Saturday, February 14, 2015

Medical varsity V-C daughter to sit for MD admission test, docs hint at bias, manipulation

Written by Sabyasachi Bandopadhyay | Kolkata | Posted: January 31, 2015 1:22 am

THE INDIAN EXPRESS

A section of doctors and the Opposition are up in arms against the vice-chancellor (V-C) of West Bengal University of Health Sciences (WBUHS), which is set to conduct an admission test for MD degree course on February 1.

The reason: Manasweta, daughter of V-C Bhabotosh Biswas, is appearing for the test. The doctors also claim that this year, for the first time, admission test for the MD course — till now restricted to only students who have completed MBBS from state medical colleges — has been thrown open to students who have done MBBS from medical colleges in other states.

Manasweta has completed her MBBS from a private medical college in Bangalore. Incidentally, son of Chief Minister Mamata Banerjee’s personal physician Subrata Moitra, who is also taking the test, has completed his MBBS from Manipal. This year, around 5,000 students will sit for the test.

“When your son or daughter is appearing for the examination, you should not be in any way attached to the examination process. If you are at the helm of affairs, there is so much scope for manipulation. So, to avoid all controversies, Dr Biswas should have at least taken leave until the examination process is over,” said a doctor in Kolkata.

He added: “There is an obvious conflict of interest. Moreover, everybody can understand that to facilitate the wards of doctors having allegiance to the ruling party, the MD admission test this year has been thrown open to students from colleges in other states as well.”

Biswas, an eminent cardio-thorasic surgeon in Kolkata — involved in the setting up of the cardio-thorasic unit at R G Kar Government Medical College and Hospital — was made the V-C around eight months ago by Chief Minister Mamata Banerjee. Mamata is also in charge of the health department.

Gautam Mukhopadhyay, president of pro-left Association of Health Service Doctors, said: “While the ward of a V-C has every right to take an examination, his or her father should not be in any case involved in the examination process. But we don’t know who will ensure that in this case.”

Former health minister in the Left Front government, Surya Kanta Mishra — the current Leader of Opposition in the state Assembly — said the V-C should not be in a position to influence the examination process. “This government is known for flouting all norms and rules. I hope the V-C keeps in mind the dignity of his chair,’’ he said.

When contacted, the V-C denied all allegations. “I have told to the government that I will not in any way be associated with the examination process. There is no question of me taking leave. If the examination has been thrown open to outside students, it was done by the state government and not me,’’ Biswas said.

Principal Secretary (Health and Family Welfare) Moloy Dey came out in V-C’s support. “The V-C has declared in writing that he had fully dissociated himself from the admission test. So, we don’t see anything wrong,’’ Dey said.

Government Eyes Rs 6 Crore From RGUHS

BENGALURU:  Governments offering financial assistance and support to universities is common. But, in a reversal of roles, the Medical Education Department has sought funds from the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) here.

Medical Education Minister Sharan Prakash Patil recently wrote to the university for financial assistance of Rs 6 crore to set up a regional unit of Jayadeva Institute of Cardio Vascular Sciences in Kalaburagi.

The minister’s request was placed before the university’s Syndicate on Friday. Sources told Express, “The Syndicate approved the minister’s request, but insisted that guidelines for such requests be framed.”

This is not the first time the government has sought financial assistance from RGUHS. A few months ago, the minister had sent a proposal seeking Rs 350 crore for setting up six new government medical colleges in the state. The proposal was placed before the Syndicate and it was rejected.

Speaking about the previous request, a source told Express, “The minister had stated that the government will return the money after some time. We had a detailed discussion and decided not to accept his request as with Rs 350 crore, the university itself could start a constituent college.”

Meanwhile, Syndicate members and other senior officials are wondering why the government is seeking financial assistance. “RGUHS is struggling to establish its own campus for several years and the government has not even bothered to support the only medical university of the state,” said a senior Syndicate member.

However, sources said RGUHS has a cash stash of over Rs 500 crore.

HC Notice to Registrar, Govt

BENGALURU: The High Court on Friday issued a notice to RGUHS, its Registrar (administration) Dr Premkumar and Department of Health and Family Welfare. Hearing a petition filed by S P Venkatesh, challenging the extension of Premkumar’s tenure as registrar, the division bench issued a notice to the respondents before adjourning the matter for four weeks.

The petitioner said Premkumar was appointed as Registrar (Academic) on August 23, 2010 for a term of one year but Premkumar extended his tenure for a period of one year by passing an order himself.

As per the amendments made to the RGUHS (Amendment) Act, 2013, the Registrar has no powers to pass such an order and the power to appoint registrar rests with the state government. Premkumar stuck to his post even after the state appointed a KAS official in his place. Hence, the petition was filed, said Venkatesh.

மக்கள் பெருமை; மண்ணின் பெருமை!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பது அமெரிக்காவையே. காரணம், இன்றைய உலகின் மிகச் சிறந்த கல்வி நிலையங்கள் அங்குதான் உள்ளன.

மேலும், கல்வியில் சிறந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகையை தாராளமாக வழங்கும் நடைமுறை உள்ள நாடும் அமெரிக்காவே!

அமெரிக்க கல்வி நிலையங்களில் 1,02,673 இந்திய மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 6 % அதிகம். மும்பை நகர அமெரிக்க கான்சல் டாம் வஜ்தா கூறுகிறார்:

"இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டின் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். காரணம், பல நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து பல விஷயங்களைப் பற்றி விவாதித்து, கல்வி கற்கும் நடைமுறையில் அவர்களது அறிவு வளர்ச்சியும், புதிய கோணங்களில் எல்லா விஷயங்களையும் புரிந்து கொண்டு, தரமான கண்டுபிடிப்புகளுக்கு வழி செய்யும் தன்மையும் உருவாகிறது'.

அமெரிக்காவில் 1985-ஆம் ஆண்டு உயர்கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஓக்லஹோமா மாநிலத்தின் ஓ.எஸ்.யு. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பிற்காக நான் அனுமதிக்கப்பட்டேன்.

எனது கல்லூரி நாள்களிலேயே அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "டைம்' வாரப் பத்திரிகையை நான் தவறாது படிப்பேன். சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரக நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து பல புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பதோடு, அங்கே உள்ள அலுவலர்கள் வழங்கும் ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்வதுண்டு.

நான் ஓக்லஹோமாவில் சேர்ந்து, பின்னர் டெக்ஸாஸ் மாநிலத்தின் யு.டி.ஏ. பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்தபோது என்னை சந்தித்த பல அமெரிக்கப் பேராசிரியர்களும் நான் இந்திய மாணவன் எனத் தெரிந்த பிறகு, மெட்ராஸ் பல்கலைக்கழகமா எனக் கேட்பார்கள். அதாவது, இந்தியாவில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்ற அறிதல் எல்லாரிடமும் பரவி இருந்தது.

ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகம் ஸ்டில் வாட்டல் என்ற சிறு நகரில் இருந்தது. அங்கே எம்.பி.ஏ. பட்டப்படிப்பில் நான் சேர்ந்தபோது எனக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை.

முதல் காலாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் அடுத்த ஆண்டு படிப்பிற்கான உதவித்தொகை கிடைத்துவிடும் எனத் தெரிந்துகொண்டேன். எனக்கு அந்தக் காலாண்டுத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்கள் கிடைத்தன.

ஆனால், அந்தப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக கல்வி உதவித்தொகை வழங்க நிதி இல்லை. எனவே, பக்கத்து மாநிலமான டெக்ஸாஸில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு சென்று படித்தால் நிதியுதவி நிச்சயம் எனக் கூறினார்கள்.

ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு பல்கலைக்கழகத்திற்கு செல்வது அங்கே சர்வ சாதாரணம். நான் டெக்ஸாஸ் மாநில ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்திற்கு சென்று எம்.பி.ஏ. படிப்பதற்காக மனுச் செய்துவிட்டு அந்த துறையின் தலைமைப் பேராசிரியரை சந்தித்தேன்.

எனக்கு மதிப்பெண் அதிகம் இருந்தமையால் அட்மிஷனும் கல்வி உதவித்தொகையும், பேராசிரியர் ஒருவரின் உதவியாளர் பணியும் வழங்கப்பட்டது. ஒரு வாரத்தில் அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான் என் படிப்பைத் தொடர்ந்தேன்.

எங்கள் துறையில் நான்கு பேர் அரசின் உதவித்தொகையைப் பெற்று வந்தோம். நான் மட்டும் இந்தியன். மற்ற மூன்று பேரும் அமெரிக்கர்கள். நிதி நெருக்கடி காரணமாக, நான்கு பேருக்கான உதவித்தொகை ஒருவருக்கானதாகக் குறைக்கப்பட்டது. அது எனக்கு ஒதுக்கப்பட்டது.

மீதமுள்ள மூன்று பேருக்கும் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது. இது எனக்கு சங்கடமான மனநிலையை உருவாக்கியது.

அவர்களுக்கு உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது எனக்கு கவலை அளிப்பதாக அவர்களிடம் நான் கூறினேன். அதற்கு அவர்கள், "இதில் கவலைப்பட ஒன்றுமே இல்லை. நம் நான்கு பேரில் நீ அதிக மதிப்பெண் பெற்றதால் உதவித்தொகை பெறும் தகுதி உனக்கு மட்டும்தான் உண்டு என்பது எங்களுக்கு தெரியும்' என கூறியது எனக்கு இன்ப அதிர்ச்சி!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் குணாதிசயங்கள்தான் அடிப்படை என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் மிகப்பெரிய தனவந்தர்கள், வியாபாரிகள், சாதாரண வேலை செய்பவர்கள் என சமூகத்தின் எல்லா மட்டத்திலிருப்பவர்களும் நேர்மையாக நடந்து கொள்வதை நான் பார்த்தேன்.

அதிக வசதியில்லாத மாணவன் நான் என்பதால், எனது கல்வி உதவித்தொகைக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு உருவாகியது.

எனது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தபோதுதான் எனக்கு தெரிய வந்தது, அந்நாட்டில் மாத வருமானம் 1,000 டாலருக்கு கீழே இருந்தால் குழந்தைகளுக்கு பள்ளிக்கூட கட்டணம் கிடையாது என்பது.

மேலும் அவர்களுக்கு பள்ளி புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசம்; காலை உணவும், மதிய உணவும் பள்ளியிலேயே. அரசு இதைப் பற்றி எந்த விளம்பரமும் செய்து கொள்வதில்லை.

நானும் எனது மனைவியும் வாடகைக்கு வீடு தேடியபோது, ஒரு வீட்டிற்கு சென்று எல்லா இடங்களையும் பார்த்த பின்னர் அந்த வீட்டின் சொந்தக்காரர் வாடகை மாதம் 250 டாலர் எனக் கூறியதைக் கேட்ட பின், மறுநாள் வந்து முடிவை சொல்வதாகக் கூறினோம்.

அந்த தெருவிலேயே இருந்த மற்றொரு வீட்டில் உள்ள மணியை அழுத்தி அதன் சொந்தக்காரரிடம் வீட்டை காண்பிக்கச் சொன்னோம். அந்த வீட்டின் மாத வாடகை 200 டாலர் எனக் கூறினார்.

அவரிடம் "சார், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வீடும் வாடகைக்கு வருகிறது. அந்த வீடு இதைவிட கொஞ்சம் சிறியது. ஆனால், வாடகை இதைவிட 50 டாலர் அதிகம் கேட்கிறார்கள்' எனக் கூறினேன் நான்.

அதற்கு, அவர், "எனக்கு அதுபற்றித் தெரியாது. ஆனால், நிச்சயம் எங்கள் வீட்டை விட ஏதேனும் ஒரு வகையில் அது சிறந்ததாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். அதனால்தான், அவர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள் என நினைக்கிறேன்' என்றார்.

அவரது பெருந்தன்மை என்னை ஆச்சரியப்பட வைத்தது. அப்படியே நமது ஊர் நிலைமையை கற்பனையில் ஓடவிட்டேன். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லெண்ணம், நட்புறவு எதுவுமே இங்கே கிடையாது என்பதே உண்மை.

அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் மக்கள் மிக உயர்ந்த குணாதிசயங்களுடன வாழ்ந்து வருவது அவர்களுடைய கட்டுக்கோப்பான சமூக வாழ்க்கை அமைப்பை எனக்கு உணர்த்தியது.

படித்தவர்கள், பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று எல்லாத் தட்டு மக்களும் நல்ல குணாதிசயங்களுடன் அங்கே உருவாகியிருப்பது அதிசயமான ஓர் அம்சம்.

அங்கே இருக்கும்போது வசதியில்லாத ஒரு மாணவனாக கடினமான கல்வி அமைப்பில் எனது கல்லூரி, பாடங்களைப் படிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் இருந்தேன்.

எனது நண்பர் ஒருவர் இராக் நாட்டைச் சேர்ந்தவர். அங்கே ஷா மன்னரை எதிர்த்து உருவான போராட்டங்களால் பாதிக்கப்பட்டு அந்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறி கார் மெக்கானிக் அவர். அவரது உதவியுடன் 800 டாலர் பணத்தில் ஒரு பழைய ஃபோர்ட் காப்ரி எனும் காரை விலைக்கு வாங்கி நான் உபயோகித்து வந்தேன்.

எனது அமெரிக்க நண்பர்கள், "800 டாலரில் ஒரு காரா? அப்படிப்பட்ட காரில் ஏறி நாங்கள் அடுத்த தெருவிற்குகூட போகமாட்டோம்' என கேலி செய்வார்கள்.

ஒரு நாள் அந்த காரை நான் ஓட்டிச் சென்றபோது எஞ்சின் பகுதியில் பயங்கர சப்தம் ஏற்பட்டதால் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியரிடம் வாகன பணிமனைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினேன். அவர் வந்து என் காரை ஸ்டார்ட் செய்து பார்த்தார்.

பின்னர் காரின் கீழே ஒரு பெரிய கருவியை இயங்க வைத்து காரை மேலே தூக்கினார். காரின் கீழே இருந்து கொண்டு அடிப் பாகத்தை ஆய்வு செய்து பின் நீண்ட கம்பியில் முறுக்கும் கருவியை நுழைத்து பல நட்டுகளை முடுக்கிவிட்டார்.

அது முடிந்த பின், என்னிடம் காரை ஓட்டிப் பாருங்கள் எனக் கூறினார். அந்த காரை நான் ஓட்டியபோது கார் சரியானது எனக்குத் தெரிந்தது.

அவரிடம் சென்று நான் "எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்' எனக் கேட்டபோது, "ஒன்றுமில்லை எனக் கூறி உங்கள் காரில் சில நட்டுகள் கழண்டிருந்தன அதை முறுக்கிவிட்டேன் அவ்வளவுதான், நீங்கள் பத்திரமாக பயணம் செய்யலாம்' என மகிழ்ச்சியுடன் கூறினார். அந்த நிகழ்வு என்னை மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

ஆக, அந்தச் சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களும் நேர்மையுடன் வாழ்வதையும், இங்கே அப்படி இல்லை என்பதையும் கணக்கிலெடுத்து நமது சமூக முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவாதிப்பது இன்றைய அவசரத் தேவையாகிறது.

ஆனால், நம் அரசியல் தலைவர்கள் அதைச் செய்யாமல் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்ற எண்ணத்திலேயே வலம் வருவது மிகவும் வருத்தமளிக்கும் அம்சம்.



கட்டுரையாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

Friday, February 13, 2015

இந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு?



உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இதோ தொடங்க இருக்கிறது. உலகே உற்று நோக்கும் இந்தப் போட்டிகளில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி மற்ற போட்டிகளை விட விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த இரு அணிகள் மோதும் போட்டியை காண ஆவலாக இருக்கிறார்கள்.
உலகக்கோப்பை போட்டியில் இரண்டு அணிகளும் 5 முறை சந்தித்து உள்ளன. இதில் 5 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவும், புதிய சரித்திரம் படைக்க பாகிஸ்தானும் பலப் பரீட்சை நடத்த இருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன், பௌலர் மற்றும் ஆல்-ரவுண்டர் என இரு அணிகளையும் ஒரு முறை அலசிப் பார்ப்போமா..?
---------------------------------------------

 இந்தியா    
  ஷிகர் தவான்: 
              ரன் :2095   ஆவரேஜ் :42.7   ஸ்ட்ரைக்ரேட் : 89.56

  ரோகித் ஷர்மா  
             ரன் :38.90   ஆவரேஜ் : 38.90   ஸ்ட்ரைக்ரேட் :81.55
  விராட் கோலி               ரன் : 6232   ஆவரேஜ் : 51.50   ஸ்ட்ரைக்ரேட் : 90.17
  ரகானே            
           ரன் : 1376   ஆவரேஜ்  30.57    ஸ்ட்ரைக்ரேட் : 76.57
  
 ரெய்னா          
        ரன் : 5104     ஆவரேஜ் : 35.44   ஸ்ட்ரைக்ரேட் : 92.98
 டோனி    
          ரன் : 8262  ஆவரேஜ் : 52.29   ஸ்ட்ரைக்ரேட் : 88.84

  ஜடேஜா  
 
       
          ரன் : 1696   ஆவரேஜ் : 33.92    ஸ்ட்ரைக்ரேட் : 84.42    விக்கெட்: 134
 ரவிச்சந்திர அஸ்வின் 
         விக்கெட்: 120    ஆவரேஜ் :32.64
புவனேஸ்வர் குமார்                  விக்கெட்: 45  ஆவரேஜ் : 37.15
முகமது ஷமி                
            விக்கெட்: 70   ஆவரேஜ் : 26.74
 உமேஷ் யாதவ்            
        விக்கெட்: 49     ஆவரேஜ் : 36.44


பாகிஸ்தான் 

நஷீர் ஜம்ஷத்
       ரன் : 1413   ஆவரேஜ் : 33.64   ஸ்ட்ரைக்ரேட் : 76.04
அகமது ஷேஷாத்   
      ரன் : 1985   ஆவரேஜ் : 34.82  ஸ்ட்ரைக்ரேட் : 72.02
யூனிஸ் கான்
        ரன் : 7197   ஆவரேஜ்: 31.56   ஸ்ட்ரைக்ரேட் : 75.32
மிஸ்பா-உல்ஹக்       ரன்: 4772   ஆவரேஜ் : 424.99   ஸ்ட்ரைகரேட் : 73.65
ஷொகைல்
      ரன் : 309     ஆவரேஜ் :34.33   ஸ்ட்ரைக்ரேட் :79.02
உமர் அக்மல்
      ரன் : 2749   ஆவரேஜ் :35.24   ஸ்ட்ரைக்ரேட் :86.47
அப்ரிடி
      ரன் : 7948   ஆவரேஜ் : 23.58   ஸ்ட்ரைக்ரேட் : 116.79  விக்கெட்: 393
யாசிர் ஷா
     விக்கெட்: 2   ஆவரேஜ் :25.50
வகாப் ரியாஸ்      விக்கெட்: 61    ஆவரேஜ் :32.09

ஷொகைல் கான்
      விக்கெட்: 6    ஆவரேஜ் : 33.16
முகமது இர்பான்
      விக்கெட்: 57    ஆவரேஜ் : 29.92


திண்டுக்கல்: பாம்புகளை நேசித்து கல்லூரி மாணவர், பாம்பு கடித்து பலியான சோகம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த பகுதியில் பாம்பை பார்த்தாலும்...ரஜினியைப் போல ‘பா...பாம்...பாம்பு’ என அலறுவதற்கு பதில் நவீன்குமார் என்றுதான் அலறுவார்கள். எங்கு பாம்பு இருந்தாலும் அதை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் கொண்டு விட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தவர் நவீன்குமார்.

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் பி.ஏ வரலாறு முதலாமாண்டு படிக்கும் இவர், தனது 10 வயதில் இருந்து பாம்புகளை பிடித்து வருபவர். 6ஆம் வகுப்பு படிக்கும்போது, பள்ளிக்குள் வந்த பாம்பை பிடித்ததுதான் இவரின் முதல் அனுபவம். அன்று முதல் குடியிருப்பு பகுதிகளில் பாம்பு புகுந்தால் இவரைத்தான் அலைபேசியில் அழைப்பார்கள்.

வனத்துறையும் பாம்பு பிடிக்க இவரை பயன்படுத்தி வந்தது. பாம்புகளை அதிகம் நேசிக்கும் நவீன்குமார், சில இடங்களில் அவசரப்பட்டு பொதுமக்கள் அடித்து காயப்படுத்தும் பாம்புகளை கொண்டு காயத்திற்கு மருந்துப் போட்டு, அது குணமான பின்புதான் காடுகளில் விடுவார். பாம்புகளுக்கு எலியை உணவாகக் கொடுப்பதுடன், பாம்புகளை வைத்து பலமணி நேரம் விளையாடி சாதனை படைத்திருக்கிறார்.

பாம்புகள் மீது அதிக அன்பு வைத்திருந்த நவீன், அடிபட்ட பாம்புகளுக்கு மருந்து தடவிக்கொண்டே, ‘பயப்படாதே...குணமாகிடும்...’ என ஆறுதல் சொல்வாராம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக காமாட்சிபுரம் பகுதியில் புகுந்த ராஜநாகத்தை அப்பகுதி மக்கள் அடித்து விட்டனர். அதிக காயங்களுடன் இருந்த அந்த ராஜநாகத்தை அங்கிருந்து எடுத்து வந்து தனது வீட்டில் வைத்து மருந்துப் போட்டு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்நிலையில், பையில் இருந்த பாம்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக பையை திறந்தபோது, அதிக கோபத்துடன் இருந்த ராஜநாகம், அவரின் மேல் உதட்டில் கடித்தது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.

கடிப்பதற்கு முதல்நாள், 'இனிமேல் பயப்படாதே... உன்னை யாரும் அடிக்கமாட்டாங்க’ என ராஜநாகத்திடம் பேசியபடியே மருந்து தடவியதை சொல்லிச் சொல்லி சோகத்தில் துடிக்கிறார்கள் அவரது உறவினர்கள்.

-ஆர்.குமரேசன்

23 வயதில் ஒரு கேப்டன்!




Posted Date : 15:14 (13/02/2015)Last updated : 15:27 (13/02/2015)


இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆக இளம் வயது வீரர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உஸ்மான் கானி.

ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பையில் விளையாடியுள்ள 76 போட்டிகளில் 50 ல் வெற்றி பெற்றுள்ளது.

1999 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பை போட்டியில் தோல்வியே காணமால் வெற்றி பெற்று வந்தது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில், காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்ளாதேஷ் அணியில் அதிகபட்சமாக 7 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இங்கிலாந்து அணி 1979, 1987 மற்றும் 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி மூன்று முறையும் கோப்பையை வெல்லாமல் கோட்டை விட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 338 ரன்கள் குவித்தது. சளைக்காத இங்கிலாந்து அணியும் அதிரடியாக விளையாடி 338 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் 'டை'யில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவதாக பேட் செய்து அதிக ரன் எடுத்த அணி இங்கிலாந்துதான்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிகமுறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி நியூசிலாந்துதான். இந்த அணி 6 முறை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம்தான் அதிக வேகமாக அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் 50 ரன்களை அவர் கடந்தார்.

உலகக் கோப்பை போட்டிக்கு மூன்றாவது முறையாக விளையாடத் தகுதி பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணி, இதற்கு முன் விளையாடியுள்ள 8 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது



உலகக் கோப்பைத் தொடரில், இலங்கை அணி கனடா அணியை 36 ரன்களில் ஆல்அவுட் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக இலங்கை வீரர் லசித் மலிங்கா 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினுக்குதான் உண்டு. 1992 முதல் 2011ஆம் ஆண்டு வரை 5 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 278 ரன்களை அவர் குவித்துள்ளார்.

பெர்முடா அணிக்கு எதிராக கடந்த 2007ஆம் ஆண்டு, இந்திய அணி 413 ரன்களை குவித்தது. இதுதான் உலகக் கோப்பையில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் ஆகும்.

உலகக் கோப்பைத் தொடரில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 329 ரன்களை விரட்டி வெற்றி பெற்ற அணி அயர்லாந்து

உலகக் கோப்பைத் தொடரில் மிக விரைவாக சதமடித்த வீரர் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு 50 பந்துகளில் அவர் சதமடித்து அசத்தினார்.

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான சாகித் அப்ரிடி ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார்
தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஒரே இடது கை பேட்ஸ்மேன் ஹாரிஸ் சொகைலிஸ்.

அண்மையில் 31 பந்துகளில் சதமடித்த டி வில்லியர்ஸ் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன்.

தென் ஆப்ரிக்க அணி மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறி மூன்று முறையும் தோல்வி கண்டுள்ளது.

யு.ஏ.இ அணியில் முகமது தாகீர், குர்ராம் கான் எனும் இரு வீரர்கள் 43 வயது நிரம்பியவர்கள்.

21 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 23 வயது ஜேசன் ஹோல்டர்தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஆவார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சளைக்காமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ள அணி ஜிம்பாப்வே. தற்போது கத்துக்குட்டி அணிகள் வந்த பிறகுதான் ஜிம்பாப்வே அணி அவ்வப்போது வெற்றியை ருசிக்கிறது.

 

NEWS TODAY 11.06.2026