Monday, January 15, 2018


ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்: குருமூர்த்தி பேச்சு

   

By DIN | Published on : 14th January 2018 10:00 PM |


சென்னை: ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்று வரும் துக்ளக் இதழின் 48வது ஆண்டு விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பேசினார்.

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்.

தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல் என்றும் கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது என்றவர் கழகங்களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது என கூறினார்.

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்றும் தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது என விமர்சித்தார்.

மேலும் திமுக, அதிமுகவால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். இலவசம் மற்றும் மானியங்களால்தான் தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஹிந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டிஎன்ஏவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர்

ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 12-இல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணப்பட்டுவாடா செய்தது வெளிப்படையாகவே தெரிகிறது. தினகரன் வெற்றி பெற்றதற்கு திமுகதான் காரணம் என்றவர் திமுக விலை போகியுள்ளது என்று குருமூர்த்தி பேசினார்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...