Wednesday, January 31, 2018

'டிமிக்கி' அதிகாரிகளுக்கு சம்பளத்தை பிடிக்க முடிவு

Added : ஜன 30, 2018 22:03 |



லக்னோ: பணிக்கு தாமதமாக வந்த மற்றும் வராமல் ஏமாற்றிய அதிகாரிகளுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, உத்தர பிரதேச வேளாண் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.

மாநில வேளாண் துறை அமைச்சர், சூரிய பிரதாப் சாஹி, வேளாண் துறை அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல ஊழியர்கள், அதிகாரிகள் தாமதமாக வந்தனர். சிலர் விடுமுறை தெரிவிக்காமல், வேலைக்கு வராமல் இருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அவர்களுக்கு ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
அரசு ஊழியர்களின் பணி கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்த, அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு நான் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது, ஏராளமான ஊழியர்கள், பணிக்கு தாமதமாக வந்தனர்.

இப்போது, நிலைமை சீராகியிருக்கும் என நினைத்தேன். ஓரளவுக்கு மேம்பட்டிருந்தாலும், முழுமையாக மாறவில்லை. அதனால், பணிக்கு தாமதமாக வந்த, வராமல் ஏமாற்றியவர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...