிமித்தமாக, படிப்பு நிமித்தமாக தமிழ்நாட்டில் குடியேறும் மக்களுக்கும் ‘‘கைப்பிடித்து தமிழை கற்றுக்கொடுக்கும் ஆசான் தினத்தந்தி’’. அந்தவகையில் தமிழை படிக்கத்தெரியாத பாமரமக்கள் முதல் படித்தவர்கள் வரை தமிழை கற்றுக்கொடுக்க ஒரு தமிழ் ஆசிரியராக ‘தினத்தந்தி’ செயலாற்றுகிறது. அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ‘தினத்தந்தி’யை 1942–ம் ஆண்டு ‘தந்தி’ என்ற பெயரில், ‘‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’’ மதுரையில் தொடங்கினார். அந்தநேரம் பத்திரிகைக் காகிதம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால், ஆதித்தனார் அதற்காக சோர்ந்துவிடவில்லை. வைக்கோலை ஊறவைத்து, கூழாக அரைத்து, கைக்காகிதம் தயாரித்து பத்திரிகை அச்சடித்து வெளியாகும் வகையில் அனைத்தும் அவர் மேற்பார்வையிலேயே நடந்தது. அவர் விதைத்த விதைதான் தொடர்ந்து, அவரது மகன் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார், இப்போது சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோரால் ஆலமரமாக வளர்ந்து மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி வாரஇதழ், ராணிமுத்து, கோகுலம்கதிர், தந்தி டி.வி., ஹலோ எப்.எம். என்று பல விழுதுகளோடு ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அத்தகைய ‘தினத்தந்தி’யின் பவள விழா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.

விழா மலரை வெளியிடும் அவர் ‘தினத்தந்தி’யின் முக்கிய பணியான இலக்கிய பரிசுகளை வழங்கி சிறப்பிக்கிறார். இன்றைய விழாவில், ‘மூத்த தமிழறிஞர்’ விருதை ஈரோடு தமிழன்பனும், இலக்கியத்தில் மேலாண்மை என்ற தொடரை ராணி இதழில் எழுதி, இப்போது நூலாக வடிவம் பெற்றுள்ள நூலை எழுதிய எழுத்தாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இறையன்பு, 1954–ல் சைக்கிளில் சென்று ‘தினத்தந்தி’ பத்திரிகையை வினியோகம் செய்து, இன்று பெரிய தொழில் அதிபராக உயர்ந்திருக்கும் வி.ஜி.சந்தோ‌ஷம் ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறார்.

இந்த நல்லநாளில் ‘தினத்தந்தி’ வெள்ளிவிழாவின்போது பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, ‘‘தமிழனுடைய உரிமை பறிக்கப்படும் என்றநிலை ஏற்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும், தமிழர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொண்டு தீரவேண்டும் என்ற கட்டம் வருகிற ஒவ்வொரு நேரத்திலும், ‘‘தினத்தந்தி’’ வெறும் செய்திப் பத்திரிகையாக மட்டும் அல்லாமல், தமிழர்களுக்கு வாளாகவும், கேடயமாகவும், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய போர் வீரனாகவும் விளங்கிக்கொண்டு வருகிறது’’ என்பதற்கேற்ப ‘தினத்தந்தி’ வரும் காலங்களிலும் தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து,தன் நீண்ட புனித பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும்.
மழை மீட்பு நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மும்முரம் காட்டி உள்ளனர். சென்னையில் மண்டலவாரியாக களப்பணியில் குதித்தனர்.

நவம்பர் 06, 2017, 04:30 AM

மழை மீட்பு, நிவாரண பணிகளில் அமைச்சர்கள் மும்முரம் வேஷ்டியை மடித்துக்கட்டி களத்தில் குதித்தனர்


சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தீவிரம் காட்டி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் மழை மீட்பு நிவாரண பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்தார்.

சென்னை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் மழை நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து, துரிதப்படுத்துவதற்காக மண்டல வாரியாக அமைச்சர்களை, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், பாஸ்கரன், மணலி மண்டலத்தில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன், மாதவரம் மண்டலத்தில் அமைச்சர்கள் காமராஜ், பா.பென்ஜமின் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, ராயபுரம் மண்டலத்தில் எம்.சி.சம்பத், திரு.வி.க. நகர் மண்டலத்தில் அமைச்சர்கள் கருப்பண்ணன், கடம்பூர் ராஜூ, அம்பத்தூர் மண்டலத்தில் அமைச்சர் கே.பாண்டியராஜன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் மழை மீட்பு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்ணாநகர் மண்டலத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன், தேனாம்பேட்டை மண்டலத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கோடம்பாக்கம் மண்டலத்தில் டாக்டர் சரோஜா, வளசரவாக்கம் மண்டலத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, ஆலந்தூர் மண்டலத்தில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, அடையாறு மண்டலத்தில் அமைச்சர்கள் டாக்டர் எம்.விஜயபாஸ்கர், நிலோபர் கபீல், பெருங்குடி மண்டலத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, உடுமலைப்பேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராயபுரம் மற்றும் திரு.வி.க.மண்டலத்தில் அமைச்சர் ஜெயக்குமார், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் அமைச்சர் பி.தங்கமணி, வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சோழிங்கநல்லூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கூடுதல் பொறுப்புகளோடு மழை நிவாரண பணிகளை தூரிதப்படுத்தி வருகின்றனர்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மழைப் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளோடு, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், களப்பணியுடன் சேர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.

தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பராவாமல் தடுப்பதற்கான ஆயத்த பணிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எம்.விஜயபாஸ்கர் முனைப்புக்காட்டி உள்ளார்.

அமைச்சர்கள் குளம்போல் தேங்கிய மழைநீரில் வேஷ்டியை மடித்துக்கட்டி இறங்கி சென்று மக்களை சந்திக்கின்றனர். மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர்.

அமைச்சர்கள் போன்று அதிகாரிகளும் ஓய்வு இல்லாமல் மழை மீட்பு நடவடிக்கைகளில் களம் இறங்கி உள்ளனர். வருவாய்த்துறை முதன்மை செயலாளர் கொ.சத்யகோபால், செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், பெருநகர சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திக்கேயன், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட அதிகாரிகள் பம்பரம் போல் சுழன்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மழை பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்துவதற்காக மாவட்டவாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர்.

Sunday, November 5, 2017


தமிழ்நாட்டில் நிகழும் பிரசவங்களில் 34.1 சதவிகிதம் சிசேரியன்கள்! - அதிகரிக்கக் காரணம் என்ன?

ஜி.லட்சுமணன்

பிரசவம்... புதிய உயிர் பூமியில் சஞ்சரிக்கும் உன்னத நிகழ்வு. பிரசவத்தின்போது, ஏற்படும் வலி, வேதனையைக் கடந்து, செத்துப் பிழைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும், அது மறுபிறப்பு. மருத்துவத்துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம்முடைய முந்தைய தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியிருக்கும் இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களைச் சாத்தியமாக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கக் கூடிய செய்தியே.



‘தாய்-சேய் நலனை கருத்தில்கொண்டு மருத்துவக் காரணங்களுக்காக, 15 சதவிகிதம் வரை மட்டுமே அறுவைசிகிச்சைப் பிரசவங்களை அனுமதிக்கலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், சமீபத்தில் வெளியாகும் புள்ளிவிவரங்கள் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

மத்திய அரசின் குடும்ப நலம்-சுகாதார அமைச்சகத்தின் தேசியக் குடும்பநல ஆய்வு (National Family Health Survey) அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் குறித்து 2015-16-ம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளைச் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் சராசரியாக 17.2 சதவிகிதம் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடக்கின்றனவாம். இதுவே, 1992-93-ம் ஆண்டில் 2.9 சதவிகிதமும், 1998-99-ம் ஆண்டில் 7.1 சதவிகிதமும், 2005-06-ல் முறையே 8.5 சதவிகிதம் என்ற அளவில் இருந்திருக்கிறது. அதேபோல, தேசிய அளவில் 40.9 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளிலும் 11.9 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் நடப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்த பிரசவங்களில் 34.1 சதவிகிதம் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 51.3 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளிலும் 26.3 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பதாக அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் கிராமப்புறங்களில் 32.3 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 36.1 சதவிகிதமாகவும் உள்ளன என்கிறது அந்த ஆய்வு.

“சில அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது. என்றாலும், பல மருத்துவமனைகள், பிரசவத்திலும் பணம் பார்க்கும் நோக்கில் செயல்படுவதும் இதற்கு முக்கியக் காரணம்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். “சில தனியார் மருத்துவமனைகள் வணிக நோக்கில் செயல்படத் தொடங்கியதன் விளைவாக, பிரசவம் என்றாலே, சிசேரியன்தான் என்று ஆகிவிட்டது" என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள்.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவர்கள், `பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் பெண்களில் பெரும்பாலும் சிசேரியனையே விரும்புகிறார்கள். பிரசவவலியைத் தவிர்க்கவோ அல்லது தங்கள் குழந்தை நல்ல நாளில், நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்ற ஜோதிட நம்பிக்கைக்காகக்கூட இந்த மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்கிறார்கள் அவர்கள்.

`உண்மையில், சிசேரியன் முன்பைவிட, தற்போது அதிகரிக்க என்ன காரணம், சிசேரியன் செய்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன?’ மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜிடம் கேட்டோம்...

"பொதுவாக, பிரசவத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு தாய் அல்லது சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலேயே சிசேரியன் பரிந்துரைக்கப்படும். எல்லா மருத்துவமனைகளிலும் சுகப்பிரசவம் நடக்காமல் இருப்பதில்லை. முன்பைவிட தற்போது குறைந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலத்தில் சுகபிரசவத்தின்போது நடக்கும் குழந்தை இறந்துபோவது, தாய் இறந்துபோவது முற்றிலும் இப்போது தடுக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் கவனத்தில்கொள்ளாமல், சிசேரியன் பிரசவம் அதிகரிப்பதற்கு மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் குறைசொல்லும் போக்கு இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. விதிவிலக்காக, சில இடங்களில் அப்படி நடக்கலாம். மற்றபடி அதில் முழுவதும் உண்மையில்லை. ஏனெனில், சுகப்பிரசவம் எல்லாப் பெண்களுக்கும் சாத்தியமாவது இல்லை. முதலில், சிசேரியன் முறை அதிகரிக்க வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல்களே முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். குறிப்பாக, திருமண வயதைத் தள்ளிப் போடுவதும், செயற்கைக் கருவுறுதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் சில பிரசவங்களில் 'சிசேரியன்' அவசியமாகிறது.



நவீன கருவிகளும், வசதிகளும் அதிகரித்துவிட்ட நிலையில், 'சிசேரியன்' முறை வேகமாகவும் எளிதாகவும் செய்யக்கூடியதே. இப்போதெல்லாம் குறையுள்ள குழந்தைப் பிறப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று உலகளவில் மருத்துவத் துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில்தான் சிசேரியன் அதிகரித்திருக்கிறது. போதிய அளவு முன்னேற்றமடையாத நாடுகளில்தான் இது குறைவாக இருக்கிறது. இந்த நாடுகளில்தான் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய தாய், சேய் இறப்பு விகிதம் குறைவாக இருக்கின்றன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சில பிரச்னைகள் ஏற்படலாம் என்றாலும், அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல.

பெண்களுக்குத் தங்கள் பிரசவம் குறித்து முடிவெடிக்கும் உரிமை இருப்பதால், பெண்களே தீர்மானிக்கலாம். இதில் வலிக்கு பயந்தும் சிசேரியன் முறையைச் சில பெண்கள் நாடுகின்றனர். அதோடு சில தம்பதிகள் பிறக்கப்போகும் குழந்தை, ஜோதிட அடிப்படையில் நல்ல நாள், நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆடி மாதத்தில் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்பதற்காக, அதற்கு முன்னரே சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். தாய்-சேய் உடல்நலத்தைக் கருத்தில் கொள்ளாமல் சிசேரியனுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களுக்காக நடைபெறும் சிசேரியன்கள் தடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் முன்கூட்டியே தேதியைக் குறித்துவைத்து, குழந்தையை வெளியே எடுக்கும்போது, குழந்தை போதுமான வளர்ச்சியடையாமல் இருக்கும் நிலை ஏற்படலாம். இப்படி சிசேரியன் செய்துகொண்ட சில தாய்மார்களுக்குப் போதுமான அளவு பால் சுரக்காது அல்லது பால் சுரக்க பல நாள்கள் ஆகும். முதல் பிரசவம், சிசேரியன் என்றால், அடுத்ததும் அதேபோல்தான் இருக்கும் எனக் கூற முடியாது. அறுவைசிகிச்சைதான் தேவைப்படும் என்ற அறிகுறி தென்படாத வரை, சுகப்பிரசவமும் ஏற்படலாம்" என்கிறார் ஜெயராணி காமராஜ்.

எந்தெந்தச் சமயங்களில் சிசேரியன் மூலம் குழந்தைப்பேறு பெறுவது கட்டாயமாகிறது என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜிடம் கேட்டோம்.

"அந்தக் காலங்களில் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கைமுறையே உடற்பயிற்சியாக மாறி சுகப்பிரசவத்துக்கு உதவின. இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலை குறைவாக இருக்கிறது. இதுபோன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அதிகரித்து வருவதுதான் அறுவைசிகிச்சை பிரசவங்களுக்கு அடிப்படையான காரணம்" என்றவர், வேறு எந்தெந்தச் சூழலில் சிசேரியன் அவசியமாகிறது என்பதையும் விளக்குகிறார்.

"தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால், குழந்தை அந்த மாதத்துக்கேற்ற வளர்ச்சியடையாமல் இருந்தால் (Intrauterine growth restriction (IUGR), ஆரம்பப் பிரசவவலியின்போதே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிசேரியன் தேவைப்படும்.

பிரசவ நாளுக்கு இரண்டு வாரத்துக்கு முன்பே தாயின் இடும்பெலும்புக்குள் கர்ப்பப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையின் தலை நுழைந்துவிட வேண்டும். தாயின் இடுப்பெலும்பு சிறியதாக இருந்து, குழந்தையின் தலை பெரிதாக இருந்தால் குழந்தையின் தலை இடுப்பெலும்புக்குள் நுழையாது. இந்தச் சூழலிலும், பனிக்குடம் உடைந்து பிரசவவலி இல்லாத நிலையில் வலியைத் தூண்டிவிட மருந்து கொடுத்தும் வலி வராத நிலையிலும் சிசேரியன் தேவைப்படும். பனிக்குடம் உடைந்த 6 - 8 மணி நேரம் வரை பிரசவவலி அதிகமாக இருந்தும் பிரசவம் ஆகவில்லை என்ற நிலை, நஞ்சுப் பிரசவப் பாதையில் அமைந்திருந்தால் குழந்தை வெளிவர இயலாது. இதுபோன்ற சூழல்களிலும் சிசேரியன் செய்வது அவசியம்.

கர்ப்பப்பை அல்லது கருவகத்தில் கட்டி, பிரசவப் பாதையில் கட்டி, பிரசவத்தில் சிக்கல், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், வலிப்பு நோய் ஆகியவற்றால் தாய் பாதிக்கப்பட்டிருக்கும்போது, குழந்தைக்குப் பிராண வாயு குறைந்துவிட வாய்ப்பிருக்கும் நிலையில், குழந்தை படுத்திருக்கும் நிலை சரியாக இல்லாமல் இருந்தால், உதாரணமாகக் குறுக்கே படுத்திருந்தால், கர்ப்பப்பை அடி இறங்கி அதனை நிறுத்த ஆபரேஷன் செய்திருந்தால்... சிசேரியன் செய்ய வேண்டும்.



தாய்க்கு இதயக்கோளாறு, கர்ப்பப்பை வாயில் புற்றுநோய், இயற்கைக்கு மாறாக யோனிக் குழாய் இருந்தால், யோனிக்குழாயின் அமைப்புச் சரியாக இல்லாமலிருந்தால், குழந்தையே இல்லாமல் செயற்கை முறையில் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தையாக இருந்தால்... இதுபோன்ற தாய்-சேய் ஆகிய இருவருக்கும் ஏற்படும் உயிர் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக சிசேரியன் தேவை அவசியப்படும்.

அடிக்கடி குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து பிறக்க நேரிட்டால் நிறை மாதத்துக்கு முன்னரே சிசேரியன் செய்ய பரிந்துரைக்கப்படும். முதல் பிரசவம் சிசேரியனாக இருக்குமானால், பிரசவவலியின் அவஸ்தையால் கர்ப்பப்பை தையல் விட்டுப்போக வாய்ப்பிருக்கலாம். அப்போது சிசேரியன் செய்துதான் ஆக வேண்டும்" என்கிறார் கமலா செல்வராஜ்.

ஒரு பெண் 'தாய்' என்ற உன்னத நிலையை எட்டக்கூடிய அற்புத நிகழ்வு பிரசவம். பெண்களின் மனவலிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. 'குழந்தை பிறப்பு என்பது அந்த ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இனம்புரியாத மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிகழ்வு. எனவே, கர்ப்பம் அடைவதோ, குழந்தை பெற்றுக்கொள்வதோ ஒரு நோயல்ல. புதிய உயிர்கள் தோன்ற இயற்கை ஏற்படுத்திக்கொடுத்த வழிமுறை. பிரசவத்தின்போது, தாங்க முடியாத வலி இருக்கும்; அந்த வலி நிரந்தரமல்ல என்பதை உணரவேண்டும். பிரசவம் முடிந்ததும், வலியும் பறந்துவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தவழும். எனவே, அவசியமில்லாமல், சிசேரியன் செய்துகொள்வதை தவிர்ப்பது தாயின் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல...குழந்தையின் எதிர்காலத்துக்கும் நல்லது.
தமிழக மருத்துவ மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் இரட்டை இருப்பிடச் சான்றிதழ்!

ஞா. சக்திவேல் முருகன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை, நீட் அடிப்படையிலா அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலா என்ற குழப்பம் இருந்தது. ‘நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஆகஸ்ட் 25 முதல் மாணவர் சேர்க்கையை நடத்தியது தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம்.



'பொதுக் கலந்தாய்வின் முதல் நாளிலேயே வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்துகொண்டு கல்லூரியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்' என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ‘போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுகாதாரத்துறை அறிவித்தது. முதல்நாளில் போலி இருப்பிடச்சான்றிதழ் மூலம் சேர்ந்த ஒன்பது பேரில் நான்கு மாணவர்கள் கலந்தாய்விலிருந்து விலகிவிட்டனர். ஒரு மாணவர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. ‘நாங்கள் அளித்த இருப்பிடச் சான்றிதழ் எனத் தெரியவந்தால் எங்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம்’ என நான்கு மாணவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்களுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது.


மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பின்பு, தமிழக மருத்துவச் சேர்க்கைக்கான செயலாளர் செல்வராஜ், "பணி நிமித்தம் காரணமாக மற்ற மாநிலங்களில் பணியாற்றி வருபவர்களின் பிள்ளைகள் 428 பேர், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் அளித்து, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்" என்றார். ஆனால், மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், "கலந்தாய்வின் முதல் இரண்டு நாள்களில் மட்டுமே இரட்டை இருப்பிடச் சான்றிதழ் அடிப்படையில் 490 மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். மருத்துவக் கலந்தாய்வில் ஏற்கெனவே வேறொரு மாநிலத்தில் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துச் சேர்ந்தவர்கள், மற்றொரு மருத்துவக்கலந்தாயில் கலந்துக்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து கலந்தாய்விலும் கலந்துகொண்டனர். இவர்கள் மீண்டும் தமிழக அரசின் கலந்தாய்விலும் பங்கேற்று, தமிழகக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். இதன்மூலம், தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைக் கிடைக்கவிடாமல் செய்துவிட்டனர்" என்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார், சென்னை அயானவரத்தைச் சேர்ந்த ரவி. இவரது மகன் நீட் தேர்வில் 367 மதிப்பெண் பெற்றிருக்கிறார். 'சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், என் மகனுக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. சென்னையில் பிறந்து, வளர்ந்து, சென்னையிலேயே படித்த என்னுடைய மகனுக்குச் சென்னை கல்லூரியில் இடம் கிடக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த 104 பேர் இரட்டை இருப்பிடச் சான்றிதழைப் பயன்படுத்தி, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். இதைப்போலவே, மற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சேர்ந்திருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் போய்விட்டது. இதுகுறித்து, உயர்நீதிமன்றம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், 'மருத்துவக் கல்லூரி சேர்க்கையின்போது மாணவர்கள் அளித்த இருப்பிடச் சான்றிதழ்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தமிழகச் சுகாதார துறைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் இருவரும் 06.11.2017 அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

"நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே ஆதார் அட்டை அவசியம் என்றார்கள். ஆனால், கலந்தாய்வின்போது ஆதார் அட்டையைக் கவனத்தில் எடுக்காமல், இருப்பிடச் சான்றிதழை மட்டுமே பார்த்து சேர்க்கை நடத்தினர். ஆதார் அட்டைக்கும், இருப்பிடச் சான்றிதழுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிந்தால் இரட்டை இருப்பிடச் சான்றிதழின் நிலையை அறிந்திருக்க முடியும். இதைத்தவிர, இதர மாநிலங்களின் கலந்தாய்வின் தரவரிசைப்பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே, தமிழகத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையைத் தடுத்து, தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பளித்திருக்க முடியும்" என்றனர் பெற்றோர்கள்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அன்று, தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்தே, தமிழக மாணவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
சென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..!

கே.பாலசுப்பிரமணி க.பாலாஜி



பூந்தூறலாகத் தொடங்கி, மிகமிகக் கனமழையாக மாறிய வட கிழக்குப் பருவமழைதற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளைக் குளிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஒதுக்கப்பட்ட நபர்கள்

கொட்டு மழையிலும், அது தந்த குளிர்ச்சியை வீட்டுக்குள் இருந்தபடி சூடான தேநீரோ, காபியோ குடித்தபடி ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் மழையை வேடிக்கை பார்க்கும் மனதும், அதற்கான நேரமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாறாக, தொலைக்காட்சியில் மழை பற்றிய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருப்போம். நமக்கு ஒரு பாதுகாப்பான வீடோ, அலுவலகமோ இருக்கிறது. ஸ்மார்ட்போன் வழியே ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மழை நிலவரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கத்தைச் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறோம். ஒரு பாதுகாப்புத் தளத்தில் இருந்து நம்மால் இயங்க முடிகிறது.
சொந்த வீடோ, வாடகை வீடோ, தங்கும் அறைகளோ இல்லாத பெருநகர வீதிகளில் ஓரம்கட்டப்பட்ட அல்லது இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது இந்தச் சமூகத்தைப் பார்த்து மனம் வெறுத்த நபர்கள், சாலை ஓர நடைபாதைகளில் முடங்கியிருக்கின்றனர். இந்தப் பருவமழை காலத்தில் அவர்களின் நிலை எப்படி இருக்கும்?

பேச மறுப்பு

சூடான தேநீரைப் பருகிக்கொண்டிருக்கும்போது எப்போதாவது இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா? இந்தக் கேள்வி மனதில் எழுந்த மாத்திரத்தில் கொட்டும் மழையையும், அதில் நனைந்து கொண்டிருக்கும் தெருக்களில் முடங்கியிருக்கும் நபர்களையும் நினைத்து மனம் பதறுகிறது அல்லவா? இந்த மழையை, நாம் குடிநீராகப் பார்க்கிறோம். விவசாயிகளோ, இதைப் பாசனத்துக்கான நீராகப் பார்க்கின்றனர். தெருவோரத்தில் இருப்பவர்கள் இந்த மழையை எப்படிப் பார்க்கிறார்கள்..?
தெரிந்துகொள்ள கனமழைக்குப் பின், லேசாக வெயில் எட்டிப் பார்த்த பகல்பொழுதில் சென்னை நகர வீதிகளில் முடங்கிக்கிடந்த அவர்களைச் சந்தித்தோம்.

ருக்மணி லட்சுமிபதி சாலையில் ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்துக்கு எதிரே கூவத்தை ஒட்டி ஒரு மாநகராட்சிப் பூங்கா இருக்கிறது. பூங்காவுக்கு வெளியே நடைபாதையில் தாடியுடன் ஒரு மனிதர் உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று, பேச முயற்சி செய்தோம். நம்மிடம் அவர், ''பேச முடியாது'' என்று மறுத்துவிட்டார். அவரது மறுப்பை மதித்து விலகினோம்.



மழை வரட்டும்

அதே சாலையில், கிறிஸ்தவ தேவாலயத்தின் எதிரே நடைபாதையில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருசிலரிடம் பேசினோம். முனியம்மா என்பவர், "நைட்ல விட்டுவிட்டு மழை. எதுக்க இருக்குற கண் ஆஸ்பத்திரில இருந்தோம். மழை பெய்றது நல்லதுப்பா. தண்ணி கஷ்டம் தீரும். தண்ணி கிடைக்காம, ரெண்டு ரூபா பாக்கெட் தண்ணி வாங்கிக் குடிச்சிட்டிருக்கோம். என்னதான் பாக்கெட் தண்ணி குடிச்சாலும், குழாயில வர்ற தண்ணியைக் குடிச்சாத்தான் தாகம் தீருதுப்பா" என்று மழையை 
வரவேற்கிறார்
.
அருவருக்கு அருகிலேயே இன்னொருவர் படுத்திருந்தார். நம்மைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து, ''முருகேசன்'' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினார்.

"நைட் புல்லா மழை. அதோ இருக்குதே, அந்தக் கடை தாழ்வாரத்துல தங்கியிருந்தேன். இருந்தாலும் தூக்கமே வரல. அதான் இப்ப கொஞ்ச நேரம் தூங்கிட்டிருந்தேன். மழை பெய்யட்டும். அதனால எனக்கு எந்தக் கவலையும் இல்ல. மழை பெய்யாட்டி தண்ணிக்குத்தான் பஞ்சம். இயற்கையை ஒண்ணும் செய்ய முடியாது. போனவருஷம் வர்தா புயல் வந்தப்போ இங்கதான் கிடந்தேன். எவ்வளவோ மழையைப் பார்த்தாச்சு. வரட்டும். மழை நல்லா வரட்டும். வயசானதால தொடர்ந்து வேலைக்குப் போக முடியல. வேலைக்குப் போயி 20 வருஷமாச்சு. சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. ஆனா, யாரும் என்னையைப் பாத்துக்கமாட்டாங்க. மழையிலேயும், வெயிலுலயேயும் இப்படியே பொழப்புப் போகுது" என்றார் அவர்.

மழையால் கவலை இல்லை


அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாலகிருஷ்ணா, "எங்க அப்பா, அம்மா ஊரு திண்டிவனம். ஆனா, நான் பொறந்தது எல்லாம் இங்கதான். எங்க அப்பா முனுசாமி கை ரிக்‌ஷா இழுத்துத்தான் எங்களை வளத்தாரு. சர்ச் வாசல்ல பிச்சை எடுப்பேன். அதை வெச்சி சாப்பிடுவேன். மழை பெஞ்சா, ஆயிரம் விளக்குல இருக்க பையன் வீட்டுக்குப் போவேன். வீட்டுக்குள்ள நம்மள சேர்க்க மாட்டாங்க. வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்துல படுத்துப்பேன்.நேத்தும் அங்கதான் படுத்திருந்தேன். வேற என்ன செய்யறது" என்றார்.

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பிளாட்ஃபாரத்தில் சிலர் தங்கி இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான குமாரிடம் பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் தேனி. கல்யாணம் ஆயிடிச்சி. ரெண்டு பையன்க, ஒரு பொண்ணு இருக்காங்க. ஊருப் பக்கம் போயி ரொம்ப நாளாச்சு. கோயில், சர்ச் இங்கெல்லாம் சாப்பாடு தருவாங்க. மழை பெய்யறப்ப பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப்புல தங்கிடுவேன். மழை பெய்யறதுக்கெல்லாம் கவலைப்படுறது இல்ல" என்றார்.

சட்டி சுட்டதடா...நெஞ்சை சுட்டதடா

அவருக்கு அருகில் ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "என்கிட்ட பேர் எல்லாம் கேட்கக் கூடாது" என்று நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார். "வீட்ல சண்டை போட்டுட்டு இங்க வந்துட்டேன். எம்.எம்.டி.ஏ-வுல பூ வியாபாரம் செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நாள், கேட்டரிங் கம்பெனில, சப்ளையரா வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். கண்ணுல பார்வை குறைஞ்சிடுச்சு. இப்ப எங்கேயும் வேலைக்குப் போறதில்ல. மழை பெய்றப்போ, ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள போயி தங்கிக்குவேன்" என்றார்.
அதே பிளாட்ஃபாரத்தில் கொஞ்சம் தள்ளி ஒருவர் உட்கார்ந்திருந்தார். யாரோ கொடுத்துச் சென்ற உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "என்கிட்ட எதுவும் கேட்காதீங்க" என்றவர், சிறிது நேரம் கழித்து தன்னைப் பற்றிய தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

"என்னோட பெயர் குமார். ஆந்திரா பார்டர்ல தடா பக்கத்துல ஆரம்பாக்கம்தான் என் சொந்த ஊர். இங்க செக்ரட்டுரேட்டுல எனர்ஜி டிபார்ட்மென்ட்ல ஆபீஸ் அசிஸ்டென்ட்டா வேல பார்த்தேன். 2004-ம் வருஷம் எஸ்மா, டெஸ்மா கொண்டு வந்தப்போ ஜெயில்ல இருந்தேன். பகல்லகூட எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கு. ஆபீஸுக்குப் போதையோட போவேன். ஆபீஸ்ல கிடைச்ச இடத்துல பகலிலேயே படுத்துக் கிடப்பேன். அதனால என்னை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. மனம் வெறுத்துப் போனதால, என்ன செய்யறதுன்னு தெரியாம இங்க வந்து தங்கிட்டேன். 'சட்டி சுட்டதடா, நெஞ்சை சுட்டதடா'னு என் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு.

மழை வந்தா, இதோ பின்னாடி இருக்குற டிராவல்ஸ் பஸ்ல ஒதுங்கிக்குவேன். டிராவல்ஸ் ஓனர்தான் என்னை அப்பப்ப கவனிச்சுக்கிறார். ரோட்டுல மழை தண்ணீர் ஓடுவதைப் பார்க்கும்போது எனக்கு உற்சாகமா இருக்கும். இப்பத்தான் மழை தொடங்கியிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல தண்ணீர் ஓடும். தர்மம் செய்பவர்கள் எத்தைனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களால் என்னைப் போன்றவர்களுக்குச் சோறு கிடைக்கிறது. நான் செத்துப் போனால்கூட, என்னை எடுத்துப் போட்டு விடுவதாக டிராவல்ஸ் ஓனர் சொல்லியிருக்கிறார். இதைவிட எனக்கு வேறு என்ன வேணும்" என்கிறார் சிரித்தபடி.


காதல் தந்த துணிச்சல்

எம்.எம்.டி.ஏ அலுவலகத்துக்குப் பின்புறம் இருந்த பிளாட்ஃபாரத்தில் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "எனக்கு சொந்த ஊரு சென்னைதான். எங்க வீட்டுக்காரருக்கும் இதே ஊருதான். நாங்க ரெண்டு பேரும் வேறவேற சாதி. நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

ரெண்டு பேரு வீட்லேயும் எதிர்ப்பு. எங்க வீட்ல, 'அவரை விட்டுட்டு வீட்டுக்கு வா' என்று சொல்றாங்க. என் புருஷனை விட்டுட்டு எப்படி என்னால அங்கே போக முடியும்? அவரு வீட்லேயும் அப்படித்தான் சொல்றாங்க. என்னை விட்டுட்டு வரச் சொல்றாங்க. அதனால, ரெண்டு வீட்டுக்கும் பிரச்னை வேணாம்னு, இப்படி நாங்க பிளாட்ஃபாரத்துல தங்கிட்டு இருக்கோம்.

நேத்து நைட்டு மழை. அதோ அங்க இருக்குற கடையோட தாழ்வாரத்துல படுத்திருந்தோம். வீட்டுக்காரர், கல்யாண மண்டபங்கள்ல எச்சி இலை எடுக்கிற வேலையில இருக்கார். அவரு வேலை முடிஞ்சு வர்றதுக்கு நைட் ஒரு மணிகூட ஆயிடும். அதுவரைக்கும் குழந்தைகளைப் பாத்துக்கிட்டு இங்கேயேதான் இருப்பேன். எங்க வீட்டுக்காரர் ஏதாவது கொண்டு வருவார்" என்றவரின், கையில் புண்கள் இருந்தன. அதைப் பார்த்து, ''என்ன'' என்று கேட்டோம். "நைட்ல கொசுக்கடி தாங்க முடியல'' என்று சொன்னபடி தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிறார். "உங்க பேரு என்ன" என்று கேட்டோம். "பாரதி" என்கிறார். அதனால்தான் அந்தத் துணிச்சல் என்று நினைத்தபடி கனத்த மனதுடன் திரும்பினோம்.
Dark days:Following heavy rain, the Allikulam campus went without power for three days.Special Arrangement  

Judges had to make do with light from mobile phones and emergency lamps

A blackout following heavy rain kept the Allikulam campus here, which houses the Chief Metropolitan Magistrate court, and 15 other courts, in darkness for the last three days. The magistrates were making do with mobile phone torchlight and emergency lamps.
On Saturday, a working day for the courts, most of the corridors wore a deserted look.
In a court hall a senior civil judge sat near the horseshoe table, where advocates sit during court hours, to make use of the natural light coming in through the window.
His staff switched on the torch on his mobile phone and held it above the head of judge from behind to help the judge peruse documents of prosecuting authorities and counsel for the accused.
In another court, a woman judge, scheduled to hear the bail plea of IPS officer Safeer Karim, was working under an emergency light held at a convenient height by a staff member.
Egmore Court’ Advocates’ Association president J.Chandan Babu said, “Rainwater flooded the electrical system in the complex on Thursday.
“They cut off supply of power. There is no light, water and lift facility.”
“As the court work has been computerised and networked entirely, they need round-the-clock power supply without disruption.
“Typing evidence, judgments and regular trial are not possible and most of us are sitting in darkness,” said a court staff.
Over 1,000 litigants and advocates visit the courts here every day. Besides, shoppers visit the complex to buy old books and other things from shops.
Water supply to toilets has been completely disrupted. S.Ramamurthy, a litigant waiting at the court, said, “Since there is no lift facility here, we have to use the long winding ramp to reach the court halls.
“It is very difficult for senior citizens.”
Power was restored on Saturday evening, but court staff complained of frequent power cuts.

சென்னையின் தற்போதைய அத்தியாவசியப் பொருள் இதுவாகவும் இருக்கலாம்!

எம்.குமரேசன்

சென்னையில் மழை கொட்டி தீர்க்கிறது. தொடர்ந்து 6 நாள்களாக கனமழை பெய்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் புதியதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்றுக் கூறப்படுகிறது. இதனால், மழைப் பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கதில் 65.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. மீனம்பாக்கத்தில் 62 மி.மீ மழை பொழிந்திருக்கிறது. வருங்காலத்தில் இதே போன்று சென்னையில் அதிகமாக மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அதனால், இனிமேல் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போல படகு ஒன்றும் வீட்டில் இருப்பது அவசியம் எனத் தோன்றலாம். இதற்காகவே ஆன்லைனில் தற்போது டியூப் படகுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆத்திர அவசரத்திற்கு இந்தப் படகை காற்றையடித்து இயக்கத் தொடங்கி விடலாம். குழைந்தைகளை அமர வைத்து இழுத்தாவது சென்றுவிடலாம்.
கடலூரில் கனமழை... பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி!

க.பூபாலன் எஸ்.தேவராஜன்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் கடும் அவதியுடன் வீட்டுக்கு திரும்பினர். குறித்த நேரத்தில் பிள்ளைகள் வீடு திரும்பாததால் பெற்றோர்களும் கவலையடைந்தனர்.



வடகிழக்கு பருவ மழையானது, கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக விட்டுவிட்டு பெய்துகொண்டிருக்கிறது. கடலூர், சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி, சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி என பல பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை கொட்டிதீர்த்தது. இருந்தபோதிலும், காலையில் மழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனால் மாவட்ட நிர்வாகமானது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் காலையில் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள், காலையில் நிலவிய தட்வெப்ப சூழ்நிலையால் மழையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக குடை அல்லது ரெயின்கோட் போன்றவை கையில் எதுவும் எடுத்துச் செல்லவில்லை.




ஆனால், மதியம் 2 மணிக்குமேல் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டே வாகனத்தை ஓட்டிச் சென்றனர். பள்ளி விட்டதும் மாணவ-மாணவிகள் கடும் மழையில் நனைந்தபடியே வீட்டுக்குச் சென்றனர். இதனால் சைக்கிள், பேருந்து மற்றும் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. சென்னையில் மழையில் அறுந்துகிடந்த மின்கம்பியால் இரண்டு சிறுமிகள் இறந்துபோன சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறிதுடித்தனர். பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் வீட்டுக்கு வந்த பிறகே அவர்கள் நிம்மதி மூச்சுவிட்டனர்.

Beware! Fake version of WhatsApp found on Google Play Store


A fake and possibly malicious version of Facebook-owned WhatsApp was found lurking on Google Play Store as "Update WhatsApp Messenger" with developer name as 'WhatsApp Inc*'.

By: IANS | London | Published:November 4, 2017 10:13 am

The original WhatsApp has 1 billion downloads.

WhatsApp is now back after brief global outage, was down in India too

A fake and possibly malicious version of Facebook-owned WhatsApp was found lurking on Google Play Store as “Update WhatsApp Messenger” with developer name as ‘WhatsApp Inc*’. When IANS checked it on the Play Store, we found the app has been downloaded up to 5,000 times. There is another version under the same name which has a million downloads. The original WhatsApp has 1 billion downloads.

The existence of the shady software was first highlighted by the popular WhatsApp change tracking website WABetaInfo, via Twitter user @MujtabaMHaq, IB Times reported late on Thursday.

According to the report, a version of popular mobile game Temple Run 2 can also be found which was uploaded in October. The software posing as WhatsApp Business already have several users complaining about it in comments section.

“DON’T DOWNLOAD THIS APP! IT’S FAKE! WhatsApp Business is not officially available yet for all,” the WABetaInfo social media account tweeted to its 30,000 followers. It added: “Check only official channels to download WhatsApp Business in future.” WhatsApp Business is yet to launch as a standalone service.

Meanwhile, WhatsApp was down for users worldwide for about an hour on Friday, with people complaining of issues with accessing its services. Some users took to Twitter to highlight problems with the messaging app. The Facebook-owned company later released a statement saying issue has been fixed, and apologised for any inconvenience.

According to downdetecor.com, 46 per cent users complained of problems with the connection while 41 per cent reported issues with sending or receiving messages. About 12 per cent WhatsApp had problems with ‘Last seen’ feature of the service.

With Tech Desk inputs

Railways to provide disposable, eco-friendly bedrolls in AC coaches

Ajith Athrady New Delhi, DH News Service, Nov 5 2017, 1:21 IST
It has begun providing disposable towels and pillow covers in the newly-introduced Bandra-Nizamuddin train and would replace blankets with

It has begun providing disposable towels and pillow covers in the newly-introduced Bandra-Nizamuddin train and would replace blankets with

The Railway would distribute disposable and eco-friendly linen in the air-conditioned coaches, following complaints of dirty bedrolls and towel thefts.

It has begun providing disposable towels and pillow covers in the newly-introduced Bandra-Nizamuddin train and would replace blankets with cotton sheets.

Depending on the success of the experiment, the disposable linen will be provided in all other trains, said a railway official here, adding that the material used to make the sheets and towels is biodegradable and chemical-free cotton.

Following the Comptroller and Auditor General's rebuke over complaints of dirty bedrolls, the railways has been using innovative ideas to address the issue.

In some air-conditioned coaches, it has stopped distributing blankets and has started regulating the temperature to obviate the need for cover.

While the 'no blanket' rule has been in place in the AC coaches of the Jammu Mail, the railways is also gathering data from passengers on the viability of obviating blankets.

"Once we know how many of them ask for blankets and how many would like to go without one, we will decide on extending the distribution of disposable sheets," the official said. Attendants are reluctant to distribute towels to the passengers of the air-conditioned coaches as they are afraid of theft. "Railways always gets complaints that passengers take away the towels while alighting the train," the official said, adding that the cost of the stolen towel is recovered from the attendant's salary.

Disposable linens also save railways the cost of washing the bed covers and towels. While it spends Rs 55 on each bedroll, it charges the passengers only Rs 22, an official said.

Mudichur still a mess

DECCAN CHRONICLE. | P A JEBARAJ

PublishedNov 4, 2017, 7:56 am IST

Rs 600 crore flood alleviation project to protect South Chennai.


Motorists wade through flooded Mudichur road in Tambaram on Friday.

Chennai: An integrated flood alleviation project at a cost of Rs 600 crore will be taken up to prevent flooding in the southern part of Chennai and this project upon completion will prevent flooding in Mudichur, Perungalathur, Kovilambakkam, Pallikaranai, Velachery and Narayanapuram, higher education minister K.P. Anbhazhagan said on Friday.

The minister who was addressing the agitated Mudichur residents explained that the project will be taken up immediately and assured temporary flood mitigation measures on a war footing. Earlier in the day residents of Velachery Ram Nagar and Mudhichur vacated the ground floor of the buildings they were residing and took shelter on the first floor.


Youngsters of Bharathi Nagar Main Road in West Tambaram come out of their flooded house on Friday. (Photo: DC )

A few of them also vacated the houses and the parking lots remained vacant. “On Thursday night local youngster in these areas held discussions and we decided to move to the first floor after shifting TV, fridge and washing machines, but there were no alert or assistance from state authorities” rued Vijaya Kumari, a resident of Tambaram Krishna Nagar.

Infographic

“We have lost hope in the municipality and the government so I shifted all my belongings to the first floor and we have to help ourselves”, rued K. Shakila, who resides in Lakshmipuram. “The entire Mudichur road is overflowing with water and we fear the rerun of 2015 floods”, she added.

“Goodwill Nagar, Royappa Nagar, Bharathi Nagar and CTO colony suffered waterlogging and we are making efforts to divert the rainwater”, said a local revenue official, adding that there are problems only in the low lying areas which were either catchment or cultivable lands till 2000.

Despite downpour, reservoirs still below
20 per cent storage level

The heavy downpour saw flooding of city roads and there were also cases of water bodies like Naryanapuram lake, Kovilambakkam lake and Rettai Eri filling up, but reservoirs that meet the drinking water needs of Chennai recorded below 20 per cent storage level on Friday. All four reservoirs despite an inflow of 2,000 cusecs of water recorded a meagre 2,114 mcft water against the total storage capacity of 11,057 mcft. During same date last year, the storage was 1,276 mcft. Chembarambakkam, Red Hills, Cholavaram and Poondi received an inflow of 2,400 cusecs.

Why Foreshore estate, Madipakkam
Suffer waterlogging

It is due to poor planning and concrete roads. Under the mega city project, the local administration department mooted the concretisation of roadworks in Chennai. According to city corporation sources more than `300 crore has been spent on concrete roads in the past three years and this has now evolved as the major villain choking new interior roads in Madipakkam and Foreshore estate. “The recently laid concrete beach road between Seenivasapuram Nagar via Foreshore estate connecting Santhome flooded the fishing hamlets and the Foreshore estate. The road level was raised by half a foot and there is no drain. The concrete structure also flooded the EB sub-station resulting in a power outage,” said K. Arokiaraj, fishermen of Dumingkuppam.

Now, North Chennai is facing
Health hazard

Labour dominated North Chennai and its slums were choked with sewer overflow on Friday. The fresh rains added to the existing woes of the public. Visit by DC to Decastor and Demollows road in Pulianthope exposed poor drainage facilities and the only respite was that corporation authorities were conducting medical camps and distributing bleaching powder and paracetamol. “Otteri and Pulianthope, witnessing waterlogging for the last three days, are in a total mess and need more water pumps and super suckers to clear the drainage slush,” said social activist V. Sathiabalan.

No relief for attendance shortage, reiterates HC

DECCAN CHRONICLE.

PublishedNov 5, 2017, 4:21 am IST

The single judge had disallowed the students from appearing for second year PUC examination for want of required attendance.


After taking it into account, the court said that the does not provide for any relaxation of the minimum attendance to any extent under any circumstance.

Bengaluru: Those pursuing pre-university courses should keep tabs on their attendance and make sure they have the requisite 75% attendance, or they may not be allowed to appear for examination.

Recently, a division bench of the High Court refused to interfere with the order of single judge bench dismissing the plea of some PUC students seeking relaxation from attendance shortage. The single judge had disallowed the students from appearing for second year PUC examination for want of required attendance.

The advocates for the students had challenged the order of the single judge on the ground that it was contrary to a decision of this court in Prajwal Kumar Patil vs. Rajiv Gandhi University of Health Sciences.

To examine as to whether the students were eligible to appear for the examination in the absence of the requisite attendance, the court felt that it is relevant to refer to Rule 12 of the Karnataka Pre-University Education (Academic, Registration, Administration and Grant-in-Aid etc) Rules, 2006, which reads as follows: “Rule 12 - Minimum days of attendance.—(1) A student shall have attendance of 75 per cent of the total number of periods in each subject during the academic year to become eligible to  appear for the annual examination. “

Further, the rules stated that the director shall notify the minimum number of hours of periods of teaching in respect of each subject and also the minimum number of hours of experiments to be conducted by the student in each science subject. “A student who fails to put in the minimum period of study and attendance in the class and also a science student who fails to conduct the minimum hours of experiments in the laboratories successfully, shall not be eligible to appear for the annual examination,” it stated.

After taking it into account, the court said that the does not provide for any relaxation of the minimum attendance to any extent under any circumstance.

“Therefore, compliance of Rule 12 is mandatory. In other words, unless a student has the minimum attendance as required under Rule 12 of the Rules during the academic year, he shall not be eligible to appear for the annual examination.”
The students who had filed the appeal had attendance between 26% and 58%.

Therefore, admittedly, they had not put in the minimum attendance as required under Rule 12 of the Rules, and hence, were ineligible to appear for the examination, the court ordered while dismissing the appeals of the students.

Closed schools and crèches: A reluctant holiday for parents

Rachel Chitra| TNN | Nov 4, 2017, 10:32 IST

In a double whammy for working parents, all schools and many daycare centres remained shut for the past three or four days as water logging and power shutdown prevented them from being operational.Most daycare centres also have a small play area or a garden patch with swings and seesaws, and during the monsoon these areas are dangerous."Kids run out and play in the mud and we have a 10:1 kids to caretaker ratio. With dengue, malaria and other vectorborne diseases it isn't safe to be near a playground till the water completely drains out," said S Nirmala, head, Chocolatekids playschool and daycare centre.

The past 24 hours, in particular, were difficult for professionals, as commuting became arduous. When Bindhya Narasimhan, 36, wanted to drop her two kids on Friday at the daycare in Foreshore Estate, she found the access road blocked. "I could see that the road ahead had water up to 2ft.And then I saw the message on my phone that the daycare was closed," says Bindhya, who had to take leave to manage the kids.

At Bamboola in Mandaveli, parents were alerted the previous night that the daycare would be shut on Friday ."We have large open spaces for play and the water has not drained out. Younger children also tend to fall sick if their clothes or socks get wet, so it's better for them to stay home," says Deepa, teacher, Bamboola. Parents like Sunita Narayanan had to take leave for the third day in a row. "The first two days I opted to work from home, but now there is no power at home and no daycare too," she says.

For the few daycare centres like Kanchana Patti and Happica that remained open, it was a tough, too. "The children felt cooped up due to the indoor activities, but we could not let them play outside," said Suri, co-founder, Kanchana Patti.
Medico's dad slams delay in probe into sexual harassment complaint

TNN | Updated: Nov 4, 2017, 11:55 IST

VILLUPURAM/CHENNAI: More than a week after a medical intern at the Government Villupuram Medical Collegefiled a sexual harassment complaint against an assistant professor, her father, a retired government employee, has slammed the delay in initiating an inquiry, adding that they were 'victimising' his daughter instead.

While the assistant professor, who has been named in the complaint dated October 25, continues to work in the same college, the medico has been shifted to another batch under another faculty. The complaint accusing the professor of 'unwanted deliberate touch' was addressed to the Tamil Nadu Dr MGR Medical University vice chancellor Dr V Geethalakshmi. A copy was sent to the director of medical education Dr Edwin Joe and college dean Dr M Vanithamani along with signatures of 32 batch mates, who claimed to have either known or witnessed the incident which happened on October 22.

While the student could not be contacted, her father said college officials were "attempting to safeguard the culprit" instead of punishing him. "The faculty told me my daughter was a drug addict and she was being vindictive as he turned down her proposal. We have now decided not to let this go. We will ensure that the professor is punished," he said.

Two of the complainant's batch mates, who sought anonymity, said they decided to sign the complaint as they wanted the assistant professor to be punished. "We wanted the professor to go on leave till the inquiry is completed. The hospital turned our request down," they said.

The university registrar Dr T Balasubramanian said his office received a complaint on Friday. "We will seek an inquiry report from the college dean. Our university is not an administrative authority, but an academic body," he said.

Dr Vanithamani told TOI that she moved the medico under another faculty so that the girl does not have to face her alleged abuser. A committee comprising senior doctors, social workers, journalists and hospital administrators will conduct a two-day inquiry from November 8. "The medico, her batch mates, parents, the assistant professor and other faculty members will be called for a detailed inquiry," she said.
Lawyer who refused to link Aadhaar sticks to her guns

Sivakumar B| TNN | Nov 4, 2017, 12:08 IST



CHENNAI: Having an Aadhaar card has become essential, whether it is to claim welfare benefits or to continue operating your bank account. But this city advocate was not willing to mindlessly toe the line. Preethi Mohan refused to link her Aadhaar with PANin order to file her income tax returns, taking the issue to court. And, on the last day of filing of returns, she tasted blood, with the Madras high court ordering the income tax department to accept her returns without having to link her Aadhaar to her permanent account number (PAN).

"I am against getting an Aadhaar card as it violates my privacy. I went to a bank where Aadhaar registration was happening and found that I have to give my biometrics," said Mohan.

In other countries like the US, people are given identity numbers but that's used only for purposes of identification whereas, in India, Aadhaar is being used for multiple purposes - to avail benefits from public distri bution systems, to operate bank accounts and mobile numbers, she says. "I consulted people from other cities and after trying to file my tax returns online, I filed the case in the Madras high court seeking an order," said Mohan, adding that she will wait for the final Supreme Co urt judgment on the issue before getting an Aadhaar number. She is confident that the Supreme Court will not make Aadhaar mandatory."Every now and then the SC has ruled that Aadhaar cannot be made mandatory, the latest being the SC's view on privacy. The Madras high court also took into consideration a similar order issued by the Kerala high court regarding linking Aadhaar to PAN," said Mohan, adding that there are several people in various states who are opposed to the idea of making Aadhaar mandatory. "The Aadhaar Act does not promise that our privacy will not be violated. If our personal details are leaked, the citizen cannot take any legal action. Getting a person's biometrics without putting safeguards into place is an invasion of privacy ," said Mohan.

"I will not get an Aadhaar number at all if the SC gives a final judgment in favour of people who are opposed to the Aadhaar system. If it is made mandatory , then I will have to take a call after that," the lawyer said.

HC notice to registrar on Rs 100 cr corruption allegations


TNN | Updated: Nov 5, 2017, 00:13 IST

Chennai: A registrar may face probe by a special investigation team (SIT), as the Madras high court has admitted a PIL in this regard, and has also issued notices.

It is, in fact, a double whammy for the registrar — P Sivapriya — whose transfer out of South Chennai district had already been stayed by Justice N Kirubakaran, who unearthed illegalities worth several crores of rupees in the registration of a big chunk of land on Pallikaranai marshland.

The land documents registered by Sivapriya a few years ago showed that the vendor Chandra had come to the sub-registrar's office to register the land in favour of Balu Chettiyar. In reality, Chandra was a cancer patient who was not in a position even to walk. Passing severe strictures against the official, Justice Kirubakaran then preempted attempts to transfer her out of the district, by staying her transfer.

Even as the petition was pending before the single judge, the present PIL filed by V Varaaki claimed that the official had amassed assets to the tune of Rs 100 crore and that there were no acceptable explanation as to the source of the income. The PIL, seeking formation of a special investigation team to probe the allegations of corruption against the registrar, came up for hearing before the first bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar.

Admitting the plea, the bench ordered notice to Sivapriya and the state government, and directed them to file their replies by November 27.

Alleging that Sivapriya was involved in corrupt activities and that she had tampered with property records while illegally transferring waterbodies to private people, the PIL said, "the official has been charged for four such offences while she was working as sub-registrar of Virugambakkam."

The petitioner wanted the court to constitute a SIT, probe the allegations and initiate appropriate criminal prosecution as well as departmental proceedings against the officer, if the charges were proved. It said such activities of officials caused big revenue loss to the exchequer, and added that the registration department was the axis that ran the government as it generated huge revenue.

Schools prepare to reopen on Monday

TNN | Updated: Nov 5, 2017, 00:38 IST

Chennai: Waters have receded and most schools are readying themselves for the reopening, but public health experts say managements must ensure safety and hygiene on campuses before they reopen schools.

Health department and disaster management cells are providing advisories and support to schools and colleges that were inundated with water. "Many educational institutions are prone to risk because they have large playgrounds where water was stagnant. Even after the water is dried, there will be a lot of sludge and muck like garbage and sometimes carcasses," said Dr K Kolandaswamy, director of public health.

Many reptiles and insects may have got inside the classroom. "Pest control services should be engaged inside classrooms, besides washing them clean. In the playground and gardens bleaching powder, a disinfectant that kills harmful microbes, should be used," he said. Overhead tanks and drinking water stations should be cleaned and refilled. Fogging should also be undertaken if mosquitoes have increased.

On Friday many school managements told TOI that their canteen staff have been instructed to serve only boiled water and freshly cooked food to students. "We have been asked to advise students to wash their hands with soap and use hand sanitisers before and after eating food," said Sabitha S, an elementary schoolteacher in Anna Nagar. The school has also prepared posters to educate students about how contaminated drinking water, food and mosquito menace could pose health problems on campuses.

A disaster management cell official, who visited a school in Egmore, found damage to windows, walls and roofs. "We have asked the school to check power points and electrical equipment before children are allowed on campus. Although water had receded, the corridors and sidewalks were slippery," said the official.

Zonal officers from corporation and health department officials have offered support to school managements. School managements can dial 104 for technical advice and support.

PIA flight lands midway, asks passengers to take bus to destination

PTI | Nov 4, 2017, 17:06 IST

HIGHLIGHTS

The airline staffers offered to take the passengers to their desired destination by a bus.
Passengers turned down the offer and refused to leave the plane.

Following this, the airline staffers switched off the plane's air conditioning system.

(

LAHORE: A flight of Pakistan's national carrier on Saturday landed in Lahore due to low visibility and asked passengers onboard to travel by bus to their destination, according to a media report.

A Pakistan International Airlines (PIA) flight from Abu Dhabi in the UAE to Rahim Yar Khan landed at the Lahore airport reportedly due low visibility, Geo News reported.

The airline staffers offered to take the passengers to their desired destination by a bus. However, the passengers turned down the offer and refused to leave the plane.

Following this, the airline staffers switched off the plane's air conditioning system, resulting in suffocation of passengers, including minors, in the plane.

The approximate distance from Lahore to Rahim Yar Khan is 624.5 km.

The passengers said that they had asked the airlines to drop them at Multan Airport which is 292 kilometres away from Rahim Yar Khan.

ஆங்கிலம் அறிவோமே 184: உள்ளே, வெளியே இரண்டும் ஒன்று!

Published : 31 Oct 2017 11:08 IST

ஜி.எஸ்.எஸ்.


கேட்டாரே ஒரு கேள்வி

In, out ஆகிய ​அறிவிப்புப் பலகைகளில் ‘இருக்கிறேன். ஆனால் யாரும் அணுக வேண்டாம்”எனும் பொருள் வரும்படி மூன்றாவதாக ஒரு வார்த்தை உள்ளதா?

***************

தொலைக்காட்சியில் கிடார் இசையைப் பற்றிய வர்ணனையில் பிரிட்ஜ், ப்ளெக்ட்ரம் என்ற இரண்டு வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. இவற்றின் பொருள் என்ன?

Bridge என்பது கிடாரிலுள்ள தந்திகளும், கிடாரின் உடல் பகுதியும் சேருமிடம். Plectrum என்பது கிடாரின் தந்திகளை மீட்ட உதவும் சிறிய முக்கோண வடிவ பிளாஸ்டிக் தகடு.

***************

கேட்டாரே ஒரு கேள்விக்கான விடை. அப்படிப் பொருள்வரும்படியான ஒரே ஆங்கில வார்த்தை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ‘Do not disturb’ என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்திருப்பீர்களே​.

In, out தொடர்பான வேறொரு சுவாரசியமான பயன்பாடும் உ​ண்டு. ஒரு விண்ணப்பத்தை ஒரு பெண்மணி நிரப்பிக் கொண்டிருக்கிறாள் என்றால் She is filling in an application என்று எழுத வேண்டும். She is filling an application என்று எழுதக் கூடாது.

ஆனால் அமெரிக்கர்கள் ​ இதை She is filling out an application என்றுதான் எழுதுகிறார்கள்.

In என்பதும், out என்பதும் ஒரே பொருளைத் தரும் விந்தை இது!




Bucketlist என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன? ஏதாவது பட்டியலா?

பட்டியல்தான். அதற்காக இந்தத் தண்ணீர் பஞ்ச காலத்தில் நமக்கு எவ்வளவு வாளிகள் மற்றும் குடங்கள் த​ண்ணீர் தேவை என்பதற்கான பட்டியல் அல்ல அது.

‘’கண்ணை ​மூடுறத்துக்குள்ள கைலாஷுக்குப் போயிட்டு வரணும்’’, ‘’செத்துப் போறதுக்கு முன்னாலே சச்சினை சந்திக்கணும்”என்றெல்லாம் சிலர் கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவையெல்லாம் Bucketlistல் அடங்கியவைதான்.

அதாவது இறப்பதற்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்தச் செயல்களின் பட்டியல்தான் Bucketlist.

இந்தப் பட்டியலில் உள்ளவை நீங்கள் செய்பவையாக இருக்க வேண்டும். ‘’லாட்டரியிலே எனக்கு கோடி ​ரூபாய் விழ வேண்டும்”என்பது bucketlistல் அடங்காது. ஏனென்றால் அது உங்கள் கையில் இல்லை.

அதேபோல அந்தப் பட்டியலில் உள்ளவை மிக பிரம்மாண்டமானதாகவோ நிறைவேறுவது கொஞ்சம் கஷ்டம்தான் என்பதாகவோ இருக்கலாம். ஆனால் பொதுவாக ஒருபோதும் நடக்காது - சான்ஸே இல்லை (அத்தனை அரசுத் துறைகளிலும் ஊழல் இல்லாத இந்தியாவில் நான் வசிக்கணும். மிகக் குறைந்த செலவில் ஷங்கர் இயக்கிய திரைப்படத்தை நான் பார்க்கணும்) எனும்படியான செயல்கள் bucketlistல் இடம் பெறுவதில்லை.

இந்தப் பட்டியலுக்கும் Bucket-க்கும் என்ன தொடர்பு?

ஆங்கிலத்தில் ‘Kick the bucket’ என்று ஓர் இடியம் உண்டு (இதே பகுதியில் முன்பு ஒரு முறை இதுபற்றி ஓரளவு குறிப்பிட்டிருக்கிறேன்). He kicked the bucket என்றால் அவன் இறந்து விட்டான் என்று அர்த்தம் (ஒருவேளை அந்தக் காலத்தில் ​தூக்குப் போட்டுக் கொண்டவர்கள், ஸ்​டூல் அல்லது நாற்காலிக்குப் பதிலாக கவி​ழ்த்துப் போடப்பட்ட வாளியின்மீது நின்று கொண்டு அதை உதைத்துத் தள்ளிவிட்டு ​தூக்கில் தொங்கினார்களோ என்னவோ!).

W​ish list என்றும் ஒன்று உண்டு. வாங்க வேண்டுமென்று எ​ண்ணுகிற, ஆனால் அதற்குப் பெரும் செலவாகும் எனும்படியானவற்றை அடுக்கும் பட்டியல். Wish listல் உள்ளவற்றை வாங்க Fat cheque வேண்டும்.

***************

’’Jam Tomorrow என்றால் என்ன பொருள்?”என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

பிடித்தமான ஒரு விஷயம் அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த உறுதிமொழி நடைமுறைப் படுத்தப்படுவதே இல்லை. இதைத்தான் Jam Tomorrow என்பார்கள்? (குழந்தைகளாக இருக்கும்போது ‘’எனக்கு நிறைய Jam வேண்டும்”என்று நான் பிடிவாதம் பிடித்தால், நாளைக்குத் தருகிறேன் என்று அப்போதைக்குத் தப்பிப்பதற்காக அம்மா கூறக் கூடும். இந்த அடிப்படையில் எழுந்தது இது).

‘ஆலிஸ் இன் ​வொண்டர் லேண்ட்’ என்ற பிரபல ​நூலாரிசியரான ​லூயி கேரல் தனது மற்றொரு ​நூலான ‘Through the looking glass’ என்ற ​நூ​லில் இப்படிக் குறிப்பிட்டார் - ‘’The rule is Jam Tommorrow and Jam Yesterday – but never Jam today.

***************

தமிழக அரசியலில் sleeper cell என்று குறிப்பிடுகிறார்களே அதற்குப் பொருள் என்ன?

வாசகரே, துப்பாக்கி படம் பார்த்திருந்தால் ஒருவேளை இந்த ஐயம் உங்களுக்குத் தோன்றி இருக்காது. தீவிரவாதிகள் மற்றும் ஒற்றுவேலையில் ஈடுபடுபவர்கள் சமூகத்தில் ஆங்காங்கே சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஸ்லீப்பர் செல்லாகப் பயன்படுத்துவார்கள். அதாவது குறிப்பிட்ட இடத்திலிருந்து சிக்னல் வந்தால் மட்டுமே இவர்கள் அந்த அழிவு வேலையில் ஈடுபடுவார்கள். மற்றபடி அவரவர் வேலைகளைப் பார்​த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். இவர்களில் மிகப் பலருக்கும் தன்னை இயக்குபவர் யார் என்றே அடையாளம் தெரியாது.

மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஸ்​​லீப்பர் செல்களாக இருப்பது வழக்கம்.

***************

தொடக்கம் இப்படித்தான்

To rob Peter to pay Paul என்பதன் அர்த்தம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுபோல’ என்று மேம்போக்காகச் சொல்லலாம்.

ஆனால் இதற்கு வேறொரு அர்த்தமும் உண்டு. ‘ஒரு பிரச்னை தீர்ந்து விட்டது. ஆனால் அடுத்த பிரச்னை தொடங்கி விட்டது’.

இந்த இடியத்தில் Peter, Paul என்பது ஏதோ இருவரின் பெயர்கள் அல்ல.

1540ல் லண்டனிலுள்ள ​தூய பீட்டர் சர்ச் ஒரு கதீட்ரலாக மாறியது (கதீட்ரல் என்பது பெரிய அளவிலான ச​ர்ச் என்று தோராயமாகக் கூறலாம்). ஆனால் இந்த அங்கீகாரம் பத்து வருடங்களுக்கு மட்டும்தான் நீடித்தது. ​தூய பால் கதீட்ரலின் அதிகாரத்துக்குக் கீழ் மேற்படி கட்டிடம் வந்து சேர, மீ​​​ண்டும் அது ​தூய பீட்டர் சர்ச் ஆனது. ​தூய பால் கதீட்ரலுக்குத் தேவைப்பட்ட கட்டுமானச் செலவுகளுடன் மராமத்துச் செலவுகளும் ​தூய பீட்டர் சர்ச்சுக்கான நிதியிலிருந்து எடுத்துச் செலவழிக்கப்பட்டதாம்.

சிப்ஸ்

* Trophy என்றால் என்ன?

வெற்றிக் கோப்பை. போட்டியில் வெற்றியாளருக்கு அளிக்கப்படுவது. அடுத்தடுத்த வெற்றியாளருக்கு என ஆண்டு தோறும் இது கைமாறிக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.

* ஜன்னல் ஓர இருக்கையை Window seat என்கிறோம். அதற்குப் பக்கத்து இருக்கையை என்னவென்று அழைக்கலாம்?

அந்தப் பகுதியில் இரு இருக்கைகள்தான் என்றால் ஜன்னலுக்கு அடுத்த இருக்கையை ‘’Aisle Seat” என்று அழைப்பார்கள். இதை ‘ஏய்ல்’ என்று உச்சரிக்க வேண்டும்.

* Dime a dozen என்றால் என்ன?

மிக எளிதில் கிடைக்கக் கூடியது. மதிப்பு குறைந்தது.

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...