Wednesday, January 31, 2018

பிஎஸ்என்எல் நிறுவனம் பிப்.1 முதல் இலவச அழைப்புகளை நிறுத்துகிறது!

By DIN | Published on : 30th January 2018 10:53 AM




கொல்கத்தா: பிஎஸ்என்எல் ஞாயிற்றுக்கிழமைகளில் அளித்து வந்த இலவச அழைப்புகள் சலுகையை வரும் பிப்ரவரி 1 முதல் முடிவுக்கு கொண்டுவருகிறது.

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் (பிஎஸ்என்எல்) கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 9 மணிக்கு மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மாத மத்தியில் இரவு நேர இலவச அழைப்புகளுக்கான நேரம் 9 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கான இலவச அழைப்புகளை திரும்பப் பெற பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது. புதிய திட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதிய திட்டங்கள் பிஎஸ்என்எல் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விரைவில் நல்ல திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம். நாடு முழுவதும் புதிய மாறுதல்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டங்களை ஆலோசித்து வருவதாக கொல்கத்தா பிஎஸ்என்எல் தலைவர் பொது மேலாளர் எஸ்.பி. திரிபாதி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் தற்போது 6 லட்சம் நிலையான லேண்ட்லைன் இணைப்புகளுடன் சுமார் 12 மில்லியன் இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...