Wednesday, January 31, 2018

மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் தாமதம் : அரசிடம் விளக்கம் கோருகிறது ஐகோர்ட்

Added : ஜன 30, 2018 23:28

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செயலருக்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் தரப்பில் விபரங்கள் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து, 2017 ஏப்., 25ல் தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.
தனி நீதிபதி, 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறேன். மனுதாரருக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் எட்வின் ஜோ சார்பில்
மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017 டிச.,12ல் நீதிபதிகள், 'எட்வின் ஜோவை மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறோம். ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவையும்
ரத்து செய்கிறோம்.எட்வின் ஜோ, ரேவதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் மீனாட்சி சுந்தரத்தின் தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில் சட்டத்திற்குட்பட்டு மறு பரிசீலனை செய்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றனர்.
ரேவதி, 'நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை. சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ், நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு, 'அரசுத் தரப்பில் விபரங்கள் பெற்று இன்று அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...