Monday, March 2, 2015

முதுநிலை மருத்துவப் படிப்புகள் நுழைவுத் தேர்வு: 6,786 பேர் பங்கேற்பு

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் 6,786 பேர் பங்கேற்றனர்.

விண்ணப்பித்தவர்களில் 3,083 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.எஸ்., எம்.டி., முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்புகளில் மொத்தம் 1,154 இடங்கள் உள்ளன. இதுபோல் முதுநிலை பல் மருத்துவப் படிப்பான எம்.டி.எஸ். படிப்பில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

இவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கு தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறை சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

2015-16 ஆம் கல்வியாண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வுக்கு எம்.எஸ்., எம்.டி., முதுநிலை பட்டயப் படிப்புகளில் சேர்வதற்காக மொத்தம் 8,713 பேர் விண்ணப்பித்திருந்தனர். எம்.டி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க 1,156 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நுழைவுத் தேர்வானது சென்னையில் மட்டும் பச்சையப்பன் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, மீனாட்சி மகளிர் கல்லூரி, முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் எம்.டி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 1,107 பேரும், பிற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 5,679 பேரும் பங்கேற்றனர். 3,083 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...