Monday, January 29, 2018

எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் கரூர் வரை நீட்டிக்க திட்டம்

Added : ஜன 28, 2018 21:30


கரூர்:''சென்னை எழும்பூரில் இருந்து, சேலம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை, கரூர் வரை நீட்டிக்க, மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நாமக்கல் அ.தி.மு.க., - எம்.பி., சுந்தரம் கூறினார்.

கோரிக்கை

கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அவர் அளித்த பேட்டி:சேலம் - கரூர் புதிய ரயில்வே வழித்தடத்தில், கூடுதல் ரயில்களை இயக்க, ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னை எழும்பூரில் இருந்து, சேலம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை, கரூர் வரை நீட்டிக்க கேட்டுஉள்ளோம். 

இது தொடர்பாக, சென்னையில் நடந்த, ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.சென்னை எழும்பூர் ரயில், கரூர் வரை நீட்டிக்கப்பட்டால், நாமக்கல், கரூர் நகர வியாபாரிகள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்னும் மூன்று மாதங்களில், இந்த ரயில், கரூர் வரை நீட்டிக்க வாய்ப்புண்டு.

எதிர்பார்ப்பு

அதே போல், சேலத்தில் இருந்து கரூர் வரை செல்லும் பாசஞ்சர் ரயிலை, திருச்சி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், பாசஞ்சர் ரயில், திருச்சி வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...