Monday, March 2, 2015

மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி?

Return to frontpage

வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால் தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர் மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் செய்தித்தாள்கள் முழுவதும் தனியார் பள்ளி விளம்பரங்களும், அவர்கள் நிகழத்திய சாதனைகளும் (?) நிறைந்திருக்கும்.

அரசுப் பள்ளிகளில் இத்தனை பள்ளிகள் எவ்வளவு சதவீதம் தேர்ச்சி எந்தெந்த பாடங்களில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி, எந்த பாடத்தில் தேர்ச்சி குறைந்தது என மீளாய்வு கூட்டங்கள் நடத்தி, அதிகாரிகள் தங்களை திட்டுவது, அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிப்பது என்பதெல்லாம் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியர்களுக்கும் பழகி விட்ட ஒன்றாகிவிட்டது.

தோல்வியடைந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற தகுதியில்லாதவர்களா? வெற்றி பெற்ற அனைவரும் தகுதியானவர்களா என்று உங்களுக்குள் ஒரு கேள்வி கேட்டுப்பாருங்கள்? உண்மை புரியும். தேர்வு நடந்த நாள் தோல்வியடைந்த மாணவனுக்கு நல்ல நாளாக அமையவில்லை. அல்லது தனது திறமையை வெளிப்படுத்தும் சூழல் இல்லை.

ஒரு மாணவன் வருடம் முழுவதும் என்ன கற்றுக்கொண்டான்? அதை எப்படி தேர்வில் எழுதினான் என்பெதெல்லாம் தாண்டி, அன்றைய தேர்வுக்கு யார் அறைக் கண்காணிப்பாளராக வந்தார்கள், எப்படி தாராளமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுறது. அவ்வளவுதான். கடந்த வருடத்தில் மட்டும் சில மாவட்டங்கள் திடீரென 10 முதல் 15 இடங்கள் வரை தேர்ச்சி சதவீதத்தில் முன்னேறி இருக்கிறது. எப்படி இந்த மாயாஜாலம் நிகழந்தது என்பது விட்டலாச்சார்யா படங்களை விஞ்சும் மர்மங்களாக உள்ளது.

தமிழகத்தில் மட்டும் எப்படி இவ்வளவு தேர்ச்சி சதம் வருகிறது என்ற கேள்வியை அண்டை மாநில ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கேட்கும் போது நம்மிடம் பதில் இல்லை. தேர்ச்சி சதம் என்பது ஒரு முக்கியமான காரணிதான். ஆனால் அதையே கல்விக்கான அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியுமா? மூன்றாம் தலைமுறையில் கற்கும் மாணவன் பெறும் மதிப்பெண்ணையே முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவன் பெற முடியுமா?

வீட்டு வாசற்படியில் இருந்து பள்ளி வகுப்பறை வரை மகிழுந்தில் பயணம் செய்து கல்வி கற்கும் மாணவனும், விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று சில பல மைல்கள் நடந்து சென்று, சில பாட ஆசிரியர்கள் இல்லாமல் தானே கற்கும் மாணவனும் ஒன்றா? ஈரோட்டில் விளையும் மஞ்சள் திருவண்ணாமலையில் விளையுமா? கன்னியாகுமரியில் விளையும் ரப்பர் கடலூரில் விளையுமா? இயற்கையாகவே ஒரு மண்ணில் எது விளையுமோ அது மட்டுமே விளையும். இது இயற்கை நமக்கு கற்றுத்தந்த பாடம்.

காஷ்மீர் ஆப்பிளை தமிழ்நாட்டில் விளைவிக்க முயற்சி செய்தால் தோல்வியே மிஞ்சும் என்பது நல்ல விவசாயிக்கு தெரியும். ஆனால் அதையும் தாண்டி நமது மண்ணுக்கு ஒத்துவராத பயிர்களை கடந்த 20, 30 ஆண்டுகளாக பயிரிட்டதும், உரமிட்டதும் நமது மரபு சார்ந்த விவசாயத்தையும், மண்ணின் தன்மையையும் கொன்றொழித்து விட்டது. நவீன உரங்களை நம்பி நாம், இன்று விசமுள்ள உணவுகளை உற்பத்தி செய்து வருகிறோம். பசுமைப் புரட்சி நமது மண்ணின் உயிரை எடுத்து விட்டது. தற்போது மண் மலடாகிவிட்டது. வெள்ளைக்காரன் நமது மரபு சார்ந்த விவசாயத்தை ஒழிக்க நினைத்தான். அது நிறைவேறிவிட்டது.

மாணவர்களும் அறிவில்லாத மலடுகளாக பள்ளிக்கல்வியை முடிக்கிறார்களோ என்ற சந்தேகம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பயில் ஒரு மண்ணில் விளைய பல்வேறு காரணிகள் உள்ளது. பயிர் விளைச்சளைத் தரவில்லை எனில் விவசாயி மட்டும்தான் காரணமா? மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியர்கள் காரணமா? பயிர் விளைய பருவமழை, மண்ணின் தன்மை, பயிர் செய்த காலம், பராமரிப்பு, நல்ல விதை போன்ற பல காரணிகள் உள்ளது.

பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத சமூக, பொருளாதார, சாதி ரீதியான, புவியியல் ரீதியான பல ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் குடும்பங்களில் நிலவி வருகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல பெற்றோர்கள் தினக்கூலிகளாக பெங்களூரிலும், திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளிலும் வேலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்கள் தாங்களே சமைத்து சாப்பிட்டு பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது. சில மாணவிகள், பெற்றோர் உடன் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதும் உண்டு.

தொடர்ந்து இடைவெளியில்லாமல் ஒரு நிலத்தில் பயிர் செய்தால் நிலம் மலடாகிவிடும். தொடர்ந்து நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தால் பயிர் வளராது என்பதும் நல்ல விவசாயிக்கு தெரியும். ஆனால் மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு, அரையாண்டு விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதே காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. தனியார் பள்ளிகளைப் பார்த்து தற்போது அரசுப் பள்ளிகளும் அதைப் பின்பற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். தங்கள் விடுமுறையையும் மகிழ்ச்சியையும் பறித்த ஆசிரியர்கள் மீது ஏன் மாணவர்களுக்கு கோபம் வராது?

இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?

ஒரு பெண்ணின் கருவறையில் உள்ள கருவை சோதிக்கும் போது முறையாக வளர்ச்சி இல்லை எனில், அதை கரு நீக்கம் செய்வதே ஓர் உண்மையான மருத்துவரின் கடமை. அது கொலையல்ல. ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மகிழுந்தில் பழுது என்றால் அதை அப்படியே ஒரு நிறுவனமோ, பொறியாளரோ சாலையில் ஓடவிட்டால் சில பல நபர்களை அது பலிவாங்கும். குறைபாடுடன் வாகனம் விற்பனைக்கு விடப்பட்டது தெரியவந்தால் நீதிமன்றம் மூலமாக பல லட்சங்கள் கோடிகளை நிறுவனம் தண்டம் கட்ட வேண்டி வரும். நிற்க.

இந்த காருக்கு பதிலாக நமது மாணவனை நினைத்துக்கொள்ளுங்கள். பொறியாளருக்கு பதிலாக ஆசிரியர்களையும், நிறுவனத் தலைவருக்கு பதிலாக நமது கல்வித் துறையையும் பொருத்திப் பாருங்கள். பள்ளி எனும் மனிதவள உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் எத்தனை குறைபாடுள்ள மகிழுந்துகள் வெளியே சென்று எத்தனை பேரின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரியும்.ெ

தற்போது பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு முன்னால் மாணவனின் பங்கு உள்ளது. காரணம்... மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வியையோ, விழிப்புணர்வோ தராமல் வெறும் மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாணவர்களை மாற்றிவிட்டது நவீன மெக்காலேக்களின் கண்டுபிடிப்பு.்

மதியம் 10 நிமிடமே இடைவேளை விட வேண்டும். மீதி நேரம் வடக்கு பார்த்து வாஸ்து முறைப்படி உட்கார்ந்து கொண்டு படிக்க வேண்டும் என்றெல்லாம் சுற்றறிக்கைகள் விடப்படுகிறது. 10 நிமிடத்தில் ஒரு மாணவன் உணவருந்த முடியுமா? பள்ளியில் சத்துணவு 10 நிமிடத்தில் வழங்கப்பட்டு விடுகிறதா? சிறைக் கைதிகளுக்கு இருக்கும் மனித உரிமை கூட மாணவர்களுக்கு இல்லையா? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் நமக்கென்ன என்று ஆசிரியர்கள் இருந்துவிடுகிறார்கள்.

தேர்ச்சி சதவீதம் என்ற பெயரில் மாணவர்களை கசக்கிப் பிழவதும், அவன் எதையும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை, தேர்ச்சி பெற்றால் போதுமானது என்ற நிலைக்கு ஆசிரியர்களை கல்வித்துறை தள்ளி பல வருடங்கள் ஆகிவிட்டது.

ஒரு பள்ளியில் ஒரு பெண்ணாசிரியரை தகாத வார்த்தைகளில் திட்டுகிறார் ஒரு மாணவர். ஆசிரியர் அறைக்கு சென்று அழுவதை தவிர அந்த ஆசிரியையால் எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த வருடத்தில் மட்டும் எத்தனை பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும், எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதையும் ஆய்ந்து பாருங்கள், எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களால் தாக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என நினைத்துப் பாருங்கள். நாம் கல்வி என்ற பெயரில் மாணவர்களுக்கு எதைக் கற்பித்தோம் என்பது புரியும்.

11, 12 ம் வகுப்பு பாடங்களில் 12-ம் வகுப்பு பாடங்களில் 10 சதவீதத்தைப் படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம் என்பதே நிதர்சனம். 10 சதவீதத்தை கூட படிக்க முடியாமல் முடியாமல் மாணவன் தோல்வியுறுவதும், இந்த 10 சதவீதத்தைப் படிக்க வைப்பதற்கே சனி, ஞாயிறு, விடுமுறை, காலை, மாலை என்று சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் அலைவதையும் நினைத்தால் தெரியும் நமதுமாணவனின் தரமும், கல்வித்துறையின் நிலையும்.

கற்றல் பணி மாணவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா என்று ஆய்வதற்கு எந்த அதிகாரியும், ஆசிரியர்களும் தயாராக இல்லை. தேர்ச்சி சதமும் மதிப்பெண்களும் தங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும் என்பதிலேதான் ஆசிரியர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையைப் பொறுத்த வரையில் கல்லூரி கல்விக்கு மூலப்பொருட்கள் தயார் செய்து அனுப்பும் ஒரு தொழிற்சாலையாக மாறிவிட்டது. ஆனால் மூலப்பொருட்களின் தரம்தான் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. 12ம் வகுப்பை தாண்டிய மாணவர்கள் தங்கள் பள்ளிக்காலத்தில் எத்தனை முறை அறிவியல், மொழி ஆய்வகங்களில் நுழைந்தனர் எனக் கேட்டால் தெரியும். நமது பள்ளிக்கல்வியின் தரம். ஆனால் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டும் வானளவு உயர்ந்து நிற்கிறது.

இதையும் தாண்டி தேர்ச்சி சதவீதம் குறைந்தால் 'நான் மாற்றப்படுவேன், நீங்கள் தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றப்படுவீர்கள்' என்று ஆசிரியர்களை மன ரீதியாக பயமுறுத்தி, மாவட்டத்தின் நலன் கருதி ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்குவது வாடிக்கையாகிவிட்டது.

விளைவு...? தமிழைக் கூட வாசிக்கத் தெரியாத மாணவர்கள் 11ம் வகுப்பை அடையும் நிலையில் நமது கல்வியின் தரம் உள்ளது. அவனுக்கு தமிழ் தெரிந்தால் என்ன? ஆங்கிலம் தெரிந்தால் என்ன? நமக்கு தேர்ச்சி விகிதம் வந்தால் சரி. ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் மாணவர்களை அமர வைப்பதே பெரும் பாடாகி விட்டது. எனக்கு எப்படி தேர்ச்சி பெறுவது என்று தெரியும் என்று மாணவன் ஆசிரியரைப் பார்த்து கேலி செய்யும் நிலைக்கு ஆசிரியர் சமூகம் தள்ளப்பட்டுவிட்டது.

கற்றுக் கொடுப்பது கல்வி என்பது போய் புள்ளி விவரங்களில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறது அரசும், அரசு அதிகாரிகளும். மாதம் மும்மாரி மழை பெய்யாவிட்டால் உங்களை தண்ணீர் இல்லா காட்டுக்கு மாற்றிவிடுவேன் என்று மேலதிகாரி சொன்னால் நான்கு முறை நன்றாக பொழிந்தது என்று கூட புள்ளிவிவரம் சமர்ப்பித்து நல்ல பெயர் வாங்கும் அதிகாரிகள் பலர் உள்ளனர்.

கடந்த வருடம் ஐஐடி போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஒரு சுமார் லட்சம் மாணவர்களில் வெறும் 450 பேர் மட்டுமே தமிழகத்தைச் சார்ந்தவர்கள். அதிலும் வெறும் 31 பேர் மட்டுமே மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதை விட்டுவிட்டு தேர்ச்சி சதம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வித்துறை செயல்பட்டால் இந்த சமூகம் அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை வருங்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியாது.

உண்மையான பிரச்சனைகளை ஆராய்ந்து தரமான 'கல்வியை' (தேர்ச்சி சதவீதத்தை அல்ல) வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தேர்ச்சி சதம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னெடுக்கும் செயல்பாடுகள், கல்வி என்ற மரத்தின் வேரில் ஊற்றிய வெந்நீராகவே இருக்கும்.

*

கட்டுரையாளர் - கை.இளங்கோவன் | பொதுச் செயலாளர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சங்கம். | தொடர்புக்குelangotnhspg@gmail.com

பிளஸ்2 தேர்வு கண்காணிப்பு பணி: குலுக்கல் முறை ஒதுக்கீட்டுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு



பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்புப் பணி ஒதுக்கீடு செய்வதற்கு, குலுக்கல் முறை பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

மார்ச் 5-ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 64 மையங்களில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, அறைக் கண்காணிப்பாளராக நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக புதிய நடைமுறையின்படி குலுக்கல் முறையில் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த ஆண்டு வரை, விரும்பிய பள்ளிகளை தேர்வு செய்து வந்த நிலையில், தற்போது குலுக்கல் முறையில் தொலைதூரப் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அறிந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு தேர்வு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தொடக்கக் கல்வி இணை இயக்குநர் செல்வராஜ் கூறியது:

குலுக்கல் முறையில் சில ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் உள்ள பள்ளிகள் கிடைத்தால், அதனை மாற்றிக் கொடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

கடந்த தேர்வு வரை, சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், குறிப்பிட்ட ஆசிரியர்களை தங்கள் பள்ளி கண்காணிப்புப் பணிக்கு அழைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையிலேயே, நிகழாண்டு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகள் நுழைவுத் தேர்வு: 6,786 பேர் பங்கேற்பு

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் 6,786 பேர் பங்கேற்றனர்.

விண்ணப்பித்தவர்களில் 3,083 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.எஸ்., எம்.டி., முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்புகளில் மொத்தம் 1,154 இடங்கள் உள்ளன. இதுபோல் முதுநிலை பல் மருத்துவப் படிப்பான எம்.டி.எஸ். படிப்பில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

இவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கு தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறை சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

2015-16 ஆம் கல்வியாண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வுக்கு எம்.எஸ்., எம்.டி., முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர்வதற்காக மொத்தம் 8,713 பேர் விண்ணப்பித்திருந்தனர். எம்.டி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க 1,156 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நுழைவுத் தேர்வானது சென்னையில் மட்டும் பச்சையப்பன் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி, முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் எம்.டி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 1,107 பேரும், பிற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 5,679 பேரும் பங்கேற்றனர். 3,083 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறை: அண்ணா பல்கலை. அறிமுகப்படுத்துகிறது



கலை அறிவியல் பல்கலைக்கழகங்களில் உள்ளதுபோல பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

வருகிற 2015-16 கல்வி ஆண்டு முதல் இந்தப் புதிய வசதி பொறியியல் மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது. பாரம்பரியமான ஆசிரியர் சார்ந்த கல்வி முறை என்ற நிலை மாறி, மாணவர் சார்ந்த கல்வி முறை இப்போது பிரபலமடைந்து வருகிறது.

மாறி வரும் காலச் சூழல், தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை தாங்களாகவே மாற்றித் தேர்வு செய்து கொள்ளும் வகையிலான விருப்பப் பாடத் தேர்வு முறை (சாய்ஸ் பேஸ்ட் கிரெடிட் சிஸ்டம்-சி.பி.சி.எஸ்.) பல கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, ஒரு படிப்பின் அடிப்படை பாடங்களில் அல்லாமல், துணைப் பாடங்களில் (கோர், அலைடு பாடங்கள்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள் மாற்றித் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிப்பதுதான் சி.பி.சி.எஸ். முறை.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தலின் பேரில் பெரும்பாலான கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் சி.பி.சி.எஸ். முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதற்கென தனி வழிகாட்டுதலையும் யுஜிசி வெளியிட்டிருக்கிறது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்திலோ அல்லது பொறியியல் கல்லூரிகளிலோ இந்த நடைமுறை இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.

இருந்தபோதிலும், பிரபலமான சில தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் மட்டும் இந்த நடைமுறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில உயர் கல்வி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.சி.எஸ். முறை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சி.பி.சி.எஸ். முறை அறிமுகம் செய்யப்பட வேண்டும் என அண்மையில் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில், இந்தப் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் இப்போது முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 530 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், விருப்பப் பாடத்தைத் தாங்களே தேர்வு செய்துகொள்ளும் வசதி கிடைக்க உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறியது: மாணவர்களுக்கான விருப்பப் பாடத் தேர்வு முறையை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான அனைத்து நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதம் நடைபெற உள்ள பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

இதன்மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் அல்லது ஆர்வமுள்ள பாடங்களைத் தேர்வு செய்து படிக்க முடியும் என்றார் அவர்.

சாந்தி தியேட்டரை விற்பதாக நடிகர் பிரபு அறிவிப்பு!



சாந்தி தியேட்டரை விற்பதாக நடிகர் பிரபு அறிவிப்பு!

சென்னை: சென்னையில் உள்ள சாந்தி தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு அறிவித்துள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி தியேட்டரை வாங்குவதாக தெரிகிறது.

54 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது சாந்தி தியேட்டர். சிவாஜிகணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' படத்தை தயாரித்த உமாபதிக்கு சொந்தமாக சென்னை அண்ணாசாலையில் ஆனந்த் என்ற திரையரங்கமும் இருந்தது. 1962ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கத்தை ஜி.உமாபதியிடம் இருந்து நடிகர் சிவாஜிகணேசன் வாங்கினார்.

அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன. 2005 ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்கமாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக் ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.

சாந்தி திரையரங்கத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில் 4 நவீன திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது.

இதனை நிரூபிக்கும் வகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டர் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு இன்று அறிவித்துள்ளார். இந்த பேட்டியின் போது ராம்குமார், விக்ரம் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி தியேட்டரை வாங்குவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்கு முன்பே தகிக்கும் வெயில்!… அக்னியில் 110 டிகிரியை தாண்டும்

Oneindia Tamil




சென்னை: குளிர்காலம் முடிந்து இன்னும் சில தினங்கள் கூட முடியவில்லை பங்குனி மாத வெயிலைப் போல பட்டையைக் கிளப்புகிறது. இரவில் புழுக்கம் தாங்க முடியவில்லை. சென்னை, வேலூர், தொடங்கி தென் மாவட்டங்களில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போதே இப்படி எனில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு 109 முதல் 111 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பமே அனல் கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன. பொதுவாக குளிர் காலத்துக்கும், கோடைக்கும் இடைப் பட்ட நாட்களில் லேசான வெயில் அடிக்கும். இந்த வெயில் இதமாக இருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது கோடை காலத்தைப்போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

மதுரையில் கொளுத்துது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதுரையில் நேற்று 36.2 டிகிரி செல்சியஸ் (97.16 ஃபாரன்ஹீட்) வெயில் பதிவானது. இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இன்று நாக்பூரில் பலத்த மழை பெய்துள்ளது. பருவ நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்று 

10 ஆண்டுகளில் 10 ஆண்டுக்கு முன்பு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மதுரையின் அதிகபட்ச வெயில் அளவு 80 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இது 89.6 டிகிரியாக உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் 107 டிகிரி வெயில் அடிக்கும். ஆனால் இப்போதைய அக்னி நட்சத்திர காலத்தில் 110 டிகிரியை எட்டும் என்று கூறப்படுகிறது.




Indian national gets 16 years' jail and caning for bashing man to death with concrete slabs - See more at: http://www.straitstimes.com/news/singapore/courts-crime/story/indian-national-gets-16-years-jail-and-caning-bashing-man-death-co#sthash.ls9i8VTL.dpuf

BY SELINA LUM

SINGAPORE - An Indian national who viciously attacked another Indian national to rob him, then left his body under the Kampong Java flyover, was jailed 16 years and ordered to be caned 12 strokes on Monday after he pleaded guilty to culpable homicide.

Periyasamy Devarajan was 20 years old in 2012 when he bashed 31-year-old Raju Arivazhagen in the face and head with a rock, a branch and three concrete slabs each weighing 10.5kg to 13.8kg.

He was initially accused of murder but the charge was later reduced to culpable homicide. No reason was given in court for why the charge was reduced.

The High Court heard on Monday that the two men, both construction workers, were strangers but chanced upon each other when Mr Raju was looking for his lost wallet.

The two men had separately gone to Little India on the night of Feb 7 as it was the Hindu festival Thaipusam.

In the early hours the next day, Mr Raju went up to Periyasamy, asking if he had seen a black wallet.

Periyasamy replied that he had and pointed in the direction of the flyover. He then led Mr Raju to the flyover, intending to rob him.

Unknown to Mr Raju, Periyasamy had earlier picked up his wallet and threw it into a drain after taking the $20 and ez-link card inside.

At the flyover, Periyasamy attacked Mr Raju until he stopped moving, then took his mobile phone.

Periyasamy was arrested on Feb 12 after his identity was established through surveillance camera footage and intelligence.

- See more at: http://www.straitstimes.com/news/singapore/courts-crime/story/indian-national-gets-16-years-jail-and-caning-bashing-man-death-co#sthash.ls9i8VTL.dpuf

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...