Monday, January 15, 2018

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவிக்கு ஒய்வு ஊதியம் வழங்க வேண்டுமா?

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b)  ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த விதி 49(2) கீழே தரப்பட்டுள்ளது.

49(2) துணை விதி 3-ல் கூறப்பட்டுள்ளதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ஒரு அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் 1(a) ஓராண்டு காலத்திற்கு குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது அவருடைய பணிக் காலத்தில் எந்தவொரு நேரத்திலும் இறக்க நேரிடுதல்

(b)  பணி ஓய்வுக்கு பிறகு அவர் இறக்கும் நாளில் ஓய்வூதியம் பெற்றுவருவாரேயானால், இறந்த போனவரின் குடும்பத்தினர் அந்த குடும்ப ஓய்வூதியத்தை எப்படி பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவரை அரசு ஊழியராக பணி நியமன செய்வதற்கு முன்பு உரிய மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு அவர் பணியில் சேர்வதற்கு தகுதி என்று அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்து ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக அந்த அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

எனவே மேற்கண்ட விதியின்படி ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை " தமிழ்நாடு அரசு Vs M. தெய்வசிகாமணி (2009-3-MLJ-1) மற்றும் உச்சநீதிமன்றம் S. K. துவா Vs ஹரியானா மாநில அரசு (AIR-2008-SC-1077) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழங்கியுள்ளது.

W. P. NO - 12437/2007, dt - 3.12.2014"

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

பொங்கல் பண்டிகை முடிந்து  மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு  பதறி, டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம். 

காரணம்,அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன் காரணமாக, வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றியிருக்கும்.
கரும்பு தின்ற உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் பெரும்பாலான ,கிராமப்புறங்களில் இந்த அவதிகள் கிடையாது. அங்கு பெரியவர்கள்,கரும்பு தின்னும் குழந்தைகளிடம்,
*'எலெ,தண்ணீய குடிச்சுடாதே..வாய் வெந்துடும்'*

என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துக் கொண்டே இருப்பார்கள்.

கரும்பை கடித்து சுவைத்து முடித்தபிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடக்மடக் ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால்,வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும்.

*ஏன் தண்ணீர் குடித்தால் வாய் வேகிறது.*

"கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.

அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.இதனால்,நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை"
என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே,இந்த சிறு விழிப்புணர்வுடன் நாம் பொங்கலைக் கொண்டாடுவோம்.

17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது

தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது வெளியான செய்தியை, இந்தாண்டு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை என்று தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த செய்தி உண்மையல்ல, யாரும் நம்ப வேண்டாம் என அந்த தனியார் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

*நன்றி - புதியதலைமுறை.
டிஜிட்டல் போதை 14: தனியே… தன்னந்தனியே..!

Published : 23 Dec 2017 11:54 IST


வினோத் ஆறுமுகம்




சமீபத்தில், அமெரிக்காவில் 13 வயது சிறுவன் தன்னிடமிருந்து ஸ்மார்ட்போனைப் பிடுங்கி வைத்துக்கொண்ட தன் பாட்டியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டான் என்ற செய்தி வெளியானது. எந்நேரமும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் பள்ளிக்குக்கூடச் செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் பாட்டி அவனைக் கண்டித்து ஸ்மார்ட்போனை வாங்கி ஒளித்து வைத்துவிட்டார். விளைவு… சிறுவன் இப்போது சிறார் சீர்திருத்தப் பள்ளியில்!

இந்த ஆண்டு ஏப்ரலில் இதேபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்தது. இந்தச் சம்பவத்தில் ராஜ் என்பவர், தன் குடும்பத்தினர் அனைவருக்கும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார். அவர் மருத்துவம் படிக்க வேண்டும் எனக் குடும்பம் கட்டளையிட்டது. ஆனால் இவருக்கோ வரலாறு படிக்க வேண்டும் என்று ஆசை. அதிலிருந்து தப்பிக்க நினைத்த அவர், குடும்பத்தையே கொன்றுவிட்டார். பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அவர் அதிகமாக வீடியோ கேம் விளையாடும் பழக்கம் உள்ளவர் என்பது தெரிய வந்தது.

மூளையைப் பாதிக்கும் மூர்க்கம்

வீடியோ கேம்களில் ‘மேன்ஹன்ட்’ (மனித வேட்டை) வகையறா வீடியோ கேம்கள் மிகவும் கொடூரமானவை. இவை, பல நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டன. அதுபோன்ற வீடியோ கேம்களில் உள்ள மூர்க்கத்தனத்தைக் கட்டுப்படுத்தாதவரை, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் நிதர்சனம்.

மேற்கண்ட சம்பவங்களைப் போன்று, வீடியோ கேம்களால் உந்தப்பட்டு நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உளவியளாலர்கள் கூறும்போது, ‘மூர்க்கமான வீடியோ கேம்கள் விளையாடினால் மெல்ல அது நம் மூளையையும் மனதையும் பாதிக்கும். வெல்வதற்காகக் கொலைகூட செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். இந்த மாதிரியான நேரத்தில் அவர்களுக்குச் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. இதனால், அவர்கள் மனிதத் தன்மையை இழக்க நேரிடுகிறது’ என்கிறார்கள்.

காப்பாற்றும் சமூகம்

எந்நேரமும் வீடியோ கேம் விளையாடுபவர்கள், மிக எளிதாகச் சமூகத்திடமிருந்து தனிமைப்பட்டு விடுவார்கள். இப்படி தனிமைப்படுதல் அவர்களின் உடலுக்கும் மனதுக்கும் கேடானது. மனிதர்கள், சமூக விலங்குகள்தான். சமூகம்தான் நம் பாதுகாப்பு, அதுதான் நம்மை இதுவரை காப்பற்றி வந்திருக்கிறது. இனியும் காப்பாற்றும்.

ஆனால், வீடியோ கேம்கள் வந்தபின் பிள்ளைகள் சமூகத்துடன் உறவாடுவதும் விளையாடுவதும் குறைந்துவிட்டது. இவ்வாறு நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பதன் பாதிப்புகளை அவர்கள் எளிதில் உணர்வதில்லை. தொடர்ந்து அறைக்குள் அடைந்து கிடப்பதே நம்மை மனச்சோர்வுக்குள்ளாக்கும். இயற்கையைச் சுற்றி இருப்பதுதான் நமக்கு நன்மை. அது இயல்பாகவே நம்மை மனச்சோர்வில்லாமல் வைக்கும்.

அதிகரிக்கும் அட்ரினலைன்

பொதுவாக, நண்பர்களுடன் இணைந்து விளையாடும் விளையாட்டுக்களைப் போன்று வீடியோ கேம்களில் ‘குழு விளையாட்டுக்கள்’ வருவதில்லை. காரணம், குழு விளையாட்டுக்களை விளையாடும்போது அதற்கு நிறையத் திட்டமிட வேண்டும். உடல் உழைப்பு வேண்டும். ஓய்வு கிடைக்கும். அது எல்லா நேரமும் நம் அட்ரினலினை அதிகமாக்குவதில்லை. மாறாக வீடியோ கேம்கள் எந்நேரமும் நம் அட்ரினலினை அதிக அளவில் சுரக்கச் செய்கின்றன. நம்மைத் தனிமைப் படுத்துகிறது.

சிறுவர்கள் பலரை அவர்கள் குடும்பத்தினர் பூங்காவுக்கும் பீச்சுக்கும் அழைத்துத்தான் வருகிறார்கள். ஆனால் அங்கும் அவர்கள் தங்கள் தலையைக் குனிந்தபடியே வேறு ஒரு உலகில் தம்மை ஆழ்த்திக்கொள்கிறார்கள். இதனால், கடலும் காடும் பச்சைப் பூங்காவும் அவர்களுக்கு மிகவும் போர் அடித்துவிடுகிறது.

கட்டுரையாளர்,டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: write2vinod11@gmail.com
விவாதக் களம்: ஆண்கள் திருந்தும் நாளே பெண்ணுக்குத் திருநாள்

Published : 14 Jan 2018 11:03 IST




கடந்த வாரம் வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுத்தளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய, ‘பெண்களைத் துரத்தும் நெருப்பு’ கட்டுரையையொட்டி, பெண்களைப் பார்த்ததுமே விழித்துக்கொள்கிற ஆண் மனம் குறித்துக் கேட்டிருந்தோம். பெண்களை எப்போதும் துரத்தும் இந்த நெருப்பில் இருந்து பெண்கள் எப்படி மீள்வது என்றும் கேட்டிருந்தோம். ஆண்களாகத் திருந்தினால்தான் உண்டு எனப் பலரும் சொல்லியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு...

பல நேரங்களில் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை என்பதே வேதனையான உண்மை. ஆண் எப்படி விரும்பினாலும் இசைந்து போக வேண்டும் எனத் தமது மகளுக்கு அறிவுரை சொல்லும் தாய்மார்களே இன்றும் நம் சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள். பெண்களுக்குரிய இடம் அவர்களுக்கு இன்னமும் முழுதாகத் தரப்படவில்லை. பெண்களின் விருப்பத்தை அறிந்து அணுகுவதே ஆண்மைக்கு அழகு என்பதை ஆண்கள் உணர வேண்டும். ஒரு பெண்ணுக்குத் தன் விருப்பத்தை மீறி ஆட்கொள்ளப்படுவது போன்ற கொடுமை வேறில்லை. திரையரங்கின் இருளில் இடுப்பில் தடவிய கைகளால் அருவருப்பு கொண்டு வீட்டுக்கு வந்த கையோடு குளித்துப் பல நாட்கள் மன உளைச்சலோடு அலைந்த தோழியின் நினைவு இன்றும் மனதில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

- இரா.பொன்னரசி, வேலூர்.

ஆணின் காமம் ஒரு பெண்ணின் மீது முதலில் பார்வையின் வழியே பாய்கிறது. வக்கிர எண்ணம் கொண்ட ஆணின் கண்களாலேயே பெண் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதும் உண்டு. ஒரு பெண்ணைப் பார்க்கும்போது காமம் மறைந்து சகோதரியாகவும் தாயாகவும் பார்க்கும் நிலை என்று வருகிறதோ அன்றுதான் பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படும். சுதந்திரமாக வெளியே வரும் பெண் எதற்கும் துணிந்து சம்மதிப்பாள் எனும் எண்ணம் கொண்டிருக்கும் ஆண்களே இங்கு அதிகம். திருமணப் பந்தத்தில் இணைந்து வாழும் ஆண், பெண்ணின் காமம் வரைமுறையுடன் இருக்கும்வரை பிரச்சினையில்லை. எல்லையற்ற காமமே அப்பாவிப் பெண்களை விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.

ஆண்களின் பாலியல் உணர்வைத் தூண்ட உதவும் வலைத்தளங்கள் இங்கு ஏராளம். இவற்றை மீறி ஒரு ஆண் வளர்க்கப்படும் முறையே அவனைப் பெண்களைப் புரிந்துகொள்ள வைக்கிறது.

பெற்றோர் பெரும்பாலான நேரத்தைத் தங்கள் மகனுடன் கழிக்க வேண்டும். பார்க்கும் பெண்களின் மீதான மதிப்பை அதிகரிக்க அவர்களைத் தங்கள் தாயின் இடத்தில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் மகனுக்கு நல்ல வழிகாட்டியாகவும் பெண்ணின் வலிகளை உணர்த்தி நல்ல ஆசானாகவும் மாற வேண்டும். பொதுவெளிகளில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டுப் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் ஆண்களைத் தகுந்த தண்டனைகள் மூலம் எச்சரிக்கலாம்.

- சுபா, சேலம்.

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இரவு, பகல், நேரம், காலம் போன்றவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எப்போது ஓர் ஆண் ஒரு பெண்ணால் தன்னை எதிர்க்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறானோ அப்போதுதான் அவன் இந்த வக்கிரத்தைச் செய்யத் துணிகிறான். பெண்ணைப் போகப் பொருளாக நினைப்பது, அவளைப் பலவீனமானவளாக எண்ணுவது ஆகியவற்றின் விளைவுதான் இது. அதனால் பெண்கள் உடலளவிலும் பலமானவர்கள் என்று புரியவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சில ஆண்டுகளுக்கு முன் என் நெருங்கிய தோழி ஒருவர் இரவு எட்டு மணியளவில் ஒன்றிரண்டு ஆட்கள் மட்டுமே இருந்த பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவன் ஒரு ஐநூறு ரூபாய்த்தாளை தோழியிடம் நீட்டி தவறாகப் பேசியிருக்கிறான். அவ்வளவுதான். என் தோழி பதறிப்போய் அருகில் நின்றிருந்த ஆட்டோவில் தாவி ஏறி, கை கால்கள் நடுங்க வீட்டுக்குப் போயிருக்கிறார். பல நாட்கள் காய்ச்சலுக்குப் பிறகு உடம்பு தேறினாலும் மனம் தேறப் பல மாதங்கள் பிடித்தன. எத்தனையோ பேர் அங்கு நின்றிருக்கத் தன்னிடம் அவன் அப்படிக் கேட்டதால் தன்னிடம்தான் ஏதோ குறை உள்ளதைப் போல் அவர் குமைந்ததைத்தான் தாங்கவே முடியவில்லை. குற்றம் புரிந்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதையும் அப்பாவிகள் அவதிப்படுவதையும் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. பெண்ணின் உடல் வலிமையைப் புரியவைப்பதுடன் ஊடகங்களும் தைரியமான பெண்களை அடிக்கடி வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் நிலை வந்தால் இத்தகைய கொடூரங்கள் குறையக்கூடும்.

- ஜே.லூர்து, மதுரை.

தலை குனிந்து நட, அதுதான் பெண்ணுக்கு அழகு என்று சொல்லிச் சொல்லியே பெண்ணினத்துக்குத் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டோம். அதனால்தான் பிரச்சினையெனும் வெயிலைத் தாங்க முடியாத முதுகெலும்பற்ற புழுவாகப் பெண் துடித்துப்போகிறாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு அனைத்தும் புனைகதைகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். எதையும் எதிர்த்து நிற்கச் சொல்லிப் பெண்களைத் துணிச்சலோடு வளர்க்க வேண்டும்.

- எஸ். சரோஜா சங்கரலிங்கம், காமாட்சிபுரம்.

பெண்களைத் தகாத வார்த்தைகளால் புண்படுத்தும் கூட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தி சொன்ன காலத்துக்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ? ஆண் குழந்தைகளை நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.

- ப. பீர் இலாஹி, உத்தமபாளையம்.

பெண்கள் எந்த அளவுக்குத் துணிச்சலோடு எதிர்க்கிறார்களோ அப்போதுதான் அந்த நெருப்பு விலகி மட்டுமல்லே விட்டே ஓடிவிடும். சட்டப் பாதுகாப்பைவிட சுய பாதுகாப்பும் சில வேளைகளில் அவசியம். 




- பொன்.கருணாநிதி, கோட்டூர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒவ்வொரு வீட்டிலும் இருந்துதான் தொடங்க வேண்டும். பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கும் சமூகம், ஆண்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதில்லை. எப்போதும் பெண்களின் கட்டுப்பாடு குறித்தும் சுய பாதுகாப்பு குறித்தும் பேசும் நாம், ஆண்களிடம் இருக்க வேண்டிய நல்லொழுக்கம் குறித்து வாயே திறப்பதில்லை. ஆணின் தேவைக்காகப் பிறந்தவள் அல்ல பெண் என்பது ஒவ்வொரு ஆண் மகனுக்கும் புரிகிற நாளில்தான் இந்த நெருப்பு அணையும்.

- பிரதீபா.

ஆண், பெண் உறவு இன்று எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனால், சில ஆண்கள் பெண்கள் மீது நடத்தும் அருவருக்கத்தக்கச் செயல்பாடுகளை மன்னிக்கவே முடியாது. கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் உறவுசார் ஆலோசனைகள் வழங்கலாம். வளர்ந்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் அளிக்கலாம்.

- மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

தாய்வழிச் சமூக அமைப்பு உடையாமல் இருக்கிற இடங்களில் பெண்ணுக்கு உரிய மரியாதை வழங்கப்படுகிறது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ராகுல சாங்கிருத்யாயன் போன்றோரின் எழுத்துகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன. உடையிலும் பெயரிலும்கூட ஆண், பெண் வேறுபாடு இருக்கக் கூடாதெனப் பெரியார் சொன்னார். இதெல்லாம் நடக்கிற நாள்தான் பெண்களுக்கான திருநாளாக அமையும்.

- சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.

பெண் சமூகத்தையே எரிக்கும் நெருப்பாக ஆண் மனம் செயல்பட ஊடகங்களும் தொலைக்காட்சியும் காரணமாக இருக்கின்றன. போதுமான புரிதல் இல்லாமல் விதைக்கப்படுகிற சிறுபொறிதான் நாளடைவில் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டு எரிகிறது.

- உஷா முத்துராமன், திருநகர்.

வாய்ப்பு கிடைக்கும்வரை எல்லா ஆண்களும் ராமன்தான் என்ற சொலவடை, ஆண்களின் மனோபாவத்துக்குச் சான்று. இந்தப் பழமொழி ஆண்களுக்கு அவமானமாக இல்லையா? தன் ரத்த உறவுகளைப் பார்த்து விழித்துக்கொள்ளாத ஆண் மனம், பிற பெண்களைப் பார்த்ததும் விழித்துக்கொள்ளுமா? பெண்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும் மனோபாவத்தை யார் மாற்ற வேண்டும்?

பெண்ணை உடலாக, சதையாக மட்டுமே நினைக்கும் கேவலமான மனப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். கணவன் என்ற ஒரே காரணத்துக்காக வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற மனோபாவத்தைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட பெண்களைத் திமிர் பிடித்தவர்கள் என்று சொல்லாமல் இந்தச் சமுதாயம் திருந்த வேண்டும். பெண் இரண்டாம் பாலினம் என்ற கருத்து மாற வேண்டும். பாலியல் சார்ந்த ஆரோக்கியமான விவாதங்கள் ஊடகங்களில் நடத்தப்பட வேண்டும். இதைக் கேலிச்சிரிப்புடன் பார்க்காமல் அறிவுபூர்வமாக அணுகித் தீர்வு காண வேண்டும்.

சிறுவயது முதலே பெண் என்பவள் சக உயிர், என்ற உணர்வை உணவோடு ஊட்டி ஆண்களை வளர்க்க வேண்டும். குடும்பத்திலுள்ள பெண்களை ஓர் ஆண் எவ்வாறு நடத்துகிறான் என்பதைப் பார்த்துத்தான் அந்த வீட்டு ஆண் குழந்தை கற்றுக்கொள்கிறான். முதலில் குடும்பத்தைச் சீர்திருத்துவோம். மெல்ல மெல்லச் சமுதாய மாற்றம் தானே நிகழும்.

- தேஜஸ், கோவை.

ஆண், பெண் இருவரும் மனிதப் பிறவி என்றாலும் ஆண், பெண்ணைச் சீண்டுவதையும் தீண்டுவதையுமே விரும்புகிறான். மனைவி என்றாலும் மனம் விரும்பிய போதெல்லாம் அவளை இச்சைக்கு ஆட்படுத்திக்கொள்கிறான். வெளியில் பிற பெண்களைக் கண்டாலும் அவன் சபலப்படாமல் இருப்பதில்லை. பேச வாய்ப்பில்லாத பெண்களை உரசிப் பார்க்க முயல்கிறான். பேச வாய்ப்புள்ள பெண்களிடம் உரையாடலிலேயே உறவாடிவிடுகிறான். பெண்கள் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது.

- பொன். குமார், சேலம்.

பெண்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது இயல்பானது. பாலியல் ஈர்ப்பின் தன்மை ஆணுக்கு ஆண் வேறுபடுகிறது. அது வரம்பைத் தாண்டும்போது தவறான செயல்களில் ஈடுபடவைக்கிறது. எல்லா ஆண்களையும் நல்லவர்களாகப் பார்ப்பதைத் தவிர்த்து ஆண்களின் இயல்பு அறிந்து எச்சரிக்கை உணர்வுடன் கையாள்வதே புத்திசாலித்தனம்.

- கே.ராமனாதன், மதுரை.

எல்லா ஆண்களிடமும் அந்த நெருப்பு இல்லை. சில ஆண்கள் பொதுவெளியில் கண்ணியமாக நடந்துகொள்கிறார்கள். இன்னும் மிகச் சொற்பமான ஆண்கள் பெண்ணோடு தனித்திருக்கும்போதும் பண்பாடு தவறுவதில்லை. ஆனால், பெரும்பாலான ஆண்களின் காமப்பார்வையும் ஆக்டோபஸ் கரங்களும் பெண்ணைச் சுற்றுகின்றன. எத்தனை வயதானாலும் ஆணின் கீழ்த்தர வக்கிரம் குறைவதே இல்லை. இந்தப் பிரச்சினையைச் சட்டம் சார்ந்து பார்க்காமல் உளவியல்ரீதியாகப் பார்த்தால் இணை தேடும் மிருக உணர்வின் நீட்சி எனப் புரிந்துகொள்ளலாம். ஆனால், கல்வியாலும் வளர்ப்பாலும் போதனையாலும் இந்த உணர்வைக் கட்டுக்குள் வைக்கவும் கண்ணியம் காக்கவும் முடியும். பாதிப்புக்குள்ளாகும் பெண்ணின் மௌனமே அத்துமீறும் ஆண்களுக்கு வசதியாகிவிடுகிறது. முதல் தொடுதலின்போதே எச்சரிப்பது அல்லது பெற்றோரிடமோ உரிய இடத்திலோ புகார் செய்வது பாதுகாப்பு.

திரைப்படங்கள் காலம் காலமாகப் பெண்ணைக் கிண்டல் செய்வதே காதலுக்கு அடித்தளம் என்று காட்சிப்படுத்தி இளைஞர்களின் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டன. பெண்களைக் கிண்டல் செய்தல், பின்தொடர்தல் இவற்றுக்கெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம், கடுந்தண்டனையும் உண்டு. ஆண்களின் வக்கிரப் போக்கு மாறாதவரை, மாற்றப்படாதவரை இதுவே தீர்வு.

- ஜி. அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

அடக்கிவைக்கப்பட்ட காமம் ஒரு சிலரிடம் அடங்காமல் போய்விடுகிறது. பார்த்தவுடன் காமம் என்று சொல்வதைவிட அதை அப்போதே அடைய வேண்டும் என்ற வெறிதான் சில ஆண்களிடம் கூடவே பிறந்துவிடுகிறது. அதுதான் இதுபோன்ற செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. பெண் எதிர்த்துப் பேசமாட்டாள் என்ற தைரியம்தான் இவர்களுக்கான முதலீடு. இந்த நெருப்பைப் பகிரங்கமாகப் பொதுத்தளங்களில் போட்டுடைத்துச் சீர் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. பெண்கள் துணிய வேண்டும்.

- பி.கே. ஜீவன், கும்பகோணம்.

ஆதார் எண் கொடுக்காதவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு துண்டிப்பு

2018-01-14@ 00:43:29
 

சென்னை: சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் படிப்படியாக மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இணைப்பு பெற்றுள்ள அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் வலியுறுத்தின. அதிலும் டிச.31ம் தேதிக்குள் ஆதார் எண் வழங்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இந்த நிறுவனங்கள் எச்சரித்தன. இந்நிலையில், அரசின் எந்த திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ‘ஆதார் எண் கட்டாயம் என்பதற்கான காலக்கெடுவை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக’ உறுதி அளித்தது. ஆனால், ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உட்பட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களும், மாநில அரசு நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன. அதற்கு ஏற்ப, ஆதார் எண்ணை இணைக்காத  வாடிக்கையாளர்களின்  எரிவாயு இணைப்பை துண்டித்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி முகவர்களிடம் கேட்டால், ‘ஆதார் எண் கொடுத்தால் ஒரு வாரத்தில் மீண்டும் இணைப்பு புதுப்பிக்கப்படும்’ என்று சொல்கின்றனர்.
விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ - சினிமா விமரிசனம்

By சுரேஷ் கண்ணன் | Published on : 13th January 2018 04:22 PM

சமீபத்திய ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ‘ஓர் இல்லத்தரசி தன் வாழ்நாளில் சுட்ட தோசைகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும்?” என்பது போல. இதையே தமிழ் இயக்குநர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் போல. இன்னமும் எத்தனை காலத்திற்கு அரைத்த மாவையே அரைத்து அதே தோசையையே திரும்பத் திரும்ப சுடுவார்கள்?

ஓர் ஆச்சரியமான கிளைமாக்ஸ் தவிர்த்து, எளிதில் யூகிக்கக்கூடிய தேய்வழக்கு காட்சிகளுடன் சலிப்பூட்டுகிற இன்னொரு அடிதடி மசாலாதான் ‘ஸ்கெட்ச்’

கார் பைனாஸ் முதலாளியிடம் பணிபுரிபவர் விக்ரம். வட்டி கட்டாத நபர்களின் வாகனங்களைத் திறமையாக ‘ஸ்கெட்ச்’ போட்டுத் தூக்கி வருவதில் விற்பன்னர். ரெளடிகள் மற்றும் காவல்துறையினரின் பகையை ஒருசேரச் சம்பாதித்துக் கொள்கிறார்.

ராயபுரம் குமார் என்கிற பிரபலமான ரெளடியின் ‘ராசி’யான கார், தன்னுடைய முதலாளிக்குச் சொந்தமானது என்கிற பழைய கதையை அறிந்தவுடன் முதலாளி விசுவாசத்துடன் மிகுந்த ஆபத்துக்கிடையில் அதைக் கடத்தி வருகிறார். புதையல் தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, பிரச்னைகள் அவரைத் தொடர்கின்றன. அவரது நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

அவர்களைத் தேடி விக்ரம் செல்லும் பயணமே மீதியுள்ள திரைப்படம். பல காட்சிகளில் அடுத்து என்னவாகும் என்பதை எளிதாக யூகிக்க முடிந்தாலும் எவரும் எதிர்பாராத திருப்பத்துடன் திரைக்கதையை அமைத்த இயக்குநருக்கு பாராட்டு. ஆனால் அதற்கான காரணம் போதுமான அளவிற்கான நம்பகத்தன்மையுடன் அமையவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.

ஜெமினி, பீமா போன்ற படங்களில் கையாண்டுவிட்ட அதே மாதிரியான கரடுமுரடான ரெளடி பாத்திரம் விக்ரமிற்கு. இத்திரைப்படத்தில் அவருக்கு எவ்விதச் சவாலும் இல்லாததால் மிக எளிதாக இடது கையில் தன் பாத்திரத்தை அநாயசமாகக் கையாண்டிருக்கிறார். இத்தனை திறமையான நடிகர், ஏன் இத்தனை பலவீனமான திரைக்கதைகளாகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிற ஆதங்கம் தோன்றாமல் இல்லை.

ஆனால் மனிதர் இந்த வயதிலும் இத்தனை சுறுசுறுப்பாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்து சலித்த காட்சிகள்தான் என்றாலும் ‘நடிகர்’ விக்ரம் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது ஆறுதல்.

நாயகியாக தமன்னா.. தமிழ் சினிமாவின் வழக்கமான பாத்திரம். இவரை விடவும் இவரது தோழியாக வருகிற ஸ்ரீபிரியங்கா கவர்கிறார்.

சேட்டு முதலாளியாக ஹரீஷ் பரேடி. எத்தனை திறமையான நடிகர். இவருக்கும் அதிக சவாலான காட்சிகள் இல்லை. ஸ்ரீமன், சூரி, ஆர்.கே.சுரேஷ், வேலராமமூர்த்தி என்று பல நடிகர்கள் இருந்தாலும் ஒருவர் கூட மனதில் தங்கவில்லை. அவரவர்களின் காட்சிகளில் தோன்றி விட்டுச் செல்கிறார்கள்.



இசை எஸ்.தமன். மெதுவாக உருண்டு வந்து கொண்டிருக்கும் ரோடு ரோலரின் இடையே பாறாங்கல்லை வைத்து தடுப்பது போல சோம்பலான காட்சிகளின் இடையே இடையூறாக வந்து எரிச்சலூட்டும் பாடல்கள். சில மெட்டுக்களை ஏற்கெனவே கேட்ட மாதிரியே இருக்கிறது. பின்னணி இசை பரபரப்பாக அமைந்திருப்பது ஆறுதலான விஷயம்.

வடசென்னை என்றாலே ரெளடிகள், சமூக விரோதிகள் நிறைந்திருக்கும், குற்றங்கள் நிகழும் இடம் என்கிற பொதுப்புத்தி சார்ந்த கற்பிதத்தை இந்தப்படமும் கண்மூடித்தனமாக பின்பற்றியிருக்கிறது. ‘சிறார்களை பணியிடங்களில் சேர்ப்பதின் மூலம் இளம் குற்றவாளிகளை உருவாக்காதீர்கள்’ என்று கடைசியில் இயக்குநர் சொல்கிற ‘திடீர்’ உபதேசம் அதுவரையான காட்சிகளுக்கு எவ்விதத்திலும் பொருத்தமில்லாமல் சிரிப்பை வரவழைக்கிறது.

‘ஸ்கெட்ச்’ என்றால் வடசென்னை வழக்கில் பொதுவாக ஒருவரைக் கொலை செய்வதற்காகத் திறமையாக திட்டம் தீட்டுவது.. அப்படியொரு வார்த்தையை கார்களை எடுக்கும் விஷயத்திற்காக அநாவசியமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தனை புத்திசாலித்தனமான நாயகன், தன்னைச் சுற்றியுள்ள ஆபத்தைச் சிறிதளவும் யூகித்திருக்க மாட்டான் என்பதும், இவனுடைய நற்குணத்தை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் தர்க்கம் இல்லாமல் இடிக்கிறது.

கணினி யுகத்திலும் தீர்ந்து போன ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்ட பலவீனமான திரைக்கதையை இயக்குநர் விஜய்சந்தரும் நடிகர் விக்ரமும் நம்பியது ஆச்சர்யம்.
சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ – சினிமா விமரிசனம்

By சுரேஷ் கண்ணன் | Published on : 12th January 2018 04:27 PM |

சிபிஐ அதிகாரி பணியைத் தன்னுடைய கனவாக வைத்திருக்கும் ஒருவனுக்கு அத்துறையில் நிகழும் ஊழல் காரணமாக அந்த வாய்ப்பு தரப்படுவதில்லை. எனவே தானே ஒரு போலி அதிகாரியாக மாறுகிறான். ‘ரெய்ட்’ என்கிற பெயரில் ஊழல்வாதிகளிடமிருந்து பணத்தைக் கொள்ளையடித்து நல்லவர்களுக்குத் தருகிறான். ராபின்ஹூட், காக்கிச்சட்டை, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்களின் அதே வகை ‘கரு’ தான்.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் 2013-ல் வெளிவந்த ‘Special 26’ என்கிற ஹிந்திப்படத்தின் தமிழ்வடிவம்தான் இது. ஹிந்தியில் இருந்த நம்பகத்தன்மையும் குற்றத்தின் அழகியலும் தமிழில் பெரும்பான்மையாகச் சிதைந்திருப்பது சோகம்.

சிபிஐ அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்தவர் தம்பிராமையா. அதே அலுவலகத்தில் தன்னுடைய மகன் சூர்யாவை ஓர் அதிகாரியாக்கிப் பார்க்க வேண்டுமென்பது அவருடைய ஆசை. அது நிறைவேறுவதில் ஒரு பெரிய தடை இருக்கிறது. அங்கு உயர் அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன் வாங்கும் லஞ்சத்தை, தம்பி ராமையா மொட்டைக் கடிதத்தின் மூலம் காட்டிக் கொடுக்க முயல, அதிகாரியால் பழிவாங்கப்பட்டு பணியை இழக்கிறார்.

தன்னுடைய நேர்காணலிலும் அந்த அதிகாரி சிக்கலை ஏற்படுத்துவார் என்று சூர்யா யூகிக்கிறார். நினைத்தபடியே நடக்கிறது. இதே போன்ற ஊழலால் காவல்துறையில் பணி கிடைக்காமல் இறக்கும் தன் நண்பனின் மரணம் வேறு சூர்யாவிற்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஊழலின் காரணமாக தகுதியுள்ளவர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்படுவதும் தகுதியற்றவர்கள் முன்னேறும் சூழலை எதிர்க்க நினைக்கிறார்.

எனவே சிபிஐ அதிகாரிகளின் அடையாளத்தில் ஒரு போலியான குழுவை அமைத்து ஊழல்களின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ரெய்டுகள் மூலம் கைப்பற்றுகிறார். தங்கள் துறையின் பெயரால் நிகழும் தொடர் மோசடிகளைக் கண்டு ஒரிஜினல் சிபிஐ பதறுகிறது. குற்றவாளிகளை மோப்பம் தேடி அலைந்து கிட்டத்தட்ட நெருங்கி விடுகிறது.

இந்நிலையில் தன் கூட இருப்பவர்களுக்காக ஒரு பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபட நினைக்கிறார் சூர்யா. அவர்களைச் சுற்றி வளைக்க சிபிஐ தயாராக நிற்கிறது.

பிறகு என்னவானது என்பதை விறுவிறுப்பு குறைவாக சொல்லியிருக்கிறார்கள்.

நச்சினார்க்கினியன் என்கிற அழகான பெயர் சூர்யாவிற்கு. ‘இவர்களுக்கு வயசே ஆகாதோ” என்று நினைக்க வைக்கும் நாயகர்களில் முதன்மையானவராக இவரைச் சொல்லலாம். விசையுறு பந்தினைப் போல திரையெங்கும் பாய்கிறார். படத்தின் துவக்கத்தில் வரும் துள்ளலிசைப் பாடல் உட்பட அனைத்து பாடல்களிலும் ரகளையாக நடனம் புரிகிறார். படத்தின் பெரும்பான்மையான சுமை இவர் மீது இருப்பதால் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். சிபிஐ அதிகாரியாக இவரது தோரணைகள் கம்பீரம்.

ஏறத்தாழ சூர்யாவிற்கு இணையாகக் கலக்கியிருப்பவர் சுரேஷ் மேனன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையில் எதிர்நாயகனாக அட்டகாசம் செய்திருக்கிறார். (இயக்குநர் கெளதம் மேனனின் குரல் இவரது பாத்திரத்திற்குப் பெரிய பலம்). ஒரு பக்கம் மிக அநாயசமாகவும் தெனாவெட்டாகவும் தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும், இன்னொரு புறம் மூத்த அதிகாரியிடம் பணிந்து பதறுவதும் என சிறப்பான பங்களிப்பு. ‘உத்தமன்’ என்று இந்தப் பாத்திரத்திற்கு பெயர் சூட்டியிருப்பது குறும்பு.

குறிஞ்சிவேந்தன் என்கிற இன்னொரு அழகான தமிழ் பெயரில் உள்ள பாத்திரம் கார்த்திக். சிபிஐ உயர் அதிகாரி. இவரையும் நீண்ட காலத்திற்குப் பிறகு திரையில் பார்ப்பதால் சற்று ஆச்சரியம் தோன்றுகிறது. அவ்வளவே. ஓய்ந்து போன வயசான கார்த்திக்கைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.

ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, நந்தா, கலையரசன், சத்யன், ஆனந்தராஜ் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ‘எனக்கு எதிரியே என் வாய்தான்’ என்கிற ஆர்.ஜே.பாலாஜி சிறிது புன்னகைக்க வைக்கிறார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்கிற பழைய கிளாசிக் காமெடியை நினைவுகூர வைப்பது போல் பெட்ரோமாக்ஸ் லைட்டை பார்க்கும் போதெல்லாம் ‘மேன்டிலை’ செந்தில் உடைப்பதை வேறு வழியின்றி நகைச்சுவை என்று நினைத்துக் கொள்ளலாம். சிறிது நேரம் வந்தாலும் ஆனந்தராஜ் ரசிக்க வைக்கிறார்.



முதல் பாதியில் விறுவிறுப்பாக நகர்கிற திரைப்படம், இரண்டாம் பாதியில் இடையூறாகத் துவங்கும் ‘டூயட்’ பாடலுடன் நொண்டியடிக்கிறது.

பொதுவாக விக்னேஷ் சிவனின் திரைப்படங்களில் ‘ப்ளாக் ஹியூமரின்’ தேசலான சாயல் இருக்கும். இதிலும் சில இடங்களில் தென்படுகிறது. தன் தந்தையான தம்பி ராமையா தற்கொலை செய்து கொண்டாரோ என்று சூர்யா பதறியழும் போது நடக்கும் திருப்பம் சிரிக்க வைக்கிறது. சிபிஐ அதிகாரிகளுக்கான நேர்காணலில் ‘நான் ஊழல்வாதிகளைப் பிடித்துச் சிறையில் தள்ளுவேன்’ என்று ஆவேசமாக சொல்பவரின் பெயர் ‘சசிகலா’. இரட்டை அர்த்த தொனி கொண்ட நகைச்சுவைகளும் இருக்கின்றன.

‘சொடக்கு மேல சொடக்குப் போடுது’, ‘நானா தானா’ ஆகிய பாடல்களுக்குப் பார்வையாளர்கள் அதிஉற்சாகம் கொள்ளும்படி ரகளையாக இசையமைத்திருக்கிறார் அனிருத். பரபரப்பான காட்சிகளுக்கேற்றபடி விறுவிறுப்பான பின்னணி இசையையும் தரத் தவறவில்லை.

இத்திரைப்படத்தின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாக கலை இயக்குநரின் பணியைச் சொல்ல வேண்டும். எண்பதுகளில் நடக்கும் சம்பவங்கள் என்பதால் அந்தக் காலக்கட்டத்தின் சினிமா சுவரொட்டிகள், கட்அவுட்கள், பழைய மாநகரப் பேருந்துகள், கோல்ட் ஸ்பாட் குளிர்பானம், பியட், அம்பாசிடர் கார்கள். பஜாஜ் ஸ்கூட்டர் என்று பின்னணியின் நம்பகத்தன்மைக்காக அசாதாரணமான
உழைப்பைத் தந்திருக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணனின் காமிரா, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் போன்ற நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்குப் பலமாக அமைந்திருக்கின்றன.

நீரஜ் பாண்டே இயக்கிய ஹிந்தி வடிவத்தோடு (special 26) தமிழ் வடிவத்தை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஹிந்தி திரைப்படத்தில் நிகழும் ரெய்டுகள் நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கும். பூனை-எலி விளையாட்டில் அமைந்த திரைக்கதை, அக்ஷய் குமார், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய் போன்ற அற்புதமான நடிகர்களின் பங்களிப்பு என்று பெரும்பாலான அம்சங்கள் நிறைவாக அமைந்திருக்கும். குறிப்பாக ஹிந்தியில் மிக இயல்பாக அமைந்த கிளைமாக்ஸ் காட்சி தமிழில் அதீதமாகிச் சிதைந்திருக்கிறது. தமிழ் வடிவத்தில் வணிக அம்சங்கள் தூக்கலாக இருக்கின்றன.

‘தானா சேர்ந்த கூட்டம்’ என்கிற தலைப்பு இத்திரைப்படத்திற்கு எப்படி பொருந்துகிறது என்பது அந்த ‘சிவனுக்கே’ வெளிச்சம்.

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்: குருமூர்த்தி பேச்சு

   

By DIN | Published on : 14th January 2018 10:00 PM |


சென்னை: ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்று வரும் துக்ளக் இதழின் 48வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பேசினார்.

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்.

தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல் என்றும் கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது என்றவர் கழகங்களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது என கூறினார்.

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும் தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது என விமர்சித்தார்.

மேலும் திமுக, அதிமுகவால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். இலவசம் மற்றும் மானியங்களால்தான் தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஹிந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டிஎன்ஏவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர்

ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 12-இல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணப்பட்டுவாடா செய்தது வெளிப்படையாகவே தெரிகிறது. தினகரன் வெற்றி பெற்றதற்கு திமுகதான் காரணம் என்றவர் திமுக விலை போகியுள்ளது என்று குருமூர்த்தி பேசினார்.
கோமாதா எங்கள் குலமாதா! குலமாதர் நலம் காக்கும் குணமாதா!

Added : ஜன 15, 2018 01:27








தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். பாலுாட்டி சீராட்டி வளர்த்தவள். அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு அம்மாவுக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். வாழும் காலம் வரைக்கும் நமக்கு பால் கொடுத்து உதவும் கோமாதா தான். அன்பும், சாந்தமும் நிறைந்த பசுவைக் கண்டால் பெற்ற தாயைப் பார்த்தது போல மனதில் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். வாயில்லா ஜீவனாக இருந்தாலும் மற்ற பிராணிக்கு இல்லாத சிறப்பாக பசு மட்டுமே 'அம்மா' என்று அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பும்.

குழந்தையாக இருந்தபோது மட்டுமே பெற்ற தாய் பாலுாட்டுகிறாள். பசுவோ காலம் முழுக்க நமக்கு பால் தருகிறது, இதே போல காளைகள் நமக்கு உணவளிக்கும் பணியில் கடுமையாக பாடுபடுகின்றன. கலப்பையை இழுத்துக் கொண்டு களிமண் நிறைந்த நிலத்தை கடும் பாடுபட்டு உழுகிறது. வண்டிகளை இழுக்கிறது. செக்கு இழுக்கிறது. எனவே அவற்றையும் நம் குடும்பத்தின் அங்கமாக நினைத்து நன்றியுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறோம்.

தங்கச்சி பசு: லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளுக்கு 'கோமாதா' என்று பெயர் வழங்கப்படுகிறது. சில கோயில்களில் பராசக்தியே பசு வடிவில் வந்ததாக கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயிலில் அம்பாளின் பெயரே 'கோ'மதி அல்லது 'ஆ'வுடை என உள்ளது. 'கோ' என்றாலும், 'ஆ' என்றாலும் 'பசு' என்று பொருள்படும் அம்பிகையின் சகோதரரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்து பசு வடிவில் இருந்த தங்கையைப் பாதுகாத்து சிவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சொல்வர்.

பெண்களே.... மனசு வையுங்க! பால் கொடுக்கும் கறவை காலத்தில் பசுவுக்கு நேரத்திற்கு சரியாக புல், புண்ணாக்கு, தவிடு என ஆகாரம் அளிப்பர். வயதாகி கறவை நின்றதும் உணவளிக்காமல் விட்டு விடுவர். இதனால் பெரும் பாவம் உண்டாகும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பெண்கள் நினைத்தால் பசுவைப் பாதுகாக்க முடியும். தினமும் வீட்டில் சமைக்கும் போது காய்கறிகளில் இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளைச் சேகரித்து பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம். வீடுகளில் இதனைச்சேகரிக்கும் பணியில் சமூகசேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும். இதன் மூலம் கோபால கிருஷ்ணரின் அருள் உண்டாகும்.

நெய் மணக்கும் ஊர் : சிவனுக்கு பால், தயிர், நெய் ஆகிய மூன்றாலும் தனித்தனியாக அபிஷேகம் செய்யும் வழக்கம் இருக்கிறது. நெய் அபிஷேகம் செய்தால் மோட்சம் உண்டாகும் என்கிறது ஆகமம். திருவையாறு அருகிலுள்ள சிவத்தலமான தில்லைஸ்தானத்தில் உள்ள சிவன் 'நெய்யாடியப்பர்' என்று வழங்கப்படுகிறார்.

ஒரே நிமிடத்தில் உலகை வலம் வரலாம்:

பாரத தேசம் முழுவதும் புனிதமான கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை எல்லாம் தரிசிக்க வாழ்நாள் போதாது. புனித நதிகள், கடல்களும் கூட நம் நாட்டில் நிறைய உண்டு. இவற்றில் நீராடவும் வாய்ப்பில்லை. ஆனால், இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே வழி கோமாதாவான பசுவை வணங்குவது தான். அதன் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய தீர்த்தங்கள், மலைகள் எல்லாம் அதன் உடலில் அடங்கியுள்ளன. தினமும் காலையில் நீராடியதும் பசுவை வலம் வந்து வணங்கினால் உலகையே வலம் வந்த புண்ணியம் ஒரே நிமிடத்தில் கிடைத்து விடும்.

தானமா... உஷாரா இருங்க..!

அந்தணர்களுக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவங்கள் கூட நீங்கி விடும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், பசுவை பெறுபவர் அதனை அக்கறையாக பாதுகாப்பாரா என்பதில் தானம் அளிப்பவர் உஷாராக இருப்பது அவசியம். சியவன மகரிஷி ஸ்லோகம் ஒன்றில், 'எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதோ அங்கு பாவம் எல்லாம் நீங்கி நாடே ஒளி பெற்றுத் திகழும்'என சொல்லியுள்ளார். 'அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரியட்டும்' என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.

கோடிமடங்கு நன்மை :

பசுவைப் பார்த்தாலே புண்ணியம் என்கிறது சகுன சாஸ்திரம். காலையில் எழுந்ததும் பசுவை தரிசித்தால் அந்த நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும். நல்ல விஷயமாக வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் கண்டால் வெற்றி கிடைக்கும். மாட்டுக் கொட்டில் இருக்கும் வீட்டில் தெய்வ அருள் எப்போதும் நிறைந்திருக்கும். கொட்டிலுக்கு 'கோஷ்டம்' என்று பெயர். கோயிலில் மூலஸ்தான சுற்றுச்சுவரை 'கோஷ்டம்' என்பர். கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான இடம் வேறில்லை என்கிறது சாஸ்திரம். அங்கு மந்திரம் ஜெபித்தால் அதன் நன்மை கோடி மடங்காக இருக்கும்.

Sunday, January 14, 2018

சிங்கப்பூரில் 21.4C- கடும் குளிர் நிலை

13 Jan 2018



சிங்கப்பூரில் அண்மைய காலங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை நேற்று குறைந்தது. ஜூரோங்கில் நேற்று 21.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருக்கிறது. செந்தோசாவில் நேற்று பிற்பகல் 4 மணி அளவில் பதிவான வெப்பநிலை அளவு 24.7 டிகிரி செல்சியஸ் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தது. ஜூரோங் வெஸ்ட் பகுதியில் வியா ழக்கிழமையும் ஆகக் குறைவாக வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியசாக இருந்தது என்பதை இந்த வாரியம் சுட்டிக்காட்டியது.

சிங்கப்பூரில் மழையும் கடும் குளிரும் நிலவி வருகிறது. நாட்டின் இதர இடங்களில் அன்றாட குறைந்த பட்ச வெப்பநிலை 21.7 டிகிரி செல்சிய சிலிருந்து 23.1 டிகிரி செல்சியஸ் வரையில் இருந்துவருவதாக இந்த வாரியம் குறிப்பிட்டுள்ளது. ஜூரோங் வெஸ்ட்டில் நேற்று நிலவிய வெப்பநிலைதான் கடந்த ஐந் தாண்டு காலத்திலேயே ஆகக்குறை வான அளவு என்று கூறிவிடமுடி யாது. கடந்த 2013ல் 20.0 டிகிரி செல்சியஸ், 2014ல் 20.1 டிகிரி செல்சியஸ், 2016ல் 21.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்த தாக இந்த வாரியத்தின் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

சிங்கப்பூர் வனவிலங்குப் பூங்காக்களில் 2017இல் 540 பிறப்புகள் 


12/1/2018 15:03


சிங்கப்பூர் வனவிலங்குப் பூங்காக்களில் சென்ற ஆண்டு போர்னியோ ஓராங் உத்தான், குரங்குக் குட்டி, சிறுத்தைக் குட்டி போன்ற540 விலங்குகளும் பறவைகளும் பிறந்தன.

சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் அந்தத் தகவலை வெளியிட்டது.


ஜூரோங் பறவைப் பூங்கா, சிங்கப்பூர் விலங்குத் தோட்டம், ஆற்று சஃபாரி ஆகியவற்றில் 145 பிறப்புகள் பதிவுசெய்யப்பட்டன.

அவற்றுள் கால்வாசி அருகிவரும் இனத்தைச் சேர்ந்தவை.

விலங்குகளின் பாதுகாவலர்களை காப்பகத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி பாராட்டினார்.

அவர்களின் அர்ப்பணிப்பால் கடந்த ஆண்டு சிறப்பாய் அமைந்ததாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கான்ஸா என்ற குரங்குக் குட்டி பிறந்தது.

அதன் இனம் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கான்ஸாவோடு சேர்த்து சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் மொத்தம் 46 ஓராங் உத்தான் குரங்குகள் உள்ளன.

ஐந்தாண்டுக்குப் பிறகு முதல்முறையாக விலங்குத் தோட்டத்தில் வெள்ளை காண்டாமிருகமும் பிறந்தது.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சிறுத்தை ஒன்றும் பிறந்தது. ஜூரோங் பறவைப் பூங்காவில் சுமார் 10 ஆண்டுக்குப் பிறகு மாரு எனும் ராஜ பெங்குவின் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பூரிப்புடன் பொங்கும் பொங்கல் திருநாள் 

14/1/2018 11:32


சிங்கப்பூரில் உழவுத் தொழில் நடைமுறையில் இல்லாவிட்டாலும் பொங்கல் வந்துவிட்டால், உவகைக்குப் பஞ்சமில்லை. லிட்டில் இந்தியா வட்டாரமே சிறிய கம்பமாக மாறிக் களிப்பூட்டும். பொங்கல் திருநாளை வரவேற்கும் வகையில் லிட்டில் இந்தியா வட்டாரம் எழில்மிகு ஒளியூட்டு அலங்காரங்களில் வண்ணமயமாக மின்னும்.



பொங்கலுக்குத் தேவையான பொருட்களும் அங்கு விற்கப்படும். அலங்கரிக்கப்பட்ட பானைகள், கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, தோரணங்கள், வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடித்திருக்கும். மாடுகளும் பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்கும்.

லிட்டில் இந்தியா வட்டாரத்தைத் தாண்டி குடியிருப்புப் பேட்டைகளிலும் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும். அவற்றில் இந்தியர்களுடன் பிற இனத்தனவரும் கலந்துகொள்வதைக் கண்கூடாக நாம் பார்க்க முடிகிறது.

இளம் தலைமுறையினர் தங்களின் மரபு பற்றியும் அதனைச் சார்ந்துள்ள விழுமியங்கள் குறித்தும் அறிந்துகொள்ள இத்தகைய நிகழ்ச்சிகள் வழிவகுக்கின்றன. அதே நேரத்தில் மற்ற இனத்தவரும் பொங்கலைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இக்கொண்டாட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன.



பொதுவாகப் பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்தினம் போகிப் பண்டிகை. வீட்டிலிருக்கும் பழைய தட்டுமுட்டுச் சாமான்களை அகற்றி வீட்டைத் துப்புரவு செய்வதற்கான நாள். தை மாதத்தின் முதல் நாளில் சூரியப் பொங்கல் கொண்டாடப்படும். கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்றைய நாளில் பொங்கல் படைக்கப்படுகிறது.

மறுநாள், மாட்டுப் பொங்கல். உழவுத் தொழிலில் மாடுகளின் பங்கு இன்றியமையாதது. எனவே அந்நாளில் மாடுகளை நினைவுகூர்ந்து அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

நான்காம் நாள் காணும் பொங்கல். மக்கள் தங்கள் உற்றார் உறவினருடன் அன்பையும் உணவையும் பகிர்ந்துகொள்ளும் நாள்.

சிங்கப்பூரில், சுமார் 20 ஆண்டுக்கு முன்பை விட தற்போது பொங்கல் பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. லிட்டில் இந்தியா வட்டாரம் 2010ஆம் ஆண்டிலிருந்து பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒளியூட்டப்படுவது, பல்வேறு வட்டாரங்களில் நடைபெறும் பொங்கல் கொண்டாட்டங்கள், ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பண்டிகை ஆகியவை அதற்குச் சான்றாகும். நவநாகரிக சிங்கப்பூரில் பாரம்பரியம் கட்டிக்காக்கப்படுவதை இது போன்ற பண்டிகைகள் புலப்படுத்துகின்றன. நம் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறி, இங்கு நிலவும் இன நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்க்கின்றனர்.

பொங்கலை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பற்பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நீங்களும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். கடந்த ஆண்டைப் போல இவ்வாண்டும் பொங்கல் திருநாள், வார இறுதியில் வந்துள்ளது. எனவே இம்முறை “ஞாயிறுக்கு” நன்றி நவில ஞாயிறன்று பொங்கலை இன்முகத்துடன் கொண்டாடும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

உள்ளத்தில் பொங்கும் இன்பம்
என்றும் எங்கும் நிலைக்கட்டும்

அன்புடன்

நித்திஷ் செந்தூர்
Doctor Commits Suicide After Spat With Wife Over Non-Vegetarian Food in Lucknow 

Published: January 12, 2018 2:26 PM IST

 By India.com News Desk Email Edited by Rini Sharma EmailFollow



Lucknow. Jan 12: A doctor in Lucknow committed suicide at his resident in Gomtinagar on Wednesday night reportedly after having an argument with his wife over eating non-vegetarian food.

Dr Uma Shanker Gupta, a skin specialist, on Wednesday bought non-veg food for himself and his six-year daughter Aradhya, who was asleep but was woken up by him after which both ate together.

When his wife Deepti Agarwal came to know about this, she got angry and an argument broke out between the couple over feeding non-veg food to Aradhya. Following the heated exchange, Gupta locked himself in a room around 11.30 PM.

Half-an-hour later when Deepti knocked on the door of Gupta’s room, in a bid to apologise, he did not respond. She also called her on his phone but, he did not answer.

Deepti got tensed and called up Hemant Pandey, a colleague of Gupta, and her neighbours for help. When the door was broken, the 43-year-old doctor was found hanging from the ceiling. He was rushed to the hospital where doctors declared him brought dead.

The police have asserted that it is a case of suicide on the basis of Deepti’s confession about having a verbal spat with Gupta. Meanwhile, no suicide note has been found.

பள்ளி, கல்லூரிகள் அருகே பெட்டி கடைகளுக்கு தடை


சென்னை : பெட்டி கடைகளுக்கு உரிமம் பெற அணுக வேண்டிய அதிகாரிகள் விபரங்களை, அறிவிப்பு பலகையில், மாநகராட்சி வெளியிடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சென்னையில் அண்ணா நகர், அம்பத்துார், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில், பெட்டி கடைகளுக்கான உரிமம் கேட்டு, மாநகராட்சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையத்தில், சிலர் விண்ணப்பித்துள்ளனர். எந்த பதிலும் இல்லாததால், விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்கள், நீதிபதி, வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தன.

அலைக்கழிப்பு

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், மெர்சி ஞானம்மாள், ''தங்கள் அதிகார வரம்புக்குள் வரவில்லை என, அதிகாரிகள் ஒவ்வொருவரும், மனுதாரர்களை அலைய விடுகின்றனர்,'' என்றார்.

மாநகராட்சி சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், கோபாலகிருஷ்ணன், ''இருக்கிற, 622 கடைகளில், 287 கடைகளின் உரிமையாளர்கள், உத்தரவுகளை பெற்றுள்ளனர். இன்னும் பல விண்ணப்பங்கள் மீது, உத்தரவு பிறப்பிக்க வேண்டியதுள்ளது,'' என்றார்.


இதையடுத்து, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும், இதற்கென தனி அதிகாரி உள்ளதாகவும், மனுதாரர் களின் கோரிக்கையை அவர் பரிசீலிப்பதாகவும், மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான குழுவில், மனுதாரர்கள் மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

எனவே, கடைகளுக்கான உரிமம் வழங்குவதற்கான, மாநகராட்சி அதிகாரிகள் குழுவின் விபரங்களை, அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அந்த விபரங்களை, புகைப்படமாகவோ அல்லது குறிப்பு எடுத்துக் கொள்ளவோ, ஏதுவாக இருக்கும். அவர்களிடம், உரிமம் கோருபவர்கள், மனுக்களை அளிக்கவும் முடியும். அதனால், அலைக்கழிக்கப்படுவதுதடுக்கப்படும்.

மாநகராட்சி குழு உறுப்பினர்களில் மாற்றம் ஏற்படும்போது, உடனடியாக, அந்த விபரங்களையும், அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் அருகில், பெட்டி கடைகள் இல்லாத வகையில், குழு உறுதி செய்ய வேண்டும். சிகரெட், பான்பராக் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை, விற்பனை செய்யக் கூடாது.

'ஆதார்' அட்டை

பிழைப்புக்காக, பெட்டி கடைகளை மனுதாரர்கள் நடத்துகின்றனர். அனைவருக்கும், அரசால் வேலை வழங்க முடியாததால், சுய வேலைவாய்ப்பை, அரசு ஊக்குவிக்க வேண்டும். எனவே, ஒரு மாதத்துக்குள் புதிதாக, மாநகராட்சி குழுவிடம், மனுதாரர்கள் மனு அளிக்க வேண்டும். அதை, ஒரு மாதத்துக்குள், குழு பரிசீலிக்க வேண்டும்.

பெட்டி கடைகள் நடத்த விரும்புவோர், மாநகராட்சி குழுவை அணுகும்போது, 'ஆதார்' அட்டையையும் அளிக்க வேண்டும். அளிக்க தவறுபவர்களிடம், கருணை காட்ட வேண்டியதில்லை. ஆதார் அட்டை அளிப்பதால், ஒருவரே இரண்டு கடைகளை நடத்துவது தடுக்கப்படும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


முதியோர் ஓய்வூதியத்தை தொலைத்து தவித்த மூதாட்டி: சொந்தப் பணத்தில் ரூ.1100 கொடுத்த மனிதாபிமான காவலர்

Published : 12 Jan 2018 22:06 IST

திண்டுக்கல்



பணம் கொடுத்து உதவிய காவலர் வின்சென்டுக்கு நன்றி சொல்லும் மூதாட்டி - படம்: சிறப்பு ஏற்பாடு

முதியோர் ஓய்வூதியத்தை தொலைத்துவிட்டு தவித்த மூதாட்டிக்கு சொந்தப் பணத்திலிருந்து கொடுத்து உதவிய மனிதாபிமான காவலரை சக காவலர்கள் பாராட்டினர்.

திண்டுக்கல் கல்நூத்தாம் பட்டியை சேர்ந்த மூதாட்டி ராமக்காள் (80). இவருக்கு யாரும் ஆதரவில்லை. மாதாமாதம் அரசு தரும் ரூ.1000 முதியோர் ஓய்வூதியத்தை வைத்து காலம் தள்ளும் நிலையில் உள்ளார். இந்நிலையில் இந்தமாத முதியோர ஓய்வூதியத்தை வாங்கிய ராமக்காள் அந்த பணத்தை தவற விட்டுவிட்டார்.

செய்வதறியாது திகைத்த அவர் தனது பணம் காணாமல் போனது குறித்து புகார் அளிக்க திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்றார். பொதுவாக காவல் நிலையத்தில் தலை காய்ந்தவர்களை அலட்சியமாக நடத்துவார்கள். அதிலும் ராமாக்காள் வயதானவர், சாதாரணமாக ரூ.1000 பணம் காணாமல் போனதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வார்களா? என்ற தயக்கத்துடன் சென்றார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்து நான்கு நாட்களாக அலைந்தவருக்கு அலட்சியமே பதிலாக கிடைத்தது. நேற்று காவல் நிலையம் சென்றவரை தலைமை காவலர் வின்சென்ட் அமரவைத்து என்னவென்று கேட்டார். தான்வைத்திருந்த முதியோர் ஓய்வூதியப் பணம் ரூ 1000 ஆயிரம் தொலைந்து விட்டது, புகார் செய்தும் நான்கு நாட்களாக அலைந்து வருவதாக ராமாக்காள் அழுதபடி கூறியுள்ளார்.

அவர் நிலைமையை புரிந்துகொண்ட தலைமை காவலர் வின்சென்ட் பணத்தை மீட்க முடியாது. ஆனால் அந்த தொகை அந்த மூதாட்டிக்கு பெரிய தொகை. ஆகவே அவர் பிரச்சினையை தீர்க்க ஒரு முடிவெடுத்தார்.

மூதாட்டியை அழைத்த தலைமை காவலர் வின்சென்ட் தன்னுடைய சம்பளத்திலிருந்து ஆயிரம் ரூபாயை கொடுத்து, வழிச்செலவுக்கு ரூ.100 கொடுத்தும் அவரை அனுப்பி வைத்தார். மூதாட்டி சந்தோஷத்துடன் நன்றி சொல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்தத் தகவல் தெரிந்து காவல் நிலையத்தில் உள்ள மற்ற போலீஸார் அவரைப் பாராட்டினார்கள். தகவல் பரவவே தனியார் தொலைக்காட்சி ஒன்று அவரது மனித நேயத்தை பதிவு செய்தது.
முதன்முறையாக சவுதியில் பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடக்கம்

Published : 13 Jan 2018 09:02 IST

எடா



சவுதி அரேபியாவின் எடா நகரில் பெண்களுக்காக தொடங்கப்பட்டிருக்கும் கார் விற்பனையகம்.

சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் ஓட்டுவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சவுதியின் புதிய மன்னராக பொறுப்பேற்ற முகமது சல்மான், பெண்கள், வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கினார். மன்னரின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான உலக நாடுகள் பாராட்டு தெரிவித்தன.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் எடா நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான கார் விற்பனையகம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. சவுதியில் பெண்களுக்காக மட்டும் ஒரு கார் விற்பனையகம் தொடங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த விற்பனையகத்தில் பெண்கள் மட்டுமே கார் வாங்க முடியும். மேலும், அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் பெண்களே. இந்த விற்பனையகத்தில் கார் வாங்கும் பெண்களுக்கு, தேவைப்படும்பட்சத்தில் கடனுதவிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கென கார் விற்பனையகம் தொடங்கப்பட்டிருப்பது சவுதி பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தராயன சங்கராந்தியை உளமாரக் கொண்டாடுவோம்!

Published : 13 Jan 2018 10:20 IST


வி.ராம்ஜி



மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தான் பண்டிகைகள். பண்டிகைகளைக் கொண்டாடுவது மகிழ்ச்சி இன்னும் இன்னும் பெருகுவதற்குத்தான்! அதன் தாத்பரியங்களை முழுமையாக அறிந்து கொண்டாடும்போது கிடைக்கிற மனநிறைவு இன்னும் சிறப்பானது! அந்த வகையில், தொன்மையான பண்டிகை... பொங்கல் திருநாள், நம் வாழ்வில் முக்கியமானதொரு விழா!

தமிழ் கூறும் நல்லுலகில், பொங்கல் விழாவுக்கு முக்கியமான இடம் உண்டு.

சோழர்கள் காலத்திலேயே பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது. ஆனால் அப்போது பொங்கல் விழா என்று குறிப்பிடவில்லை. அந்தக் கொண்டாட்டத்தைத்தான் பிற்பாடு தமிழர்கள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்று பெயர் வைத்துக் கொண்டாடி, வழிபட்டு, குதூகலம் அடைந்து வருகின்றனர்’’ என்று தெரிவிக்கிறார் சரித்திர ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம்.

‘‘சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி, பல்லவர்கள் காலத்துக் கல்வெட்டுகளிலும் சரி... எந்தவொரு இடத்திலும் பொங்கல் என்ற சொல்லை உபயோகிக்கவே இல்லை. ஆனால், தைமாதத் திருநாளை விசேஷ நாளாக, அற்புத விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதாவது, உத்தராயன சங்கராந்தி எனும் பெயரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.

‘சங்கரம்’ என்றால் ‘நகரத் தொடங்குதல்’ என்று அர்த்தம். உத்தராயன சங்கராந்தி என்பது, வருடந்தோறும் தை மாதம் முதல் நாளன்று, சூரியனானது தென் திசையில் இருந்து வட திசை நோக்கித் தன் பயணத்தைத் தொடக்குகிறது. இதையே உத்தராயன புண்ய காலம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

இதனால்தான் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, அதாவது மார்கழி மாதத்திலேயே குளிர்காலம் தொடங்கிவிடுகிறது. மார்கழி மாதத்தில் பூமியெங்கும் குளிர் பரவி, அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் காற்று மண்டலத்தில் ஓசோன் அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் காற்றைச் சுவாசித்தால், ஆயுள் பலமும் ஆன்ம பலமும் பெருகும் என்பதற்காகத்தான், மார்கழியில் காலையில் சீக்கிரமே எழுந்து, பெரிய கோலம் போடச் சொன்னார்கள். ஆலய வழிபாட்டை வலியுறுத்தினார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்!

தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடி நகர்வலம் வரச் செய்தார்கள். இந்த நாளில், அதிகாலை நேரத்தில் அந்தக் காற்றைச் சுவாசித்தால், உடலில் ரத்த ஓட்டம் வேகமாகும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்‘’ என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
வீடு விலை குறைகிறதா?

Published : 13 Jan 2018 09:34 IST

விபின்
 
உலக அளவிலான நெருக்கடி நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் பெரும் தேக்கத்தைச் சந்தித்தது. ஆனால், சென்னை ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய தேக்கத்தை அடையாமல் தாக்குப் பிடித்தது. ஆனால், சில ஆண்டுகளாக சென்னை ரியல் எஸ்டேட்டும் தேக்கமடைந்து வருவதாக இத்துறை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான நைட்பிராங்க் ரியல் எஸ்டேட் ஆய்வு அறிக்கை 2011 ரியல் எஸ்டேட் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது சென்னையில் வீட்டு விற்பனை 56 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இந்நிறுவனத்தின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. முடிவடைந்த 2017 அரையாண்டில் இந்திய அளவில் ரியல் எஸ்டேட் எப்படி இருந்தது என்பதை இந்த அறிக்கை ஆய்வுசெய்கிறது. இந்திய அளவிலும் வீட்டு விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சரிவடைந்துள்ளது. 2,44,686 ஆக இருந்த வீட்டு விற்பனை 2017-ல் 2,28,072 ஆகச் சரிவடைந்துள்ளது. அதுபோல புதிய வீட்டுத் திட்டங்கள் 1,75,822லிருந்து 1,03,570 ஆகச் சரிவடைந்துள்ளது.

இந்திய அளவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான மோசமாக 38 சதவீதம் சரிவடைந்துள்ளது. புதிய வீடுகள் கட்டப்படுவதும் 78 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்திய நகரங்களில் ஹைதராபாத்தில் 2017-ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வெறும் 940 வீடுகளே விற்பனையாகியுள்ளன. இந்திய அளவில் இது மோசமான வீழ்ச்சி. அதற்கடுத்த இடத்தில் அகமதாபாத் இருக்கிறது. அங்கு 2,916 வீடுகள் விற்பனையாகியுள்ளன. 3,200 வீடுகள் விற்பனையுடன் சென்னை அடுத்த நிலையில் இருக்கிறது. கடந்த அரையாண்டில் வீட்டு விற்பனையில் பெங்களூரு 8,384 வீடுகளுடன் முதலிடத்தில் உள்ளது, இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை 7,490 வீடுகளுடன் இரண்டாம் இடத்திலுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2017-ன் முதல் அரையாண்டைவிடவும் இரண்டாம் அரையாண்டு தேக்கமடைந்துள்ளது. இந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது, மணல் தட்டுப்பாடு, அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., 2016-ன் இறுதியில் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை இவை எல்லாம் 2017-ன் ரியல் எஸ்டேட்டைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கின.

2017-ல் முதல் அரையாண்டின் புதிய வீட்டுப் பணிகள் தொடக்கம் 6,035. இது 2016-ன் முதல் அரையாண்டைவிட 220 எண்ணிக்கை கூடுதல். ஆனால், 2017-ன் இரண்டாம் அரையாண்டின் புதிய வீட்டுப் பணிகள் தொடக்கம், 2016-ன் இரண்டாம் அரையாண்டைவிட 1,600 எண்ணிக்கை குறைவு. இதிலிருந்து 2017-ன் தேக்க நிலையைப் புரிந்துகொள்ள முடியும். அதுபோல சென்னையின் ரியல் எஸ்டேட் வளம் மிக்கப் பகுதியான தென்சென்னைப் பகுதியில் புதிய வீட்டுப் பணிகள் தொடக்கம் 19 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதுவே மேற்குச் சென்னையில் 47 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது.

2017-ன் வீட்டு விற்பனை 2016-ம் ஆண்டின் வீட்டு விற்பனையைவிட 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஆனால், 2017-ன் முதல் அரையாண்டு வீட்டு விற்பனை 2016-ன் இரண்டாம் அரையாண்டைவிடக் கூடுதலாகத்தான் இருந்தது. அதே நேரம், 2017-ன் இரண்டாம் அரையாண்டின் விற்பனை இதுவரையில்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதுபோல ஒவ்வொரு பகுதிக்கென நிலவும் சந்தை விலையிலும் 3 சதவீதம் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விலை வீழ்ச்சி வரும் ஆண்டில் வீடு வாங்குபவர்களுக்குச் சாதகமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

Published : 13 Jan 2018 13:31 IST
 


'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி.

பொதுவாக தமிழ்த் திரைப்பட சாட்டிலைட் உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்தப் படம் வெளியானதிலிருந்து 100 நாட்களுக்குப் பின்னரே அதை ஒளிபரப்புவது வழக்கம்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக இம்முறை பல புதிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்படுகின்றன.

இது குறித்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், "தமிழ் சினிமா முன்னேறிவிட்டது. வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே பல வெற்றித் திரைப்படங்கள் பொங்கலுக்காக ஒளிபரப்பப்படுகின்றன. பெரிய மாற்றம். : #Mersal #Aramm #TheeranAdhigaaramOndru #Karuppan Plus #Kabali #Bhairava #Vanamagan #MaragathaNanayam வீட்டிலிருந்தே ரசித்து மகிழவும்" என பதிவிட்டிருக்கிறார்.

எந்த சேனலில் என்ன படம்?

விஜய் டிவி: கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சன் டிவி: 14-ம் தேதி காலை 11 மணிக்கு நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ திரைப்படமும், 15-ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. 




அறம் படத்தில் நயன்தாரா

ஜீ தமிழ்: 14-ம் தேதி காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம்’. 15-ம் தேதி, காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.


கலைஞர் டிவி: 14-ம் தேதி காலை 10.30-க்கு அதர்வா நடித்த ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம் வெளியாகிறது. 15-ம் தேதி காலை 10.30-க்கு அஸ்வின், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘திரி’ படம்.

பொங்கல் வைத்த கையோடு, சேனல்களை மாற்றி திரைப்படங்களைக் காண்பதற்கு மட்டுமே மக்களுக்கு நேரம் இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் இனி பொங்கல் என்பது தொலைக்காட்சியை காணும் பொங்கலாகிவிடும் போல் இருக்கிறது.
WhatsApp becomes ‘outdated’ for many Indian users

THE ASIAN AGE.
Published : Jan 13, 2018, 4:50 pm IST

The chat app became obsolete for many users as of midnight on 13 January.



The app also claims that the user is on a beta testing program and offers the user an option to leave the program.

Earlier only some users reported that their WhatsApp was facing some kind of issue around the first week of January, but the problem seems to have spread to more users from the midnight of 13 January. Many users of the chat app have taken to social media platforms to express their frustration.

The users claim that WhatsApp is asking them to update the app to continue using the service. The option to update the app comes after opening the app and the message that they see on their screen says 'This version of WhatsApp became obsolete 0n 13 Jan, 2018. Please go to the Google Play Store and download the latest version.' But, according to users, even after going to the Google Play Store, they are not able to download the latest version of the app, as there are no updates available. The app also claims that the user is on a beta testing program and offers the user an option to leave the program.

Tapping the opt-out button doesn't do anything, according to various users on Twitter. The problem seems to exist mostly for Xiaomi smartphone users as those who are complaining appear to be using Xiaomi devices. Some claim that the app is not working even after re-installing it. But one cannot be absolutely sure if it is only in Xiaomi phones or other phones as well.

According to a report on Techook.com WhatsApp has acknowledged the problem faced by its users and said that the problem is being fixed. WhatsApp has issued a statement which read, "It was a problem with how our app is distributed, which is not under our control”.

The Facebook owned app had also suffered a global outage on New Year's eve and the service was restored only after a few hours later.
Reliance Jio is world's 9th largest mobile publisher in non game revenue category 

N V Vijayajkumar, Bengaluru, DH News Service Jan 13 2018, 20:36 IST



Mukesh Ambani claps while inaugurating Jio mobiles in Mumbai.

Reliance Jio is the 9th biggest mobile publisher in non-game revenue category worldwide in 2017, the only Indian company in the top 10 list, states the Sensor Tower Store Intelligence report.

A mobile publisher is a company that owns and runs a mobile website or app that dedicates space to display advertising in exchange for money.

Reliance Jio Infocomm Limited or Reliance Jio is an LTE mobile network operator and a wholly owned by Mukesh Ambai's Reliance Industries.

Sensor Tower Store Intelligence report, brought out by San Francisco-based Sensor Tower, presents top mobile apps, games and publishers worldwide in 2017. The report states that mobile users spent nearly $60 billion in apps during 2017 on the App Store and Google Play.

Reliance Jio is the only Indian company mentioned in the list. The company, which was founded in 2007, disrupted Indian telecom market by rolling out 4G data scheme during the summer of 2017.

The Sensor Tower data states that Tencent is the world's top earning mobile publisher in terms of both non-game and mobile game revenue in 2017, with the aforementioned Tencent Video and Honor of Kings as its standout apps in those categories.

Sensor Tower helps developers and companies through its App Store Optimisation (ASO) and Store Intelligence products to get vital keyword and competitive data so that they can improve visibility, performance and ROI.

As per a Trai report released on Friday, Jio has subscriber base of 15.2 crore at a time when India's total mobile subscriber base plummeted from 120 crore in October 2017.

When contacted by DH, Reliance Jio officials didn't comment on the development.

Bhogi+fog effect: Pollution levels higher than last year in Chennai 

DECCAN CHRONICLE. | SHWETA TRIPATHI

Published Jan 14, 2018, 1:13 am IST

Only two stations - Shozhinganallur and Alandur - that witnessed 185 RSPM and 135 RSPM last year had the pollution levels lower than last year.



A local train in Villivakkam gets camouflaged in smog making it barely visible. (Photo: DC)

Chennai: The Bhogi celebrations by Chennaiites increased the pollution in several pockets of the city on Saturday. Pollution levels in Valasaravakkam, Thiru-Vi-Ka Nagar, Manali, Ambattur, Kodambakkam and Anna Nagar increased to an all-time high level bringing acute breathing problems to local residents.


The 24-hour ambient air quality monitoring 15 zones of Greater Chennai Corporation by Tamil Nadu Pollution Control Board (TNPCB) on Saturday showed that almost all localities witnessed a sharp increase in Respirable Suspended Particulate Matter (RSPM) than last year on Bhogi day.

Valasaravakkam topped the list with pollutant level of 386 RSPM followed by Thiru-Vi-Ka Nagar (353), Ambattur (343), Kodambakkam (339) and Anna Nagar (270). However, last year Ambattur recorded highest RSPM of 306, while Thiru-Vi-Ka Nagar, Manali, Royapuram and Valasaravakkam recorded 276, 237, 234 and 234 of RSPM.

Only two stations - Shozhinganallur and Alandur - that witnessed 185 RSPM and 135 RSPM last year had the pollution levels lower than last year. This year Shozhinganallur witnessed 141 RSPM and Alandur saw 135 RSPM of pollutants.
North Chennai usually witnesses higher levels of pollution, but this year South Chennai suffered. “The motorists got camouflaged in the smog and it was difficult to spot the vehicles without their headlights on. I almost escaped an accident due to poor visibility, as it was difficult to ride surrounded by thick smog,” said S. Ilavarasan, a resident of Tambaram.

Though the overall status of gaseous pollutants- sulphur dioxide and nitrogen dioxide was found to be well within the ‘prescribed standards’ of 80 micrograms per cubic meter, according to TNPCB, real-time Air Quality Index (AQI) showed severe pollution levels reaching PM 2.5 early morning. After around 9.30 am, the smog got cleared off, but the pollution levels remained stable until late evening.
Though TNPCB officials claimed to have carried awareness drive to educate people on pollution-related problems through pamphlet distribution and announcements, nothing seems to have changed on the ground as people were still seen burning plastic waste in several localities.

“I could only smell smoke all over the city while I came out for a morning walk. We have been practising these cultural practices for years and it did not cause such problems, but the issue is concerning now,” said Munna Khan, a resident of Valasaravakkam.
Chennai: CCB arrests two more in TRB scam 

DECCAN CHRONICLE.

Published Jan 14, 2018, 1:30 am IST

The duo, I. Raghupathy(34) from Kolathur and J. Sureshpaul (34) from Ayanavaram, are employees of a private firm.


They are arrested and remanded in judicial custody.

Chennai: The Central Crime Branch (CCB) of the city police on Saturday arrested two more men in connection with the Teachers Recruitment Board (TRB) scam wherein data were manipulated in the OMR sheets before releasing the list of selected candidates for the post of lecturer in government polytechnics in the state.

The duo, I. Raghupathy(34) from Kolathur and J. Sureshpaul (34) from Ayanavaram, are employees of a private firm. They are arrested and remanded in judicial custody.

The city police registered an FIR against more than 150 persons after the details of the scam broke out. Last month, a call taxi driver, Ganesh (28) was arrested for collecting Rs 16 lakh from a candidate. Another man, Sheik Dawood, a software professional surrendered at the court in Tiruvallur. Both of them were involved in manipulating the data, according to a complaint by a member-secretary of TRB. More than 200 aspirants had their mark sheets fudged for which cash was paid in lakhs by each candidate. The majority of the aspirants who paid to fudge data were from Salem, Erode and Namakkal district, police sources said.

Festival mood grips Andhra Pradesh capital 

DECCAN CHRONICLE.

Published Jan 14, 2018, 7:14 am IST



Sankaranti has given relief to bureaucrats and politicians in the Capital region.

Vijayawada: Sankaranti has given relief to bureaucrats and politicians in the Capital region. Nearly 30 bureaucrats have already left for Hyderabad due to Sankranti holidays while politicos have left for Bengaluru, Chennai and Coorg to spend holidays in their estates. Since followers also left, party offices in the capital wore a deserted look.

Chief Minister N. Chandrababu Naidu left for his native place in Naravari Palle, Chittoor district, on Saturday afternoon. He will be spending his Sankranti holidays with family members. District collector B. Lakshmikantham is also on a vacation and will be back on January 16. Following the Chief Minister 14 ministers have already left for their native villages.

Politicians are planning their Sankranti holidays at Araku, Maredumilli, Ooty and Coorg. Many Telugu Desam leaders also left for their native places. “Apart from spending the Sankranti holidays with friends and relatives, we have been advised to concentrate on building health profiles of the villages to create a healthy AP,” a TD leader said, and added that cleaning tanks is also another mission they are taking up in villages.
University of Hyderabad student issued notice for abusing professor on social media

By Express News Service | Published: 13th January 2018 03:46 AM |



HYDERABAD: Days after the students of the University of Hyderabad had raked up the issue of an abusive social media post by a student against Prof K Laxminarayana of the School of Economics, the administration announced on Friday that the student concerned was issued a show-cause notice. Accordingly, the student, Karan Palsaniya, will appear before the University’s Proctorial Board on January 17.

University spokesman Prof Vinod Pavarala said in a statement that the complaint given by the professor to the vice-chancellor was taken seriously and, after eliciting the opinion of the dean of school, referred it to the Proctorial Board, the authorised disciplinary body.

“The University of Hyderabad would like to state unequivocally that it has zero tolerance for physical or verbal abuse of faculty members or administrative staff in the course of discharging their duties. We fully expect all interactions among various sections of the university community to be conducted with mutual respect, dignity and decorum,” Clarifying the university’s stand after students alleged that it was going soft on the student concerned, who is also an ABVP leader, Pavarala explained, “The complaint came at the end of the last semester and because of the intervening winter break, the board took up the matter immediately after reopening in early January.”
Chennai: Strike over, it’s Pongal time

By Express News Service | Published: 13th January 2018 02:24 AM |

  Bus service in full swing near Marina Beach on Friday | D SAMPATH KUMAR

CHENNAI: Around 4,000 buses were operated by the State government from five bus stands in Chennai, bringing the much needed festive cheer to passengers late on Friday evening as they flocked the terminus to reach their native places to celebrate Pongal.

Long-distance passengers were struggling till noon as only 40 per cent of scheduled buses were operated from the CMBT, Saidapet, Tambaram, Poonamallee and Anna Nagar West though the strike was called off on Thursday evening. The five bus terminuses were flooded with passengers. It was only around 9.30 pm that all regular buses operated from the temporary bus stands. In addition to this, reservation counters for special buses opened at the CMBT and Tambaram. In addition to the 2,275 regular bus services, more than 1,750 special buses operated on Friday, according to official sources.

As the bus operation was restored only at the eleventh hour, many commuters who did not get government buses in the morning booked tickets for omnibuses at exorbitant fares. “I purchased a ticket for an omnibus for ` 2500 to Tirunelveli. As the strike was withdrawn, I sold it to one of my friends and came to Koyambedu. But, to my shock, not many buses operated,” said Chellappa, a commuter at the CMBT.

SETC and TNSTC official sources said the buses underwent periodic maintenance at depots, due to which special buses did not operate in the morning. However, since evening almost the entire fleet of the SETC and the TNSTC were put into operation,” said an SETC official.

The uncertainty over the operation of bus services had forced many passengers to book tickets at higher prices for omnibuses. “Had I known that government buses would ply, I would not have purchased omnibus tickets, spending ` 7500 for four tickets to Madurai,” said another passenger Nachimuthu.

Each and every bit of space in south-bound trains, particularly Pandiyan Express, Nellai Express, Kanniyakumari Express, Podhigai Express and Rock Fort Express were occupied by passengers. The Egmore and Central railway stations were thronged by thousands of passengers throughout the day.
Over 50% students in four Anna university departments flunk semester examRam Sundaram | TNN | Updated: Jan 13, 2018, 08:56 IST



CHENNAI: Here's a shocker. Nearly half the students in four Anna University departments, a majority of them having scored more than 90% in the Class XII board exams, failed the semester test in November-December 2017.

The students are from College of Engineering, Alagappa College of Technology and School of Architecture & Planning, all on the Guindy campus, and Madras Institute of Technology (MIT), Chromepet.

Several students, requesting anonymity, cited the change in examination and evaluation patterns among the reasons for such a high failure rate.

In 2014-15, the university introduced a Choice Based Credit System (CBCS) and relative grading, dispensing with minimum pass mark. Under the system, the highest score in a class was taken as the baseline and grades awarded to others based on this.

'22 credits are consumed by current sem courses'

The overall pass percentage increased, but standards came down as even those with single-digit scores of 100 managed to secure top grades.

In one instance, sources said, students discussed among themselves the night before an exam and came to an understanding that none would score above 10. As a result, even those with scores less than five got top grades.

In the 2017-18 academic year, the university reverted to the old practice and set 50 % as the minimum pass mark for all university departments. Unable to adapt to this change quickly, many failed in the semester exams.

The overall pass percentage came down drastically, from 80% in 2016-17 to nearly 60%. Among them, students of the Schoolof Architecture and Planning fell behind terribly, with less than 20% of the second and third year managing to pass. Besides, some students said, limiting the number of courses a student can reappear for in a particular year has left many sceptical about finishing the course on time.

Each student takes on five or six lecture (maximum four credit (score) points) courses and a lab course (maximum two credit points) a semester and can . register for a maximum of 32 credits.

"Of this, nearly 22 credits are consumed by current semester courses and we have only 10 points for reappearance (formerly called arrears). This means we can reappear for a maximum of three papers at a time," a student from MIT told TOI, requesting anonymity.

"With many students failing in four or more papers this year, how can the university expect us to clear all backlogs on time so that we can attend campus placements," he said.
Delhi dentist bites, burns minor maid; held

New Delhi: A 14-year-old girl employed as a domestic worker has been rescued with injuries allegedly inflicted by her employer, a dentist, who lives in Model Town’s Kalyan Vihar in north-west Delhi. A tribal from Jharkhand, the child was allegedly bitten, beaten and burnt in the past four months after she was placed there by an agency, according to Delhi Commission for Women (DCW).

Police have registered an FIR invoking sections pertaining to “causing hurt” and under Bonded Labour Act, said DCP, north-west, Aslam Khan. She said the employer, Nidhi Chaudhary, has been arrested. The office of the placement agency was raided on Friday night after the girl was rescued. It is suspected that the girl may have been bought by an agent from Jharkhand.

The child has been put under the care and protection of the child welfare committee and DCW counsellors. The commission is now trying to trace the family of the girl. The case came to light because of an alert neighbour who called up the 181helpline of DCW. Swati Jaihind, commission chief, shared details of the case on Twitter. TNN

madurai kamaraj university

Immigration holds up flyers at airport 

Less Staff, More Bags Add To Problems

TIMES NEWS NETWORK

Chennai: Flying into Chennai from abroad has become ahassle, as long queues at immigration and baggage delays irk passengers at the city airport. If the flight lands during peak hours, people spend a long time at immigration counters and baggage claim. It often takes more than an hour or sometimes two hours, for a passenger to complete formalities and walk out after the flight touches down. Departing passengers suffer delay at security check, forcing airlines asking passengers to reach the airport well in advance.

Immigration and baggage delays have become routine during peak hours at night especially after an increase in passenger traffic due to festive season. Air Passengers Association of India (APAI) national president, D Sudhakara Reddy said, “It takes 30 to 90minutes for immigration clearance based on flight movements. Airport says there is a staff shortage, but why should passengers suffer? It takes a minimum of 30 to 45minutes for baggage claim due to bunching of flights.”

A senior official of Airports Authority of India (AAI) said, “There has been a sudden rush of travellers in the past one week, probably due to the travel season. The long queues at the immigration counters were discussed with officials. They have added 12 extra people and are also planning to get another 30 people to man the counters. But they may have to keep all the counters open and keep the passenger flow steady.”

AAI is planning to redesign the existing counters to make more space. “If airlines can scatter their schedule in a span of four hours, the queues can be eliminated. But the schedules are back to back and departing passengers too do not come to the airport three hours in advance. The bunching of flights and bunching of passengers cause immigration delays. We will be able to open 40 to 50 counters when the new terminal is ready.”

As more than 27 flights from abroad land in Chennai between 11.30pm to 8am, there is pressure on baggage handlers. Each wide-body flight will have at least 500 bags. Passengers have to wait for more than an hour after immigration to get the bags.
Bhogi smog delays flights for six hours, train services too hit

TIMES NEWS NETWORK

Chennai: Travel plans of thousands of people went awry on Saturday as smog triggered by Bhogi bonfires reduced visibility and affected flights and train services. Traffic on the roads too was thin and the few motorists on them drove with headlights on.

At the airport, where visibility was less than 50 metres, 16 flights, including nine international services, were diverted to Bengaluru, Hyderabad, Trichy and Coimbatore. Services resumed at 9.10am, but delays continued throughout the day.

Southern Railway officials said most inter-city and inter-state trains arrived late by “an average of 40 minutes,” while outbound trains ran slow. Suburban rail services were also delayed by about half an hour.

The burning of old articles on Bhogi is a symbolic gesture of bidding adieu to the old and welcoming the new, but those affected were not amused. Domestic flights could not leave Chennai airport till 9am, while many incoming ones were delayed at places like Kochi and Bengaluru as clearance was not given.

Though there were 73 departures and 45arrivals slotted between 3am and 9.10am, most flights departed only after 11am as arriving flights needed priority. Air congestion led to further delays that lasted between three hours and six hours through the day.



While an IndiGo flight from Dubai, an Air Arabia flight from Sharjah, a Gulf Air plane from Bahrain and an Air India aircraft from Dubai were diverted to Bengaluru, a British Airways flight from London, an Etihad Airways flight from Abu Dhabi, SpiceJet flights from Pune and Colombo and a Jet Airways flight from Mumbai flew to Hyderabad. A Sri Lankan flight from Colombo returned midway. An Air Australia flight from St Denis and a Batik Air flight from KL were diverted to Trichy. An Airport Authority of India official said smog this year was severe. ‘After 3am, visibility began to dip and stayed low till 9am’

Chennai:“After 3am, visibility began to dip and stayed low till 9am. Usually, smog lifts by 7.30am or 8am. This year it stretched till 9am,” the AAI official said. A senior pilot said AAI authorities should issue a notam (notice to airmen) to expect smog or delays before Bhogi. “This will help foreign airlines to take precautions and carry more fuel for diversions and to remain on hold. It is usual to have mist in Chennai in January but foreign pilots may not know about the custom followed on the festival day. A met report may not forecast smog.” However, fog warnings don’t often lead to airlines rescheduling flights as they hope visibility will improve soon. “We have a system to intimate airports of delays and poor visibility but international flights would have departed 5 hours-14 hours earlier. Domestic flights try to delay their departures at Bengaluru, Kochi and to an extend in Mumbai,” he added. Former pilot and air safety expert Captain Mohan Ranganathan said airlines should anticipate such a situation. “Diversions show pilots these days do not study weather. In the 1980s and 1990s pilots used to study the wind pattern and presence of water body near airport

மருத்துவர்கள் பற்றாக்குறை!

By ஆசிரியர் | Published on : 12th January 2018 01:07 AM | 


 | ஒருபுறம் சர்வதேச அளவிலான வசதிகளைக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைகள் மாநகரங்களில் உருவாகி வருகின்றன. இன்னொரு புறம் ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட மருத்துவரோ, மருத்துவமனையோ இல்லாத அவலம் காணப்படுகிறது. 

இந்தியாவில் 10,189 பேருக்கு ஓர் அரசு மருத்துவர் என்கிற நிலைதான் காணப்படுகிறது. 2,046 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனையின் படுக்கை வசதி என்பதுதான் இப்போதைய நிலைமை. அதேபோல 90,343 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனை என்கிற விகிதம்தான் காணப்படுகிறது. இந்தியாவின் 70 கோடி மக்கள் வாழும் கிராமங்களில் 11,054 மருத்துவமனைகள்தான் இருக்கின்றன.


இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், மருத்துவர்களுக்கும் இடையேயான விகிதம் என்பது வியத்நாம், அல்ஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருப்பதைவிடக் குறைவாகக் காணப்படுகிறது என்றும், மருத்துவர்கள் பற்றாக்குறைதான் இந்தியாவின் சுகாதார நிர்வாகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்றும், 2016-இல் நாடாளுமன்றத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி 1,000 பேருக்கு ஓர் அலோபதி மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், 11,097 பேருக்குத்தான் ஓர் அலோபதி முறை மருத்துவர் என்கிற விகிதம் இந்தியாவில் காணப்படுவதாக 2017 தேசிய சுகாதார விவரக் குறிப்பு தெரிவிக்கிறது. ஊரகப் புறங்களில் இந்த விகிதம் இதைவிட மோசம். 130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 60% மக்கள் ஊரகப் புறங்களில்தான் வாழ்கிறார்கள். அங்கே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்குப் போதிய மருத்துவர்கள் இல்லாத அவலம் நீண்ட காலமாகவே தொடர்கிறது. 2017-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையான 1,000 பேருக்கு ஓர் அலோபதி மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட வேண்டுமானால், 2030-குள் இந்தியாவுக்குக் குறைந்தது 20 லட்சம் மருத்துவர்கள் கூடுதலாகத் தேவைப்படுவார்கள்.
மருத்துவப் பற்றாக்குறைதான் இந்தியாவின் பொது சுகாதார அமைப்புகள் முறையாகச் செயல்பட முடியாமல் முடக்குகிறது. குறிப்பாக, ஊரகப் புறங்களில், ஆதிவாசிகள் வாழும் மலைப்பிரதேச கிராமங்களில் மருத்துவ வசதி என்பது இன்னும் கானல் நீராகவே காணப்படுகிறது. 


'இந்தியாஸ்பென்ட்' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கைபடி, ஊரகப் புறங்களில் உள்ள அரசின் பொது சுகாதார மையங்களில் 30,000க்கும் அதிகமான மருத்துவர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. பல பொது சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே செயல்படும் அவலம் தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் இல்லாத சுகாதார மையங்களில் 200% அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


அரசின் தேசிய அளவிலான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் உண்மை நிலைக்கும் இடையேயான இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. தேசிய சுகாதாரக் கொள்கை 2017 பல உயரிய இலக்குகளை நிர்ணயிக்கிறது. இதன்படி பொது சுகாதாரத்திற்கான இந்திய அரசின் ஒதுக்கீடு இப்போது இருக்கும் 1.4% லிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் (ஜி.டி.பி.) 2.5%ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.


மத்திய அரசின் தேசிய சுகாதார உறுதியளிப்புத் திட்டம் (நேஷனல் ஹெல்த் அஷ்யூரன்ஸ் மிஷன்) ரூபாய் 1லட்சத்து 60 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் 50க்கும் மேற்பட்ட மருந்துகளையும், 12க்கும் மேற்பட்ட பரிசோதனைகளையும் இலவசமாக வழங்கவும், 2019-க்குள் இந்தியாவிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவக் காப்பீட்டை உறுதிப்படுத்தவும் முனைகிறது. இந்தத் திட்டத்தின் இன்னொரு பகுதியாக சிசு மரண விகிதத்தை 1000 பிரசவத்துக்கு 40 என்றிருப்பதை 30ஆகக் குறைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


அரசின் முனைப்பும், இலக்கும் பாராட்டுக்குரியது என்றாலும் அதை எட்டுவது என்பது சுலபமானதாக இருக்காது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 3 கி.மீ. சுற்றளவில் போதிய மருத்துவ வசதி உருவாக்கப்பட வேண்டும். நமது மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மருத்துவ வசதிகளை உருவாக்குவது என்பது தனியார் மருத்துவ சேவைகளையும் சேர்த்துக் கணக்கிட்டாலுமேகூட எட்டுவது கடினம். இதை 2020-க்கான நிதி ஆயோகின் செயல் திட்டம் சுட்டிக்காட்டாமல் இல்லை.


இந்தியாவின் மிக முக்கியமான தேவை கூடுதலான மருத்துவர்கள். மருத்துவக் கல்விக்கு மிக அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. இந்தியாவில் உள்ள 462 மருத்துவக் கல்லூரிகள் 56,748 மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆண்டொன்றுக்கு 2.6 கோடி மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில் கல்லூரி எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகமான மருத்துவக் கல்லூரிகளும், சில பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகளே இல்லாத நிலையும் காணப்படுகின்றது. இந்திய மக்கள் தொகையில் 46% மக்கள் வாழும் எட்டு மாநிலங்களில் மொத்த மருத்துவக் கல்வி இடங்களில் 21%தான் உள்ளன. 31% மக்கள் தொகை உள்ள ஆறு மாநிலங்களில் 21% மருத்துவக் கல்வி இடங்கள்தான் காணப்படுகின்றன. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய பல மாநிலங்களில் போதுமான மருத்துவக் கல்லூரிகள் இல்லாததால் மருத்துவர்களுக்கான குறைபாடு அதிகமாக இருக்கிறது.
தரமான மருத்துவக் கல்வி, தரமான மருத்துவர்கள், தரமான மருத்துவ வசதிகள் இவையெல்லாம் ஒரே நாளில் உருவாகிவிடக் கூடியவை அல்ல. சாமானியனுக்கு மருத்துவ வசதி என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் மட்டும் போதாது. அதை எட்டுவதற்கான முனைப்பும் இருக்க வேண்டும். ஊரகப் புறங்களில் பணியாற்ற அடுத்த தலைமுறை மருத்துவர்கள் முன்வந்தால் மட்டுமே இந்தச் சவாலை இந்தியா எதிர்கொண்டு வெல்ல முடியும்!

அணுகுமுறை ஏற்புடையதல்ல!

By ஆசிரியர் | Published on : 13th January 2018 12:47 AM


| நீதித்துறை வரலாறு காணாத சோதனையை எதிர்கொள்கிறது. நீதிபதிகளே நீதித்துறையின் மாண்பையும் கெளரவத்தையும் குலைத்துவிடுகின்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகவே தொடர்ந்து வரும் இந்த மோதல் இப்போது பகிரங்கமாகப் பொதுவெளியில் வெடித்திருக்கிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகிய மூவரும், உச்ச நீதிமன்றத்தில் பணி மூப்பு அடிப்படையில் தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக இருக்கும் நீதிபதி ஜெ.செலமேஸ்வரின் துக்ளக் சாலை இல்லத்தில் பத்திரிகையாளர்களிடம் தங்கள் அதிருப்தியையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நான்கு நீதிபதிகளும் கையொப்பமிட்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தைப் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படுத்தி, நீதிபதிகளுக்கு இடையேயான பிரச்னையை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச்செல்ல முற்பட்டிருக்கிறார்கள்.


நீதித்துறை பாதுகாக்கப்படாவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படாது என்றும், இதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புரிந்துகொள்ள வைக்கத் தங்களால் இயலவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள் அந்த நீதிபதிகள். அதனால் பொதுவெளியில் தங்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், இதன் மூலம் மட்டுமே நீதித்துறையைக் காப்பாற்ற முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, நீதிபதிகளுக்கு இடையேயான வெளிப்படையான மோதலை உச்ச நீதிமன்றம் எதிர்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையே ஏற்பட்ட அந்த வெளிப்படையான மோதல் கூச்சலிலும் வாக்குவாதத்திலும் வெளிப்பட்டபோது, தேசமே அதிர்ந்தது.


தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு, முந்தைய நாள் அவருக்கு இரண்டாமிடத்தில் இருக்கும் நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வின் முடிவை நிராகரித்தது. நீதிபதி செலமேஸ்வரின் ஆத்திரத்துக்கு அதுதான் காரணம்.
வழக்குகளை இன்னின்ன நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளுக்கு ஒதுக்குவது, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தனி உரிமை. இதற்கு 'ரோஸ்ட்டர் தயாரிப்பு' என்று பெயர். உச்ச நீதிமன்றத்தில் அமர்வுகளைத் தீர்மானிப்பதும், எந்த அமர்வுக்கு எந்த வழக்குகளை ஒதுக்குவது என்பதும், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவில் தவறு காணமுடியாது. இதுதான் கடந்த பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் பின்பற்றி வரப்படும் மரபு. 


நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நேர்மையையும் நாணயத்தையும் மறைமுகமாகக் கேள்வி கேட்க முற்பட்டிருக்கிறார்கள். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது நாடாளுமன்றம் 'இம்பீச்மென்ட்' நடவடிக்கையை முடுக்கிவிட்டு அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமா என்கிற கேள்விக்கு, 'தேசம் தீர்மானிக்கட்டும்' என்று நீதிபதி செலமேஸ்வர் கூறுவதிலிருந்து நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதியின் நேர்மையை சந்தேகிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
'மிக முக்கியமான பல வழக்குகளில் எந்தவித காரணமும் இல்லாமல் சில குறிப்பிட்ட நீதிபதிகள் தொடர்ந்து அமர்வுகளில் சேர்க்கப்படுகிறார்கள் என்றும் அது தேசத்துக்கு நன்மை பயக்காது' என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


தாங்கள் இந்த முடிவை எடுக்காமல் போனால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் சமூகம் தங்களை கேள்வி கேட்கும் என்றும், ஆன்மாவையே விற்றுவிட்டவர்களாகக் கருதும் என்றும் அவர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. நீதிபதிகளுக்கு இடையேயான இந்தப் பிரச்னையின் அடிப்படை 'ரோஸ்ட்டர் தயாரிப்பில்' ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுதான் என்பதை அவர்கள் தலைமை நீதிபதிக்கு அளித்திருக்கும் கடிதம் வெளிப்படுத்துகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த நீதிபதிகளுக்கு விசாரணைக்காக ஒதுக்கும் வழக்குகள்தான் அவர்களது அதிருப்திக்குக் காரணம் என்பதையும் அந்தக் கடிதம் தெளிவுபடுத்துகிறது.


இதுபோல நீதிபதிகள் பொது வெளியில் அதிருப்தியை வெளிப்படுத்துவது வியப்பை அளிக்கிறது. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது புதிதல்ல. அதேபோல தலைமை நீதிபதியின் மீது அதிருப்தி ஏற்படுவதும் புதிதல்ல. ஆனால், நீதித்துறையின் மாண்பு கருதி, எந்தவொரு நீதிபதியும் அதைப் பொதுவெளியில் தெரிவிப்பது கிடையாது.


உச்ச நீதிமன்றத்தின் 14ஆவது தலைமை நீதிபதியாக அஜீத் நாத் ரே, 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது பணி மூப்பு கருதப்படாமல் மூன்று மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் பதவி விலகித் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்களே தவிர, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யவில்லை. அதேபோல 1977-இல் நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னா பதவி மூப்பு உரிமை மறுக்கப்பட்டபோது பதவி விலகினாரே தவிர, நீதிபதியாக இருந்து கொண்டு விமர்சனத்தில் இறங்க முற்படவில்லை.


நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான நான்கு நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்தும் அணுகுமுறை குறித்தும் கருத்து வேறுபாடும், விமர்சனமும் இருக்கலாம். அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உடன்படவில்லை என்றால், அவர்கள் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டிருக்க வேண்டும். அப்படியும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், பதவி விலகி தங்களது எதிர்ப்பையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். நீதிபதிகளின் அணுகுமுறை ஏற்புடையதல்ல!

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...