Friday, December 15, 2017

SC tells institutions of higher education that lack of facilities for disabled persons amounts to discrimination

New Delhi: People with disability have a right to get higher education and not making adequate provisions to facilitate their proper education would amount to "discrimination", the Supreme Court said on Friday.

It directed the government institutions of higher education and other such institutions, which were receiving aid from the government, to comply with the provisions of the Rights of Persons with Disabilities Act, 2016.

The Act provides for reservation of not less than five percent seats for persons with benchmark disabilities.

A bench of justices AK Sikri and Ashok Bhushan said that appropriate consequential action under the provisions of the act would be initiated against the defaulting educational institutions.



It asked the University Grants Commission (UGC) to constitute a committee to consider the feasibility of having guidelines for accessibility of students with disabilities in universities and colleges.

It said the committee would undertake a detailed study to make provisions in respect of accessibility and facilities of teaching for disabled persons and would also suggest the modalities for implementing those suggestions, their funding and monitoring.

"The expert committee may also consider feasibility of constituting an in-house body in each educational institution (of teachers, staff, students and parents) for taking care of day-to-day needs of differently abled persons as well as for implementation of the schemes that would be devised by the expert committee," the bench said, adding that the exercise be completed by 30 June next year.

It said that an action taken report in this regard should be placed before it in July 2018.

The court's verdict came on a plea which had raised three key issues, including the non-implementation of reservation of seats in educational institutions as provided in the act and provision for proper access to orthopaedically disabled persons so allow them to freely move in educational institutions.

The bench noted that a provision under the 2016 Act provided that persons with benchmark disabilities shall be given an upper age relaxation of five years for admission in institutions of higher education.

"Accordingly, we direct that all those institutions which are covered by the obligations provided under Section 32 of the Disabilities Act, 2016 shall comply with the provisions of Section 32 while making admission of students in educational courses of higher education each year," it said.

The court said such educational institutions shall submit a list of the number of disabled persons admitted in each course every year to the chief commissioner or state commissioner.

It said it raised the critical issue of creating a level playing field where all the citizens have equality of fair opportunities to enable them to realise their full potential and experience well-being.

"To ensure the level-playing field, it is not only essential to give necessary education to the persons suffering from the disability, it is also imperative to see that such education is imparted to them in a fruitful manner," it said.

"Not making adequate provisions to facilitate proper education to such persons, therefore, would amount to discrimination," it said.

The bench said that such requirement was to ensure that a student with a disability, after proper education, would be able to lead an independent, economically self-sufficient and fully participatory life.

Regarding the law colleges, the court said intimation about the number of admissions given to disabled students be sent to the Bar Council of India (BCI).

"Other educational institutions will notify the compliance, each year, to the UGC. It will be within the discretion of the BCI and/or UGC to carry out inspections of such educational institutions to verify as to whether the provisions are complied with or not," it said.

Published Date: Dec 15, 2017 08:44 pm | Updated Date: Dec 15, 2017 08:44 pm
கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வங்கி கணக்கில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் ரூ. 44 லட்சம் கையாடல்: மோசடி நபர் தலைமறைவு

Published : 15 Dec 2017 09:16 IST

கடலூர்



கடலூர் மாவட்டத்தில் இருந்து ஸ்வைப்பிங் மிஷின் மூலம் சென்னை தனியார் வங்கி தலைமை அலுவலக கணக்கில் இருந்து ரூ.44 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. பணம் கையாடல் செய்து தலைமறைவான நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் கணேசமூர்த்தி(40). மாற்றுத்திறனாளி. இவர் ஸ்வைப் பிங் மெஷின் பெற்று, வீட்டில் வைத்துக் கொண்டு ஏடிஎம் கார்டை எடுத்து வருபவர்களுக்கு மெஷினில் ஸ்வைப் செய்து பணம் தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் கிராமத்தினர் உள்ளிட்ட சிலர் இதனை பயன்படுத்தி வந்துள்ளனர்.


சென்னை வங்கியில் பணம் மோசடி

இதற்காக எடுக்கும் பணத்துக்கு தகுந்தாற் போல கமிஷன் தொகையை கணேசமூர்த்தி பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஏடிஎம் பராமரிப்பு கணக்கில் ரூ.44 லட்சத்து 74 ஆயிரம் பணம் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரையில் இந்த பண மோசடி நடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த வங்கி உயர் அதிகாரிகள் இந்த பணம் யாருடைய கணக்குக்கு சென்றுள்ளது என்று ஆய்வு செய்தனர். இதில் ஆர்பிஎல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுக்கு பணம் சென்று அதில் இருந்து கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி கணக்குக்கு பணம் சென்றிருப்பது தெரியவந்தது.

வங்கி ஊழியர்கள் உடந்தையா?

இதையடுத்து லட்சமி விலாஸ் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு நத்தமேடு லட்சுமி விலாஸ் வங்கி கிளையின் மேலாளர் திருவேங்கடம், கடலூர் மாவட்டம் மருதூர் காவல்நிலையத்தில் கணேசமூர்த்தி மீது பணமோசடி புகார் அளித்தார். அதில், ரூ. 44 லட்சத்து 74 ஆயிரம் வங்கி பணத்தை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியில் உள்ளவர்கள் உதவி இல்லாமல் இந்த கையாடல் நடைபெற்றிருக்க முடியாது எனவும், இது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள மோசடி என்றும் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள கணேசமூர்த்தியை போலீஸார் தேடி வருகின்றனர்.
புழல் சிறையில் பாம்பு, எலியெல்லாம் இருக்கு! லண்டன் நீதிமன்றத்தில் மல்லையாவுக்காக வாதம்

Published : 15 Dec 2017 10:54 IST

லண்டன்

லண்டன் நீதிமன்றத்தில், மல்லையாவை இந்தியா அழைத்து வருவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, சென்னை புழல் சிறையின் மோசமான நிலை குறித்து, வாதம் முன் வைக்கப்பட்டது.

பாம்புகள், எலிகள், கரப்பான்களுக்கு நடுவே மருத்துவம், உணவு வசதியின்றி அவதிப்படும் சூழலில், 2013ம் ஆண்டு சென்னை புழல் சிறையில் இங்கிலாந்தைச் சேர்ந்த 6 பேர் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசை கேட்டுக்கொண்டது. இந்தியா அளித்த புகாரின் பேரில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் மல்லையாவை கைது செய்தனர். பின்னர் 6,50,000 யூரோ பிணைத்தொகை செலுத்தியதன் அடிப்படையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் மனு மீதான விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி, இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலைமை குறித்தும், அங்கு கைதிகளை நடத்தும் விதம் குறித்தும் வாதங்களை எடுத்து வைத்தார்.

மேலும், ஐரோப்பிய யூனியனுக்கான கைதிகள் சித்திரவதைக்கு எதிரான அமைப்பின் உறுப்பினரான ஆலன் மிச்சேல் இந்த வழக்கில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது, கடந்த 2013ம் ஆண்டு இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 6 இங்கிலாந்து நாட்டினர் மற்றும் 29 பிற நாட்டினர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்களில் ஒருவரை, தாம் சந்தித்து திரட்டிய விவரங்களை மிச்சேல் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து மிச்சேல் கூறுகையில், ‘‘புழல் சிறையில் எலிகள், கரப்பான் பூச்சிகள், பாம்புகளுடன் வாழ்ந்ததையும், மிகச்சிறிய அறையில் மிகமோசமான நிலையில் இருக்க நேர்ந்ததையும் அவர் என்னிடம் கூறினார். மேலும், உணவும், மருத்துவு சிகிச்சையும் கிடைக்காமல் அவதிப்பட்டதையும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்து தரப்படாதது பற்றியும் தெரிவித்தார். இதுபோலவே மும்பை ஆர்தர் ரோடு சிறையிலும், அலிப்பூர் சிறையிலும் மோசமான நிலை இருப்பதையும் அறிய முடிகிறது’’ எனகூறினார்.

இதை தொடர்ந்து வழக்கறிஞர் கிளாரே மாண்ட்கோமெரி கூறுகையில் ‘‘எனவே தான், இந்தியாவுக்குச் செல்வதற்கு விஜய் மல்லையா தயக்கம் காட்டுகிறார். சர்க்கரை நோயாளியான அவர் சிறையில் அடைக்கப்பட்டால் உரிய சிகிச்சையும், மருத்துவ உதவியும் கிடைக்காமல் போகக்கூடும் என்ற கவலை உள்ளது’’ என வாதங்களை வைத்தார்.
வங்கிக் கணக்கு, பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு; 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published : 15 Dec 2017 11:43 IST

பிடிஐ 

 புதுடெல்லி

 


வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் நேற்று (வியாழன்) கூறியது.

இந்நிலையில், ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கக்கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதை இன்று ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வங்கிக் கணக்கு, பான், உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க அனுமதி வழங்கினர்.

இதுபோலவே மொபைல் போனுடன் ஆதார் எண் இணைப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
  மாதப் பிறப்பு, அமாவாசையில் வம்சம் தழைக்க... தர்ப்பணம்! 

 

நாளை சனிக்கிழமை மாதம் பிறக்கிறது. தனுர் மாதம் என்று சொல்லப்படும் மார்கழி மாதம் பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் முன்னோருக்காக தர்ப்பணம் செய்வதும் அவர்களை ஆராதிப்பதும் மிக மிக முக்கியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாதப் பிறப்பில், தர்ப்பணம் செய்வது அவசியம். அதேபோல், சனிக்கிழமை அன்று முன்னோர்களை வழிபடுவதும் அவர்களை ஆராதிப்பதும் கூடுதல் பலன்களை வழங்கும் என்பது உறுதி.

சனிக்கிழமை நாளில் மாதப் பிறப்புக்கான தர்ப்பணத்தை தவறாமல் செய்துவிடுங்கள். மேலும் இந்த நாளில் முன்னோர் நினைவாக காகத்துக்குச் சாதமிடுவதும் குறிப்பாக எள்சாதம் வைப்பதும் இன்னும் புண்ணியங்களைத் தந்தருளும். தோஷங்களை நீக்கும். நம்மையும் நம் சந்ததியினரையும் நிம்மதியும் நிறைவுமாக வாழவைக்கும்.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை 17ம் தேதி அமாவாசை. முன்னோருக்கே உரிய நாள் என்று அமாவாசையைச் சொல்லுவார்கள். எனவே ஞாயிற்றுக் கிழமை அமாவாசையை தவறவிடாதீர்கள். மறக்காமல், மாதப்பிறப்பான சனிக்கிழமை அன்றும் அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (17ம் தேதி) அன்றும் என இரண்டு நாளும் முன்னோருக்கு தர்ப்பணங்கள் செய்யுங்கள்.

தர்ப்பண நாளில்... இயலாதோருக்கு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். மார்கழி குளிர்மாதம். எனவே கம்பளியோ போர்வையோ தானம் செய்யுங்கள். 

பித்ருக்கள் ஆசியும் இறைவனின் அருளும் கிடைத்து, வாழையடி வாழையென வம்சம் வளரும். வம்சம் தழைக்கும்!
அதிகாலையில் கோலம் போடுகிறீர்களா?' கூட்டம்போட்டுப் பெண்களை அலர்ட் செய்த போலீஸ்

ம.அரவிந்த் பாலஜோதி.ரா

 

 மார்கழி மாதம் என்றாலே வாசலை அடைத்துப் போடப்படும் பெரிய பெரிய வண்ணமயமான மாக்கோலங்கள்தான் அழகு. வீட்டுப் பெண்கள் ஆர்வமுடன் அதிகாலையிலேயே இதற்கென்று தயாராகிவிடுவார்கள். இப்போது அதற்கும் செயின் பறிப்பு திருடர்கள் மூலம் ஆபத்து வந்து விட்டது.
அதாவது, வைகறைப் பொழுதில் தங்கள் வீடுகளுக்கு முன்னால் கோலம்போடும் பெண்களைக் குறிவைத்து செயின் பறிப்புத் திருடர்கள் புறப்பட்டுவிட்டார்கள். அது குறித்த விளக்கம், விழிப்பு உணர்வுக் கூட்டம் இன்று புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மகால் ஒன்றில் நடந்தது. இதில் கலந்துகொண்ட புதுக்கோட்டை நகர காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், கலந்துகொண்ட பெண்களிடம் கோலம் போடும்போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பேசினார். தவிர, கலந்துகொண்ட பெண்களுக்கு குற்றத் தடுப்பு முறைமைகளை விவரிக்கும் கைப்பிரதிகளையும் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், "கோலம் சம்பந்தப்பட்ட கூட்டம்னு கூப்பிட்டதும் வண்ணக்கோலப்பொடி இலவசமாகத் தருவார்கள் என்று நினைத்து வந்தோம். இங்கு வந்த பிறகுதான் புரிந்தது, கோலம்போட வாசலுக்கு வருவதில் எவ்வளவு ஆபத்தான நிலைமை இன்றைக்கு நிலவுகிறது என்பது. நாம் முன்னெச்சரிக்கை முன்னேற்பாடுகள் இல்லாமல் அலட்சிய மனப்பான்மையுடன் கோலம் போடுவோமெனில், நமது கழுத்தில் உள்ள தாலிச் செயின் களவு போவதோடு, உயிருக்கும் ஆபத்தான நிலைமை ஏற்படும் என்ற உண்மையை இந்தக் கூட்டத்துக்கு வந்ததால் தெரிந்துகொண்டோம்" என்றார்கள்.


 டி.எஸ்.பி. ஆறுமுகத்திடம் பேசினோம். "மார்கழி மாதத்தில் இருட்டோடு எழுந்து கோலம் போடுவது நமது பெண்கள் பின்பற்றி வரும் பாரம்பரிய பழக்கமாக இருக்கிறது. ஆள் அரவமற்றத் தெருக்களில் வெளிச்சம் இல்லாத அந்த அதிகாலையில் கோலம் போடும் பெண்களைக் குறிவைத்து சங்கிலி பறிப்புத் திருடர்கள் நடமாடி வருகிறார்கள். அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைமைகள் பற்றி பெண்களுக்கு விவரித்தோம். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானே தவிர, பெண்களை கோலம்போட வெளியே வரக்கூடாது என்று தடுப்பதற்காக அல்ல" என்றார்.

இந்தக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்திருந்தாலும் காவல்துறை கொடுத்திருக்கும் அறிவுரைகள் கோலம் போடுவதில் ஆர்வமுடைய அத்தனை தமிழ்நாட்டுப் பெண்களுக்குமானது. எனவே, ஒட்டுமொத்த பெண்களின் பொதுநலன் கருதி, அந்த அறிவுரைகளை இங்கே தருகிறோம். இருள் சூழ்ந்திருக்கும் அதிகாலையில் கோலம் போடுவதைத் தவிர்த்துவிட்டு, நன்றாக விடிந்தபிறகே கோலமிடுங்கள். கூடுமானால் சூரிய வெளிச்சம் வந்த பிறகு கோலம்போடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். இல்லை, நாங்கள் அதிகாலையில்தான் கோலமிடுவோம் என்பீர்கள் எனில், துணைக்கு வீட்டு ஆண்களை உடன் வைத்துக்கொள்ளவும். உங்கள் கழுத்தை சேலைத் தலைப்பு, துப்பட்டா, டர்க்கி டவல் போன்றவற்றில் ஒன்றைச் சுற்றிக்கொள்ளும். உங்கள் வீட்டு வாசலில் போதிய வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு சக்கர வாகனத்திலோ நடந்தோ உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தாலோ குடிக்கக் தண்ணீரோ அல்லது முகவரியோ கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும். முகத்தை மறைத்து பனிக்குல்லா, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் யாரேனும் உங்களை நெருங்கினால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் வீட்டின் முகப்பில் cctv கேமரா, ஆபத்துக்கால அலாரம் வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்'' என்று அறிவுரை வழங்கினார்.

உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி ரிப்பேர் ஆகிறதா? அதற்கான 5 காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

By உமா பார்வதி  |   Published on : 15th December 2017 04:47 PM
girl

கணவன் மனைவி தகறாரில் முன்பெல்லாம் சட்டி பானைகள்தான் உடைந்து கொண்டிருந்தன. நவீன வாழ்வியலில் இப்பிரச்னைக்கு இலக்காவது மொபைல் ஃபோன்தான். கோபத்தில் ஃபோனை தூக்கி எறிவதும், அதை ஆயுதமாகவும் பயன்படுத்துவதும் வீட்டில் சாதாரணமாக நடக்கும் விஷயமாகிவிட்டது.


சண்டை முடிந்த நிலையில் கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு  புதிய மொபைல் வாங்கித் தந்து சமரசம் ஆவதும் அழகுதான். 
வேடிக்கையோ உண்மையோ, இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி இவ்விதமாக இருக்கிறது. மொபைல் ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதைப் பயனாளிகள் மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது
சிலருக்கு சார்ஜ் நீடித்து வராது, ஃபோன் மிகவும் சூடாகும், பேட்டரி விரைவில் பழுதாகிவிடும், அல்லது ஃபோனை அடிக்கடி கீழே போட்டு டிஸ்ப்ளேயை உடைத்துக் கொள்வார்கள். இது போன்ற செயல்களால் அந்த ஃபோனில் உள்ள அதன் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேரை பாதிப்படையும்.
நம் மீது பிரச்னையை வைத்துக் கொண்டு என்ன ஃபோன் இது, ஒரு வருஷம் கூட உருப்படியா வேலை செய்ய மாட்டேங்குது என்று நிறுவனத்தை குறை சொல்பவர்கள்தான் அதிகம். இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்று பார்க்கலாமா?
ஃபேன்ஸி கவர் வேண்டாம்!

நீங்கள் பார்த்து தேர்ந்தெடுத்து, மனத்துக்குப் பிடித்த பின்னர் வாங்கிய பொருள் அல்லவா உங்கள் மொபைல் ஃபோன்? அதற்கு நிச்சயம் உரிய பாதுகாப்பு தேவைதான்.
அதற்குரிய பாதுகாப்பு கவசத்தை உடனடியாக அதே சைஸில் வாங்குவீர்கள் அல்லவா? அதுவும் கூட சரிதான். ஆனால் அப்படி வாங்கிய கவர்கள் மிகவும் ஃபேன்ஸியாகவோ, ப்ளாஸ்டிக் அல்லது மெட்டலில் மலிவு விலையில் வாங்கிப் போடும் போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யும்போது, அதிகப்படியாக வெப்பத்தை அவை உள்வாங்கிவிடும். இது உங்கள் அலைபேசிகளுக்கு தீங்கு விளைவிக்கும். சிறிது சிறிதாக உங்கள் மொபைல் ஃபோனை செயல் இழக்கவைத்துவிடும்.




எப்போதும் தரமான செல் ஃபோன் கவர்களைப் பயன்படுத்துவது நல்லது. அதிக கனமானதையும் தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு சில சமயம் இது குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை கடைக்காரர் அல்லது நண்பரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. மாறாக விளம்பரங்களைப் பார்த்து கவரும்விதமாக இருக்கிறது என்று வாங்கி பயன்படுத்தி, கடைசியில் முதலுக்கே மோசம் எனும் நிலைக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டாம்.
மாதம் ஒரு முறையாவது இவ்வாறு சார்ஜ் செய்யுங்கள்

நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. ஃபோனில் சார்ஜ் முழுவதும் தீருவதற்குள் உடனே ப்ளக்கை மாட்டி ரீசார்ஜ் செய்து கொள்வோம். அல்லது நமக்கு நேரம் இருக்கும் போது, கொஞ்ச நேரம் சும்மாவே போனை சார்ஜில் போட்டுவோம். பயணத்துக்கு கிளம்பும் போதும் சார்ஜ் 80 சதவிகிதம் இருந்தாலும் மீதி இருபதையும் ஏற்றுக் கொள்ள நினைத்து சார்ஜை போடுவோம்.
ஆனால் இந்தப் பழக்கம் மொபைல் ஃபோனின் ஆயுளுக்கு ஒத்து வராத ஒன்று என்பதை மட்டும் தெரிந்து கொள்ள மாட்டோம். காரணம் ஒவ்வொரு தடவை நீங்கள் சார்ஜ் செய்யும் போதும் உங்கள் மொபைல் சூடாகும். அடிக்கடி சார்ஜ் செய்தால் ஒருகட்டத்தில் பேட்டரி வீக்காகி பழுதடைந்துவிடும். மொபைலில் 50 சதவிகிதம் வருவதற்குள் நீங்கள் மூன்று அல்லது நான்கு தடவை சார்ஜ் செய்துவிடுவீர்கள். 20 சதவிகிதம் வந்தபிறகு சார்ஜ் செய்வது கூட பரவாயில்லை. ஃபோனில் முழுவதும் சார்ஜ் தீர்ந்தவுடன்தான் அதில் மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும். ரீ சார்ஜ் என்பதன் அர்த்தமும் அதுதான்.

மாதம் ஒருமுறையாவது உங்கள் ஃபோனில் சார்ஜ் முற்றிலும் குறைந்து பூஜ்ஜியத்துக்கு வந்த பின்னர், அதை சார்ஜ் செய்யுங்கள். இதனால் பேட்டரி நீடித்து வரும். அடிக்கடி ஃபோனில் சார்ஜ் வடிந்து போகாமல் மொபைலில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும்.

நீண்ட நேரம் சார்ஜரை மின்சார இணைப்பில் வைத்திருக்காதீர்கள்

சிலர் இரவில் மொபைல் ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கி விடுவார்கள். காலையில்தான் அதன் ஸ்விட்சை அணைப்பார்கள். உங்கள் மொபைல் போனில் பேட்டரி பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதன் காரணம் தேவைக்கும் அதிகமான நேரம் மொபைல் சார்ஜில் இருப்பதால்தான்.


சில ஃபோன்களின் மாடல்களில் பேட்டரியை வெளியில் எடுக்க முடியாது. அது போன்ற மொபைல் ஃபோன்களை அதிக நேரம் சார்ஜில் வைத்திருக்கையில் நிச்சயம் ஃபோன் சூடாகி உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அடுப்பில் பாலை காய்ச்சும் போது கவனமாக அதன் அருகிலேயே இருப்போம். பால் பொங்கி வழியாமல் தடுக்க உரிய நேரத்தில் அடுப்பை அணைத்துவிடுவோம் அல்லவா? போலவே சார்ஜ் போடும்போதும், அந்த அளவுக்கு இல்லையென்றாலும் 100 சதவிகிதம் சார்ஜ் ஏறியதும் உடனடியாக ஃபோனை சார்ஜிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். அது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும்.

தரமான இணைச் சாதனங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்

பெரும்பாலான மக்கள் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் மலிவான மொபைலுக்குத் தேவையான இணை சாதனங்களையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு நிறுவன ஸ்மார்ட் போன்களும் வெவ்வேறு மின்னழுத்தத்தை வழங்கக் கூடியதாக இருக்கும். மொபைல் ஃபோனுடன் சேர்த்து வாங்கும் சார்ஜர் தொலைந்துவிட்டால், சில சமயம் சந்தையில் கிடைக்கும் மலிவான சார்ஜர்களை அவசரமாக வாங்கிவிடுவோம்.

ஆனால் அவை உங்கள் ஃபோனுக்கு பொருத்தமில்லாத வேறு தர மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். அவை ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனிற்காக உருவாக்கப்படவில்லை, எல்லா சாதனங்களுக்கும் பொருந்தும்படியாக பொத்தாம்பொதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே அவை எந்த சாதனத்திற்கும்  குறிப்பாக பொருத்தமானதாக இருக்க முடியாது. 

அந்தந்த ஃபோனுக்குரிய சார்ஜரையே அதற்குப் பயன்படுத்த வேண்டும். சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கிறது என தரமற்ற சார்ஜர்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு ஃபோனுக்கும் மின்சார சப்ளை இந்தளவுக்கு இருக்க வேண்டும் என்ற குறிப்பு இருக்கும். ஆனால் அதை விடுத்து வேறு அளவில் இருந்தால் நாளாவட்டத்தில் அது பிரச்னை தர ஆரம்பித்துவிடும். 


சாஃப்ட்வேர் அப்டேஷன்

சாஃப்ட்வேர் அப்டேஷன் செய்து கொள்கிறீர்களா என்று அடிக்கடி உங்கள் ஃபோனில் ஒரு மெசேஜ் வருகிறதா? ஓசியில் கிடைக்கிறதே என்று எந்த அப்டேட்ஸ் வந்தாலும் அதற்கு ஓகே கொடுத்துவிடக் கூடாது. அப்டேஷன் சில சமயம் நல்லதுதான். ஆனால் 17 அப்டேஷன்கள் கிடைத்தால் ஒட்டுமொத்தமாக அதை செய்யும் போது உங்கள் ஃபோன் ஓவர் ஹீட்டாகிவிடும்.
தவிர லேட்டஸ்ட் வெர்ஷன் என்று சில அப்டேட்டுக்கள் தரவிறக்கமாகும் ஆனால் உங்கள் போனில் அதற்கான வசதி இல்லாமல் போனால் பிரச்னைதான். மேலும் வைரஸ், பக்ஸ் போன்ற அழையா விருந்தாளிகள் உங்கள் மொபைல் ஃபோன்களில் தஞ்சம் அடைந்தால் விரைவில் அது மென்பொருளை அழித்து உங்கள் ஃபோனை குட்டிச்சுவராக்கிவிடும். தேவையில்லாத ஆப்களை டவுன் லோட் செய்யாமல் இருப்பதும் உங்கள் மொபைல் ஃபோனின் ஆயுள் நீடித்திருக்கச் செய்யும் ஒரு வழியாகும்.




நீரின்றி அமையாது உலகு, போலவே ஃபோனின்றி இயங்காது அன்றாட வாழ்வு என்று இயந்திரம் சூழ் வாழ்நிலையில், நாம் பாடுபட்டு வாங்கிய மொபைல் ஃபோன்களை பத்திரமாக பாதுகாப்பது நமக்கும் நல்லது, நம் பர்ஸுக்கும் நல்லது.

MCI approves shifting of Chintpurni students BFUHS invites them for counselling on Dec 18

Tribune News Service

Faridkot, December 13

After over a week’s protest by 249 MBBS students of now-defunct Chintpurni Medical College and Hospital, the Oversight Committee (OC) of the Medical Council of India (MCI) and the Union Health Ministry today gave their nod to the shifting of these students to other medical colleges in the state.

The Baba Farid University of Health Sciences (BFUHS) invited all 249 students of 2014 and 2016 batches at Guru Gobind Singh Medical College, Faridkot, on December 18 for counselling. “The counselling process has been started as per the directions of the Department of Medical Education and Research (DMER),” said Dr SP Singh, Registrar, BFUHS.

 Dr Sushil Garg, president of the Chintpurni Medical College Parents’ Association, said after approval by the OC, the Union Health Ministry also gave its nod to the shifting as per the orders of the Punjab and Haryana High Court. Demanding expeditious approval of their shifting, after it was ordered by the High Court on September 8 and approved by the executive committee of the MCI on November 22, 249 students decided to camp in New Delhi last week till the OC and the Union Health Ministry gave their approval to shifting

. While 101 students of the 2014 batch will be shifted only to three government colleges in the state, 148 students of the 2016 batch will be shifted to government and private colleges as per their allotment on quota seats in Chintpurni college.
ஆங்கிலம் அறிவோமே 190: இந்த வலையில் சிக்கிடாதீங்க!

Published : 12 Dec 2017 15:22 IST


ஜி.எஸ்.எஸ்.



கேட்டாரே ஒரு கேள்வி

“தாய் மொழியில் நிறுத்தக் குறிகளே கிடையாதாமே!”.

உங்கள் தாய்மொழி தமிழ் என்றால் அதில் நிச்சயம் நிறுத்தக் குறிகள் (Punctuation marks) உண்டு. ஆனால், நீங்கள் தாய்லாந்தின் முக்கிய மொழியான தாய் மொழியைக் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த மொழியில்கூட நிறுத்தக் குறிகள் உண்டு, ஆனால், மிகக் குறைவாம். வார்த்தைகளுக்கிடையே இடைவெளிகூட அவசியமில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளிகூட இல்லாமல் வாக்கியங்களை அவர்கள் எப்படி அமைக்கிறார்கள் என்பதை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

“என் கணினியில் ஏதோ பிரச்சினை என்று அதைச் சரிசெய்யச் சொன்னால் என் மகன் ‘பிக்னிக்’ என்று நமட்டுச் சிரிப்போடு சொல்கிறான். பிக்னிக் என்றால் சுற்றுலா என்றுத் தெரியும். அதற்கு வேறு ஏதாவது அர்த்தம் உண்டா? அகராதியைத் தேடியும் பயனில்லை” என்கிறார் ஒருவர்.

கிண்டல் சிரிப்புக்குப் பின்னணி இதுதான். PICNIC என்பதன் விரிவாக்கம் Problem In Chair, Not In Computer. அதாவது கணினியில் அல்ல, உங்களிடம்தான் பிரச்சினை!

“ஒரு வார்த்தைக்குப் பதிலாக அதே அர்த்தம் கொண்ட வேறு வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத்தானே thesaurus என்பது உதவுகிறது?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Thesaurus என்பது ஒரு வார்த்தையின் சம அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் எதிர் அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் அளிக்கும் நூல். ஆனால், அவற்றிலுள்ள சமவார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, Vision என்றாலும் sight என்றாலும் ஒரே பொருள்தான் – பார்வை. ஒன்றின் சம வார்த்தையாக இன்னொன்று thesaurus-ல் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஒருவரை “He is a visionary” எனும்போது அது அவருக்கான பெரிய பாராட்டு. தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று இதற்குப் பொருள். Vision என்றாலும் Sight என்றாலும் ஒன்றுதானே என்ற எண்ணத்தில் He is a sight என்று நீங்கள் கூறிவிட்டால் சம்பந்தப்பட்டவர் உங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்காமல் போகலாம். அது அவரை அவமானப்படுத்துவதுபோல. பேச்சு வழக்கில் ‘அவர் ஒரு ஜந்து’ என்று கிண்டலாகக் குறிப்பிடுவதைப் போன்றது அது.

அதேபோல see என்பதற்கான சம வார்த்தை look. ஆனால், oversee என்றால் surpervise செய் என்று அர்த்தம். Overlook என்றால் அலட்சியம் செய்துவிடு என்று அர்த்தம்.

“He was high” என்பது ஒருவரைக் கேலி செய்யும் வாக்கியம்தானே?

மதுவின் ஆதிக்கத்தில் ஒருவர் இருப்பதை “He was high” என்று குறிப்பிடுவதை மட்டுமே கவனித்துவிட்டு இப்படிக் கேள்வி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.

He was high என்பது மனநிலையைக் குறிக்கிறது. அவர் அப்போது ஒருவிதப் பரவச நிலையில் இருக்கிறார் என்று மட்டுமே பொருள். அவருக்கு மிகவும் பிடித்த அரிய வகைப் பாட்டு ஒன்றைக் கேட்டிருக்கலாம். அவரது கடிதம் ஒன்று நாளிதழில் பிரசுரமாகி இருக்கலாம். அவருடைய சகோதரர் வெளிநாட்டிலிருந்து அடுத்த வாரம் வீடு திரும்புவதாகத் தகவல் கூறி இருக்கலாம் (இந்தப் பட்டியலில் “அவர் மது அருந்தி இருக்கலாம்’’ என்பதற்கும் இடம் உண்டுதான்). எனவே, when somebody is high அவர் குடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

Fishing என்றால் மீன் பிடித்தல். Phishing என்றால்?

இதுவும் ஒருவிதத்தில் ‘வலை வீசுவதுதான்’. வலைத்தளத்தில் வலை வீசப்படுகிறது.

உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்து சேரும். நம்பகமான ஒருவரிடமிருந்து வந்ததுபோல அது தோற்றம் அளிக்கும். இதைப் படித்துவிட்டு நீங்கள் உங்கள் அந்தரங்கமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள் அல்லது நீங்கள் பலவிதங்களில் செய்திருக்கும் முதலீடுகள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்வீர்கள். இவற்றால் உங்களுக்கு வருங்காலத்தில் சிக்கல்கள் ஏற்படும். சில நேரம் இந்த மோசடி மின்னஞ்சல்களில் குறிக்கப்பட்டிருக்கும் வலைத்தளத்தை கிளிக் செய்துவிட்டாலே நம் கணினிகளின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய malware அதில் புகுந்துவிடும்.

இதுபோன்ற மோசடியை முகம் தெரியாத பலரும் நடத்துகிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரையோ நிறுவனத்தையோ குறிவைத்து இந்த மோசடி நடைபெற்றால் அதை Spear Phishing என்று குறிப்பிடுகிறார்கள்.


போட்டியில் கேட்டுவிட்டால்?

It has now been _________ that 120 people died in the air crash.

(a) Assured

(b) Confirmed

(c) Ensured

(d) Accepted

(e) Afraid

விமான விபத்தில் 120 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் இந்த வாக்கியத்தின் அர்த்தம்.

Afraid என்ற வார்த்தை இங்குப் பொருந்தவில்லை. காரணம், it is என்று வாக்கியம் தொடங்கவில்லை. It has now been என்று தொடங்குகிறது.

Assured, ensured போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அதன் அர்த்தம் விபரீதமாக இருக்கிறது. ஏதோ அந்த விமான விபத்தில் 120 பேர் இறந்தாக வேண்டுமென்று உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதுபோல் தொனிக்கிறது.




மீதமிருக்கும் வார்த்தைகளான confirmed, accepted ஆகியவற்றைப் பார்ப்போம். ஏதோ ஒரு அமைப்பு ‘120 பேர் இறந்ததாக’ கூறியிருந்து அதைப் பிறர் (அல்லது யாரோ) ஏற்பதாக இருந்தால் accepted பொருந்தலாம். அப்படி இங்கு எதுவுமில்லை.

விமான விபத்து நடந்து அதில் எவ்வளவு பேர் இறந்தனர் என்று தெரியாத நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, confirmed என்ற வார்த்தை இங்கே பொருந்துகிறது.

It has now been confirmed that 120 people died in the air crash.

“Else என்ற வார்த்தைக்கு என்னதான் பொருள்?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார் ஒரு வாசக நண்பர்.

I spoke to Karthick but I did not talk to anyone. இந்த வாக்கியம் தவறானது. அதன் முதல் பகுதி “நான் கார்த்திக்கிடம் பேசினேன்” என்று உள்ளது. அந்த வாக்கியத்தின் இரண்டாவது பகுதி “நான் யாரிடமும் பேசவில்லை” என்கிறது. இரண்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்?

நான் கார்த்திக்கைத் தவிர வேறு யாரிடமும் பேசவில்லை - இதுதான் கூறவந்த தகவல். இதை ஆங்கிலத்தில் கூற வேண்டுமானால் ‘else’ என்ற வார்த்தை தேவைப்படுகிறது.

I spoke to Karthick but I did not talk to anyone else.

விஜயகுமார் கல்லூரிக்குக் கிளம்புகிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு “He is not at college. He must have gone somewhere” என்று சொல்லக் கூடாது. ஏனென்றால் ‘somewhere’ என்பதில் கல்லூரியும் அடக்கம்தானே? எனவே “He is not at college. He must have gone somewhere else” என்றுதான் சொல்ல வேண்டும்.

Label என்பது பள்ளிப் பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகங்களின் அட்டையில் ஒட்டப்படுவதுதானே?

அதுமட்டுமல்ல நண்பரே. பல பொருள்களை வாங்கும்போது அவற்றின்மீது ஒட்டப்பட்டிருக்கும் தாளில் அந்தப் பொருள் தொடர்பான பல தகவல்களை எழுதி இருப்பார்கள். இந்தச் சீட்டின் பெயர்கூட labelதான்.

Tittle என்றால் என்ன?

ஆங்கில எழுத்துக்களான ‘i’, ‘j’ ஆகியவற்றின் மேலே உள்ள புள்ளியைத்தான் அப்படிக் கூறுவார்கள். மிகக் குறைந்த தொகையையும் அப்படிக் குறிப்பிடுவதுண்டு.

You should not be enviable of others’ progress. சரிதானே?

மற்றவரின் முன்னேற்றத்தைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், enviable என்ற வார்த்தைக்குப் பதிலாக envious என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

ஆளுமை மேம்பாடு: திட்டமிடல் எல்லாமே எளிதுதான்!


நேரமில்லை என்று சொல்வதைப் பலர் பெருமையாக எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் அது அவர்களது குறை என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனென்றால், காலம் யாருக்கும் எந்தச் சலுகையும் அளிப்பதில்லை. 
“பிறகு நான் ஏன் நேரமின்மையால் படிக்க அவதிப்படுகிறேன்?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பதுதான் அதற்கான பதில். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொள்வது மிகவும் எளிது. எளிய வழிமுறைகள் மூலம் நீங்கள் நேரத்தைக் கைவசப்படுத்தலாம்.

நேர மேலாண்மை என்பது என்ன?

நம்முன் இருக்கும் செயல்களை அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப வரிசைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒவ்வொரு செயலையும் முடிக்க ஆகும் நேரத்தைக் கணித்து, தகுந்த நேரத்தை அவற்றுக்கு ஒதுக்க வேண்டும். பின் அந்தச் செயல்களை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு செயலை அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் சரியான முறையில் செய்து முடிப்பதுதான் நேர மேலாண்மை. இந்த நேர மேலாண்மை மாணவர்களுக்குப் படிப்பில் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழ்வின் லட்சியம்

உங்கள் வாழ்வின் லட்சியம் எது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஐந்து வருடங்கள் கழித்து என்னவாக இருப்பீர்கள் என்று நினைப்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எதை அடைய வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் நம் பாதையும் பயணமும் தெளிவடையும்.

படிக்கும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்

படிக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக அடுக்கிவையுங்கள். பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றைப் படிக்கும் மேஜை மேல் பரத்தி வைக்காமல், அதற்கான பெட்டியில் அடுக்குங்கள். இவற்றின் மூலம் தேடுவதில் நேரம் விரயமாகாமல் தடுக்கலாம்.

திட்டமிட்டுப் படித்தல்

எந்தப் பாடம் முக்கியமானது, எதை முதலில் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். உங்கள் பாடத்திட்டத்தைக் கவனமாக ஆராயுங்கள். பாடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு மதிப்பெண் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். பின், இந்தப் புரிதலின் அடிப்படையில் எப்படிப் படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அட்டவணை தயார்செய்யுங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். எப்போதும் கடினமான பாடத்தை முதலில் படிக்க ஆரம்பியுங்கள். அதிலிருந்து படிப்படியாக எளிதான பாடத்தைப் படிக்கச் செல்லுங்கள். ஏனென்றால், மூளை சுறுசுறுப்பாக இருக்கும்போது அது கடினமான பாடத்தை எளிதில் கிரகித்துக்கொள்ளும், தினமும் அன்று படித்ததை மீண்டும் வாசிப்பதற்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

பாராட்டுங்கள்

ஒவ்வொரு நாளும் நீங்கள் படித்து முடித்த பாடங்களை அட்டவணையில் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் திட்டமிட்டபடி அந்த நாளில் படித்து முடித்திருந்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொள்வது மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கும்.

நொறுக்குத் தீனி வேண்டாமே!

படிக்கும்போதே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பர்கர், பீட்சா, நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிருங்கள். அது உங்கள் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தூக்கத்தையும் வரவழைக்கும். அதற்குப் பதில் பழங்கள், சாலட் போன்றவற்றைச் சாப்பிடலாம். இது உங்களைக் களைப்படையாமல் பார்த்துக் கொள்ளும்.

கவனச் சிதறலைத் தவிர்த்தல்

நீங்கள் படிக்கும் அறையில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பும் எதுவும் இல்லாமல் இருக்குபடி பார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக, பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவை இருக்கக் கூடாது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படிப்பதில் எந்தப் பயனுமில்லை. படிக்கும் நேரத்தில் படிப்பைத் தவிர எதற்கும் இடமில்லை என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.

கைபேசியைத் தவிர்த்தல்

நண்பர்கள் எங்கும் ஓடிவிடப் போவதில்லை. நீங்கள் சிரத்தையுடன் படித்து நன்றாகத் தேர்வு எழுதிய பின்னும் அவர்கள் இருக்கத்தான் போகிறார்கள். எனவே, படிக்கும் நேரத்தில் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளியுங்கள், நண்பர்களுடன் கைபேசியில் உரையாடுவது உங்கள் நேரத்தை வீணாக்கிவிடும் என்பதை மறக்கலாகாது. பாடம் தொடர்பான தவிர்க்க முடியாத உதவிக்கு கைபேசியைப் பயன்படுத்தலாம்.

வெளிச்சமும் காற்றோட்டமும்

படிக்கும் அறையை நல்ல காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் வைத்து கொள்ளுங்கள். காற்றோட்டம் மூளையையும் மனதையும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும். கண்கள் எளிதில் களைப்படையாமல் வெளிச்சம் பார்த்துக்கொள்ளும்.

இடை ஓய்வு

படிப்புக்கு இடையே ஓய்வுக்கு என்று தகுந்த நேரத்தை ஒதுக்குங்கள். எந்நேரமும் படித்துக்கொண்டிருந்தால் மூளை ஆற்றல் மங்கிவிடும். மேலும், மனதின் உள்வாங்கும்தன்மை குறையும். இதனால், படிப்பின் மீது வெறுப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஓய்வு என்பது தொலைக்காட்சி பார்ப்பதோ வீடியோ கேம்ஸ் விளையாடுவதோ அல்ல. ஏனென்றால், அவை மூளையை மேலும் களைப்படையச் செய்யும். சொல்லப்போனால், அதன் தாக்கம் நாம் படிக்கும்போதும் தொடரும். எனவே, முடிந்த அளவு அந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது விளையாட்டில் ஈடுபடுங்கள். இல்லையென்றால் காலாற நடந்துவிட்டுத் திரும்புங்கள்.

காலம் பொன் போன்றது

‘காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. மாணவப் பருவத்தில் படிப்பதுதான் முக்கியக் கடமை. எனவே, அந்தப் படிப்பை எப்போதும் முதன்மை விருப்பமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கும். நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும்.

கும்பகோணம் ஸ்பெஷல்



கடப்பா
கும்பகோணம் கடப்பா என்பது சாம்பார்போல இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குச் சேர்த்துக்கொள்ளும் ஒருவகை தொடுகறி. கும்பகோணத்தில் உள்ள ஒரு சில உணவகங்களில் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே கடப்பா கிடைக்கும். அதற்காகவே அந்த நாளைத் தேர்வுசெய்து உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும் பிரியர்கள் உண்டு.

கும்பகோணம் கடப்பாவை வீட்டிலும் செய்யலாம் என்பதோடு அதைச் செய்யக் கற்றுத்தருகிறார் குடந்தை கலைச்செல்வி. இதற்குத் தேவையான பொருட்கள்: கேரட் - 2, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, உருளைக் கிழங்கு - 3, பச்சைப் பட்டாணி - 100 கிராம், பச்சை மிளகாய் காரத்துக்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சி, பூண்டு, தேங்காய், உப்பு ஆகியவை நமக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளலாம்.

உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணியை அவித்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பூண்டு, தேங்காய், இஞ்சி ஆகியவற்றை மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வதக்கிக்கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துவைத்துள்ள இஞ்சி, பூண்டு, அவித்துவைத்துள்ள உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி, கேரட் ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் சிறிது நேரம் கொதிக்கவிட்டால் கடப்பா தயார்.

திருமால் வடை
கும்பகோணம் பகுதியில் திருமால் வடை, பிரசித்திபெற்றது. இந்த வடையை ருசிப்பதற்காகவே சனிக்கிழமைதோறும் வடை பிரியர்கள் காந்தி பூங்கா அருகே உள்ள உணவகத்துக்கு வந்து செல்வார்கள். 50, 60 வடைகள்தான் சுடுவார்கள். ஆனால், உடனே விற்றுப்போகும்.

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து - அரை கிலோ
மிளகு - 20 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

உளுந்தை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் பின்னர் தண்ணீர் வடித்து அரைத்துக்கொள்ளுங்கள். முழுமையாக உளுந்து மசியக் கூடாது. அரைபதத்துக்கு அரைத்தால் போதும். இதோடு மிளகையும் காரத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் இருக்கக் கூடாது. தேவையான அளவு உப்பு சேர்த்து, மாவைச் சூடான எண்ணெய்யில் பெரிதாகத் தட்டிப்போட்டு நன்கு வெந்ததும் எடுத்துவிடுங்கள். அரை கிலோ உளுந்துக்குப் பத்து வடைகள் வரை கிடைக்கும். இவை முறுக்குபோல் மொறுமொறுவென இருக்கும்.
படங்கள்: ரவி
முகம் நூறு: கைகளே மூலதனம்

Published : 10 Dec 2017 10:36 IST




பழம்பெரும் கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் சுவைமிகு அப்பளத்துக்கும் பெயர்பெற்ற ஊராக மாறிவருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களாலேயே இது சாத்தியமானது.

காஞ்சிபுரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பளத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 70 சதவீதத்தினர் பெண்கள்.

வருமானத்தை விழுங்கும் இடு பொருட்கள்

அப்பள நிறுவனங்கள், உளுந்து மாவை மட்டும் வாங்கி முகவர்கள் மூலம் இவர்களுக்குக் கொடுத்துவிடுகின்றனர். நிறுவனம் கொடுக்கும் 100 கிலோ மாவுக்கு அரிசி மாவு உள்ளிட்ட துணைப் பொருட்களைச் சேர்த்து அப்பளமாகச் செய்து 120 கிலோ அப்பளத்தை இந்தத் தொழிலாளர்கள் முகவரிடம் கொடுக்கின்றனர். அதைத் தரம்பார்த்து நிறுவனங்கள் விற்பனைக்கு அனுப்புகின்றன.

பல பிரபல நிறுவனங்களின் பெயர்களில் வரும் சுவை மிகுந்த அப்பளங்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்களின் கைவண்ணத்தில் உருவானவைதான். இந்தப் பெண்களுக்கு ஒரு கிலோ அப்பளம் செய்வதற்கு ரூ.70 கூலியாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 10 முதல் 14 கிலோ அப்பளம் செய்ய முடியும் என்று இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

“அப்பளம் செய்வதற்கு அரிசிமாவு, உப்பு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைச் சேர்க்க வேண்டியுள்ளது. இந்தப் பொருட்களை எங்களுக்குக் கிடைக்கும் கூலியில் இருந்து நாங்கள்தான் வாங்குகிறோம். 14 கிலோ அப்பளத்துக்கு எங்களுக்கு ரூ.980 கிடைத்தால் அதில் சுமார் 50 சதவீதத் தொகை இந்தப் பொருட்களுக்குச் செலவாகிவிடும்” என்கிறார் ஒலிமுகமதுபேட்டையைச் சேர்ந்த மகேஸ்வரி.


ஒலிமுகமதுபேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்ட அப்பளத்தைச் சுத்தம் செய்து அடுக்கும் பெண்கள்

தொழிலதிபர்களாகும் விருப்பமும் வாய்ப்பும்

மூலப் பொருட்களை வாங்கி உழைப்பைச் செலுத்தித் தயாரிக்கும் அப்பளங்களை அவர்களே விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்தப் பெண்கள் பலர் விரும்புகின்றனர்.

கூட்டுறவு நிறுவனங்களைத் தொடங்கி அப்பளத் தொழிலுக்கும் விற்பனை வாய்ப்பை உருவாக்கும் யோசனையும் சில பெண்களிடம் உள்ளது.

“ஒரு கிலோ உளுந்து மாவு ரூ.100, ஒரு கிலோவுக்கு கூலி ரூ.70. என ரூ.170 செலவில் இடுபொருட்களுடன் சேர்த்து 1.2 கிலோ அப்பளம் செய்யப்படுகிறது. இந்த அப்பளத்தின் விலை தரத்துக்குத் தகுந்தாற்போல் கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. எங்களுக்கு விற்பனை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் தொழிலாளர்களாக இருக்கும் நாங்கள் தொழிலதிபர்களாகும் வாய்ப்புகள் உள்ளன” என்று அவர்கள் சொல்வதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.

அப்பளம் தயாரிக்கும் தொழிலுக்கு இயந்திரங்கள் ஏதும் தேவையில்லை. தங்கள் சொந்தக் கைகளை நம்பியே பெண்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். முதலீடு என்று பார்த்தால் உளுந்து மாவும் அரிசி மாவும் மட்டும்தான். இவர்களுக்கு அரசு கூட்டுறவு நிறுவனங்களைத் தொடங்க, சிறுதொழில் கடன்களை வழங்கி, விற்பனை வாய்ப்புகளை உருவாக்கினால் அப்பளத் தொழிலாளர்களின் மையமாக இருக்கும் காஞ்சிபுரம் அப்பள உரிமையாளர்களின் மையமாக மாறும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.




காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

கவனம் கோரும் பிரச்சினைகள்

நிறுவனங்களுக்கு அப்பளங்களைச் செய்து கொடுக்கும் பெண்களிடம், சில முகவர்கள் ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் எனக் கடன் தந்துவிட்டு அதற்காக மிகக் கடுமையான உழைப்பை வாங்கிக்கொள்வதாகச் சிலர் குற்றம்சாட்டுக்கின்றனர். இதனால் பலர் ஓய்வில்லாமல் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மழைக்காலங்களில் அப்பளம் காய வைக்க இடம் கிடைக்காதது உள்ளிட்ட சிக்கல்களாலும் இவர்களது தொழில் பாதிக்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

பெண்ணுக்கு நீதி 13: பெண்களுக்கு எதிரான அக்னிக் குழம்பு

‘நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றுகூட அல்ல. ‘வேறு யாரையும் நான் காதலிக்கவில்லை’ என்றாவது எழுது எனக்கொரு கடிதம்’என்ற வாட்ஸ் அப் தகவலை உதாசீனப்படுத்தியதுதான் அனிதா செய்த ஒரே குற்றம். அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் அவள் மேல் அமிலத்தை வீசினான். அமிலம் அவளது முகத்தைப் பொசுக்கியது. இமைகள், காது, மூக்கு என்று முகம் முழுவதும் சிதைந்து அவள் உயிர் பிழைப்பதே சிரமமானது.

நரகமாகும் வாழ்க்கை

அமில வீச்சு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒரு வகை. பெண்களுக்கெதிரான அனைத்து வகை பேதங்களையும் களைவதற்கான உலகளாவிய ஒப்பந்தத்தின்கீழ் (CEDAW) இதுவும் பாலியல்ரீதியிலான பாகுபாட்டின் அடிப்படையிலான குற்றமே.
உலகிலேயே அமில வீச்சு அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லை கடந்து உலகம் முழுவதற்கும் பொதுவானவையாகவே இருக்கின்றன. இந்தக் குற்றங்களைப் பொறுத்தவரையில் வங்கதேசம், கம்போடியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவைவிட மோசம். இதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் 14 முதல் 35 வயது வரையிலான பெண்களாகத்தான் இருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள ஆண் வெளிப்படுத்தும் ஆசையை நிராகரிப்பது, காதலர்களாகப் பழகிய பின் திருமணத்துக்கு ஏதோவொரு காரணத்தால் மறுப்பு சொல்வது, பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பது/தவிர்ப்பது போன்றவை இதற்குக் காரணங்களாக இருக்கின்றன.

அமில வீச்சுக்களால் பெண்களின் அடையாளம் அழிக்கப்படுகிறது. ஆளுமையும் தன்னம்பிக்கையும் ஒடுக்கப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அமில வீச்சுக்குப் பிறகு மீண்டும் சராசரி வாழ்க்கையைத் தொடரும் வாய்ப்பே பல பெண்களுக்கு இல்லாமல் போகிறது. அமில வீச்சின் பின்விளைவுகளை அன்றாடம் அனுபவிக்கும் பெண்மனம் தினம் தினம் இறப்புக்கு நிகரான வேதனையை அனுபவிக்கிறது.

டெல்லி கூட்டு வன்புணர்வு வழக்குக்குப் பிறகு அமில வீச்சு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வரையறுக்கப்பட்ட குற்றங்களாகக் கருதி, புதிய சட்டப் பிரிவுகள் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன (இ.த.ச 326 ஏ).

வழிகாட்டும் நெறிமுறைகள்

அமில வீச்சில் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கான உடனடித் தேவைகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் 2015-ல் வழிகாட்டும் நெறிகளை வழங்கியுள்ளது. அதன்படி, ‘தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முழுமையான மருத்துவ வசதி அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனை என்பதால் மட்டும் இத்தகையவர்களுக்குச் சிகிச்சையளிக்க மறுக்கக் கூடாது. அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண், முதன்முதலில் சிகிச்சைக்குச் செல்லும் மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு அமில வீச்சுக்கு உள்ளானவர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும். அந்தச் சான்றிதழை அவர் மேல் சிகிச்சையைத் தொடரவும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இது தொடர்பாக மாநில அரசு வழங்கக்கூடிய ஏனைய திட்ட உதவிகளைப் பெறவும் பயன்படுத்தப்படலாம்’ என்று விரிவான விதிமுறைகளை அளித்தது.

நிவாரணத்துக்கான உத்தரவுகள்

மேலும் மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல் துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் போன்றோரையும் உள்ளடக்கிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், அந்த மாவட்டத்துக்கான நிவாரண வாரியமாகச் செயல்பட்டு, அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரண தொகையை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தவிர அமில வீச்சு குற்றத்துக்கு தண்டனை பெறும் குற்றவாளிக்குத் தண்டனையுடன் சேர்த்து அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அபராதத் தொகையை நிர்ணயிக்கும்போது அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மருத்துவ செலவைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் இந்திய தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அமில வீச்சு மூலம் பெண்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் குற்றவாளிகளுக்கு எத்தனை வழக்குகளில் தண்டனை கிடைக்கிறது?

பாதுகாப்பு அவசியம்

இத்தகைய குற்றங்களுக்கெதிரான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் வழக்குகளின் விகிதம் ஏன் குறைவாகவே இருக்கிறது என்பதற்குப் பலவித காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, அமில வீச்சுத் தாக்குதல் போன்ற குற்றங்களைப் புலன்விசாரணை செய்யும் காவல் துறையினர் அது பற்றிய முழுமையாக புரிதலோ விழிப்புணர்வோ இல்லாமல் இருக்கிறார்கள். மேலைநாடுகளில் இருப்பது போன்ற சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண், அமிலத்தால் அச்சுறுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக அமிலம் வீசிய குற்றவாளியாலும் அச்சுறுத்தப்படும் அவலம் நிகழ்கிறது. குறைந்தபட்சம் சாட்சி சொல்லும் சமயத்திலாவது பெண்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி சாட்சியம் அளிக்க உரிய இடத்தைப் பராமரிக்குமாறு வலியுறுத்தியிருக்கிறது

மனத் தடைகளை உடைத்தெறிவோம்

முக அழகு ஒன்றையே பெண்களின் முக்கிய மூலதனமாகக் கருதும் பொதுப் புத்தியும் ஆண்களின் உலகமும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வதில் சுணக்கம்காட்டுகின்றன. இத்தகைய பாரம்பரியமான மனத் தடைகளை உடைத்தெறிய வேண்டும். அமில வீச்சால் பெண்களின் அடையாளம் அழிக்கும் ஈனச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது, சட்டத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல, சமுதாயத்தின் கையில் தரப்பட்ட சாசனமும்கூட. அமிலம் வீச நினைப்பவர்கள் ஒரு விரலால் அதைத் தொட்டுப்பார்த்தாலேகூட, தான் செய்ய நினைக்கும் தவறைச் செய்ய மாட்டார்கள்.

(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com


மனைவியே மந்திரி: தோழியே மனைவி! - நடிகர் பிரசன்னா

Published : 10 Dec 2017 10:26 IST

தொகுப்பு: கா.இசக்கிமுத்து



சினிமா துறையில் இருந்து காதலித்து இணைந்த நானும் சினேகாவும் திருமணத்துக்கு முன்பே இரண்டு குடும்பங்களின் பிரச்சினைகளையும் பேசி முடித்துவிட்டோம். இருந்தாலும் பல குடும்பங்களில் இருப்பதுபோல் உரசல்கள், நெருடல்கள் இருக்கத்தான் செய்தன. அவற்றையெல்லாம் எனக்காகப் பொறுத்துக்கொண்டு தேவைப்படும்போது விட்டுக்கொடுக்கத் தயங்கியதே இல்லை அவர். சமீபத்தில் என் அப்பா, “நாங்களே உனக்குப் பெண் பார்த்துத் திருமணம் செய்துவைத்திருந்தால்கூட, உன் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கி இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பாரான்னு தெரியாது. சந்தோஷமா இருக்கு” என்றார். அந்த அளவுக்குக் குடும்பத்தையும் என்னையும் சினேகா பார்த்துக்கொள்கிறார்.

அம்மா என்பதில் ஆனந்தம்


 

மகன் விஹான் பிறந்த பிறகு அவரை முழுமையான தாயாகவே பார்க்கிறேன். முன்பு நினைத்த நேரத்துக்கு வெளியே சாப்பிடச் செல்வோம், காரில் சுற்றுவோம், வெளிநாடு செல்வோம். ஆனால், மகன் பிறந்த பிறகு அவன் இல்லாமல் சினேகாவால் இருக்க முடியாது. படப்பிடிப்புக்குக்கூட அவனைக் கூட்டிச்சென்று கொஞ்ச நேரம் வைத்துக்கொள்வார்.

வெளியூர் படப்பிடிப்பு என்றால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அழைத்து மகனைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார். விஹானுக்கு இரண்டரை வயதாகிறது. மகனை விட்டுவிட்டு சினிமாவுக்குக்கூட வர மாட்டார். அப்படியே வந்தாலும் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை வீட்டின் சிசிடிவி கேமரா வழியாகப் பையன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டிருப்பார்.

விஹானின் அம்மாவாக இருப்பதுதான் சினேகாவுக்குப் பிடித்த பொறுப்பு.

தளராத நம்பிக்கை

எனது வெற்றி - தோல்வி அவரை ரொம்பவே பாதிக்கும். வெற்றி கிடைக்கும்போது இருந்ததைவிட தோல்விகளின்போது என்னுடன் நின்றிருக்கிறார். என்னை எந்தவொரு இடத்திலும் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.

திருமணத்துக்குப் பிறகு ஒரு கட்டத்தில், “நான் நடிப்பதை நிறுத்தப் போகிறேன். எனக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்து என்னை வேறு மாதிரி மாற்றப்போகிறேன். அதுவரை எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை” என்றேன். எந்தவொரு கேள்வியுமே கேட்காமல் சரி என்று சொன்னார். 2016-ல் ‘திருட்டுப்பயலே -2’ படத்தில் ஒப்பந்தமாகும்வரை என்னிடம் அவர் எதுவுமே கேட்டதில்லை. நானே, “என்னம்மா, ஒன்றரை வருஷம் படம் எதுவுமே செய்யவில்லை.

ஒரு கேள்விகூடக் கேட்க மாட்டாயா?” என்று கேட்டேன். “உன் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது. நீ எவ்வளவு ஈடுபாட்டுடன் உடற்பயிற்சி செய்கிறாய் என்பதையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறாய். அந்த அர்ப்பணிப்பு வீணாகாது” என்றார். அவர் என்றைக்காவது ஒருநாள், “என்னப்பா படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லையா?” என்று கேட்டிருந்தால்கூட ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிருப்பேன்.




முழு மகிழ்ச்சியைப் பார்த்த நாள்

திருமணத்துக்கு முன்பு பிறந்தநாளை மற்றொரு நாளாகத்தான் பார்ப்பேன். ஆனால், திருமணத்துக்குப் பிறகு என் ஒவ்வொரு பிறந்தநாளையும் மறக்க முடியாத நாளாக மாற்றிவிடுவார். நான் ஒரு கைக்கடிகாரப் பைத்தியம். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவற்றை வாங்கிக் கொடுப்பார். அவரை எப்படியாவது ஆச்சரியப்படுத்த வேண்டும் என்று நானும் பலமுறை முயன்று தோற்றிருக்கிறேன். அவருக்கு கிறிஸ்தவ முறை திருமணம் பிடிக்கும். 2013-ல் அமெரிக்கா சென்றபோது அங்குள்ள நண்பரின் வீட்டில் எங்களின் கிறிஸ்தவ முறை திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்திருந்தேன். இது எதுவுமே அவருக்குத் தெரியாது. அந்தத் திருமணத்துக்காக அவருடைய அக்காவை இங்கிருந்து அவருக்குத் தெரியாமல் வரவழைத்தேன். சினேகாவின் முழுமையான சந்தோஷத்தை அன்று பார்த்தேன்.

சாம்பாரே பெரிய விருந்து

திருமணமான பிறகு வந்த என் முதல் பிறந்தநாளுக்கு வீட்டிலேயே கேக் செய்து கொடுத்து ஆச்சரியமளித்தார். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் அவரைச் சாம்பார் வைக்கச் சொல்வேன். அதுதான் எனக்குப் பெரிய விருந்து.

அவர் வெளிப்படையானவர். யாராக இருந்தாலும் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். ஆனால், யாரிடம் எதைச் சொன்னாலும் அதில் தேன் தடவியதுபோல மனம் வலிக்காத மாதிரி சொல்வார். அதுதான் அவரது சிறப்பு. வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்வார். எந்தப் பொருள் எங்கு இருக்க வேண்டுமோ, அங்குதான் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நினைப்பேன்.




புரிதலும் பிணைப்பும்

என்னைப் பற்றித் தவறான செய்திகள் பெரிதாக வந்ததில்லை. சில நேரம் காயப்படுமளவுக்கு ஏதாவது கிசுகிசுக்கள் வரும். அவற்றையெல்லாம் பெரிய விஷயமாக நானும் அவரும் எடுத்துக்கொள்வதில்லை. என்னைவிட வதந்திகளால் பெரிதாக அவர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால், திரையுலகம் எப்படி என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எங்களுக்குள் அப்படி ஒரு புரிதலும் பிணைப்பும் உண்டு. நான் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவரை அழைத்துப் பேசிவிடுவேன்.


நட்பே பிரதானம்

விழாக்களில் எங்கள் இருவரையும் சேர்த்துப் பார்க்கும்போது திரையுலகில் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். உதாரணத் தம்பதியாகப் பார்க்கப்படுவது பெருமையளிக்கிறது. ‘நமக்குள் வரக்கூடிய எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் மூன்றாவது நபரிடம் போகாக் கூடாது, அன்றைய பிரச்சினையை அன்றைக்கே முடித்துவிட வேண்டும், எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் பிரிவு பற்றி யோசிக்கக் கூடாது’ என்று பேசி உறுதியெடுத்துக்கொண்ட பின்தான் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். முதலில் நாங்கள் இருவரும் நண்பர்கள், பிறகுதான் கணவன்-மனைவி.
இளமை .நெட்: வேகத்தை அதிகரிக்கும் ஜிமெயில் ரகசியங்கள்!

Published : 24 Nov 2017 11:32 IST

சைபர்சிம்மன்




கூகுள் வழங்கும் ஜிமெயில் சேவை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜிமெயில் லேப்ஸ் தெரியுமா? அது வழங்கும் உப சேவைகளைப் பற்றி தெரியுமா? இந்த சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இமெயில் செயல்திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

‘சுவாரசியமான சோதனை விஷயங்கள்’ என்று ஜிமெயில் லேப்ஸ் பற்றி கூகுள் குறிப்பிடுகிறது. இது புதிய சேவைகளுக்கான சோதனைக்களம் எனப் புரிந்துகொள்ளலாம்.அனுப்பிய இமெயிலைத் திரும்பப் பெற வழி செய்யும், ‘அன்சென்ட்’ (Unsent) வசதி உள்ளிட்ட சேவைகள் இந்தச் சோதனைக்கூடத்தில் உதயமானவைதாம். எல்லா சேவைகளும் ஜிமெயில் வசதிகளாக அறிமுகமாவதில்லை என்றாலும், சோதனைக்கூட சேவைகளை முயன்று பார்ப்பது பயனுள்ளதாகவே இருக்கும்.

எப்படி அணுகுவது?

ஜிமெயில் லேப்ஸ் சோதனை வசதியை ஜிமெயிலின் ‘டெஸ்க்டாப்’ வடிவில் மட்டுமே அணுக முடியும். ஜிமெயில் லேப்ஸ் வசதியைப் பெற, ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து கியர் ஐகானை கிளிக் செய்து, செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் லேப்ஸ் பகுதியை கிளிக் செய்தால், அதற்கான தனிப் பக்கத்தை அடையலாம். அதில் வரிசையாகக் காணப்படும் சேவை அம்சங்களிலிருந்து தேர்வு செய்து, மாற்றத்தைச் சேமித்துக்கொண்டால் அந்த வசதியைப் பயன்படுத்தலாம். இந்த சேவை தேவையில்லையென்றால், அதை எளிதாக நீக்கிவிடலாம்.

இன்பாக்ஸ் பல

ஒரே ஒரு இன்பாக்ஸுக்குப் பதில் பல இன்பாக்ஸை உருவாக்கிக்கொள்ள முடிந்தால் வசதியாக இருக்கும் அல்லவா? ‘மல்பிட்பிள் இன்பாக்ஸ்’ அம்சம் மூலம் இதை ஜிமெயில் லேப்ஸ் சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் இமெயில்களைப் பல்வேறு தலைப்புகளின் கீழ் தனித்தனி இன்பாக்சாகப் பிரித்துக்கொள்ளலாம். மெயிலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பல இன்பாக்ஸ்கள் இருப்பதுபோன்ற தோற்றம் கிடைத்தாலும், நடைமுறையில் இது பயனுள்ளதாகவே இருக்கும்.

இந்த வசதியைத் தேர்வு செய்த பிறகு மெயிலைப் பயன்படுத்தும்போது, செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று பல இன்பாக்ஸ் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு குறிச்சொல்லுக்கு ஏற்ப மெயில்களை வகைப்படுத்திக்கொள்ளலாம்.

கீபோர்ட் குறுக்குவழிகள்

இணைய பயன்பாட்டில் பிரவுசர் குறுக்கு வழிகள் மிகவும் பிரபலமானவை. ஒன்றுக்கும் மேற்பட்ட கிளிக் தேவைப்படக்கூடிய இடங்களில் அவற்றை உடனே அணுக குறுக்குவழிகள் கைகொடுக்கின்றன. ஜிமெயில் செயல்பாடுகளை விரைவுப்படுத்திப் பிரத்யேகக் குறுக்குவழிகளும் இருக்கின்றன. இவற்றோடு உங்களுக்கான குறுக்குவழிகளை அமைத்துக்கொள்ள கூகுள் வழி செய்கிறது. செட்டிங்ஸ் பகுதியில் ‘கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்’ எனும் பகுதிக்குச் சென்றால், தேவையான குறுக்குவழிகளை அமைத்துக்கொள்ளலாம்.


ஒரே பதில்

இமெயில்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றுக்கான பதில்கள் மாறும். சில மெயில்களுக்கு ஒரே விதமான பதில்களை அனுப்பும் நிலையும் இருக்கலாம். இதுபோன்ற சூழலில் ஒரே விதமான பதிலை மீண்டும் அடிப்பது அலுப்பூட்டும். இதைத் தவிர்க்க ‘கேண்ட் ரஸ்பான்ஸ்’ வசதியைப் பயன்படுத்தலாம். நிர்ணயிக்கப்பட்ட பதில்கள் தேவைப்படும் மெயில்களுக்கு, அவற்றை மீண்டும் டைப் செய்யாமல் இந்த வசதியை கிளிக் செய்து அதே பதிலை அனுப்பிவிடலாம். இந்த வசதியை உருவாக்கிகொண்ட பிறகு கம்போஸ் பகுதிக்கு அருகே இதற்கான பட்டனைக் காணலாம்.

ஸ்மார்ட் லேபில்கள்

மெயில்களைப் பிரிக்க அவற்றுக்கான ஸ்மார்ட்லேபிள்களை உருவாக்கிக்கொள்ளலாம். நிதி, சமூகம், பயணம், அலுவலகம் என லேபிள்களுக்கு ஏற்ப இன்பாக்ஸில் வரும் மெயில்கள் தானாக வகைப்படுத்தப்படும். எந்த வகையான மெயில் தேவையோ அதை மட்டும் கிளிக் செய்து பார்க்கலாம். ஸ்மார்ட் லேபிள் தலைப்பின் கீழ் இந்த வசதியைப் பெறலாம்.

பலரும் கூகுள் காலாண்டரைப் பயன்படுத்தலாம். நிகழ்ச்சிகளைத் திட்டமிட, சந்திப்புகளை ஏற்பாடு செய்ய எனப் பலவற்றுக்கும் நாட்காட்டி வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், நாட்காட்டி வசதியை ஒவ்வொரு முறையும் தனியே அணுகுவதைத் தவிர்க்க, ஜிமெயிலுக்குள்ளேயே அதைக் கொண்டுவரும் வசதியை லேப்ஸ் சேவையிலிருந்து அமைத்துக்கொள்ளலாம். ஜிமெயிலிலிருந்து வெளியேறாமலே நாட்காட்டியில் தகவல்களைச் சேர்க்க இது உதவுகிறது. இந்த வசதியை உருவாக்கிக்கொண்ட பிறகு, நாட்காட்டி சேவைக்கான வசதி இன்பாக்ஸ் இடப்பக்கத்தில் மூன்று புள்ளிகளாகத் தோன்றும்.

இமெயில்களில் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கும் மெயில்கள் எத்தனை என்பதை உடனடியாக அறியும் வசதியை அன்ரெட் மெசேஜ் சேவை மூலம் பெறலாம். மெயில்களை நட்சத்திரக் குறியிட்டு அடையாளப்படுத்துவது போலவே இன்னும் பலவற்றுக்கான ‘குவிக் லிங்க்ஸ்’ இணைப்புகளையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

ஜிமெயில் லேப்ஸ் பகுதிக்குச் சென்று கொஞ்சம் பொறுமையாக அலசி ஆராய்ந்தால், உங்கள் ஜிமெயில் பயன்பாட்டை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
வாய்ப்புண் வருவது ஏன்?

Published : 13 Dec 2014 15:32 IST

டாக்டர் கு. கணேசன்



வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

யாருக்கு வரும்?


குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் - மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.

வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

கிருமிகளின் தாக்குதல்!

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் வருவது வழக்கம்.‘கான்டிடா ஆல்பிகன்ஸ்' (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும். அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.

என்ன சிகிச்சை?

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்சினை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது. ‘சோடியம் லாரில் சல்பேட்’(Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

எந்த உணவு முக்கியம்?

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com
குழந்தை மனசு புதிரல்ல

Published : 09 Dec 2017 12:20 IST

ப. கோலப்பன்


“சார் என் பையனை என்ன செய்யணும்னு தெரியலை. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான். அடிக்கடி பொய் சொல்றான். மற்ற பசங்களை அடிக்கிறான்” என்று சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்.

சிலருக்கு வேறு விதமான பிரச்சினை. “சார் ஒரு இடத்திலே இருக்க மாட்டேங்கிறான் சார். ஒரு வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக முடியலை. அங்க இருக்கிற சாமான்களையெல்லாம் எடுக்கிறான். உடைக்கிறான். ஓடுறான்” என்பார்கள்.

“விவரமாத்தான் இருக்கான். ஆனால் படிப்புல அதைக் காட்ட மாட்டேங்கிறான். மார்க் வாங்காம இருந்து என்ன புண்ணியம்?”. இது இன்னும் சில பெற்றோரின் புலம்பல்.

இன்று, கல்வி மற்றும் அதற்கான பணச் சுமை ஆகியவற்றால் குழந்தைகள், பெற்றோர்கள் இருவருக்குமே மன அழுத்தமும் நெருக்கடியும் உண்டாகின்றன. ஆனால் அறிவியல் யுகத்தில் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டால் எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் என்பதை உறுதிசெய்ய முடியும்.

இதைத்தான் ‘மருத்துவர் பார்வையில் குழந்தைகள் மனநலம்’ எனும் புத்தகத்தில் மனநல மருத்துவர் பி.பி. கண்ணன் தெரிவிக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

தமிழில் அறிவியல் நூல்கள் குறைவாகவே வருகின்றன. அதிலும் தான் சார்ந்த துறைகளில் மிகவும் அனுபவம் மிக்கவர்கள் அதைப் புத்தகங்களாகப் பதிவு செய்வதில்லை. குழந்தைகள் மனநலத் துறையில் இருக்கும் இந்தத் தேவையை மருத்துவர் கண்ணனின் புத்தகம் பூர்த்தி செய்கிறது.

படிப்பு சாராக் கல்வி

குழந்தைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள், கீழ்ப்படியாமை, நடத்தைக் குறைபாடு, நினைவுத்திறன், பாலியல் உணர்வுகள், பாலியல் துன்புறுத்தல்கள், தேர்வு தொடர்பான பயம் என எல்லாவற்றையும் விலாவாரியாக மனநல மருத்துவம் மற்றும் கள அனுபவத்தின் மூலம் விளக்கியிருக்கும் கண்ணன், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளையும் முன்வைக்கிறார்.

குறிப்பாக, அடிப்பதாலோ வேறு தண்டனைகளைக் கொடுப்பதாலோ பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதைத் தெளிவாக தெரிவிக்கிறார்.

கவனச்சிதைவு நிலை (அட்டென்ஷன் டிஃபிசிட் ஹைபர் ஆக்டிவ் டிஸார்டர்) குறித்துப் பேசும் கண்ணன், ‘இத்தகைய குழந்தைகளுக்கு விளையாட்டு, பரதநாட்டியம் போன்ற பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களிடமிருக்கும் திறன்களை வெளிப்படுத்த முடியும். தொடக்கக் கல்வி நிலையில் இருந்தே அவர்களுக்குப் படிப்பு சாராக் கல்வியும் (எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி) தகுந்த அளவில் கலந்து அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது பிரச்சினை உள்ள சிறுவர்கள், ஒரு குறிப்பிட்டத் துறையில் மற்றவர்களுக்கு வழிகாட்டும் நிலையில் சமுதாயத்தில் மிளிர்வார்கள்’ என்கிறார்.

தரம் பிரிக்கும் தேர்வு

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமாகப் பேசப்படும் தேர்வு முறை குறித்து அவர் சொல்வது கவனிக்கத்தக்கது. “தேர்வு என்பது பத்துப் பன்னிரண்டு லட்சம் பள்ளி மாணவர்களை அவர்களின் கற்கும் திறன் அடிப்படையில், நினைவாற்றலின் அடிப்படையில் தரம் பிரிக்கும் ஒரு செயல், அவ்வளவே” என்பது இவரது வாதம்.

அதேபோல, “பொதுவாக ஒரு மாணவனின் ஆர்வம், வேட்கை எந்தத் துறையில் உள்ளது, அவனால் அதைப் படிக்க இயலுமா என்பதை அறிந்து ஆலோசனை கூற வேண்டும். கணிதம் சுத்தமாக வராத மாணவனை பொறியியல் துறையில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.

இன்று பல்வேறு பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. சி.பி.எஸ்.இ. படித்த மாணவன், மாநிலப் படத்திட்டத்தில் படித்தவனைவிடப் புத்திசாலி என்கிறார்கள். ஆனால் கண்ணனோ, “நம்முடைய பாடத்திட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே அனைத்துப் பாடத்திட்டங்களும் அடிப்படைக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் மனப்பாடம் செய்யவைத்து அவற்றை ஒப்பித்தலையோ அல்லது வாந்தி எடுத்தாற்போல எழுதுவதையோ மட்டுமே மையமாகக்கொண்டு அமைந்துள்ளன. அளவில் வேண்டுமானால் மாறுபடலாம். அடிப்படை ஒன்றுதான்” என்கிறார்.

பிரத்யேகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, தங்கள் குழந்தைகளிடமிருக்கும் பிரச்சினைகளின் தன்மைகளை பெற்றோர்கள் புரிந்துகொள்வதற்கு இப்புத்தகம் பெரிதும் உதவும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிஜிட்டல் போதை 12: வராத தூக்கம்... வராத கவனம்!

Published : 09 Dec 2017 12:19 IST

வினோத் ஆறுமுகம்



மனிதனுக்குத் தொழில்நுட்பம் அறிமுகமானதும் முதலில் களவாடப்பட்டது நம் தூக்கத்தைத்தான். இரவானவுடன் ஓய்வைத் தொடங்கிய ஆதிகால மனிதன், தூக்கத்தை இழந்தது நெருப்பைக் கண்டுபிடித்த பிறகுதான்.

தொலைக்காட்சி வருவதற்கு முன், தினமும் ஒருவர் 8 மணி நேரம்வரை கண்டிப்பாகத் தூங்க வேண்டும் என்று சொல்லி வந்த டாக்டர்களின் வாயை மூடிவிட்டன பெருநிறுவனங்கள். இன்று 6 மணி நேரம் தூங்கினாலே போதும் என்கிறார்கள். ஆனால் அதையும் நம் குழந்தைகளிடமிருந்து பிரித்துவிட்டது ஸ்மார்ட்போன்.

சிதையும் தகவல்கள்

உடலுக்கும் மூளைக்கும் தூக்கம் அவசியமானது. தூங்கும் நேரத்தில்தான் நம் உடல் உறுப்புகள் தம்மைச் சீர்செய்துகொள்கின்றன. மூளை, தான் பெற்ற அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைக்கிறது. போதுமான தூக்கம் இல்லை என்றால், உடலுக்கும் ஓய்வில்லை, தகவல்களும் கலைந்துவிடுகின்றன. போதுமான தூக்கமின்மை பல துணைநோய்களை உடலுக்குப் பரிசளிக்கிறது.

அதிக எடையுடன் இருப்பவர்கள், கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். தங்கள் கலோரிகளை எரிப்பார்கள். ஆனால் 6 மணி நேரம் தொந்தரவில்லாமல் தூங்கினால் உடலே சுமார் 1,000 கலோரிகளை எரித்துவிடுகிறது. சரியான தூக்கமே உடல் எடை அதிகரிப்பை நிறுத்துகிறது.

ஒழுங்கற்ற தூக்கம்

ஆனால் போதுமான தூக்கம் இல்லை என்றால், உங்கள் உடல் சோர்வடைகிறது. மனச் சோர்வு ஏற்படுகிறது. எரிச்சல், கவனமின்மை, அதீத கோபம், பொறுமையின்மை எனப் பல துணைப் பிரச்சினைகளைத் தூக்கமின்மை கொண்டுவருகிறது.

உண்மையில் வீடியோ கேம் விளையாடுவதால் ஒருவர் தூங்குவதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. மூளை அப்படி வேலை செய்ய முடியாது. முதலாவதாக தூக்கம் ஒழுங்கற்றுப் போகும். முதல் 24 மணி நேரம்வரை ஓய்வு கொடுக்காமல், அடுத்த நாளின் நேரத்தைக் கடன் வாங்கி அதிகமாகத் தூங்குவார்கள். படுக்கைக்குச் செல்லும் நேரமும் ஒழுங்காக இருக்காது. இரவில் தூங்குவதற்குப் பதில் பகலில் தூங்குவார்கள். கால் நீட்டி வசதியாகப் படுக்காமல், கணினி முன் இருக்கும் இருக்கையில் அமர்ந்தபடி தூங்குவார்கள்.

இவை எதுவுமே சரியான தூங்கும் முறை கிடையாது. போதுமான தூக்கம் இல்லாமல் பள்ளியில் கற்க முடியாது. உடலை வளைத்து விளையாடவும் முடியாது. புதிதாக எதையும் சாதிக்கவும் முடியாது.

தூண்டுதலுக்கு மட்டுமே கவனம்

வீடியோ கேம் ஆடுவதால் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது என்று நான் பொய் சொல்லப் போவதில்லை ஆனால் மிக முக்கியமான சில பாதிப்புகள் இருக்கின்றன.

வீடியோ கேம் விளையாடும்போது, அது விளையாடுபவர்களின் கவனத்தை நன்றாகக் குவிக்க உதவுகிறது. அப்போதுதான் அவர்களால் பாயிண்ட் எடுக்க முடியும். என்றாலும் இதில் பிரச்சினை இல்லாமல் இல்லை.

அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவர்களால் குறிப்பிட்ட சில தூண்டுதல்களுக்கு மட்டும்தான் கவனம் குவிக்க முடிகிறது. சுற்றுப்புறத்தில் எந்த சுவாரசியமோ, கண்னை வசீகரிக்கும் வண்ணங்களோ இல்லை என்றால் அவர்களின் கவனம் குவிவது கடினமாகிவிடுகிறது.

விளையாட்டில் மட்டுமே கவனம்

வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளை ஆய்வுசெய்து பார்த்ததில் மிகவும் கலவையான முடிவுகளே கிடைத்தன. சாதாரணமாக வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் சில செயல்களில் கவனத்தை குவிப்பது கடினமாக இருந்தது. அதேநேரம், அதீதமாக வீடியோ கேம் விளையாடும் சிறுவர்கள், அந்தக் குறிப்பிட்ட செயலில், அதாவது வீடியோ கேம் விளையாட்டில் மட்டுமே கவனத்தைக் குவிக்க முடிந்தது.

மற்றொருபுறம், குறைவான நேரம் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளால் பல சாதாரணச் செயல்களில் எளிதாகக் கவனத்தைக் குவிக்க முடிந்தது. ஆனால், அதீதமாக விளையாடுபவர்களால் அவற்றில் கவனத்தை நிலைநிறுத்த முடியவில்லை.

(அடுத்த வாரம்:

மூளைக்கும் குப்பை உணவு!)

கட்டுரையாளர்,

டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு:

write2vinod11@gmail.com
தினமும் 40 கேன் கோகோ-கோலா குடித்தவரின் இன்றைய நிலை! சுவைக்கு அடிமையானதால் வந்த ஆபத்து!! 

pri_63022031
Published on : 14th December 2017 03:10 PM |

ஷேன் டிரென்ச் என்னும் இந்த நபர் தினமும் 40 கேன் அதாவது 13 லிட்டர் கோகோ-கோலா-வை குடித்து வந்துள்ளார். 21-வயதே ஆன இவர் இதன் சுவைக்கு அடிமையாகி நாள் ஒன்றிற்கு இவ்வளவு சர்க்கரை கலவையைக் குடித்த காரணத்தால் இவரது உடல் எடை 203 கிலோவைத் தொட்டது.

மீன் சாப்பிடுவதாக இருந்தால் கூட அந்த மீனை கோகோ-கோலாவை ஊற்றித் தான் இவர் கழுவி சமைப்பாராம். காலை, மதியம், இரவு என எப்போது உணவு உண்டாலும் தண்ணீருக்கு பதிலாக இதைத் தான் குடிப்பாராம். இவருடைய இந்த கோகோ-கோலா வெறி நாளொன்றிற்கு 5,250 கெலோரிகளை தந்தது. இதனால் இவரது உடல் அதிக பருமனடைந்ததோடு, கோக்கில் இருக்கும் அதிக சர்க்கரை இவருக்குப் பல ஆரோக்கிய சீர்கேட்டையும் தந்தது.

இந்த அதீத உடல் எடையால் நடக்க, நீண்ட நேரம் நிற்க, படிக்கட்டுகள் ஏறி, இறங்க என அனைத்து வேலைகளும் இவருக்குக் கடினமானது. சில சமயங்களில் தன்னுடைய வேலைகளைக் கூட இவரால் செய்து கொள்ள முடியவில்லை. இதற்காக மருத்துவர்களை ஆலோசித்த போது தான் இவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது.



இவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இந்தப் பழக்கத்தை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் இவர் இறந்து விடுவார் என்று தெரிவித்துள்ளனர். உயிர் மீது வந்த பயத்தால் எப்படியாவது இந்தப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்று முடிவெடுத்த ஷேனுக்கு அப்போது தான் உண்மையான சவால் ஒன்று வந்தது. இதன் சுவைக்கு அடிமையாகிப் போனதால் இவரால் இந்தப் பழக்கத்தை கை விட முடியாமல் தவித்தார்.

தன்னுடைய சுவை அரும்புகளை ஏமாற்ற இவர் ஷான் ஒரு முடிவெடுத்து, சாதாரண கோகோ-கோலாவுக்கு பதிலாக சர்க்கரை சேர்க்கப்பட்டாக கோகோ-கோலா ஸீரோ-வை குடிக்கத் துவங்கினார். இதனால் இவர் உடலின் சர்க்கரை அளவு மிகவும் குறைந்ததால் மிகவும் சோர்வடைந்து செயலிழந்து போனார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் போராடி 69 கிலோ எடையைக் குறைத்தார்.

பின்னர் மெல்ல மெல்ல மொத்தமாக கோக் குடிப்பதையே நிறுத்தினார். முன்னர் இருந்த உடல் எடையைச் சரி பாதியாகக் குறைத்ததால் இவருடைய ஆரோக்கியம் சற்று தேரியது. 2016-ம் ஆண்டு இரைப்பையில் பைப்பாஸ் அறுவை சிகிச்சையை இவர் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர், ஆனால் இந்தத் தீய பழக்கத்தை விடுத்து சில உடற் பயிற்சிகளின் மூலமே எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்யாமல் இவர் குணம் அடைந்ததைக் கண்டு மருத்துவர்களே வியந்து போனார்கள்.



இவருடைய இப்போதைய உடல் எடை 127 கிலோ, இதையும் குறைத்து 100 கிலோவிற்கு வரவே தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார். கட்டுக்கோப்பே இல்லாத உணவு பழக்கம் நமக்கு எமனாய் வந்து அமையும் என்பதற்கு இவருடைய வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்.
குற்றம் கடிதல்!

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம் | Published on : 15th December 2017 02:32 AM |


ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்களும், மாணவர்களுக்கு எதிராக ஆசிரியர்களும் குறைகள் கூறுவது அதிகமாகிக் கொண்டிருப்பதுடன், இரு சாராருக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவை ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிப்பதாலோ அல்லது மாணவர்களின் ஒழுங்கின்மை காரணமாகவோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படுகின்றன.


"என் பிள்ளை உருப்படுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டாலும் சரி, அல்லது தோலை உரித்தாலும் சரி' என்று பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் சொன்ன காலம் போய், மாணவர்களின் நடத்தையில் மாற்றம் கொண்டு வருவதற்கோ அல்லது படிப்பில் முன்னேற்றம் ஏற்படுவதற்கோ ஆசிரியர்கள் எடுக்கும் சிறு நடவடிக்கைகள் கூட மிகைப்படுத்தப்  படுகிறது. 


சில நேரங்களில் பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம், தவறு
செய்த அல்லது படிக்காத தங்களது குழந்தைகளை கண்டித்த அல்லது தண்டித்த ஆசிரியர் மீது "நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்களா அல்லது நாங்கள் காவல் துறை
யிடம் புகார் தரட்டுமா?' என்று மிரட்டுகின்றனர்.


சமீபத்தில் ஓர் ஆசிரியர், மாணவியின் தோளில் குச்சியால் இலேசாக ஒரு தட்டு தட்டியதற்காக, அன்று மாலையே அந்த மாணவியின் உறவினர் மாணவியிடம் "அடித்த டீச்சர் யார் என்று காட்டு, கையை வெட்டி விடுகிறோம்' என்று பள்ளியின் முன் நின்று கொண்டு தகராறு செய்துள்ளனர். 


மாணவர்களின் மீது உண்மையான அக்கறை எடுத்து, அவர்கள் எதிர்காலத்தில் நன்றாக வர வேண்டும் என்று செயல்படும் பெரும்பாலான ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.


மாணவர்கள் மீது தேவையற்ற, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மாட்டிக் கொள்வதில்லை. இவர்கள் செய்யும் தவறுகள் பத்திரிகைகளில் அல்லது சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிந்தால்தான் உண்டு. 


இதில் பெரிய வேதனை என்னவென்றால், இந்த மாதிரியான ஆசிரியர்களால் உளரீதியாகப் பாதிக்கப்படும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் எதுவும் சொல்வதில்லை.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சில குழந்தைகள் பள்ளியில் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் குறித்து பெற்றோரிடம் பேசினால் அதனால் எதிர் விளைவுகள் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றனர். 


தனியார் பள்ளியாக இருந்தால், பெற்றோரும் மிகுந்த யோசனைக்குள்ளாகின்றனர். புகார் செய்வதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர்களால் சில நேரங்களில், குழந்தைகள் மறைமுகமான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.


ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தெரியாமல் ஓர் ஆசிரியை மீது மோதி விட்டான். தவறு தெரிந்து, பதறிப் போய் உடனே மன்னிப்புக் கேட்டும் அந்த ஆசிரியை இடைவிடாமல் மாணவரை அடித்துள்ளார்.
அந்த மாணவரின் பெற்றோர் இருவரும் வேறு ஒரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறவர்கள். பையனின் முகம் சரியில்லாததை உணர்ந்து தாய் விசாரித்தபோதுதான் அவன் தயங்கித் தயங்கி பள்ளியில் நடந்ததை விவரித்துள்ளான்.


மறுநாள் அவனின் தந்தை பள்ளிக்குச் சென்று முதல்வரைப் பார்த்துப் புகார் கொடுத்தும், அந்த ஆசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆனால், ஒரு வருடம் ஆகியும் இன்று வரை அந்த மாணவரை சம்பந்தப்பட்ட ஆசிரியை சாடை, மாடையாகப் பேசுவது மட்டுமல்லாது மற்ற மாணவர்களிடம் இவனுடன் யாரும் பேசாதீர்கள் என்றும் கூறுகிறாராம்.
இதனைவிட மோசமாக மாணவர்களை நடத்தும் பள்ளிகளையும் நாம் பார்க்கிறோம். மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுகிறோம் என்று கூறி, பள்ளியில் கொடுக்கப்பட்ட நேரத்தைத் தவிர மாணவருக்கு அவசரம் என்றால்கூட கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்காத பள்ளிகளைப் பற்றியும், தண்டிக்கிறோம் என்ற பெயரில் பெண் குழந்தையை மாணவர் பயன்படுத்தும் கழிவறையில் நிற்க வைத்த பள்ளியைப் பற்றியும், சவரம் செய்யாமல் வரும் வளரிளம் பருவ மாணவர்களுக்கு ஆசிரியர் அல்லது சக மாணவரிடம் சொல்லிச் சவரம் செய்ய வைக்கும் பள்ளிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.


மாணவர்கள் மீது இது மாதிரியான கொடூரமான தாக்குதல்களும், இன்னும் பாலியல் கொடுமைகள் போன்ற அவலங்களும் இந்தியப் பள்ளிகளில் மட்டுமே சாத்தியம். இதில் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. 


அதே நேரத்தில் நியாயமான காரணங்களுக்காக மாணவர்கள் மீது ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கும்பொழுது பெற்றோர் அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது. அத்துடன், அவர்களின் நலனுக்காகவே ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள் என்பதை தங்கள் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.


ஆசிரியரின் நடவடிக்கை என்பது அடிப்பதோ அல்லது மாணவர்களின் மனத்தைக் காயப்படுத்துவதாகவோ கண்டிப்பாக இருக்கக்கூடாது. எதிர்வினை தற்கொலை வரை போகலாம் என்பதை ஆசிரியர்கள் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள் எதிர்காலத்தில் மாறவேண்டும் என்றால் பெற்றோரும், ஆசிரியர்களும்தான் மாற வேண்டும். மாறிவிட்ட சமூகச் சூழலில் குழந்தைகளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து, தாங்கள் மாற வேண்டும்.
ஒரு தாய்க்குத் தன் குழந்தையிடம் காட்டும் அன்பு மற்றும் கண்டிப்பின் அளவும், எல்லையும் தெரிந்திருக்க வேண்டும். பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் தாயன்புடன் பழக வேண்டும். 


வீட்டிலும் பெற்றோர்கள் அன்பையும், கண்டிப்பையும் சம விகிதத்தில் கலந்து வெளிப்படுத்துவதால், பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிக்கும் நேரங்களில் மாணவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்துவதுடன், மோசமான எதிர்வினையும் ஆற்ற மாட்டார்கள்.

Aadhaar hearing

First published on 14-Dec-2017
New Delhi: A five-judge constitution bench headed by Chief Justice Dipak Misra will on Thursday decide on a batch of applications seeking a stay on the Centre's alleged coercive measures to force people to link Aadhaar cards with services like cell phones and bank accounts. "Aadhaar... the matters are being taken up tomorrow," Justice Misra said, on a day the Centre extended the deadline for linking Aadhaar.

Bank customers have been granted three more months for compliance till March 31. This will apply to mutual funds, credit and debit cards, and other regulated entities facilitating financial transactions.

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...