Saturday, January 31, 2015

குடித்து ரோட்டில் கிடந்த மாணவனுக்கு உடனடி தேவை என்ன?


ரூர் பேருந்து நிலையம் அருகே மது குடித்து விட்டு ரோட்டில் கிடந்த மாணவனை பள்ளியை விட்டே நீக்கி விட்டார்களாம். இது அந்த மாணவனை இன்னும் சீழ்படுத்தும் வேலைதான்.
திக்கெங்கும் மதுக்கடைகள், திரைப்படம் உள்ளிட்ட பலவற்றிலும் குடி ஒரு கொண்டாட்ட விஷயமாக காட்டப்பட்டு வரும் சூழலே இருக்கிறது. இதில் அந்த மாணவனை மட்டும் குற்றவாளியாக்கி, தண்டனை கொடுப்பதால் எதுவும் சரியாகி விடாது. மது ஒழிப்பு, திரைப்பட சீர்த்திருத்தம் எனப் பேசி உடனடி தீர்வு ஏதுமில்லை.

 இப்போதைக்கு அந்த மாணவனுக்கு தேவைப்படுவது மது குறித்த அன்பான கவுன்சிலிங். மதுவை விட்டு அவனாக விலகும் விதத்திலான நடவடிக்கைகளே. எது ஒன்றை காரணப்படுத்தியும் ஒருவருக்கு கல்வி மறுக்கப்படுவதை ஏற்கவே முடியாது. கல்வி மறுக்கப்பட்டு அவர் சிறு தொழில்களில் குற்றவுணர்ச்சியோடு ஈடுபடும்போது வருங்காலத்தில் குணப்படுத்த முடியாத குடி நோயாளியாவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பாலியல் கல்வி கேட்பதை விட, மது குறித்த பாடங்களை வையுங்கள் என்கிற யோசனை முளைக்கத் தொடங்கிவிடும். பாடங்களாக ஒரு மாணவருக்கு உள்ளே நுழைவதை விடவும் கலையாக உள்ளிறங்குவதில்தான் அவர் தன்னுடைய விருப்பங்களை மாற்றியமைத்து கொள்ள முடிவெடுக்கிறார்.

குடிப்பது ஒழுக்கம் சார்ந்த விஷயமா, பழக்கம் சார்ந்த விஷயமா... மது தேவை, தேவை இல்லை என்று அணி பிரித்து விவாதம் பண்ணுவதைக் காட்டிலும் முக்கியமான ஒன்று உள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் குடிக்கு அடிமையாகியிருப்பதை பல்வேறு செய்திகள் உணர்த்துகின்றன. இது முளை விடும்போதே சரியான தீர்வை எடுக்க வேண்டியது அரசும் சமுக அக்கறையுடையவர்களின் செய்ய வேண்டியதாகும்.

-வி.எஸ்.சரவணன்

OVERSEAS CITIZEN OF INDIA CARD IS NOT CITIZENSHIP

It is a lifelong visa granting certain privileges in India for people of Indian origin.
KUALA LUMPUR: The issuing of the Overseas Citizen of India (OCI) card by the Indian government to all people of Indian origin residing outside India does not tantamount to the granting of citizenship, the Indian High Commission in Malaysia said today.
It said that securing Indian citizenship was entirely a different procedure and not related to the OCI card.
“The OCI card is not an Indian passport, but is a lifelong visa granting certain privileges in India for the people of Indian origin with respect to social, economic and educational purposes,” it said in a statement.
The High Commission said it had also clarified the matter to a Malaysian delegation during the Foreign Office Consultations in India on January 20.
The OCI card was issued in accordance with the commitment made by Indian Prime Minister Narendra Modi last year to issue OCI cards to all people of Indian origin residing outside India.
The Indian High Commission also said that in order to streamline this process, it had discontinued issuing the Person of Indian Origin (PIO) cards, and all people of Indian origin residing in foreign countries will now only be issued OCI cards.
Those who want to apply for an OCI card can do so via online at http://passport.gov.in or visit the Indian High Commission website.

source document   https://my.newshub.org/overseas-citizen-india-card-not-citizenship-10634116.html

Friday, January 30, 2015

மனித உரிமை ஆணையத்தை அதிர வைத்த குழந்தைகள் சித்ரவதை!


திருவண்ணாமலை: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் குழந்தைகள் சித்ரவதைக்கு உள்ளானது குறித்து அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த விமல்ராஜ் (28) என்பவரின் மனைவி லோகேஸ்வரி (26). இவர்கள் இருவரும் சென்னையில் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கரை வயதில் அஸ்வினி என்ற மகளும், மூன்றரை வயதில் அஸ்வின் என்ற மகனும் உள்ளனர். இந்த குழந்தைகளை, சென்னையில் வைத்து பராமரிக்க முடியாது என்பதால், லோகேஸ்வரி தன் தங்கை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்து இருந்தார்.

முத்துலட்சுமி, குடியாத்தம் அடுத்துள்ள கொத்தமாரிகுப்பம் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், குழந்தைகளை முத்துலட்சுமி கொடுமை செய்வதாகவும், குழந்தைகள் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கிராமத்தில் வசிப்பவர்கள், விமல்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விமல்ராஜ் தன் மனைவி லோகேஸ்வரியுடன், கடந்த 27ஆம் தேதி குடியாத்தம் வந்தார். அங்கு, தன் குழந்தைகள் அடையாளம் தெரியாதபடி, உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து முத்துலட்சுமியிடம் விசாரித்தபோது, அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை.

பின்னர், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை தூக்கிச்சென்றார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், குழந்தைகள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படியும் பரிந்துரை செய்துள்ளனர். இதனடிப்படையில், குழந்தைகள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், ‘சிறுமி அஸ்வினிக்கு தலையில் பலத்த காயம் உள்ளதால், 2 கண்களும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலில் பல இடங்களில் சிறு சிறு காயங்களும் உள்ளன. சிறுவன் அஸ்வின் முகத்தில் பலத்த காயமும், காலில் வெந்நீர் ஊற்றியதால் ஏற்பட்ட காயங்களும், உடல் முழுவதும் சிறுகாயங்களும் உள்ளன. இந்த குழந்தைகளை கட்டை அல்லது குச்சியால் தாக்கி இருக்கவேண்டும்’ என்று கூறினர்.

பத்திரிகையில் வந்த இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர், நீதிபதி டி.மீனாகுமாரி, பத்திரிகையில் வந்த செய்தியையே வழக்கு மனுவாக கருதி, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி மீனாகுமாரி, நடந்துள்ள இந்த சம்பவம் மனித உரிமை மீறல் செயலாகும். எனவே, இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதேபோல, குழந்தைகள் உடல்நலம் குறித்து வேலூர் அரசு மருத்துவமனை தலைவர் (டீன்) விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

சர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள்!







சர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறுகளைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிடலாம்.

ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண். இந்தக் கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட பொருள்களைச் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கும், கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட சத்தான எட்டு பழங்களும், அதன் பலன்களும் இங்கே...

ஆப்பிள்

நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ஒருவர் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 35 சதவிகிதம் குறைகிறது என்கின்றன ஆய்வுகள்.

ஆரஞ்சு

ஆரஞ்சில் வைட்டமின்-சி, நார்ச்சத்து, தையமின் மற்றும் பல்வேறு அத்யாவசிய ஊட்டச்சத்து நிறைந்துள்ள பழம். தாராளமாக எடுத்துக் கொள்லலாம்.


செர்ரி

பீட்டா கரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் செர்ரி. தினமும் செர்ரி பழம் ஒரு கப் சாப்பிடலாம்.

பேரிக்காய்

வைட்டமின் ஏ, பி 1 ,பி 2, சி, ஈ மற்றும் மாவுச்சத்து நிறைந்த பழம். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சீராகச் சுரக்கும்

கருப்பு ப்ளம்ஸ்

ஆன்தோ சைனின் நிறைந்தது. கார்போஹைட்ரேட், சீராகச் செரிப்பதற்கும், சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது. தினமும் ஒரு கப் கருப்பு ப்ளம்ஸ் சாப்பிடலாம். கருப்பு ப்ளம்ஸ் விதைகளை அரைத்து பொடியாக்கி பாலில் போட்டுக் குடிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவும். கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

கிவி

வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு பழம் சாப்பிடலாம்.

கொய்யாப்பழம்

நார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் நிறைந்தது. தினம் ஒன்று சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட, கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்.

- பு.விவேக் ஆனந்த்

Dutch retiree jailed a day and fined for punching Tigerair cabin crew member -



SINGAPORE - A retiree who punched a cabin crew member in the shoulder while in transit at Changi Airport was jailed for a day on Friday.

Dutch national Gerrit Eveleens, 66, was also fined $3,000 after he admitting punching Mr Tan Leek Hwee, 46, on his shoulder after boarding the Tigerair at Terminal 2 at about 4pm on Jan 22.

The court heard that Eveleens had flown from Jakarta to Singapore and had got on his onward flight to Bangkok when he took an empty seat on row 13 instead of the one he had been allocated.

On seeing this, Mr Tan explained to him that it was an emergency seat which had more legroom and that he had to pay more to upgrade.

When he was given a seat upgrade card to fill up, Eveleens threw it and told the victim: "Shut up, I don't speak English."

Mr Tan sought the help of the captain who managed to convince Eveleens to return to his original seat.

While walking along the aisle towards the seat, he suddenly punched Mr Tan on his right shoulder. The captain stepped in and told him to leave but he refused.

The captain signalled to the ground staff to call the police. Eveleens, who was given another chance to leave, finally did so, shouting disparaging remarks about the airline on his way out.

Deputy Public Prosecutor Muhammad Faizal Nooraznan sought a short custodial sentence for Eveleens, saying he was the sole aggressor and had attacked the crew member without any provocation.

"The incident happened just before take-off and caused inconvenience to the passengers boarding the plane," he said.

Eveleens said through a Dutch interpreter that he was very sorry and wanted to go back home as soon as possible.

He could have been jailed for up to two years and/or fined up to $5,000.

elena@sph.com.sg

Thaipusam Festival procession to begin on Feb 3 midnight -



SINGAPORE - The annual Thaipusam Festival procession will begin at 12.05am on Feb 3 this year, the Hindu Endowments Board announced on Wednesday.

At the start time, devotees carrying milk pots can begin their walk of faith from Sri Srinivasa Perumal Temple at Serangoon Road to the Sri Thendayuthapani Temple at Tank Road, which will start receiving milk offerings from 12.30am on the same day.

Thaipusam is a Hindu festival which honours the victory of deity Lord Murugan over demon hordes. Devotees seek blessings and fulfil their vows by carrying kavadis - intricate structures of steel and wood - and milk pots as offerings.

Those wishing to put on spike kavadis can register for the free spike piercing service at the Sri Srinivasa Perumal Temple. Spike and chariot kavadis can make their walk between 4am and 2pm on Thaipusam day. All kavadis will be required to enter the Sri Srinivasa Perumal Temple via the Race Course Road entrance.

அமெரிக்காவில் 95 அரங்குகளில் 'என்னை அறிந்தால்'

அமெரிக்காவில் 95 அரங்குகளில் 'என்னை அறிந்தால்'

வாஷிங்டன் (யு.எஸ்): அஜீத்தின் என்னை அறிந்தால் படம் அமெரிக்காவில் 95 அரங்குகளில் வெளியாகிறது. அரங்குகள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கணிசமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் அஜீத். எந்த பின்புலமும் இல்லாமல் திரையுலகில் முன்னேறி வந்ததும், ரசிகர் மன்றங்களை கலைத்து உட்பட அவருடைய வெளிப்படையான அணுகுமுறையுமே அவருக்கு அங்கே உள்ள ஆதரவுக்கு முக்கிய காரணமாகும். இந் நிலையில் அஜீத்தின் என்னை அறிந்தால் திரைப்படம் 95 தியேட்டர்களில் அமெரிக்காவில் வெளியாகிறது.

முன்னதாக 'ஆரம்பம்' 78 தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. வீரம் படம் 80 அரங்குகளில் வெளியானது. இப்போது 95 அரங்குகளில் என்னை அறிந்தால் வெளியாகிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக 9 தியேட்டர்களிலும், இலனாய்-ல் 8, டெக்சாஸில் 5, நியூ ஜெர்சியில் 5, ஒஹயோவில் 5, ஃப்ளோரிடாவில் 4, பிலடெல்பியாவில் 4 , மிசிகன் 4 உட்பட 36 மாகாணங்களில் என்னை அறிந்தால் படத்தை. அட்மஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

Read more at: http://tamil.filmibeat.com/news/yennai-arinthaal-release-95-screens-usa-032984.html

NEWS TODAY 10.06.2026