Sunday, January 28, 2018

கதிரியக்க பாதுகாப்பு ஆடை வடிவமைப்பு மதுரை டாக்டருக்கு சர்வதேச விருது

Added : ஜன 27, 2018 23:55




மதுரை, சுற்றுச்சூழல் பாதிக்காத, கதிரியக்க பாதுகாப்பு ஆடையை கண்டுபிடித்த, மதுரை அரசு மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்
குமாருக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் டி.மருதுபாண்டியன் கூறியதாவது:

எக்ஸ்ரே உள்ளிட்ட கதிரியக்கங்களை கையாளும் போது உடல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்புக்களை முற்றிலும் தவிர்க்கும் 'லெட்' (காரீயம்) உலோகம் அல்லாத பேரியம், பிஸ்மத் மற்றும் ஆன்ட்டிமனி ஆகிய உலோகங்களை கொண்டு குறைந்த ரூபாய் மதிப்பில் 'கதிரியக்க பாதுகாப்பு ஆடை'யை டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்தார்.

இந்திய நுண்கதிர் பாதுகாப்பு சங்க அகில உலக மாநாடு, மும்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இதில் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்த கதிரியக்க பாதுகாப்பு ஆடைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான விருதை உலக கதிரியக்க பாதுகாப்புத்துறை தலைவர் ரோஜர் கான்டஸ், மும்பை அணுசக்தி கட்டுப்பாட்டுத்துறை தலைவர் பரத்வாஜ் வழங்கினர். இக்கண்டுபிடிப்பு கதிரியக்க பாதுகாப்பு மேம்பாட்டில் புதிய மைல்கல். இந்த ஆடை, விரைவில் பயன்பாட்டிற்கு
வரவுள்ளது.
இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

NEWS DIGEST

NEWS DIGEST  SC : Can bar overqualified person from job Sometimes overqualification becomes a disqualification. At a time when highly qualif...