Tuesday, December 23, 2014

சிரிக்க மறந்த கதை

இது அவசர உலகம். காலையில் எழுந்து பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ செல்வதில் இருந்து, மாலையிலோ இரவிலோ வீடு திரும்பும் வரை டென்ஷன்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை.

கவலையின் அளவு வேண்டுமானால் ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனால், எல்லாருமே பிரச்னைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டு சிரிக்க மறந்து நாள்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

இதில், கிராமத்தில் வசிப்போர், நகரத்தில் வசிப்போர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது.

சென்னை போன்ற நகரங்களில் மின்சார ரயிலில் தினந்தோறும் 30 கிலோமீட்டர் பயணிக்கும் ஒரு பயணி, அருகில் அமர்ந்திருப்போரிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் சிந்தனையிலேயே அமர்ந்திருப்பார்.

தான் தினமும் கடந்து செல்லும் பாதையில் பிரபல உணவகம் ஒன்று அமைந்திருக்கும். ஆனால், அதைப் பற்றி அவருக்கு சுத்தமாகத் தெரிந்தே இருக்காது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் பருவ மாணவர்கள் கபடி, கிட்டிப்புள்ளு, நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் என பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும், விளையாடச் செல்லலாம் என்ற முனைப்பில் இருப்பர்.

இன்று அப்படியல்ல. விடியோ விளையாட்டுகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுமே முக்கியப் பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து அவர்களாகவே சிரித்துக் கொள்வதைத்தான் காண முடிகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதே அரிதான விஷயமாக உள்ளது.

"மனம் விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு' என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்தளவுக்கு வாழ்க்கை வெறுமையாகி விட்டது என நாம் நினைக்கிறோம்.

வேறு சிலருக்கோ, "சே, என்னடா வாழ்க்கை இது' என்ற சலிப்பு. வயது முதிர்ந்தவர்கள் இவ்வாறு கூறலாம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரே இவ்வாறு கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.

பிரச்னையையே வாழ்க்கையாக எதிர்கொள்ளும் இளைஞன், நாளடைவில் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். அது அவனது எதிர்காலத்தையே பாழாக்குகிறது.

சிரிப்பை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஏதாவது ஒரு விஷயத்தை மனதில்போட்டு குழப்பிக் கொள்கிறோம். சிரிப்பைத் துரத்தியடிக்கும் ஓர் ஆயுதமாக கவலை நம்முன் நிற்கிறது.

கவலைகளை மறப்பதற்கு இன்று பலரும் பல்வேறு வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர். அதில் ஒன்று யோகக் கலை. யோகக் கலையில் பல்வேறு ஆசனங்களைச் செய்வதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது.

அதுபோல, தொடர்ந்து சில நிமிடங்கள் சிரிப்பதன் மூலம் மனசு லேசாகிறது. யோகா வகுப்புகளில் இது ஒரு பாடமாகவும் கற்றுத் தரப்படுகிறது.

கவலைகளை மறப்பதற்காகவே ஒவ்வொரு நகரத்திலும் தற்போது நகைச்சுவை மன்றங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த மன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி, தங்கள் கவலையை மறந்து, சிரிப்பு மூட்டும் செய்திகளைக் கூறி மகிழ்கின்றனர்.

சிரிப்பு என்பது மனித குணநலன்களின் ஒன்று. சிரிப்பை நிர்ணயிப்பது மூளை. ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன் சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து 400 முறை வரை சிரிக்கிறது. ஆனால், சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறான்.

நமது மனத்துக்குள் எழும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது சிரிப்பு. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். ஆனால், சிரிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது.

சிரிப்பில் பல வகைகள் உள்ளன. புன் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு இப்படி. சிரிப்பு ஒருவரின் மனத்தையும், உடலையும் வலிமைப்படுத்தி, அவரைப் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

"நைட்ரஸ் ஆக்ûஸடு' என்ற ஒரு வேதிப்பொருளுக்கு "லாஃபிங் கேஸ்' (சிரிப்பு வாயு) என்று பெயர். இது ஒரு நிறமற்ற வாயு. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் கைகொடுக்காத நிலையில், இந்த வாயு ஓர் அருமருந்தாக விளங்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதாவது, மன அழுத்தத்துக்கு உள்ளானோருக்கு சிறந்த மருந்தாக விளங்குவது சிரிப்பு என்று தெரிவிக்கின்றனர்.

"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்பது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பு நமது சிரிப்பில் நாம் நம்மைக் காண்போமே!

Monday, December 22, 2014

எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் பாசமலர் ஏற்படுத்திய திருப்பம்

'
பாசமலர்' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாராய் என் தோழி வாராயோ...' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த 'பாசமலர்' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.

மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், 'வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.

இந்தப்பாடல் பெரிய 'ஹிட்' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, 'பாசமலர்' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த 'பணமா பாசமா' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.

அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

டைரக்டர் ஸ்ரீதர், 'சிவந்த மண்' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.

அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.

'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த 'ஹம்மிங்', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

அந்தக் காலக்கட்டத்தில், பின்னணி பாடகிகளில் பி.சுசீலாவும், எஸ்.ஜானகியும் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு இணையாக உயர்ந்தார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஓய்வு இன்றி நிறைய படங்களில் பாடினார்.

அவர் பாடிய மிகப்புகழ் பெற்ற பாடல்களில் சில:

'காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன்.'

'ஆடவரலாம் ஆடவர் எல்லாம் ஆடவரலாம் ஆடவரலாம்.'

'கண்களும் காவடி சிந்தாகட்டும், காளையர் நெஞ்சை பந்தாடட்டும்.'

'அம்மம்மா கேளடி தோழி ஆயிரம் சேதி.'

'துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை.'

'குடிமகனே பெரும் குடிமகனே.'

'பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணி மண்டபம்.'

- இப்படி எண்ணற்றப் பாடல்கள் எல்.ஆர்.ஈஸ்வரியின் புகழுக்கு புகழ் சேர்த்தன. லட்சக்கணக்கான ரசிகர்களை தேடித்தந்தன.

எல்.ஆஸ்.ஈஸ்வரி தன் திரை உலக அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

'கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' விருது கொடுத்து கவுரவித்தது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், 'நந்தி விருது' உள்பட பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் 'வெண்ணிற ஆடை.' அதில் அவர் பாடும் முதல் பாடலான 'நீ என்பதென்ன... நான் என்பதென்ன...' என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

கேவி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.
எப்படி 1961 எனக்கு திரை உலகில் ஒரு பெரிய உயர்வை கொடுத்ததோ, அதேபோல 1985-ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத்தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.

எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியை கொடுத்தது.'

இவ்வாறு எல்.ஆர்.ஈஸ்வரி கூறினார்.

'உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராடி புகழின் உச்சிக்கு வந்த நீங்கள், அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத்துணையைத் தேடிக் கொள்ளாதது ஏன்?' என்ற கேள்விக்கு பதில் அளித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறியதாவது:-

'வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த எனது குடும்பத்தை முன்னேறச் செய்யவும், எனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் எனது கவனம் முழுவதும் இருந்ததால், எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.


எனது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் என் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்' என்று கூறினார், எல்.ஆர்.ஈஸ்வரி

Source: MaalaiMalar

SINGLE FORM FOR DBTL


Judges’ medical reimbursement not under RTI purview: HC

NEW DELHI: Medical records of reimbursements of judges can't be disclosed under RTI Act since it doesn't serve any public interest, the Delhi high court has held in an important ruling.

Justice Vibhu Bakhru on Friday set aside a CIC ruling asking the Supreme Court to maintain details of medical reimbursement availed of by each Supreme Court judge in the last three years to be furnished to information seekers.

The HC termed the CIC ruling "erroneous" and said that "medical records are not liable to be disclosed unless it is shown that the same is in larger public interest. In the present case, the CIC has completely overlooked this aspect of the matter."

In the process the court allowed an appeal filed against the CIC order of 2012 where the commission had directed it to disclose details of medical reimbursement of judges in the last three years. Responding to RTI activist Subhash Chandra Agrawal's plea, the Supreme Court had said it does not keep records of medical reimbursement of individual judges and, declined to furnish him the information under the transparency Act. When Agarwal appealed in CIC the latter in 2010 asked SC to make arrangements to maintain details of medical reimbursement made to judges. They should, it had specified, be maintained in digital format so that their retrieval and disclosure could be easier.

However, the SC refused, citing a stay by Delhi HC in a similar case, prompting Agarwal to once again approach CIC. In its second order in 2012, CIC directed the apex court to place the order before the Secretary General of the Supreme Court so that he can ensure its compliance.

It is against this order that SC had moved HC in appeal. Justice Bakhru stressed that "information relating to the medical records would be personal information which is exempt from disclosure under Section 8(1)(j) of the Act. The medical bills would indicate the treatment and/or medicines required by individuals and this would clearly be an invasion of the privacy."

திக்குமுக்காடும் ஜி.எஸ்.டி. சாலை!- நாள்தோறும் 5 லட்சம் வாகனங்கள்.. திணறுகிறது சென்னை

Return to frontpage




சென்னை நகரில் அன்றாடம் உள்ளே நுழைந்து வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கை 5 லட்சம். தென் மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வரக்கூடிய ஒரே நெடுஞ்சாலை ஜி.எஸ்.டி. சாலை (கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலை) எனப்படும் என்.எச்.45. தேசிய நெடுஞ்சாலை. சென்னை கத்திப்பாரா சந்திப்பில் இருந்து தொடங்கி தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், பெரியகுளம் ஆகிய பிரதான ஊர்களைக் கடந்து தேனி வரை நீண்டிருக்கிற இந்த ராட்சத சாலை சுமார் 470 கி.மீ. நீளம் கொண்டது. தமிழகத்தின் பிரதான சாலைகளில் ஒன்றாக- சென்னை மாநகரை இணைக்கக்கூடிய சாலையாக - சென்னை நகரப் போக்குவரத்தின் பிரதான ரத்த நாளமாக உள்ளது. இதில் ஆங்காங்கே உள்ள அடைப்புகள் காரணமாக, அரை மணி நேரத்தில் கடக்கவேண்டிய தூரத்தை கடக்க குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆவதால், வாகன ஓட்டிகளின் ரத்த அழுத்தத்தை எகிறவைத்துவிடுகிறது.

சென்னையில் கடந்த 20 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 900 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்னையின் 6 பிரதான சாலைகளில், தென் சென்னை புறநகர் பகுதியினர் பயன்படுத்தும் ஜிஎஸ்டி சாலை முக்கியமானது. இதில் கிண்டி கத்திப்பாரா முதல் காட்டாங் கொளத்தூர் வரை வாகன நெரிசல் அதிகம். தாம்பரம் ரயில் நிலைய சந்திப்பு, சென்னை விமான நிலையம் அமைந்திருப்ப தாலும் மெட்ரோ ரயில் நிலைய பணிகள், வண்டலூரில் தொலை தூர பஸ்கள் நின்று செல்வது, மறைமலை நகரில் தொழிற்சாலை கள் பெருக்கம் போன்ற காரணங்களாலும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகிவிட்டது.

வடசென்னையைவிட தெற்கு புறநகர் பகுதிகள் வேகமாக வளர்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடு வாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில், ஊரப் பாக்கம், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய பகுதிகள் படுவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. ஜிஎஸ்டி சாலை வழியாக செல்லக்கூடிய முடிச்சூர், மண்ணிவாக்கம், பொழிச்சலூர், அனகாபுத்தூர், சேலையூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளும் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. இப்பகுதி களில் கடந்த 10 ஆண்டுகளில் குடியேற்றம் பலமடங்கு அதிகரித்துள்ளதும், ஜிஎஸ்டி சாலை திணறுவதற்கு முக்கிய காரணம். பல்லாவரம், ஆதம்பாக்கம், தாம்பரம், வண்டலூர், கிழக்கு தாம்பரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவை ஜிஎஸ்டி சாலையில் இணைவதால், வாகன நெரிசல் கூடிக்கொண்டே போகிறது.

இருவழிப் பாதையாக இருந்த இச்சாலை 2004ம் ஆண்டு நான்குவழிப் பாதையாக மாற்றப் பட்டது. வாகனப் பெருக்கத்தை சமாளிக்க முடியாமல் இப்போது அதுவும் திக்குமுக்காடு கிறது. ஜிஎஸ்டி சாலையில் சராசரியாக 14 கி.மீ. வேகத்தில்தான் பேருந்துகள் செல்ல முடிகிறது என்கின்றன ஆய்வுகள்.

'தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை' தென்சென்னையின் பிரபல சமூக சேவகர் வி.சந்தானம் கூறியதாவது: ஜிஎஸ்டி சாலை அதன் முழுக் கொள்ள ளவையும் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முன்பு, பிராட்வேயில் இருந்து தாம்பரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதுபோன்ற ஏதோ ஒன்றை அரசு செய்தாலன்றி ஜிஎஸ்டி சாலைக்கு விடிவு ஏற்படாது.

ஒரகடம், மறைமலை நகர், மஹிந்திரா சிட்டி என தொழிலகங்கள் பெருகுவதால் ஜிஎஸ்டி சாலை எந்நேரமும் பரபரப்பாக உள்ளது. அதற்கேற்ப திட்டங்களை வேகமாக வகுத்து, அரசு செயல்படுத்துவது இல்லை. ஆக்கிரமிப்புகளால் ஜிஎஸ்டி சாலை சுருங்கி விட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, திட்டமிட்ட பார்க்கிங் வசதி செய்து தந்தால், வாகனங்கள் செல்வது எளிதாகும். ஆதம்பாக்கம், முடிச் சூர், பொழிச்சலூர், சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை போன்ற உட்புறப் பகுதிகளுக்கு இணைப்பு வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு சந்தானம் கூறினார்.

2 கோடி வாகனங்கள்

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2000-ம் ஆண்டில் 50.12 லட்சம். கடந்த நவம்பர் மாத நிலவரப்படி 1.95 கோடி. இதில், இருசக்கர வாகனங்கள் 1.59 கோடி, ஆட்டோக்கள் 2.25 லட்சம், லாரிகள் 6.34 லட்சம். தமிழகம் முழுவதும் உள்ள வாகனங்களில் 30 சதவீதம் சென்னையில் ஓடுகின்றன. ஆண்டுதோறும் சென்னையில் 11 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கின்றன. சராசரியாக, தினமும் 1,500 புதிய வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. இதுதவிர, தமிழக அளவில் தினமும் சுமார் 3800 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப் படுகின்றன. தினந்தோறும் 3600 பேர் ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். புதிய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவீதம் அதிகரிக்கிறது.

வரும்.. வராது.. வண்டலூர் பஸ் ஸ்டாண்டு

ஜிஎஸ்டி சாலையில் உள்ள பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரியில் காலை, மாலை நேரங்களில் 1.5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் வால்பிடித்து நிற்பது வாடிக்கை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களைப் பிரித்து இயக்க வண்டலூரில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அது விவசாய நிலம் என்று கூறி அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருவதால், 'வண்டலூர் புது பஸ் ஸ்டாண்ட்' திட்டம் வெறும் அறிவிப்போடு நிற்கிறது. வாகன எண்ணிக்கைப் பெருக்கம், பார்க் கிங்கிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. சாலை, தெரு, சந்து, பொந்துகளைக்கூட வாகன ஓட்டிகள் விட்டுவைப்பதில்லை. இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுவதாவது: சென்னை கோயம்பேடு பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையங்களில் இருந்து மதுர வாயல், வடபழனி வழியாகவே புறநகர் பகுதிக்குச் செல்லமுடியும். காலை, மாலை நேரங்களில் வடபழனி வழியாக வெளியூர் பேருந்துகள் செல்ல அனுமதியில்லை. மெட்ரோ ரயில் பணிகளும் நடப்பதால், பெரும் பாலான பஸ்கள் மதுரவாயல் வழியாகவே இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சாதாரண நாட்களில் 1,500 பேருந்து கள், முக்கிய விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் 3,500 பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கப்படாததால் வாகனங்கள் தேங்குகின்றன.

* செங்கல்பட்டு, திண்டிவனம் சுங்கச் சாவடியில் வாகனங்கள் வந்து, போக தலா 8 வழி தடங்கள் உள்ளன. போரூர் சுங்கச் சாவடியில் மொத்தமே 8 வழிகள்தான் இருக்கின் றன. இதனால், கோயம்பேடு எல்லை வரை வாகனங்கள் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு தேங்குகின்றன.

* கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் சென்னை நகருக்குள் நுழைய அனுமதி இல்லை. இதனால், புறநகர் பகுதிகளில் சாலையோரமாக பல கி.மீ. தூரத்துக்கு வரிசையாக நிறுத்தி வைக் கின்றனர். இவை ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வதால், போக்குவரத்து ஒரேயடியாக ஸ்தம்பிக்கிறது. இந்த வாகனங்களை ஒழுங்குபடுத்தி நிறுத்திவைக்க தனியாக லாரி நிறுத்தும் இடம் அமைக்கப்பட வேண்டும்.

    சசிதரன்
    சிவா
    ஜெயப்பிரகாஷ்
    கோ.கார்த்திக்


கர்மயோகம் அறிவோம்

Dinamani

செய்யும் தொழிலே தெய்வம்...ஒவ்வொரு மனிதனின் உளமனதில் ஆழமாகப் பதிய வேண்டிய தாரக மந்திரம் இது. எந்தத் துறையில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல. செய்கின்ற வேலையை ஆத்மார்த்தமாகச் செய்கிறோமா என்பதே முக்கியம்.

சில நாள்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பிரபல ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர், தனது மனக் குமுறல்களை இப்படிக் கொட்டித் தீர்த்தார்:

அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் என்னால், மரச் சாமான்களைத்தான் பார்க்க முடிகிறது. மனிதர்களைக் காணவில்லை. அந்தளவுக்கு மனிதப் பண்பு செத்துக் கிடக்கிறது. சாமானியனுக்கு உதவி செய்வதற்காகத்தானே நாம் சம்பளம் வாங்குகிறோம் என்ற மனோபாவம் சிறிதும் இல்லை.

பெரும்பாலான இடங்களில் செய்யும் தொழிலே தெய்வம் என்ற வாசகம் எழுதப் பட்டிருக்கிறதே.. அது யாருக்காக? நாம் தொழிலை தெய்வமாக நினைக்கிறோமா என ஒரு நிமிடமாவது சிந்திக்கத் தவறுவது ஏன்? இப்படி இருந்தால், நாடு வல்லரசாக முடியுமா?

அவரது பேச்சில் சமூக அக்கறை இருந்தது. இப் பேச்சைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதில் அரசு அலுவலர்களும் இருந்தனர்.

அவர் பொத்தாம் பொதுவாகக் கூறியிருந்தாலும், அரசு அலுவலகங்களில் கடமை தவறாத அலுவலர்கள் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். பெரும்பாலானோரின் செயல்களைத்தான் அவர் அப்படி வேதனையாகக் குறிப்பிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அரசு அலுவலகங்களில் மட்டும் இந்த நிலைமை இல்லை. அரசு, தனியார் என எந்தத் துறையாக இருந்தாலும், இதே நிலைதான் இருக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்பது வெறும் வார்த்தை ஜாலமாகவே பெரும்பாலான அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

அவர்கள் தாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கிறோம் என்பதை உணராமல் இருப்பது வேதனை. தன்னை நாடி வரும் ஒரு நபரை அலட்சியம் செய்து, பணியைச் செய்யாமல் காலம் கடத்தும் ஊழியர், ஓய்வுக்குப் பின் அதே அலுவலகத்துக்கு வந்தால் பணியில் இருக்கும் ஊழியரால் அலட்சியப்படுத்தும் போக்கும் தொடர்கிறது.

அப்போதுதான் அவருக்கு தான் தொழிலை தெய்வமாக கருதாமல் இருந்ததை உணருகிறார். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன பயன்?

செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதாத பலரும் பக்திமான்களாக காட்டிக் கொள்வதில் முன்னணியில் இருக்கின்றனர்.

பக்தி யோகத்தைப் போதிக்கும் ஆன்மிகவாதிகள், உண்மையை உரைக்கும் கர்மயோகத்தை விரிவாகச் சொல்ல மறப்பதாலேயே, பக்தி தவறாகப் பின்பற்றப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் ஆன்மிகவாதிகள்.

எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை நேசிக்கப் பழக வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு உதவும் மனப் பக்குவம் வளர வேண்டும். நேசிக்கும் மனோபாவம் தான் வாழ்வில் வெற்றியைத் தேடித் தரும்.

பகவத்கீதையில் கிருஷ்ணர் உபதேசித்ததை வாசகங்களாக அலுவலகங்களிலும், வீடுகளிலும் தொங்க விட்டிருக்கும் நம்மில் பலரும், அவர் மனித சமுதாயத்துக்கு உணர்த்திய கர்மயோக விதிகளை மக்களிடம் தெளிவுபடுத்த தவறியிருப்பதாக, வேதனை தெரிவிக்கின்றனர் அவர்கள்.

எல்லா மதங்களிலும் இறை பக்தியுடன், கர்மயோக கருத்துக்கள் ஆழமாக சொல்லப்பட்டுள்ளன. ஆனால், சமய உலகில் பக்தியை பெரிதாக்கி கர்மயோகத்தை சுருக்கி விடுவதன் விளைவைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பக்தியுடன் செய்யும் தொழிலே தெய்வம் என்ற கர்மயோகத்தை அதிகளவில் பின்பற்றுவதுதான் சமுதாயத்துக்கு நல்லது என்பதை மனிதகுலத்துக்கு உணர்த்த வேண்டும்.

எந்த மதத்தினராக இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணரும்போது, நாடு வல்லரசாக மாறும். எங்கும் நல் இதயமுள்ள மனிதர்களைக் காணமுடியும். மனிதநேயமும் நிலைத்து நிற்கும்.

மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும்

பணவீக்கம் அல்லது விலைவாசி என்பது ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவையெல்லாமே ‘டிமாண்டு அண்டு சப்ளை’ அதாவது, தேவை மற்றும் சப்ளை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பண்டங்கள் உள்பட அனைத்து பொருட்களின் சப்ளையும், தேவைக்குமேல் அதிகமாக மார்க்கெட்டில் கிடைத்தால், நிச்சயமாக பணவீக்கம் அதாவது விலைவாசி குறையும். தேவைக்கு குறைவான அளவில் சப்ளை இருந்தால் கண்டிப்பாக விலைவாசி, அதாவது பணவீக்கம் உயரும். பணவீக்கம் எந்த அளவில் இருக்கிறது? என்பதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கணக்கிட்டு, நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண்ணையும், மொத்த விலைவாசி குறியீட்டு எண்ணையும் அறிவிக்கிறது. இப்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பணவீக்கம் மற்றும் ஏற்றுமதி அளவு விவரம் பெரும் மகிழ்ச்சியையும், முதலீடு மற்றும் வளர்ச்சிப்பாதையில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண், அதாவது பொதுமக்கள் அன்றாடம் சில்லறையாக தங்கள் தேவைக்கு வாங்கும் பொருட்களின் விலையை குறிக்கும் எண், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 11.2 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த மாதத்தில் இது 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதுபோல, மொத்தவிலையை குறிக்கும் மொத்த விலை குறியீட்டு எண் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 7.5 சதவீதமாக இருந்தது, கடந்த மாதத்தில் 0 வாக அதாவது பூஜ்யமாக குறைந்துள்ளது. கடந்த 5½ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக ஒட்டுமொத்த இந்தியாவையே இது ஆச்சரியத்திலும், மகிழ்ச்சி பெருங்கடலிலும் ஆழ்த்தியுள்ளது. இதுபோல உணவுப்பொருள் பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 19.7 சதவீதமாக இருந்தது, இப்போது 0.6 சதவீதமாக சரிந்துள்ளது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவருவதுதான். விலைவாசியை நிர்ணயிப்பதில் பெட்ரோல், டீசல் விலை கணிசமான பங்கை வகிக்கிறது. ஆக, பணவீக்கம் குறைவு, விலைவாசி உயர்வு என்பதற்கெல்லாம் அடிப்படை பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உற்பத்தி செலவையும், போக்குவரத்து செலவையும் பெருமளவில் குறைப்பதால்தான். ஆனால், இதற்கு பொருளாதார நிபுணர்கள் மற்றொரு காரணத்தையும் கூடுதலாக கூறுகிறார்கள். கிராமங்களில் கிடைக்கும் ஊதியம் குறைந்துவிட்டதால், பொதுமக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. ஆனால், பொருட்களை வாங்குபவர்கள் குறைந்துவிட்டதாலும், விலைவாசி குறைந்துவிட்டது என்கிறார்கள். ஆக, இங்கும் ‘டிமாண்டு அண்டு சப்ளை’ தத்துவம்தான் காரணமாக வருகிறது. ஆனால், இந்த அளவுக்கு பணவீக்கம் குறைந்தாலும், அதன் முழு பலன் இன்னும் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். தானியங்கள், அரிசி, கோதுமை, காய்கறிகள், வெங்காயம் விலை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. என்றாலும், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பால் உள்பட பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விலை குறியீட்டு எண் 0 ஆகிவிட்டது என்கிறார்கள். எனவே, மொத்த விலை குறைந்து இருக்க வேண்டும். மொத்தவிலையில் பொருட்கள் வாங்கி, சில்லறை விலைக்கு விற்கும்போது, அதன் தாக்கத்தால் சில்லறை விலையும் இப்போது அறிவித்ததற்கு ஏற்றவகையில் குறைந்து இருக்க வேண்டும். பொதுமக்கள் தாங்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கும்போது, ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு விலைவாசியோடு ஒப்பிட்டு கூறிய அளவுக்கு குறைந்த விலையில் கிடைத்தால்தான் அவர்களால் இதையெல்லாம் நம்பமுடியும். ஆனால், மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு குறையவில்லையே என்பதுதான் அவர்களின் ஆதங்கமாகும். இதுபோல, பணவீக்கம் குறையும் நேரத்தில் எல்லாம், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதா? என்பதை கண்காணிக்கும் கடமை மத்திய–மாநில அரசுகளுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அன்றாடம் வாங்கும் பொருட்களை குறைந்த விலையில் வாங்கமுடியாமல், விலைவாசி குறியீட்டு எண் குறைந்துவிட்டது என்று வெறும் அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்த பயனுமில்லை. ‘ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதுதான் மக்களின் கருத்து.

NEWS TODAY 25.05.2026